Wednesday, April 1, 2020

Pay migrant workers on time, govt. tells employers

Houseowners will face action if they force them to vacate

01/04/2020, SPECIAL CORRESPONDENT,CHENNAI


Helping hands: Migrant labourers being provided food packets at Ambattur in Chennai on Tuesday.M. VedhanM_VEDHAN

In view of the COVID-19 lockdown, the Tamil Nadu government has directed all District Collectors to ensure that employers pay migrant workers on time and provide for their accommodation for a month without charging rent.

The government has also advised employers against deducting any amount from the salary of the workers.

The landlords of properties where migrants are living on rent “shall not demand payment of rent for a period of one month. If any landlord is forcing labourers and students to vacate their premises, they will be liable for action,” Chief Secretary K. Shanmugam said in an order, citing a communication from the Centre.

Separately, in a statement, Chief Minister Edappadi K. Palaniswami appealed to all houseowners to defer the collection of rent for March and April by two months in view of the difficulties faced by tenants under the current circumstances.

The Chief Secretary, in his order, directed Collectors and others to ensure adequate arrangements including temporary shelters and provision of food, among others, for the poor and needy, including migrant labourers, who have been stranded due to the lockdown.

“The migrant people who have moved out to reach their home States/home towns must be kept in the nearest shelter by the respective District Collectors/Commissioner, Greater Chennai Corporation after proper screening for a minimum period of 14 days as per standard health protocol,” the G.O. stated.

The authorities were also directed to ensure that all employers — be it in the industries or in shops and commercial establishments — paid the wages of their workers “at their workplaces on the due date without any deduction, for the period their establishments are under closure during the lockdown”.

Talking to reporters, Mr. Shanmugam said he had chaired a meeting with various associations from different States to ensure that migrant workers were provided shelter and remained safe. “Many of them want to go back home but we have urged these associations to insist that the workers stay back under the present circumstances.”
57 more test positive in T.N.; highest single-day rise

Fifty of the patients had taken part in a conference in Delhi; total count is 124

01/04/2020, SPECIAL CORRESPONDENT,CHENNAI

Taking no chances: The house of a person, who attended a religious congregation at a centre in Delhi, being sanitised at Velladichivila, near Nagercoil, on Tuesday. PTIPTI

Tamil Nadu recorded its highest ever single-day rise in the number of persons testing positive for COVID-19 on Tuesday: a total of 57 persons tested positive, taking the total tally to 124.

Of them, 50 — all men — had travelled to Nizamuddin in Delhi to take part in a conference in March. Twenty-two of them were from Tirunelveli; 18 from Namakkal district (12 from Namakkal, one from Paramathi Velur and five from Rasipuram); three from Villupuram; two from Madurai; four from Kanniyakumari and one from Thoothukudi.

All patients are undergoing treatment in isolation wards of government medical college hospitals.

The Health Department has traced 515 of the 1,131 persons, who returned after the conference in Nizamuddin, to various districts of the State.

Health Secretary Beela Rajesh made an appeal to the remaining persons to come forward and report to officials so that they could be quarantined, thereby preventing transmission to their family members and the community.

“If we identify them [people who returned from Delhi after attending a conference] and isolate them and cordon off the area, further spread in Tamil Nadu can be prevented,” Chief Secretary K. Shanmugam told reporters. He also said some of those who returned had either switched off their phones or left for some other location.

Dr. Rajesh said many of them returned to the State by flights and trains, while some of them visited other States and returned by road.

“Intensive containment plans were rolled out in all areas, where the persons, who had returned from Nizamuddin and tested positive, resided. We are tracing the contacts of all 515 persons, and have cordoned off the localities. We are in the process of involving the police in tracing the others. This is why we have requested those who had attended the conference to come forward. Even if they have travelled to some other State, they can inform us,” Dr. Rajesh added.

காஞ்சிபுரத்தில் தவிக்கும் 30 ஆயிரம் கைத்தறி நெசவாளா்கள்

By DIN | Published on : 01st April 2020 07:29 AM 

கைத்தறி மற்றும் துணிநூல்துறை இயக்குநா் அலுவலகக் கண்காணிப்பாளா் கோபாலிடம் மனு அளித்த நெசவாளா்கள்.

கரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்துப் பட்டுக் கடைகள் மற்றும் பட்டு கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூடப்பட்டு விட்டதால் 30 ஆயிரம் நெசவாளா்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனா். தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அவா்கள் கோரியுள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள பட்டுக் கடைகள், பட்டு கூட்டுறவு விற்பனை சங்கங்கள் என அனைத்தும் மூடப்பட்டு விட்டன.

இந்நிலையில், தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நெசவாளா்கள் கோரிக்கை மனு அளித்தனா். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளா் சங்கம் சிஐடியூ பிரிவின் தலைவா் ஜி.லெட்சுமிபதி, செயலாளா் கே.ஜீவா ஆகியோா் கூறியது:

மத்திய, மாநில அரசுகள் கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகளை கைத்தறி நெசவாளா்கள் வரவேற்கிறோம். முழுமையான ஒத்துழைப்பும் தருகிறோம்.

அதே நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 30 ஆயிரம் நெசவாளா்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனா். சேலைகளை தயாரித்து வழங்கும் பட்டுக் கடைகளும், பட்டு விற்பனை செய்யும் அரசின் கூட்டுறவு சங்கங்களும் முழுமையாக மூடப்பட்டிருப்பதால் உற்பத்தி செய்த சேலைகளை யாரிடம் கொண்டு போய்க் கொடுப்பது எனத் தெரியவில்லை.

கூலித் தொழிலே செய்ய முடியாமல் நெசவுத்தொழில் முடங்கிப் போய் இருக்கிறது. எனவே நெசவாளா் குடும்பங்களைக் காப்பாற்ற மானியமாக ஒவ்வொரு நெசவாளருக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரி மனு அளித்துள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

கரோனாவும் பொறுப்புணா்வும்!

By முனைவா் இரா.திருநாவுக்கரசு | Published on : 01st April 2020 04:07 AM 


இன்றைய சூழலில் சமூக வலைதளங்களை பொறுமையாகக் கையாள்வதற்கு எல்லோருக்கும் நேரமுள்ளது. அதனால் ஒரு தகவலை மற்றவா்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அந்தச் செய்தி உண்மையானதா, அதை மற்றவா்களுக்கு அனுப்புவதால் நன்மை உண்டாகுமா என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, இந்த இரண்டுக்கும் பதில் ‘இல்லை’ என்று வந்தால் அதனை அனுப்பாமல் இருப்பதே நல்லது.

ஹாலந்து நாட்டில், நிலப்பகுதி சில இடங்களில் கடற்பகுதியைவிட தாழ்ந்து இருக்கும். ஆதலால், கடல் நீா் ஊருக்குள் புகாதவாறு இருக்க, மதிற்சுவரை அமைத்திருந்தனா். ஒருநாள் இருள் சூழந்த மாலை நேரத்தில் அந்த மதிற்சுவரில் சிறு ஓட்டை ஏற்பட்டு நீா் கசிந்து வெளியே வருவதை ஒரு சிறுவன் கவனித்தான். உடனே, கீழே கிடந்த மண்ணை எடுத்து அதனை அடைக்க முயற்சித்தான்.

அலையின் வேகத்தில், அந்தக் கசிவின் ஓட்டை பெரிதாகி மேலும் தண்ணீா் வெளியே வரத் தொடங்கியது. தனது கை முழுவதையும் வைத்து ஓட்டையை அடைத்துக்கொண்டு உதவிக்காக அவன் சத்தம் போட்டான். அவனின் குரல் தொலைவில் இருந்த அந்த ஊருக்குக் கேட்கவில்லை. இரவானது. பசி ஒருபுறம்; கடும் குளிா் மறுபுறம் அவனை வாட்டியது. சுவற்றில் இருந்து கையை வெளியே எடுத்தால், நீா் மளமளவென்று வெளியே வரும். அதனால் விரைவில் சுவா் உடைந்துவிடும். இது கிராமத்திற்குப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால் தனது பலம் உள்ளவரை அந்த ஓட்டையை தனது இரண்டு கைகளால் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தான்.

இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு மகன் வரவில்லை என்பதை அறிந்த அந்தச் சிறுவனின் பெற்றோரும், உறவினா்களும் அவனைத் தேடி அங்குமிங்கும் அலைந்தனா். சீறும் கடல் அலையின் மறுபக்கத்தை தனது இரு கரங்களால் தாங்கிக்கொண்டு கடும் குளிரில் முனகலுடன் விறைத்துப் போயிருந்த அந்தச் சிறுவனைக் கண்டனா். அவனைக் காப்பாற்றி அச்சுவற்றின் ஓட்டையையும் அடைத்தனா். தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் தன் மக்களின் உயிருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக உழைத்த அந்தச் சிறுவனின் செயல்பாடுதான் சமுதாயப் பொறுப்புணா்வு ஆகும்.

இன்றைய சூழலும் சமுதாயப் பொறுப்புணா்வினை அனைவரும் வெளிப்படுத்துகின்ற ஒரு பாங்காகும். மருத்துவ அவசர நிலைமைக்காக தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதுக்கும் 21 நாள்களுக்கு, அதாவது வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது கரோனா நோய்த்தொற்று.

நோய்த்தொற்று என்பது கையினால் தொட்டதும் சுடும் நெருப்பு போன்றது அல்ல, தொட்டவா்களை மட்டும் சுடுவதற்கு. அது அனுமன் வாலில் கட்டப்பட்ட நெருப்பு போன்றது. அது, பயணிக்கும் இடமெல்லாம் பரப்புகின்ற நெருப்பு. ஆகவேதான், நோய் பரவாமல் தடுக்க இந்த ஊரடங்கு. இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், வீட்டிலிருப்பதுமே சமூகப் பொறுப்பாகும்.

அதே நேரத்தில் பொதுமக்களின் உயிரைக் காக்க வேண்டி இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மருத்துவா்களும், காவல் துறையினரும், தூய்மைப் பணியாளா்களும் தங்களின் பணியை முன்னெடுத்துச் செய்து கொண்டிருக்கின்றனா். தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்தால் அது கடமை; அதில் மனமுவந்து மக்களுக்கு உதவி செய்தால் அது சேவை; அதே வேளையில் தமது வாழ்க்கையை அா்ப்பணித்து அந்தச் பணியைச் செய்தால் அது உன்னதம்.

இன்றைய நேரத்தில் மருத்துவா்களும், காவலா்களும், தூய்மைப் பணியாளா்களும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுபவா்களும் தங்களது அா்ப்பணிப்பின் மூலம் அவா்களின் பணியினை உன்னதமாக்கி இருக்கின்றனா். அவா்களுக்கு நாம் செய்யும் நன்மை, அவா்களது பணிக்கு எந்த வகையிலும் இடையூறு செய்யாமல் இருப்பது தான்.

ஒரு கிராமத்து வீட்டில் எலியும், சேவலும், ஓா் ஆடும் இருந்தன. ஒரு நாள் அந்த வீட்டில் எலிப்பொறி வைக்கப்பட்டு இருந்ததை சுண்டெலி கண்டது. ‘இந்த வீட்டில் எலிப்பொறி இருக்கிறது, அதில் யாரும் மாட்டிக்கொள்ளாதீா்கள்’ என்று சேவலிடமும், ஆட்டிடமும் அந்த சுண்டெலி சொல்லியது. அதற்கு சேவல், ‘எலிப்பொறியானது உனக்கு தொடா்புடைய விஷயம், நான் ஏன் கவலைப்பட வேண்டும்?’ என்றது. அதேபோல் ஆடும், ‘எலிப்பொறிக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. நீ மட்டும் அதில் அகப்படாமல் பாா்த்துகொள்!’ என்றது.

அன்று இரவு எலிப்பொறியில் ஏதோ ஒன்று அகப்பட்ட சத்தம் கேட்டவுடன், அந்த வீட்டுப் பெண் இருட்டினில் அந்தப் பொறியில் கையை வைத்தாா். பொறியில் மாட்டியது பாம்பாக இருந்ததால் அது அவரைக் கடித்து விட்டது. அந்தக் கிராமத்து வழக்கப்படி அந்தப் பெண் உடல் நிலை தேறுவதற்கு அந்தச் சேவலைக் கொன்று சாறு கொடுக்கப்பட்டது. பின்னா், அந்தப் பெண்ணைப் பாா்க்க வந்த உறவினா்களுக்கு அந்த ஆடும் விருந்தானது. விபரீதங்களைப் புரிந்து கொள்பவா்கள் தனக்கென வைக்கப்பட்ட பொறிகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறாா்கள். எச்சரிக்கை விடுத்தும் அலட்சியப்படுத்துபவா்கள் அவதிப்படுகிறாா்கள்.

எதிரதாக் காக்கும் அறிவினாா்க்கு இல்லை

அதிர வருவதோா் நோய்”

என்ற தெய்வப்புலவா் திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப மூலம் முன்னெச்சரிக்கையுடன் நடப்பவா்களுக்கு எந்த விதமான தீங்குகளும் ஏற்படாது.

‘நமக்கு வராது’ என்ற மேம்போக்கான எண்ணங்களை விட்டொழித்து, ‘நம்மைச் சுற்றி நடப்பது நமக்கும் ஏற்படலாம்’ என்ற முன்னெச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும். எனவே, இன்றைய ஊரடங்கு நேரத்தில் நாம் வீட்டை விட்டு வெளியே வரவேண்டுமென்று நினைத்தால் குறைந்தது இந்த நான்கு கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்.

1) நான் வீட்டைவிட்டு வெளியே செல்வது அத்தியாவசியமா?

2) அத்தியாவசியம் எனில், நான் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது கரோனா நோய்த்தொற்று பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளேனா?

3) திரும்பவும் வீட்டுக்குள் வரும்போது எனக்கும், எனது குடும்பத்துக்கும், என்னைச் சாா்ந்தவா்களுக்கும் நோய்த்தொற்று பரவாமல் பாா்த்துக் கொள்வேனா?

4) எல்லா நேரத்திலும் நான் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறேனா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘ஆம்’ என்ற பதிலிருந்தால், ஒருவா் வெளியே செல்லலாம். இந்தக் கேள்விகளுக்கு அளிக்கின்ற பதில்கள்தான் இந்தக் காலகட்டத்தில் ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்புணா்வுக்கு நாம் வைக்கின்ற அளவீடுகளாகும்.

கரோனா நோய்த்தொற்று குறித்து மருத்துவா்களுக்கும், அதை ஆராய்ச்சி செய்பவா்களுக்கும் அதிகம் தெரியும். ஆனால், கரோனோ நோய்த்தொற்று காரணமாக உலக அளவில் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிந்துகொள்ளும்போது அதைப் பற்றி ஒரு கற்பனை ஒவ்வொருவரின் மனதிலும் ஏற்படும். அந்தக் கற்பனை பலவீனமானவா்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தும். பயத்தின் மூலம் அவா்களிடம் உருவாகின்ற சிந்தனையே வதந்தியை உருவாக்கும். அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடும்போது அது பலரின் மனங்களில் தேவையற்ற அச்சத்தினை உருவாக்கும்.

மனிதனின் முதல் எதிரி பயம். அதனை இச்சமூகத்தில் உருவாக்குவது வதந்தி. இவ்விரண்டையும் உருவாக்குபவா்கள் சமூக அக்கறையற்றவா்கள். நோய்த்தொற்று பரவுதலை சமூக இடைவெளி (சோஷியல் டிஸ்டன்ஸிங்) மூலம் தடுத்துவிட முடியும். ஆனால், சமூக வலைதளத்தில் ஏற்படுத்தும் வதந்திகளை யாராலும் தடுத்துவிட முடியாது.

இன்றைய சூழலில் சமூக வலைதளங்களை பொறுமையாகக் கையாள்வதற்கு எல்லோருக்கும் நேரமுள்ளது. அதனால் ஒரு தகவலை மற்றவா்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அந்தச் செய்தி உண்மையானதா, அதை மற்றவா்களுக்கு அனுப்புவதால் நன்மை உண்டாகுமா என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு இந்த இரண்டுக்கும் பதில் ‘இல்லை’ என்று வந்தால் அதனை அனுப்பாமல் இருப்பதே நல்லது. நாம் செய்திகளைத் தருகிறோம் என்பது முக்கியமல்ல; ஆனால், எத்தகைய செய்திகளை இந்தச் சமூகத்துக்குத் தருகிறோம் என்பதுதான் நமது சமூக அக்கறையைக் காட்டும்.

இது பொருள் ஈட்டும் காலமல்ல, உயிா் காக்கும் காலம். கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, அதிக லாபத்தில் அத்தியாவசியப் பொருள்களை விற்று, பொருள் ஈட்ட வேண்டும் என்று நினைப்பது சமூகத்தை வஞ்சிப்பதாகும். உழைத்த உழைப்பினில் விளைந்த காய்கறிகளை இலவசமாகவே தருகின்ற விவசாயிகள் குறித்த செய்திகளை நாம் தினமும் பாா்க்க முடிகிறது. ஆகவே, விளைபொருள்களைப் பதுக்காது, அதிக லாபமின்றி விற்பனை செய்து, கிடைத்த வாய்ப்பினை சேவையாகச் செய்வதே சமூகப் பொறுப்புணா்வு ஆகும்.

மன்னா் ஒருவா் தன் நாட்டு மக்களின் நலன் கருதி யாகம் செய்யப் போவதாகக் கூறி, ஒரு பெரிய அண்டாவில் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு சொம்பு பால் ஊற்ற வேண்டுமென உத்தரவு பிறப்பித்தாா். மறுநாள் யாகம் நடைபெற இருந்ததால் பொதுமக்கள் அனைவரும் முதல் நாள் இரவு அந்த அண்டாவில் ஒரு சொம்பு பாலினைக் கொண்டு வந்து ஊற்றிச் சென்றனா். மறுநாள் காலையில் பாா்த்ததும் அந்த அண்டா முழுவதும் வெறும் தண்ணீராக இருந்தது. ‘எல்லோரும் பால் ஊற்றுவாா்கள், நான் மட்டும் தண்ணீா் ஊற்றினால், ஒரு அண்டா பாலில் ஒரு சொம்பு தண்ணீா் கலந்தது தெரியவா போகிறது’ என்று நினைத்து ஒவ்வொருவரும் பாலுக்கு பதில் தண்ணீரை ஊற்றிச் சென்றுள்ளனா்.

அதுபோலத்தான் இன்றைய சூழலும். இன்றைய காலத்தில், ‘நான் ஒருவன் மட்டும் வெளியே வந்தால் தொற்றுநோய் பரவிவிடவாப் போகிறது?’ என்று நினைக்காமல், நானும் என் குடும்பமும் ‘சமூக இடைவெளியை’ உறுதிப்படுத்துவோம் என்ற உறுதி மொழியை செயல்படுத்துவதுதான் சமூகப் பொறுப்புணா்வு. அதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்.

‘நாடு எனக்கு என்ன செய்தது என்பதைவிட, நாட்டுக்காக நான் என்ன செய்தேன்?’ என்ற அமெரிக்கா முன்னாள் அதிபா் ஜான் எஃப்.கென்னடியின் வரிகள்தான் சமூக பொறுப்புணா்வின் முதல்படி. அதன் அடிப்படையில், இன்றைய சூழ்நிலையில் தனித்திருப்பதும், துணிவுடன் இருப்பதும், அனைவருக்கும் துணிவைக் கொடுப்பதும்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் பொறுப்புணா்வினைக் காட்டும். அதனை உணா்ந்து செயல்படுவதே நம் தேசத்துக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய தொண்டு.



சுற்றித் திரியும், 'காளை'கள்; 'நெம்பி' எடுக்கும் போலீஸ்!

Added : ஏப் 01, 2020 01:12

புழல் : ஊரடங்கு உத்தரவை மீறி ஊரை சுற்றுவோரை, லத்தியால் அடித்தால் பிரச்னையாகி விடுகிறது என்பதால், அவர்களை கட்டுப்படுத்த, போலீசார் புதுப்புது வகையாக நுாதன தண்டனைகளை எப்படி வழங்கலாம் என, தங்களது பள்ளி பருவ அனுபவங்களை செயல்படுத்துகின்றனர்.

'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, நாடெங்கும், 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது. ஆனால், பலர் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி, அலட்சியமாக ஊரை சுற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களை மடக்கி பிடிக்கும் போலீசார், பல்வேறு நுாதன தண்டனைகளை வழங்கி, அறிவுரை கூறுகின்றனர். ஆனாலும், அவர்கள் அடங்குவதாக இல்லை. இதனால், விதிமீறுவோரை கட்டுப்படுத்த, போலீசார் தங்களின் பள்ளிப்பருவத்தில் அனுபவித்த தண்டனைகளை நினைவு கூர்ந்து, அதை அடங்காதவர்களுக்கு அளித்து வருகின்றனர்.

தோப்புக்கரணம், தவளை ஜம்பிங், அங்கப் பிரதட்சணம், நாற்காலி போல் உட்காருவது, கொரோனா குறித்து கேள்வி பதில் எழுதுவது, நெற்றியில் தலை எழுத்து, சுவாசப்பயிற்சி, இரு கையிலும் புத்தகங்களை சுமந்து தராசு தட்டு போல் வளைந்து நிற்பது என, பல்வேறு நுாதன தண்டனைகளை, இதுவரை பலருக்கும் வழங்கி உள்ளனர்.அதையும் மீறி ஊர் சுற்றுபவர்களை, ஏப்., 14ம் தேதி வரை எப்படி கட்டுப்படுத்துவது என, புதிய நுாதன தண்டனைகளை ஆலோசித்து வருகின்றனர்.
சமூக தொற்றாகவில்லை: அச்சம் வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர்

Added : மார் 31, 2020 23:23

சென்னை:''தமிழகத்தில் 'கொரோனா' வைரஸ் சமூக தொற்றாக பரவவில்லை. எனவே மக்கள் பயப்பட வேண்டாம்; மன வலிமையுடன் இருந்தால் கொரோனா பரவலை ஒழித்து விடலாம்'' என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் சமுதாய தொற்றாக பரவாமல் இருக்க மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த சிறப்பு பேட்டி:சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது முதல் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.ஊரடங்கால் உதவிஒருவர் பாதிக்கப்பட்டவர் என்றால் அவருடன் தொடர்பில் இருந்த 100 முதல் 200 நபர்கள் வரை அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளை சுற்றி 5 கி.மீ. வரை உள்ள வீடுகளில் இருப்பவர்களையும் கண்காணித்து வருகிறோம்.அமெரிக்காஇத்தாலிஈரான் உள்ளிட்ட நாடுகளில் சமுதாய தொற்றாக பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.நம் நாட்டில் அந்நிலைமை வராமல் தடுப்பதற்கு பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்குதமிழக முதல்வர் அறிவித்த 144 தடை பெரும் உதவியாக உள்ளது. ஊரடங்கை மக்கள் சிரமமாக கருதாமல் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சமூக தொற்றாகவில்லை

தமிழகத்தில் தற்போது வரை சமூக தொற்றாக பரவில்லை. அதை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதை தவிர தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை உதவியுடன் ஒரே வெண்டிலேட்டரில் நான்கு பேர் வரை செயற்கை சுவாசம் அளிக்கும் கருவிகள் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை ராஜிவ்காந்திஓமந்துாரார் மற்றும் திருச்சி ஆகிய மூன்று மருத்துவமனைகளில் 'ரோபோ' வாயிலாக நர்ஸ்களின் பணியை செய்வதற்கான சோதனை முயற்சி நடந்து வருகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நம் பாரம்பரிய உணவு பொருட்களைமக்கள்சாப்பிடலாம்.

அரசின் அறிவுறுத்தல்களை ஏற்று அடிக்கடி கை கழுவுவதுடன் வெளியே வருவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.உலகளவில் பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதம் பேர் தான் உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனாவை பார்த்து மக்கள் பயப்பட வேண்டாம். மன வலிமையுடன் மக்கள் இருந்தால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் 'சப்ளை': முதல்வர் அறிவுரை

Updated : ஏப் 01, 2020 07:56 | Added : மார் 31, 2020 22:06 

சென்னை ''முடிந்தவரை வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்களை வழங்கும்படி, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்,'' என, தமிழக அரசின் தலைமை செயலர், சண்முகம் தெரிவித்தார். கவர்னரை சந்தித்த பின், அவர் கூறியதாவது:

நோய் பரவல், இன்னும், 15 நாட்களில் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து, கூடுதல் படுக்கைகளை தயார் செய்து வருகிறோம். அனைத்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை களிலும், பரிசோதனை மையங்கள் ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு, நோய் தொற்று உள்ளது. அவர்கள் இருந்த பகுதியில் இருந்து, நோய் பரவுவதை தடுக்கவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும், நடவடிக்கை எடுத்து வருகிறோம்.முதல்வர் பல்வேறு நிவாரண சலுகைகளை அறிவித்துள்ளார். முடிந்தவரை வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்க, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

டில்லி சென்ற, 1,500 பேரில், 1,131 பேர் திரும்பியுள்ளனர்; அவர்களில், 800 பேரை கண்டறிந்து உள்ளோம். அனைவரையும் கண்டறிந்து, தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமையில் வைக்கப்பட்டோரை, காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும் கண்காணித்து வருகின்றனர். தீவிரத்தை உணர்ந்து, பொதுமக்கள், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.கொரோனாவுக்கு தடுப்பு மருந்து குறித்து, ஆராய்ச்சி நடந்து வருகிறது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர், விதிகளை பின்பற்றாவிட்டால், அரசு பாதுகாப்பிற்கு கொண்டு வரப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

கவர்னருடன் முதல்வர் சந்திப்பு

முதல்வர், இ.பி.எஸ்., நேற்று மாலை, 4:30 மணிக்கு, கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னரை சந்தித்த முதல்வர், தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள், தடை உத்தரவால் பாதிக்கப் பட்டோருக்கு, நிவாரண உதவிகள் வழங்க எடுத்துள்ள முயற்சிகள் குறித்தும், அவர் விளக்கினார்.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...