Friday, July 3, 2020

கூத்தாநல்லூர்: தூய்மைப் பணியாளரை தனது வாகனத்தில் அனுப்பி கௌரவித்த நகராட்சி ஆணையர்


கூத்தாநல்லூர்: தூய்மைப் பணியாளரை தனது வாகனத்தில் அனுப்பி கௌரவித்த நகராட்சி ஆணையர்


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பணி ஓய்வு பெற்ற நகராட்சி துப்புரவுப் பணியாளரை, தனது வாகனத்தில், வீட்டிற்கு நகராட்சி ஆணையர் ஆர்.லதா அனுப்பி வைத்தார்.

அந்தக் காலத்தில் தெருவில், தண்டோரா போட்டு, அரசு வேலைக்கு அழைப்பார்களாம். காப் பணம் சம்பாதித்தாலும், கவுர்மெண்ட் சம்பளமா இருக்க வேண்டும் எனச் சொல்லுவார்கள். ஆனால், இப்போது, பள்ளிக்கூடத்தில் சேரவே பணத்தை அள்ளிக் கொடுக்க வேண்டிய நிலை. அரசாங்க வேலை என்றால், என்ன படித்து இருந்தாலும் சரி, எத்தனை இலட்சம் தருகிறார்கள் என்று தான் பார்க்க வேண்டிய கட்டாய நிலை ஆகிவிட்டது. அப்படிப்பட்ட இந்தக் காலத்தில், எந்த ஒரு அரசாங்க வேலையாக இருந்தாலும், நல்ல முறையில், எந்தவிதக் கெட்டப்பெயரும் இல்லாமல் பணி ஓய்வு பெறுவது என்பது எல்லாவற்றையும் விடப் பெரும்பாடாக இருக்கிறது.

அப்படிப்பட்ட நிலையில் தான், இந்த கொடூரமான கரோனாக் காலத்தில் கூத்தாநல்லூர் நகராட்சியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப் பணியாளராக பணியாற்றி இருவர் பணி ஓய்வு பெற்றனர். அவர்களைப் பாராட்ட, கௌரவப்படுத்த நகராட்சி ஆணையர் ஆர்.லதா நினைத்தார். அதன்படி, துப்புரவு மேற்பார்வையாளர் வாசுதேவன் மற்றும் ஊழியர்களின் ஏற்பாட்டில், பிரிவுபசார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டன.

கூத்தாநல்லூர் நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் பணி நிறைவு பிரிவுபசார விழா நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, ஆணையர் ஆர்.லதா தலைமை வகித்தார். மேலாளர் எஸ்.லதா முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கி. அருண்குமார் வரவேற்றார். விழாவில், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.பாலசுப்ரமணியன், மாவட்டச் செயலாளர் கே.முனியாண்டி உள்ளிட்ட பலர் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். பாராட்டின் நிறைவாக, பணி ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேரையும், தனது வாகனத்தில், ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்து நகராட்சி ஆணையர் ஆர்.லதா மகிழ்ந்தார். இச்சம்பவம், அங்கிருந்த அத்தனை பேரையும் கண் கலங்க வைத்தது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஆர். லதா கூறியது..

வாழ்நாளில் முக்கால் வாசி ஆண்டுகளை, நம்முடன், நம்மூர் மக்களுக்காக 40 ஆண்டுகள் தூய்மைப் பணி செய்து, நகரத்தைச் சுத்தப்படுத்திய அந்த பெரும் மனிதரை, இந்த பணி ஓய்வு பெறும் நாளிலாவது வாகனத்தில் கொண்டு விடலாம் என்றுதான் அப்படிச் செய்தேன் என்றார் பெருமையாக ஆணையர் லதா.

இது குறித்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.பாலசுப்ரமணியன் கூறியது.

கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையருக்குப் பெருந்தன்மையான மனது. ஆமாம், பெண்ணின் குணம் இரக்கமுடையது என்பதை நிரூபித்து விட்டார். இந்த கரோனாக் காலத்தில், எப்படி வேண்டுமானாலும், எதையாவது சொல்லி விழாவை ரத்து செய்தோ, தட்டிக் கழித்தோ இருக்கலாம். ஆனால், விழாவை சிறப்பாக நடத்தியதுடன், தனது காரிலேயே வீட்டில் கொண்டு போய் விடச் சொன்னதும், பாராட்டுதலுக்குரியதாகும்.

இதற்கு முன்பு, கரூரில் அந்த மாவட்ட ஆட்சியராக இருந்த அன்பழகன் என்பவர், மாவட்ட ஆட்சியரகத்தில் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்ற, ஊழியரை, தனது காரிலேயே ஏற்றி அமர வைத்து, வீட்டில் கொண்டு போய் தானே விட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
Dailyhunt

'ஜே.இ.இ., - நீட்' தேர்வுகளும் ஒத்திவைப்பு?


'ஜே.இ.இ., - நீட்' தேர்வுகளும் ஒத்திவைப்பு?

Updated : ஜூலை 02, 2020 23:20 | Added : ஜூலை 02, 2020 23:11 |


புதுடில்லி: ''நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது தள்ளி  வைப்பதா என்பது குறித்து, கல்வித் துறை நிபுணர்கள் குழு, நாளை அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில், தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்,'' என, மத்திய  மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்தார்.

ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் போன்ற தொழில் கல்வி படிப்பதற்கான, ஜே.இ.இ., முதன்மை நுழைவுத் தேர்வை, ஜூலை, 18 - 23ம் தேதிகளில் நடத்தப்படும் என, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இதேபோல், மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, ஜூலை, 26ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேர்வு தேதிகளை ஒத்தி வைக்க வேண்டும் என, மாணவர்களும், அவர்களது பெற்றோரும் வலியுறுத்தி வருகின்றனர்.

முடிவு

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்கிரியால் நேற்று கூறியதாவது:கொரோனா பரவல் குறையாத நிலையில், நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என, பல தரப்பிலிருந்தும் கோரிக்கை வந்துள்ளது. இதையடுத்து, தேர்வுகளை நடத்துவதற்கான நிலைமையை ஆய்வு செய்ய, என்.டி.ஏ.,வைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வித் துறை நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தக் குழு, நிலைமையை ஆய்வு செய்து, தேர்வுகளை நடத்துவது தொடர்பான பரிந்துரைகளை, நாளை சமர்ப்பிக்கும். அதன் பின், தேர்வுகளை திட்டமிட்டப்படி நடத்துவதா அல்லது தள்ளி வைப்பதா என, முடிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

சி.ஏ., தேர்வு நடக்குமா? 10ம் தேதி தெரியும்!

சி.ஏ., எனப்படும், பட்டய கணக்காளர் தேர்வுகளை நடத்துவது குறித்து, 10ம் தேதிக்குள் இறுதி முடிவை அறிவிப்பதாக, இந்திய சார்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் மையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.வழக்கமாக, சி.ஏ., தேர்வுகள், மே மாதத்தில் நடத்தப்படும். கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கால், இந்தாண்டுக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, ஜூலை, 29 முதல் ஆக., 16 வரை வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை, 'ஆப்ட் அவுட்' எனப்படும், தேர்வு எழுத முடியாதவர்கள், தேர்வில் இருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:சி.ஏ., தேர்வை, 4.67 லட்சம் பேர் எழுதுகின்றனர். ஆனால், நாட்டில், 259 இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின், 70 சதவீத மாவட்டங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதியில் உள்ளவர்கள், தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆப்ட் அவுட் முறையால், இந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. அதிக இடங்களில் தேர்வு மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்து வருகிறது.

'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், நேற்று நடந்த விசாரணை யின்போது, இந்திய சார்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் மையத்தின் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் ராம்ஜி ஸ்ரீனிவாசன் வாதிட்டதாவது:

பல மாநிலங்களில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், தேர்வுகளை நடத்துவது சாத்தியமா என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக, மையத்தின் மாநிலப் பிரிவுகளை கலந்தாலோசித்து, தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். அதையடுத்து, வரும், 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அமர்வு உத்தரவிட்டுள்ளது.

'இ - பாஸ்' கேட்டு இதுவரை 37 லட்சம் பேர் விண்ணப்பம்

'இ - பாஸ்' கேட்டு இதுவரை 37 லட்சம் பேர் விண்ணப்பம்

Added : ஜூலை 02, 2020 22:49

ஊரடங்கின் போது, 'இ - பாஸ்' கேட்டு, இதுவரை, 37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; அதில், 13 லட்சம் விண்ணப்பங்களுக்கு மட்டுமே, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மார்ச், 25 முதல், தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், கல்யாணம், இறப்பு, தொழில் சம்பந்தமாக, வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு செல்ல, தமிழக அரசு சார்பில், 'ஆன்லைன்' வாயிலாக, இ - பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு வரவும், இ - பாஸ் பெறுவது அவசியம்.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது முதல், வெளியூர் பயணங்கள் செல்ல, தமிழகத்திற்கு வர என, பல லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன.இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா ஊரடங்கு காலத்தில், பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் செல்லவும், தமிழகத்திற்குள் வருவதற்கும், இதுவரை, 37.35 லட்சம் பேர் விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளனர். அதில், மாவட்டங்களுக்குள் செல்ல, 52 ஆயிரத்து, 282 விண்ணப்பங்கள்; மாவட்டங்களுக்கு வெளியே செல்ல, 29.05 லட்சம்; தமிழகத்திற்கு வெளியே செல்ல, 3.01 லட்சம்; தமிழகத்திற்கு உள்ளே வர, 2.66 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன.

இவற்றில், இதுவரை, 13 லட்சம் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், வெளி மாநிலங்களில் இருந்து வருவதற்கான விண்ணப்பங்களில், 57 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை, போலி ஆவணங்கள் வாயிலாக, விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-- நமது நிருபர்- -

இளம் வக்கீல்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை


இளம் வக்கீல்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை

Added : ஜூலை 02, 2020 23:23

சென்னை; இளம் வழக்கறிஞர்களுக்கு, இரண்டு ஆண்டு களுக்கு, மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

சட்டப்படிப்பை முடித்து, கல்லுாரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில், நிரந்தர பதிவு சான்றிதழ் பெற, முதலில், தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழும தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.அதன்பின், இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞரிடம், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும்.கிராமப்புறங்கள் மற்றும் ஏழை குடும்பங்களில் இருந்து, சட்டம் படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்து, வழக்கறிஞர்களாக பணியாற்ற, குறைந்தது நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் தேவை.

இக்காலகட்டத்தில், பல வழக்கறிஞர்கள், மிகவும் வறுமையான நிலையில் உள்ளனர்.சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்தி கொள்ள இயலாமல், வேறு தொழிலுக்கு செல்லும் நிலை உள்ளது.எனவே, வறுமையில் வாடும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்வதற்காக, சிறப்பு திட்டத்தை, அரசு செயல்படுத்த உள்ளது.இத்திட்டத்தின் கீழ், இளம் வழக்கறிஞர்களுக்கு, இரண்டு ஆண்டு களுக்கு, மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

வேறு கிளைகளிலும் சேவை வங்கிகளுக்கு கோரிக்கை


வேறு கிளைகளிலும் சேவை வங்கிகளுக்கு கோரிக்கை

Added : ஜூலை 02, 2020 22:58

சென்னை; 'ஊரடங்கின் போது, கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளை மட்டுமின்றி, வேறு கிளைக்கு சென்றாலும், சேவை வழங்க வேண்டும்' என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மார்ச் முதல், தமிழகத்தில் ஊரடங்கு அமலாகியுள்ளது.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில், வரும், 5ம் தேதி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில், வங்கிக்கு சென்று சேவை பெற, மிகுந்த சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, வங்கி வாடிக்கையாளர்கள் கூறியதாவது:பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், காசோலை பரிவர்த்தனை மேற்கொள்ளுதல் உட்பட, பல்வேறு சேவைகளை பெற, கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைகளுக்கு செல்ல வேண்டும் என, வங்கி அதிகாரிகள் பொதுவாக அறிவுறுத்துவர்.சாதாரண நாட்களில், கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு செல்ல முடியும்.

ஆனால், ஊரடங்கின் போது, தொலைவில் உள்ள வங்கி கிளைகளுக்கு செல்ல முடியவில்லை. பிற கிளைகளுக்கு சென்றால், கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு செல்லும்படி கூறுகின்றனர். இதனால், அவசர தேவைகளுக்கு, வங்கி சேவை கிடைப்பதில், மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.எனவே, ஊரடங்கு முடியும் வரை, வங்கியின் எந்தக் கிளைகளுக்கு சென்றாலும், சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான உத்தரவை, கிளைகளுக்கு நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

TN moves SC to seek direction to HC for early decision on pleas for OBC quota in medical admissions


TN moves SC to seek direction to HC for early decision on pleas for OBC quota in medical admissions

Some of the petitioners, in their interim prayers before the High Court, had sought to stall the ongoing admissions for PG medical courses.

Published: 02nd July 2020 07:56 PM 

Supreme Court 

By PTI

NEW DELHI: The Tamil Nadu government moved the Supreme Court Thursday seeking a direction to the Madras High Court to expeditiously decide the pleas challenging the Centre's decision not to grant 50 per cent quota to OBCs in medical seats surrendered by the state in all India quota for undergraduate, postgraduate and dental courses in 2020-21.

It has assailed the June 22 high court order which refused to grant any interim order on the OBC quota row and adjourned the hearing till July 9 saying that a similar petition was already scheduled to be heard on July 8 by the Supreme Court.

"The Supreme Court is already seized of the matter and let us wait and see what transpires (on July 8)," the high court had said.

The state government and some political parties such as DMK, All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), CPI (M), Tamil Nadu Congress Committee and CPI had moved the high court after the Supreme Court, on June 11, refused to entertain their petitions and asked them to approach the high court.

"Direct the High Court to expeditiously hear and dispose of the writ petitions...," the state government said in its plea before the top court.

"The High Court has in effect declined to take up the writ petitions in spite of the fact that the Respondents (Centre, MCI and others) had virtually conceded to the prayer sought for in the writ petition.

"The High Court has failed to appreciate that the respondents are stalling adjudication of the issue. The (High) Court has been misled by the Respondents' contentions and has unjustifiably kept the Petitioner's writ petition in abeyance till this court issues orders in an ostensibly identical matter...which is tentatively listed for July 08," it said.

The high court had refused to pass any interim order on the pleas after taking note of the Centre's submission that since 1986 no reservation has been provided in the AIQ (All-India quota) seats for medical admission as per the apex court directive.

"The same was modified after 10 years, providing reservation for SC/ST. In 2015, pleas were moved seeking OBC reservation, which is still pending before the apex court, which has to take a call and modify the order," the counsel for the Centre had told the High Court.

The state government and various political parties have challenged the Centre's decision not to grant 50 per cent reservation to OBCs as per Tamil Nadu law.

Some of the petitioners, in their interim prayers before the High Court, had sought to stall the ongoing admissions for PG medical courses.

The pleas had alleged that the Centre also did not follow its own policy of 27 per cent reserved seats for OBCs under the 2006 Act.

Anna University staff fear getting back ‘here’


Anna University staff fear getting back ‘here’

The university staff have expressed concerns over returning to work post intense lockdown, that ends on July 5.

Published: 03rd July 2020 06:00 AM 

Staff setting up beds at the Covid Care Centre at Anna University on Friday; (inset) a view of the centre | Ashwin prasath

By Express News Service

CHENNAI: “The patients are brought to the campus everyday. Walking into a campus with isolation wards feels like walking into a lion’s den,” said an assistant professor, working at Guindy campus of Anna University.

The university staff have expressed concerns over returning to work post intense lockdown, that ends on July 5. The varsity buildings have been serving as isolation wards for Covid patients, creating fear and hesitation among the staff. One of the administrative staff said, even though he does not have to go into the buildings used as isolation wards, he fears coming in contact with the ones who have to. “The government has asked us to keep away from containment zones.

Isn’t the varsity a containment zone entirely?” he asked. The varsity, through a circular on Tuesday said, its campuses, offices, and departments coming under containment zones across the State will remain closed until July 5. The circular does not offer a clarity on whether the staff has to report to work afterwards.

Speaking to TNIE, Anna University’s Vice Chancellor MK Surappa said, a decision on the issue will be taken only after considering sufficient transport facilities for teachers to reach campus. “The campus is protected from the buildings being used as isolation wards. But I understand their concern, he said.

NEWS TO DAY 29.04.2026