Wednesday, August 26, 2020

19 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

19 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

வாஷிங்டன்: அரசு நிதி கையிருப்பு காலியானதால், 19 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை தடை செய்யப்பட்டது. இதனால் அமெரிக்காவில் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள முன்னணி விமான நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறின. இதை சமாளிக்க 25 மில்லியன் டாலர் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியும் காலியானதால், செப்.ர் 1 ம் தேதி முதல் 19 ஆயிரம் விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.அரசு நிதி வழங்கும் பட்சத்தில் இந்த வேலை இழப்பு தவிர்க்கப்படலாம் இல்லையேல் 19 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்க முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt

சிங்கப்பூரில் 'மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்' 26.08.2020

சிங்கப்பூரில் 'மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்'  26.08.2020 


ஆப்பிள் நிறுவனம் சிங்கப்பூரில் தனது மூன்றாவது புதிய ஸ்டோரை திறக்க உள்ளது. மெரினா பே சாண்ட்ஸில் உலகின் முதல் மிதக்கும் சில்லறை விற்பனை ஸ்டோராக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் இணையதளமான டுடேயின் அறிக்கையின்படி, புதிய ஆப்பிள் ஸ்டோர் மெரினா பே சாண்ட்ஸில் மிதக்கும் கோள வடிவில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் மெரினா பே சாண்ட்ஸ் சிறந்த படைப்பாற்றலாக இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆர்வத்தையும், கவனத்தையும் ஈர்ப்பதற்காக ஒரு புது முயற்சியாக வித்தியாசமான இந்த ஸ்டோரை உருவாக்கியுள்ளோம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் சிங்கப்பூரில் தனது முதல் ஸ்டோரை ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜ் கட்டிடத்தில் கடந்த 2017-இல் திறந்தது. ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் அமைந்துள்ள அதன் இரண்டாவது ஸ்டோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திறக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் திறக்கப்பட்ட முதல் ஆப்பிள் ஸ்டோர் 'ஆப்பிள் ஆர்ச்சர்ட் சாலை' என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

மன்னிப்பு கேட்க பூஷண் மீண்டும் மறுப்பு: தண்டனை விவரம் ஒத்திவைப்பு

மன்னிப்பு கேட்க பூஷண் மீண்டும் மறுப்பு: தண்டனை விவரம் ஒத்திவைப்பு

26.08.2020

புது தில்லி: தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாகக் கூறிவிட்ட நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை தொடர்பான விவரங்களை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

நீதித் துறையை விமர்சித்து சமூக ஆர்வலரும், வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் 2 பதிவுகள் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவுகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இது தொடர்பாக, பிரசாந்த் பூஷண் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதி உத்தரவிட்டது. அவர் மன்னிப்புக் கேட்க மறுத்ததை அடுத்து, இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரை மணி நேரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மீண்டும் விசாரணை தொடங்கியபோது, தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், நீங்கள் ஏற்படுத்திய காயத்தை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும். மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் போன்றோர் நீதித் துறைக்கு எதிராக பதிவிடும் சிறிய கருத்தும் பெரிதாகப் பார்க்கப்படும். நீதித் துறையைச் சேர்ந்தோர் கூறும் கருத்துகள் மக்களிடையே நீதித் துறை மீதான நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்யும். மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அது என்ன அவ்வளவு மோசமான வார்த்தையா? என்று கூறினர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா பேசுகையில், எத்தனை நாளுக்குத்தான் நீதிபதிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது. தங்களை தற்காத்துக் கொள்ள நீதிபதிகளிடம் எந்த ஆயுதமும் இல்லை. நீதிபதிகளையும், நீதித்துறையின் மாண்புகளையும் காக்க வழக்குரைஞர்கள்தான் உதவ வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை தொடர்பான விவரங்களை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மன்னிப்புக் கேட்க முடியாது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் திங்கள்கிழமை தாக்கல் செய்த பதில் மனுவில், நீதித் துறையில் தவறுகள் நடைபெறும்போது அதனை சுட்டிக் காட்டுவது எனது கடமை. அதன் அடிப்படையிலேயே கருத்து தெரிவித்தேனே தவிர, உச்சநீதிமன்றத்துக்கு எதிராகவோ, குறிப்பிட்ட தலைமை நீதிபதிக்கு எதிராகவோ கருத்து தெரிவிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கும் பணியில் இருந்து தடம் மாறுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதற்காகவே ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்திருந்தேன்.

சுட்டுரையில் நான் தெரிவித்த கருத்துகளில் உறுதியாக இருக்கிறேன். குடிமகனாகவும், வழக்குரைஞராகவும் பொது வெளியில் கருத்துகளைத் தெரிவிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

எனவே எனது கருத்துக்கு நிபந்தனையுடன் அல்லது நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பது என்பது எனது மனசாட்சிக்கு எதிரானதும், போலியானதும் ஆகிவிடும்.

மக்களின் அடிப்படை உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றமே விளங்குகிறது.

குழப்பம் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் சட்டத்தின் ஆட்சியையும், அரசியலமைப்பு சட்டத்தையும் உச்சநீதிமன்றமே காக்கும் என மக்கள் நம்புகின்றனர். இந்த நீதிமன்றத்தின் மீது மிகப் பெரிய மதிப்பு வைத்துள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. மன்னிப்பு கேட்கும்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டும், அதனை பிரசாந்த் பூஷண் நிராகரித்துவிட்டார். எனவே, அவருக்கு 6 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது.

Dailyhunt

2019-20-ஆம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை: ரிசர்வ் வங்கி

2019-20-ஆம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை: ரிசர்வ் வங்கி

26.08.2020

மும்பை: 2019 - 20-ஆம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை என்றும், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தும் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 33,632 தாள்களாக இருந்த நிலையில், இது 2019 மார்ச் இறுதியில் 32,910 ஆகவும், 2020 மார்ச் இறுதியில் 27,398 தாள்களாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மேலும், 2020 மார்ச் இறுதியில், நாட்டில் ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் விகிதம் 2.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 2018 மார்ச் இறுதியில் 3.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, 2018-ஆம் ஆண்டு முதல் இரண்டு தாள்களின் புழக்கமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிடுவது குறித்து எந்த திட்டமும் இல்லை என்றும், 2019 - 20-ஆம் ஆண்டில் 2000 ரூபாய் புதிய நோட்டுகள் விநியோகிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 - 20ஆம் ஆண்டில் ரூ.100 (330 கோடி தாள்கள்), ரூ.50 (240 கோடி தாள்கள்), ரூ.200 (205 கோடி தாள்கள்), ரூ.10 (147 கோடி தாள்கள்), ரூ.20 (125 கோடி தாள்கள் அச்சிட ஆணை வழங்கப்பட்டுள்ளது.

100 ரூபாய் நோட்டுகளை வார்னிஷ் ரூபாய் நோட்டுகளாக அச்சிடும் சோதனை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி தாமதமாவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

இந்தியா முழுவதுமுள்ள மத்தியப் பல்கலையில் சேர செப்டம்பரில் நுழைவுத்தேர்வு

இந்தியா முழுவதுமுள்ள மத்தியப் பல்கலையில் சேர செப்டம்பரில் நுழைவுத்தேர்வு

26.08.2020

இந்தியா முழுவதுமுள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு, செப்டம்பர் மாதம் 18, 19, 20 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள 14 மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 4 மாநிலப் பல்கலைக்கழகங்களில், புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 18, 19, 20 தேதிகளில், இந்தியா முழுவதுமுள்ள தேர்வு மையங்களில் நடைபெறுமென, மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக ராஜஸ்தான் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும், அஸ்ஸாம், ஆந்திரப்பிரதேசம், குஜராத், ஹரியானா, ஜம்மு, காஷ்மீர், ஜார்கண்ட் ,கர்நாடகா, கேரளா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெற்கு பீகார் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த மத்தியப் பல்கலைகழகங்களுக்கும், மேலும் 4 மாநில பல்கலைக்கழகங்களான, ராஜுரிலுள்ள பாபா குலாம் ஷா பல்கலைக்கழகம், பெங்களூருவில் உள்ள டாக்டர் பி ஆர் அம்பேத்கார் பொருளியல் பல்கலைக்கழகம், பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகம், ஜோத்பூரில் உள்ள சர்தார் பட்டேல் பல்கலைக்கழகம் ஆகிய மாநில பல்கலைக்கழகங்களிலும் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு செப்டம்பர் மாதம் 18, 19, 20 தேதிகளில் நடைபெறுமென அனைத்து பல்கலைக்கழகங்களின், ஒருங்கிணைப்புப் பல்கலைக்கழகமான ராஜஸ்தான் பல்கலைக்கழகம் சார்பாக செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Dailyhunt

ஜப்பானில் கடுமையான வெயில்: 25 பேர் பலி

ஜப்பானில் கடுமையான வெயில்: 25 பேர் பலி  26.08.2020

ஜப்பானில் கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் 25 பேர் பலியாகினர், 12,800 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஜப்பானிய தீ மற்றும் பேரழிவு மேலாண்மை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

பாதிக்கப்பட்ட மக்களில் 45.4 சதவீத மக்கள் வீட்டிற்குள் இருந்தவர்களும், 17 சதவீத மக்கள் வேலைக்கு சென்றவர்களும் ஆவர்.

பாதிக்கப்பட்ட 12,800 மக்களில், கிட்டத்திட்ட 4 ஆயிரம் பேர் முதியவர்கள். அதில் 387 பேர் உயிரிக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

டோக்கியோ மற்றும் ஜப்பானின் பிற பகுதிகளில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் (100.4 டிகிரி பாரன்ஹீட்) வரை பதிவாகியுள்ளது.

வருடத்தின் இந்தக் காலகட்டத்தில் ஜப்பான் நாட்டில் எப்போதும் தீவிர வெப்பநிலை பதிவாகும். மேலும், வெயில் காரணமாக உயிரிழப்புகளைப் பதிவு செய்ய அதிகாரிகள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு, வெயில் காலத்தில் 126 பேர் பலியாகினர் மற்றும் 70,000 க்கும் அதிகமானோர் வெப்ப சமந்தமான பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Dailyhunt

இ-பாஸுடன் பயணிப்போரிடம் சோதனைகள் இல்லை

இ-பாஸுடன் பயணிப்போரிடம் சோதனைகள் இல்லை

26.08.2020

சென்னை: இணையவழி அனுமதிச் சீட்டுடன் பயணிப்போரிடம் நெடுஞ்சாலைகளில் சோதனைகள் நடத்தப்படுவது முற்றிலும் குறைந்துள்ளது. இதனால், எந்தத் தடையுமின்றி பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் பயணித்து வருகின்றனா்.

மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களில் எந்தத் தடையும் விதிக்கக் கூடாது என மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, புதுச்சேரி, கா்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இணைய வழி அனுமதிச் சீட்டு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீடிப்பு: இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் அந்த முறை தொடா்ந்து நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் எழுந்த சிக்கல்கள் களையப்பட்டு கடந்த 17-ஆம் தேதி முதல் ஒரே நாளில் பரிசீலிக்கப்பட்டு, அனைத்துத் தரப்பினருக்கும் விரைவாக வழங்கப்பட்டு வருகிறது.

சுமாா் 20 லட்சம் போ: பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை இணையவழி அனுமதிச் சீட்டுகளை 20 லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்து பெற்றுள்ளனா். கடந்த 17-ஆம் தேதி முதல் சென்னை நகருக்கு மட்டும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோா் அனுமதி பெற்று வந்துள்ளனா்.

மேலும், சென்னையில் இருந்து தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்து வெளி மாவட்டங்களுக்குச் செல்கின்றனா். பயணத்தின்போது, நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகளில் கடந்த சில நாள்களாக பயணிகளிடையே எந்த சோதனையும் மேற்கொள்ளப்படுவதில்லை.

இதுகுறித்து, தமிழக அரசுத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது எந்தத் தடையும் இல்லாமல் மக்கள் செல்கின்றனா். அவா்கள் தங்களது பயணத்தை முடித்த பிறகு, பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பிலோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகங்கள் தரப்பிலோ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

பயணம் முடிந்ததும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருக்கிா என விசாரிக்கப்பட்டு, சில நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறாா்கள். இணையவழி அனுமதிச் சீட்டு பெற்ற அடுத்த 12 மணி நேரத்துக்குள் இதற்கான அழைப்புகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு செல்லிடப்பேசிக்கு வருகின்றன.

அதே சமயத்தில், கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலைகளிலும், இதர மாநில நெடுஞ்சாலைகளிலும் இணையவழி அனுமதிச் சீட்டுக்காக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகள் இப்போது மேற்கொள்ளப்படுவதில்லை. கடந்த சில நாள்களாக பயணிகள் தங்களது பயணத்தை சிரமமின்றி எளிதாக மேற்கொண்டு வருகின்றனா்' என்று தெரிவித்தனா்.

Dailyhunt

NEWS TODAY 27.01.2026