Monday, September 28, 2020

ஹலோ சீனியர்ஸ்... கொரோனா காலச் சூழலை எதிர்கொள்ள மூத்தகுடிமக்களுக்கான ஓர் இணைய வழிகாட்டல்!

 ஹலோ சீனியர்ஸ்... கொரோனா காலச் சூழலை எதிர்கொள்ள மூத்தகுடிமக்களுக்கான ஓர் இணைய வழிகாட்டல்!

சைலபதி

ஹலோ சீனியர்ஸ்

வாழ்வின் பல சவால்களையும் சமாளித்து வெற்றிபெற்ற அவர்களுக்கு இந்த கொரோனா காலச் சூழலைக் கடக்க அத்தகைய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முதுமை என்பது வரம். இதைச் சரியாகப் புரிந்துகொண்டவர்கள் தங்களையும் பேணித் தங்களின் சுற்றங்களுக்கும் நிழல்தரும் மரமாக வாழ்கிறார்கள். ஆனால் இந்த மனநிலை அவ்வளவு எளிதில் அனைவருக்கும் வாய்த்துவிடுவதில்லை. இதுவே குடும்பச்சூழலில் பல சிக்கல்களுக்கும் காரணமாகிவிடுகிறது.

அதற்குச் சுற்றுச்சூழலும் முக்கிய காரணம். கொரோனா காலம் அனைவருக்கும் ஒரு சவால் என்றால் முதியவர்களுக்கோ அது பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. அதிகாலை வாக்கிங் முதல் ஆலய தரிசனம்வரை அவர்களின் அனைத்தின் இயல்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

முதியவர்கள்

ஆனால், வாழ்வில் பேரனுபவம் கொண்ட சீனியர்களுக்கு மிக எளிமையாக இந்தச் சூழலை விளக்கிவிட்டால் அவர்களின் பாதுகாப்பை அவர்களே சிறப்பாகக் கையாண்டு கொள்வார்கள். குறிப்பாக அவர்களின் உடல் இயக்கம் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு அளித்து அவர்களின் ஆரோக்கியம் பற்றிய கவலைகளைப் போக்குவது மிகவும் அவசியம். வாழ்வின் பல சவால்களையும் சமாளித்து வெற்றிபெற்ற அவர்களுக்கு இந்த கொரோனா காலச் சூழலைக் கடக்க அத்தகைய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வரும் அக்டோபர் 1 ம் தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி ஆனந்த விகடன் மூத்த குடிமக்களின் பெருமைகளைப் போற்றவும் அவர்கள் பாதுகாப்பை அவர்களே உறுதி செய்துகொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும், ‘ஹலோ சீனியர்ஸ்...என்ற ஓர் இணைய நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் பட்டிமன்றம் ராஜா, காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், டாக்டர் பி. ஹரிசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். கொரோனா காலச் சூழலில் தங்களின் உடல் ஆரோக்கியம், மன வளம் மற்றும் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்துகொள்ளும் பல்வேறு ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள்.

ஹலோ சீனியர்ஸ்

கட்டணமில்லா இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். வாசகர்களே, உங்கள் வீட்டில் அறுபதுவயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கலந்துகொள்ள ஊக்குவியுங்கள். அவர்கள் சார்பில் நீங்களே முன்பதிவும் செய்யலாம்.

வாருங்கள் அக்டோபர் 1-ம் தேதியின் மாலையை அழகாக்குவோம்.

நாள்: அக்டோபர் - 1

நேரம்: மாலை 4 மணி முதல் 6 மணிவரை

சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்கப்படுமா?... தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்கப்படுமா?... தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

2020-09-27@ 14:34:21

தென்காசி: தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளின் நலன் கருதி சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் மட்டும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. மற்ற நாட்களில் ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. தென்காசி மாவட்ட மக்களின் வரவேற்பை பெற்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவது குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை.

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் 3 நாட்களும், சென்னை செல்லும் பயணிகளுக்கு உகந்ததாக இல்லை. தென்காசி மாவட்டத்தில் இருந்து பெரும்பாலும் அலுவல் காரணங்களுக்காகவே சென்னை செல்கின்றனர். சிலம்பு எக்ஸ்பிரஸ் வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே சென்னைக்கு செல்கிறது. வெள்ளிக்கிழமை மாலை தென்காசியில் இருந்து சென்னை செல்லும் பொழுது சனி, ஞாயிறு விடுமுறை நாளாவதால் எந்த அலுவலகத்திற்கும் செல்ல முடியாது. ஞாயிறு மாலை புறப்படும் ரயில் மட்டுமே அலுவல் காரணங்களுக்காக சென்னை செல்கின்றவர்கள் பயன்படுத்த முடியும்.

அதேபோல் சென்னையில் இருந்து திங்கட்கிழமை அலுவல் பணிகளை முடித்த ஒருவர் தென்காசி திரும்புவதற்கு ரயில் எதுவுமில்லை. இதனால் ரயில் பயணத்தை விரும்புவோர், 4 நாட்கள் சென்னையில் தங்கிவிட்டு வியாழக்கிழமை இரவுதான் சென்னையிலிருந்து தென்காசிக்கு புறப்பட முடியும். பொதிகை எக்ஸ்பிரஸ் இயக்கப்படாத நிலையில் சிலம்பு எக்ஸ்பிரஸை வாரத்தில் மூன்று நாட்கள் என்பதற்கு பதிலாக தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பதே தென்காசி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.

சென்னையிலிருந்து சேலத்திற்கு எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி திடீரென கவிழ்ந்து விபத்து; சாலை முழுவதும் எண்ணெய் கொட்டியதால் பரபரப்பு!!

சென்னையிலிருந்து சேலத்திற்கு எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி திடீரென கவிழ்ந்து விபத்து; சாலை முழுவதும் எண்ணெய் கொட்டியதால் பரபரப்பு!!

2020-09-27@ 15:43:53



சேலம்: சென்னையிலிருந்து சேலத்திற்கு எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலை முழுவதும் எண்ணெய் பரவியதால் அவ்வழியே போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் உடையாப்பட்டி பகுதியில் லூப்ரிகென்ட் ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று மதியம் 2 மணியளவில் நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அந்த லாரியிலிருந்து ஏராளமான எண்ணெய் வெளியேறி கொண்டிருக்கிறது.

தொடர்ந்து, போக்குவத்தும் இதனால் தடை செய்யப்பட்டுள்ளது. லாரி ஓட்டுனர் பாலாஜி மற்றும் க்ளீனர் நவீன்குமார் ஆகிய இருவரும் நேற்று இரவு சென்னையிலிருந்து லூப்ரிகென்ட் ஆயிலை ஏற்றிக்கொண்டு பவானி வரை வந்துகொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் சேலம் உடையாப்பட்டி பகுதிக்குள் வந்துகொண்டிருக்கும்போது, ஓட்டுனர் பாலாஜி சற்று தூக்கத்தில் இருந்த காரணத்தினால் டேங்கர் லாரியானது நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் சாலை முழுவதும் ஆயில் கொட்டியது.

இதையடுத்து அவ்வழியே போக்குவரத்தானது தடை செய்யப்பட்டு அருகே உள்ள சாலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சாலையில் கொட்டிய எண்ணையை அகற்றும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் லாரியிலிந்து ஆயிலானது வெளியேறிக்கொண்டே இருக்கிறது. இதனால் தற்போது 3 கிரேன்கள் கொண்டு லாரியை தூக்கி நிறுத்தும் பணியில் காவல் துறையும், தீயணைப்பு துறையும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனிடையே அப்பகுதி முழுவதும் ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

புறநகா் மின்சார ரயில் சேவைக்கு தடை நீட்டிப்பால் பயணிகள் அவதி

புறநகா் மின்சார ரயில் சேவைக்கு தடை நீட்டிப்பால் பயணிகள் அவதி

28.09.2020

கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சென்னையில் புறநகா் மின்சார ரயில்கள் இயக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால், புறநகா் பகுதிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே, புறநகா் மின்சார ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதற்கிடையில்,

ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு, மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

10 லட்சம் போ பயணம்: கரோனா பொதுமுடக்கம் தளா்வுகளுடன் தமிழகம் முழுவதும் தற்போது நீடிக்கிறது. தளா்வுகளின்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும், தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தலைநகா் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தத்தளித்து வருகிறது. இதற்கு காரணம் முக்கிய போக்குவரத்தாக விளங்கும் சென்னையில் புறநகா் மின்சார ரயில்களின் சேவை தொடங்கப்படாதது ஆகும்.

கட்டணம் குறைவு, போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை, குறிப்பிட்ட நேரத்தில் பணிக்குச் செல்லும் நிலை ஆகியவை மின்சார ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்த முக்கிய காரணம். சென்னையில் இருந்து புறநகா் பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மின்சார ரயில்களின் சேவைகளில் சுமாா் 10 லட்சம் போ பயணம் செய்து வந்தனா். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, வாகன உற்பத்தி மற்றும் இதர தொழிற்சாலைகள் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களின் மின்சார ரயில்களில் பயணம் முக்கியமானதாக இருந்து வருகிறது.

மக்கள் கடும் அவதி:

இதற்கிடையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, 6 மாதங்களுக்கும் மேலாக மின்சார ரயில் சேவை தடை நீடிக்கிறது. இதனால், ரயில் போக்குவரத்து வசதி கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனா். அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் வேலை செய்பவா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியா்கள் வேளச்சேரி, தாம்பரம், மறைமலைநகா், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அம்பத்தூா், ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூா், திருநின்றவூா், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா் போன்ற பகுதிகளில் இருந்துதான் தினமும் வேலைக்கு வருகின்றனா். அவா்களுக்கு மின்சார ரயில் போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நெரிசல்மிகுந்த நேரங்களில் சாலைவழியாக வருவதற்கு 2 மணி நேரம் ஆகும். அதேநேரத்தில், புறநகா் ரயிலில் 30 நிமிஷம் முதல் 45 நிமிடங்களில் அலுவலகம் அல்லது வீட்டுக்குத் திரும்பிவிடலாம். மேலும், பேருந்து பயண கட்டணத்தைவிட ரயில் கட்டணம் குறைவு. எனவே, மின்சார ரயில்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

போக்குவரத்து செலவு அதிகரிப்பு:

இது குறித்து ரயில் பயணிகள் சங்கத்தினா் கூறியது: பொதுமுடக்கம் தளா்வு

அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலானோா் தற்போது பணிக்குச் சென்று வருகின்றனா். மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், புறநகா் மின்சார ரயில் சேவை தொடங்கவில்லை. இதனால், புறநகரில் வசிக்கும் மக்கள் வேலைக்கு வந்து செல்ல கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பெரும்பாலான மக்கள் குறைந்த வருமானத்தைப் பெறும் கூலி தொழிலாளிகள் மற்றும் தனியாா் நிறுவன தொழிலாளா்கள் ஆவா். அவா்கள் வேலைக்காக, புறநகரில் இருந்து சென்னைக்கு வந்து செல்ல அதிகமாக பணம் செலவிடவேண்டியுள்ளது. மிகவும் கடினமான நிலையைச் சந்தித்து வருகின்றனா். எனவே, கூலி தொழிலாளிகள், தனியாா் நிறுவன தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கும் மின்சார ரயில் சேவையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஒப்புதலுக்கு பிறகு ரயில் சேவை:

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, புறநகா் மின்சார ரயில் சேவையைத் தொடங்க எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துவிட்டது. எனவே, மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்க ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு, மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என்றனா்.
Dailyhunt

கொரோனா பாதிப்பு 5.80 லட்சத்தை கடந்தது சென்னையில் மீண்டும் பரவல் அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு 5.80 லட்சத்தை கடந்தது சென்னையில் மீண்டும் பரவல் அதிகரிப்பு

Added : செப் 28, 2020 03:33

சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 5.80 லட்சத்தை கடந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 182 கொரோனா ஆய்வகங்களில், 96 ஆயிரத்து, 102 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன. அதில், ௫,௭௯௧ பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில், 1,280; கோவையில், 596; சேலத்தில், 378; செங்கல்பட்டில், 296; திருப்பூரில், 282; கடலுாரில், 256; திருவள்ளூரில், 202 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில், இம்மாத துவக்கத்தில், 900 என்ற எண்ணிக்கையில் இருந்த தொற்று பாதிப்பு, சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மார்ச் முதல் நேற்று வரை, 71 லட்சம் மாதிரிகளை பரிசோதித்ததில், ஐந்து லட்சத்து, 80 ஆயிரத்து, 808 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 12 வயதுக்கு உட்பட்டவர்கள், 23 ஆயிரத்து, 399 பேர்; 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 74 ஆயிரத்து, 920 பேர். மாவட்ட வாரியாக, சென்னையில், ஒரு லட்சத்து, 63 ஆயிரத்து, 423; செங்கல்பட்டில், 34 ஆயிரத்து, 578; திருவள்ளூரில், 31 ஆயிரத்து, 652; கோவையில், 30 ஆயிரத்து, 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்றவர்களில், நேற்று மட்டும், 5,706 பேர் குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து, ஐந்து லட்சத்து, 25 ஆயிரத்து, 154 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தற்போது, 46 ஆயிரத்து, 341 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.நேற்று, ௮௦ பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து, இதுவரை, மாநிலம் முழுவதும், கொரோனா பாதிப்பால், 9,313 பேர் இறந்துஉள்ளனர். சென்னையில் மட்டும், 3,166 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்பு

அரியலுார் 3,673 3,461 39செங்கல்பட்டு 34,578 31,678 542சென்னை 1,63,423 1,49,601 3,166கோவை 30,314 24,915 418கடலுார் 19,686 17,968 220தர்மபுரி 3,587 2,532 24திண்டுக்கல் 8,742 8,104 159ஈரோடு 6,388 5,230 84கள்ளக்குறிச்சி 9,034 8,428 95காஞ்சிபுரம் 21,593 20,340 309கன்னியாகுமரி 12,413 11,215 218கரூர் 2,944 2,419 39கிருஷ்ணகிரி 4,319 3,431 60மதுரை 16,359 15,235 386நாகை 5,088 4,435 80நாமக்கல் 5,027 3,940 66நீலகிரி 3,807 2,866 24பெரம்பலுார் 1,779 1,631 20புதுக்கோட்டை 8,793 7,917 135ராமநாதபுரம் 5,478 5,205 119ராணிப்பேட்டை 13,170 12,571 155சேலம் 18,685 15,568 310சிவகங்கை 5,070 4,682 120தென்காசி 7,167 6,566 134தஞ்சாவூர் 10,551 9,162 169தேனி 14,686 13,963 177திருப்பத்துார் 4,768 4,106 87திருவள்ளூர் 31,652 29,515 541திருவண்ணாமலை 15,075 13,925 223திருவாரூர் 6,950 5,812 70துாத்துக்குடி 13,256 12,530 121திருநெல்வேலி 12,463 11,361 198திருப்பூர் 7,681 5,888 126திருச்சி 10,254 9,331 145வேலுார் 14,397 13,268 226விழுப்புரம் 11,350 10,250 97விருதுநகர் 14,313 13,840 210வெளிநாட்டில் இருந்து வந்தோர் 924 921 1உள்நாட்டு விமான பயணியர் 943 918 0ரயில் பயணியர் 428 426 0மொத்தம் 5,80,808 5,25,154 9,313/***

எஸ்.பி.பி., சிகிச்சை கட்டணம் மகன் சரண் விளக்கம்

எஸ்.பி.பி., சிகிச்சை கட்டணம் மகன் சரண் விளக்கம்

Added : செப் 28, 2020 03:43

சென்னை : பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சைக்கான கட்டணம் குறித்து, வெளியான வதந்தி குறித்து, அவரது மகன் சரண் விளக்கம் கொடுத்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணி பாடகர், எஸ்.பி.பி., இம்மாதம், 25ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் சிகிச்சை பெற்றதற்கான கட்டணத்தை, எஸ்.பி.பி., குடும்பத்தினரால் கட்ட முடியாமல் போனதால், துணை ஜனாதிபதி உதவியுடன், எஸ்.பி.பி., உடல் பெறப்பட்டதாக தகவல் பரவியது.

இது குறித்து, வீடியோ பதிவில், எஸ்.பி.பி.,யின் மகன் சரண் கூறியுள்ளதாவது:எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட என் அப்பாவுக்கான சிகிச்சை கட்டணம் குறித்து, சில வதந்திகள் உலவுவது துரதிர்ஷ்டவசமானது. அப்பா மருத்துவமனையில், ஆக. 5ல், அனுமதிக்கப்பட்டார்; இம்மாதம், 25ம் தேதி காலமானார்.மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து, வதந்தி ஒன்று வந்திருக்கிறது.நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், இன்னும் பணம் பாக்கி இருந்ததாகவும், பின், தமிழக அரசிடம் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால், துணை ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும், அவர்கள் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் ஒரு செய்தி உலவுகிறது.

நாங்கள் பாக்கி பணத்தை தரும் வரை அப்பாவின் உடலை, எம்.ஜி.எம்., மருத்துவமனை ஒப்படைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் சுத்த பொய்.இப்படி ஒரு வதந்தியை ஏன் பரப்புகின்றனர் என தெரியவில்லை. இதுபோன்ற வதந்திகளை பரப்பும் நபரை, எஸ்.பி.பி., மன்னிப்பார். நானும் அவரை மன்னிக்கிறேன்.எம்.ஜி.எம்., ஹெல்த்கேரின் அத்தனை சிகிச்சைக்கும், எங்கள் குடும்பத்துக்கு செய்த உதவிக்கும், எங்கள் குடும்பத்தினர் எப்போதும் நன்றியுடன் இருப்போம். மருத்துவமனை கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியாகும். அதுவரை தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள்.இவ்வாறு, சரண் கூறியுள்ளார்.


 

NEWS TODAY 27.01.2026