Saturday, October 3, 2020

Mysuru-based JSS to carry out trials for Novavax vaccine


Mysuru-based JSS to carry out trials for Novavax vaccine

Institution was also approached for human trials of Sputnik V

02/10/2020

Laiqh A. Khan Mysuru

JSS Academy of Higher Education and Research (JSSAHER), which has already begun phase three of the clinical trials for vaccine candidate Covishield at its facility in Mysuru, has been approached for human trials of Novavax, another COVID-19 vaccine candidate developed by a U.S.-based company, as well as Russia’s Sputnik V.

JSSAHER Pro-Chancellor B. Suresh said the institution had consented to carrying out trials for Novavax while the request on Sputnik V had been kept in abeyance.

Novavax, the U.S.-based biotechnology company, has entered into a manufacturing pact with the Pune-based Serum Institute of India (SII). “Novavax approached us through SII, and we consented to it. We will be submitting the required documents shortly,” he said.

Though the institution was also approached for the human trials of Sputnik V, which has tied up with the Hyderabad-based Dr. Reddy’s Laboratories, Dr. Suresh said JSSAHER was still studying the proposal.

Apart from carrying out clinical studies for Covishield, the vaccine candidate developed by Oxford University and multi-national pharmaceutical company AstraZeneca, JSSAHER has taken up human trials to study the efficacy of BCG, the anti-tuberculosis vaccine, against COVID-19. Dr. Suresh said a lot of interest had been generated for trials in India because of its huge capacity for making drugs.

Hang Hathras rapists, demands CM

Hang Hathras rapists, demands CM

Says An Example Should Be Set To Avoid A Repeat

TIMES NEWS NETWORK

New Delhi:03.10.2020

Joining the citizens’ protest related to the Hathras rape case at Jantar Mantar on Friday, chief minister Arvind Kejriwal appealed to UP government to ensure the strictest punishment for the culprits, saying they should be hanged. Several Aam Aadmi Party functionaries were also present at the protest.

“We are in a deep pit,” began Kejriwal, addressing the protesters. “The FIR for rape was not lodged for many days, no proper treatment was given to the victim, and her body was cremated at night against Hindu customs. Several actions like these have pushed people into believing that the incident is being brushed aside and the culprits are being shielded.”

The CM continued, “The whole country would like to appeal to UP government to hand out stringent punishment to the culprits. Hang them till death. They should be given the harshest punishment so that nobody tries to repeat such an act.”

Describing the treatment meted to the family as wrong, Kejriwal said at this point, all the family needed was peace and the freedom to meet whoever they wanted to. “There should be no politics on the matter,” he said. “It is not ethical to play politics around a case like this. When one says a rape has happened in UP, another person says a rape has also happened in Rajasthan. This is no argument. Why should such incidents of rape happen in UP or Rajasthan? Why should they happen in Madhya Pradesh, Mumbai and Delhi? Whether they belong to Rajasthan, Uttar Pradesh, Delhi, Mumbai, Kolkata or Bengaluru, they are our daughters. There shouldn’t be any case of rape anywhere in the country.”

The AAP national convenor added, “All of us, all the governments, political parties and people of the country, must create a system that keeps our daughters safe. There should be no politics at all on such a heinous matter.”

AAP spokesperson Saurabh Bharadwaj claimed that the reason behind the outrage in the Hathras rape case was because “every officer of the administration, whether the station house officer, district magistrate, DSP, ADG or UP chief minister, everybody is trying to save the accused right from the day of the incident on September 14 till today.” The girl’s body was cremated without the consent of her family to erase any evidence, Bharadwaj alleged.

Minister Rajendra Pal Gautam, MLAs Atishi Marlena, Dilip Pandey, Akhilesh Pati Tripathi, Rakhi Birla, Somnath Bharti, Rajesh Gupta, Madan Lal, Vishesh Ravi and several others were also present at the protest.


STRAIGHT TALK: Chief minister Arvind Kejriwal said there is a perception that attempts are being made to protect the culprits

தமிழகத்தில் திருமால் வழிபாடும், நவதிருப்பதியும்! :புரட்டாசி சனிக்கிழமை -3

தமிழகத்தில் திருமால் வழிபாடும், நவதிருப்பதியும்! :புரட்டாசி சனிக்கிழமை -3

Updated : அக் 03, 2020 00:59 | Added : அக் 03, 2020 00:54

-'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்' என்று, தொல்காப்பியர், தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வட வேங்கடம் என்பது, தற்போதைய ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி.அதாவது, திருப்பதி முதல் கன்னியாகுமரி வரை, பரந்து விரிந்த நிலப் பகுதியை கொண்டதாக,நம் பண்டைய தமிழகம் இருந்தது. இதில், பல்வேறு மத, இன நம்பிக்கைகளுடன், மக்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள், தொல்லியல் தடயங்களாகவும், இலக்கியங்கள் வாயிலாகவும் நமக்கு கிடைகின்றன.



தொல்காப்பியத்தின் அகத்திணையியலில், தமிழக நிலப் பகுதிகள் ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நிலத்தின் தன்மைக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரிக்கப்பட்டு, அவற்றுக்கான தெய்வங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.




முல்லை நிலம்

முல்லை நிலமானது காடும் காட்டைச் சார்ந்த மேய்ச்சல் நிலப் பகுதி. இதற்கான கடவுளாக மாயோன் என்னும் திருமால் குறிப்பிடப்பட்டுள்ளார்.ஆடு, மாடு மேய்ச்சலை முக்கிய தொழிலாகக் கொண்ட மக்களால், இவர் வணங்கப்பட்டுள்ளார். விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதாரத்தின், அத்துணை அம்சங்களும் பொருந்துவதாக இவர் திகழ்கிறார்.

மற்றொரு சங்க இலக்கியமான பரிபாடலில், விஷ்ணுவின் அவதாரங்கள் விளக்கமாக குறிப்பிடப்பட்டிருப்பது, திருமால் வழிபாட்டின் தொன்மையை விளக்குவதாக உள்ளது.



கலித்தொகையில், 'மால்' என, விஷ்ணு போற்றப்படுகிறார். சங்க இலக்கியத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் மற்றொரு செய்தியானது, திருமால் வழிபாடு தமிழகத்தில் வேரூன்றிய காரணத்தை விளக்குவதாக உள்ளது.மஹாபாரதப் போர் முடிவுற்ற பல காலத்திற்குப் பின், கிருஷ்ணர் ஆட்சி புரிந்த துவாரகை நகரம், கடல்கோள் என்னும் சுனாமிக்கு உள்ளானது. அங்கிருந்த யாதவ இன மக்களில் ஒரு பகுதியினர், அகத்தியரின் வழிகாட்டுதலின்படி, தென் தமிழகத்தை வந்தடைந்தனர்.

இம்மக்கள் பதினெண்குடி வேளிராக காட்டைத் திருத்தி நாடாக்கி, இங்கு வாழத் துவங்கினர் என்பதே அச்செய்தி. தென் தமிழகத்தில் மிகப் பழமையான விஷ்ணு கோவில்கள் நிறைந்துள்ளன. 108 திவ்யதேசங்களில், 80 சதவீத கோவில்கள் தமிழகத்திலேயே உள்ளன. இவற்றில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒன்பது திவ்யதேச கோவில்கள், நவ திருப்பதிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை, தொன்மையான பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.இவ்வழகிய கோவில்கள், தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது மேலும் ஒரு சிறப்பு. இது, திருத்தலங்களின் பெருமாள் பெருமையை மட்டுமல்லாது, இத்தலங்களின் இயற்கை அழகையும், வைணவ ஆழ்வார்கள் தங்கள் பாடலில் வர்ணித்துள்ளனர்.

நவ திருப்பதி



ஸ்ரீவைகுண்டநாதன் பெருமாள் திருக்கோவில் - ஸ்ரீவைகுண்டம்: இக்கோவில் கள்ளபிரான் கோவில் என்றும் தலபுராணத்தின்படி அழைக்கப்படும். இக்கோவில் நவகிரஹங்களில் ஒருவரான சூரிய பகவானுக்கு உகந்த தலம்.மகர நெடுங்குழைக்காதன் எனும் முகில் வண்ணப் பெருமாள் திருக்கோவில் தென் திருப்பேரை: இக்கோவில் ஒன்பது கருட சேவை ஒருங்கே காண்பதற்கு சிறந்த தலம். இக்கோவில், நவகிரஹங்களில் ஒருவரான சுக்கிரனுக்கு உகந்த தலம்.
திருதேவர்பிரான் திருக்கோவில் - திருத்தொலைவில்லிமங்கலம்: இக்கோவில் இரட்டை திருப்பதி என, அழைக்கப்படும் திவ்யதேசத்தில் ஒன்றான ராகு தலம்.திருஅரவிந்தலோச்சனார் திருக்கோவில் - திருத்தொலைவில்லிமங்கலம்: இக்கோவில் இரட்டை திருப்பதி என, அழைக்கப்படும் திவ்யதேசத்தில் ஒன்றான கேது தலம்.திருவைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில் - திருக்கோளூர்: இக்கோவிலின் சிறப்பாக திருமால் உலகத்திற்கு படி அளப்பவனாக, மரக்காலை தலைக்கு தலையணையாக வைத்த கோலத்தில் சயனித்திருக்கிறார்.




இது,குபேரஷேத்ரம் என்றும் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.திருஆதிநாதர் திருக்கோவில் எனும் ஆழ்வார்திருநகரி - திருக்குருகூர்: இத்தலம் நம்மாழ்வார் பிறந்த புண்ணிய பூமி. இக்கோவில் நவகிரஹங்களில் ஒருவரான குருவுக்கு உகந்த தலம்.திருகாசினிவேண்டான் பெருமாள் திருக்கோவில் - திருப்புளியன்குடி: இத்தலத்தில் பெருமாளின் நாபிகமலத்தில் இருந்து பிரம்மா தோன்றுவது மிகச் சிறப்பான அம்சம். இக்கோவில் நவகிரஹங்களில் ஒருவரான புதனுக்கு உகந்த தலம்.திருவிஜயசான பெருமாள் திருக்கோவில் எனும் திரு வரகுணமங்கை - நத்தம்: வரகுண பாண்டியனுக்கு பெருமாள் தரிசனம் தந்த இடம் ஆதலால், இந்த இடப் பெயர்  பெற்றதாக நம்பப்படுகிறது.

இக்கோவில் நவகிரஹங்களில் ஒருவரான சந்திரனுக்கு உகந்த தலம்.திருவேங்கடவாணன் திருக்கோவில் - திருகுலந்தை பெருங்குளம்: இக்கோவில் உற்சவர் பெயரால் மாயக்கூத்த பெருமாள் திருக்கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோவில் நவகிரஹங்களில் ஒருவரான சனி பகவானுக்கு உகந்த தலம்.

இக்கோவில்களின் தலபுராணங்கள் இக்கோவிலின் காலத்தை பல யுகங்களுக்கு முன் தோன்றியதாக குறிப்பிடுகின்றன. மேலே குறிப்பிட்டது போல, தமிழகத்தில் திருமால் வழிபாடு தொன்றுதொட்டு வளர்ந்துள்ளதற்கு, இக்கோவில்களும் ஒரு சாட்சி.இக்கோவில்கள் ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலங்களாக விளங்குவதால், அவர்கள் வாழ்ந்த, 6 முதல், 9ம் நுாற்றாண்டுக்கு முற்பட்டது எனக் கொள்ளலாம்.


இக்கோவில்களின் கட்டடக்கலை அமைப்பும், இங்கு கிடைக்கும் கல்வெட்டுகளும், 6 முதல், 16ம் நுாற்றாண்டு வரையிலான காலகட்டத்தை சேர்ந்ததாக உள்ளன.இக்கோவில்கள் அனைத்தும் 100 முதல், 12 கிலோ மீட்டர் சுற்றுப்பகுதியில் அமைந்துள்ளதால், நாம் விரைந்து தரிசிக்க ஒரு நாள் போதுமானதாக இருக்கும்.

ஆனால், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு, பின்னர் மதுரை நாயக்கர்களால் பராமரிக்கப்பட்டு, பல திருப்பணிகள் செய்யப்பட்டு விளங்கும் இக்கோவில்களின் அமைப்பும், அழகும் வார்த்தைகளால் 

விவரிக்க  முடியாதவை.இக்கோவில்களின் தலபுராணங்களும், விழாக்களும், ஆடல் பாடல்களும், மிகச் சிறப்பாக சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும் செய்யப்பட்டுள்ளதை காண கண்கோடி வேண்டும். 


முனைவர் கோ.பாலாஜிஉதவி பேராசிரியர்,சி.பி.ரா., இந்தியவியல் ஆய்வு மையம், சென்னை.

'ஆம்னி பஸ்களை ஒப்படைப்போம்'

'ஆம்னி பஸ்களை ஒப்படைப்போம்'

Added : அக் 02, 2020 23:54


சென்னை:''ஆம்னி பஸ்களை, கோட்டையில் முதல்வரிடம் ஒப்படைப்போம்,'' என, தமிழ்நாடு அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க செயலர், அன்பழகன் கூறினார்.

துகுறித்து, அவர் கூறியதாவது:ஆறு மாதங்களாக, 4,000 ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், இத்தொழிலைச் சேர்ந்த, இரண்டு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு உள்ளது. எங்களின் கோரிக்கை மனுவை, போக்குவரத்து துறை அமைச்சரிடம் வழங்கி உள்ளோம்; முதல்வரை சந்திக்க முடியவில்லை.

ஆறு மாதங்களாக பஸ்களை இயக்காத நிலையில், 2.5 லட்சம் ரூபாய், சாலை வரியாக செலுத்த வேண்டியுள்ளது. பஸ்களை பராமரித்து இயக்க, ஒரு பஸ்சுக்கு, 5 லட்சம் ரூபாய் தேவை. இந்த தொழிலில், 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களால், 300 கோடி ரூபாய் டீசல் விற்பனை வழியாக, அரசுக்கு கலால் வரி கிடைக்கிறது. வங்கி கடனுக்கான தவணையை செலுத்தும் அவகாசம் முடிந்து விட்டதால், நெருக்கடி தொடர்ந்துள்ளது.

இதனால், பஸ்கள் ஓடாத இரண்டு காலாண்டுக்கான, 20 கோடி ரூபாய் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என, கோரினோம்; வழக்கும் தொடர்ந்தோம்; இதுவரை சாதகமான பதில் இல்லை. பல மாநிலங்களில், சாலை வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இம்மாதம், ௫ம் தேதிக்குள் சாதகமான பதில் கிடைக்காவிட்டால், அனைத்து ஆம்னி பஸ்களையும், கோட்டையில் நிறுத்தி, முதல்வரிடம் ஒப்படைக்க உள்ளோம்.இவ்வாறு, அன்பழகன் கூறினார்.

வங்கி முறைகேடு வழக்கு 'மாஜி' அதிகாரிக்கு சிக்கல்


வங்கி முறைகேடு வழக்கு 'மாஜி' அதிகாரிக்கு சிக்கல்

Added : அக் 02, 2020 22:22

புதுடில்லி:வங்கி கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளருக்கு எதிராக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, வைர வியாபாரி நிரவ் மோடி, மோசடி செய்தார். இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், நிரவ் மோடி கடன் பெற, சட்ட விரோதமாக உதவி செய்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி கைது செய்யப்பட்டார்.

கோகுல் ஷெட்டிக்கு எதிராக, சி.பி.ஐ., அதிகாரிகள், மும்பை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நிரவ் மோடிக்கு, வங்கி உத்தரவாதக் கடிதங்களை, கோகுல்நாத் ஷெட்டி அளித்துள்ளார். அந்தக் கடிதங்களை வைத்து, வெளி நாடுகளில் உள்ள இந்திய வங்கிகளின் கிளைகளில், நிரவ் மோடி கடன் பெற்றுள்ளார்.இதற்காக, அவர் நிரவ் மோடியிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் அவர் அதிகாரியாகப் பணியாற்றிய ஆறு ஆண்டுகளில், வருமானத்துக்கு அதிகமாக, 2.63 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

'டெபிட், கிரெடிட்' கார்டு பயன்படுத்தி ஆன்லைனில் பொருள் வாங்க முடியாதா?

'டெபிட், கிரெடிட்' கார்டு பயன்படுத்தி ஆன்லைனில் பொருள் வாங்க முடியாதா?

Added : அக் 02, 2020 23:12

சென்னை:'டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, ஆன்லைனில் பொருட்கள் வாங்கலாம்; அதற்காக வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 
 
வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வாடிக்கையாளர்களின் பண பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதன்படி, புதிதாக வழங்கப்படும், டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, ஆன்லைன் வாயிலாக பொருட்கள் வாங்க முடியாது.இதனால், இந்த கார்டுகளை ஒட்டுமொத்தமாக பயன்படுத்த முடியாதா என, பயப்பட தேவைஇல்லை.

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கார்டுகளில், அனைத்துசேவைகளும் இடம் பெற்று இருக்கும். ஆனால், அதன் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை, தேவைப்படும் போது செயல்படுத்திக் கொண்டு, இதர நேரங்களில், அதை, நிறுத்தி வைத்து கொள்ளலாம்.

இதற்கு, ஏ.டி.எம்., இயந்திரத்தில், இதர சேவைகள் என்ற பிரிவுக்குள் சென்று, நிறுத்தி வைக்கப் பட்டுஉள்ள சேவைகளை, மீண்டும் செயல்படுத்தி கொள்ளலாம்.தேவையில்லாத நேரங்களில், அதை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.அவ்வாறு நிறுத்தி வைக்கும் போது, கார்டுகள் தொலைந்து போனால், அதை, மற்றவர்களால் பயன்படுத்த முடியாது.இதன் வாயிலாக, வாடிக்கையாளர்களின் பணத்தை, தொழில் நுட்ப ரீதியில் திருடுவது தவிர்க்கப்படும்.

இந்த வசதி, ஆன்லைன் வங்கி சேவையிலும் இடம் பெற்றிருக்கும். அதிலும், தேவையான சேவைகளை மட்டும் செயல்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே வைத்துள்ள கார்டுகள் பழைய முறைப்படி செயல்படும்; அதில், மாற்றம் இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'கொரோனா வைரஸ் பரவும் திறன் 10 நாள் மட்டுமே'


'கொரோனா வைரஸ் பரவும் திறன் 10 நாள் மட்டுமே'

Updated : அக் 03, 2020 05:19 | Added : அக் 03, 2020 05:18

கோவை: 'கொரோனா வைரஸின் பரவும் திறன் ஒருவரது உடலில் 10 நாட்களுக்கு மட்டுமே இருக்கும்' என்று அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மனித உடலில் எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பது பற்றி அமெரிக்காவின் அட்லாண்டா நகரை சேர்ந்த முன்னணி மருத்துவ அமைப்பு ஆய்வு நடத்தி முடிவை தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை செயலர் டாக்டர் ரவிக்குமார் கூறியதாவது: கொரோனா வைரஸ் மனித உடலில் 90 நாட்கள் வரை இருக்கும் என்பது தவறான புரிதல். இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவும் திறனுடன் 10 நாட்கள் மட்டுமே மனித உடலில் இருக்கும். கடும் நோய் பாதிக்கப்பட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களது உடலில் பரவும் திறனுடன் இந்த வைரஸ் அதிகபட்சம் 20 நாட்கள் வரை இருக்க வாய்ப்புள்ளது.

அதற்கு மேல் மனித உடலில் வைரஸ் சிதறல்கள் இருந்தாலும் அவை செயலற்றதாகவே இருக்கும்.இந்த காலகட்டத்தில் நோய் பரிசோதனை செய்தால் 'பாசிட்டிவ்' என்று கூட முடிவு வரலாம். அதில் பயப்பட எதுவுமில்லை. மருத்துவர் அறிவுரைப்படி 14 நாட்கள் மட்டும் தனிமையில் இருந்தாலே வைரஸ் மற்றவர்களுக்கு பரவாமல் தடுத்து விட முடியும். இவ்வாறு டாக்டர் தெரிவித்தார்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...