Sunday, December 13, 2020
Court asks if med body can add MBBS quota seats in govt colleges
Court asks if med body can add MBBS quota seats in govt colleges
TIMES NEWS NETWORK
Chennai: 13.12.2020
TIMES NEWS NETWORK
Chennai: 13.12.2020
The Madras high court has directed the National Medical Commission (NMC) to ascertain as to whether additional seats can be created in 24 government medical colleges in Tamil Nadu to accommodate waitlist students under the 7.5% reservation for government school students.
These students were constrained to opt for waitlist during admission, as they could not afford to pay the government quota fees in self-financing medical colleges. Tamil Nadu government’s announcement to pay the fee came a day after their counselling got over. “By taking this positive step, it will not put any extra burden on the government colleges in terms of infrastructure and manpower. Creation of additional seats is not something new and such additional seats have always been created whenever the situation demands,” Justice N Anand Venkatesh said.
The judge passed the interim order on a batch of pleas moved by waitlisted students under the 7.5% reservation as they could not afford the fee of self-financing colleges allotted to them. Had the government’s announcement to pay their fees come a day earlier, they would have joined the colleges.
When the pleas came up for hearing, advocate-generalVijay Narayan submittedthattill now nearly 160 seats have reverted back to the state government quota. He added that a clearer picture will evolve in a couple of days andby the nextdateof hearing, the total number of seats that can be accommodated with students falling under the 7.5% quota, can be almost frozen.
Wondering how the state is going to deal with students who could not be accommodated within the vacant seats that reverted back to the state quota, the court made the suggestion of creation of additional seats.
Saturday, December 12, 2020
திருப்பூர்ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ரஜினி உருவப்படம் பொறித்து, 'அதிசயம், அற்புதம்', 'ஆன்மிக அரசியல்'; 'இப்போ இல்லைனா எப்பவும் இல்லை', 'மாத்துவோம்.... எல்லாத்தையும் மாத்துவோம்', என்கிற பஞச் டயலாக்களை பிரின்டிங் செய்துள்ளனர்.

திருப்பூர்: ரஜினியின் அரசியல் பிரவேசத்தை முன்னிட்டு, திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், அவரின் 'பஞ்ச்' டயலாக் பொறித்த 'டி-சர்ட்' அதிகளவில் தயாரித்து வருகின்றன.
நடிகர் ரஜினி, புதிய கட்சி துவக்குவதாகவும், தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு, ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளத்தையும் உற்சாகப்படுத்தியுள்ளது. 'இப்போ இல்லைனா எப்பவும் இல்லை', மாத்துவோம், 'எல்லாத்தையும் மாத்துவோம்' என்கிற வாசகங்களை, பேட்டியின் போது கூறினார். இவை, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதனால், திருப்பூர்ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ரஜினி உருவப்படம் பொறித்து, 'அதிசயம், அற்புதம்', 'ஆன்மிக அரசியல்'; 'இப்போ இல்லைனா எப்பவும் இல்லை', 'மாத்துவோம்.... எல்லாத்தையும் மாத்துவோம்', என்கிற பஞச் டயலாக்களை பிரின்டிங் செய்துள்ளனர். இன்று, ரஜினி பிறந்தநாள். இதனால், இந்த 'டி-சர்ட்'டுகளை வாங்கி அணிய, ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், '' திருப்பூரில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ரஜினி படம் மற்றும் பஞ்ச் டயலாக் பொறித்த டீ சர்ட்டுகளை தயாரிக்க, பிரின்டிங் நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கி வருகின்றன. ''கட்சி அறிவிப்பு வெளியாகும்போது, ரசிகர் மன்றங்களில் இருந்து நேரடியாக அதிகளவு ஆர்டர்கள் திருப்பூருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
துணைவேந்தர்கள்- நிதி அலுவலர்கள் 'கூட்டணி' பல்கலைகளில் அதிகரிக்கும் தணிக்கை தடைகளால் ஆபத்து
துணைவேந்தர்கள்- நிதி அலுவலர்கள் 'கூட்டணி' பல்கலைகளில் அதிகரிக்கும் தணிக்கை தடைகளால் ஆபத்து
தமிழக பல்கலைகளில் துணைவேந்தர் - நிதி அலுவலர் 'கூட்டணியால்' அதிகரித்து வரும் தணிக்கை தடைகள் பல்வேறு நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கின்றன.
மாணவர் சமுதாயத்திற்கு உயர்கல்வி அளிப்பதற்கும் மக்களுக்கும் பயன்படக்கூடிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன் பயன்களை அரசுகளுக்கு அளித்து சமுதாய வளர்ச்சிக்கு உதவுவது பல்கலைகளின் நோக்கம்.ஆனால் பல்கலைகளில் நிலவும் குழப்பங்கள், ஊழல் ஆகியவற்றுக்கு நிதி ஒழுக்கம், சட்டப்பூர்வ நிதி மேலாண்மையை கடைபிடிக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ள நிதி அலுவலர்கள் கடமை தவறுகின்றனர்.
துணைவேந்தரின் 'கைப்பாவை'
இவர்கள் பல்கலை விதிகளை கடைபிடிக்காமலும் ஆட்சிக் குழு, நிதிக் குழு, ஆட்சிப் பேரவை ஆகிவற்றிற்கு நிதிநிலைமை குறித்த குறிப்புகளை சரிவர சமர்ப்பிக்காமலும், துணைவேந்தர்களை சரியான வழியில் நெறிப்படுத்தாமலும் முறைகேடுகளுக்கு துணைபுரிகின்றனர்.பல்கலைகளில் பல்வேறு பதவிகளில் பேராசிரியர் நிலையில் உள்ளவர்கள் பொறுப்பு வகிக்கின்றனர்.
ஆனால் நிதி அலுவலர் பதவிக்கு உள்ளாட்சி நிதித்தணிக்கை துறை உயர்நிலை அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர்.அதற்கு காரணம் நிதிகளை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதே. ஆனால் நடப்பதோ வேறு. சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் அவர்கள் துணைவேந்தர்களின் கைப்பாவையாக இருந்து, ஊழல், நிதி மோசடிகளுக்கு காரணமாகின்றனர்.
'விசித்திர' தணிக்கை
இவர்களால் அனுமதிக்கப்படும் செலவினங்கள், ஆசிரியர், அலுவலர் பதவி உயர்வு, சம்பள நிர்ணயம், பல்கலை நிதி சம்மந்தப்பட்ட கோப்புக்களை இவர்களின் துறையின் கீழ் உள்ள அதிகாரிகளே தவறு என்று தணிக்கைக்கு உட்படுத்துவது விசித்திரமாக உள்ளது.மேலும் நிதிஅலுவலர் அனுமதித்த செலவினங்களை, முறையற்றது எனக் கூறி உள்ளாட்சி நிதி தணிக்கை துறையினரே தணிக்கை தடை ஏற்படுத்துவதும் முரண்பாடாக உள்ளது.
இதில் பல்கலை நிதி அலுவலர் செயல் சரியானதா. அல்லது இவர் சார்ந்த துறையினர் இவர் அனுமதித்த செலவினங்களுக்கு தணிக்கை தடை ஏற்படுத்துவது சரியானதா என புரியவில்லை.நிதி அலுவலர்கள் பணி ஓய்வுக்கு பிறகும் அந்த பல்கலையிலேயே பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் பல்கலை நிதி சம்மந்தமான விவகாரங்களில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே ஓய்வு பெற்றவர்கள் நிதி ஆலோசகராக தொடர்வதை தடை செய்ய வேண்டும்.
தனி இயக்குனரகம் தேவை
தணிக்கை தடைகளுக்கு நிதி அலுவலரே காரணம் என்பதால் அதனால் ஏற்படும் நிதி இழப்பிற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். தவறு செய்தவர்களை சஸ்பெண்ட் செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.கூட்டுறவு, அறநிலைத் துறைக்கு தனியாக தணிக்கை துறை இருப்பது போல் பல்கலைகளுக்கும் தனி இயக்குனரகம் ஏற்படுத்தினால் முறைகேடுகள் குறையும்.
--நமது சிறப்பு நிருபர்--
பொங்கல் பஸ் முன்பதிவுக்கு கூடுதல் இணையதளங்கள்
பொங்கல் பஸ் முன்பதிவுக்கு கூடுதல் இணையதளங்கள்
Added : டிச 11, 2020 23:14
சென்னை:பொங்கல் பஸ் டிக்கெட்முன்பதிவுக்கு,
கூடுதல்இணையதளங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:அடுத்த மாதம், 14, 15, 16ம் தேதிகளில், பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது.ஏற்கனவே, அரசு போக்குவரத்து கழக இணையதளமான, www.tnstc.in மற்றும் tnstc என்ற, மொபைல் போன் செயலி வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தற்போது, தனியார் டிக்கெட் முன்பதிவு இணையதளங்களான, www.redbus.in, www.paytm.com, www.busindia.com போன்றவற்றிலும், டிக்கெட் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் உட்பட, அனைத்து மாவட்ட விரைவு போக்குவரத்து கழக அலுவலகங்களில் செயல்படும் முன்பதிவு மையங்களிலும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பாஸ்போர்ட் விண்ணப்பதாரரிடம் காணொலி வாயிலாக விசாரணை
பாஸ்போர்ட் விண்ணப்பதாரரிடம் காணொலி வாயிலாக விசாரணை
Added : டிச 11, 2020 23:12
சென்னை:சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தோருக்கு, காணொலி வாயிலாக விசாரணை நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பரவல் நிலையை கட்டுப்படுத்தும் வகையில், கூட்ட நெரிசலை குறைத்து, நிலுவையில் உள்ள பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பரிசீலிக்க, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், காணொலி வாயிலாக விசாரணை நடத்தப்படுகிறது.
இதன்படி, 'ஸ்கைப், கூகுள் டியோ' வழியாக, நவ., 23ல் இருந்து, வேலை நாட்களில், காலை, 10:00 முதல், பகல், 12:30 மணி வரை, இந்த காணொலி விசாரணை நடக்கிறது.'ஸ்கைப்'பில், 'Rpo chennai என்ற, 'லிங்க்' வழியே, live:.cid.1a27fe4d2074be7a என்ற இணைப்பிலும்; கூகுள் டியோவில், rpochennaipublic@@gmail.com என்ற இணைப்பு வழியாகவும் விசாரணைக்கு இணையலாம். விண்ணப்பதாரர்கள் மட்டுமே, காணொலி அழைப்பில் பங்கேற்க முடியும்.
மேலும் விபரங்களுக்கு, 1800 258 1800 என்ற, இலவச தொலைபேசி எண்ணில் பேசலாம்; rpo.chennai@mea.gov.in என்ற, மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Nurse held for filming colleagues while bathing
Nurse held for filming colleagues while bathing
TIMES NEWS NETWORK
Bengaluru:12.12.2020
A 25-year-old staff nurse of a prestigious hospital, who allegedly filmed her colleagues when they were bathing, has been arrested.
The suspect is Ashwini, a staff nurse who lives in the hospital’s women’s hostel in Whitefield. She used to send the footage to her boyfriend, said police, who have summoned him for questioning to find out what he was doing with the videos.
According to police, the incident came to light on December 5 when security staff noticed a mobile phone capturing the video of a nurse in a bathroom. The hostel management approached police on Tuesday and filed a complaint against the suspect.
According to the complaint filed by the hostel incharge, Ashwini works in the hospital’s emergency wing. “Our security staff noticed a mobile phone kept on a window capturing a video of one of our colleagues while she was bathing around 6.45pm on December 5. We found the video when we checked the phone’s photo gallery. We were shocked to find several videos of many of our colleagues,” the complainant stated.
The hostel authorities found the phone belonged to Ashwini as it had her sim card and contact list. She was booked under IPC section 354C (voyeurism).
Subscribe to:
Comments (Atom)
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...
