Friday, December 25, 2020

HC refuses to keep devotees away from Thirunallar temple

HC refuses to keep devotees away from Thirunallar temple

TIMES NEWS NETWORK

Chennai:25.12.2020

The Madras high court has refused to stop the congregation of devotees in Thirunallar Sri Saneeswara Bagavan Temple during the ‘Sani peyarchi’ festival from December 2 to February 12, 2021 in view of the pandemic. Instead, Justice Anita Sumanth has directed Puducherry’s Hindu religious and charitable endowments department to ensure strict compliance of Covid-19 protocol during the festival.

The court passed the order while rejecting a plea moved by S P S Nathan, president of Parambarai Sthanigar Sangam, seeking to forebear the authorities from allowing devotees and public during the festival to prevent crowding in view of the pandemic.

When the plea came up for hearing, the department submitted that the festival will be conducted in strict compliance with restrictions.

Recording the submissions, the court said, “A decision whether or not to open the festival to the public would have to be taken very prudently and cautiously, bearing in mind the seriousness of the public health situation that we face today.” Wearing a mask properly at all times inside the temple is a must and violators must be fined. The court directed the department to organise a meeting to discuss measures to be taken for the festival.

SRM 16TH ANNUAL CONVOCATION 2021


 

Thursday, December 24, 2020

NEET 2020: Supreme Court To Consider Tomorrow Plea Seeking Admission To 'Higher Option Seat' On Basis Of Merit & AIQ

NEET 2020: Supreme Court To Consider Tomorrow Plea Seeking Admission To 'Higher Option Seat' On Basis Of Merit & AIQ: A vacation bench of the Supreme Court will hear tomorrow(December 24), a petition seeking stay on a December 15 judgment of Kerala High Court which had dismissed the plea of a student seeking...

'Step Motherly Treatment By University' : Karnataka High Court Grants Relief To NLSIU Student Who Was Denied Promotion Citing Attendance Shortage

'Step Motherly Treatment By University' : Karnataka High Court Grants Relief To NLSIU Student Who Was Denied Promotion Citing Attendance Shortage: The Karnataka High Court recently allowed a petition filed by a student of National Law School of India University and directed the University to forthwith promote the student to the 4th year B.A....

புத்தாண்டுக் கொண்டாட்டமும், பொங்கல் பரிசும்: தமிழகத்தைச் சுட்டிக்காட்டி கிரண்பேடி- நாராயணசாமி கடித மோதல்

புத்தாண்டுக் கொண்டாட்டமும், பொங்கல் பரிசும்: தமிழகத்தைச் சுட்டிக்காட்டி கிரண்பேடி- நாராயணசாமி கடித மோதல்


ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பாகத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் முதல்வர் நாராயணசாமியும் கடிதத்தில் மோதியுள்ளனர்.

தமிழகத்தைச் சுட்டிக் காட்டிப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தடை செய்ய கிரண்பேடி வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் பொங்கல் பரிசு ரூ.2500 தருவதுபோல் புதுச்சேரியில் ஒப்புதல் தர நாராயணசாமியும் கோரியுள்ளனர்.

புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுவைக்கு வருவார்கள். விடுதிகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல், மது பானங்கள் விலை உயர்வு, கேளிக்கை நிகழ்ச்சிகள் ரத்து உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்யவில்லை.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதுவை கடற்கரை சாலையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இல்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து கொண்டாட்டங்கள் நடத்த அனுமதியில்லை என்று ஆட்சியர் பூர்வா கார்க் உத்தரவிட்டார். இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி, கடற்கரை மற்றும் ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாடத் தடையில்லை என்று நேற்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலாக ஆளுநர் கிரண்பேடி இன்று வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் பதிவில், "பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தவர்களில் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமானத்தில் அவருடன் பக்கத்து இருக்கையில் பயணித்த புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் ரத்து செய்யப்பட்டு கடற்கரைச் சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவையில் விழாக்களைக் கொண்டாடவும், கடற்கரைச் சாலையில் பொதுமக்கள் கூடவும் தடை இல்லை என அரசு தெரிவித்துள்ளது. தற்போது புதுவையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், கொண்டாட்டங்கள் நிகழ்ந்தால் சுற்றுலாப் பயணிகள், வெளிமாநிலத்தினர் மூலம் தொற்றுப் பரவ அதிக வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து முதல்வருக்குக் கிரண்பேடி கடிதம் அனுப்பினார். அதில், "மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தமிழகத்தைப்போல் ரத்து செய்யவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி கிரண்பேடிக்கு இன்று மாலை அனுப்பிய பதிலில், "புதுச்சேரியைப் போன்று சுற்றுலாத் தலமான கோவாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத் தடையில்லை. பொதுமக்கள் பாதுகாப்பில் புதுச்சேரி அரசு கவனம் செலுத்துகிறது. கரோனாவிலிருந்து 97.4 சதவீத மக்கள் குணமடைந்துள்ளனர். கடற்கரைச் சாலையில் புத்தாண்டைக் கொண்டாடும்போது மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதைப் போலீஸார் கண்காணிப்பார்கள். அன்றாட நிகழ்வுகளில் தலையிடுவதே உங்கள் வழக்கமாக உள்ளது.

தற்போதைய பொருளாதார சூழலில் பல மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத் தடையில்லை. தமிழகத்தைச் சுட்டிக்காட்டிப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத் தடை கோருகிறீர்கள். தமிழகத்தில் பொங்கலுக்கு ரூ.2,500 பரிசு அறிவித்ததுபோல் புதுச்சேரியில் தர ஒப்புதல் தரவேண்டும்.

கரோனா காலத்தில் மக்கள் வசிப்பிடம் சென்று அவர்கள் பிரச்சினை அறிந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பணியாற்றினோம். நீங்களோ கரோனா தொடங்கியதிலிருந்து இன்று வரை 9 மாதங்களாக ராஜ்நிவாஸை விட்டு வெளியே வரவில்லை. முழுக்கப் பாதுகாக்கப்பட்ட வாழ்வையே வாழ்கிறீர்கள். ஆனால், குற்றம் சாட்டுவதை மட்டுமே செய்கிறீர்கள். சமூகத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மையான நிலவரமே தெரியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.


தவறான புள்ளிவிவரங்களோடு திமுக செய்யும் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது: தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கருத்து

தவறான புள்ளிவிவரங்களோடு திமுக செய்யும் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது: தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கருத்து


24.12.2020

தமிழக ஆளுநரிடம் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆவடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அதிமுக அரசுக்கு எதிராக பொய்கள் அடங்கிய ஆவணத்தை திமுக வெளியிட்டுள்ளது. இதில், அதிமுக அரசு பற்றி 41 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. எந்தத் துறைகளில் எல்லாம் அதிமுக அரசு சாதனை புரிந்துள்ளதோ, அந்த துறைகளைப் பற்றியெல்லாம் பொய் பிரச்சாரம் செய்கிறது திமுக.

விவசாய கூலிகளின் சம்பள வளர்ச்சி வீதம் 2006 முதல் 2010-ம்ஆண்டு காலகட்டத்தில் 13 சதவீதமாக இருந்தது. தற்போது 3.4 சதவீதமாக சரிந்துள்ளது என ஒரு தவறான தகவலை திமுக பரப்புகிறது. உண்மையில் 2014-ல் ரூ.334.30ஆக இருந்த விவசாயத் தொழிலாளர்களின் சம்பளம் தற்போது ரூ.410 ஆக உயர்ந்துள்ளது.இத்தகவலை தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ளது. அதேபோல், கடந்த 9 ஆண்டுகளில் விவசாயத்தில் உற்பத்தி திறன் பன்மடங்கு உயர்ந்துள்ளது. நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்த கட்சி திமுக என்பது அனைவருக்கும் தெரியும்.

அதிமுக அரசு நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரித்து வருகிறது. இதன்விளைவாக தற்போது பாலாறு மும்மடங்கு மழைநீரால் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

பண்பாட்டுத் தளத்தில் தமிழகத்தின் எந்த உரிமையையும் அதிமுக அரசு விட்டுக் கொடுக்க வில்லை. ஆனால் வேலைவாய்ப்பு, கல்வி, தண்ணீர், சட்டம் - ஒழுங்கு, கரோனா, பண்பாடு உள்ளிட்டவை தொடர்பாக, தவறான புள்ளிவிவரத்தை சேகரித்து, தொடர்பில்லாத பிரச்சினைகளோடு ஒப்பீடு செய்கிறது திமுக. தவறான புள்ளிவிவரங்களோடு திமுக செய்யும் கோயபல்ஸ் பிரச்சாரம்கண்டிப்பாக தமிழக மக்களிடம் எடுபடாது. கமல், சீமான் போன்றோர் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். யாராவது சொல்கிறார்களா கருணாநிதி ஆட்சியை அமைப்போம் என்று? இவ்வாறு அவர் பேசினார்.

ஆன்லைனில் லோன் தருவதாக ஏமாற்றும் செயலிகள்; பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: போலீஸாரின் விழிப்புணர்வு தகவல்

ஆன்லைனில் லோன் தருவதாக ஏமாற்றும் செயலிகள்; பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: போலீஸாரின் விழிப்புணர்வு தகவல்

சென்னை  24.12.2020

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சமீபத்தில் பல்வேறு இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடன் தருவதாக ஆன்லைன் ஆப் மூலம் பொதுமக்களை ஏமாற்றி வரும் செயலிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையின் விழிப்புணர்வு தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு வருமாறு:

1) கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 60 ஆன்லைன் கடன் அப்ளிகேஷன்களுமே (Loan Apps) ரிசர்வ் வங்கியால் NBFC (Non Banking Financial Company) பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த Loan App-களின் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாதவைகள்.

2) இந்த அப்ளிகேஷன்கள் (Loan Apps) உபயோகிப்பவர்களின் கைபேசியின் எல்லா தகவல்களையும் சேகரித்து, உபயோகிப்பவர்களின் (பொதுமக்கள்) தனியுரிமையை மீறும் வகையில் அவை பயன்படுத்துகின்றன.

3) கடன் அடிப்படையிலான இத்தகைய அப்ளிகேஷன்களை (Loan Apps) பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

4) பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்கள், ஆதார் அல்லது வங்கி விவரங்களை மேற்படி பதிவு பெறாத, முறைப்படுத்தப்படாத அப்ளிகேஷன்களில் (Loan Apps) கொடுக்க வேண்டாம்.

5) உங்களின் அனைத்து தொலைபேசி தொடர்புகள், புகைப்படங்கள், கேமரா, இருப்பிடங்கள் மற்றும் தொலைபேசி நினைவகம் ஆகியவை இந்த பணக்கடன் வழங்கும் நபர்களால் கண்காணிக்கப்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.

6) இத்தகைய செயலிகளால், உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் அழைப்புகள் வந்தால் காவல்துறையில் புகார் கொடுங்கள்.

7) இந்த அப்ளிகேஷன்களில் (Loan Apps) உள்ள தொடர்பு விவரங்கள், குறை தீர்க்கும் அதிகாரியின் பெயர்கள் மோசடியானவை.

8) ஒரு NBFC (Non Banking Finacial Company) இன் உண்மையான தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் வலைத்தளத்தில் சரிபார்க்கவும்.

இவ்வாறு காவல்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


NEWS TODAY 28.01.2026