Monday, January 4, 2021

MMC student wins quiz competing against 9K rivals


MMC student wins quiz competing against 9K rivals

She received a certificate from the dean in the presence of other doctors.

Published: 04th January 2021 01:22 AM 

A Madras Medical College student has won a State-level quiz competition on Awareness on AIDS/HIV, STDs, voluntary blood donation and COVID-19By Express News Service

CHENNAI: A final-year student from the Madras Medical College has won a State-level quiz competition on ‘Awareness on AIDS/HIV, sexually transmitted infections, voluntary blood donation and COVID-19’.

The quiz was conducted by Tamil Nadu State AIDS Control Society. RGGGH Dean Dr E Theranirajan said that the girl, M Pavithra competed with 9,000 students across the State from various colleges and won the first prize. She received a certificate from the dean in the presence of other doctors.

தனியார் மருத்துவக்கல்லூரிகளின் ஏஜண்ட் போல் செயல்படுவதா?- பொது மருத்துவக்கலந்தாய்வை முதலில் நடத்துக: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தனியார் மருத்துவக்கல்லூரிகளின் ஏஜண்ட் போல் செயல்படுவதா?- பொது மருத்துவக்கலந்தாய்வை முதலில் நடத்துக: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்


தனியார் கல்லூரிகள் பணம் வசூலிக்க வகை செய்யும் வகையில் இரண்டாம் கட்ட மருத்துவக்கலந்தாய்வில் முதலில் பல் மருத்துவக் கலந்தாய்வு எனும் புதிய முறையை அரசு செயல்படுத்த முனைவது தனியார் கல்லூரிகளுக்கு ஏஜெண்ட் போல் செயல்படும்போக்கு. முதலில் பொது மருத்துவ கலந்தாய்வை நடத்துக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

“தமிழக அரசு மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜன.5 முதல் துவங்கும் என அறிவித்திருக்கிறது. இந்த கலந்தாய்வு சுயநிதி கல்லூரிகளில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வாகும். இந்தியா முழுவதும் பொதுவான நடைமுறை என்பது முதலாவதாக, பொது மருத்துவ (எம்.பி.பி.எஸ்) படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்திவிட்டு, அதன்பின்னர் பல் மருத்துவப் படிப்பிற்கு கலந்தாய்வு நடத்தப்படும்.

ஆனால், தமிழக அரசு இப்போது அறிவித்திருப்பது முதலாவதாக, பல் மருத்துவப் படிப்பிற்கு கலந்தாய்வு என்றும், அடுத்ததாக, பொது மருத்துவத்திற்கு (எம்.பி.பி.எஸ்) கலந்தாய்வு என்றும் அறிவித்துள்ளது. இது நடைமுறைக்கு எதிரானது.

மேலும் பல் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்த ஒருவருக்கு, பொது மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துவிட்டால், அவர் பொதுமருத்துவ படிப்புக்கு சேர வேண்டுமென்றால் பல்மருத்துவப் படிப்புக்கு எந்த கல்லூரியில் இடம் கிடைத்ததோ அந்த கல்லூரிக்கு 5 ஆண்டுகளுக்கான கட்டணத்தையும் கட்டிவிட்டுத் தான் பொதுமருத்துவ படிப்பில் சேர வேண்டுமென சொல்லப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாக உள்ளது. தமிழக அரசே தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் முகவராக செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

இது, தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டண கொள்ளை மட்டுமின்றி, புறவழியாக சேராத மாணவர்களிடம் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பையும் அரசே ஏற்படுத்தி கொடுப்பதாகும். இது தமிழக மாணவர்களுக்கு விரோதமானது மட்டுமல்ல, மருத்துவ படிப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.

எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு, முதலாவதாக முந்தைய நடைமுறைகளின் படி பொது மருத்துவ (எம்.பி.பி.எஸ்.) படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தி விட்டு, பின்னர், பல்மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

லஞ்ச வழக்குகளில் சிக்கிய அரசு அதிகாரிகள் 102 பேரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை

லஞ்ச வழக்குகளில் சிக்கிய அரசு அதிகாரிகள் 102 பேரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை

சென்னை  04.01.2021

தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதத்தில் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய அரசு அதிகாரிகள் 102 பேரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்து இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்சம் அதிகம் வாங்கப்படும் அலுவலகங்களை குறிவைத்து இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. சார் பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மின்வாரிய அலுவலகங்கள், நகர திட்டமிடல் அலுவலகங்கள், டாஸ்மாக் மதுபான கடைகள் என பல துறைகளில் சோதனை நடத்துகின்றனர்.

கடந்த அக்டோபர் 1-ம் தேதிமுதல் டிசம்பர் 31-ம் தேதி வரை132 இடங்களில் லஞ்ச ஒழிப்புபோலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைகளில் இதுவரை சுமார் 7 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 7 கிலோ 232 கிராம் தங்கம், 10.52 காரட் வைரம், 9 கிலோ 843 கிராம் வெள்ளி, ரூ.37 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி பன்னீர்செல்வத்தின் வீட்டில் இருந்து ரூ.3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், 450 பவுன் நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்து 33 லட்சத்து 73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக, சென்னை சைதாப்பேட்டை சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் இருந்து ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள், ரூ.1 கோடியே 37 லட்சம் ரொக்கம், 3 கிலோ 81 கிராம் தங்க நகைகள், 10.52 காரட் வைரங்கள், 3.343 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.37 லட்சம் மதிப்புள்ள நிரந்தர வைப்புத் தொகை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மொத்தம் 132 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 35 அரசுஅதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட 35 அதிகாரிகள் உட்பட தமிழகம் முழுவதும் லஞ்ச வழக்குகளில் சிக்கிய அரசு அதிகாரிகள் 102 பேரை பணியிடை நீக்கம் செய்யஅரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மாயமான மறதி முதியவர் 'பேஸ்புக்' பதிவால் மீட்பு


மாயமான மறதி முதியவர் 'பேஸ்புக்' பதிவால் மீட்பு

Added : ஜன 04, 2021 00:18

தஞ்சாவூர்: ஞாபக மறதியால், காணாமல் போன, 87 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரை, 'பேஸ்புக்' பதிவால், குடும்பத்தினர் மீட்டனர்.

தஞ்சாவூர், ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன், 87; மனைவி வசந்த லட்சுமி. இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இரு மகன்கள் திருமணமாகி, பெங்களூரில் வசித்து வருகின்றனர்.சுவாமிநாதனும், வசந்த லட்சுமியும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி சாலை ஸ்ரீநகரில் உள்ள, தங்களது சம்பந்தி கோபாலகிருஷ்ணன் வீட்டில் தங்கியுள்ளனர்.ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வரும் சுவாமிநாதன், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வெளியே சென்றவர், வீட்டுக்கு வரும் வழியை மறந்து, வழிதவறி சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

சுவாமிநாதனின் உறவினர் அரவிந்தன், சுவாமிநாதன் போட்டோவுடன், மொபைல் எண்ணை குறிப்பிட்டு, இரவு, 9:00 மணிக்கு, 'பேஸ்புக்'கில் பதிவிட்டார். அதை பார்த்த சிலர், சுவாமிநாதனை ரொட்டி பாளையம் பகுதியில் மீட்டு, தகவல் தெரிவித்தனர். இரவு, 10:30 மணிக்கு, அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். சுவாமிநாதன் மருமகள் ஸ்ரீவித்யா கூறுகையில், ''பேஸ்புக்கை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தும் நிலையில், இதுபோன்ற நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்த முடியும் என்பதற்கு, என் மாமனாரின் மீட்பு சம்பவம் உதாரணம்,'' என்றார்.

கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு? பதிவு செய்வது எப்படி?


கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு? பதிவு செய்வது எப்படி?

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு போடப்படும், அதற்கான நடைமுறைகள், பதிவு செய்வது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.கொரோனாவுக்கு எதிரான சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த கோவாக்சின் தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு(டிசிஜிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது. அஸ்ட்ரா ஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பூசியை 70.42 சதவீதம் பலனளிக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குகிறது என டிசிஜிஐ ஜெனரல் சோமானி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடந்த மறுநாளில் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த தடுப்பூசி முதலில் யாருக்கு போடப்படும், அதற்கான நடைமுறைகள் வெளியாகியுள்ளது. அதன்படி,முதலில் யாருக்கு கிடைக்கும் 1. சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி , முதல்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சுகாதார பணியாளர்கள், முன்கள சுகாதார பணியாளர்கள், நர்சுகள், கண்காணிப்பாளர்கள், மருத்துவ அதிகாரிகள், மருந்து அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் மாணவர்கள் என பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக, அரசு மற்றும் தனியார் சுகாதார பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கோவின் டிஜிட்டல் வழித்தடத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.2. முன்கள மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கொரோனா தடுப்பில் பணியாற்றிய, மாநில மற்றும் மத்திய போலீசில் பணியாற்றும் போலீசார், ஆயுதப்படைகள், பேரிடர் மேலாண்மை மற்றும் சிவில் அதிகாரிகள், சிறைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்துறை ஊழியர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும்.3. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பிரிவில் இரண்டு உட்பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் 50 -60 வயதில், இரண்டாவது பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இடம்பெற்றவர்கள்.

இவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக அவர்களின் விவரம், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.4. பாதிப்பு அதிகம் உள்ள பகுதி மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில், கொரோனா தொற்று அதிகம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் போடப்படும்5. மற்றவர்களுக்கு எப்போது மேற்கண்டவர்களுக்கு த டுப்பூசி போட்டு முடிந்த பிறகு, மற்றவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். நோய் தொற்று மற்றும் தடுப்பூசியின் இருப்பை பொருத்து மற்றவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.பதிவு செய்வது எப்படி?

* கோவின் இணையதளத்தில் தாமாக பதிவு செய்ய வேண்டும்.* அரசு அளித்த அடையாள அட்டை அல்லது ஆதார் எட்டை நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். இது பயோமெட்ரிக், ஓடிபி மூலம் உறுதி செய்யப்படும்.* பதிவு செய்ததும், தடுப்பூசி போடுவதற்கான நேரம் மற்றும் தேதி தெரிவிக்கப்படும்.* தடுப்பூசி போடும் இடத்தில் பதிவு செய்ய முடியாது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தடுப்பூசி போட அனுமதிக்கப்படுவார்கள்.* கோவின் அமைப்பை, நிர்வாகம் செய்ய வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு. அவர்கள் தான், பயனாளர்கள்களுக்கான இடம், நேரம் ஒதுக்குவார்கள்.

இதனை கண்காணிக்கும் வகையில் மென்பொருளில் உருவாக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி எங்கு போடப்படும் முன்னுரிமை அளிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம்:* அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரி அல்லது டாக்டர் முன்னிலையில் தடுப்பூசி போடப்படும்.* பள்ளிகள், சமுதாய கூடங்களில் தடுப்பூசி போடப்படும்* ரிமோட், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் சர்வதேச எல்லைகளில் தடுப்பூசி போட சிறப்பு மொபைல் குழுக்கள் அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட வேண்டும்.தடுப்பூசி போடப்படும் இடங்களில், 3 அறைகள் அமைக்கப்பட்டிருக்கும்.காத்திருப்பாளர் அறை- தடுப்பூசிக்காக பதிவு செய்த பின்னர் வருபவர்கள் முதலில் இங்கு தங்க வைக்கப்பட்டிருப்பார்கள்.தடுப்பூசி அறை: இங்கு தான் தடுப்பூசி போடப்படும்கண்காணிப்பு அறை: தடுப்பூசி போட்டவர்கள் 30 நிமிடம் இங்கு தங்க வைக்கப்பட்டிருப்பார்கள்யார் தடுப்பூசி போடுவார்கள் தடுப்பூசி நடவடிக்கைக்காக 5 பேர் குழு அமைக்கப்படும்1. முதல் அதிகாரி: தடுப்பூசிக்காக பதிவு செய்ததை ஆய்வு செய்வார்கள்.2. இரண்டாவது அதிகாரி: உறுதி செய்வார்.3. மூன்றாவது அதிகாரி: தடுப்பூசிக்கான பொறுப்பு அதிகாரி இவர் தான். பயிற்சி பெற்ற அதிகாரி தடுப்பூசி போடுவார்.4. நான்கு மற்றும் 5வது அதிகாரி: இவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், தடுப்பூசி போட்டு கொண்டவர்களை 30 நிமிடம் கண்காணிப்பார்கள்.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamalar

Common entrance exam at UG level will help EWS students


Common entrance exam at UG level will help EWS students

Centralisation will improve student diversity as a single exam will make them eligible for admission in multiple central universities

c-Sheetal.Banchariya@timesgroup.com

04.01.2021

The education ministry is mulling over the decision to conduct a common entrance test for admission in undergraduate (UG) courses across all 54 central universities. A seven-member committee headed by RP Tiwari, VC of Central University of Punjab, will submit its report within a month and the move may get implemented for 2021-22.

“There is a lack of uniformity in the UG admission process as some universities conduct entrance test while few rely on merit-based admissions. This will simplify the admission process while customising the exam pattern.”

“Students diversity is poor across universities; the central admission process may allow students from all walks of life to enrol in desired varsities and courses,” Tiwari said.

The committee is expected to meet on January 9, 2021, to finalise the report before submitting it. Given the academic disruption caused by the coronavirus pandemic, there is uncertainty regarding the schedule of various entrance exams and many states have also rescheduled the board exams for May-June 2021.

Rama Shanker Dubey, vice chancellor of the Central University of Gujarat, says, “Some of the most sought-after universities conduct their entrance tests and it becomes difficult for students from economically weaker sections (EWS) to keep a tab, apply and appear for all the exams. Appearing for different exams also means that one has to pay the application fee for multiple tests. Common entrance test may also help in getting the academic cycle back on track in lesser time,” Dubey says.

“We have multiple state boards across the country and relative marking with respect to these boards can be a problem. But, the move also has a positive side where students will get through the UG admissions in just one test. The ministry will have to consider diverse factors before implementing it,” says Rajib Ray, professor, Kirori Mal College, Delhi University and president of Delhi University Teachers’ Association (DUTA).

RK Kohli, senior academician and former VC of Central University of Punjab, says, “In central admission processes, students’ first preference is always to join an old, well-known and reputed university. While most new universities are not so popular, they are performing well as per assessment parameters. The uniform process may not allow all universities, new or old, to compete on the same level. Universities in the rural belt may be at a disadvantage and those in metropolitan regions will definitely receive more applications,” Kohli says.

What is in store for Indian higher education institutes in 2021


What is in store for Indian higher education institutes in 2021

Many universities and colleges may avoid increasing the tuition fee to ease the burden

c-Puniti.Pandey@timesgroup.com

04.01.2021

With the experience and training gained in 2020, universities have now developed a better understanding to tackle uncertainties in 2021. Besides devising new methods to impart education, institutes are also planning to reopen in a phased manner.

“Given the infrastructural development and training during 2020, our university is all set for 2021 session. While the teachers are now much more confident and efficient in conducting classes online, students in areas with poor connectivity are longing for a normal life at campus. We plan to open up in a phased manner giving the final year students and the ones in areas with poor connectivity to come back to the campus,” says Jaskiran Arora, associate dean, BML Munjal University.

Amity University also comprehends on conducting hybrid classes this year. The university will hold face to face classes with 50% capacity of classrooms ensuring compliance of social distancing norms. In addition to this, remote mode of classes will continue to take place.

“A continuous review of the situation is being carried out. Comprehensive e-content of all courses has been made available to the students before commencement of classes. Students belonging to the Science and Technology domains and other domains that require physical presence will be provided with virtual labs. For research-based and lab-based courses, physical lab facilities will be available to 50% of students at a time,” says Balvinder Shukla, vice chancellor, Amity University.

IIIT Naya Raipur will conduct the upcoming academic year 2021 virtually. The institute has shifted the courses that require the mandatory physical presence of students to the next semester hoping that the students will then be present at the campus, says Pradeep K.Sinha, vice chancellor and director, IIIT-Naya Raipur.

Sona group of education institutions, Tamil Nadu will involve more project-based work and hands-on learning for the students this year. The exams will be conducted with the help of AI-enabled auto proctored from remote locations, says Chocko Valliappa, vice chairman, Sona group of educational institutions. Owing to the ongoing pandemic and the consequent economic difficulty, most institutes are not planning to increase the fee structure this year to lighten the pressure on students and parents. Universities are adopting alternative measures to increase revenue sources rather than increasing fees.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...