Thursday, January 7, 2021

பொங்கல் பரிசில் துணிப்பை இல்லை ரேஷன் கடைகளில் மக்கள் வாக்குவாதம்


பொங்கல் பரிசில் துணிப்பை இல்லை ரேஷன் கடைகளில் மக்கள் வாக்குவாதம்

Added : ஜன 06, 2021 23:29

சென்னை:சென்னை உட்பட, பல இடங்களில், ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசுக்கு, துணிப்பை வழங்க மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழக அரசு, ரேஷன் கடைகள் வாயிலாக, 2.10 கோடி அரிசி கார்டுதாரருக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு, துணிப்பை ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.பணத்துடன், அரிசி, சர்க்கரையை எடை போட்டு வழங்கும் ஊழியர்கள், ஏற்கனவே, குறிப்பிட்ட எடையில், 'பாக்கெட்' செய்துள்ள, முந்திரி, திராட்சை, ஏலக்காயுடன், கரும்பும் வழங்குகின்றனர்.

ரொக்க பணம் வாங்கும் அவசரத்தில், பலர் துணிப் பையை வாங்க மறந்து விடுகின்றனர். பல கடைகளில், வேண்டுமென்றே துணிப்பை வழங்குவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து, சிலர் கூறுகையில், 'பொங்கல் பரிசில் துணிப்பை வழங்குவதில்லை. அதை வழங்குமாறு கேட்டால், 'நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள்' எனக் கூறுகின்றனர். 'மறுநாள் கடைக்கு சென்றால், உள்ளே அனுமதிக்காமல் வெளியேற்றுகின்றனர்' என்றனர்.

இது குறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:கூட்டுறவு சங்கங்களில் இருந்து, கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, துணிப்பை வழங்காமல் குறைத்து தான் வழங்கினர். கார்டுதாரர்கள், துணிப்பை கேட்டு வாக்குவாதம் செய்கின்றனர். அதிகாரிகளிடம் கேட்டால், 'கார்டுதாரர் எடுத்து வரும் பையில், பொருட்களைக் கொடுங்கள்; துணிப்பை கேட்டால் வரவில்லை என்று சொல்லுங்கள்' என, பதில் தருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு, 38 கிராம் எடையில், 23 ரூபாய் மதிப்பில், ஒரு துணிப்பை வழங்க உத்தரவிட்டு, அனைத்து அரிசி கார்டுதாரருக்கும், 47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, கார்டுதாரர்கள், பொங்கல் பரிசில் துணிப்பையை கேட்டு பெற வேண்டும்.

பொங்கல் பரிசில் உள்ள எந்த ஒரு பொருளையும், ஊழியர்கள் தர மறுத்தால், கடையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் புகார் தரலாம். அதேபோல், கூட்டுறவு சங்கங்களில் இருந்து, துணிப்பை தரவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட சங்கத்தின் மீது, ஊழியர்களும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

நீடிக்குமா வாட்ஸ் ஆப் புதிய விதிமுறைகளால் சிக்கல்


நீடிக்குமா வாட்ஸ் ஆப் புதிய விதிமுறைகளால் சிக்கல்

Added : ஜன 07, 2021 02:09

புதுடில்லி:வாட்ஸ் ஆப் செயலி யை பயன்படுத்துவதற்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட உள்ளன. அவற்றை ஏற்கும் அலைபேசிகளில் மட்டுமே வாட்ஸ் ஆப் இயங்கும். இது பிப். 8 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

வாட்ஸ் ஆப் செயலியில் யார் வேண்டுமானாலும், என்ன தகவலை வேண்டுமானாலும் பதிவிட முடியும். பகிர்ந்து கொள்ளவும் முடியும். இதனால் பல்வேறு சிக்கல்களை வாட்ஸ் ஆப் எதிர்கொண்டது. இதையடுத்து பதிவுகளை பகிர்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஒரு பதிவை அதிக பட்சம் 5 பேருக்கு மட்டுமே பகிர முடியும், அதிகம் பகிரப்பட்ட பதிவுகளை ஒரு முறை மட்டுமே மீண்டும் பதிவிட முடியும் உள்ளிட்ட பல மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டன. இருந்தும் பிரச்னைகள் குறையவில்லை.

இதையடுத்து முக்கிய விதிமுறைகளை வாட்ஸ் ஆப் அமல்படுத்த உள்ளது. பகிரப்படும் தகவலின் உண்மைத்தன்மைக்கு பகிர்பவரே பொறுப்பு உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. அந்த அம்சத்துடன் கூடிய விதிமுறையை ஏற்றால் மட்டுமே அந்த அலைபேசியில் செயலி தொடரும். இல்லையெனில் செயலி அழிந்துவிடும். இந்த நடைமுறையை பிப்.8 முதல் அமல்படுத்த இருப்பதாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

Wednesday, January 6, 2021

கொரோனா பரிசோதனைக்கு இனி கட்டணம் ரூ.1,200தான்!

கொரோனா பரிசோதனைக்கு இனி கட்டணம் ரூ.1,200தான்!

Updated : ஜன 06, 2021 00:24 | Added : ஜன 06, 2021 00:23

சென்னை :தமிழகத்தில் உள்ள, தனியார் ஆய்வகங்களில், ஆர்.டி.பி.சி.ஆர்., எனப்படும், கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை, 1,200 ரூபாயாக தமிழக அரசு குறைத்துள்ளது. முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், 800 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, அதிகப்படியான சோதனைகளை, அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை, 1.44 கோடி, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனைகளை அரசு மேற்கொண்டுள்ளது. தினமும், 60 ஆயிரம் முதல், 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில், 76 சதவீதம் அரசு மருத்துவமனைகளிலும், 24 சதவீதம் தனியார் ஆய்வகங்களில் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், தனியார் ஆய்வகங்களில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை கட்டண தொகை அதிகமாக இருப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால், தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை, தமிழக அரசு குறைத்துள்ளது. இதற்கான திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விபரங்களை, தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அரசாணையில் வெளியிட்டுள்ளார்.

* பொது மக்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை கட்டணம், 3,000 ரூபாயில் இருந்து, 1,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் விடுதிகளுக்கு சென்று மாதிரிகள் சேகரித்தால், கூடுதலாக, 300 ரூபாய் வசூலித்து கொள்ளலாம்.
* முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சோதனை செய்பவர்களுக்கு, 2,500 ரூபாயில் இருந்து, 800 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழையில் குளித்தபடி பொங்கல் பரிசு வாங்கிய மக்கள்


கொட்டும் மழையில் குளித்தபடி பொங்கல் பரிசு வாங்கிய மக்கள்

Added : ஜன 05, 2021 23:36

சென்னை:கொட்டும் மழையிலும் நனைந்தபடி, ரேஷன் கடைகளுக்கு வந்து, பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் வாங்கி சென்றனர்.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, முந்திரி,திராட்சை,ஏலம், கரும்பு, துணிப்பை அடங்கிய பரிசு தொகுப்பு வினியோகம், நேற்று முன்தினம் முதல் துவங்கியது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கன மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி, ரேஷன் கடைகள் முன், மக்கள் குவிந்தனர். பலர் குடை பிடித்தும், 'ரெயின் கோட்' அணிந்தும் வரிசையில் நின்றனர். சில பெண்கள், தங்களின் புடவை மற்றும் தலையில் பிளாஸ்டிக் கவரை போட்டிருந்தனர். மழையில் நனைந்தபடி, பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி சென்றனர். ஈரப்பதத்தால், 2,500 ரூபாயை எண்ணி வழங்குவதில், ரேஷன் ஊழியர்கள் சிரமப்பட்டனர். கார்டுதாரர்களும், ஒரு முறைக்கு, இரண்டு, மூன்று முறைக்கு மேல், ரொக்க பணத்தை எண்ணி வாங்கினர்.

கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அனைத்து அரிசி கார்டுதாரருக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். டோக்கனில் உள்ள தேதியில் வாங்கவில்லை என்றால், பரிசு தொகுப்பு கிடைக்காது என, யாரும் கருத வேண்டாம். எனவே, மழையில், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், சிரமப்பட்டு வர வேண்டாம்.

டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் வாங்காதவர்கள், வரும், 12, 13ம் தேதிகளில் வாங்கலாம். மழையில் நனையாதபடி, கரும்பு உள்ளிட்ட, பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை பாதுகாப்பாக வைக்குமாறு, ரேஷன் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Vice-Chancellor appointment


 

CM declares public holiday for Thaipoosam

CM declares public holiday for Thaipoosam

TIMES NEWS NETWORK

Chennai:06.01.2021

Chief minister Edappadi K Palaniswami on Tuesday announced a public holiday for Thaipoosam festival on January 28. In a statement, the chief minister said he had received representations from the public when he toured several districts, seeking a public holiday for Thaipoosam festival as it is done in countries like Sri Lanka and Mauritius. “Considering the requests, I have ordered that a public holiday be declared for Thaipoosam on January 28 and that the festival be included in the list of public holidays in the coming years,” Palaniswami said.

Thaipoosam is a festival celebrated in honour of Tamil deity Murugan in Tamil Nadu. The festival is celebrated in Kerala too and in countries like Sri Lanka, Singapore, Malaysia, Mauritius and Indonesia, the CM said. Soon after the announcement, BJP state president L Murugan tweeted thanking the chief minister for accepting the request of his party to declare a public holiday.

In a statement, Naam Tamilar Katchi leader Seeman thanked the state government.

HC declines to stay 7.5% MBBS quota for govt school students

HC declines to stay 7.5% MBBS quota for govt school students

TIMES NEWS NETWORK

Chennai:  06.01.2021

The Madras high court has refused to stay the ongoing admission to medical courses under the 7.5% reservation provided for students from government schools saying it would be against public interest and lead to chaos.

However, the first bench of Chief Justice Sanjib Banerjee and Justice Senthilkumar Ramamoorthy assured that the court would give a detailed hearing on the pleas challenging the reservation and give a quietus to the issue as soon as possible.

The issue pertains to a batch of pleas moved by students who said their opportunity to secure admission to medical courses was adversely affected by the introduction of 7.5% reservation for government school students in the state.

Tamil Nadu already has 69% communal reservation for admission to government educational institutions, though it is above the 50% upper limit set by the Supreme Court, the petitioners said.

“While the petitioner took NEET 2021 they were aware of these circumstances. But the same has been compounded after the exam by setting aside 7.5% seats on preferential basis for students who have studied in government schools,” advocate B N Suchindran, representing a petitioner, said.

It is pertinent to note that a similar GO providing reservation for state board students was struck down by this court in 2017, he added.

Further, noting that reservation per Articles 14 and 15 of the Constitution can be provided only for socially educationally backward classes, he said, the present classification does not fall under the category.

He added, the provision for further 7.5% reservation to government school students above and beyond the existing scheme of reservations is unreasonable and arbitrary.

“The reservation goes against the legitimate expectation of many students who have taken the NEET exam in the current academic year, many of whom will become ineligible only by virtue of this ex post facto reservation,” the petitioners said.

Opposing the pleas, advocate-general Vijay Narayan submitted that the reservation was introduced based on the recommendations of Justice Kalaiyarasan committee.

Recording the same, the bench directed the state to disclose the report of the committee and file a detailed counter.

NEWS TODAY 25.01.2026