Tuesday, March 16, 2021

HC refuses to waive Covid protocol for UAE national


HC refuses to waive Covid protocol for UAE national

The Petitioner Had Come For Court Proceedings In Gurdaspur

Ajay.Sura@timesgroup.com

Chandigarh:16.03.2021 

Not allowing an international passenger to ignore Covid-19 protocol regarding quarantine norms, the Punjab and Haryana high court has made it clear that "the interest of the individuals cannot be protected at the cost of interest of the public at large".

The HC has made these observations while dismissing the petition of a passenger from UAE who wanted the high court to permit him to ignore the 14-day mandatory quarantine to enable him to attend court proceedings in Punjab in relation to his matrimonial dispute.

While passing the orders, Justice Anil Khshetarpal of the HC observed, "This court is of the opinion that no such writ can be issued. It is well settled that private interest has to give way to the public interest... Due to the spread of Covid-19, the citizens of all the countries of the world are already suffering."

The petitioner, who was working in Dubai Electricity and Water Authority, government of Dubai, was married to a girl from Gurdaspur district in Punjab in February 2016. But due to some temperamental differences between the couple, they started living separately since March 2017. On February 20, 2020, both approached the family court in Gurdaspur seeking divorce with mutual consent. Their first statement was recorded by the family court on February 20 and the second one on August 27, 2020.

However, due to Covid-19 pandemic, the petitioner could not appear before the family court and the matter was adjourned for hearing for February 27.

The petitioner made arrangements to come to India to attend the court proceedings on February 27, 2021. He had also obtained the medical report from Dubai medical laboratory after conducting their Covid-19 test and the report came negative.

They landed at Chandigarh on February 19 where the authorities asked them to give an undertaking to go for a14-day home quarantine from February 19.

The main contention of the petitioner was that he had come to India for recording a second motion statement in divorce petition pending before the family court Gurdaspur on February 27, but due to the undertaking taken by the authorities, he was unable to attend the hearing of the court.

He had sought directions to revoke the order dated February 19, 2021, through which he had given an undertaking for 14-day self-quarantine so that he may attend the hearing before the court in Gurdaspur.

The HC, however, asked the family court Gurdaspur to adjourn the hearing of the case beyond the date of petitioner’s quarantine period.

'When You Appear As Amicus, Don't Ask For Fee, Do It As Service To Institution': Supreme Court To Advocate Seeking Recovery Of Dues Under Art.32

'When You Appear As Amicus, Don't Ask For Fee, Do It As Service To Institution': Supreme Court To Advocate Seeking Recovery Of Dues Under Art.32: 'When you appear as Amicus Curiae, don't ask for your fee. Do it as a service to the institution', Justice D. Y. Chandrachud told a lawyer on Monday.The bench of Justices Chandrachud and M. R.

காஞ்சியில் கண்காணிப்பு குழுவினர் சோதனை: 78 பட்டுச் சேலைகள் பறிமுதல்

காஞ்சியில் கண்காணிப்பு குழுவினர் சோதனை: 78 பட்டுச் சேலைகள் பறிமுதல்

sarees

காஞ்சிபுரத்தில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் 78 பட்டுச் சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் வட்டாட்சியர் கோமதி தலைமையில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற கார் ஒன்றை சோதனையிட்டனர்.

அந்தச் சோதனையின்போது அந்தக் காரில் 78 பட்டுச் சேலைகள் இருந்தன. அந்த பட்டுச் சேலைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம். இதைத் தொடர்ந்து இந்தப் பட்டுச் சேலைகளை பறிமுதல் செய்த கண்காணிப்புக் குழுவினர், காரில் இருந்தவர்களை உரிய ஆவணங்களை கொடுத்துவிட்டு பெற்றுச் செல்லும்படி அறிவுறுத்தினர்.

பட்டு வியாபாரிகள் அதிர்ச்சி

காஞ்சிபுரம் பட்டு தென்னிந்தியாவில் புகழ் பெற்ற பட்டு ஆகும். இங்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பட்டுச் சேலைகளை வாங்கிச் செல்கின்றனர். சிலர் வியாபாரத்துக்காகவும் மொத்தமாக பட்டுச் சேலைகளை வாங்கிச் செல்கின்றனர்.

இவ்வாறு வாங்கிச் செல்லும் பட்டுச் சேலைகள் பறிமுதல் செய்யப்படுமோ என்ற அச்சம், பட்டு வியாபாரிகள் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டு விற்பனையில் சரிவு ஏற்படலாம் என்றும் பலர் அச்சம் தெரிவித்தனர். பட்டுச் சேலைகளை வாங்கிச் செல்பவர்கள் உரிய ஆவணங்களை உடன் எடுத்துச் செல்வது நல்லது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

அரசு பேருந்துகளின் குறைகள் தொடர்பாக இ-மெயில், வாட்ஸ்அப்பில் புகார் தரலாம்: உடனுக்குடன் சரிசெய்வதால் பயணிகள் வரவேற்பு

அரசு பேருந்துகளின் குறைகள் தொடர்பாக இ-மெயில், வாட்ஸ்அப்பில் புகார் தரலாம்: உடனுக்குடன் சரிசெய்வதால் பயணிகள் வரவேற்பு

complaint-about-government-buses

அரசு பேருந்துகள் தொடர்பான நிறை, குறைகள், புகார்களை இ-மெயில், வாட்ஸ்அப் மூலம் பெற்று, உடனுக்குடன் சரிசெய்யும் திட்டத்தை அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கும்பகோணம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இவற்றின் மூலம் தினமும் சுமார் 1.87 கோடி பேர் பயணம் செய்து வந்தனர்.
  
இதற்கிடையே, கரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பல மாதங்களாக நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 2020 செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு பேருந்துகளின் சேவை படிப்படியாக தொடங்கப்பட்டது. தற்போது, பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனாலும், கரோனாவுக்கு முன்பு கிடைத்த அளவுக்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இன்னும் வசூல் கிடைக்கவில்லை.

கட்டணத்தை உயர்த்தாமல், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, வசூலை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை போக்குவரத்து கழகங்கள் செயல்படுத்தி வருகின்றன. பயணிகளின் புகார்களை உடனுக்குடன் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் நிறை, குறை இருந்தால் பொதுமக்கள் தெரிவிப்பதற்காக அந்தந்த அரசு போக்குவரத்து கழகத்தின் இ-மெயில் முகவரி, வாட்ஸ்அப் எண்ணுடன் (உதாரணத்துக்கு: tvmtnstc@gmail.com மற்றும் tnstctvm@yahoo.in, 9445456040) பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி கேட்டபோது, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, வருவாயை பெருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அரசு பேருந்துகள் தொடர்பான நிறை, குறைகளை செல்போன், இ-மெயில் மூலம் தெரிவிக்கும் திட்டத்தை சமீபத்தில் தொடங்கியுள்ளோம். இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. பயணிகளிடம் மரியாதையின்றி பேசுவது, சரியான சில்லறை திருப்பித் தராதது, நிறுத்தங்களில் நிற்காமல் செல்வது, அதிவிரைவு பேருந்துகளை அனைத்து இடங்களிலும் நிறுத்துவது, செல்போனில் பேசிக்கொண்டோ, அதிக வேகத்திலோ பேருந்தை இயக்குவது, பேருந்துகளில் இருந்து குப்பைகள் அகற்றப்படாதது தொடர்பாக பலரும் புகார் தெரிவித்துள்ளனர். அதில் 80 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் குறித்து பயணிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.

நர்சிங் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு அறிவிப்பு: சட்டப்பேரவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? :

நர்சிங் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு அறிவிப்பு: சட்டப்பேரவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? :

election-2021

நர்சிங் படிப்புக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு பேரவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா,ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதிமற்றும் கால்நடை மருத்துவம்ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான (2021-22) ‘நீட்’ தேர்வுஆகஸ்ட் 1-ம் தேதி நடக்க உள்ளது. அதில், இந்த ஆண்டு முதல்பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பெற்றோர், மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது சட்டப்பேரவை தேர்தலில் தாக்கத்தைஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

‘நீட்’ தேர்வுக்குப் பின் மருத்துவப் படிப்புகளில் மிகவும் குறைந்த அளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கே சேர்க்கை கிடைத்தது. மேலும், ‘நீட்’ தேர்வின் கடினத் தன்மையால் தேர்ச்சி பெறமுடியாத சில மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

அரசின் இலவச பயிற்சி வகுப்புகளும் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. இத்தகைய சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இது கடந்த மக்களவைத் தேர்தலிலும் எதிரொலித்தது.

இவற்றைக் கருத்தில் கொண்டுதான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை தமிழக அரசுஅமல்படுத்தியது.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் நர்சிங் படிப்புகளுக்கும் ‘நீட்’தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு சிக்கலை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் உள்ள 7.5 சதவீத இடஒதுக்கீடு பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு பொருந்தாது என்பதால் பெற்றோர், மாணவர்கள் தரப்பில் மீண்டும் அதிருப்தி நிலவுகிறது.

இதுதொடர்பாக பெற்றோர்கள் சிலர் கூறும்போது, ‘‘கரோனா நிலையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு மட்டும் ‘நீட்’ தேர்வை திரும்பப் பெற்று, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தமிழக அரசு சேர்க்கை நடத்த வேண்டும். இல்லாவிட்டால், கால்நடை, நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க முன்வரவேண்டும். இல்லாவிட்டால் தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்றனர்.

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவோரை இடமாற்றம் செய்யக்கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவோரை இடமாற்றம் செய்யக்கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை  15.03.2021 

மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவோரை இடமாற்றம் செய்யும் கோரிக்கையைப் பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென விதிகள் உள்ளன. ஆனால், அவ்வாறு திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வேளாண் துறையில் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்யவில்லை என்றும், அவர்கள் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், தேர்தல் ஆணையத்திடம் ஜனவரி 15-ல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மணப்பாறையைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.




பல்லாவரம் வேட்பாளர்களுக்கு மக்கள் அறிவிப்பு

பல்லாவரம் வேட்பாளர்களுக்கு மக்கள் அறிவிப்பு

Added : மார் 16, 2021 06:03

குரோம்பேட்டை - பல்லாவரம் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக, உறுதியளிக்கும் வேட்பாளரை ஆதரிக்கப்போவதாக, அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.வெற்றி பெறும் வேட்பாளர், பாதாள சாக்கடை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். பல்லாவரம் தொகுதியில், தி.மு.க., - இ.கருணாநிதி, அ.தி.மு.க., - சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், தே.மு.தி.க., - முருகேசன், மக்கள் நீதி மய்யம் - செந்தில் ஆறுமுகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இவர்கள், தொகுதியில் உள்ள நலச்சங்கத்தினரை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளரான சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நேற்று முன்தினம், குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு மையத்தின் நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவு திரட்டினார்.அப்போது, விழிப்புணர்வு மையத்தினர், எட்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். பல்லாவரம் நகராட்சியை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் நீர்நிலைகளை காப்பாற்றி, சீரமைக்க வேண்டும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் குப்பைக்கு வரி வசூலிப்பதை கைவிட வேண்டும்குரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும்பல்லாவரம் நகராட்சி பாதாள சாக்கடை திட்ட ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இதைக்கேட்ட, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், வெற்றி பெற்றவுடன், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதே கோரிக்கைகளை, பிற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களிடமும் முன்வைத்துள்ளனர்.

NEWS TODAY 27.01.2026