Sunday, March 28, 2021

Gujarat: MBBS student makes fake profile, arrested


Gujarat: MBBS student makes fake profile, arrested

TNN | Mar 26, 2021, 04.03 AM IST

AHMEDABAD: A medical student who was pretending to be a female MBBS student on dating sites and other social networks was arrested by cybercrime cops. The accused was identified as Kush alias Chotu Patel, 20, a MBBS student and a resident of Modasa.

Kush was arrested following a complaint lodged by a Chandkheda MBBS student whose fake profile was created by Kush. The police said that Kush has created a fake profile of the girl as she was ignoring him and was not responding to his messages.

According to the officials the complainant claimed that on a dating application a profile was created with IDs of Naiya, Cutie, Sweet Girl and the accused had uploaded her profile picture there. He even gave the mobile number of the girl and her Instagram ID to others with whom he chatted posing as the complainant.

The complainant claimed that she recently got messages from an unidentified person who informed her that he had got her number from a dating profile. The girl also started receiving messages from unidentified persons who informed her that they had got the number from dating sites. The girl later approached police.

The accused Kush stated that he knew the girl as they were from the same community. He even included the girl in the MBBS students group of which he was the admin.

When the girl ignored his overtures, Kush took to cybercrime to get back at her.

After the girl had lodged the complaint, cops obtained the IP address of the device from which the fake IDs had been created and zeroed in on Kush in Modasa.

உரிய வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் கரோனா தடுப்பூசி போடும் சில அரசு மருத்துவமனைகள்: கூடுதல் கவனம் செலுத்துமா தமிழக சுகாதாரத் துறை?

உரிய வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் கரோனா தடுப்பூசி போடும் சில அரசு மருத்துவமனைகள்: கூடுதல் கவனம் செலுத்துமா தமிழக சுகாதாரத் துறை?


உரிய வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் சில அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், தடுப்பூசி போட்ட சில தினங்களில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா தொற்றைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடும் பணிஜன. 16-ம் தேதி தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், 2-வது கட்டமாக கடந்த 1-ம் தேதிமுதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயது வரையுள்ள இணைநோய் பாதிப்புள்ளவர்களுக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால், சில அரசு மருத்துவமனைகள் முறையான வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் தடுப்பூசி போடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி போட வருபவர்களிடம் சாப்பிட்டீர்களா? சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருந்தால் மாத்திரையை எடுத்துக் கொள்கிறீர்களா? என்று கேட்க வேண்டும். தடுப்பூசி போட்ட பின்னர் காய்ச்சல், உடல் வலி போன்ற பிரச்சினைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டுமென உரிய ஆலோசனைகளை வழங்கி தேவையான மாத்திரைகளை வழங்க வேண்டும்.

ஒரு தடுப்பு மருந்து பாட்டிலை திறந்தால், 4 மணி நேரத்துக்குள் மருந்தை பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் மீதமுள்ள மருந்தைப் பயன்படுத்தக் கூடாது என்று வழிகாட்டுதல்கள் உள்ளன.

ஆனால், இவற்றை சில அரசுமருத்துவமனைகள் பின்பற்றுவதில்லை. தடுப்பூசியை மட்டும் போட்டு அனுப்பி விடுகின்றனர். அதன்பின், அவர்களுக்கு ஏற்படும்உடல் உபாதைகளைக் கண்காணிப்பதில்லை. பலர் தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த சில தினங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தடுப்பூசி போடுவதில் மட்டும் கவனத்தைச் செலுத்தும் தமிழக அரசு, அதன்பின் ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்பாக ஆய்வுசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தடுப்பூசி என்பது கரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாகும். முதல் தவணை தடுப்பூசி போட்ட 3 வாரத்தில் எதிர்ப்பு சக்தி உருவாகத் தொடங்கும். 2 தவணை தடுப்பூசி போட்ட 3 வாரத்துக்குப் பின் முழுமையான எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். கரோனா தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது. தடுப்பூசி போட்டதால் கரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறுவது தவறு. தடுப்பூசி போட்டபின் காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சரியாகிவிடும்.

கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் ஒரு வயலில் 10 பேருக்கும், கோவேக்சின் தடுப்பு மருந்தின் ஒருவயலில் 20 பேருக்கும் தடுப்பூசிபோட வேண்டும். சில நேரங்களில்குறைவான நபர்கள் இருக்கும்பட்சத்தில் மருந்து வீணாகும். ஒருவயலை திறந்தால் அதை 4 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அந்த மருந்தை யாருக்காவது பயன்படுத்தினாலும் பாதிப்பு இல்லை. இருப்பினும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால், 4 மணி நேரத்துக்குப்பின் மருந்தை பயன்படுத்துவதில்லை.

தடுப்பூசி போட்ட சில தினங்களில் சிலருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. இது தடுப்பூசி போட்டதால் ஏற்படுவதல்ல. தடுப்பூசி போடுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்புஅவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கும். ஒருவர் உடம்பில்கரோனா வைரஸ் கிருமி சென்றால்,4 அல்லது 5 நாட்களுக்கு பின்னர்தான் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவரும். இதுதான் தடுப்பூசி போட்ட சில தினங்களில் கரோனாதொற்று ஏற்பட முக்கிய காரணம்.கரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசியை கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவமனைகளும் தடுப்பூசி வழிகாட்டுதலை கண்டிப்பாகப் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


காலமும், களமும் சரியில்லை என்கிறார் டி.ராஜேந்தர்

காலமும், களமும் சரியில்லை என்கிறார் டி.ராஜேந்தர்

Added : மார் 27, 2021 23:17

சென்னை:'காலமும், களமும் சரியில்லை. கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என, முடிவு எடுத்து விட்டேன்' என, டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

லட்சிய தி.மு.க., தலைவர் ராஜேந்தர் அறிக்கை:துணை முதல்வர் பன்னீர்செல்வம்., என் நீண்ட நாள் நண்பர். வேட்புமனு தாக்கல் துவங்குவதற்கு முன், மரியாதை நிமித்தமாக, பன்னீர்செல்வத்தை சந்தித்தேன். கண்ணியமாய் விடை பெற்று வந்தேன்.ஜெ., இல்லாமல், அ.தி.மு.க., சந்திக்கும் முதல் தேர்தல். அதேபோல், கருணாநிதி இல்லாமல், தி.மு.க., சந்திக்கும் முதல் களம். இரண்டு கட்சிகளுக்குமே, அவரவர் பலம் இருக்கிறது. கூட்டணியும் பக்கபலமாக இருக்கிறது.

இரண்டு கட்சிகளுமே பலப்பரீட்சையை சந்திக்கிறது. இதில், நான் போய் என்ன செய்யப் போகிறேன்?ஒருவருடைய வாக்கு வன்மை, வார்த்தையில் இருக்கும் தன்மை, அதில் வெளிப் படும் உண்மை, இதையெல்லாம் முன்னாள் முதல்வர்கள் நம்பினர். அதன் அடிப்படையில், என்னை பிரசாரத்திற்கு அழைத்தனர். அது, ஒரு காலம். கொள்கையை சொல்லி, ஓட்டு கேட்ட தெல்லாம் அந்தக் காலம்.கொடுக்க வேண்டியதை கொடுத்து, ஓட்டு வாங்கிக் கொள்ளலாம் என்பது, இந்தக் காலம்.

காலமும், களமும் சரியில்லை. கரையில் ஒதுங்கி நின்று, வேடிக்கை பார்க்கலாம் என, முடிவு எடுத்து விட்டேன். பத்தும் பத்தாததற்கு, இது கொரோனா காலம். பாதுகாப்பு வேண்டு மென்றால், முகமுடி அணிய வேண்டும். பக்குவப்பட்டவனாய் வாழ வேண்டுமென்றால், வாய்மூடி அமைதி காக்க வேண்டும்.இந்த சட்டசபை தேர்தலில், லட்சிய தி.மு.க., யாரையும் ஆதரிக்கவும் இல்லை; அரவணைக்கவும் இல்லை. நடுநிலைமையோடு இருக்க விரும்புகிறோம்.

நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என, எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு, ராஜேந்தர் கூறியுள்ளார்.

ஓட்டுச்சாவடி பயிற்சி வகுப்பு : சுவர் ஏறி குதித்து 'எஸ்கேப்'

ஓட்டுச்சாவடி பயிற்சி வகுப்பு : சுவர் ஏறி குதித்து 'எஸ்கேப்'

Added : மார் 27, 2021 23:55

புதுக்கோட்டை : ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்கள், மதிய இடைவேளையில், சுவர் ஏறி குதித்து தப்பிஓடினர்.புதுக்கோட்டை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, ராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று முன்தினம் நடந்தது.

காலை, 9:30 மணி முதல், மாலை வரை பயிற்சி வகுப்பு நடைபெறும், என அறிவிக்கப்பட்டிருந்தது.பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு, மதிய உணவு, பொட்டலமாக வழங்கப்பட்டது. உணவு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு, சிலர் வெளியே செல்ல முயன்றனர். இதனால், பள்ளியின் நுழை வாயில் பூட்டப்பட்டது. ஒரு சிலர், வெளியில் சென்று, மதிய உணவு சாப்பிட வேண்டும் எனக் கூறி, நுழைவாயிலை திறந்து விடுமாறு வலியுறுத்தினர்.அங்கிருந்த வருவாய்த் துறை ஊழியர்களிடமும், பள்ளி நிர்வாகத்தினரிடமும், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'உணவு இடைவேளைக்கு பின், ஒரு மணி நேரம் பயிற்சி நடைபெறும். அதில், அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்' என, அவர்கள் சமாதானப்படுத்தினர்.

இதற்கிடையே, நுழை வாயில் கதவு பூட்டப்பட்டிருந்ததால், பள்ளியின் பக்கவாட்டு சுவரில் ஏறிக் குதித்து, சிலர் வெளியே சென்றனர். ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் பலரும், சுவர் ஏறி குதித்து வெளியில் சென்றனர். வெளியே சென்ற சிலர் கூறுகையில், 'இந்த பயிற்சி, ஏற்கனவே வழங்கப்பட்டது தான். அதனால், மதியத்திற்கு மேல் இருக்கத் தேவையில்லை. எங்களுக்கு, தேர்தல் நடைமுறைகள் நன்கு தெரியும்' என்றனர்.

ஓட்டுச்சாவடியில் 'வெப் கேமரா' பொருத்தும் பணி துவக்கம்

ஓட்டுச்சாவடியில் 'வெப் கேமரா' பொருத்தும் பணி துவக்கம்

Updated : மார் 28, 2021 01:40 | Added : மார் 28, 2021 01:39

சென்னை: தமிழகத்தில், 44 ஆயிரத்து, 758 ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தும் பணி, நேற்று துவங்கியது.தமிழகத்தில், ஏப்., 6ல்சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. கொரோனா நோய் பரவலைதடுக்கும் விதமாக, இம்முறை கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 88 ஆயிரத்து, 937 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், குறைந்தது, 50 சதவீதம் ஓட்டுச்சாவடிகளில், வெப் கேமரா பொருத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில், தமிழகத்தில், 44 ஆயிரத்து, 758 ஓட்டுச்சாவடிகளில், வெப் கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இணையதள இணைப்பு வசதி கிடைக்கும் ஓட்டுச்சாவடிகளைக் கண்டறிந்து, அவற்றில், வெப் கேமரா பொருத்தும் பணி, நேற்று துவங்கியது.இந்த ஓட்டுச்சாவடிகளின் ஓட்டுப்பதிவு, முழுமையாக, இணையதளத்தில் ஒளிபரப்பப்படும். இதை, அதிகாரிகளால் நேரடியாக கவனிக்க முடியும்.வெப் கேமரா பொருத்தப்படாத ஓட்டுச்சாவடிகளின் ஓட்டுப்பதிவு, வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலெக்டர்களுடன் சாஹு ஆலோசனைசட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நேற்று, மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, ஆலோசனை நடத்தினார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன், இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆனந்த், மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வரும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, ஆலோசனை நடத்தினார்.

3வது கொரோனா தடுப்பூசி:'கோவாவாக்ஸ்' செப்டம்பரில் அறிமுகப்படுத்த திட்டம்

3வது கொரோனா தடுப்பூசி:'கோவாவாக்ஸ்' செப்டம்பரில் அறிமுகப்படுத்த திட்டம்

Updated : மார் 27, 2021 23:44 | Added : மார் 27, 2021 22:35

புதுடில்லி :நம் நாட்டில் கொரோனாவுக்கு எதிராக, ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மூன்றாவது தடுப்பூசி தயாராகி உள்ளது. 'கோவாவாக்ஸ்' என, பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட சோதனை துவங்கியுள்ளது; இதை, வரும் செப்டம்பரில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு எதிராக, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகள் தயாரித்துள்ளன.நம் நாட்டில், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் 'ஆஸ்ட்ராஜெனகா' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, 'கோவிஷீல்டு' என்ற தடுப்பூசியை மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, 'சீரம் இந்தியா' நிறுவனம் தயாரித்துள்ளது.தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது.

அனுமதி

இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜன., 16ம் தேதி முதல், மக்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணிதுவங்கியது.முதலில், மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து, பிப்., முதல், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

வரும், ஏப்., 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளும், சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. பல நாடுகள், இந்தியாவிடமிருந்து தடுப்பூசிகளை வாங்கி வருகின்றன,
இந்நிலையில், சீரம் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக, இரண்டாவது தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது பற்றி, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறியதாவது:கோவிஷீல்டு தடுப்பூசி நல்ல பலன் அளித்து வருகிறது. தற்போது, ஒரு மாதத்துக்கு, 7 கோடி, 'டோஸ்' தடுப்பூசிகள் தயாரித்து வருகிறோம்.

அடுத்த மாதம் முதல், இது, 10 கோடியாக உயர்த்தப்படும். அதனால், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும், அமெரிக்காவின், 'நோவாவாக்ஸ்' மருந்து நிறுவனத்துடன் இணைந்து, சீரம் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக, இரண்டாவது தடுப்பூசியை தயாரித்துள்ளது; இதற்கு, கோவாவாக்ஸ் என, பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட, பிரிட்டன் மற்றும் ஆப்பிரிக்க மக்களுக்கு செலுத்தி, சோதனை நடத்தப்பட்டது. இதில், 89 சதவீதத்துக்கு மேல் பலன் கிடைத்துள்ளது.

சோதனை

இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட சோதனை, இந்தியாவில் சமீபத்தில் துவக்கப்பட்டது.இந்த சோதனையில், டில்லியைச் சேர்ந்த ஹம்டார்டு மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்துள்ளது. இந்தியாவில், 19 இடங்களில், 1,140க்கும் அதிகமானோரிடம், இந்த தடுப்பூசி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த இரண்டாவது தடுப்பூசியை சோதனைக்கு உட்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், ஜனவரியில் அனுமதியளித்தது. இதையடுத்து, இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அடுத்த ஆறு மாதங்களில் அனைத்து சோதனைகளும் முடிந்து, செப்டம்பரில், கோவாவாக்ஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுஉள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு... வரவேற்பு! மருத்துவப் பணியாளர்கள் தரம் உயரும் என எதிர்பார்ப்பு

பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு... வரவேற்பு! மருத்துவப் பணியாளர்கள் தரம் உயரும் என எதிர்பார்ப்பு

Added : மார் 27, 2021 22:08


மருத்துவப் பணியாளர்களின் படிப்பு மற்றும் சேவை தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ள, மருத்துவப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், 25ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில், பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

பூர்த்தி செய்யவில்லை

இதில், மருத்துவப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கும் சட்ட மசோதா, அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.மருத்துவத் துறையில் உள்ள டாக்டர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை தவிர, இதர மருத்துவப் பணியாளர்கள் ஒழுங்குப்படுத்தப்படாமல் உள்ளனர். அவர்களின் திறன்களுக்கு ஏற்ப, தரப்படுத்தப்படுவதும் இல்லை. மருத்துவத் துறையில், 10 ஆயிரம் பேரில், 29 சதவீதம் பேர், மருத்துவப் பணியாளர்கள் இருக்கவேண்டும். எனினும், நம் நாட்டில், 10 ஆயிரம் பேரில், 16 சதவீதம் பேர் மட்டுமே, மருத்துவப் பணியாளர்களாக உள்ளனர்.உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட, 22.8 சதவீத குறைந்தபட்ச மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையையும், நம் நாடு இதுவரை பூர்த்தி செய்யவில்லை.

பரிசோதனை

மருத்துவப் பணியாளர்களின் விகிதாச்சாரம் மற்றும் தகுதி உள்ளிட்டவற்றால், நம் நாட்டில் பல பிரச்னைகள் உள்ளன.இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் தான், மருத்துவப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கும் சட்ட மசோதா, பார்லிமென்டின் இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கும் நடைமுறைகளுக்கு உதவியாக இருக்கும் மருத்துவப் பணியாளர் கள், இந்த மசோதாவால் பயனடைவர்.

இதில், 'பிசியோதெரபி, ஆக்குபேஷ்னல் தெரபி, ஆப்தால்மிக் சைன்சஸ், நியூட்ரீஷன் சைன்சஸ், மெடிக்கல் லேபரேட்டரி, மெடிக்கல் ரேடியாலஜி, இமேஜிங், தெரபெடிக் டெக்னாலஜி.'மெடிக்கல் டெக்னாலஜி, சர்ஜிக்கல் அனஸ்தீசியா சார்ந்த தொழில்நுட்பம், கம்யூனிட்டி கேர், பிஹேவியரல் ஹெல்த் சயின்சஸ், ஹெல்த் இன்பர்மேஷன் மேனேஜ்மன்ட் மற்றும் ஹெல்த் இன்பர்மேட்டிக்ஸ்' உள்ளிட்ட மருத்துவ துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் உள்ளடங்குவர்.இந்த பிரிவுகளில் பணியாற்றுவோரின் படிப்பு மற்றும் சேவை தரத்தை உயர்த்த, இந்த மசோதா வழிவகுக்கும். இதற்காக, தேசிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.

அனுமதி

இந்த ஆணையத்தில், தலைவர், துணை தலைவர் அங்கம் வகிப்பர். இவர்களைத் தவிர, மத்திய அரசு துறைகளின், இணை செயலர்கள் ஐந்து பேர், உறுப்பினர்களாக இருப்பர்.மேலும், சுகாதார சேவைகள் இயக்குனரகத்தின் பிரதிநிதி ஒருவர், டில்லி எய்ம்ஸ், ஏ.ஐ.ஐ.பி.எம்.ஆர்., எனப்படும், அகில இந்திய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நிறுவனத்தின், மூன்று துணை இயக்குனர்கள் அல்லது மருத்துவ கண்காணிப்பாளர்கள், சுழற்சி முறையில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களைத் தவிர, மாநில கவுன்சில்களில் இருந்து, பகுதிநேர உறுப்பினர்களாக, 12 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.மருத்துவ பணியாளர்களின் கல்வி மற்றும் சேவையை ஒழுங்குபடுத்துவதற்கான கொள்கைகளையும், வழிமுறைகளையும், இந்த ஆணையம் வகுக்கும்.

இதைத்தவிர, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்காகவும், 'ஆன்லைன்' பதிவேட்டின் பராமரிப்பு, கல்வி, ஊழியர்களின் தகுதிகள், தேர்வுகள், பயிற்சிகள், கட்டணம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் தரத்தையும், இந்த ஆணையம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த ஆறு மாதங்களுக்குள், அனைத்து மாநில அரசுகளும், இதற்காக தனி மருத்துவ கவுன்சில்களை உருவாக்கும். மாநிலத்தில் மருத்துவ பணியாளர் தொடர்பான புதிய நிறுவனங்கள் அமைப்பது, படிப்புகளை சேர்ப்பது மற்றும் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது என அனைத்துக்கும், இந்த கவுன்சிலிடம் இருந்து அனுமதி பெறவேண்டியது கட்டாயம்.

அபராதம்

தங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்தி குற்றங்கள் செய்வோர், சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறுவோர் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கவும், இந்த மசோதா வழிவகுக்கிறது. விதிமீறல்களில் ஈடுபடு வோருக்கு, ஒரு ஆண்டு வரை, சிறைத் தண்டனை விதிக்கப்படும் அல்லது
5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.இந்த மசோதாவால், இந்தியர்கள் மட்டுமின்றி, இந்தியாவில் சிகிச்சை பெறும் வெளிநாட்டினரும் பயனடைவர் என்பதால், இதை, அனைத்து தரப்பினரும் வரவேற்றுஉள்ளனர். - நமது சிறப்பு நிருபர் -

NEWS TODAY 28.01.2026