Wednesday, April 7, 2021

Men caught with two EVMs in city; not used for polling, says CEO


Men caught with two EVMs in city; not used for polling, says CEO

₹1.12L Cash Recovered, EC Probe on

Srikkanth D & Ram Sundaram TNN

Chennai:7.4.2021 

Four individuals found carrying two electronic voting machines (EVMs) and one VVPAT machine on twowheelers in Velachery soon after the poll on Tuesday sparked outrage, with the DMK and the Congress accusing a serious breach of protocol. Cash worth ₹1.12 lakh was also found on them.

Chief electoral officer Satyabrata Sahoo said that as per their preliminary inquiry, the motorists were corporation employees and the EVMs they were carrying were not the ones used for polling. “Detailed inquiry is on. As per preliminary findings of the DEO, these two (machines) were not polled EVMs. We will take strict action on any violation of SOPs,” Sahoo said.

It all started when a food delivery agent noticing the machines being transported on two bikes confronted the riders after one of the machines fell down on Taramani main road in Velachery. As the news spread, a group of DMK and Congress functionaries rushed to the spot and picked up an argument. C V Elango, a DMK functionary, said that even as they were verifying the identity of the men, police reached the scene and took them away saying they need to investigate the matter.

‘Bikers attempted to flee when surrounded’

Elango said, “What raised the suspicion was the fact that the bikers attempted to flee when surrounded.” They were wearing ‘Polling Official’ badges, but we suspect them to be AIADMK workers, he said.

Tension prevailed outside Velachery police station where hundreds of cadres from the DMK and the Congress gathered. Police said the motorists were revenue department officials and senior officials were holding talks with Congress candidate Hasan Maulaana and DMK functionaries.

Former DMK mayor Ma Subramanian, who held a long meeting with police and polling officials at the station, said the individuals were poll officials, but he had asked the election commission to verify their call records to identify if there was any wrongdoing. “We seek a fair probe into the matter and a reelection for the booth concerned from where the machines were transported. We also want legal and departmental action against the officers concerned,” Subramanian said.

Regarding the cash, Subramanian said the poll officials have told them that the cash was meant for staff salary and they have sought an investigation on that too. DMK functionaries will meet CEO Satyabrata Sahoo on Wednesday.

TNCC president K S Alagiri questioned Sahoo’s stand on Velachery EVM episode, and said: “Since afternoon, we have complained about removal of names of DMK supporters from the voters list in Velachery. Inaction was his answer. Now, EVMs have been seized from unauthorized people,” said Alagiri demanding immediate action.

Velachery MNM candidate Santhosh Babu said, “I have been a poll observer more than nine times. These units are never handheld or moved using two wheelers, unless there is an emergency. Since this has happened after the polling process, it raises suspicion. This is a clear standard operating procedure violation. When all of us are complaining, AIADMK is missing from the scene. This gives further suspicion,” he added. MNM has demanded a countermanding of elections at DAV school polling booth in Adambakkam.


TENSE MOMENTS: A scene outside Velachery police station on Tuesday evening

Monday, April 5, 2021

மாணவிக்கு மருத்துவ 'சீட்' வாய்ப்பு மறுப்பு இழப்பை ஈடு செய்ய முடியாது: ஐகோர்ட்

மாணவிக்கு மருத்துவ 'சீட்' வாய்ப்பு மறுப்பு இழப்பை ஈடு செய்ய முடியாது: ஐகோர்ட்

Added : ஏப் 04, 2021 01:17 

மதுரை : மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகை பெற, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் படித்ததை குறிப்பிட, விண்ணப்பத்தில் வழிவகை செய்யாததால், மாணவிக்கு வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டுள்ளது.ஆறாவது வகுப்புசிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஏரியூரைச் சேர்ந்த சகிலா பானு தாக்கல் செய்த மனு:என் மகள் ஷபானா; ஆறாவது வகுப்பு வரை, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் - ஆர்.டி.இ., தனியார் பள்ளியில் படித்தார்.ஏழு முதல் பிளஸ் 2 வரை ஏரியூர் அரசு மேல்நிலை பள்ளியில் படித்தார். பிளஸ் 2வில், 600க்கு, 539 மதிப்பெண், நீட் தேர்வில், 425 மதிப்பெண் பெற்றார்.மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை, தமிழக அரசு கொண்டு வந்தது. இதன் அடிப்படையில், மாணவர் சேர்க்கைக்கு ஷபானா விண்ணப்பித்தார்.

அதில், மாணவர் ஆறாவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழகத்தில் படித்தவரா, எந்த அரசுப் பள்ளியில் படித்தவர் என கேள்விகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளியில் மாணவர்கள் படித்ததை குறிப்பிடுவதற்கு விண்ணப்பத்தில் வழிவகை செய்யவில்லை. எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், ஆறாவது வகுப்பு வரை படித்ததை குறிப்பிட முடியவில்லை.இடஒதுக்கீட்டின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் பட்டியலில், ஷபானா பெயரை அதிகாரிகள் சேர்க்கத் தவறிவிட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தவறால், ஷபானா பாதிக்கப்பட்டுள்ளார்.

7.5 சதவீத இடஒதுக்கீட்டில், ஷபானாவிற்கு மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்கக் கோரி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டார். நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார்.அரசுத் தரப்பு, '2020 - 21 கல்வியாண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிந்து விட்டது. இடங்களும் பூர்த்தியாகி விட்டன' என தெரிவித்தது.நீதிபதி உத்தரவுதமிழக அரசின், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், அரசு மருத்துவக் கல்லுாரியில் சேரும் மதிப்புமிக்க வாய்ப்பு, மனுதாரர் மகளிடமிருந்து அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, மாணவர்கள் தனியார் பள்ளியில் படித்ததை குறிப்பிடும் வகையில், விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவாக வடிவமைக்காமல், கவனக்குறைவாக செயல்பட்டுள்ளனர்.இதனால், மருத்துவப் படிப்பு கனவுடன் இருந்த இம்மாணவிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது கொடுமை. பாதிக்கப்பட்டுள்ள மனுதாரர் மகளுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கினாலும், இழப்பை ஈடு செய்ய முடியாது.தார்மீக அடிப்படையில், மனுதாரர் மகளுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், எதிர் வரும் கல்வியாண்டில், மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்க, தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.ஒருவேளை நடப்பு கல்வியாண்டில் மருத்துவப் படிப்பை யாரும் பாதியில் கைவிட்டால், யாரும் படிப்பில் சேராமல் இருந்தால், அந்த இடத்தில் தாமதமின்றி மனுதாரர் மகளுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் அளிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Saturday, April 3, 2021

Parents Being Harassed Via SMS To Pay School Fees, Even For Lockdown Duration: Plea Alleges Before Allahabad High Court

Parents Being Harassed Via SMS To Pay School Fees, Even For Lockdown Duration: Plea Alleges Before Allahabad High Court: Whereas the Uttar Pradesh Government is yet to respond to a query put by Allahabad High Court regarding regulation of school fees during suspension of physical classes, yet another PIL has been...

விதிகளின்படி மருத்துவக் கல்லுாரி கட்டடம் தேசிய மருத்துவ கமிஷன் ஆய்வுக்கு உத்தரவு

விதிகளின்படி மருத்துவக் கல்லுாரி கட்டடம் தேசிய மருத்துவ கமிஷன் ஆய்வுக்கு உத்தரவு

Added : ஏப் 02, 2021 23:41

சென்னை:தமிழகத்தில், புதிதாக கட்டப்படும், 11 மருத்துவக் கல்லுாரிகள், விதிகளின்படி கட்டப்படுகிறதா என்பதை, அவ்வப்போது ஆய்வு செய்யும்படி, தேசிய மருத்துவ கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுதும், 75 மருத்துவக் கல்லுாரிகளை கட்ட, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு, 11 கல்லுாரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.புதிய மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவ கவுன்சில் விதிகளின்படி கட்டப்பட வேண்டும் எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில், ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடுத்தார்.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பழைய விதிகளின்படி கட்டம் கட்டும்படி, மனுதாரர் கோரியுள்ளார். 2018 - 2020ம் ஆண்டுகளில் புதிய விதிகள் வந்து விட்டன. புதிய விதிகளின்படி, மாற்றி அமைக்கப்படுகிறது' என்றார்.

இதையடுத்து, 'எந்த குறுக்கீடும் இன்றி, திட்டப்பணிகளை மேற்கொள்ளலாம்; தேசிய மருத்துவ கமிஷனின் விதிகளுக்கு உட்பட்டு, மருத்துவக் கல்லுாரி கட்டடங்கள் கட்டப்படுகிறதா என்பதை, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் தர நிதி ஒதுக்கீடு

தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் தர நிதி ஒதுக்கீடு

Added : ஏப் 02, 2021 23:24

சென்னை:ஓட்டுச்சாவடிகளில், தேர்தலன்று பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, 71.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தல், வரும், 6ம் தேதி நடக்க உள்ளது. அன்று வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்காக, 88 ஆயிரத்து, 937 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஆறு ஊழியர்கள் பணியில் இருப்பர். அவர்களுக்கும், இதர தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க, முதல் கட்டமாக, 71.21 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கி உள்ளது.

ஓட்டுச்சாவடி தலைமை அலுவலருக்கு, 1,700 ரூபாய் முதல், கடை நிலை ஊழியர்களுக்கு, 600 ரூபாய் வரை, அவர்களின் நிலைக்கேற்ப ஊதியம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிதேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறை, வனத்துறை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, சிறைத்துறை, மத்திய ஆயுதப்படை போலீசார், மாநில ஆயுதப்படை போலீசார் ஆகியோருக்கும் ஊதியம் வழங்க, 21.53 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இதில், இன்ஸ்பெக்டர்கள் நிலையில், 400 ரூபாய்; ரிசர்வ் போலீசாருக்கு, 150 ரூபாய் வீதம், அவர்களின் நிலைக்கேற்ப, நான்கு நாட்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

புதிய துணைவேந்தர் தேர்வு தேடல் குழு நியமனம்


புதிய துணைவேந்தர் தேர்வு தேடல் குழு நியமனம்

Added : ஏப் 02, 2021 22:56

சென்னை:அண்ணா பல்கலை புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் அடங்கிய தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவின் பதவிக்காலம், வரும், 11ம் தேதி முடிகிறது.

புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.பல்கலை வேந்தரான கவர்னர் தரப்பில், மூன்று பேர் அடங்கிய தேடல் குழு அமைக்கப்பட்டுஉள்ளது. டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், கவர்னர் பிரதிநிதியாகவும், குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட உள்ளார்.பல்கலையின், 'சிண்டிகேட்' குழு பிரதிநிதியாக, அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் தியாகராஜன், அரசு தரப்பு பிரதிநிதியாக ஷீலாராணி சுங்கத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த கமிட்டி சார்பில், மூன்று மாதங்களுக்குள் புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படுவார் என, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

தரிசன முன்பதிவுடன் அறை முன்பதிவு

தரிசன முன்பதிவுடன் அறை முன்பதிவு

Added : ஏப் 03, 2021 00:14

திருப்பதி:திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, தங்கும் அறையும் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில், தேவஸ்தான இணையதளத்தில், விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

முன்பதிவு

திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது.அதில் பங்கேற்ற பக்தர்களுக்கு, தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர்ரெட்டி பதிலளித்தார், நிகழ்ச்சி நிறைவுக்கு பின், அவர் கூறியதாவது.கிராம மக்கள் இடையே ஹிந்து தர்மத்தை போதிக்க, தேவஸ்தானம் புதிய நடவடிக்கைககளை மேற்கொள்ள உள்ளது.

அதற்காக பஜனை மண்டலிகள், கோசாலை நிர்வாகிகள், விஷ்ணு சகஸ்ரநாமபாராயணம், லலிதா சகஸ்ரநாமபாராயணம் மண்டலிகள், ஸ்ரீவாரி சேவார்த்திகள் விவரங்கள் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் சேகரித்து வருகிறது.கொரோனா தொற்று மீண்டும் பரவத் துவங்கி உள்ளதால், திருமலைக்கு வரும் பக்தர்கள் முககவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்டவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.இணையதளம் வாயிலாக, திருமலையில் தங்கும் அறைகள் முன்பதிவு செய்யும் பக்தர்கள் முதலில், மத்திய விசாரணை அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்து துணை விசாரணை அலுவலக்திற்கு சென்று, அறை பெற்றுக் கொள்ளும் முறை தற்போது அமலில் உள்ளது.

வசதிகள்

இதை எளிதாக்க, அறை முன்பதிவு செய்த பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடியை கடந்ததும், குறுந்தகவல் வாயிலாக, அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய துணை விசாரணை அலுவலக எண்கள், அவர்களது 'மொபைல் போன்' எண்ணிற்கு அனுப்பப்படும். பக்தர்கள் நேரடியாக அந்த அலுவலகத்திற்கு சென்று, தங்கள் அறையை பெற்றுக் கொள்ளலாம். இம்முறை இன்னும், 10 நாட்களில் அமலுக்கு வர உள்ளது.

மேலும், இணையதளம் வாயிலாக விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்கள், அதே பக்கத்தில் தங்கும் அறைகளையும் முன்பதிவு செய்து கொள்ளும் விதம் இணைய தளத்தில் சில மாற்றங்களை, தேவஸ்தானம் செய்ய உள்ளது. விரைவில் இந்த வசதியும் அமலில் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 06.12.2025