Monday, November 8, 2021
Principle Of Initial Date Of Appointment Valid Principle To Determine Inter-Se Seniority In Absence Of Rules To Contrary : Supreme Court
Principle Of Initial Date Of Appointment Valid Principle To Determine Inter-Se Seniority In Absence Of Rules To Contrary : Supreme Court: The Supreme Court of India has held that the principle of initial date of appointment or continuo
"Couldn't Keep Up The Hope & Trust Of Supreme Court": Madras High Court Apologises To Supreme Court For Delay In Deciding A Case
"Couldn't Keep Up The Hope & Trust Of Supreme Court": Madras High Court Apologises To Supreme Court For Delay In Deciding A Case: The Madras High Court this week apologized to the Supreme Court for
Assurance By Chief Minister, Ruling Party Or Even By The Governor Doesn't Become Law Of The Land: Telangana High Court
Assurance By Chief Minister, Ruling Party Or Even By The Governor Doesn't Become Law Of The Land: Telangana High Court: The Telangana High Court has recently observed that the assu
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் 2,3 நாட்கள் கழித்து சென்னை திரும்புங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் 2,3 நாட்கள் கழித்து சென்னை திரும்புங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதாலும், தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ள பொது மக்கள் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீட்டரும், அரியலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.20 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னை நகரில் குறிப்பாக மிக அதிக அளவு மழை பதிவாகி பெய்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று (07.11.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக கொளத்தூர், செல்வி நகர், சீனிவாசா நகர், பெரம்பூர், பெருமாள்பேட்டை, வல்லம் பங்காரு தெரு, புரசைவாக்கம், மூக்கு செட்டி தெரு, கொசப்பேட்டை, படவட்டமன் தெரு, ஓட்டேரி, கொன்னூர், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து கே.ஆர்.எம். பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ரொட்டி, அரிசி, போர்வை, சோப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.
வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 7.11.2021 வரை 334.64 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 232.8 மி.மீட்டரை விட 44 சதவீதம் கூடுதல் ஆகும்.
கோயம்புத்தூர், திருநெல்வேலி, அரியலூர், திருவாரூர், விழுப்புரம், ஈரோடு, கரூர், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவீதத்திற்கு மேல் மிக அதிகப்படியான மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், அனைத்து மாவட்டங்களில் 5106 நிவாரண முகாம்களும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில், மொத்தம் 160 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், இராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

மேலும், பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் மதுரைக்கும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு தீயணைப்புத் துறையும், அனைத்து விதமான தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது. மீன்வளத் துறை மூலம் போதுமான படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (07.11.2021) சென்னையின் பல பகுதிகளிலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காத வண்ணம் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை அமைப்புகள் மூலம் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான மையங்களுக்கு அழைத்துச் செல்லவும், அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான இதர வசதிகளை செய்து தரவும் முதல்வர் உத்தரவிட்டார். எல்லா இடங்களிலும் உரிய மருத்தவ வசதிகள் கிடைப்பதையும், கோவிட் வழிகாட்டு நடைமுறைகள் தவறாது கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தினார்.

பின்னர் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் மாநிலத்தில் மழை வெள்ளம் குறித்த தகவல் கட்டுப்பாடு விபரங்களை கேட்டறிந்தார். கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் பணீந்திர ரெட்டி மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுப்ப வேண்டிய முன்னெச்சரிக்கை செய்திகளை உடனடியாக அனுப்பவும், கட்டணமில்லா தொலைபேசி 1070 மூலம் வரப்பெறும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்கள்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையிலும், 08.11.2021 மற்றும் 09.11.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
தற்போது சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள
அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதாலும், தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ள பொது மக்கள் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பிய பொதுமக்களால் பேருந்துகளில் கூட்டம்
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பிய பொதுமக்களால் பேருந்துகளில் கூட்டம்

தீபாவளி தொடர் விடுமுறை முடிந்த நிலையில், பொதுமக்கள் பலர் தங்கள் சொந்த ஊரில் இருந்து தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. படம்: எஸ்.குரு பிரசாத்
தீபாவளி தொடர் விடுமுறைக்குப் பின்னர் பொதுமக்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு செல்லத் தொடங்கினர். இதனால், நேற்று சேலம், கிருஷ்ணகிரி பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
வெளியூர்களில் பணிபுரிவோர், கல்லூரி மாணவ, மாணவிகள் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்துக்காக சொந்த ஊர் சென்றவர்கள் விடுமுறை முடிந்த பின்னர் நேற்று தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இதனால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று காலை முதலே பயணிகள் வருகை படிப்படியாக அதிகரித்தது. இதனால், பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தடுக்க நுழைவு வாயில்கள், நடைமேடைகள் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் ஆங்காங்கே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், பேருந்து நிலையத்துக்குள் கார், இருசக்கர வாகனம், ஆட்டோ போன்றவை வராமல் தடுத்தனர்.
சுங்கச்சாவடியில் காத்திருப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து நேற்றுகிருஷ்ணகிரி வழியாகவே தாங்கள் பணிபுரியும் பகுதிகளுக்கு செல்லத் தொடங்கினர். இதனால், கிருஷ்ணகிரி பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
சில ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் பலர் கூட்ட நெரிசலில் பயணம் செய்ததோடு, பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடியும் சென்றனர். குறிப்பாக ஓசூர், பெங்களூருக்கு பேருந்துகள் போதிய அளவில் இல்லாததால் பயணிகள் வெகுநேரம் காத்திருந்தனர்.
இதை அறிந்த அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் எந்த ஊர்களுக்கு அதிக பயணிகள் கூட்டம் இருந்ததோ அந்த ஊர்களுக்கு மாற்றுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதேபோல, கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள சுங்கச்சாவடியை கடந்த செல்ல நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
மெல்ல மேலே எழும்புகிறது...விமான பயணிகள் எண்ணிக்கை! வானமே எல்லை!
மெல்ல மேலே எழும்புகிறது...விமான பயணிகள் எண்ணிக்கை! வானமே எல்லை!
Updated : நவ 08, 2021 01:56 | Added : நவ 07, 2021 23:15
கோவை சர்வதேச விமானநிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது; தினமும் சராசரியாக, 5 ஆயிரம் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. சரக்கு ஏற்றுமதியும் உயர்ந்து வருகிறது.
கோவை சர்வதேச விமானநிலையத்தின் விரிவாக்க பணிகள் சற்று வேகம் எடுத்துள்ளன. கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் கோவையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் கோவையில் இருந்து வெறும், 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் நடப்பு மாதம் விமானங்களின் எண்ணிக்கை, 26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நடப்பு மாதம் முதல் உள்நாட்டு பிரிவில், புதிய நகரங்களுக்கு விமான சேவை மற்றும் பல்வேறு நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதன்மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டிச., மாதம் சராசரியாக, 2 லட்சம் பயணிகள் கையாளப்பட வாய்ப்புள்ளதாக, விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானநிலைய அதிகாரிகள் கூறியதாவது:கோவை சர்வதேச விமானநிலையம் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் 'பிசி'யாக துவங்கியுள்ளது. கோவையில் இருந்து நடப்பு மாதம் டில்லி மற்றும் கோல்கட்டாவுக்கு புதிய நேரடி விமான சேவைகள் துவங்கியுள்ளன.இதன்மூலம் உள்நாட்டு பிரிவில் 20க்கும் மேற்பட்ட விமானங்களும், வெளிநாட்டு பிரிவில் சார்ஜாவுக்கு ஒரு விமானமும் இயக்கப்படுகிறது.
உள்நாட்டு பிரிவில் சென்னைக்கு, 7 விமானங்கள், மும்பை, 4, பெங்களூரு, 3, ஐதராபாத், 3, டில்லி, 2, கோல்கட்டாவுக்கு ஒரு விமானமும் இயக்கப்படுகிறது.கோவையில் இருந்து தினமும் பல்வேறு நகரங்களுக்கு வழங்கப்படும் விமான சேவைகளில், 7,200 சீட்கள் உள்ளன. இவற்றில் தற்போது உள்நாட்டு பிரிவில் சராசரியாக, 5 ஆயிரம் சீட்கள் 'புக்' செய்யப்பட்டு வருகின்றன.
இண்டிகோ நிறுவனம் இயக்கும் ஏ320 ஏர்பஸ் விமானத்தில், 180 பயணிகள் வரை செல்லலாம். கோவை சர்வதேச விமானநிலையம் 2019ம் ஆண்டு மொத்தம், 30 லட்சம் பயணிகளை கையாண்டது. சராசரியாக மாதம், 2.5 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது.கொரோனா தொற்று குறைந்த பின், மீண்டும் பழைய நிலைக்கு விமான பயணிகளின் எண்ணிக்கை திரும்பி வருகிறது. இதே ரீதியில் தொடர்ந்தால் வரும் டிச., மாதம் சராசரியாக, 2 லட்சம் பயணிகள் பயணிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
சரக்கு ஏற்றுமதி கிராப் 'விர்ர்...'
கோவை விமான நிலையத்தில் இருந்து, கடந்த செப்டம்பர் மாதம் 70 டன் சரக்கு ஏற்றுமதியாகியுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோவையிலிருந்து பிற நகரங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை 98 ஆயிரமாக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் இது ஒரு லட்சத்து 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
மதுரை விமான நிலையத்திலிருந்து 58 ஆயிரம் பேரும், திருச்சியிலிருந்து 12 ஆயிரம் பேரும், துாத்துக்குடியிலிருந்து 13 ஆயிரம் பேரும் விமானத்தில் பயணித்துள்ளனர். சேலத்திலிருந்து 51 பயணிகள் மட்டுமே சென்று வந்துள்ளனர். சரக்கு போக்குவரத்தில் சர்வதேச அளவில் 70 டன் ஏற்றுமதியையும், உள்நாட்டில் 690 டன் சரக்குகளையும், செப்டம்பர் மாதத்தில் கோவை விமான நிலையம் கையாண்டுள்ளது.-நமது நிருபர் குழு-
At this clothes bank for the poor, a piece costs only Re 1
At this clothes bank for the poor, a piece costs only Re 1
Petlee.Peter@timesgroup.com
Bengaluru: 08.11.2021
A new clothes bank has come up in Bengaluru where the underprivileged can shop for just Re 1 per piece of clothing.
The goodwill initiative, Imagine Clothes Bank was unveiled on September 12 at a tiny two-bedroom apartment in Lava Kusha Layout of Beratena Agrahara in Electronics City. It is open only on Sundays.
Bengaluru’s boutique for the poor is the brainchild of four college buddies — Vinod Prem Lobo, Melisha Noronha, Nitin Kumar and Vignesh — who have been involved extensively in social activities for a few years now.
“It all goes back to our college days of 2002 at St Aloysius, Mangaluru, when we floated a clothes bank on the streets for the poor with pieces collected through contributions made by students from schools in the city. The free distribution went on successfully for a while till we all finished our studies and left,” recalled Lobo.
After finding their careers, the friends once again came together in Bengaluru to restart what they had left behind and started Imagine Trust. Early this year, they decided on opening a clothing bank in Bengaluru, especially after Covid crisis left many daily wage labourers and migrant workers unemployed.
“We began collecting old clothes through friends and acquaintances with a focus on apartment complexes in Bengaluru and received a good response,” said Lobo, who along with friends, zeroed in on a two-bedroom flat in Electronics City for setting up the bank.
The first day itself saw many underprivileged families come in and pick clothes. All kinds of clothes in good condition, including shirts, pants, skirts, saris, jackets and even blankets and curtains finely spread out on par with a boutique here. Two staff members ensure the pieces are segregated according to age, sizes and types.
DRESS & DIGNITY: All kinds of clothes in good condition, and even blankets and curtains are availabe in this Bengaluru bank
Subscribe to:
Comments (Atom)
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...