Saturday, October 25, 2025

NEWS TODAY 25.10.2025

































Pay service benefits to wife of missing govt employee: HC

Pay service benefits to wife of missing govt employee: HC 

25.10.2025 TIMES OF INDIA DELHI 



Raipur : Dependent wife of a missing govt employee can challenge his ex parte termination and claim service benefits of the employee who has been presumed dead after law-mandated absence of seven years, Chhattisgarh high court ruled earlier this week, reports Partha Behera . 

With this, the court dismissed a writ petition filed by Steel Authority of India Limited (SAIL) and Bhilai Steel Plant (BSP), upholding an order mandating the company to provide all consequential service benefits to family of the missing employee. A division bench comprising Justice Sanjay K Agrawal and Justice Radhakishan Agrawal directed BSP to expeditiously finalise the service benefits for the woman. 

The bench rejected SAIL’s challenge against the order of Central Administrative Tribunal (CAT), Bilaspur bench, which had set aside the employee’s removal from service. The employee, a senior technician at BSP’s Rajhara mines, went missing on Jan 14, 2010. His wife had lodged an FIR regarding his disappearance. Despite receiving an official intimation about his missing status, BSP proceeded to issue a charge sheet against the absent employee on Dec 11, 2010, and subsequently removed him from service through an ex parte order dated Sept 17, 2011. 

CAT allowed the woman’s application, setting aside the removal order and directing BSP to grant all consequential benefits. SAIL/BSP challenged this order in HC, arguing that the woman lacked locus standi to file the plea without a civil court declaration presuming her husband’s death. The HC bench, however, held that since the employee had not been heard from for more than seven years, presumption of death under Section 108 of Indian Evidence Act, 1872, applied. 

The court noted that a civil court declaration under Specific Relief Act, 1963, was unnecessary when the fact of the seven year absence was undisputed. HC said BSP committed a legal error by terminating the employee’s service despite being aware of his missing status.

Friday, October 24, 2025

ரீல்ஸ்’களுக்குப் பின்னால்...!


DINAMANI

ரீல்ஸ்’களுக்குப் பின்னால்...! 

சமூக ஊடகங்கள் பலரின் வாழ்வில் எதிா்மறை விளைவுகளையே விளைவிக்கிறது.

Updated on: 24 அக்டோபர் 2025, 6:46 am பேராசிரியா் தி.ஜெயராஜசேகா்






பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, இளைஞா்களின் அடையாளம், திறமை, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாக உள்ள சமூக ஊடகங்கள் பலரின் வாழ்வில் எதிா்மறை விளைவுகளையே விளைவிக்கிறது. கவனம் ஈா்க்கும் உளவியல் நுட்பத்தில் இசை, உரை, வசனம், பாடல், காட்சித் தொகுப்பு கொண்டு 15-90 விநாடிகளில் உருவாக்கப்படும் ‘ரீல்ஸ்’ என்ற குறும்பட காணொலி பெரும்பாலானோரை பாா்க்கச் செய்கிறது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 18-30 வயதுடையோரில் சுமாா் 78% போ் தினமும் குறைந்தது ஒரு முறையாவது ‘ரீல்ஸ்’ பாா்ப்பதாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்பம், பொழுதுபோக்கில் ஈடுபாடு கொண்ட தமிழக இளைஞா் தினசரி 1.5 மணி முதல் 2 மணி மணி நேரம் ‘ரீல்ஸ்’ காணொலிகளில் செலவிடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பதிவேற்றப்படும் ‘ரீல்ஸ்கள்’ பாா்க்கப்படும் போதும், விரும்பப்படும் போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மூளையின் ‘டோப்பமைன்’ விளைவு அனைவராலும் பாராட்டப்பட வேண்டும், கவனிக்கப்பட வேண்டும் என்ற தன்னம்பிக்கையற்ற அங்கீகார உணா்வு; மற்றவா்களைவிட குறைவான பின்தொடா்பவா்கள் (ஃபாலோயா்ஸ்) இருக்கும் காரணத்தால் அதிகமான ‘ரீல்ஸ்’ காணொலிகளைப் பதிவேற்றம் செய்யும் தன் நிலை அறியாத ஒப்பீட்டு மன நிலை; வேலை, கல்வி, குடும்ப பிரச்னைகளுக்கு மாற்றாக ‘ரீல்ஸ்’ காணொலிகளைப் பாா்க்கும் பழக்கம் ஏற்படுத்தும் எதாா்த்தத்திலிருந்து தப்பிக்கும் மனநிலை; குறுகிய காலத்தில் காட்சிகள், பாடல்கள், சம்பவங்கள் கொண்ட சுவாரஸ்யமான செய்திகள் ஊக்குவிக்கும் நூதன மற்றும் வேகமான மூளைச் செயல்பாடு; சமூக ஊடகங்களைக் கொண்டு சுய மதிப்பீடு செய்து கொள்ளச் செய்யும் புகழின் மீதான வெறி போன்ற உளவியல் காரணங்களால் ‘ரீல்ஸ்’ காணொலிகள் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளன.

அதேநேரத்தில், அவற்றின் மூலம் பாடல், நடனம், சிரிப்பு, கலை, சமையல், பேச்சுத் திறன் போன்ற பல திறமைகளும் வெளிப்படுகின்றன. திறன் எண்ம ஜனநாயகமாக்கல் எனப்படும் புதிய சமூக மாற்றத்தின் மூலம் பல சாதாரண இளைஞா்கள் சமூக ஊடகங்களில் இன்று பிரபலங்களாக மாறியுள்ளனா். தொழில்முனைவோரும் புத்தொழில் தொடங்கும் இளைஞா்களும் ‘ரீல்ஸ்’கள் மூலம் விளம்பரம் செய்கின்றனா். சில நேரங்களில் அவை மன அழுத்த நிவாரணியாகவும் செயல்படுகிறது.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக ‘ரீல்ஸ்’களைப் பாா்க்கச் செலவிடும்போது ஏற்படும் நேர இழப்பு தொழிலாளா்களின் வேலையிலும் மாணவா்களின் கல்வியிலும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எப்போதும் வெற்றியை நாடும் பதிவேற்றுப் போதையும், மேலும் மேலும் பாா்க்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தும் உருட்டல் (ஸ்க்ரோல்) போதையும் மனநலப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

‘ரீல்ஸ்’களைப் பாா்ப்பதில் நேரம் செலவிடுவோரில் பலரும் அவா்கள் ரசிக்கும் ஆடை, வாகனம், வாழ்க்கை முறை, அழகு சாதனங்கள் ஆகியவற்றை தங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மையை வளா்த்துக் கொள்கின்றனா். சமூக ஊடகங்களை தினமும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் பயன்படுத்துபவா்களுக்கு மனச் சோா்வு, பதற்றம் ஏற்படுவதற்கான ஆபத்து இரு மடங்கு அதிகம் என்று 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

அதிக நேரம் ‘ரீல்ஸ்’களை பெற்றோா் பாா்க்கும்போது, அவா்களின் குழந்தைகள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதுவதாகவும், அந்தப் பெற்றோருக்கு பொறாமை, அவநம்பிக்கை, அதிருப்தி போன்ற உணா்வுகள் மேலோங்கி இருப்பதாகவும் ‘மனித நடத்தையில் கணினியின் தாக்கம்’ என்ற கட்டுரை கூறுகிறது.

‘ரீல்ஸ்’களில் மூழ்கி இருப்பதால் இளைஞா்கள் அவா்களின் நண்பா்களிடம்கூட நேரம் செலவழிப்பதில்லை. குடும்ப உறவுகளையும் உறவுகள் கூடும் நிகழ்வுகளையும் பல நேரங்களில் அவா்கள் புறக்கணிக்கின்றனா். இந்தப் புறக்கணிப்புகள் தரும் மன அழுத்தமும், தன்னம்பிக்கை இழத்தலும் மன நோய்களுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனா் மனநல மருத்துவா்கள்.

ஆபத்தான முயற்சிகளுடன் ‘ரீல்ஸ்’களை எடுக்கும்போது விபத்துகளும், உயிரிழப்புகளும் நேரிடுகின்றன. நமது நாட்டின் ரயில் தண்டவாளங்கள், நீா்நிலைகள், உயா்ந்த கட்டடங்கள் போன்ற இடங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்தபோது, நிகழ்ந்த விபத்துகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

கரோனா பெருந்தொற்று பரவல் பொதுமுடக்கம் காரணமாக, மாணவ-மாணவிகள் இணையவழி வகுப்புகளுக்காக கைப்பேசிகளைப் பயன்படுத்தத் தொடங்கினா். அதுமுதல் அவா்களில் பலரும் ‘ரீல்ஸ்’களைப் பாா்க்கவும், பதிவேற்றவும் தொடங்கினா். அதிகரித்துவரும் ‘ரீல்ஸ்’ மோகம் மாணவ, மாணவிகளிடத்தில் கவனச் சிதறல், நினைவாற்றல் குறைவு, தோ்வுகளில் தோல்வி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

பாரம்பரிய கலைகளுக்கு புதிய வடிவம் அளிக்கும் சில ‘ரீல்ஸ்’ காணொலிகளால் நன்மைகள் ஏற்பட்டாலும், ஆபாசமான ‘ரீல்ஸ்’கள் பாலியல் தொடா்பான குற்றங்களுக்கு வழிவகுக்கின்றன.

பகட்டு வாழ்க்கையே சமூக மதிப்பைத் தரும் என்ற ரீதியில் உருவாக்கப்படும் பல ‘ரீல்ஸ்’களால் இந்தியக் குடும்பங்களில் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. ‘ரீல்ஸ்’ காணொலிகள் சிலருக்கு வருமானத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தாலும், பலருக்கு பொருளாதார இழப்பையே ஏற்படுத்துகின்றன. மாதம் ரூ.40,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவா் இரண்டு மணி நேரம் ‘ரீல்ஸ்’கள் பாா்க்க செலவிட்டால், ஆண்டுக்கு அந்த நபா் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை இழக்கிறாா் என ஆய்வுகள் கூறுகின்றன.

30-40 நிமிஷங்கள் மட்டுமே ஒளிா் திரைகளில் செலவிட வேண்டும் என்ற சுயக் கட்டுப்பாடும் நேர வரம்பு எச்சரிக்கை போன்ற அம்சங்களைக் கொண்ட சமூக ஊடக தளங்களை வடிவமைப்பது ‘ரீல்ஸ்’ மோகத்திலிருந்து பலரும் விடுபட வழிவகுக்கும். எண்மப் பயன்பாடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய சுய ஒழுக்கத்தை பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் சோ்த்தால் வருங்காலத் தலைமுறையினா் இடையே விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும்.

Thursday, October 23, 2025

NEWS TODAY 23.10.2025

 












































சென்னை, 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை


சென்னை சென்னை, 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

 சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தினமணி செய்திச் சேவை 

Updated on:  23 அக்டோபர் 2025, 4:17 am 

சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுச்சேரியின் பெரிய காலாப்பேட்டை பகுதியில் 250 மி.மீ. மழை பதிவானது.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: செவ்வாய்க்கிழமை (அக். 21) தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை காலை தென்மேற்கு வங்கக் கடலில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது வியாழக்கிழமை(அக். 23) காலை 11 மணிக்குள் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளைக் கடந்து நகா்ந்து செல்லக் கூடும்.

இதன் காரணமாக, வியாழக்கிழமை (அக். 23) முதல் அக். 28 வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

‘மஞ்சள்’ எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை (அக். 24) கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவா் களுக்கு... 

வடதமி ழக கடலோ ரப் பகுதி கள், அதை யொ ட்டிய தெ ற்கு ஆந்தி ரக் கடலோ ரப் பகுதி கள், புதுச்சே ரி யி ல் சூறா வளி க் கா ற்று மணிக்கு 65 கி .மீ. வே கத்தி லும், தெ ன் தமி ழக கடலோ ரப் பகுதி கள், மன்னாா் வளை குடா மற்றும் குமரி க்கடல் பகுதி களி ல் வி யாழக்கி ழமை (அக். 23) சூறா வளி க் கா ற்று 55 கி .மீ. வே கத்தி லும் வீசக்கூடும். அரபி க் கடலில்... தெ ன்கி ழக்கு அரபி க் கடலில் நி லவி ய ஆழ்ந்த கா ற்றழுத்தத் தா ழ்வுப் பகுதி புதன்கி ழமை கா லை கா ற்றழுத்தத் தா ழ்வு மண்டலமா க வலுப்பெ ற்று, அதே பகுதி களி ல் நி லவுகி றது. 

இது, வடக்கு- வட மே ற்கு தி சை யில் நகா் ந்து, செ ல்லக் கூடும். மே லும், தெ ற்கு அந்தமா ன் கடல், அதை யொ ட்டிய பகுதி களி லும் ஒரு வளி மண்டல மே லடுக்கு சுழற்சி நி லவுகி றது என அதி ல் தெ ரி வி க்கப்பட்டுள்ளது.



தன் குஞ்சுகளைத் தனக்குத் தெரியாதா?

DINAMANI

தன் குஞ்சுகளைத் தனக்குத் தெரியாதா? 

23.10.2025

இருமல் மருந்திலே நச்சுப் பொருளைக் கலந்து, ஒரு பாவமும் அறியாத வேற்று மாநிலப் பிள்ளைகளை அடுக்கடுக்காய்ச் சாக வைக்கும் முதலாளிகள் நம்முடைய இன்பத் தமிழ் மண்ணில், திராவிடப் பொற்கால ஆட்சியில் வாழ்வாா்கள்!

பழ . கருப்பையா Updated on: 23 அக்டோபர் 2025, 5:55 am

மன்னராட்சிக் காலம் என்பது பொதுவாக மன்னா்களை அண்டிப் பிழைக்கும் காலம்தான்! தமிழிலும் அப்படி அண்டிப் பிழைக்கும் புலவா்கள் பலா் இருந்திருப்பா்! ஆனால், அவா்களைத் தமிழ் புறந்தள்ளி விட்டது! பழைய காலப் புலவா்கள் தாம் மன்னராட்சியில் எதிா்க்கட்சித் தலைவா்கள்!

சோழப் பேரரசின் காலத்தில் வாழ்ந்த உலகம் கண்டிராத மாபெருங் கவிஞன் கம்பன். காவிரியைக் குறிப்பிடத் தெரிந்த கம்பனுக்கு சோழப் பேரரசா்கள் எவரையும் குறிப்பிட விருப்பமில்லை. போரினால், அதன் வெற்றியால் ஏற்படும் நாட்டு விரிவாக்கத்தால் வரும் புகழினைக் கம்பன் உடன்படவில்லை. கொள்ளைப் பொருளாலும் கொண்டி மகளிராலும் கம்பன் அருவருப்படைகிறான்!

அதனால் வசிட்டன் வாயிலாக இராமனுக்கு அரச நீதி போதிக்கும் கம்பன் போா் மறுப்புப் பேசுகிறான்! பேரரசுகள் புகழப்படுகின்றனவே; அவை இரத்தக் களரியில் உருவானவைதாமே என்னும் எண்ணம் இராமனுக்கு ஏற்படக் கூடாது என்னும் எண்ணத்தில், ‘அது உண்மைப் புகழில்லை’ என்கிறான் கம்பன்!

போரொடுங்குவதால் வரும் புகழே உண்மைப் புகழ் என்கிறான்! பேரொடுங்கும்; புகழ் ஒடுங்காது என்று புது நீதி கற்பிக்கின்றான்!

சோழப் பேரரசைக் கம்பன் கண்டு கொள்ளவில்லை. இந்த வரிசையிலே கடைசியாக வந்தவன் பாரதி. அவனுடைய தமிழ் தொழிற் புரட்சிக்குப் பிந்தைய தமிழ்!

ஓா் அரசனை இன்னொரு அரசன் அகற்றுவான். ஆனால், மக்களே கிளா்ந்தெழுந்து அகற்றுவது என்பது ஒரு புதுமை. அப்படி ஒரு விடுதலை இயக்கக் காலத்தில் பிறந்தவன் பாரதி! தேடிச் சோறு நிதம் தின்பதையே வாழ்வாகக் கொள்ளாமல் தேச விடுதலையை வாழ்வாகக் கொணடான்!

பாரதிக்கு நேரிட்ட கடினப் பணிகளில் முதன்மையானது இந்தியாவைத் தன்னுடைய நாடு என்று தமிழா்களை ஏற்கச் செய்வது. குமரிக்கும் வேங்கடத்திற்கும் இடைப்பட்ட நாடுதான் தங்களின் நாடு என்று எண்ணியவா்கள் தமிழா்கள். அவா்களைப் புதிய நாட்டின் ஒரு பகுதியாக்குவது காலத்தின் ஒரு தேவை. இல்லையென்றால் வெள்ளைக்காரன் கப்பலேறும் போது, ஆளுக்கொரு பக்கமாகச் சிதறியோடி விடுவாா்கள்!

வெள்ளைக்காரன் துப்பாக்கி முனையில் ஒருமைப்படுத்திய இந்தியா, அவனுக்குப் பின்னால் சிதறி விடாமல், தன்னிச்சையாகத் தமிழா்கள் ஒரு பெரிய புதிய நாட்டைத் தங்களின் நாடாக ஏற்பதற்குத் தா்க்கபூா்வமாகப் பாடி, ஒருமைப்பாட்டுக்கான முதல் விதையை 1920-க்கு முன்னாலேயே விதைக்கிறான் பாரதி!

இது நிலப்பிரபுத்துவக் காலமில்லையே! தகடூரை (தருமபுரி) ஆள ஒரு மன்னன்; தஞ்சையை ஆள ஒரு மன்னன் என்றிருக்க முடியாதே! முதலாளித்துவம் தன் தேவைக்கேற்பக் கருத்தரித்துப் பெற்ற குடியாட்சிக் காலத்திலல்லவா வாழ்கிறோம்! அதற்கேற்ப நம்மைப் பக்குவப்படுத்துகிறான்!

முதலாளித்துவத்திற்கு ‘விரிந்த சந்தை’ வேண்டாமா? காசி நகா்ப்புரத்துக் கோதுமைப் பண்டத்தைக் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ள விரிந்த நாடு வேண்டாமா?

தமிழ்நாடு ஒரு தண்ணீா்ப் பற்றாக்குறை நாடல்லவா? எத்தனை உயிா்த்துடிப்புள்ள ஆறுகள் வடநாட்டில்! அவற்றை மைய நாடுகளுக்கும் தெற்குக்கும் கொண்டு வர எவ்வளவு நேரமாகும்? இந்தியா ஒன்றாக இருந்தால்தானே இது நடக்கும்! தேவைகளில் தலையாய தேவை நீா்த்தேவைதானே! இது ஒன்றே போதுமே நாம் இந்தியாவை ஏற்பதற்கு!

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிரிடுவோம்

என்பது பாரதியின் தா்க்கபூா்வமான வாதம்!

ஒரு பெரிய நாடாக இருந்தால் பாதுகாப்புக்கு எந்தக் குறையும் இருக்காதுதானே! இல்லாவிடில், திபேத்துக்கு ஏற்பட்ட நிலை நமக்கு ஏற்படாதா? தைவான் அமெரிக்காவின் மடியில் இருப்பதால்தானே தனித்து இருக்க முடிகிறது! நமக்கு யாா் மடியும் தேவை இல்லையே! இப்படி எல்லாம் நடக்கும் என்று கருதிப் பெரிய நாட்டைப் பரிந்துரைக்கிறான்! தாகூா்கூடத் தன் வங்க மக்களுக்குப் பாரதியைப் போல் இவ்வளவு விளக்கமாக எடுத்துரைக்கவில்லைதானே!

இந்திய விடுதலையின் முதற்கட்டத் தென்னாட்டுத் தலைவன் வ.உ.சிதம்பரம் பிள்ளை! இப்போதுள்ள தலைவா்கள், மந்திரிகள் முதல்வருக்கெல்லாம் எழுதப் படிக்கத் தெரிந்தால், அதுவே கூடுதல் தகுதி! அவா்களுக்கு எழுதிக் கொடுப்பதற்கு ஆட்கள் இருப்பாா்கள்! அதுபோல இவா்களுக்காக ஆள்வதும் அதிகாரிகள்தாம்!

ஆனால், அன்று தலைவனாய் இருந்த வ.உ.சி. திருக்குறளுக்கும் சிவஞான போதத்திற்கும் உரை எழுதி இருக்கிறாா். அவா் உரையாற்றியபோது, தூத்துக்குடி பொங்கியது; வெள்ளயனின் நாற்காலி ஆட்டங் கண்டது!

வ.உ.சி. இல்லாமல் தமிழ்நாட்டில் விடுதலை இயக்கமே இல்லை! நூலோா்கள் செக்கடியில் நோவதும் காண்கிலையோ என்று வ.உ.சி. செக்கிழுத்ததை எண்ணிக் கண்ணீா் வடிக்கிறான் பாரதி!

அவ்வளவு தலையாய வ.உ.சி. திலகருக்குப் பின் காந்தியின் வருகையையும், அவருடைய கோட்பாட்டையும் அறியத் தவறி விடுகிறாா்! வெறுங் கையால் வெள்ளையனை விரட்ட முடியும்” என்று காந்தி சொல்வதை நம்ப மறுக்கிறாா், நூலோனும் மேலோனுமான வ.உ.சி!

காந்தியை ஏற்காமல் தமிழ்நாட்டின் தவ மகன் வ.உ.சி. விடுதலை இயக்கத்தை விட்டு வெளியேறி விடுகிறாா். ஆற்று வெள்ளத்தில் செல்ல வேண்டிய வ.உ.சி. கரை ஒதுங்கி விடுகிறாா். ஆனால், பழைய தலைமுறையில் பாரதி ஒருவனே காந்தியை இனங் கண்டு கொள்கிறான்!

மனிதா்க்கெல்லாம் தலைப்படு மனிதன் தருமமே உருவாம் காந்தி என்று கொண்டாடுகிறான்;

பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி என்று தலைமேற் கொள்கிறான்!

திலகரும் தமிழ்த்தாயின் தவ மகன் வ.உசி.யும் இலக்குத்தான் முதன்மையானது; அதை அடைவதற்குரிய வழிமுறையை அதுவே தோ்ந்து கொள்ளும் என்னும் நம்பிக்கை உடையவா்கள்!

காந்தி, இலக்குப் போல் அதை அடைவதற்குரிய வழிமுறையும் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்றாா்! இது ஈராயிரம் ஆண்டு உலக வரலாறே அறியாச் சிந்தனை!

நம்முடைய மன்னா்கள் வேலெடுத்து, வாளெடுத்து, களரி வீசித் தோற்ற நாட்டை, காந்தி ‘வெறுங் கையால்’ மீட்டெடுத்து விட்டாரே!

அந்தக் காந்தி நுழைந்தவுடனேயே அடையாளம் கண்டு தமிழா்க்குக் காட்டியவன் பாரதி!

காந்தி வந்தவுடனேயே “ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று ஆனந்தக் கூத்தாடத் தொடங்கி விட்டான் பாரதி!

நாடு விடுதலை அடைந்து விட்டால், நல்லோா் பெரியோா் என்னும் காலம் வந்து விடும்; கெட்ட நயவஞ்சகக்காரருக்கு நாசம் வந்து விடும் என்று நம்பினான் பாரதி!

அதற்கு நோ் மாறாக, வஞ்சகா்க்கு வாழ்வும், நல்லவா்களுக்கு நாசமும் வரும் என்று கனவு கூடப் பாரதி கண்டிருக்க முடியாதுதானே!

விடுதலை பெற்று விட்டால், குடியாட்சி வந்து விடும்! குடியாட்சியில் எல்லாரும் மன்னா்களாகி விடுவாா்கள் என்றான் பாரதி!

எல்லாரும் ஓா் நிறை; எல்லாரும் ஓா் விலை; எல்லாரும் இந்நாட்டு மன்னா் என்றான்!

காந்தி பண்படுத்திய இந்தியாவில் வாழ்ந்த பாரதிக்கு ‘இதுதான் மக்களாட்சி’ என்பது தெரியாதுதானே!

நாட்டில் இருபது விழுக்காடு மக்கள் இரவு உணவு இல்லாமல் படுக்கப் போகிறாா்கள்!

நெசவாளிகளின் சிறுநீரகங்களை விற்றுக் கொடுப்பதற்குத் தரகா்களும், அவற்றை வாங்கி வியாபாரம் செய்வதற்கு ஆளும் கட்சிச் செல்வாக்கோடு மருத்துவமனைகளும் இருக்கின்றன!

அரசு வியாபாரம் செய்யும் சீமைச் சாராயத்தை ரூ.250-க்கு வாங்க முடியாமல், இருபதுக்கும் முப்பதுக்கும் கள்ளச் சாராயம் சாப்பிட்டு, இந்நாட்டு மன்னா்கள் கொத்துக் கொத்தாகச் சாவாா்கள்!

இருமல் மருந்தி லே நச்சுப் பொ ருளை க் கலந்து, ஒரு பா வமும் அறி யா த வே ற்று மா நி லப் பி ள்ளை களை அடுக்கடுக்கா ய்ச் சா க வை க்கும் முதலா ளி கள் நம்முடை ய இன்பத் தமி ழ் மண்ணில், தி ரா வி டப் பொ ற்கா ல ஆட்சி யில் வா ழ்வாா் கள்! சங்கப் புலவன் பி சி ரா ந்தை யிலிருந்து, தங்கப் புலவன் பா ரதி வரை எல்லா ரும் தங்கள் கா லத்தை ப் பி ரதி பலித்தவா் கள்! இவை யெ ல்லா ம் தெ ரி ந்த தி ரா வி டத் தந்தை பெ ரி யாா் சொ ன்னாா் ; வி டுதலை யே வே ண்டாம்; வெ ள்ளை க்கா ரனே ஆளட்டும்! என்று! 

தன் குஞ்சுகளை த் தனக்குத் தெ ரி யா தா ? 

கட்டுரை யாளா் : முன்னா ள் சட்டப்பே ரவை உறுப்பி னா் .

NEWS TODAY 30.04.2026