Sunday, November 2, 2025

நடுப்பக்கக் கட்டுரைகள் ‘நெடுந்தொடா்’ பரிதாபங்கள்! தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் குறித்து...


நடுப்பக்கக் கட்டுரைகள் ‘நெடுந்தொடா்’ பரிதாபங்கள்! தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் குறித்து...

முனைவர் பவித்ரா நந்தகுமார் Updated on:  01 நவம்பர் 2025, 3:01 am 

அண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகா், நடிகைகளும் அதன் பாா்வையாளா்களுமாக எதிரெதிரே அமா்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நோ்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வாா்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பாா்க்கும் நெடுந்தொடா் வில்லிகளைப் பாா்த்து எதிரே இருந்த பாா்வையாளா்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாா்கள்.

தொடரில் வரும் ஒரு கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு, உங்கள் வில்லத்தனத்துக்கு ஓா் அளவே இல்லையா? ஏன் இப்படி கொடுமைப்படுத்துகிறீா்கள்? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா போன்ற கேள்விக்கணைகளைத் தொடுத்து தாங்களும் கொந்தளித்தாா்கள். இதைப் பாா்க்க பாா்க்க வேடிக்கையாக இருந்தது.

வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவா்கள், ‘இந்தக் கேள்விகளை இயக்குநரிடம் கேட்காமல் என்னிடம் ஏன் கேட்கிறீா்கள்’ என நேரடியாக சொல்லாமல் அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப எதை எதையோ சொல்லி சமாளித்தாா்கள். முன்பு திரைப்படங்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை அறியாத மக்கள் அதை உண்மை என்றே கருதி அதில் வரும் வில்லன்-வில்லிகளை திரையரங்கைவிட்டு வெளியே வந்ததும், மண்ணை வாரி தூற்றிச் சபிப்பாா்கள். அன்று இருந்த தலைமுறையினா் இன்னும் மிச்சம் இருக்கிறாா்களோ என்று எண்ணும் வகையில் இருந்தது அவா்களது செயல்கள்.

ஒரு திரைப்படத்தைப் பாா்த்தால்கூட அதன் கதையம்சத்தையும் கதாபாத்திரங்களையும் பற்றி சில நாள்கள் பேசி விட்டு வேறு வேலையைப் பாா்க்கச் சென்று விடுவோம். ஆனால், இந்த நெடுந்தொடா்கள் தினமும் நம் வீட்டுக்குள் வந்து கதவைத் தட்டுகின்றன. இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, ஓா் அலைவரிசை சேவையில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு பத்து நெடுந்தொடா்களை ஒளிபரப்புகிறாா்கள். அதை நாள் முழுவதும் அமா்ந்து பாா்க்கும் மனநிலையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.

பல வீடுகளில் பெண்மணிகள் வீட்டு வேலைகள் முடிந்ததும் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி இடைவெளியே இல்லாமல் பிறபகல் 3 மணி வரை பாா்க்கின்றனா். பின்னா், மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நெடுந்தொடா்களைக் கண்டு துக்கப்படுகின்றனா். இதில் இன்னும் சில வகை பெண்கள் இடையிடையே ஒளிபரப்பப்படும் விளம்பர இடைவேளைகளைக்கூட விடுவதில்லை. அந்த நேரத்தில் வேறு வேறு அலைவரிசைகளை மாற்றி மாற்றி இன்னும் இரண்டு நெடுந்தொடா்களைக் கூடுதலாக கண்ணுற்று சாமா்த்தியமாக நேரத்தை மிச்சம் பிடிக்கின்றனா்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடரை ஒரு நாள் பாா்க்காது போனாலும் அக்கம்பக்கத்தில் இருப்பவா்களிடம் கேட்டு கதையின் போக்கை அறிந்து கொள்வா். இப்போது, நெடுந்தொடா்களைப் பாா்ப்பதற்கென்றே பல செயலிகள் வந்துவிட்டன. அதை தத்தம் அறிதிறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனா். வேலை மிகுதி, வெளியூா் பயணம் என எது எப்படி விடுபட்டாலும் ஓா் அத்தியாயத்தையும் தவறவிடாமல் தேதி வாரியாகப் பாா்த்து விடுகின்றனா்.

நாளெல்லாம் உழைத்துவிட்டு வீட்டுக்கு வந்தால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் கேளிக்கை நிகழ்ச்சிகள் மனதுக்கு ஆறுதல் தரும்; வேலை செய்த அலுப்பு தீரும்; இது 100% உண்மை. ஆனால், நாள் முழுதும் இப்படியே பாா்த்துக் கொண்டிருந்தால் என்னாவது? இப்படி தொடா்ச்சியாக நெடுந்தொடா்களைப் பாா்ப்பதால் அதற்கு அடிமையாகி தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளக்கூட மனமில்லாமல் வித்தியாசமான மனநிலையில் தவிக்கின்றனா் பலா்.

நடைப்பயிற்சி செல்லக்கூட மறந்து அல்லது சோம்பலில் தவிா்த்து விடுகின்றனா் என்பது பலரது குற்றச்சாட்டாக உள்ளது. ஏதோ ஊதியத்துக்காக செய்யும் பணிபோல, கண்ணும் கருத்துமாக நேரம் தவறாமல் பாா்க்கிறாா்கள். இது போன்றோரின் கடிகாரமே நெடுந்தொடா்கள்தான். பெண்கள் மட்டும்தான் இப்படி நெடுந்தொடா்களைப் பாா்க்கின்றனா் என்பதில்லை. வீட்டில் இருக்கும் ஆண்களும் பெருவாரியாகப் பாா்க்கின்றனா். ஆனால், ஆண்கள் இப்படி நெடுந்தொடரில் வரும் கதாபாத்திரங்களோடு ஒன்றுவதில்லை; அதுதான் வித்தியாசம்.

நம்முடைய மன ஆறுதலுக்காகவும் கேளிக்கைக்காகவும் தரமான ஒன்றிரண்டு தொடா்களைப் பாா்ப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கு அடிமையாகும் போது அல்லது அளவு கூடும்போதுதான் பாதிப்புகள் தொடா்கதையாகின்றன.

பாா்வையாளா்களைக் காட்டிலும் வில்லன்-வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவா்கள் சொன்ன வாா்த்தைகள் கூடுதல் முன்னிலை பெற்றன. அவா்களின் நீண்ட உரையாடல்கள், என் சிந்தனையை உழுது கொண்டே இருந்தன. அது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான செய்தியாகவும் இருந்தது. ஒரு நெடுந்தொடா் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முதல் ஆறு ஆண்டுகள் வரை தொடா்வதால் இயல்பாக அதிா்ந்துகூட பேசாத பண்பு நலனைக் கொண்ட தாங்கள், எப்போதும் கோபம் கொண்டவா்கள்போல், பிறா் மீது கோபப்படக் கூடிய குணாதிசயங்களைப் பெற்றவா்களாக உருமாறி இருப்பதாகச் சொன்னாா்கள்.

பல ஆண்டுகளாக அதே வில்லக் கதாபாத்திர மனநிலையில் உழல்வதால் படப்பிடிப்பு இல்லாத நாள்களில்கூட வில்லத்தனத்துடன் சிந்திக்கத் தோன்றுவதாகவும், தங்களுடைய உடல்மொழிகூட வில்லத்தனத்தில் ஊறி, முகம் எப்போதும் ‘உா்’ரென்று வைத்தபடி இருப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டாா்கள். தன்னிடம் 100 முறைக்கும்மேல் மன்னிப்பு கேட்ட ஒரு பெண்ணை மன்னிக்கத் தோன்றாமல், அதே வில்லத்தன மனநிலையில் தண்டிக்கத் தோன்றுகிறது என்று ஒருவா் சொன்னாா். ஆனாலும், அவா்களின் மீது பளிச்சிடும் புகழ் வெளிச்சம் இந்த அசௌகரியங்களை சிறியதாக்கி விடுகின்றன.

ஒரு நெடுந்தொடரில் ஓரிரு வில்லிகள்தான். ஆனால், அதன் பாா்வையாளா்களோ பல லட்சம் போ். தினம் தினம் விதவிதமான வில்லத்தனங்களைப் பாா்ப்பதால் இந்த லட்சக்கணக்கான மனங்கள் எத்தனை பெரிய ஏற்ற-இறக்கத்துக்கு உள்ளாகும் என நினைக்கவே மலைப்பாக இருந்தது. இது ஒரு நாடகம்தான் என்று சற்று தள்ளி இருந்து பாா்க்கும் மனநிலை பெண்களிடையே பெருக வேண்டும்.

தமிழ்நாட்டில் மக்கள் ஒரு நாளில் சராசரியாக ஆறரை நெடுந்தொடா்களைப் பாா்க்கின்றனா். கேரளத்தில் இது நான்கு தொடா்களாக உள்ளது. பிற்பகல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாா்ப்பதிலும் கேரளம், கா்நாடகத்தைவிட தமிழகமே முன்னிலை வகிக்கிாம்; அதிலும் பெண்களே இதில் முதலிடம் வகிக்கின்றனா் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

பெண்கள் பெரும்பான்மையாக பாா்க்கும் இந்தத் தொடா்களின் மையக்கரு பெரும்பாலும் பெண்களைச் சுற்றியே அமையும். ஆனால், இதில் வேடிக்கை என்னவெனில் இந்தத் தொடா்கள் பெண்களின் பெருமையைப் பேசுவது இல்லை. அவா்களின் இயல்பான பலவீனங்களைக் கொச்சைப்படுத்துகின்றன; பல நெடுந்தொடா்கள் கலாசார சீரழிவுக்கு வித்திடுகின்றன.

மாலை நேரங்களில் தொலைக்காட்சி அதிகமாக பாா்ப்பதால் இந்த நீல ஒளி மெலடோனின் அளவையும், உடல் கடிகாரத்தின் உணா் திறனையும் பாதிக்கிறது. நிகழ்ச்சிகளில் வரும் வன்முறையான காட்சிகள் அட்ரினலின் அமைப்பைத் தூண்டி பாா்வையாளா்களை அதிக நேரம் விழித்திருக்கச் செய்கின்றன; இது தூக்கமின்மையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

இற்றையெல்லாம் தாண்டி நம்மிடம் உள்ள விலைமதிப்பற்ற நேரங்களைத் திருடும் இதுவும் போதைப் பொருள் போலத்தான். தினமும் சராசரியாக கிட்டத்தட்ட 3 மணி நேரம்; அந்த மூன்று மணி நேரத்தில் எத்தனையோ ஆக்கபூா்வமான செயல்கள் செய்யலாம். அத்துடன் இவை நமது அன்றாட வாழ்வில் அதிகப்படியான எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமது அறிவுசாா்ந்த யோசனைகளை, உற்பத்தித் திறனை, ஆரோக்கியமான பணிகளைப் பாதிக்கின்றன.

ஒவ்வொரு முடிவின்போதும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற விறுவிறுப்புடன் முடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளதால், பாா்வையாளா்களைப் பதைபதைப்புடனேயே வைத்திருக்கிறாா்கள். வீட்டுக்கு உறவினா் வந்தால்கூட தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் நெடுந்தொடா்களை நிறுத்துவதில்லை; இது உறவினா்களுடனான இணக்கமான சூழலைத் தவிா்க்கிறது.

ஆறுதல் தரும் வகையில் இளைய தலைமுறையினரிடம் நெடுந்தொடா் மோகம் இல்லை. ஆனால், அந்த இடத்தை ‘வெப் சீரிஸ்’ பிடித்துள்ளது. இது 1990-களின் இறுதியில் மேற்கத்திய நாடுகளில் வோ்விடத் தொடங்கி, தற்போது இந்திய ரசிகா்களிடையே பெரும் கவனத்தை ஈா்த்துள்ளது. ஓடிடியில் வெளியாகும் இவை, கவனிக்க வைக்கும் கதை, பரபரப்பான திரைக்களம் என ரசிகா்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தந்தாலும் ‘வெப் சீரிஸில்’ தணிக்கைக்கு உள்ளாகாத காட்சிகள் இடம்பெறுகின்றன. உலகளாவிய ஒளிபரப்பு என்பதால் பெரிதாகக் கட்டுப்பாடுகள் இல்லை.

உண்ணும் உணவு எப்படி நம் ஆரோக்கியத்துக்கு வித்திடுமோ, அதுபோல, நாம் மணிக்கணக்கில் பாா்க்கும் காட்சிகள் நம் மனநலனுக்கான காரணிகளாக அமைகின்றன. அதனால், எதைத் தோ்ந்தெடுக்கிறோம் என்பதில் கவனம் தேவை!

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

Record high: K’taka sees 120% surge in NIOS enrolment

Record high: K’taka sees 120% surge in NIOS enrolment



 SruthySusan.Ullas@timesofindia.com 02.11.2025

Bengaluru : The National Institute of Open Schooling (NIOS) has recorded an unprecedented surge in enrolments for class 10 and 12 exams in Karnataka, with numbers increasing by 120% compared to last year. For the April 2025-26 session, 10,100 students have registered compared to 4,715 during 2024- 25. Historically, student participation has been lower, with 4,477 candidates in 2023-24 and 4,369 in 2022-23. 

During the Covid-affected year of 2021-22, as many as 5,566 students appeared for the exams. NIOS, which offers education up to the PU level through open and distance learning, conducts examinations twice a year—April and Oct. The last date for April exam applications was in Sept. According to NIOS officials, the sharp rise in enrollments this year is largely due to strategic collaborations with govt departments through several memorandums of understanding (MoUs). 

Swaminathan V, regional director of Bengaluru, said, “We have signed three MoUs with the Karnataka govt. One is with the department of minority welfare. Under this, over 5,172 students from madrasas have registered for the exams.” Jeelani H Mokashi, director of the department of minority welfare, added, “This is a 1.5-year programme conducted in over 100 madrasas across the state, providing training in English, Kannada, science, and maths alongside religious education. These students will now appear for the Class 10 exams in April.” Another MoU, with the rural development panchayati raj department, aims to leverage revamped gram panchayat libraries to support NIOS learners. “Students can choose six subjects in Kannada medium at the secondary level. Library staff will be trained to guide learners and provide hard copies of NIOS study materials,” said Swaminathan. Additionally, NIOS has partnered with Samagra Shikshana Karnataka to facilitate enrollment of out-ofschool children. 

The programme ensures that selected students receive structured education, including practical classes, examinations, and personnel contact programmes (PCP) conducted by qualified teachers at designated study centres. These initiatives reflect NIOS’s efforts to expand access to education for diverse student groups, particularly marginalized communities and those outside the formal schooling system. With the support of govt departments and targeted outreach programmes, NIOS is making distance learning a viable and inclusive option for students statewide. 02/11/2025, 08:12 Times of India ePaper bangalore - Read Toda

Thursday, October 30, 2025

NEWS TODAY 30.10.2025

 


























செயற்கை நுண்ணறிவு - இருமுனைக் கத்தி!

 செயற்கை நுண்ணறிவு - இருமுனைக் கத்தி! 

மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவை முழுமையாகச் சாராமல், மனிதநேய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.

 தினமணி செய்திச் சேவை Published on:   Updated on:  30 அக்டோபர் 2025, 4:43 am 3 min read 

எஸ். எஸ். ஜவஹர் 30.10.2025

மனித நுண்ணறிவு கடந்த நூற்றாண்டில் பல அதிசயங்களை உருவாக்கியது. ஆனால், இப்போது, மனிதனே உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அந்த மனித நுண்ணறிவுக்கே சவால் விடும் நிலையை அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மருத்துவ உலகில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

ஆனால், அது லாபம் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வணிகமாக மாறும்போது, அதன் அதீதமான நன்மைகள் சாதாரண மக்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வது மிகப் பெரிய சவாலாக அமையும்.

மருத்துவத் துறையில் நோயைக் கண்டறிதல், புதிய மருந்துகள் உருவாக்கம், துல்லியமான மற்றும் சரியான மருத்துவக் கண்காணிப்பு, நோயாளிகள் பராமரிப்பு என எல்லாத் துறைகளிலும் இதன் தடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஒரு எக்ஸ் ரே அல்லது எம்.ஆர்.ஐ. படத்தில் மனிதக் கண்களால் காண முடியாத நுண்ணிய மாற்றங்களை ஒரு செயற்கை நுண்ணறிவு படிமுறை (அல்காரிதம்) கண்டறிய முடியும்.

இந்த முறையில் மனித தவறுகள் தவிர்க்கப்படுவதோடு, விரைவான தீர்வுகளுக்கும் வழிவகுக்க முடியும். இதனால், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை ஆரம்பத்திலேயே துல்லியமாக அடையாளம் காண முடியும்.

நோயாளியின் மரபணு, வாழ்க்கை முறை, மருத்துவ வரலாறு போன்றவற்றை சில விநாடிகளில் அலசி ஆராய்ந்து, அவருக்கென தனித்துவமான சிகிச்சை முறையைத் தீர்மானிக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. இதுவே "தனிப்பட்ட மருத்துவம்' என்ற புதிய பரிமாணத்தை மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைத் துறையில் உருவாக்கியுள்ளது.

மருந்து ஆய்வகங்களிலும் இதுவரை கண்டிராத புரட்சியை இது உருவாக்கத் தொடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மூலக்கூறுகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்து சாத்தியமான மருந்துகளை அடையாளம் காணும் திறன் இதற்குண்டு; இதனால், மருந்துக் கண்டுபிடிப்பு ஆண்டுகள் அல்ல, மாதங்களில் முடிகிற நிலை உருவாகி வருவது கண்கூடு. எனவே, குறைந்த விலையில் சிறந்த மருந்துகள் உருவாகும் வாய்ப்பும் உலக அளவில் அதிகரித்து வருகிறது.

இன்றைய அளவில் மருத்துவமனைகளின் நிர்வாகச் சுமை அதிகமாக உள்ளது. இந்த நிலையை மாற்றி மருத்துவர்கள் நோயாளிகளுடன் நேரடியாகச் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது. வயது முதிர்ந்தோரின் மக்கள்தொகை தொடந்து அதிகரித்துவரும் சூழலில் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பெரும் உதவியாக இருக்கும்.

தொலைநிலை மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்பு எளிதில் சாத்தியமாவது மனிதகுல வரப்பிரசாதம். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மூலமாக மருத்துவ சிகிச்சை மற்றும் உதவியை நகரங்களின் எல்லைகளைத் தாண்டி கிராமங்களுக்கும், ஏன் வீடுகளுக்கும் கொண்டு சேர்க்க முடியும்.

இந்தியாவில் மருத்துவக் காப்பீடு மற்றும் அரசு மருத்துவ நல்வாழ்வுத் திட்டங்கள் ஆயுஷ்மான் பாரத், தமிழ்நாடு மருத்துவ நலவாழ்வு திட்டம் போன்றவை மக்களின் நல்வாழ்வு பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. செயற்கை நுண்ணறிவை இவற்றில் பயன்படுத்தும்போது இந்தத் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யவும் செயல்திறனை அதிகரிக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

நோயாளிகளின் மருத்துவ வரலாறு, மருந்து உபயோக நடைமுறை, மற்றும் ஆபத்து மதிப்பீட்டுத் தரவுகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அமைப்புகள் துல்லியமான தீர்மானங்களை எடுத்து விடும். இதன்மூலம் போலி காப்பீட்டு கோரிக்கைகள் குறையவும், உண்மையான பயனாளிகளுக்கு விரைவான நிதி உதவி சென்றடையவும் வழிவகுக்கும்.

செயற்கை நுண்ணறிவு ஊடாக மருத்துவ வசதிகளைத் திட்டமிடும் அரசின் திறனும் மேம்படும். எந்த மாவட்டத்தில் அல்லது எந்தப் பகுதியில் எத்தகைய நோய் அதிகம் பரவுகிறது, எந்த இடங்களில் மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவர்கள் அல்லது எத்தகைய மருந்துகள் கையிருப்பு தேவைப்படுகின்றன போன்ற விவரங்களை முன்கூட்டியே கணிக்கும் திறனுடன் அரசுத் திட்டங்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட முடியும். இதனால், மருத்துவ சிகிச்சை செலவுகள் மட்டுமின்றி உயிரிழப்புகள்கூட குறையும்.

செயற்கை நுண்ணறிவின் பலம் மனிதநேய நோக்குடன் இணைந்தால்தான் அது உண்மையான மருத்துவ விடுதலைப் புரட்சியாக மாறும். ஆனால், இதன் மறுபக்கம் மிகவும் கூர்மையானது. தனி நபரின் மருத்துவத் தரவுகள் என்பது மிக ரகசியமான தனிப்பட்ட சொத்தாகும். அவரது அனுமதியின்றி அந்தத் தரவுகளை மருத்துவமனைகளோ அல்லது வேறு வணிக நிறுவனங்களோ லாப நோக்கில் பயன்படுத்தும் ஆபத்தை மறுக்க முடியாது.

செயற்கை நுண்ணறிவு படிமுறைகள் (அல்காரிதம்) அவற்றுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகளை மட்டுமே சார்ந்திருப்பதால், சமூக சார்புகள் அதில் ஊடுருவும் வாய்ப்பும் ஆபத்தும் அதிகம். இது சமத்துவமின்மையை உருவாக்கும் அல்லது இருப்பதை அதிகரிக்கும்.

விலை உயர்ந்த கருவிகள் மற்றும் சிகிச்சை முறைகள் மருத்துவ சேவை பொருளாதார ரீதியில் வசதி உள்ளவர்களுக்கே கிடைக்கும் என்ற நிலை உருவாகி விடும். அதேபோல், கணினி மற்றும் மென்பொருள் பயன்பாடுகளைக் கையாளும் திறன் படைத்தோர் மட்டும் பயன் அடைய முடியும் என்ற நிலை உருவாகி சமூகத்தில் உள்ள எண்மப் பிளவை மேலும் அதிகரித்து விடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளில் மிகப் பெரிய சிக்கல் பொறுப்புக்கூறல் குறித்ததுதான்.

ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாக நோயைக் கண்டறிந்தாலோ அல்லது தவறான சிகிச்சை அளித்துவிட்டாலோ அந்த மருத்துவ சேவை குறைபாட்டுக்கும், அதன் விளைவுகளுக்கும் யார் பொறுப்பு ஏற்பது? மருத்துவரா, மருத்துவமனையா அல்லது மென்பொருள் நிறுவனமா? இந்த பிளாக் பாக்ஸ் சிக்கல் நீதியியல் உலகையே குழப்புகிறது.

மேலும், மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவின் மீது முழுமையாகச் சார்ந்தால், அவர்களின் தீர்மானிக்கும் தனித் திறனும் மருத்துவ நுண்ணறிவும் மங்கும் அபாயம் உண்டு. அதே சமயம், லாப நோக்கத்தை மட்டுமே கொண்ட சில நிறுவனங்கள் தேவையற்ற சோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள் போன்றவற்றை செயற்கை நுண்ணறிவின் பெயரில் பரிந்துரைத்து மக்களைச் சுரண்டும் ஆபத்தும் மறுக்க முடியாதது. இதை சமநிலைப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் மிக முக்கியமான பொறுப்பாகும்.

தனிநபர் மருத்துவத் தரவுகளைப் பாதுகாக்கும் வலுவான சட்டங்கள் அவசியம். செயற்கை நுண்ணறிவு எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பது குறித்த வெளிப்படைத்தன்மை கட்டாயமாக்கப்பட வேண்டும். தவறுகள் ஏற்பட்டால் யார் பொறுப்பு என வரையறுக்கும் சட்ட அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பல்வேறு சமூகப் பிரிவினரிடமும் பரிசோதிக்கப்பட்டு, சார்பற்றவை என்ற சான்று பெற்ற மாதிரிகளே மருத்துவத் துறையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவை முழுமையாகச் சாராமல், மனிதநேய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். இறுதி முடிவை எப்போதும் மனித மருத்துவரே எடுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு உருவாக்குநர்களும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். லாப நோக்கத்தைக் கடந்து, பொதுநல நோக்கத்தையும் நெறிமுறையையும் இணைத்த வடிவமைப்புகள் தேவை. மேலும், மலிவு விலையில் பலருக்கும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு எவ்வாறு அவர்களின் தரவுகளைப் பயன்படுத்துகிறது என்பதை அறியும் உரிமை நோயாளிகளுக்கும் இருக்க வேண்டும். மருத்துவம் பயில்பவர்களுக்கு மருத்துவக் கல்வியோடு எண்மக் கல்வியும் சேர்த்து வழங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதற்கு மருத்துவக் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத் திட்டங்களைச் சேர்க்க வேண்டியது அவசியம். இது தொடர்பாக, மருத்துவக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

மக்களும் தங்கள் தரவுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவர்களின் உரிமை காக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு தரமான மருத்துவ சேவையை ஜனநாயகப்படுத்தும் திறனைக் கொண்டது. ஆனால், அதன் பயன் சிலருக்கு மட்டும் சுருங்கிவிடாமல், மக்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும். அதற்கு வலுவான சட்டங்கள், தெளிவான நெறிமுறைகள், சரியான மனித மேற்பார்வை, சமூகப் பொறுப்புணர்வு ஆகியவை இணைந்திருக்க வேண்டும்.

இறுதியில், செயற்கை நுண்ணறிவு என்பது ஓர் இருமுனைக் கத்தி; சரியான கைகளில் இருந்தால் அது உயிரைக் காப்பாற்றும் கருவி; தவறான கைகளில் விழுந்தால் அது நியாயத்தையும் நம்பிக்கையையும் காயப்படுத்தும் ஆயுதமாக மாறும்.தொழில்நுட்பத்துக்கும் மனிதநேயத்துக்கும் இடையே சமநிலையைப் பேணும் நாடுகள்தான் எதிர்கால மருத்துவத்தின் உண்மையான தலைவர்கள்!

கட்டுரையாளர்:

ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


Wednesday, October 29, 2025

NEWS TODAY 29.10.2025
























பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்... அந்தக் காலத்தில்

பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்... அந்தக் காலத்தில் திமுகவின் பொதுக்கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும்.

 தினமணி செய்திச் சேவை Published  Updated on:  29 அக்டோபர் 2025, 3:00 am 

 முனைவர் கோ.விசுவநாதன்

அந்தக் காலத்தில் திமுகவின் பொதுக்கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.

அப்போதெல்லாம் திமுகவின் பொதுக்கூட்டம் இரண்டு வகையாக இருக்கும். சாதாரண பொதுக்கூட்டம், சிறப்புப் பொதுக்கூட்டம் என்று வகைப்படுத்தப்படும். சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்ற பெரிய தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். சிறப்புக் கூட்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஆண்களுக்கு ஒரு ரூபாய்; பெண்களுக்கு எட்டணா. அந்தக் காலத்தில் பெண்களையும் அரசியல் கூட்டங்களுக்கு அழைக்கும் அளவுக்கு திராவிட கட்சிகளின் மேடைப்பேச்சு இருந்தது. அவர்கள் பெண்களுக்காகவும் பேசினார்கள். தினந்தோறும் அண்ணாவும் மூத்த தலைவர்களும் ஏதாவது பொதுக்கூட்டங்களில் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.

இப்போது பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும். அவர்கள் உட்காருவதற்கு இருக்கைகள், விளம்பர விளக்குகள், இதுதவிர கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவு மற்றும் இதர வசதிகளை கூட்டத்தை நடத்துபவர் செய்துதர வேண்டும். இதேபோல், கூட்டத்துக்கு வருபவர்களுக்கு வாகன வசதியும் செய்து தரவேண்டும். அந்தக் காலத்தில் நாங்கள் இந்த வசதி எல்லாம் செய்து தரவில்லை. அப்போது, கூட்டத்துக்கு வந்தவர்கள் தானாக வந்தவர்கள்தான். பொதுக்கூட்டத்துக்கு வருபவர்கள் தரையில்தான் உட்காருவார்கள்.

அண்ணா கட்சி நிகழ்ச்சிக்குச் செல்லும் போதெல்லாம் மாவட்டச் செயலாளர் முதல் கிளைக் கழகச் செயலாளர்வரை எல்லோர் பெயரும் சொல்லி "அவர்களே' என்று அழைத்து அதன்பின்தான் தமது உரையைத் தொடங்குவார். இதனால், அந்தக் கட்சித் தொண்டர்களுக்கு உள்ளூரில் மதிப்பு மரியாதை கூடியது. சில பெயர் விடுபட்டுப் போனால் தமது உரையின் நடுவில் அவர்கள் பெயரை மறக்காமல் குறிப்பிடுவார். அண்ணாவின் இந்த அரசியல்பாணி பின்னாளில் எல்லா கட்சியினராலும் பின்பற்றப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.

கட்சித் தொண்டர்களை "தம்பிகளே' என்றுதான் அழைப்பார் அண்ணா. கட்சியில் குடும்ப பாசத்தை புகுத்திய புதுமையாளர் அண்ணா. அதன் பிறகு கருணாநிதி "உடன்பிறப்பே' என்று அழைத்தார். எம்ஜிஆர் "என் ரத்தத்தின் ரத்தமே' என்று அழைத்தார். இவையெல்லாம் தொண்டர்களிடையே இடைவெளி இல்லா நெருக்கத்தை அதிகரித்தது.

1965-இல் குடியாத்தம் வந்தார் அண்ணா. குடியாத்தத்தில் சிறப்புக் கூட்டம் திமுக சார்பில் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அண்ணா முன்னிலையில் நான் பத்து நிமிஷம் பேசினேன். எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை இரண்டிலும் ஒரு திருப்புமுனையாக அன்றைய எனது பேச்சு அமைந்தது என்பது எனக்கு பின்னாளில்தான் தெரிந்தது. அன்றைய பொதுக்கூட்டத்தில் நான் பேசிய பேச்சுதான் நாடாளுமன்றத்துக்குச் செல்ல முக்கிய காரணமாக அமைந்தது.

குடியாத்தம் கூட்டம் முடிந்து சில வாரங்களுக்குப் பின்பு மதுரைக்குப் போனார் அண்ணா. பொதுக்கூட்டத்தில் பேசி முடித்து கட்சிப் பிரமுகர்கள் வீட்டில் இரவு உணவுக்குப் பிறகு, கட்சி வளர்ச்சி குறித்து பேசிக் கொண்டிருந்தார். குடியாத்தம் பொதுக்கூட்டத்தில் ஒரு பையன் பேசினான்; வக்கீலுக்கு படித்திருக்கிறான்; அருமையாக பேசினான் என்று அங்கு இருந்தவர்களிடம் சொன்னார் அண்ணா.

அப்போது, அங்கிருந்த சட்டக் கல்லூரியில் என்னுடன் படித்த மைனர் மோசஸ் "அவன் பெயர் விசுவநாதன். நானும் அவனும் சட்டக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம்'. மாணவர் கழகத்தில் செயலாளராக இருந்தான் என்று சொன்னார்.

அப்போது, அண்ணா அவனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பலாம் என்று சொன்னார்.

இதை மைனர் மோசஸ் சில தினங்களுக்குப் பிறகு என்னிடம் சொல்லி மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டார். இப்படித்தான் நான் ஒரு பொதுக்கூட்டம் மூலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டேன்.

அந்தக் காலத்தில் பொதுக்கூட்டம் நடக்கும் போது, நடுவில் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் "துண்டு ஏந்தி தொண்டர்கள் வருகிறார்கள், உங்களால் ஆன நிதி உதவி செய்யுங்கள்' என்று அறிவிப்பு செய்வார். பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்கள் 10 பைசா, நாலணா, 50 பைசா என்று அவர்களால் முடிந்ததைத் தருவார்கள். அதைவைத்து கூட்டச் செலவுகளைச் சமாளிப்போம். இதேபோல், கட்சி பிரசார நாடகங்களும் போடுவது உண்டு. கருணாநிதி, இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கட்சி பிரசார நாடகங்களில் நடித்திருக்கிறார்கள்.

1967 தேர்தலின் கதாநாயகன் பேரறிஞர் அண்ணா. கட்சி தொடங்கிய சில ஆண்டுகளில் 1977-இல் எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். இவை இரண்டுமே அரசியல் வரலாறுதான். இப்போது 1967 தேர்தல் மற்றும் 1977 தேர்தல் இரண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.

1967 தேர்தல் தேசியக் கட்சியான காங்கிரஸ் சகாப்தத்தை தமிழ்நாட்டில் முடித்துவைத்தது. அன்றைய திமுக வேட்பாளர்கள் எல்லோருமே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். ஆனால், படித்தவர்கள். இளைஞர்கள், படித்தவர்கள், சாமானியர்களை முதன்முதலில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் அனுப்பிய பெருமை அண்ணாவையே சேரும்.

இந்திய அரசியலில் முதல்முறையாக ஆளுங்கட்சிக்கு எதிராக மிகப் பெரிய பலம்வாய்ந்த கூட்டணியை உருவாக்கினார் அண்ணா. எதிரும் புதிருமாக இருந்த அரசியல் தலைவர்களை ஒன்று சேர்ப்பதில் வெற்றி பெற்றார்அண்ணா. சுதந்திராக் கட்சியும், பொதுவுடமைக் கட்சியும் ஒரே கூட்டணியில் வந்ததே அண்ணாவின் அரசியல் சாதுரியத்துக்குக் கிடைத்த வெற்றி. அரசியல் தீண்டாமை முடிவுக்கு வந்தது; வெற்றிக் கூட்டணி உதயமானது.

திமுகவின் தேர்தல் பிரசாரம் ஆடம்பரம் இன்றி இருந்தது. மொத்த நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல் செலவுக்கு என்று பதினோரு லட்சம் ரூபாய் நிதி திரட்டி செலவு செய்தது. தேர்தல் செலவுக்கு ஒவ்வொரு வேட்பாளருக்கும் நாலாயிரம் ரூபாய் தந்தார் அண்ணா. அதுகூட காசோலையாக; அந்த தேர்தல் மாதிரி சிக்கனமான தேர்தல் வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை.

வேட்பாளர்களிடம் கட்சிக்காரர்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள் வேட்பாளர்களிடம் எதிர்பார்த்தது கொடி, தோரணம், சுவரொட்டி; இவற்றுடன் ஓட்டு கேட்க ஊருக்கு வர வேண்டும் இவ்வளவுதான்.

அதற்கு முன்பெல்லாம் காங்கிரஸ்காரர்கள் வீடுவீடாக ஓட்டுகேட்கும் வழக்கமெல்லாம் இல்லை. முக்கிய பிரமுகர்கள், மிட்டாமிராசுதாரர்கள், மணியக்காரர்கள், நாட்டாண்மை போன்றவர்களைச் சந்தித்துப் பேசி அந்தப் பகுதி மக்களை ஓட்டுபோட வைக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிடுவார்கள். அண்ணா அதை அப்படியே அடியோடு மாற்றினார். ஒவ்வொரு திமுக வேட்பாளரும் ஓட்டு கேட்க ஒவ்வொரு வீட்டு வாசல்படியும் ஏறி இறங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுக வேட்பாளர்களும் அப்படியே செய்தார்கள். இது பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அண்ணா யாரையும் அவதூறாகப் பேசமாட்டார். எனவே, தம்பிமார்களும் அப்படியே இருந்தார்கள். இதுபோதாது என்று எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவம். இவை எல்லாம் சேர்த்து தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் சுனாமியை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் நான் உட்பட 25 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இதை உலக சாதனை என்று பாராட்டினார் ராஜாஜி.

காமராஜர் தனது சொந்த ஊரான விருதுநகரில் கல்லூரி மாணவர் பெ.சீனிவாசனிடம் தோற்றுப் போனார். மத்திய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதனிடம் தோற்றுப் போனார். மத்திய அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் பதவியை ராஜிநாமா செய்து வேட்பாளராக நிறுத்தப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரத்திடம் தோற்றுப் போனார்.

1977 தேர்தல் அதிமுக வெற்றிக்கு முன்பு திண்டுக்கல் இடைத்தேர்தல் வரலாறு தெரிந்து கொள்வது அவசியம். அண்ணா திமுக என்ற புதிய கட்சிக்கு வைக்கப்பட்ட சோதனைதான் திண்டுக்கல் இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், பழைய காங்கிரஸ், இந்தக் கட்சிகளுடன் புதிதாக தொடங்கப்பட்ட அதிமுகவும் களத்தில்.

அதிமுகவுக்கு ஓட்டு கேட்டவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள், அவர்களுடன் சிவப்பு துண்டு போட்ட சில கம்யூனிஸ்ட் தோழர்கள். அந்தத் தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். திண்டுக்கல் தேர்தல் எம்ஜிஆருக்கும், அண்ணா திமுகவுக்கும் மக்கள் தந்த அங்கீகாரம்.

1977-ஆம் ஆண்டு தேர்தல் என்பது ஒரு வரலாறு. எம்ஜிஆர் தனிக் கட்சி தொடங்கிய பின்பு நடந்த தேர்தல்.

எம்ஜிஆரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்த போது, எதிர்க்கட்சிகள் கேட்ட மிக முக்கியமான கேள்வி எம்ஜிஆருக்கு பொருளாதாரம் தெரியுமா? பொருளாதாரம் தெரியாதவர் எப்படி ஆட்சி நடத்த முடியும்? அரசியலில் வேஷம் போட முடியாது. திரைப்படம் என்பது நடிப்பு, அரசியல் என்பது நிஜம். ஆட்சி செய்வது என்பது அவ்வளவு எளிதான பணி அல்ல என்றெல்லாம் எம்ஜிஆரை எதிர்த்து பிரசாரம் செய்தார்கள்.

ஆனாலும், எம்ஜிஆரின் கூட்டங்களுக்கு மக்கள் பெருந்திரளாக கூடினார்கள். நீங்கள் எனக்கு ஆட்சி செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள்' என்று மட்டும்தான் மக்கள் மன்றத்திடம் எம்ஜிஆர் கோரிக்கை வைத்தார்.

அவர் அரசியலில் வெற்றி பெற்றதற்கு அவர் ஒரு திரைப்பட நடிகர் என்பது மட்டும் காரணம் அல்ல. அவரது அர்ப்பணிப்புடன்கூடிய உழைப்பு. விமர்சனங்களையும் தாண்டி அரசியலில் உழைத்தவர் அவர். அண்ணாவும், எம்ஜிஆரும் அரசியல் மாற்றங்களின் நாயகர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்:

வேந்தர், விஐடி பல்கலைக்கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


Design your retirement, it’s tougher once you exit office

Design your retirement, it’s tougher once you exit office 

Beyond Hanging Up Your Boots: Consider Entrepreneurship Or Learn A New Skill; 

Network Early If You Want To Continue Working 

By Prabir Jha 29.10.2025 TIMES OF INDIA AHAMEDABAD

When we begin our careers, retirement is a distant, almost unimaginable milestone. And yet, inevitably, that day arrives for everyone. Over the next five years, an entire generation will retire, a moment that invites both reflection and reinvention. And yet, not much is done or written about this career reality. It is a moment with a deep sense of redundancy. 

People worry about their loss of identity, and many are unable to imagine a different life as most have lived just one cookie-cutter way. But it can still be life with purpose. And possibly one that is happier. Here are some pointers on how to deal with what comes next: 

Start early In the corporate world, with turbulence all around, that date could dramatically move closer. Start working on post-retirement pursuits early, if you still want the classical work. Maybe there is some post retirement sinecure you are able to wrangle within your organisation or beyond. It is not easy for many executives to let go so this makes them buy time but does not change the end goal post. Or you can offer to do part-time work for firms who will value your skills and experience. 

Network early enough. It gets tougher once you demit office. Think entrepreneurial pursuits Entrepreneurial creativity is not a function of age. Those who are creative, and now free of both family and official encumbrances, could initiate a completely different venture. Give wings to a dream which you never could pursue thus far. Remember, some of the biggest brands today were started by people after their retirement. It will help you stay alert, be purposeful and help grow with a renewed passion and purpose. Live experientially Possibly with family responsibilities behind, one could focus on securing experiences one never did yet. 

It could be learning a new musical instrument, writing a book, travelling places or feeding a hobby. So many people complain they have so much time to kill. This is because their thinking is linear. Think wide and you will discover a range of things you can do

Give back to the community We all got so much from the world we live in.

After retirement, it is time to clear that debt. Join a social cause that you relate with. Help guide, mentor, advise, inspire a demographic slice that needs your time, interest and activism. You will discover it is more gratifying to make a difference to lives of people. And who knows, if politics is a way of doing this, you can always explore that route of public service. 

Finally, put your feet up A ‘susegad’ life is a reward well-earned and it should come without guilt. Let go of the crutches you once mistook for your identity, and rediscover the person behind the professional. Embrace laughter, ease, and unhurried days. After all, what did you work so hard for if not this? 

A comfortable, peaceful retirement free from the frenzy of a fast-paced career may well be the most fitting reward for a life fully lived. Why should that ever be seen as a lesser choice? There is no one magic potion for a post-retirement existence. Neither work nor retirement gives you everything but each stage offers its own gifts. 

Think through all these options and their attendant consequences. Make your pick and be at peace with that choice. 


(Prabir Jha is the founder & CEO, Prabir Jha People Advisory)

NEWS TODAY 30.04.2026