Friday, February 10, 2017

மருந்து, மாத்திரை இல்லாமல் பரிதவித்த எம்.எல்.ஏ.,க்கள்!

DINAMALAR

மருந்து, மாத்திரைகளை எடுத்துச் செல்லாததால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலர், இரவில் துாங்க முடியாமல் தவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க.,வில், சசிகலாவுக்கு ஆதரவு தரும், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாரும் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

 எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு என அழைத்து விட்டு, திடீரென கடத்தப்பட்டதால், தங்களுக்கு தேவையான உடை, மருந்து, மாத்திரைகளை, அவர்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனாலும், சசிகலா உத்தரவையும், அவரது குடும்பத்தினர் கெடுபிடியையும், அவர்களால் மீற முடியவில்லை. அவர்கள் சொல்படி நடந்து கொண்டனர். இருப்பினும், இரவில் துாங்க முடியாமல் தவித்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த, எம்.எல்.ஏ., ஒருவருக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காய்ச்சல் என, பல பாதிப்புகள் இருந்துள்ளன. அவரும், சசிகலா உத்தரவை தட்ட முடியாமல், பஸ்சில் ஏறி விட்டார். 

போன இடத்தில் தான், அவருக்கு உடல் நல பிரச்னை வந்துள்ளது. மொபைல் போன்களை, 'ஆப்' செய்து விட்டதால், யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நீண்ட முயற்சிக்கு பின், சென்னையில் தங்கியுள்ள தன் உறவினருடன் பேச, அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, நேற்று காலையில், மாத்திரிரைகள் எடுத்து வரச் செய்து, அவர் உட்கொண்டுள்ளார். இதேபோன்று, பெண், எம்.எல்.ஏ.,க்களும் பாதிக்கப்பட்டதாக, அந்த எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...