Tuesday, February 7, 2017


கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் : சசிகலாவை எதிர்த்த ஓபிஎஸ் #OPSVsSasikala


தற்போது அங்கு மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டுவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் பன்னீர் செல்வத்தை சூழ்ந்து நின்றுகொண்டு இருக்கிறார்கள். பத்திரிகையாளர்களிடம் பேச அவர் கண்ணீரைத் துடைத்தபடியே ஆயுத்தமாகிக் கொண்டு இருக்கிறார்.

அவர் கூறியதாவது, "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆன்மாவின் உந்து சக்தியால் தான் நான் இங்கு வந்தேன். மாண்புமிகு அம்மா அவர்கள் நோய்வாய்ப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவரது உடல்நிலை, மிகவும் கிட்டத்தட்ட மோசமான நிலையை எட்டியபோது, என்னிடம் வந்து 'மாண்புமிகு அம்மாவின் நிலை மோசமாக இருக்கிறது,கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும்' என்று சொன்னார்கள்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது ஏன் மாற்று ஏற்பாடு என்றேன் அசாதாரண சூழ்நிலையில், ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்கள்.

கிட்டத்தட்ட அரைமணி நேரம், நான் அழுது புலம்பினேன். முதல்வர், பொது செயலாளர் என இரு பொறுப்பையும் என்னை ஏற்று நடத்த சொன்னார்கள். மாண்புமிகு அவைத் தலைவர் மதுசூதனனை பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என சொன்னார்கள். என்னை முதல்வராக இருக்க சொன்னார்கள்.

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திவாகரன் போன்றோர். சசிகலாவை பொதுசெயலாளராக ஆக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். நான் சசிகலாவிடம் இதை சென்று சொன்னபோது, அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

வர்தா புயலில் நான் தீவிரமாக வேலை செய்தது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதால் டெல்லியில் முகாமிட்டேன்.அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், பிரதமரிடம் சிறப்பு சட்டம் வேண்டும் என்றேன். புதிய சட்டம் உருவாக்கினோம் மத்திய அரசின் ஒப்புதல் வாங்கினோம் .




நான் செய்த நற்பணிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. உதயகுமார் பேசியது நீதிக்கு புறம்பானது என சசிகலாவிடம் முறையிட்டேன்.

நான் முதல்வராக இருக்கும் போது, உதயகுமார் சசிகலா முதல்வராக வேண்டும் என்று சொன்னார். உதயகுமார் பேசியது நீதிக்கு புறம்பானது என சசிகலாவிடம் முறையிட்டேன். உதயகுமாரைக் கூப்பிட்டு கண்டித்துவிட்டோம் என்றார்கள்.ஆனால், அவர் மதுரைக்கு சென்றும், இதையே தான் பேசினார். ஒட்டுமொத்த நாட்டு மக்களும், நம்மீது வருத்ததில் இருக்கிறார்கள். தொண்டர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.என்னை ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள் என்றேன். என்னை தனிப்பட்ட ரீதியில் அவமானப்படுத்தினால், நான் அதை ஏற்றுக்கொள்வேன். பொது வாழ்விற்கு வந்தால் சிலவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என அமைதியாக இருந்தேன்.


நான் பிரதமரை சந்தித்தால் தம்பிதுரை தனியாக எம்பிகளை சென்று பிரதமரை சந்திக்கிறார். இருவரும் ஒரே கோரிக்கைக்கு வந்ததால், எனக்கு அனுமதி கொடுத்தார்கள்.

கழகத்தின் பொது செயலாளர் தான் முதல்வர் ஆக வேண்டும் என பலர் பேசினார்கள். என்னுடைய அமைச்சரவையில் இருக்கும் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் எனக்கு எதிராக பேசினார்! செல்லூர் ராஜூவும் செங்கோட்டயனும் சொல்கிறார்.நான் மூத்த அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.என்னை அவமானப்படுத்துவதாக உணர்ந்தேன். வேண்டாம் என்று சொன்ன என்னை ஏன் இப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறீர்கள் என்றேன்.

என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். கழகத்தின் கட்டுப்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதால் ராஜினாமா செய்தேன். மக்கள் விரும்பினால் , ராஜினாமாவைத் திரும்ப பெறுவேன். மக்கள் நம்பிக்கையை பெற்ற ஒருவர் முதல்வராக வேண்டும்" என்று கூறி கிளம்பினார்




மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். ஜெ., சமாதி முன் அமர்ந்த அவர் கண்களை மூடி சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மவுன அஞ்சலி செலுத்தினார். ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பியதும் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா முதல்வராக பதவியேற்க இருக்கும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் இந்த திடீர் மவுன அஞ்சலி கவனிக்க வைத்திருக்கிறது.

படங்கள் : அசோக்

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...