Saturday, August 11, 2018

திருப்பதிக்கு தமிழகத்தில் 6 டன் பூமாலை

Added : ஆக 11, 2018 00:49

திருச்செங்கோடு:திருப்பதிக்கு, 6 டன் பூக்களை, மாலைகளாக தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

ஆந்திரா மாநிலம், திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், வரும், 15ல் கும்பாபிஷேகம் நடக்கஉள்ளது.இதற்காக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயண நித்திய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில், 6 டன் பூக்களை, மாலைகளாக தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இது குறித்து, டிரஸ்ட் நிர்வாகிகள் கூறியதாவது:ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், ஏகாதசி உள்ளிட்ட விழாக்களுக்கு திருச்செங்கோட்டில் இருந்து மலர்களை மாலைகளாக தொடுத்து அனுப்பி வருகிறோம்.கும்பாபிஷேகத்துக்கு, சம்பங்கி, முல்லை, ரோஜா, தாமரை உள்ளிட்ட, 6 டன் பூக்களை பயன்படுத்தியுள்ளோம். மேலும், பூஜைக்கு தேவையான பொருட்களும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. 500க்கும் மேற்பட்ட பெண்கள், பூக்களை மாலைகளாக தொடுத்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...