Saturday, August 11, 2018

லாலுவின், 'ஜாமின்' நீட்டிப்பு

Added : ஆக 11, 2018 00:01

ராஞ்சி:மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஜாமினை, 20ம் தேதி வரை நீட்டித்து, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 1990ல், ஒருங்கிணைந்த பீஹார் மாநிலத்தில், கால்நடை தீவன கொள்முதலுக்காக, மாவட்ட கருவூலங்களில் முறைகேடாக பணம் பெற்று ஊழல் செய்ததாக, ஆர்.ஜே.டி., தலைவரும், அப்போதைய முதல்வருமான, லாலு பிரசாத் யாதவ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்குகளை, பீஹாரில் இருந்து பிரிந்த ஜார்க்கண்ட் மாநில சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. லாலு மீதான நான்கு வழக்குகளில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, ராஞ்சியில் உள்ள, பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.லாலுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவ சிகிச்சை பெற, அவரது வழக்கறிஞர்கள் ஜாமின் கேட்டு, ராஞ்சி உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, மே, 11ல், ஆறு வார ஜாமின் வழங்கப்பட்டது. பின், ஆக., 14 வரை, ஜாமின் நீட்டிக்கப்பட்டது.தற்போது, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள, தனியார் மருத்துவமனையில், லாலு சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது ஜாமினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கும்படி, லாலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த, ராஞ்சி உயர் நீதிமன்ற நீதிபதி, அப்ரேஷ் குமார் சிங், லாலுவின் ஜாமினை 20ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...