Wednesday, August 7, 2019

கவுரவ விரிவுரையாளர் பணி  துணைவேந்தருக்கு நோட்டீஸ்

Added : ஆக 07, 2019 06:19

மதுரை:மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் சுமித்ரா. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தொகுப்பூதிய அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க மதுரை காமராஜ் பல்கலை ஜூன் 27 ல் அறிவிப்பு வெளியிட்டது. இதில் விதிமுறைகள், இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. அறிவிப்பின்படி நியமனம் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

பணியிடங்களின் எண்ணிக்கை, இட ஒதுக்கீடு, தகுதிகள், சம்பள விபரத்தை குறிப்பிட்டு, பல்கலை மானியக்குழு விதிமுறைகளை பின்பற்றி புதிய அறிவிப்பு வெளியிட்டு, அதனடிப் படையில் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.
உயர்கல்வித்துறை முதன்மை செயலர், பல்கலை துணைவேந்தர், பதிவாளர் (பொறுப்பு) ஆகியோருக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டு, செப்.,4க்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...