Wednesday, October 16, 2019

பிரம்மபுத்திரா யாத்திரைக்கு நவம்பர், 13ல் சிறப்பு ரயில்

Added : அக் 16, 2019 01:28

சென்னை:புனித நீராட, பிரம்மபுத்திரா யாத்திரை செல்வோருக்கு வசதியாக, தனி, 'ஏசி' சிறப்பு சுற்றுலா ரயிலை, இந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது.

இந்த யாத்திரை ரயில், திருச்சியில் இருந்து, நவ., 13ல் புறப்பட்டு, கரூர், சேலம், சென்னை பெரம்பூர் வழியாக செல்லும். இப்பயணத்தில், மேற்கு வங்கத்தில், கோல்கட்டா; அசாம் மாநிலத்தில், கவுஹாத்தி காமாக்யா சக்தி பீடம், வசிஷ்டர் ஆசிரமம், பிரம்மபுத்திரா நதியில், படகு சவாரி செய்யலாம். புனித நீராடலாம். உலகில் அதிக மழை பொழிவு உள்ள, சிரபுஞ்சி மற்றும் ஷில்லாங் பீக் பகுதிகளுக்கும் சென்று வரலாம். மொத்தம், 12 நாட்கள் 


சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 'ஏசி'யில், மூன்றாம் வகுப்புக்கு, 45 ஆயிரத்து, 820 ரூபாய்; இரண்டாம் வகுப்புக்கு, 49 ஆயிரத்து, 540 ரூபாய்; முதல் வகுப்பு பயணத்துக்கு, 57 ஆயிரத்து, 700 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு, சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40680, 90031 40681 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...