Sunday, October 6, 2019

தீபாவளிக்காக வசூல் வேட்டை 5.59 லட்சம் ரூபாய் பறிமுதல்

Added : அக் 06, 2019 00:24

சென்னை:தமிழகத்தில், அரசு அலுவலகங்களில், கணக்கில் காட்டப்படாத, 5.59 லட்சம் ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில், அரசு அலுவலகங்களில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்காக, வசூல் வேட்டை நடப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, புகார்கள் குவிந்து வருகின்றன.இதையடுத்து, சென்னை, கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், கோவை மாவட்டம், துடியலுார் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவற்றில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில், 3 லட்சத்து, 17 ஆயிரத்து, 380 ரூபாய், கணக்கில் காட்டப்படாத பணம்பறிமுதல் செய்யப்பட்டது. துடியலுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 2 லட்சத்து, 715 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், சென்னை, கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 40 ஆயிரத்து, 710 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மொத்தம், 5 லட்சத்து, 58 ஆயிரத்து, 805 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துஉள்ளனர்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...