Sunday, October 6, 2019

புதிதாக 6 மருத்துவ கல்லுாரிகள் துவங்க அனுமதி

Added : அக் 06, 2019 00:20

புதிதாக ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைக்க, மத்திய அரசு அனுமதி கிடைத்தால், தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் எண்ணிக்கை, 32 ஆக உயருவதுடன், 4,500 பேர், எம்.பி.பி.எஸ்., படிக்கும் நிலை ஏற்படும்

.தமிழகத்தில், 23 அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில், 3,250 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மேலும், அரசு கட்டுப்பாட்டில் உள்ள, ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; ஐ.ஆர்.டி., பெருந்துறை மருத்துவ கல்லுாரியில், 100; சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், 100 என, மொத்தம், 3,600 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.அதேபோல், 13 தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 1,800 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மேலும், ஒரு அரசு பல் மருத்துவ கல்லுாரி மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 1,760 பி.டி.எஸ்., என்ற பல் மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளன.இதற்கிடையே, நாடு முழுவதும் புதிதாக, 31 மருத்துவ கல்லுாரிகள் துவங்க, மத்திய அமைச்சரவை, ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புதல் அளித்தது. இதில், தமிழகத்தில், ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைக்க அனுமதி கோரி, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டில்லியில், மத்திய அமைச்சர்களை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தார்.அதில், திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில், மருத்துவ கல்லுாரிகள் அமைக்க, போதுமான இடங்கள் உள்ளன. அந்த பகுதிகளில், மருத்துவ கல்லுாரிகள் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.அனுமதி வழங்கப்பட்டால், ஆறு மருத்துவ கல்லுாரிகளில், தலா, 150 மருத்துவ படிப்பு இடங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதன்படி பார்த்தால், 900 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கூடுதலாக கிடைக்கும். மேலும், தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, மருத்துவ கல்லுாரிகளின் எண்ணிக்கை, 32 ஆக உயருவதுடன், அவற்றில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களும், 4,500 ஆக உயரும்.இந்நிலையில், நாடு முழுவதும், மருத்துவ கல்லுாரிகள் துவங்க அனுமதி கேட்ட மாநிலங்கள் பட்டியலை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், அதிகபட்சமாக, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில், தலா, 10 மருத்துவ கல்லுாரிகள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில், ஆறு; காஷ்மீரில், இரண்டு; உத்தர பிரதேசத்தில், மூன்று துவங்கப்பட உள்ளன.இது குறித்து, தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறுகையில், ''தமிழகத்தில், ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைக்க, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ''புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான ஆய்வு கூட்டம், வரும், 10ல், டில்லியில் நடைபெற உள்ளது. அதன்பின், புதிய கல்லுாரிகள் குறித்து தெரிய வரும்,'' என்றார்.
- -நமது நிருபர் -.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...