Friday, January 24, 2020

500 மருத்துவமனைகளுக்கு ஓரிரு வாரத்தில் பதிவு உரிமம்

Added : ஜன 23, 2020 21:40


சென்னை, 'சென்னையில், முதற்கட்டமாக, 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு, ஓரிரு வாரங்களில் பதிவு உரிமம் வழங்கப்படும்' என, மருத்துவ சேவை இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள் செயல்படுகின்றன. இவை அனைத்தும், பதிவு உரிமம் பெறுவது கட்டாயம்.

அத்துடன், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, பதிவை புதுப்பிக்க வேண்டும். இதுவரை பதிவு உரிமம் கோரி, 36 ஆயிரத்து, 598 மருத்துவமனைகள் விண்ணப்பித்துள்ளன.சென்னையில் மட்டும், 2,000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் விண்ணப்பித்துள்ளன. அந்த மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை, சுகாதார சேவைகள் இயக்குனரகஅதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

'சென்னையில், முதற்கட்டமாக, 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு, ஓரிரு வாரங்களில் பதிவு உரிமம் வழங்கப்படும்.மேலும், பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காத மருத்துவமனைகளுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்படும்' என, மருத்துவ சேவைகள் இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...