Monday, February 17, 2020


புற்றுநோய் பாதித்த 5 வயது சிறுவன் சிகிச்சைக்கு பணமின்றி அவதி

Added : பிப் 17, 2020 00:14



பெரம்பலுார்:ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, 5 வயது சிறுவனின் சிகிச்சைக்கு பணமின்றி, பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.

பெரம்பலுார், புதிய மதனகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள், ராஜு - ராஜேஸ்வரி தம்பதி. ராஜு, வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளி. தாய் ராஜேஸ்வரி, வீட்டு வேலை செய்து வருகிறார்.இவர்களின் மகன் சாய்ராம், 5; பிறந்தது முதல், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சாய்ராமுக்கு, அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோர் மிகவும் சிரமப்பட்டு, இதுவரை, 5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி சிகிச்சை அளித்துள்ளனர்.தாங்கள் வைத்திருந்த நகை, பொருட்கள் என அனைத்தையும் விற்று விட்டனர். இவர்களின் நிலை அறிந்த ஒருவர், தன் பழைய ஓட்டு வீட்டை, இவர்களுக்கு, 150 ரூபாய் வாடகைக்கு விட்டுள்ளார்.மாதந்தோறும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு சென்று வரவும், கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமலும், சாய்ராமின் குடும்பம் அவதிப்பட்டு வருகிறது.இந்நிலையில், சாய்ராமுக்கு காலில் ஆப்பரேஷன் செய்ய வேண்டும் எனவும், அதற்கு, 3 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் எனவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

ராஜேஸ்வரி கூறியதாவது:நான், என் அம்மா வைத்திருந்த நகை, என் சித்திகள் உள்ளிட்ட உறவினர்களிடம் இதுவரை, 5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி, செலவு செய்து விட்டேன். என் மகனின் கால் பாதம் வளைந்துள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். என் மகனை காப்பாற்ற, தமிழக அரசும், நல்ல உள்ளம் படைத்தவர்களும் உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.உதவ விரும்புவோர், 96009- - 59257 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவர்களது, யூனியன் வங்கி சேமிப்பு கணக்கு எண்: 637402010004538.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...