Monday, February 17, 2020

கருவூலத்தில் ஆட்குறைப்பு ஊழியர்கள் குற்றச்சாட்டு

Added : பிப் 17, 2020 00:22

மதுரை;'கருவூலத் துறையில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், 4,000த்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது' என, அரசு ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கருவூலத் துறையில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இதன் மூலம், அரசு துறையினருக்கு சம்பளம் உள்ளிட்டவை கையாளப்படவுள்ளன.ஆனால், அடிப்படை கட்டமைப்புகள், அரசு அலுவலகங்களில் மோசமான நிலையில் உள்ளன. இணையதள சேவையை, பல அலுவலகங்களில் பெற முடியவில்லை. தற்போதும், உடனடியாக பணிகளை முடிக்க அழுத்தம் கொடுப்பதால், தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அரசு ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலர் செல்வம், மதுரையில் கூறியதாவது:அடிப்படை கட்டமைப்புகளை செய்யாமல், ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, அரசு அழுத்தம் தரக்கூடாது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், 4,000த்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.முதலில் அனைத்து அலுவலகங்களுக்கும் கணினி, இணையதள வசதி செய்ய வேண்டும். கடந்த முறை, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட, 5,000த்துக்கும் மேற்பட்டோருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணைகள் வழங்கப்பட்டன. மேலும், 1,000த்துக்கும் மேற்பட்டோர் பணிமாறுதல் செய்யப்பட்டனர். அவற்றை திரும்ப பெற, அரசு முன்வராதது ஏமாற்றம் தருகிறது. புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, அரசாணை, 56 ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...