Monday, February 17, 2020


வெயில் அதிகரிப்பு மதுரையில், 'டாப்'

Added : பிப் 16, 2020 23:42

சென்னை:தமிழகத்தில் அதிகபட்சமாக, மதுரையில், 36 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், குளிர்காலம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சில மாவட்டங்களில் மட்டும், காலையில் லேசான பனி மூட்டம் காணப்படுகிறது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும், வெயில் காலம் துவங்கி உள்ளது.

வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 33 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. இது, இந்த ஆண்டில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெயில்.இந்நிலையில், நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்சமாக மதுரையில், 36 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.கரூர் பரமத்தி, மதுரை விமானநிலையம், சேலம் ஆகிய இடங்களில், 35 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. சென்னை விமான நிலையத்தில், 32; நுங்கம்பாக்கத்தில், 31 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.வரும் நாட்களை பொறுத்தவரை, வானம் தெளிவாக காணப்படும். சென்னை உள்ளிட்ட சில இடங்களில், காலையில், லேசான பனிமூட்டம் நிலவும். மற்ற இடங்களில், வெயிலுடன் கூடிய வறண்ட வானிலை நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...