Tuesday, February 11, 2020

கணவரின் சிகிச்சைக்கு மன்றாடும் மனைவி

Added : பிப் 10, 2020 23:28




ஈரோடு : கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும்படி, ஈரோடு கலெக்டரிடம், மகனுடன் வந்து, பெண் மனு கொடுத்தார்.

ஈரோடு, ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர், சத்யா, 35; ஈரோடு கலெக்டர் கதிரவனிடம், நேற்று வழங்கிய மனு:என் கணவர் பாபு, 38; தனியார் கடை ஊழியர். ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது. இதனால், கடந்த ஆண்டு ஜூலை மாதம், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. ஆபத்தான நிலையில், ஈரோடு, கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.முதல்வரின் காப்பீடு திட்டம் மூலம், சில லட்சம் ரூபாய், சிகிச்சைக்கு செலவிடப்பட்டது. தற்போது, குழாய் மூலம் சுவாசித்தலும், உணவு வழங்குவதும் நடக்கிறது.

இன்னும் சில நாளில், அவற்றை அகற்றி, சிகிச்சையை தொடர வேண்டி உள்ளது. பணம் இல்லாததால், தொடர் சிகிச்சை வழங்க முடியவில்லை. இரண்டு குழந்தைகள் உள்ளதால், வேலைக்கும் செல்ல முடியாமல், கணவரை பார்க்க முடியாமல் சிரமமாக உள்ளது. மருத்துவ செலவுக்கு உதவி செய்து, கணவரை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.

தேவையான உதவி செய்வதாக, கலெக்டர் உத்தரவாதம் கொடுத்துள்ளார். உதவ விரும்புவோர், 83444 40100 என்ற மொபைல் எண்ணில், சத்யாவை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...