Tuesday, June 8, 2021

ஊக்கத்தொகை வழங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு

ஊக்கத்தொகை வழங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு

Added : ஜூன் 08, 2021 00:09

சென்னை : கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க, 160 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில், ஏப்ரல் முதல் இந்த மாதம் வரை தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரசு பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், அரசு மற்றும் உள்ளாட்சிகளின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.அதன்படி ஊக்கத்தொகை வழங்க, 160 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக, பொது சுகாதாரத் துறை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...