Thursday, July 15, 2021

நிவாரணம் வாங்காத நான்கு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள்


நிவாரணம் வாங்காத நான்கு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள்

Added : ஜூலை 15, 2021 00:50

சென்னை, ஜூலை 15-கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை தொகுப்பை, நான்கு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் வாங்காமல் உள்ளனர்.

முதல்வராக மே மாதம் பொறுப்பேற்ற ஸ்டாலின், 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, தலா 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். முதல் தவணையான, 2,000 ரூபாய் அம்மாதம் வழங்கப்பட்டது. அந்த தொகையை, 1.60 லட்சம் கார்டுதாரர்கள் வாங்கவில்லை.ஜூனில் இரண்டாவது தவணையான 2,000 ரூபாயுடன், கோதுமை மாவு, ரவை உட்பட 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது.

அம்மாதம் வாங்காதவர்கள், இம்மாதம் வாங்கி கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை, 2.08 கோடி கார்டுதாரர்களுக்கு தலா 2,000 ரூபாய் என மொத்தம், 4,160 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இன்னும் 1.59 லட்சம் கார்டுதாரர்கள், நிவாரண தொகையின் இரண்டாவது தவணையை வாங்காமல் உள்ளனர். இதுதவிர 2.63 லட்சம் கார்டுதாரர்கள் மளிகை தொகுப்பை வாங்கவில்லை.

இரண்டையும் சேர்த்து 4.22 லட்சம் பேர், கொரோனா நிவாரண தொகுப்பை வாங்காமல் உள்ளனர். ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் கடைகளுக்கு சென்று, தங்களின் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே, நிவாரண தொகுப்பை வாங்க முடியும்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...