Tuesday, May 9, 2017

NEET dress code row: Kerala rights panel registers case
Kannur


The Kerala human rights commission (KHRC) has suo motu registered a case in connection with the incident in which a girl student was asked to remove her top innerwear before attending the national eligibility-cum-entrance test (NEET) conducted by the central board of secondary education (CBSE) on Sunday .
The panel has also sought a report from the CBSE regional director and Kannur district police chief in this regard.
KHRC acting chairperson P Mohana Das said prima facie it was a case of human rights violation and a high-level probe was required. “We have also sought a report from Kerala University, which has a role in the conduct of the examination. Since this is a nationallevel examination, the national human rights commission has also been alerted,“ added Das.

The Kerala state women's commission (KSWC) has also initiated a probe into this incident. “We have asked an officer of the rank of DSP to conduct an inquiry , and appropriate ac tion will be taken based on the report,“ said commission member J Prameela Devi.

Meanwhile, T P M Ibrahim Khan, president of Kerala CBSE school management association, said that CBSE must investigate the incident.

“The reason why CBSE has such strict rules is to prevent malpractices. But it should not amount to harassing the student. NEET has become a very important examination for students who intend to study medicine and their morale cannot be affected like this before the examination,“ he said.

The victims are planning to approach the CBSE and the KHRC. “We feel humiliated. Such an incident is beyond imagination and we want to make sure that it is not repeated in future,“ said Rajesh Nambiar, a parent whose daughter had to change her pair of jeans because it had metal buttons and pockets. It was on Sunday that the incident was reported from TISK English Medium School at Kovvappuram near Kunhimangalam in Kannur, where the girls were asked to remove anything that had metallic parts because the CBSE guidelines did not permit metallic items inside the halls.

Payyannur MP P K Sreemathi ermed this as a barbaric act and said she would take up this issue with the authorities.
4 `errors' in NEET paper: Experts

New Delhi: The Central Board of Secondary Education (CBSE) conducted the National Eligibility Cum Entrance Test (NEET) amid unprecedented security on Sunday. But was the question paper error free? In an exam, where over 11lakh aspirants took the test, experts claim there are at least four questions which have problems. One question came with two correct options, while another came with all four wrong multiple choice answers, this is not the first time as NEET 2016 too had errors in the question paper.In fact the Joint Entrance Examination (Main) 2015 conducted by CBSE had similar errors while the JEE (advanced) of 2016 had four errors of 12 marks. Manash Gohain


நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை
நீதிபதி கர்ணன் மீண்டும் அதிரடி


கோல்கட்டா: ''எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ள, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் மற்றும், ஏழு நீதிபதிகளுக்கு, தலா, ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது,'' என, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி, சி.எஸ்.கர்ணன், நேற்று அதிரடி தீர்ப்பு அளித்துள்ளார்.



தமிழகத்தைச் சேர்ந்தவரும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியுமான, கர்ணன் மீது, சுப்ரீம் கோர்ட் சுயமாக கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.

மனநல மருத்துவப் பரிசோதனை

நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் கர்ணனுக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு, தடை விதித்திருந்தது.
இதனிடையில், நீதிபதி கர்ணனுக்கு,

மே, 4ல் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. அதற்கான அறிக்கையை, 8ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 9ல் வழக்கு விசாரணை நடக்கும் என்றும், சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியிருந்தது.

ஆனால், மனநல மருத்துவப் பரிசோதனைக்குஅவர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், கோல்கட்டாவில் உள்ள தன் வீட்டில், நேற்று நீதிபதி கர்ணன் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்ட ஏழு நீதிபதிகள் அமர்வில் உள்ள நீதிபதிகளும், என்னை பணி செய்யக் கூடாது என்று உத்தரவிட்ட அமர்வில் இருந்த நீதிபதி பானுமதியும், எஸ்.சி.. - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளனர்.

தலித்தான எனக்கு எதிராகச் செயல்பட்டதுடன், பொதுப்படையாக அவமானப்படுத்தியுள்ளனர். இந்த குற்றங்களுக்காக, இந்த எட்டு பேருக்கும், தலா, ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளின் கீழ்,ஒவ்வொருவருக்கும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

ஒரு வாரத்துக்குள், டில்லியில் உள்ள தேசிய எஸ்.சி., - எஸ்.டி., தேசிய கமிஷனில் இந்த அபராதத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு தன் தீர்ப்பில், நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.

16 கோடி இழப்பீடு

நீதிபதி கர்ணன், தன் தீர்ப்பில் மேலும் கூறியுள்ளதாவது: என்னை அவமதித்தது தொடர்பாக, தலைமை நீதிபதி உட்பட ஏழு நீதிபதிகளுக்கு, 14 கோடி ரூபாய் அபராதம் விதித்து, ஏப்., 13ல், நான் அளித்த தீர்ப்பை இதுவரை நிறைவேற்றவில்லை. இதைத் தவிர, நீதிபதி பானுமதியும், இரண்டு கோடி ரூபாயை இழப்பீடாக அளிக்க வேண்டும்.

இந்த, 16 கோடி ரூபாயை, அவர்களின் சம்பளத்தில் இருந்து, சுப்ரீம் கோர்ட் பதிவாளர் பிடித்தம் செய்து, என் கணக்கில் சேர்க்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் அவர் கூறியுள்ளார்.
ஊழல் வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு...
விடுதலை உத்தரவை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: கால்நடை தீவன ஊழல் தொடர்பான வழக்குகளில் இருந்து, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை விடுவித்து, ஜார்க்கண்ட் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட், நேற்று ரத்து செய்தது. 'அனைத்து வழக்குகளிலும், லாலு பிரசாத் யாதவ், சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்' என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், லாலுவின் அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது.

பீஹாரில், 1990 - 97ல், முதல்வராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ், 68. அப்போது, கால்நடை தீவனம் வாங்குவது தொடர்பாக நடந்த, 900 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான வழக்குகளில், லாலு பிரசாத், முன்னாள் முதல்வரான ஜகன்னாத் மிஸ்ரா, முன்னாள் தலைமைச் செயலர் சஜால் சக்ரவர்த்தி உட்பட பலர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.

பாட்னா ஐகோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்குகளை, ஜார்க்கண்ட மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் ஐகோர்ட்டுக்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்குகளை, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் விசாரித்து வந்தது. கருவூலத்தில் இருந்து, பணம் எடுத்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், லாலுவுக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், 2013ல் தீர்ப்பு அளித்தது.

அதைத் தொடர்ந்து சிறிது காலம் சிறையில் இருந்த அவர், தற்போது ஜாமினில் உள்ளார். இந்தத் தீர்ப்பை அடுத்து, தேர்தலில் போட்டியிடுவதற்கு லாலுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கால்நடை தீவன ஊழல் தொடர்பான மேலும், நான்கு
வழக்குகளிலும் லாலு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். ஒரு வழக்கில், தனக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், மற்ற நான்கு வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என, ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில், லாலு பிரசாத் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது

அதை விசாரித்த, ஐகோர்ட், நான்கு வழக்குகளில் இருந்து லாலுவை விடுவித்து, 2014ல் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ ராய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்து, இந்த ஆண்டு, ஏப்., 20ல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில், நேற்று அளித்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது: இந்த வழக்குகளில், ஒரே மாதிரியான முடிவை ஐகோர்ட் எடுத்திருக்க வேண்டும். ஒவ்வொரு குற்றவாளிக்கும் வேறு வேறு முடிவை ஐகோர்ட் எடுத்துள்ளது. லாலு பிரசாத் உள்ளிட்டோரை, இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கும், ஜார்க்கண்ட் ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்கிறோம்.

ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்குகளின் விசாரணையை, ஒன்பது மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இந்த முக்கியமான வழக்கில், உடனடியாக மேல்முறையீடு செய்யாமல், சி.பி.ஐ., தாமதம் செய்து உள்ளது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, லாலு பிரசாத் மீதான தீவன ஊழல் வழக்குகளில் விசாரணை விரைவில் துவங்க உள்ளது. இது, பீஹார் அரசியலில் மிகப் பெரிய புயலை வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, லாலுவின் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

கொட்டம் அடங்குமா?

பீஹார் சட்டசபையில் மொத்தமுள்ள, 243 உறுப்பினர்களில், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு, 71 உறுப்பினர்களே உள்ளனர். கூட்டணி கட்சியான லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு, 80 உறுப்பினர்களும்,
Advertisement
காங்கிரஸ் கட்சிக்கு, 27 உறுப்பினர்களும் உள்ளனர்.தேர்தலில் போட்டியிட லாலுவுக்கு தடை உள்ளதால், தன் மகன்களை அமைச்சராக்கியுள்ளார்.
லாலுவின் இரண்டாவது மகன் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக உள்ளார். மூத்த மகன் தேஜ்பிரதாப், சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார். கடந்த, 2015ல் ஆட்சி அமைந்தது முதல், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என, லாலு பிரசாத், எங்கும் தன்னை முன்னிலை படுத்திக் கொண்டார்.
இதனிடையில், அவரது மகன்கள் மீது, பல்வேறு ஊழல் புகார்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவரான பா.ஜ.,வின் சுஷில் குமார் மோடி, சமீபத்தில், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறார். லாலுவுக்கு எதிரான இந்த தீர்ப்பு, ஆட்சியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது; அதே நேரத்தில், லாலு குடும்பத்தின் கொட்டம் சற்று அடங்கும் என, எதிர்பார்க்கலாம்.

அரசியல் வாழ்க்கை முடிந்தது

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு, லாலுவின் அரசியல் வாழ்க்கைக்கு வைக்கப்பட்டுள்ள முற்றுப்புள்ளி. அனைத்து வழக்குகளிலும் அவருக்கு தண்டனை உறுதி என்பதால், இனி, அவரால் தேர்தலில் போட்டியிடவே முடியாத சூழ்நிலை ஏற்படும். அதே நேரத்தில், இந்த தீர்ப்பு, முதல்வர் நிதிஷ் குமாருக்கு சாதகமாகவேஉள்ளது. வலுவில்லாத லாலு, இனி கோர்ட்வாசற்படியிலேயே இருக்கப் போவதால், நிதிஷுக்கு இனி எந்தப் பிரச்னையும் இருக்காது.
-சுஷில் குமார் மோடி, பீஹார் எதிர்க்கட்சித் தலைவர், பா.ஜ.,
உஷ்... சொல்லாதே யாரும் கேட்டால்' : மருத்துவ கவுன்சில் பரம ரகசியம்

பதிவு செய்த நாள் 09 மே2017 02:19

மதுரை: விதிமீறலில் ஈடுபட்டுதண்டனை பெற்ற டாக்டர்களின் விபரத்தை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்.டி.ஐ.,) கேட்கப்பட்டது. 'இத்தகவல் டாக்டர்களின் உரிமையை பாதிக்கும் என்பதால் தர முடியாது' என இந்திய மருத்துவ கவுன்சில் பதில் அளித்துள்ளது.

டாக்டர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதுடன், அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை கவுன்சில் உருவாக்குகிறது. அரசு டாக்டர்கள் பணி நேரத்தில் சொந்த'கிளினிக்கில்' சிகிச்சை அளித்தல், தவறான சிகிச்சை, தவறான மருந்துகள் பரிந்துரைத்தல் போன்ற புகார்கள் மீது நடவடிக்கை
எடுக்கிறது.ஆனால், அளிக்கப்படும்புகார்களை விசாரணை என்ற பெயரில் அதிக நாட்கள்இழுத்தடிப்பதாகவும், சில டாக்டர்கள் மீது மட்டும் 'கண்துடைப்பு' நடவடிக்கை எடுத்துவிட்டு, மற்றவர்களை காப்பாற்றி வருவதாகவும், கவுன்சில் மீது சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்புகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2011- 2016ல் விதிமீறலில் ஈடுபட்டு, தண்டனை பெற்ற டாக்டர்களின் எண்ணிக்கை, பெயர், தவறு மற்றும் தண்டனை உள்ளிட்ட விபரங்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது.அதற்கு கவுன்சில், 'இத்தகவல் மூன்றாம் நபர் குறித்தது. அதிக பக்கங்களை கொண்டது. டாக்டர்களின் உரிமையை பாதிக்கும். எனவே தகவல் தர முடியாது' என பதிலளித்துள்ளது.

ஆனால், பிற அரசு துறைகளில், தண்டனை பெற்ற ஊழியர்களின் விபரங்களை எளிதில் பெறலாம். உள் நோக்கத்துடன், ஒருவரது சம்பளம் போன்ற தகவல்களை மட்டுமே கேட்க முடியாது. தண்டனை பெற்ற டாக்டர்களின் விபரங்களை தெரிவிக்க கவுன்சில் மறுத்திருப்பது, இந்திய மருத்துவ கவுன்சில் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாக உள்ளது.

'நீட்' தேர்வு வினாத்தாளில் குழப்பம்

பதிவு செய்த நாள் 09 மே2017 02:10


மதுரை: 'நீட்' தேர்வுக்கான தமிழ், ஆங்கில வினாத்தாள்கள் வெவ்வேறு கேள்விகளை கொண்டிருந்ததால் பெற்றோர், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, 'நீட்' தகுதித் தேர்வினை 11 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் மட்டும் 85 ஆயிரம் பேர் எழுதினர்.

இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பத்து மொழிகளில் இத்தேர்வு நடத்தப்பட்டது.


இந்நிலையில், 'நீட்' தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளும், ஆங்கில வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளும் வெவ்வேறு கேள்விகளை கொண்டிருந்தது.
பெற்றோர் கூறியதாவது: இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கேள்விகளை கொண்டு மாணவர்களின் திறனறிந்து, அதன்படி அவர்களை மருத்துவ படிப்பில் சேர்ப்பதுதான் 'நீட்' தேர்வின் நோக்கம். ஆனால், எழுதும் மொழியை பொறுத்து வெவ்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது, என்றனர்.

தமிழ் மொழியை தேர்வு செய்திருந்தவர்களின் வினாத்தாளில் தமிழ் கேள்விகளுடன் அதன் ஆங்கில ஆக்கம் இடம் பெற்றிருந்தது. ஆங்கில மொழியை தேர்வு செய்தவர்களின் வினாத்தாளில் ஆங்கில கேள்விகளுடன் அதன் ஹிந்தி ஆக்கம் இடம் பெற்றிருந்தது.

இந்த இரு வகை வினாத்தாள்களிலும், மொழி வேறுபாடு இருந்தாலும், ஒரே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால் குழப்பம் எழுந்திருக்காது.
தற்போது கேள்விகள் மாறுபட்டிருப்பதால், தங்களுடைய வினாத்தாள் கடினமாக அமைந்து விட்டதாக இரு தரப்பினரும் கூறி வருவது பிரச்னையை உருவாக்கியுள்ளது.



Advertisement
கவர்னர் கையெழுத்துடன் அண்ணா பல்கலை பட்டம்

பதிவு செய்த நாள் 09 மே2017 02:43

துணை வேந்தர் இல்லாத நிலையில், கவர்னரின் கையெழுத்துடன் பட்டமளிப்பு விழா நடத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. அண்ணா பல்கலையில், கடந்த ஆண்டு, மே முதல், துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. துணை வேந்தரை தேர்வு செய்ய, தேடல் குழு அமைக்கப்பட்டது. ஆறு மாதங்கள் தாண்டிய பிறகும், இன்னும் புதிய துணை வேந்தரை தேர்வு செய்யவில்லை. துணை வேந்தர் இல்லாமல், கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழா நடத்தவில்லை; இந்த ஆண்டும், பட்டமளிப்பு விழா தாமதம் ஆகியுள்ளது. பட்ட சான்றிதழ் இல்லாமல், இன்ஜி., முடித்த மாணவர்கள், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, தற்போதைய நிலைமையை சமாளிக்க, கவர்னர் கையெழுத்துடன் கூடிய பட்டம் வழங்க, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. அதன்படி, 19ம் தேதி மாலை, 5:00 மணிக்கு பட்டமளிப்பு விழா நடத்த, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். துணை வேந்தர் இல்லாமல், முதல் முறையாக வேந்தரான கவர்னர் மற்றும் உயர் கல்வி செயலரின் கையெழுத்துடன், இன்ஜி., மாணவர்களுக்கு, பட்ட சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் துவங்கியது

பதிவு செய்த நாள் 09 மே201700:05

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கிய நிலையில், டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில், 13 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 1,489 முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 762 இடங்கள் உள்ளன.

இவற்றில், 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, அரசு டாக்டர்கள் போராடி வந்த நிலையில், அதை ஏற்காத சென்னை உயர் நீதிமன்றம், எம்.சி.ஐ., விதிமுறைப்படி, கவுன்சிலிங் நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து, ௭௬௨ இடங்களுக்கான மாண வர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனை யில், நேற்று துவங்கியது. முதல் நாளில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது. இவற்றில், 19 இடங்கள் இருந்தாலும், 11 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில், 10 பேர், கவுன்சிலிங்கில் பங்கேற்று, இடங்களை தேர்வு செய்தனர். பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது; 11 வரை நடக்கிறது. கவுன்சிலிங் துவங்கிய போது, அரசு மருத்துவ அலுவலர் சங்கத்தினர், வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சிலர், கவுன்சிலிங் அறைக்குள் புகுந்து, 'எங்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் கவுன்சிலிங் நடத்தக் கூடாது' என, அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். இதையடுத்து, 80 பேரை, போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால், கவுன்சிலிங், ஒன்றரை மணி நேரம் தாமதமாக துவங்கியது.
வெளிநாட்டு மாணவர் 'அட்மிஷன்' : அண்ணா பல்கலை அறிவிப்பு

பதிவு செய்த நாள் 08 மே2017 23:43


சென்னை: அண்ணா பல்கலையில், வெளிநாட்டினருக்கான, இன்ஜி., மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை, இன்ஜி., கல்லுாரிகளில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தனித்தனியே, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டிற்கான, வெளிநாட்டு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 பி.இ., - பி.டெக்., மற்றும் எம்.எஸ்சி., ஐந்தாண்டு படிப்புகளுக்கு, வளைகுடா நாடுகளில் பணியாற்றுவோரின் குழந்தைகள், வெளிநாட்டில் வாழும் இந்தியர் மற்றும் வெளிநாட்டினர், ஜூன், 20 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
 வெளிநாட்டினருக்கு, ஜூன் 28; வளைகுடா நாடுகளில் பணியாற்றுவோரின் குழந்தைகள் மற்றும் வெளிநாட்டில் வாழ் இந்தியர்களுக்கு, ஜூன், 29லும், கவுன்சிலிங் நடக்கும்

எம்.இ..., - எம்.டெக்., மற்றும் எம்.எஸ்சி., இரண்டு ஆண்டு படிப்புகளுக்கு, ஜூலை, 20 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூலை, 28ல் கவுன்சிலிங் நடத்தப்படும். கூடுதல் விவரங்களை, https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
'நீட்' தேர்வுபடியே சேர்க்கை : மருத்துவ கவுன்சில் திட்டவட்டம்

பதிவு செய்த நாள் 08 மே2017 23:41

நாடு முழுவதும், 'நீட்' தேர்வு, நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. 2015ல், 'நீட்' தேர்வில் தில்லுமுல்லு நடந்ததால், இரண்டு முறை தேர்வு நடத்தப்பட்டது. எனவே, முறைகேடுகளை தடுக்க, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முன்தினம் நடந்த தேர்வில், கடும் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டன.

இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும், 103 நகரங்களில், 1,921 மையங்களில், தமிழ் உட்பட, 10 மொழிகளில், 'நீட்' தேர்வு நடந்தது. இதற்கு, 11.38 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், 95 சதவீதம் பேர் பங்கேற்றனர்.
இந்த தேர்வை, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., தான் நடத்துகிறது. அதை நடத்தி கொடுக்கும் அமைப்பாக, சி.பி.எஸ்.இ., உள்ளது. தேர்வு முடிவுகள், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பப்படும். பின், மாணவர் சேர்க்கை விதிகளை, மருத்துவ கவுன்சில் வெளியிடும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள, 65 ஆயிரம் எம்.பி.பி.எஸ்., மற்றும் 25 ஆயிரம் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வின்படி, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பில், அனைத்து மாநிலங்களுக்கும், 'நீட்' தேர்வுப்படி, மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, கூறப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திற்கு, விலக்கு அளிக்கப்படவில்லை என்பது, உறுதி ஆகியுள்ளது.மேலும், எம்.சி. ஐ.,யால் அங்கீகாரம் வழங்கப்பட்ட, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், 'நீட்' தேர்வுப்படியே மாணவர்கள் சேர்க்கப்படுவர். அந்த பட்டியல், எம்.சி.ஐ., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -


மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டினால் 'லைசென்ஸ்' ரத்து

பதிவு செய்த நாள் 09 மே2017 06:03




சென்னை: மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டினால், உடனடியாக லைசென்சை ரத்து செய்யும்படி, அரசு போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டு உள்ளார்.

உத்தரவு:

அவர் கூறியுள்ளதாவது: நாட்டிலேயே, தமிழகத்தில் தான் அதிகளவில், விபத்து உயிரிழப்புகள் நிகழ்கின்றன. உயிரிழப்புகளை தடுப்பது குறித்து, உச்ச நீதிமன்றத்தின் சாலை பாதுகாப்பு கமிட்டி விவாதித்தது. அது, மோட்டார் வாகனம், சாலை பாதுகாப்பு விதிகளை கடுமையாக கண்காணிக்கும்படி உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அதிவேக பயணம், போதையில் வாகனம் ஓட்டுதல், மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின் லைசென்ஸ், உடனடியாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட வேண்டும்.

ரத்தாகவில்லை:

தமிழகத்தில், 2017 காலாண்டில் மட்டும், அதிவேகமாக பயணம் செய்த, 61 ஆயிரத்து, 177 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், ஒருவரின் லைசென்சும் ரத்து செய்யப்படவில்லை. அதே போல, 71 ஆயிரம் பேர் மீது, போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதியப்பட்டும், யாருடைய லைெசன்சும் ரத்தாகவில்லை. இனி, இந்த விதிமீறல்களுக்கு, உடனடியாக லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும். அது குறித்த விபரங்களை, ஒவ்வொரு மாதமும், 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் எச்சரிக்கை: ரத்தோர்
 
பதிவு செய்த நாள் 09 மே 2017 05:54




புதுடில்லி: மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரதோர் தெரிவித்ததாவது: சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர், மிக கவனமாக இருக்க வேண்டும். உண்மை எது, பொய் எது என அறியாமல், உடனடியாக அது போன்ற தகவல்களை பகிர்வதன் மூலம், மோசமான விளைவுகள் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேரளாவில் ‘நீட்’ தேர்வு: மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்னதால் சர்ச்சை

கேரளாவில் ‘நீட்’ தேர்வு: மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்னதால் சர்ச்சை
 
கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை தேர்வு மைய கண்காணிப்பாளர் அகற்ற சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தும்படி மகளிர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. 
 
திருவனந்தபுரம்,

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று முன்தினம் நடைபெற்றது. நீட் தேர்வு எழுத வந்த மாணவ–மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தமட்டில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ–மாணவிகளிடம் கடும் கெடுபிடி காட்டப்பட்டது. முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கத்தரிக்கோலால் மாணவர்களின் சட்டையை வெட்டி, அரைக்கை சட்டையாக்கிய பின்னரே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் மாணவிகள் சிலர் தலை முடிக்கு கிளிப் மாட்டி வந்ததால், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் அந்த கிளிப்பை அகற்றினர்.

கேரளாவில் வரம்பு மீறல்

ஆனால் இவற்றையெல்லாம் விட கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரிடம் விதிமுறைகள் என்ற பெயரில் வரம்பு மீறல் சம்பவம் நடந்து உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பரியாரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 19–வயது மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுத வந்தார்.

அப்போது அங்கிருந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மெட்டல் டிடெக்டர் மூலம் அந்த மாணவியை சோதனை செய்தார். மெட்டல் டிடெக்டரை, மாணவியின் மேல் உள்ளாடைக்கு அருகே கொண்டு சென்ற போது அதில் ‘பீப்’ சத்தம் கேட்டது. இதனால் தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவியின் உள்ளாடையை அகற்றும்படி கூறினார். அதற்கு மாணவி, உள்ளாடையில் இரும்பு கொக்கி(பின்) இருப்பதால்தான் சத்தம் கேட்பதாக விளக்கம் அளித்து உள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த கண்காணிப்பாளர் உள்ளாடையை அகற்றினால்தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனையடுத்து அந்த மாணவி வேறுவழியின்றி தனது உள்ளாடையை கழற்றி அவரது தாயாரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றார்.

மகளிர் ஆணையம் உத்தரவு

 தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக முறையாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என கண்ணூர் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி சிவா விக்ரம் தெரிவித்து உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளித்தால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி கேரள மகளிர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் கேரள சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மந்திரி ரவீந்திரநாத் உறுதி அளித்தார். 
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 24–ந்தேதி காஞ்சீபுரம் வருகிறார்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 24–ந்தேதி காஞ்சீபுரம் வருகிறார்
 
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற 24–ந்தேதி காஞ்சீபுரம் வருகிறார். அவர், காஞ்சீபுரத்தில் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் சங்கரமடத்துக்கு செல்கிறார். 
 
காஞ்சீபுரம்,
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வருகிற 24–ந்தேதி ஒரு நாள் சுற்றுப்பயணமாக காஞ்சீபுரம் வருகிறார். இதற்காக அன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் காஞ்சீபுரம் ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

பின்னர் குண்டு துளைக்காத காரில் உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
சங்கர மடம் செல்கிறார் 
 பின்னர் காஞ்சீ சங்கரமடம் சென்று காஞ்சீ சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் ஆகியோரை சந்தித்து ஆசி பெறுகிறார். பிறகு மடத்தில் முக்தி அடைந்த காஞ்சீ மகா பெரியவர் சங்கர சேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பிருந்தாவனத்துக்கு சென்று அங்கு மகா பெரியவரை தரிசனம் செய்கிறார்.

அதன்பிறகு பிற்பகலில் ஏனாத்தூரில் சங்கரா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாக்களில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். அன்று மாலை ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
மாவட்ட கலெக்டர் ஆய்வு 
 ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காஞ்சீபுரம் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி சவுரிராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் சப்–கலெக்டர் அருண் தம்புராஜ், அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விஜயன் ஆகியோர் ஜனாதிபதி வந்து செல்லும் பாதைகள், கோவில்களில் நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும் ஜனாபதிபதி வருகையையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
மருத்துவ பட்டமேற்படிப்பு கவுன்சிலிங்குக்கு எதிர்ப்பு: அரசு டாக்டர்கள் முற்றுகை போராட்டம் 80 பேர் கைதாகி விடுதலை

மருத்துவ பட்டமேற்படிப்பு கவுன்சிலிங்குக்கு எதிர்ப்பு:
அரசு டாக்டர்கள் முற்றுகை போராட்டம்
80 பேர் கைதாகி விடுதலை
 
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ பட்டமேற்படிப்பு கவுன்சிலிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 80 அரசு டாக்டர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.
சென்னை,

மருத்துவ பட்டமேற்படிப்புக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19 நாட்களாக அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசிடம் 3 முறை அரசு டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிவடைந்தது. 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில், ‘இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறியது. மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ‘எஸ்மா’ சட்டம் பாயும்’ என்றும் தெரிவித்து இருந்தது.

முற்றுகை போராட்டம்


இந்த தீர்ப்புக்கு பிறகு சில அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் இருந்து பின்வாங்கினாலும், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம், அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுப்படி, நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியது. இந்த கவுன்சிலிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு டாக்டர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக நேற்று முன்தினம் தெரிவித்தனர்.

அதன்படி, நேற்று காலை கவுன்சிலிங் நடைபெறும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்திருந்தனர். அவர்கள் வருவதற்கு முன்னதாகவே மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கைது

மருத்துவமனை வளாகத்தில் தடுப்பு வேலி அமைத்து அரசு டாக்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அரசு டாக்டர்கள் அங்கே இருந்தவாறு 50 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தியும், நீட் தேர்வு வேண்டாம் என்றும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

அதைத்தொடர்ந்து போலீசார் முற்றுகையிட முயற்சி செய்த 20 பெண் டாக்டர்கள் உள்பட 80 அரசு டாக்டர்களை கைது செய்தனர். பின்னர், அவர்களை போலீசார் விடுதலை செய்தனர். 
சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து; 4 பேர் சாவு

சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து; 4 பேர் சாவு
 
சென்னை வடபழனியில் நேற்று அதிகாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த பயங்கர தீ விபத்தில் மூச்சுத்திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள். 
 
சென்னை,

சென்னை வடபழனி தெற்கு பெருமாள் கோவில் தெருவில் ஆர்.ஜே.இ.எஸ். என்ற பெயரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. தரைதளத்துடன் சேர்த்து 6 தளங்கள் இந்த குடியிருப்பில் உள்ளது. 6–வது தளத்தில் வீட்டின் உரிமையாளர் விஜயகுமார் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

மற்ற தளங்களில் ஏ, பி, சி, டி, இ, எப் என்ற 6 பிளாக்குளில் மொத்தம் 28 வீடுகள் உள்ளது. அதில் 6 வீடுகள் காலியாக உள்ளன. மற்ற 22 வீடுகளிலும் ஆட்கள் வசித்து வந்தனர்.

தாய்–மகள்

வீட்டின் முதல்மாடியில் மீனாட்சி (வயது 65) என்பவர் தனது மகள் செல்வி (40) உடன் வசித்து வந்தார். 2–வது தளத்தில் ஜான் கிறிஸ்டோபர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தரைதளத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மற்ற வீடுகளில் ஏராளமான திருமணமாகாத வாலிபர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் சென்னையில் ஆங்காங்கே வேலைபார்ப்பவர்கள்.

தரைதளத்தில் ஓட்டல், டெய்லர் கடை, மெக்கானிக் கடை, பிரிண்டிங் பிரஸ் உள்ளிட்ட 10 கடைகள் உள்ளன. சுற்றி கடைகள் அமைந்திருக்க தரைதளத்தின் நடுவில் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் பார்க்கிங் வசதியும் உள்ளது. பார்க்கிங் பகுதியில் இருந்து மேல்மாடிக்கு செல்வதற்கு படிக்கட்டு உள்ளது. அந்த படிக்கட்டு வழியாகத்தான் அனைவரும் மேல்மாடிக்கு போகவேண்டும்.

வசதிகள் இல்லை

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் முன்பக்கம் மட்டும் பால்கனி உள்ளது. பக்கவாட்டில் ஜன்னல்கள் ஏதும் இல்லை. காற்றோட்ட வசதி எதுவும் செய்யப்படவில்லை. விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் இந்த அடுக்குமாடி குடியிருப்பு 2002–ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளர் விஜயகுமார் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி சென்றுவிட்டார். குடியிருப்பில் வசிக்கும் மற்ற அனைவரும் நேற்று முன்தினம் இரவு அசந்து தூங்கினார்கள். நேற்று அதிகாலை 4 மணி அளவில் தரைதளத்தில் மோட்டார் சைக்கிள்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தன. மொத்தம் 21 மோட்டார் சைக்கிள்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.

மூச்சுத்திணறல்

இந்த தீயினால் ஏற்பட்ட புகைமூட்டம் மாடிகளுக்கும் பரவியது. அனைத்து வீடுகளிலும் புகைமூட்டம் சூழ்ந்துகொண்டது. அனைவரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தபோது புகைமூட்டம் சூழ்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பதறி துடித்து எழுந்தார்கள். மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் இருட்டாக காணப்பட்டது.

சிலர் பால்கனி பகுதிக்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது தான் தரைதளத்தில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தப்பித்து செல்வதற்கு படிக்கட்டு வழியாகத்தான் கீழே இறங்கி வரவேண்டும். ஆனால் படிக்கட்டு பகுதி முழுவதும் புகைமூட்டமும், தீ சுவாலையும் சூழ்ந்து இருந்ததால் யாரும் கீழே இறங்கிவர முடியவில்லை. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் ‘காப்பாற்றுங்கள்’ என்று அபயகுரல் எழுப்பினார்கள்.


கீழே குதித்து தப்பினர்

அவர்களின் அபயகுரல் கேட்டு, அந்த தெருவில் வசித்த மக்கள் அனைவரும் ஓடிவந்தனர். தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த திருமணமாகாத இளைஞர்கள் பக்கத்து மாடிகளுக்கு தாவி உயிர்தப்பினார்கள். அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள படுக்கைகளை, தீப்பிடித்த அடுக்குமாடி குடியிருப்பு முன்புபோட்டனர். சிலர் அந்த படுக்கையில் குதித்து உயிர் தப்பினார்கள்.

ஜெராக்ஸ் கடை நடத்திவரும் ஜான்கிறிஸ்டோபர் தனது மகன் கிறிஸ்டோவை 2–வது மாடியில் இருந்து கீழே தூக்கிவீசினார். பொதுமக்கள் பிடித்து இருந்த போர்வையில் இருந்து கிறிஸ்டோ தவறி கீழே விழுந்துவிட்டான். இதில் அவனது இரண்டு கால்களிலும் அடிபட்டு முறிவு ஏற்பட்டது. அவனை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றனர்.

15 தீயணைப்பு வண்டிகள்

ஜான்கிறிஸ்டோபர் தனது மனைவி மற்றும் தாயாருடன் லேசான காயத்துடன் பக்கத்து வீடுகளுக்கு ஏறி உயிர்தப்பினார்.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் 15 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. 3 வண்டிகள் மட்டுமே தீ விபத்து நடந்த தெருவிற்குள் நுழைய முடிந்தது. 2 வண்டிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 21 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலும் எரிந்து நாசமாகிப்போனது.

4 பேர் சாவு

இந்த பயங்கர தீ விபத்தில் புகைமூட்டத்தில் சிக்கி மூச்சுத்திணறி 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மீனாட்சி (வயது 65), அவரது மகள் செல்வி (40), மீனாட்சியின் பேரக்குழந்தைகள் சந்தியா (10), சஞ்சய் (3) ஆகியோர் பலியானார்கள்.

தீ விபத்தில் பலத்த காயமடைந்த 8 பேரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். லேசான காயமடைந்த 4 பேர் அசோக்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

போலீஸ் விசாரணை

தீ விபத்து பற்றி தகவல் கிடைத்த உடன் போலீஸ் கமி‌ஷனர் கரன்சின்கா உத்தரவின் பேரில் கூடுதல் கமி‌ஷனர் சங்கர், இணை கமி‌ஷனர் அன்பு, துணை கமி‌ஷனர் சரவணன், உதவி கமி‌ஷனர் அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, பசுபதி, நாசர், பாஸ்கர் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தீ விபத்து தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னையில் வழக்கமாக கோடை வெயில் தொடங்கிய உடன் ஆங்காங்கே இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படுவது வழக்கம். தற்போது கோடை தொடங்கிய பிறகு நடந்த முதல் தீ விபத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தது சென்னை நகரை உலுக்கியுள்ளது. விபத்து நடந்த தெற்கு பெருமாள் கோவில் தெருவே சோகத்தில் மூழ்கியது. வடபழனி முருகன் கோவில் அருகே இந்த தீ விபத்து சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளுக்கு, எதிர்ப்புகளுக்கிடையே உருவானதுதான் 'தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு' என்று கூறப்படும் 'நீட்' தேர்வு ஆகும்.

மே 09, 05:00 AM

ஆனால், தமிழக மாணவர்களுக்கு 'நீட்' தேர்விலிருந்து விலக்குபெற இந்த ஆண்டு சட்டசபையில் மசோதாக்களை நிறைவேற்றியும், பிரதமர், மத்திய-மந்திரிகளை சந்தித்தும் எவ்விதபலனும் இல்லாமல், நேற்று முன்தினம் 'நீட்' தேர்வு நாடு முழுவதும் நடந்துவிட்டது. தமிழக மாணவர்கள் புத்திசாலிகள். வழக்கமாக மருத்துவபடிப்பு கவுன்சிலிங்கில் ஏறத்தாழ 35 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள். ஆனால், 'நீட்' தேர்வுக்கு 88,865 பேர் விண்ணப்பம் செய்து தேர்வு எழுத தயாரானார்கள். தமிழ்நாட்டில் விண்ணப்பித்தவர்களில் 96 சதவீத மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். இந்தியாவிலேயே மராட்டியம், கேரளாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியது தமிழ்நாட்டில்தான். 8 மாவட்டங்களிலுள்ள 158 மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

ஏற்கனவே இந்த தேர்வை எழுதவரும் மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. எந்த விதமான காகிதங்களோ, ஜாமெட்ரி பாக்ஸ், பென்சில், பிளாஸ்டிக் கைபைகள், கால்குலேட்டர், பேனா, ஸ்கேல், எழுதுவதற்கான அட்டை, பென்டிரைவ், ரப்பர், செல்போன், மணிபர்சுகள் போன்றவை கொண்டுவரக்கூடாது என்றும், கூலிங்கிளாஸ்கள், பெல்ட், தொப்பி, மோதிரம், கம்மல், மூக்குத்தி, ஹேர்பின், கழுத்தில் சங்கிலி, சட்டையில் பேட்ஜ், தலையில் மாட்டும் கிளிப், கைக்கெடிகாரம், பிரேஸ்லெட் மற்றும் உலோகத்தாலான எந்தப்பொருளும் அணிந்திருக்கக்கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு எழுத வந்திருந்த மாணவர்களுக்கு நடந்த கெடுபிடியோ அவர்களை பெரும்பாடு படுத்திவிட்டது.

கொஞ்சம் முழங்கைக்கு சற்று கீழே நீளம்கொண்ட குர்தா அணிந்துவந்த மாணவிகளின் குர்தாவை வெட்டிவிட்டார்கள். முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடைவிதிக்கப்பட்டது. சில மாணவிகள் காதில் உள்ள கம்மலை கழட்ட பெரும்பாடுபட்டார்கள். நீள தலைமுடி உள்ள பெண்கள் எல்லாம் முடியை அவிழ்த்து விரித்துப்போட்டுவிட்டு ஹாலுக்குள் போகச்சொன்னார்கள். காதில் டார்ச் அடித்து பார்த்தார்கள். உடலில் பொட்டு நகைக்கூட போடமுடியாத நிலை, வேலைப்பாடுமிக்க துப்பட்டா அணிந்து வந்திருந்த சில மாணவிகளிடம் துப்பட்டாவை கழட்டிவிட்டுதான் போகவேண்டும் என்று வலியுறுத்தியதால், ஆண்களோடு தேர்வு எழுதுவதற்காக தேர்வு அறைக்குள் செல்லும்போது பெண்கள் கூனி குறுகியபடி சென்ற காட்சி பரிதாபகரமாக இருந்தது. மெட்டல் டிடெக்டரால் உடல்முழுவதும் தடவி சோதனை போட்டார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக பெரிய கொடுமையாக, கேரளாவில் ஒரு மையத்தில் உலோகத்திலான 'ஹ¨க்' இருக்கிறது என்பதற்காக பெண்களை அவர்கள் அணிந்திருந்த மேல் உள்ஆடையை கழட்டிவிட்டு தேர்வு அறைக்குள் செல்லச் சொன்ன கொடுமை நடந்திருக்கிறது. ஆண்-பெண் இருவருமே காலில் 'ஷ¨', ஜீன்ஸ் மற்றும் கருப்புநிற ஆடைகள் எதுவும் அணியக்கூடாது, ஆண்களும் முழுக்கை சட்டை அணிந்து வந்திருந்தால், அதை அரைக்கை சட்டையாக கத்திரிக்கோலால் வெட்டினார்கள். மொத்தத்தில், மனமகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தேர்வு எழுதுவதற்கு போகவேண்டிய மாணவர்களை, மனஉளைச்சலோடு, குழப்பமான மனஉணர்வோடு தேர்வு எழுதவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கினார்கள்.

மனஉளைச்சலோடு தேர்வு எழுதினால், எப்படி அவர்களால் நன்றாக தேர்வை எழுதியிருக்கமுடியும். கட்டுப்பாடுகள் தேவைதான். அதற்குத்தான் எவ்வளவோ வழிகள் இருக்கிறதே? நடந்துசென்றாலே சோதனை செய்யும் மெட்டல் டிடெக்டர்கள், கண்காணிப்பு கேமராக்கள் என்று இப்போது எவ்வளவோ சாதனங்கள் இருக்கும்போது, மாணவ-மாணவிகளை இப்படி அவமானப்படுத்துவதுபோல் நடக்கும் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கிவிட்டன. தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்கும்போது, கண்காணிப்பாளர்கள் மட்டும் எவ்விதகட்டுப்பாடும் இல்லாமல், அவர்கள் விதவிதமான நகைகளோடும், ஆடைகளோடும் வந்திருப்பதை கண்ட மாணவ-மாணவிகள் அந்த துன்பத்திலும் சிரித்துக்கொண்டார்கள்.

Sunday, May 7, 2017

‘தப்பு பண்ணிட்டேன் சார்... என்னைக் கொன்னுடுங்க!’ - தாய், தங்கையைக் கொன்ற இன்ஜினீயர் கதறல் #VikatanExclusive

எஸ்.மகேஷ்


சைதாப்பேட்டையில், தாயையும் தங்கையையும் கொன்ற இன்ஜினீயர், போலீஸ் விசாரணையில்... 'தப்பு பண்ணிட்டேன் சார், என்னையும் கொன்னுடுங்க' என்று கதறியுள்ளார். அவருக்கு போலீஸார், கவுன்சலிங் அளித்ததோடு, சிறையிலும் தொடர்ந்து கவுன்சலிங் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.




சென்னை, சைதாப்பேட்டை, கே.பி.கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தார். இவரது கணவர் சண்முகம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறந்துவிட்டார். இதனால், ஹேமலதா, மகன் பாலமுருகன், மகள் ஜெயலட்சுமி ஆகியோருடன் வசித்து வந்தார். பாலமுருகன், எம்இ படித்துவிட்டு ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றினார். ஜெயலட்சுமி, இன்ஜினீயரிங் படித்துவந்தார்.



இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி சண்முகத்தின் தங்கை யசோதா, ஹேமலதாவின் செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதனால் யசோதா, நேரில் அங்கு சென்றார். அப்போது, கழுத்தில் ரத்தகாயங்களுடன் ஹேமலதா வீட்டுக்குள் இறந்து கிடந்துள்ளார். மகள் ஜெயலட்சுமி, படுக்கையறையில் கழுத்து, வயிற்றில் ரத்த காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். யசோதா, சைதாப்பேட்டை போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தியதில்... தாயையும் தங்கையையும் பாலமுருகன் கொலைசெய்தது தெரியவந்தது. அதன்பேரில், அவரை போலீஸார் கைதுசெய்தனர். வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியபோது, தண்ணீர் தொட்டியில் மூன்று செல்போன்கள், ஒரு லேப்டாப் இருந்ததை போலீஸார் கண்டுப்பிடித்தனர். அதில், சில முக்கியத் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்துள்ளன. கைதான பாலமுருகன், கொலைசெய்ததற்கான காரணத்தை போலீஸாரிடம் சொன்னபோது, அவர்களுக்கே கண்ணீர் வரவைத்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'பாலமுருகனின் அப்பா சண்முகம், அரசுத்துறையில் பணியாற்றிவந்துள்ளார். ஹார்ட் அட்டாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் இறந்துவிட்டார். அப்பாவின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்துள்ளார் பாலமுருகன். அதன்பிறகு, அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறியுள்ளன. இந்தச் சூழ்நிலையில், அப்பாவின் முதலாமாண்டு நினைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்த பாலமுருகனின் மனநிலை மேலும் பாதித்துள்ளது. இதனால், அப்பா சென்ற இடத்துக்கு மூவரும் சென்றுவிடுவோம் என்று ஹேமலதாவிடம் பாலமுருகன் சில நாள்களுக்குமுன் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், பாலமுருகனை சமாதானப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், அப்பாவின் நினைவுகள் அவரை வாட்டியதால், தற்கொலைசெய்துகொள்ள முடிவுசெய்துள்ளார். அப்போது, அம்மாவும் தங்கையும் அனாதையாகிவிடுவார்கள் என்று கருதிய பாலமுருகன், நள்ளிரவில் இருவரையும் கொலைசெய்துள்ளார். பிறகு, தற்கொலை செய்ய கேளம்பாக்கம் கடலுக்குள் சென்றபோது, அலை அவரை வெளியே தள்ளிவிட்டது. இதனால், கடற்கரையில் கால்போன போக்கில் நடந்துசென்றபோது, ரோந்து போலீஸார் பாலமுருகனைப் பிடித்து சைதாப்பேட்டை போலீஸில் ஒப்படைத்தனர். அப்போது, பாலமுருகன், 'தப்பு பண்ணீட்டேன் சார், நானும் சாகணும், அம்மா, தங்கையைக் கொன்ன பாவம் என்னைச் சும்மா விடாது' என்று கதறியுள்ளார். என்னை வெளிய விடுங்க, நான் இனி உயிரோடு இருந்து எந்தப் பயனும் இல்லை. அப்பா, அம்மா, தங்கை என எல்லோரும் போன பிறகு நான் மட்டும் இருந்து என்ன பயன். நானும் சாகணும்' என்று விசாரணையின்போது சொன்னார். உடனடியாக நாங்கள், பாலமுருகனை சமாதானப்படுத்தி, அவருக்கு முடிந்தளவுக்கு கவுன்சலிங் கொடுத்தோம். அதன்பிறகே, கொஞ்சம் அமைதியானார். இருப்பினும் அவரது மனநிலை அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு கவுன்சலிங் கொடுப்பது தொடர்பாகவும் சிறைத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம்" என்றார்.

பாலமுருகன் கைதுசெய்யப்பட்டவுடன், உறவினர்கள் அவரைச் சந்திக்க போலீஸ் நிலையத்துக்கு வந்துள்ளனர். அப்போது, எதுவுமே பேசாமல், இறுகிய மனதுடன் இருந்துள்ளார் பாலமுருகன். அப்போது, அவரது நெருங்கிய உறவுக்காரப் பெண் ஒருவர் பாலமுருகனிடம் பேச முயன்றுள்ளார். ஆனால், அவரிடமும் பாலமுருகன் மனம்விட்டுப் பேசவில்லை. அவரது மன இறுக்கத்தால், வேறு எந்தவித தவறான முடிவையும் எடுப்பதற்கு முன்பு, கவுன்சலிங் கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் போலீஸ் மற்றும் சிறைத்துறை எடுத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

செல்லாத சான்றிதழ்கள்...?! அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பில் குளறுபடியா?
கே.பாலசுப்பிரமணி


VIKATAN 



உயர் கல்வியில் உலக அளவில் சிறந்து விளங்கும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தரப்படப்போகும் சான்றிதழ் செல்லாது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

ஒரு ஆண்டாக துணைவேந்தர் இல்லை

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ராஜாராம் கடந்த 2016-ம் ஆண்டு மே 26-ம் தேதியுடன் ஓய்வு பெற்று விட்டார். அவருக்குப் பதில், காளிராஜ் என்ற மூத்த பேராசிரியர் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை நியமிக்கக் கூடாது என்று ராஜாராமே தடுத்து விட்டதாகச் சொல்கிறார்கள். ராஜாராம் துணைவேந்தராக நியமிக்கப்படும் முன்பு பொறுப்பு துணைவேந்தராக காளிராஜ் இருந்திருக்கிறார். மூத்த பேராசிரியர் ஒருவரை துணைவேந்தர் பொறுப்புக்கு நியமிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழக விதியில் கூறப்பட்டிருக்கிறது.

ஏறக்குறைய ஒரு ஆண்டு ஆன நிலையில் இன்னும் அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இப்போது பல்கலைக்கழக நிர்வாகத்தை மூன்று பேர் கொண்ட கவுன்சில்தான் கவனித்துக் கொள்கிறது. இந்த கவுன்சிலில் உயர் கல்வித்துறைச் செயலாளர், அண்ணாப் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் இருக்கின்றனர். புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக தேர்வுக்குழு ஒன்றும் கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி நியமிக்கப்பட்டது. ஏறக்குறைய 6 மாதமாக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான பணிகளில் இந்தக் குழு ஈடுபட்டுள்ளது.

பேரம் பேசப்படுகிறதா?

துணைவேந்தர் பதவிக்கு வருபவர்கள், 10 ஆண்டுகள் பேராசிரியராக இருந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தவிர சர்வதேச அளவிலான கருத்தரங்கம் ஒன்றை நடத்திய அனுபவம் கொண்டவராக இருக்கவேண்டும். புதிய துணைவேந்தர் பதவிக்கு இதுவரை 40 பேர் விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 20 பேர் கூட மேலே குறிப்பிட்ட தகுதிகளுடன் இல்லை என்று சொல்கின்றனர். துணைவேந்தர் நியமிப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பேசப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. பேரம் படியாததால்தான் நியமனம் தள்ளிப்போகிறது என்றும் சொல்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இன்னும் பட்டமளிப்பு விழா நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. ஆண்டு தோறும் டிசம்பர் அல்லது ஜனவரியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்துவது வழக்கம். 37-வது பட்டமளிப்பு விழா நடத்துவது குறித்து கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழாவை வரும் மே 19-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறைச் செயலாளர் பட்ட சான்றிதழில் கையெழுத்து இடுவார் என்றும் சொல்கின்றனர்.

பட்டம் செல்லுமா?

மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டத்தில் துணைவேந்தர் கையெழுத்து மட்டுமே இருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக விதிகளில் கூறப்பட்டுள்ளது. வேறு ஒருவர் போடும் கையெழுத்து செல்லாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் செல்லாத சான்றிதழ் தருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏன் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கல்வியாளருமான அனந்தகிருஷ்ணனிடம் பேசினோம். "துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்தக் கூடாது. வேறு யாரும் கையெழுத்துப் போட உரிமை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக விதிமுறையில் உள்ளது. வேறு யாராவது கையெழுத்துப் போட்டால் அந்தப் பட்டம் எங்குமே செல்லாது. வெளிநாட்டிலும் செல்லாது. துணைவேந்தர் நியமனத்தில் என்ன தாமதம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அது குறித்து நான் வெளிப்படையாகப் பேச விரும்பவில்லை. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இனியும் தாமதிக்காமல் உடனடியாகத் துணைவேந்தரை நியமிக்கவேண்டும்" என்றார்.

பணம் ஒரு தகுதியா?


இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலாவிடம் கேட்டோம். "தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அதை நிர்வாகம் செய்வது அண்ணா பல்கலைக்கழகம்தான். லட்சகணக்கான மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளை நிர்வகிக்கும் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடமாகத் துணைவேந்தர் பதவியில் யாரும் இல்லாமல் காலியாக இருப்பது, இந்த அரசு செயல்படாத நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தமிழகக் கல்வி சூழலின் அவலத்தை இது வெளிக்காட்டுகிறது. பல்கலைக்கழகத்தில் பல திட்டங்களை அமலாக்குவதற்கு துணைவேந்தர் பதவி முக்கியம். விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியான துணைவேந்தரை தேர்வு செய்வதில் அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது? என்ன தகுதியை எதிர்பார்க்கின்றனர். பணத்தை ஏதும் தகுதியாக வைக்கிறார்களா? என்ற கேள்விகள் இருக்கிறது. எனவே உடனடியாக துணைவேந்தர் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்பற்ற தன்மையோடு இருக்கக் கூடாது." என்றார்.

Senior GMC students let off with warning for ragging in Chennai

By Express News Service  |   Published: 07th May 2017 04:04 AM  |  

CHENNAI: Senior students of Government Medical College, Omaburar Estate, accused of ragging first-year students were let off by the internal anti-ragging committee.

The committee was unable to collect enough evidence to hold the senior students guilty, particularly in connection with complaints pertaining to juniors getting beaten up. Express on Saturday reported that an internal inquiry was underway at the college after first year students were allegedly beaten up by seniors when they resisted ragging.

In a complaint filed on Thursday (May 4), one of the students had said senior girls forced her counterparts to speak to boys on their Facebook list over phone and those who resisted were paraded with shoes over their heads. The University Grants Commission, apex body for regulating higher education in the country, had  directed the college to submit a report within 24 hours.

The anti-ragging committee of the college conducted an enquiry with all the concerned students and concluded that there was nothing serious and allegations were minimal.

Dr Jayanthi, vice principal of the college, who headed the enquiry said, “We have warned the seniors not to repeat even these negligible acts in future and we will be observing the activities of these students in the coming months.”

Asked about allegations of students getting beaten up and girls being forced to speak over phone, she said, “I don’t know. We have submitted the final report based on a detailed query on individual basis on Saturday.” 

Let’s go clubbing to LOL

By Gokul M Nair  |  Express News Service  |  
Last Updated: 06th May 2017 03:44 AM
 
These comedians are senior citizens, whose only goal is to crack jokes that do not hurt anybody’s feelings.Ahead of World Laughter Day (May 7), CE  looks at several humour clubs in the city, who are a tight-knit community.

CHENNAI: Who hasn’t felt a heady rush after hearing a good joke and laughing till your tummy aches? The Laughter Yoga movement describes laughter as a ‘positive and powerful emotion that has everything required for individuals to change themselves and the world in a peaceful and positive way’. Humour has long been a part of Chennai , and City Express speaks to some of the city’s long-standing humour clubs on how they live each day one laugh at a time!

Humour clubs have been helping people unwind and also help in building a sense of community among its members. Humour Club International (Triplicane chapter) is the oldest in Chennai, having been started in 1983. “There were hardly 15 members when we started, and it was almost a sort of a pensioners association!” chuckles R Sekharan, secretary. “They included mostly senior citizens, meeting in the morning at the Hindu High School in Triplicane (which is why it is called Humour Club Triplicane Chapter). But the essence of the club was to spread humour among people irrespective of caste, creed and religion — to create a humour family, so to speak!”
Humour clubs play a significant role especially in today’s world due to lifestyle changes that has made everyday living hectic and stressful. “A few decades ago, there was not a lot of stress in daily life. We had our jobs and a fixed salary, and that was enough. After the IT boom, jobs have become very competitive and the office environment is stressful. People need to learn to relax and let go!” he avers. “Happiness seems to come at a premium though they are well-paid and well-settled.”

Humour Club International has 1,800 members (probably the largest), with each paying an annual subscription of `500. “Can you imagine, when we first started out, it was just `12!”laughs Sekharan.
While some clubs have a registration fee for their membership, others don’t and see the club merely as a means of forging a community bond, like the Humour Club of T Nagar, formed nearly 15 years ago. “The third Sunday of every month is a must-visit day for all our members,” smiles
Dr S Sekhar, founder-president, Humour Club T Nagar. “We don’t have any form of membership, since we don’t want to be answerable to anyone. We just want to coordinate together and make it an enjoyable experience for our members! Youngsters frequent only along with their grandparents when they have vacations or such — or maybe also because we don’t allow slapstick or sarcasm jokes.”
Most prominent localities in the city have made it a point to have humour clubs in their community, while at the same time collaborating with other clubs in the city for special events. “We often go and perform as guests at the events of Humour Clubs in Besant Nagar and Mylapore,” says Udhaya Kumar, president and secretary of humour club, Tambaram, which began seven years ago. Regular meetings also happen at Anna Nagar and Ambattur as well.

Despite the mushrooming of so many organisations, there are some common principles they hold sacrosanct. “People usually come with family — especially elderly people, so they can also share whatever jokes or humorous anecdotes they want. However, the humour is not without a pause. Since we don’t want to hurt anybody’s feelings, we stipulate that there will not be any adult jokes, no political jokes, or those making fun of the disabled community,” says Sekharan. Most clubs also urge members to take up jokes from all spheres of life including in uniform, education or school.

However, the most pertinent of all issues is that there are rarely any youngsters attending the meetings. “Besides humour, the club meetings help children interact with elders and their peers, something that is lacking these days,” says Udhaya Kumar. “Spending time at the club can also improve public speaking and help children get over stage-fright. After all, the aim is to create a humour family....where everyone is happy!
 More than just laughs

The clubs often invite drama, theatre and mimicry artistes to entertain audiences. Some also contribute socially by voluntarily supporting education of underprivileged children, raising funds for the families of soldiers killed in action, as well as through medical camps and
eye-checkups.

Were beaten for resisting: Juniors at Government Medical College in Chennai

By Ram M Sundaram  |  Express News Service  |   Published: 06th May 2017 03:48 AM  |  
Last Updated: 06th May 2017 03:48 AM

CHENNAI: An internal inquiry is underway at the Government Medical College in Omandurar Estate after first-year students were allegedly beaten up by seniors when they resisted ragging. Senior girls forced juniors to speak, over the phone, to boys on their Facebook list. If they didn’t do so, they were paraded around the hostel with shoes over their heads, a first-year student alleged.
The incident came to light after some students wrote to the University Grants Commission (UGC) at around midnight on Thursday, (reportedly, minutes after they were ragged) requesting to shift due to a fear of further harassment.

Subsequently, the anti-ragging wing under the commission instructed the institutional head to take action and file an FIR within 24 hours based on the recommendation of the local authorities.
In the official communication sent to the college on Thursday (a copy of which is available with Express), the commission requested the vice-principal to identify and counsel the victims so they feel safe and know that authorities will take necessary action.

Vice-principal Dr Jayanthi confirmed to this newspaper that they have received communication and have immediately taken action. “In the committee’s observation, nothing serious has emerged and the allegations were minimal, like being sent to shops etc,” she said.

Responding to the question on girls being forced to make calls to senior boys, she said: “It was brought to our notice. We are talking to the first-year students one by one. We have asked them to write down whatever happened. Their identities would be kept anonymous”.

One of the first-year students said: “They threatened us into do demeaning work and beat us up when we refused.” She claimed this was not the first time and added first-year students were under constant fear in the hostel and college premises.

Nearly 20 second-year MBBS students were called for enquiry in connection with the incident and the process is still ongoing.
2,595
Total complaints received across India since 2009
2,475
Number of complaints closed
30
Complaints active in call centre
30

Complaints active in monitoring agency
48
Complaints active in University Grants Commission
22
Complaints active in various regulatory authorities

NEET 2017 Good LUCK


 More than 1,500 candidates get placement offer letters

32 physically challenged students too take part in campus recruitment drive

More than 1,500 students, including 32 visually challenged students and those with hearing impairment, of Kalasalingam University in Krishnankoil in Virudhunagar district received offer letters from 85 companies at a campus recruitment drive on Saturday.

Giving away the offer letters at a function, the speakers urged the students to acclimatise themselves to the new environment at the new workplace and become achievers.

“Learn new things and work hard which alone will take you to the top,” said Viswanathan Venkatasubramanian, Head (Engineering hiring), Wipro. Despite new policies on hiring migrants by countries such as the US, there were good signs of job generation as many companies conducted campus placements regularly.

As assured by Chancellor K. Sridharan when the students stepped into the college, many got placed in top companies. “Your hard work will never go unrecognised. Continue to put in efforts,” said S. Sasi Anand, Director.

Dean (Placement Cell and Corporate Relations) Allaudin said 1,503 students received offer letters, and 242 of them were selected by more than one company. The companies which participated in the campus interview included Wipro, Amazon, Ernst Young, Tafe, Tech Mahindra. The compensation package ranged from Rs. 4.5 lakh to Rs. 6.5 lakh per annum.

Vice-Chancellor S. Saravana Sankar said their university was the only institution in Asia to offer B.Tech. for speech and hearing impaired students.

Doctors’ association asks State to approach Supreme Court

 Government urged to promulgate an ordinance

The Tamil Nadu Government Doctors Association has asked the State government to file a separate case in the Supreme Court seeking to amend the Medical Council of India’s regulations, clauses 9, 4 and 5 suitably, to empower the State to adopt its own marks and quota system.

The association has also asked the State to promulgate an ordinance to retain the existing structure of postgraduate medical admissions if possible. “If not, the State can extend the MCI direction to allot 10% into three years marks to all four categories of doctors as specified in the prospectus,” said K. Senthil, State president, TNGDA. “The TNGDA may decide to join in the case if the State government goes forward with it,” he said.

The move follows the Madras High Court verdict on Saturday that stated postgraduate medical admissions would be conducted as per the MCI’s regulations.

Other doctors’ associations, who have been agitating for over two weeks now, said they would decide on their next step. The organisations have been seeking a continuation of the State’s existing system of allotting marks for postgraduate admissions. The agitations have taken the form of boycotting of a portion of outpatient services, dharnas and protests and mass casual leave.
A. Ramalingam, State organising secretary, Service Doctors and Postgraduates Association (SDPGA), in a message, said the association had convened an emergency executive committee meeting at Madras Medical College on Sunday.

The association has demanded that the government promulgate a special ordinance to protect the 50% service quota immediately.

N. Gnanaprakasam, president, Tamil Nadu Medical Officers Association, said they would continue their protest. “We suspended our agitation for a day because of the court verdict but we will now continue protesting till a solution is found. The 6,000 doctors on the field will be called to strike on a rotation basis without affecting any patient services,” he said.

The Doctors Association for Social Equality, which on Friday formed a joint action committee with a few other organisations over the service quota and other issues, said on Saturday that the Centre must promulgate an ordinance to ensure that service quota in all States was given as per that State's convenience in order to ensure the quality of the public health system.

There is also a definite need to strengthen the public health system in the country, said G. Ravindranath, general secretary of the organisation.

We will continue to protest till a solution is found
N. GnanaprakasamPresident, Tamil Nadu Medical Officers Association
Post-Nirbhaya, rise in plaints on crime against women
New Delhi:


It has been more than four years since the Nirbhaya gang rape-murder case, but not much seems to have changed on the ground as figures on crimes against women show.
 
According to the data of National Crime Records Bureau (NCRB), while close to 35,000 rape cases were being reported every year from across the country since 2013, close to 1.4 lakh rapes cases were being tried in the courts by the end of 2015. Since 2012 when the Nirbhaya gang rape happened, there was a marked increase in the registration of cases relating to crimes against women across the country . While 24,923 rapes were reported in 2012, the figure was 33,707 in 2013, attributed to increased awareness and prompt registration of FIRs by police on complaints of women. The number of rape cases rose to 36,735 in 2014 out of which 2346 were gang-rapes. However, the numbers came down to 34,561 in 2015 including 2,113 gang-rapes.

The number of crimes against women continuously increased from 2011to 2014.While 2,28,650 cases were re ported in 2011, it went up to 2,44,270 cases in 2012. It went up sharply to 3,09,546 cases in 2013 and 3,37,922 in 2014.However, the number of cases declined to 3,27,394 cases in 2015.
NCRB data state that of the 34,651 rape cases registered in 2015, offenders were known to the survivors in 33,098 cases (95.5 percent). The conviction rate in crimes against women remains abysmal as reflected in the data released by NCRB.

According to NCRB, 10,80,144 cases of crimes against women were pending in trial courts by the end of 2015.In 2015, only 27,844 cases ended in conviction, a rate of 21.7%. In rape cases, out of 24,486 persons whose trial was completed that year, 7,185 people were convicted, 16,849 were acquitted and 452 discharged by the courts.

In 2014, 26,660 cases relating to crimes against women ended in conviction -a conviction rate of 21.3%. By the end of 2014, a total of 9,82,516 cases were pending for trial in the courts. The courts convicted 6,637 persons of rape, acquitted 16,575 and discharged 487 accused in rape cases in 2014.

Reddy had listed nearly Rs 300cr given as gratification
Chennai: 
 


Sand mining baron Sekhar Reddy's diary , now in the possession of I-T officials, is likely to give sleepless nights to the Edappadi Palaniswamy government. An I-T official said the department has sent to Tamil Nadu chief secretary Girija Vaidyanathan a letter with names of ministers, MLAs and senior members of the state bureaucracy based on diary notings made by Reddy on money disbursements running into several hundred crores of rupees.
 
The I-T report has sought action against ministers and officials, whose names fig ure in the diary . I-T sources told TOI that the diary, seized during raids on Reddy's residence last November, contained a mine of information on his “dealings“ allegedly with ministers and senior bureaucrats. Efforts to talk to government officials proved futile as they remained tight-lipped. “We sent a letter to the chief secretary with names of beneficiaries as mentioned in Reddy's diary . We wanted the government to take action against these people through its vigilance department,“ said a senior I-T official on the condition of anonymity .The department refused to mention the names against whom it sought action.

“The sand mining baron has meticulously listed more than `300 crore given to ministers, MLAs and senior bureaucrats as gratification for contracts and benefits received from the government,“ said the official. On Friday ED officials attached `37 crore worth of property and assets belonging to Reddy as he could not properly account the cash seized from his residence and other places after demonetisation was announced on November 8. I-T sleuths seized `140 crore in new `2,000 notes and old notes of `500 and `1,000.

“Based on Reddy's diary notings we conducted searches at residences and offices of former chief secretary Rama Mohana Rao and state health minister C Vijayabaskar. The raids on December 27, 2016 were conducted to corroborate the names mentioned by Reddy as recipients. Of the four recipients, three, barring Rao, accepted having financial dealings with Reddy ,“ said the official.

Vijayabaskar, the official said, was under I-T radar since Reddy's diary was seized. “The minister and his associates were on our watch list since Reddy and two others were raided,“ he said.
Unlike other beneficiaries, Reddy maintained a detailed account of the benefits he showered on the ministers, officials and others, including the private secretaries of ministers.



Govt doctors may bag most of PG seats with incentive marks
Chennai:


`80% of 3,000 Seats Will Go To Them' 
 
The protracted legal wrangle over admission procedure for postgraduate medical courses in Tamil Nadu has ended up in an unintended windfall for doctors in government service aspiring to study PG courses. Ironically, it was these in-service candidates who saw red in the Medical Council of India's (MCI) regulations and spearheaded a fight ­ both inside and outside court rooms.
“At least 80% of the 3,000odd PG seats would go to inservice candidates eligible to claim incentive marks as stipulated in Regulations 9(4) of the Postgraduate Medical Education Regulations, 2000,“ said a senior counsel privy to the legal battle. Non-service candidates, ho chose to remain silent who chose to remain silent spectators will be the worsthit, since they would get into the zone of consideration only if they score high without any incentive marks, he said.

Now that a tie-breaker judge, to whom the case was referred after a division bench delivered a split verdict, sailed with a judge who held state norms for PG medical admissions were untenable, the 50% quota for government doctors stands abolished. In effect, while the 50% reservation is gone, the incentive marks scheme for doctors in remote and difficult areas has survived. In other words, it can now be applied for the entire government quota seats, and not restricted to 50% reserved for in-service candidates alone.

Since MCI regulations contemplate award of upto 30% of a candidate's NEETPG marks as incentive, everyone with three years service in designated places will automatically be richer by 30% marks than non-service candidates. There is a hitch though. Incentive marks can be applied only if the candidate concerned clears NEET-PG by scoring the minimum required mark, and cannot be used to clear NEET-PG.

Unless a government doctor in remote and difficult areas fails to score minimum marks, nothing can stop him her from bagging a PG medical seat, say jurists. “At least a few hundred government doctors in this category would score the maximum mark of 1,500 this time. If the candidate scores 1,270 marks in NEET-PG, his total would go beyond the maximum mark, thanks to 30% weightage for his service in remote and difficult area,“ said a senior advocate.

Now that the high court has made it clear that it would not interfere with the state government's right to define the notified areas and public health centres in order to bring them under the eligibility bracket for incentive marks, government might name specific hospitals in city limits as `difficult'. For instance, an area like KK Nagar in Chennai could be defined as `difficult' as it witnesses intimidation and assault of doctors frequently . The government general hospital too could be termed difficult, for its sheer size of patient population, he said. As of now, this year's PG medical admissions will have a single merit list, but only in-service candidates will have the benefit of incentiveweightage marks.

NOTE FOR THIS NEET 2017

imggallery
No more 50% quota for govt docs in PG med admissions: HC
Chennai: 
 


Admissions to postgraduate medical courses in Tamil Nadu will not be the same again. The Madras high court on Saturday ruled that the state must follow only Medical Council of India regulations in awarding incentive marks to government service doctors. It also did away with the three-decade-old practice of reserving 50% of government quota seats to in-service candidates.
 
As a result, there will be no reservation for in-service candidates as contemplated in the prospectus, and marks cannot be awarded for each year completion of Compulsory Rotatory Residential Internship (CRRI). The pattern of awarding marks will also not be the state's discretion and Clauses 16 and 17 of the prospectus were ruled as being contrary to MCI regulations. The state, however, can define remotedifficult areas. Instead, in-service candidates in remote and difficult areas would be entitled to 10% of their NEET-PG marks a year as incentive, to a maximum of 30% of NEET-PG marks.

Justice M Sathyanarayanan, asked to rule on the issue after the April 3 split verdict by a two-judge bench, said: “The Indian Medical Council Act, 1956, and its various regulations, especially the Post Graduate Medical Education Regulation, 2000, are having primacy . The only leverage given to them (state) is to identify remote and difficult areas.“ Justice M Sathyanarayanan, asked to adjudicate on the issue after the April 3 split verdict by a two-judge division bench, said, “This court is of considered view that the Indian Medical Council Act, 1956, and various regulations framed thereunder, especially , the Post Graduate Medical Education Regulation, 2000, are having primacy .

Therefore, the appellants are bound to follow the same and the only leverage given to them is to identify the remote and difficult areas.“ As for identification of `hill remotedifficult areas' and non-inclusion of medical officers serving in `rural areas', the judge said he recorded the government stand that those serving in rular PHCs would be considered under the category . The SC had clearly held that Regulation 9 of the Post Graduate Medical Education Regulations, 2000, was a “complete code by itself and any law with regard to that will be beyond legislation competent of the state legislation,“ he said. Pulling up Tamil Nadu for ignoring statutory rules, regulations and Supreme Court orders, he said was seeking to “justify the stand on the ground of sentiments and sympathy . For the present piquant situation, they (state government) are alone to be blamed.“

He agreed with senior MCI counsel Vijay Narayan that despite repeated SC pronouncements on the primacy of MCI in medical education, some states chose to frame their own guidelines. Tamil Nadu's prospectus for this year's postgraduate medical education “is one such instance,“ Justice Sathyanarayanan said.

MCI has categorically said the benefit of proviso to Regulation 9 (IV) shall be available only to such in-service candidates who secured the minimum marks and qualified for NEET-PG test. Weightage in marks as an incentive for each year of service in remote andor difficult areas could be granted to deserving in-service candidates only after they secured minimum marks and cannot be provided to qualify the NEET-PG test.
கீழ்ப்பாக்கம் அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் பணியால் 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்





சென்னை கீழ்ப்பாக்கம் அருகே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது.

மே 07, 05:00 AM

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதை மெட்ரோ ரெயில் நிறுவன ஊழியர்கள் உடனடியாக சரி செய்தனர்.

6 அடி பள்ளம்

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்கும் வகையில் நடந்து வருகின்றன. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் இருந்து, திருமங்கலம், அண்ணாநகர் வழியாக சென்னை சென்டிரல் வரையிலான மெட்ரோ ரெயில் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலை, டெய்லர்ஸ் சாலை சந்திப்பு அருகே சாலையில் நேற்று காலை 7 மணியளவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

சுமார் 6 அடி ஆழத்துக்கு உருவான அந்த பள்ளத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளம் ஏற்பட்டது காலை நேரம் என்பதால் வாகன போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் திடீர் பள்ளத்தில் வாகனங்கள் ஏதும் சிக்கவில்லை. பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.

நிரப்பப்பட்டது

திடீர் பள்ளம் ஏற்பட்டது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, கான்கிரீட் கலவை மூலம் அந்த பள்ளத்தை நிரப்பும் பணி நடந்தது. சுமார் 3 மணி நேரம் இந்த பணி நடைபெற்று காலை 10 மணியளவில் அந்த பள்ளம் முழுமையாக நிரப்பப்பட்டது.

மேலும் பள்ளம் விழுந்த இடத்தின் மேல் இரும்பு தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தின் மேல் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டு இருக்கிறது.

திடீர் பள்ளமானது சாலையின் மையத்தில் உள்ள தடுப்புச் சுவர் பகுதியையொட்டி ஏற்பட்டதால், போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை. அதனால், சாலையில் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின.

எனினும், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூடியதாலும், பள்ளத்தை சீரமைக்கும் பணி காரணமாகவும் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

வாடிக்கையான ஒன்று

மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் அண்மை காலங்களில் தொடர் பள்ளங்கள் விழுவது, விரிசல்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே பயணிக்கின்றனர்.

கடந்த மாதம்(ஏப்ரல்) 9-ந் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் மாநகர பஸ் ஒன்றும், டாக்டர் ஒருவரின் காரும் கவிழ்ந்தது நினைவு கூரத்தக்கது.

NEWS TODAY 21.12.2025