Tuesday, May 23, 2017

மெரினா பீச்சில் பஜ்ஜி சாப்பிட விருப்பமா? இந்த செய்தியைப் படித்துவிட்டு பதில் சொல்லலாம்

By DIN  |   Published on : 20th May 2017 02:46 PM  
beach_day

சென்னை: சென்னை மெரினா பீச்சில் கால் நனைத்து நேரத்தைப் போக்க மட்டும் சென்றால் பிரச்னை இல்லை, அங்கே சாப்பிட நினைத்தால் உங்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படலாம்.
மெரினா கடற்கரையில் காய்கறி பஜ்ஜி, மீன் வறுவல், ஐஸ்க்ரீம் போன்றவை வெகு பிரபலம்.
இவை எல்லாம் உண்மையிலேயே தரமான உணவுகள்தானா? என்றால் இல்லை என்பதுதான் ஒரே பதில். ஒரு நாள் சாப்பிடுவதால் ஒன்றும் ஆகிவிடாது? என்று சப்பைக் கட்டுக் கட்டினால் நிச்சயம் நீங்கள் ஏமாந்து போவீர்கள்.
மெரினா கடற்கரையில் உள்ள ஏராளமான உணவகங்களில் வெள்ளிக்கிழமை, உணவு பாதுகாப்பு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய சோதனயில் சுமார் 140 கிலோ கிராம் கெட்டுப் போன உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் வருவாய் துறைக்கு, மெரினா கடற்கரையில் விற்கப்படும் உணவு குறித்து பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார் வந்ததை அடுத்து, அண்ணா சதுக்கம் முதல் களங்கரை விளக்கம் வரை உள்ள 300 உணவுக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
10 குழுவினர் அனைத்துக் கடைகளிலும் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை பரிசோதித்த போது, கெட்டுப் போன மீன், காலாவதியான ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், அங்கீகாரமற்ற உணவுப் பொருட்கள், அழுகிய பழங்கள், பல முறைப் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் என அனைத்தையும் பறிமுதல் செய்து அகற்றினர். ஆனால், எந்த வியாபாரிக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை.
இவர்கள் யாருக்குமே உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகள் குறித்து எதுவும் தெரியவில்லை. இவர்களை எச்சரித்த விட்டுவிட்டோம் என்று ஒரு அதிகாரி கூறினார்.
இந்த ஆய்வில், 24 கிலோ கிராம் கெட்டுப் போன் மீன், 7 கிலோ காலாவதியான ஐஸ்க்ரீம், பிஸ்கட், 40 லிட்டர் காலாவதியான குளிர்பானம், மீண்டும் பயன்படுத்தப்பட்ட 31 லிட்டர் எண்ணெய், 4 கிலோ கலர்பவுடர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஏற்கனவே 2014ம் ஆண்டு இதுபோன்றதொரு ஆய்வு நடத்தப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு விற்பனையாகும் குடிநீரின் தரமும் கேள்விக்குறியாக இருப்பதால் பொதுமக்கள் இதுபோன்ற இடங்களில் உணவுகளை வாங்கி சாப்பிட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதுபோன்ற உணவுகளை விற்கும் கடைகளில் இருக்கும் பொருட்களை மட்டும் பறிமுதல் செய்துவிட்டால் நடவடிக்கை எடுத்ததாக மாறிவிடுமா? இதுபோன்ற வியாபாரிகளை வெறும் எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டால், இவர்கள் திருந்திவிடுவார்களா?
ஏன் இந்த உணவுக் கடைகளை மாநகராட்சி சீல் வைத்து மூட உத்தரவிடவில்லை. பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற உணவு வழங்கும் செயலுக்கு மறைமுகமாக அரசு அதிகாரிகளும் ஆதரவு கொடுப்பதாகவே பொதுமக்கள் கூறுகிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் காலூன்றி இருப்பதும், கடைகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காததற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
'காற்று வாங்கப் போனாள்... அந்த கன்னி என்ன ஆனாள்...' என்ற பாடலுக்கு இப்போது இப்படி பதில் சொல்லலாம், அவள் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டிருந்தால், டைபாய்ட் போன்ற மிக மோசமான நோய் தாக்கி நிச்சயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பாள் என்று.
இப்படி அரசு அதிகாரிகள் கைவிரித்துவிட்டதால், எல்லாவற்றுக்குமே பொதுமக்கள் தான் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும் என்ற தாரகமந்திரத்தை நாம் மனதில் கொண்டு, காற்று வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தால் மறுநாள் வீட்டில் காற்று வாங்கலாம். இல்லையேல் மருத்துவமனையில்தான் மாத்திரை வாங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 

ஜினியின் பிரம்மாஸ்திரம் பலிக்குமா?

By DIN  |   Published on : 21st May 2017 05:42 AM 
rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பெரும்பாலான தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அது உண்மையான வரவேற்பா, இல்லை, வேறு வழியில்லாமல் வெளியிடும் அறிக்கையா என்று தெரியவில்லை.
ஜெயலலிதாவின் மறைவு, முதுமை காரணமாக செயல்பட முடியாமல் கருணாநிதி வீட்டில் இருப்பது போன்ற காரணங்களால் அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்தித் தாங்கள்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று அரை டஜனுக்கும் மேலான தலைவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
அதிர்ச்சி காரணமாக எதிர்ப்பு? 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதுபோல் கனவு கண்டவர்கள் இருக்கவே செய்தனர் என்றாலும், தற்போது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தால் தங்கள் கனவு பலித்து விட்டதாகவே கருதி, பலர் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அவர்களின் கனவுகளைக் கலைக்கும் வகையில் ரஜினி அரசியலுக்கு வருவதற்கான சமிக்ஞையை தெளிவாகவே கொடுத்துள்ளார். இதில், முதல்வர் கனவில் உள்ள பல தலைவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ரஜினியை எதிர்ப்பதற்கும் தயாராகி வருகின்றனர். அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம் என்று கூறியுள்ள ரஜினியும் அவர்களைச் சந்திக்கத் தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சந்திப்பு அரசியல்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் அவரது ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகழ்வு எந்த வகையிலும் சாதாரணமானது அல்ல. இது அரசியலுக்காக ஆழம் பார்க்கும் ஒரு நிகழ்வு. கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக இதற்காக ரஜினியும் அவரது ரசிகர் மன்றத்தினரும் உழைத்துள்ளனர். 1998-ஆம் ஆண்டுக்கு முன்னால் ரசிகர் மன்றம் தொடங்கியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.
ரசிகர் மன்றத்திலிருந்து 1,000 பேர் சந்திக்க அனுமதி கேட்டால், 300 பேர் மட்டுமே சந்திக்க அழைக்கப்பட்டனர். 1998-ஆம் ஆண்டுக்கு முன் மன்றம் தொடங்கியவர்கள் அப்படியே நிலைகுலையாமல் இருக்கிறார்களா என்பதை அறிவதற்காகவும், அவர்களின் ஆதரவு இருந்தால் கட்சி தொடங்கும்போது பலமிக்கதாக அது அமையும் என்றும் கணித்துதான் அவர்களை அழைத்து ரஜினி பேசியுள்ளார்.
ரசிகர்களின் நம்பிக்கை: இளைஞர்களின் வாக்குகளும் ஆதரவுகளும் யாருக்கும் நிலையாக கிடைத்ததில்லை என்பதைக் கடந்த கால அரசியல் களங்கள் நிரூபித்திருகின்றன. இதை உணர்ந்துதான் ரஜினி செயல்பட முற்பட்டுள்ளார். அதனால், இந்த முறை நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்கின்றனர் அவரைச் சந்தித்த ரசிகர்கள்.
வருவது உறுதி: 1996-இல் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவுடனான மோதலால் திமுக - தமாகா கூட்டணிக்கு ரஜினி ஆதரவு கொடுத்த காலகட்டத்தில் இருந்து ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு இருப்பது உண்மைதான். இதை வைத்து ரஜினியைக் கேலி செய்பவர்கள் பலர் உண்டு.
ஆனால், ரஜினியின் உண்மையான முகத்தை அறியாதவர்கள்தான் கேலி பேசுவர்கள். தனிக் கட்சி தொடங்கி ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும், எல்லாக் காலத்திலும் அவர் அரசியலில் ஏதாவது ஒரு வகையில் பங்கேற்றுள்ளதுடன், பலருக்கு ஆலோசனைகளைத் தெரிவித்தும் வந்துள்ளார்.
வைகோவுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது... 1993-இல் திமுகவில் வைகோவுக்கு நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் அவரைத் தனிக் கட்சி தொடங்கக் கூறியவர்களில் ரஜினியும் ஒருவர். இதற்காக வைகோவுடன் ரஜினி பல மணி நேரம் பேசியதாக வைகோ கூட்டங்களில் தெரிவித்திருக்கிறார். அதைப் போல மு.க.அழகிரிக்கு திமுகவில் நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் எல்லாம் ரஜினியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிகூட ரஜினியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காக ரஜினி வெளிப்படையான ஆதரவைத் தெரிவிக்காவிட்டாலும், மறைமுக ஆதரவை, தர வேண்டியவர்களுக்கு தந்தார் என்பதுதான் உண்மை. இதனால் பலர் வெற்றி அடைந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
கருணாநிதி மீது மதிப்பு: கருணாநிதி மீது ரஜினி எப்போதும் தனி மதிப்பு கொண்டவராக இருந்துள்ளார். ஜெயலலிதாவை முதலில் எதிர்த்தாலும், பிறகு தைரியலட்சுமி என்று புகழும் நிலைக்கு அவர் மீதான ஆதரவு நிலைப்பாட்டிலும் இருந்தார். அதனால் அந்த இரண்டு தலைவர்களின் தலைமை உள்ள வரை அரசியலில் களம் இறங்குவது பற்றி ரஜினி விரும்புவில்லை. ஆனால், இப்போது நிலைமை அப்படியல்ல.
தலைவர்கள் இல்லாததால்... தமிழக அரசியலில் எல்லாத் தரப்பு மக்களும் ஏற்கும் வகையில் பொதுவான தலைவர்கள் இப்போது இல்லை. வெகு சில தலைவர்களைத் தவிர பிற தலைவர்களை அவர்கள் சார்ந்திருக்கக்கூடிய சமுதாயப் பின்னணியுடன்தான் அணுக வேண்டி உள்ளது. ரஜினி மீது இப்படியொரு பார்வை இல்லை. அவர் அனைத்து ஜாதி, மதங்களுக்கும் பொதுவானதாக இருப்பது அவருடைய தனி பலம். இதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ரஜினிக்கு நல்லதொரு தருணமாக தற்போதைய அரசியல் சூழல் அமைந்துள்ளது. அதனால் ரஜினியும் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். போருக்கு (தேர்தலுக்கு) தயாராக இருங்கள் என்று ரசிகர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதன் பின்னணி இதுதான்.
போருக்கு முன்... உடனடியாக இப்போதே ரஜினியால் கட்சியைத் தொடங்கி முன் எடுத்து நடத்த முடியாது. அவர் நடிப்பில் 2 படங்கள் வெளிவர வேண்டியள்ளது. பாமகவுடனான கசப்பால் பாபா படத்தில் எழுந்தது போன்ற பிரச்னை, பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வெளிவரும் படங்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதால் தேர்தல் நேரத்தில்தான் அவர் கட்சியைத் தொடங்க உள்ளதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், ரஜினி அரசியலுக்கு இப்போதே வந்துவிட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் வந்தால், அவர் மீதான விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் மக்கள் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து விடுவார்களோ என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம். அதனால், ரஜினியை இப்போதே அரசியலுக்கு இழுக்கும் வகையில் விமர்சிக்கவும் தொடங்கியுள்ளனர்.
நல்ல மருத்துவர்தான் தேவை: தமிழகத்துக்கு நல்ல நடிகர் தேவையில்லை, நல்ல மருத்துவர்தான் தேவை என்று அன்புமணி ராமதாஸ் முதல் விமர்சனத்தை தொடுத்துள்ளார்.
நடிகராக எத்தனை படத்தில் வேண்டுமானாலும் நடியுங்கள், ரசிக்கிறோம். ஆனால், தமிழர்களை ஆள வேண்டும் என்ற நினைப்பு சரியாக இருக்காது என்று சீமான் கொதித்துள்ளார்.
திமுக எதிர்க்காதது ஏன்? ஆனால், திமுகவிலிருந்து மட்டும் எதிர்ப்புக் குரல் எழ இல்லை. திமுக, ஒருவர் களம் காணும் வரை எப்போதுமே யாரையும் நேரடியாக எதிர்ப்பது இல்லை.
திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் துரைமுருகன் ரஜினியை சரமாரியாக விமர்சனம் செய்ததாக செய்தி வந்தது. உடனே, அதற்கு துரைமுருகன் மறுப்புத் தெரிவித்தார்.
அதற்காக அரசியலுக்கு ரஜினி வந்தால் திமுக விமர்சனம் வைக்காது என்று சொல்ல முடியாது. இப்போதே ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் திமுகவின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
"விஜயகாந்த்துக்கு இருந்த செல்வாக்கு அரசியல் களத்துக்கு வந்த பிறகு படிப்படியாக குறைந்து போனது. அதுபோல நடிகராக இருக்கும் வரையே ரஜினிக்கு செல்வாக்கு இருக்கும். களத்துக்கு வந்துவிட்டால், தாக்குப் பிடிக்க முடியாது' என்று திமுகவின் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.
ரஜினி அரசியலுக்கு இப்போதே வரவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் எண்ணுவதற்கான நோக்கம் வேறு மாதிரியாக இருந்தாலும், போர்க்களம் போல தேர்தல் களத்தில் கடைசி நேரத்தில் தயாராகி வெற்றியைப் பெற்றுவிட முடியாது என்பது ரஜினிக்கும் நன்றாகவே தெரியும். அமைப்பு ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கான திட்டங்களை ரஜினி இப்போதே தனக்கு மிகவும் நெருக்கமானவர்களை பயன்படுத்தி உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.
ரஜினி ஏற்கெனவே 1996-ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிறகான நாடாளுமன்றத் தேர்தல்களில் தனது அஸ்திரங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் இன்னும் தனது நேரடி தலைமை என்கிற பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தவில்லை. ரஜினியின் அந்த பிரம்மாஸ்திரம் பலித்துவிடக் கூடாது என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது மனதிற்குள் வேண்டிக் கொள்கிறார்கள்.
அவர் நல்லவனுக்கு நல்லவனாக இருக்கப் போகிறாரா? இல்லை, "நான் நெருப்புடா' என்று பாயும் புலியாக சீறப் போகிறாரா?

    முதுமைக்குத் துணையாவோம்!

    By என். முருகன்  |   Published on : 23rd May 2017 02:41 AM  |
    நம்நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் சுதந்திரம் அடைந்த 1947-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்களின் வயது 70-ஐ தாண்டி நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவர்களைப் பற்றி யாருமே சிந்திப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    காரணம் பிற நாடுகளில் வயது முதிர்ந்த மக்களின் மேல் அரசும், அரசு சாரா தொண்டு மையங்கள் பலவும் மிகுந்த சிரத்தையுடன் பல நடவடிக்கைகளை எடுத்து அவர்கள் சுகமான வாழ்க்கையை வாழ வழி செய்துள்ளன.
    1950-ஆம் ஆண்டில் நம் நாட்டு மக்களின் சராசரி வயது 36 ஆண்டுகள். 2011-ஆம் ஆண்டில் இந்த சராசரி வயது 65-ஆக உயர்ந்தது. இந்த நிலைமையிலும் 1947-க்கு முன் பிறந்தவர்கள் 70 வயதுக்கும் மேல் வாழ்ந்தால் நல்ல பழக்க வழக்கங்களுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பவர்கள் இவர்கள் என்ற உண்மை வெளியாகிறது. இவர்களுக்கு வயோதிக வாழ்க்கை தரமானதாக அமைய மற்றவர்களின் உதவி தேவை என்பது நிதர்சனம்.
    நம் நாட்டில், 2011-ஆம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின்படி 131 கோடியே 10 லட்சம் மக்களில் 3 கோடியே 97 லட்சம் மக்கள் 70 வயதைத் தாண்டியவர்களாக இருந்தனர். இவர்களில் 1 கோடியே 94 லட்சம் பேர் ஆண்கள்; 2 கோடியே 3 லட்சம் பேர் பெண்கள்.
    சுமார் 70 சதவீத முதியவர்கள் கிராமப்புறத்தில் வாழ்ந்தவர்கள். நம் நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தும் எல்லாரும் மறந்துவிட்டுவிட்ட ஒரு அம்சம், முதியவர்களின் வாழ்க்கையை தரமாக வைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் பற்றியதுதான்.
    நம் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வாழும் முதியவர்களின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இல்லை என்பது 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், கோவா மற்றும் ஆந்திர மாநிலங்களின் மக்கள்தொகை இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம். அங்கே வாழும் 70-வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை நம் நாட்டின் முதுமக்களில் 25 சதவீதம்.
    ஆனால், பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வாழும் மக்கள் இந்திய நாட்டின் மக்கள்தொகையில் 25 சதவீதம். ஆனால் இங்கே வாழும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் இந்தியாவின் முதியவர்கள் தொகையில் 20 சதவீதமே!
    மற்ற நாடுகளைக் கூர்ந்து கவனித்தால் நம்மை விடவும் அவர்கள் முதியவர்களுக்கு நல்ல வாழ்க்கையை வழங்கும் பல நடவடிக்கைகளை எடுத்திருப்பது புலப்படும். "உலகில் முதியவர்களின் கணிப்பு' எனும் 2014-ஆம் ஆண்டின் கணக்கீடு 96 நாடுகளில் நடத்தப்பட்டது.
    இந்தியா அந்த 96 நாடுகளில் 71-ஆவது இடத்தில் இருந்தது. இந்த கணக்கீட்டில் ஆராயப்பட்ட முக்கியமான அம்சங்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் அல்லது வேறு வருமானம், அவர்களது சுகாதாரத்தைக் காக்கும் மருத்துவ உதவிகள், வாழத் தகுந்த வீடுகள், வெளியே சென்று வர கிடைக்கும் வசதிகள், குடும்பம் மற்றும் சமூகம் அளிக்கும் மரியாதை மற்றும் உதவிகள் ஆகியன அடங்கும்.
    இந்த கணக்கெடுப்பில், நம் நாட்டிலுள்ள 10 முதியவர்களில் 4 பேர், அதாவது 40 சதவீதத்தினர் அவர்களது குடும்பத்தினராலேயே துன்புறுத்தப்படுவது தெரியவந்தது. டாக்டர் மாலா கபூர் எனும் ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 70 வயது டாக்டர் சிங் எனும் ஓய்வுபெற்ற மருத்துவர் தனது மகன், மருமகளுடன் வசித்து வந்ததை குறிப்பிடுகிறார். அவருக்கு வேண்டிய நேரத்தில் உணவு பரிமாறப் படாமல் துன்புறுகிறார்.
    சில நேரங்களில் உணவு உண்ணாமலேயே இரவில் தூங்கப் போக வேண்டிய துர்பாக்கியம். சீக்கிரமாக படுக்கப் போய், காலையில் சீக்கிரம் எழுந்துவிடும் பழக்கம் அவர் மருத்துவரான காலம் முதல் பழகிப் போன ஒன்று. அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாத மூத்த குடிமகனாக வாழ்ந்து கஷ்டப்படும் நிலைமை!
    சாந்தாவுக்கு இப்போது 75 வயது. திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த பின் தன் கணவரை இழந்தார். அப்போது இவரது இரண்டாவது மகன் மூன்று மாத குழந்தை. இரண்டு மகன்களையும் கல்வி கற்க வைத்து நல்ல முறையில் வளர்த்தார் சாந்தா.
    தற்சமயம் தன் இரண்டாவது மகன் வீட்டில் வசித்து வருகிறார். மூத்த மகன் நல்ல முறையில் பணம் சம்பாதித்து செழிப்புடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். ஆனால், தன் தாயை தன் வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.
    அவர் குடியிருக்கும் பகுதியில் வசிப்பவர்களுக்கு உதவ நீர் குளிரேற்றும் ஒரு நிலையத்தை நிறுவினார். அதை ஆரம்பிக்க ஒரு விழா எடுக்கப்பட்டது. பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது தாயாரை அந்த விழாவிற்கு வரும்படி அழைத்தார்.
    சாந்தாவும் அந்த விழாவிற்கு சென்றார். ஆனால் அவரை கண்டுகொள்ளாமல் விலகியே நின்ற மகனைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியமுற்றனர். சாந்தா விழா முடியு முன்னரேயே அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்.
    கம்லேஷ் 65 வயது நிரம்பிய வசதியான குடும்பத்தை சார்ந்த பெண். இவருக்கு ஐந்து மகன்கள். மிகவும் வசதியுடன் வாழும் இவர்கள் தங்கள் தாய் தந்தையரை தங்களுடன் வைத்துக் கொள்ளாததால், கம்லேஷ் 15 ஆண்டுகளாக நோய்வாய்பட்டு படுக்கையிலேயே இருக்கும் தன் கணவரை கவனித்துக் கொண்டு தனியாக வாழ்கிறார்.
    தனியாக வாழும் முதியவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவாகியுள்ளது. கிராமங்களைவிடவும் நகரங்களில் இது பெரிய பிரச்னை. மும்பை நகரிலுள்ள முதியவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அந்நகரின் போலீஸ் துறை கையிலெடுத்துள்ளது.
    சுமார் 39,000 முதியவர்கள் போலீஸ் நிலையங்களில் தங்களுக்குப் பாதுகாப்பு கோரி விண்ணப்பங்களை அளித்துள்ளனர். அவர்களில் 4,200 பேர் தனிமையில் வசிப்பவர்கள். குடும்பத்தாருடன் வசிப்பவர்களும், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களும்கூட போலீஸ் பாதுகாப்பு கோருவதற்குக் காரணம், வீட்டில் உள்ளவர்கள் இவர்களை தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றுவிடும்போதும், முதியோர் இல்லங்களில் வேலை செய்பவர்களிடமிருந்தும் உடன் வசிப்பவர்களிடமிருந்தும் பாதுகாப்பு தேவை என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
    மும்பை நகரின் ஒவ்வொரு போலீஸ் காவலரும் ஒரு முதியவரை தத்து எடுத்து பாதுகாக்க வேண்டும் என அம் மாநிலத்தின் போலீஸ் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    சென்ற 8 ஆண்டுகளாக தனியாக வசிக்கும் முதியவர் டோல்க்கவாலாவின் ஒரே மகன் துபாய் நாட்டில் தன் குடும்பத்துடன் வாழ்கிறார். மும்பை நகருக்கு எப்போதாவது வரும்போது தன் தந்தையை சந்திப்பார், அவ்வளவுதான்.
    இவர்போன்ற தனிமையில் வசிக்கும் முதியவர்களை குறிப்பிட்ட போலீஸ்காரர் அடிக்கடி சந்தித்து அவர்களது பாதுகாப்பான மனநிலையை உறுதி செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சர் கூறியது எல்லாராலும் வரவேற்கப்பட்டது.
    இதுபோல் யாராலும் கவனிக்கப்படாமல் வாழும் முதியவர்கள் உள்ள இந்தியாவில் நல்ல முறையில் தங்கள் பெற்றோரையும், தாத்தா, பாட்டி போன்ற உறவினர்களையும் அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துப் போற்றுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறக்கலாகாது.
    2013-ஆம் ஆண்டு, காஷ்மீர் மாநிலத்தில், ஃபெரோஸ் உன்ஃதிர் என்னும் பெரியவர் தனக்கு வயது 141 எனக் கூறினார். அரசின் ஆவணங்களின்படி அவர் பிறந்தது 1872-ஆம் ஆண்டு. அன்றைய கணக்கீட்டில் உலகில் அதிக வயதில் வாழும் முதியவர் அவரே. அவர் 82 வயதான தனது ஐந்தாவது மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.
    2013-ஆம் ஆண்டில், குஜராத் மாநிலத்தில், காந்திநகருக்கு அருகேயுள்ள உனாவா கிராமத்தில், 101 வயது நிரம்பிய பிரன்பாய் ஹரிபாய் படேல் எனும் முதிய பெண்மணிக்கு 103 வயது நிரம்பிய ஜித்தாபென் பிரனாபாய் படேல் எனும் கணவரும், 50 மகன்கள், மகள்கள், பேரன்கள், அவர்களது குழந்தைகள் என்ற மிகப்பெரிய குடும்பம் இருந்தது.
    இந்தியாவில் மிக அதிக நாட்கள் வாழ்ந்த கணவன் - மனைவி இவர்களே எனக் கூறப்பட்டது. 85 ஆண்டு மணவாழ்க்கையையும் அன்புடன் நேசிக்கும் குழந்தைகளையும் கொண்ட பெற்றோர் இவர்கள். இவர்களது கொள்ளுப் பேரக் குழந்தைகள் இவர்களுக்கு "சிறந்த தம்பதி' என்ற பெயரில் ஒரு விழாவை நடத்தினர். யார் துணையுமின்றி, கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பேணிக் கொள்ளும் அதிசய தம்பதி அவர்கள்.
    ஆக நாம் நம் குடும்பத்து முதியவர்களை அன்புடன் கவனித்துப் பேணும்போது, அந்த நற்குணங்கள் நமது குழந்தைகளுக்கும் ஊடுருவி நம்மை அவர்கள் பிற்காலங்களில் கவனிப்பார்கள் என்பது இந்திய கலாசாரம்.
    இது பெருவாரியானவர்களிடம் இருந்தபோதும், சிலரிடம் இல்லாதமையால் தனிமையில் விடப்படும் முதியவர்களும் நம் தேசத்தில் உண்டு. அவர்களை பேணிக் காப்பது அரசின் கடமை என்பது நிதர்சனமான உண்மை!
    கட்டுரையாளர்:
    ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

      சிந்தித்து செயல்படுவோம்

      By ஆர். அபுல் ஹசன்  |   Published on : 23rd May 2017 02:42 AM  |
      ஒவ்வொரு வியாபாரத்திற்கும் ஒரு பருவம் இருப்பது போல் நமது கல்விக் கடைகளில் வியாபாரம் ஜோராக நடப்பது மே - ஜூன் மாதங்களில். தனியார் பள்ளி, கல்லூரிகளில் எல்.கே.ஜி. தொடங்கி எம்.பி.பி.எஸ். வரை சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது? கல்விக் கட்டணம் எவ்வளவு? வளர்ச்சி நிதி என்கிற பெயரில் பிடுங்கப்படுவது எவ்வளவு? அந்தப் பள்ளி, கல்லூரிகளில் எத்தகைய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன? பாடம் நடத்தும் ஆசிரியர்களின் கல்வி, அறிவுத் தரம் என்ன? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடும் வேலை எளிதல்ல.
      12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடித்தவுடன் பெற்றோர்களும் மாணவர்களும் செய்யும் முதல் வேலை எந்த பொறியியல் கல்லூரியில் எவ்வளவு பணம் கட்டினால் இடம் கிடைக்கும்? படிப்பு முடித்தவுடன் பன்னாட்டுக் கம்பெனியில் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்குமா என்று சல்லடை போட்டு சலித்து எடுப்பதுதான்.
      சற்று பணம் படைத்தவர்களாக இருந்தால் எவ்வளவு கொட்டிக் கொடுத்தேனும் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்வர்.
      நண்பர் ஒருவர் சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 5 இலட்ச ரூபாய் நன்கொடை கட்டி சேர்ந்ததுடன் வருடம் ஒரு இலட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி படித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் ஏறக்குறைய இதே நிலைதான்.
      பொறியியல் படிப்பு குறித்த ஒரு புள்ளிவிவரம். 2012-2013இல் 20 லட்சம் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதில் 16 சதவீதம் பேர் அதாவது கிட்டத்தட்ட 3.5 லட்சம் பேர் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
      சரி படித்து முடித்து வேலை கிடைக்கின்றதா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. இந்தியாவில் கல்லூரி முடித்து வெளியே வருபவர்களில் 60 சதவீதம் பேர் வேலை பெற தகுதியற்றவர்களாக வெளிவருகின்றனர் என்று போட்டு உடைக்கின்றது ஓர் ஆய்வறிக்கை.
      நண்பர் ஒருவர் 2010-இல் பொறியியல் முடித்துவிட்டு முன்று வருடங்கள் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றார். பொறியியல் படிப்பு எங்கே? விற்பனையாளர் வேலை எங்கே? ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற அரசு நிறுவனங்கள், பெரிய பண முதலைகளின் கல்வி நிறுவனங்களில் படித்த சில ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கப் பெறுகின்றனர்.
      ஆனாலும் அவர்களைத் தேர்ந்தெடுத்த நிறுவனங்கள் லட்சங்களைக் கொட்டி அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கின்றன. இதுதான் இன்றைய நமது பொறியியல் கல்வியின் நிலை.
      அப்படியானால் இன்னும் ஏன் பாமர மக்கள் பொறியியலின் பின்னால் அலைகின்றனர்?
      நாம் விரும்பிப் படிக்கும் தினசரிகளில் திடீரென்று முழுப்பக்க விளம்பரம் வரும். ஒரு குறிப்பிட்ட பத்திரிகை - குறிப்பிட்ட பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி - வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி. நமது அப்பாக்கள், அம்மாக்கள் அங்கு அழைத்துச் செல்வார்கள்.
      முழுவதும் குளிரூட்டப்பட்ட அரங்கிற்குள் நுழைந்தவுடன் எங்கு திரும்பினும் பொறியியல் கல்லூரிகள் குறித்த விளம்பரப் பலகைகள் விதவிதமாக இருக்கும். காசு வாங்கிக் கொண்டு பேச வந்திருக்கும் கோட்டு போட்ட கனவான்கள் பொறியியல் கல்வி மட்டும்தான் உங்கள் பிள்ளைகளை உயர்ந்தவர்களாக்கும் என்கிற ரீதியில் வாங்கிய காசுக்கு வார்த்தைகளை அளந்து விடுவர்.
      அதைக் கேட்டு நம்மவர்கள் வாயைப் பிளந்து விடுவர். அந்த நாளிதழ் நுழைவுக் கட்டணம், பொறியியல் கல்லூரியின் விளம்பரங்கள், கடலை மிட்டாய் கடைகள் என்று வலுவாக கல்லா கட்டியிருக்கும். நம் வீட்டிலோ விவசாய நிலம், அம்மாவின் தாலி என்று ஏதாவது ஒன்று அடகுக் கடை அல்லது வங்கியின் வாசலை எட்டியிருக்கும்.
      இது ஒரே ஒரு உதாரணம்தான். இப்படி கவர்ச்சியான விளம்பரங்கள் மூலமே பொறியியல் மீதான ஆர்வம், மோகமாக மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மூன்று இலட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகின்றனர்.
      அனைவருக்கும் வேலை கிடைப்பது நடைமுறைச் சாத்தியமா? சிந்தித்தால் பொறியியல் குறித்த மாயை விலகும். ஒரு காலம் இருந்தது. பொறியியல் முடித்தவுடன் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. அது பொறியியல் யுகத்தின் துவக்கம்.
      ஆனால் இன்று அதனைத் தாண்டி பல்வேறு புதிய துறைகள் ஒளிவீசுகின்றன. அறிவோடு பணத்தையும் சேர்த்தே தரக்கூடிய பல்வேறு புதிய படிப்புகள் கல்விச் சந்தையில் உலா வருகின்றன.
      குறிப்பாக மானுடவியல் சார்ந்த துறைகள், கலை, அடிப்படை அறிவியல் சார்ந்த துறைகள், வழக்குரைஞர் கல்வி, வரலாறு, பொது நிர்வாகம், அரசியல் அறிவியல் படிப்புகள் போன்ற எண்ணற்ற துறைகள் உலக நாடுகள் பலவற்றிலும் சிறந்த மாணவர்களை ஆண்டுதோறும் உருவாக்கு
      கின்றன.
      இன்னும் உணவு பதப்படுத்துதல் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அதிகரிக்க இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர். புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தத் துறைகளில் சேருவதற்கு வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் படையெடுக்கின்றனர்.
      மண்ணியல், புவியியல், தொல்லியல், தத்துவம், பொருளாதாரம் போன்ற துறைகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகின்றது. ஆனால் இத்துறைகள் நமது வாழ்வு முடியும் வரையிலும் பலனளிக்கக் கூடியவை.
      ஆதலால் மாணவர்கள் கவர்ச்சிக்கு விலை போகாமல், சிந்தித்து தமது விருப்பத்திற்கேற்ற துறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் துறை நம் வாழ்வுடன் சமூகத்தின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
      பெற்றோர்களும் தம் விருப்பத்தை திணிக்காமல் பிள்ளைகளின் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். கல்வி நிறுவனங்களும், அரசுகளும், ஊடகங்களும் பொறியியல் பல்லவியையே பாடாமல் ஆக்கப்பூர்வமான மாற்று கல்வித்துறைகளை முன்னெடுக்க வேண்டும்.
        சிபிஎஸ்இ +2 ரிசல்ட் : மே 24 !!
        சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 24-ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
        http://cbse.nic.in/newsite/index.html , http://cbseresult.nic.in/ என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம்.

        PHC facilities yet to be opened

        Construction has reached finishing stage, says official

        A new urban primary health centre constructed at Sembakkam Municipality has remained a non-starter for over three months now.
        Though the workers frequent the building for carrying out the remaining work, the facility has not been opened. Enquiries reveal that the construction of the building was planned much before the 2015 floods but was delayed due to various reasons, including want of labour and materials.
        Sources with the Directorate of Public Health Department said Rs. 42 lakh had been allocated for this facility that would serve more than 60,000 people of four villages — Gowriwakkam, Sembakkam, Rajakilpakkam and Kamarajapuram. “The construction has reached the final stages now. Water supply and furnishing works are being carried out,” said an official.
        Construction of urban primary health centre buildings in Nemilichery, Chromepet and Sembakkam is being speeded up now after undergoing undue delay due to various reasons, according to officials of the Municipal Administration Department.
        A similar facility is being augmented in Haridaspuram under Pallavaram Municipality and the contractors of these works have been asked to complete the job quickly to make it available before June 2017, officials said. While the new facility in Nemilichery is being constructed at a cost Rs. 42 lakh, the one at Haridaspuram cost around Rs. 48 lakh.
        Officials said that based on key characteristics of the existing urban health delivery system, the National Urban Health Mission proposes a broad framework for strengthening health services delivery through primary public health systems.
        The quality of the services provided will be constantly monitored for improvement, an official said. Pallavaram municipal officials said that the Nemilichery PHC would become operational in one month, while the Haridaspuram facility would take a little more time, as orders have been placed for installation of lift facilities.

        Defunct Salem airport hopes of flights relaunch within six month

        State Government in touch with Union Civil Aviation Ministry

        The likelihood of revival of Salem Airport, lying idle for many years, got brightened with Tamil Nadu Cabinet deciding to support the Centre’s Udan scheme by reducing the VAT on aviation turbine fuel for the proposed air services between Salem and Chennai under the Regional Connectivity Scheme (RCS).
        The cabinet, which met under the leadership of Chief Minister Edappadi K. Palaniswami recently, decided to reduce the VAT on aviation turbine fuel from 24 % to one % for the proposed air services.
        Mr. Palaniswami, during an informal chat with reporters at his native Edappadi Assembly constituency, had stated that the state government has taken all effective initiative for reviving the Salem airport within six months and is in touch with the Union Civil Aviation Ministry.
        The Ministry of Civil Aviation had recently included the defunct Salem airport in the RCS, following the introduction of the new Civil Aviation Policy last year. The Udan scheme envisaged the operation of flight service from the defunct airports in the two-tier cities with various forms of assistance from both the Centre and the state government.
        Under the scheme, 50 % of the passengers can travel at a maximum rate of Rs. 2,500, which is an all inclusive airfare, while the rest will be charged as per market rates. The airlines will be getting financial support (viability gap funding) from the Centre and the state government for the subsidised 50 % of the seats.
        The state government is expected to sign Memorandum of Understanding (MoU) with the Civil Aviation Ministry for the Udan scheme. The state government has to give consent to meet out 20 % of the viability gap fund (VGF) to meet the loss of flight operators whenever they are unable to make break-even recovery.
        Under the other conditions of the RCS, the state government has to provide adequate needed space, power and water supply at reduced cost, deploy police force for the security checks, fire and rescue services personnel for the safety of the premises and flights free of charge.
        The signing of the MoU will enable the introduction of the flight services without any delay.
        Air Odisha Aviation Private Limited has already been accorded permission to fly in the Chennai – Puducherry – Salem – Bengaluru route after the first round of bidding.
        Various traders and industrial organisations have commended the state government for taking a decision to reduce the VAT on the aviation fuel at the cabinet meeting.
        K. Mariappan, president, Indian Chamber of Commerce and Industry (Salem), thanked Mr. Palaniswami for the initiative. This will prove a boost for the western belt’s economic and tourism development.
        He also appealed to the state government to take steps for acquiring adequate land for undertaking the expansion of the airport by reaching a settlement with the landowners on compensation. Currently, the flights could land at the Salem airport only in the day time and he pleaded for the introduction of night landing facility too.

        ‘Set up AIIMS hospital at Sengipatti’

        Civic activists to form a committee to take up the cause

        Reiterating the demand for establishing the All India Institute of Medical Sciences (AIIMS) hospital at Sengipatti near Thanjavur, a group of civic activists of Tiruchi have decided to form a larger committee comprising activists from the central region to lobby for the establishment of the hospital here.
        Taking cognisance of unconfirmed reports that the AIIMS could be located in Madurai, a meeting of Federation of Consumer and Service Organisations held here on Sunday emphasised the need for locating the hospital in the central part of the State to benefit a large section of people of the State. Although a Central team had inspected five sites in different parts of the State for setting up the AIIMS in Tamil Nadu in 2015, there has been no word yet on where the hospital is to be established.
        Meanwhile, there are reports that “undue pressure” is being mounted on the Centre to establish the hospital in Madurai, said M.Sekaran, president of the Federation. He pointed out the civil society in the city had been conducting a series of agitations since 2005 for establishing the hospital in Tiruchi.
        An announcement on upgrading the Government Headquarters Hospital in the city on a par with AIIMS was made by the Union government as early as 2002. But the project was later shifted to Salem. Subsequently, the city lost out on another proposal to establish a multi-speciality hospital.
        Mr.Sekaran claimed that already a 320-bedded multi-speciality hospital, on a par with AIIMS level hospital, is being established in Madurai and expected to be opened shortly. “The Central region lagged behind in terms of speciality health care institutions when compared to the southern part of the State. Besides, Sengipatti is centrally located and can be accessed by people of not only central region but also from southern and western districts,” he said.
        Civic activists have been contending that excellent logistics and the 200-odd acres of centrally located site at Sengipatti was accessible equally from Thanjavur, Tiruchi, and Pudukkottai. This would make the site easily accessible for people from different parts of the State. The federation resolved to meet Union Minister Pon.Radhakrishnan to press the demand. Besides, a larger committee comprising representatives of civic, consumers, traders and other non-political organisations would be formed soon to take up the cause.
        Sengipatti is centrally located and can be accessed by people from central, southern and western districts

        Pensioners to get ID cards


        All persons drawing their pension through the district treasury and sub-treasuries are to be issued identity cards and the pensioners are required to submit their details in the relevant form at the treasuries, an official release said. The applications can be had from the district treasury or sub-treasuries or downloaded from the state government website, the release added.

        Salem-Chennai direct flight sought


        The public and the members of trade and industry have pleaded for a direct flight connection from Salem to Chennai. At present, the Ministry of Civil Aviation has provided licence to the Air Odisha to operate its flight from Chennai to Bengaluru with two stopping at Puducherry and Salem.
        Reaching Chennai from Salem after a stopover at Puducherry will be a roundabout route and will prove wastage of time, the local people feel.
        K. Mariappan, president, Indian Chamber of Commerce and Industry (Salem), is of the view that the airline will not be able attract much patronage if it is operated via Puducherry. Only a direct flight from Salem to Chennai will prove a viable one in attracting more passengers, he says. Mr. Mariappan said he has already taken up the matter with the Ministry of Civil Aviation in this regard.

        NEWS TODAY 23.12.2025