Wednesday, May 31, 2017


பரிசு வாங்க படும் பாடு

By வாதூலன்  |   Published on : 30th May 2017 02:50 AM 
இனி, வருகிற ஆடி மாதம் வரை திருமண சீஸன்தான். திருமணம், புதுமனை புகுவிழா, பிற விசேடங்கள் என்று ஒன்று மாறி ஒன்று வந்து கொண்டேயிருக்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில் உறவினர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் நினைவுப் பரிசாக ஏதாவது அளிப்பது ஒரு மரபாகிவிட்டது. சிலரிடம் வெகு உரிமையாக "என்ன வேணும்?' என்று கேட்டு, அவர்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் வாங்குபவர்களும் உண்டு.
என் பெண் தன் வீட்டு விசேடத்துக்கு, நெருங்கிய தோழிக்கு (கல்லூரி நாளிலிருந்து 20 வருட சினேகம்) ஒரு புடவை வாங்கித் தந்தாள். சினேகிதி, "எதற்கு இத்தனை சிரமம்?' என்று ஒப்புக்குக் கேட்டிருக்காலம். அல்லது, நன்றி தெரிவித்து விட்டு அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அவள், "என்னிடம் இந்த ஊதா நிறம் நிறைய இருக்கிறது' என்று அலுத்துக் கொள்கிறாற்போல் சொல்லியிருக்கிறார்.
பெண்ணுக்குத் தர்ம சங்கடமாகி விட்டது. புடவைக் கடையோ வெகு தொலைவு. சென்னையில் தங்கியிருப்பதோ சொற்ப நாட்களே. என் மனைவியிடம் சொல்லித் தன் ஆற்றாமையைத் தீர்த்துக் கொண்டார். கிட்டத்தட்ட இதே மாதிரி அனுபவம் எங்களுக்கும் நேர்ந்தது. சுப நிகழ்வு ஒன்றின்போது, நெருங்கிய உறவினரைப் பார்த்து ஆசியைப் பெற்றுக் கொண்டு வேட்டியைக் கொடுத்தோம்.
"இந்த மாதிரி வேஷ்டிகளை உடுத்திக் கொள்வதே இல்லை நான்' என்று உடனே, திருப்பித் தந்தார். நல்ல காலம், வேட்டி வாங்கிய ரசீது கைவசம் இருந்தது. மறுபடியும் கடைக்கு சென்று வேறு வேட்டி வாங்கித் தந்த பின்தான் மனத்துக்குச் சமாதானமாயிற்று.
மேல் சொன்ன சம்பவங்களையாவது, "சில நேரங்களில் சில மனிதர்கள்' என்று எண்ணி ஒதுக்கிவிடலாம். ஆனால் நம்மை ஏமாற்றுகிறார் போல் நடக்கிற செயல்கள் மிகவும் உறுத்துகின்றன. போனவாரம், ஒரு சிறிய கடையில் 60 ரூபாய்க்கு தின்பண்டம் வாங்கினேன்.
ஒன்றைப் பிரித்துப்போட்டு விட்டேன். மற்றொன்றை சில நாள் கழித்துப் பிரிக்கும்போது மனைவி கவனித்தார், "ஒரு கிண்ணம் இலவசம்' என்று வாசகம் இருந்தது. "விட்டு விடலாம், இதற்குப் போய் மறுபடியும் அலைவானேன்' என்று எனக்குத் தோன்றியது.
"சிறியதோ, பெரியதோ இவ்வளவு பிரபல கம்பெனி நம்மைப் போன்ற நுகர்வோர்களை மதித்து இலவசமாக பொருள் தருகிறார்கள். அதை எப்படி தராமல் இருக்கலாம்' என்பது மனைவியின் வாதம்.
கடையில் போய் விசாரித்தால், கேள்விக் கணைகள் என்னைக் குடைந்தன. "எப்போது வாங்கினீர்கள்?' "ஏன் முதலிலேயே கவனிக்கவில்லை?' "இன்னொரு உறை எங்கே?' நான் மெளனமாக நின்றேன். பிறகு கடைக்காரர் வேண்டா வெறுப்பாக இரண்டு கண்ணாடிக் கிண்ணங்களை எடுத்துத் தந்தார்.
பெரிய கடைகளில் மொத்தமாக மளிகைப் பொருட்களை வாங்குகையில் இதுபோன்ற பிரச்னை நிகழ்வதில்லை. அனுபவப்பட்ட கடை முதலாளியே சாமான்களைப் போடும்போது "பரிசு'களையும் தந்து விடுவார். சில தருணங்களில் இல்லத்தில் பொருட்களைப் பிரிக்கும் போதுதான் அவை தெரியவரும்.
ஆனாலும், இப்போதெல்லாம் இந்த இலவசங்களுக்கு ஒரு வரைமுறையே
இல்லாமல் போய்விட்டதென்று தோன்றுகிறது.
போன மாதம் செல்லிடப்பேசி மாத பில்லுக்கான கெடு தேதி 27. இருபது தேதிக்குள் செலுத்தினால் ஒரு குறிப்பிட்ட படத்துக்கு இரண்டு டிக்கெட் இலவசம் என்ற குறுஞ்செய்தி வந்தது. நான் அதைப் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் இதுபோன்ற இலவசங்களைப் பெறுவது எளிதான காரியமல்ல.
சென்ற தீபாவளியின்போது சென்னையின் மையமான ஓர் இடத்தில் பிரபல துணிக் கடையில் இரண்டு சட்டை வாங்கினேன். பரிசாக இன்னொன்று கிடைக்கும். உங்களுக்கு மெúஸஜ் வரும் என்று கடைக்காரர் தெரிவித்தார்.
ரொம்ப நாள் கழித்து செல்லிடப்பேசியில் செய்தி வந்தது. பிறகு ஓர் எண்ணை கண்டுபிடித்து கணினியில் உறுதிப்படுத்தி, தில்லி முகவரியைப் பெறுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
எப்படியோ, அங்கிருந்து, காய் நறுக்கும் கருவி கிட்டியதென்று வைத்துக் கொள்ளுங்கள்.
தனியார் நிறுவனங்கள் சிறிய பரிசுக்காக நுகர்வோரை அல்லலுக்கு உள்ளாக்குவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அரசு வங்கிகளே இது மாதிரி நடந்து கொண்டால்? அனைத்து வங்கிகளும் வழங்குகிற கடன் அட்டையைத்தான் குறிப்பிடுகிறேன்.
அட்டை மூலம் பரிவர்த்தனை செய்தால், வாடிக்கையாளர்களுக்கு "பாயிண்ட்ஸ்' சேரும். முன்பெல்லாம் மார்ச் மாதம் பற்றுக் கணக்கில் இத்தகைய எண்ணிக்கைக்கு ஏதோ ஒரு சதவீதத்தில் கணக்கிட்டு வரவு வைப்பார்கள். இப்போது அதற்கும் பரிசு.
பரிசுப் பொருளைப் பெறுவதிலுள்ள நடைமுறையில், சிக்கல் வாய்ந்தவை. கணினியில் அட்டை எண்ணை டைப் செய்ய வேண்டும். பிறந்த தேதியை உறுதி
செய்தாக வேண்டும். தொடர்ந்து கணினி கேட்கிற வினாக்களுக்கெல்லாம் பதில் எழுதின பின்னர், பரிசு கிடைக்கிற இடம் தெரிகிறது.
தொகைக்கு ஏற்ப எதை வேண்டுமானாலும் எடுக்க இயலாது. அதற்கு நாலைந்து விருப்ப வகைகள் தான் (ர்ல்ற்ண்ர்ய்ள்). இடமும் தொலைவு, இருந்தாலும் ஒரு சனிக்கிழமை அங்கு சென்று பரிசுப் பொருளை ஆராய்ந்தோம். மனத்துக்குப் பிடித்ததாக ஏதும் அமையவில்லை. கூடுதலாக ரூ.500 போட்டு தேவையான சமையலறை கருவியை வாங்கினோம்.
இதுபோன்ற சடங்குகளை கண்டு வெறுத்துப்போய், பல வாடிக்கையாளர்கள் பரிசே வாங்குவது கிடையாது.
சீஸனுக்கு ஏற்றாற்போல் தனியார் நிறுவனங்கள் பரிசுகளை வழங்குவது சரிதான். ஆனால் நமக்கு உரிமையான பரிசுப் பொருளைப் பெறுவதில்கூட நடைமுறை சிக்கல்கள் நிறைய இருப்பது சரியில்லை. அரசு வங்கிகளாவது இந்த முறையை எளிமைப்படுத்தினால் நல்லது.

    சவூதியில் துன்புறுத்தலுக்கு ஆளான இந்தியப் பெண் இன்று தாயகம் திரும்புகிறார்

    By DIN  |   Published on : 31st May 2017 01:30 AM  
    சவூதி அரேபியாவில் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் இந்தியப் பெண் ஒருவர் புதன்கிழமை (மே 31) தாயகம் திரும்புவார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
    பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர் சுக்வந்த் கெளர் (55). சவூதி அரேபியாவுக்கு சுற்றுலா விசாவில் சென்ற அவரை கொத்தடிமைப் பணிக்கு சிலர் விற்பனை செய்துவிட்டதாக அவரது கணவர் குல்வந்த் சிங் என்பவர் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். அதுதொடர்பான செய்திகள் சமீபத்தில் வெளியாகின.
    அடிமை வேலைக்கு தன்னை ஈடுபடுத்துவதாக குல்வந்த் சிங்கிடம் தொலைபேசி வாயிலாக சுக்வந்த் கெளர் தெரிவித்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இதுகுறித்து நடவடிக்கை எடுத்த வெளியுறவுத் துறை அமைச்சகம், அவரை மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. அதன் விளைவாக தற்போது அவர் தாயகம் திரும்பவுள்ளார். இந்தத் தகவலை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் பதிவிட்டிருப்பதாவது:
    சுக்வந்த் கெளர் விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு இந்தியா வரவுள்ளார் என்று அதில் சுஷ்மா தெரிவித்துள்ளார்.
    May 30 2017 : The Times of India (Chennai)
    Madras univ hikes examination fee
    Chennai:
    
    
    University of Madras on Monday announced an increase in the examination fee for both regular and distance education courses, for the first time in seven years.A decision to this effect was taken at the syndicate meeting, the first meeting chaired by newly-appointed vice-chancellor P Duraisamy . Higher sducation secretary Sunil Paliwal also attended the meeting.
    For some courses the hike was as low as 1.4% but, for the majority , the increase was a hefty 30%.
    Senior members of the university's syndicate said they had now brought the examination fees for many courses on the same level as the fee at Periyar University and Manonmanian Sundaranar University .
    The cost of conducting the examinations has gone up due to various factors over the past few years, a syndicate member said, explaining the reason for the fee increase. This was a reform that was necessary to improve the financial condition of the university , the official said.
    For instance, the examination fee for the BA (criminology) course in distance mode has gone up from `6,640 to `8,600. The exam fee for MBA courses has increased from `16,750 to `21,100. The PG diploma exam fee for some courses has been raised from `2,100 to `2,800. Only one syndicate member voiced dissent to the proposal, sources said.
    During the six-hour meeting, Duraisamy also initiated discussions on making the plagiarism software compulsory before awarding PhD degrees.
    Syndicate members also discussed specific guidelines for punishment for plagiarism. A member said students should upload their theses on the university website for public viewing.
    The syndicate also discussed the qualifications and other specifics needed for appointment of a fulltime registrar, controller of examinations, director of Institute of Distance Education and dean of College Development Council.
    May 30 2017 : The Times of India (Chennai)
    After cancellation, MDS counselling to be held 
    today
    Chennai
    TIMES NEWS NETWORK
    
    
    The second phase of counselling for admission to post graduate degree or diploma courses in selffinancing medical colleges and deemed universities to be held on Monday was cancelled by the state selection committee after students demanded “transparent and fair“ procedure.The committee allotted PG seats to nearly 80 students when students on the waiting list demanded that they were called in before allotting seats to fresh candidates.
    “They told us no meritorious students will be left behind and that every student will be allotted a seat, we were worried that we may not get a seat of our choice. We made a representation to both health minister and senior health officials,“ said an MDS aspirant. After discussions with senior officials, selection committee secretary G Selvarajan announced fresh counselling will be held on Tuesday at the Government Multi Super Speciality Hospital in Omandurar Government Estate.
    “The allotments given were cancelled. The counselling for admission to self-financing colleges will be held at 10am. At 2pm counselling will be held for deemed universities,“ he said.
    Students have been asked to come with a bonafide certificate, original certificates including NEET PG scorecard and UG mark sheets, and demand draft of `5,000 drawn in favour of `The Secretary , selection committee, Kilpauk, Chennai600010 an hour ahead of counselling time. For more details: http:www.tnmedicalselection.org & http:www.tnhealth.org
    May 30 2017 : The Times of India (Chennai)
    No stamping of cabin bags at Chennai airport from 
    June 1
    Chennai:
    TIMES NEWS NETWORK
    
    
    Domestic passengers departing from Chennai airport will not have to get their cabin bags stamped from June 1.The move comes after the Bureau of Civil Aviation Security (BCAS) sought an end to the practice of tagging cabin bags at airline check-in counters and stamping them in the security check area.
    Chennai airport is yet to get an official communication but reports from New Delhi quoted a top Central Industrial Security Force (CISF) official as saying that the new system will be in place at Chennai.
    A senior Chennai airport official said, “A one-week trial was conducted in the first we ek of May and a report was submitted. We are yet to get an order to implement it but, in all likelihood, tags for cabin baggage will be done away with from June.“
    Officials at Chennai airport had strengthened the closed-circuit television (CCTV) coverage in the terminal, especially in the security hold area, as part of their preparations to move towards tag-free baggage checks for domestic passengers.
    Jaipur, Lucknow, Patna, Thiruvananthapuram and Guwahati airports also will not have stamping of cabin bags from June 1.
    CISF had already stopped stamping of cabin baggage in Delhi, Mumbai, Kolkata, Bengaluru, Hyderabad, Ahmedabad and Kochi from April 1.
    May 29 2017 : The Times of India (Chennai)
    4-mark moderation ups CBSE high scores
    TEAM TOI
    
    
    740 More Students In 95-100% Bracket Compared To Last Yr
    The CBSE did not challenge the Delhi high court order on moderation, but did it abide by it in toto? The CBSE says `yes', but insiders in the system believe `not really'. in the system believe `not really'.The number of students who scored between 95% and 100% increased this year while that in the 90%-95% bracket dropped. Around 10,091 candidates figured in the 95%-100% category this year against the 9,351 last year. This year, the number of students in the 90%-95% category was 53,156 while in 2016 there were 54,036 students, a drop of 880 candidates.
    The increase of 740 students in the top bracket is due to moderation, say CBSE sources. “This is sign that we have carried out moderation as per the orders of the Delhi court,“ said the source adding that the capping for moderation was kept at 95%.
    However, people aware about developments said moderation was not more than four marks per paper this year. “We have awarded three to four marks more,“ said a source in the CBSE, an indication that the board has been stringent in awarding extra marks.
    The increase in the number of students in the 95%-100% category also shows that it is a result of the students' efforts, said a principal of a CBSE school. “We are not aware how much was the moderation, but whatever might be the case, the scores are an outcome of the students' hard work,“ she said.
    The rise in the number of students in the 95%-100% category will prove to be a positive for pupils in Tamil Nadu. Most professional colleges consider Class XII scores for merit-based admission.
    Usually , CBSE candidates stand a disadvantage while seeking admissions to colleges in Tamil Nadu as the scores of students from the state board are higher. There is no normalisation of marks as it is opined that CBSE is a tougher board than the state board.While the admissions in most top arts and science colleges are over, CBSE students will have a nearly fair opportunity in the single window counseling of professional universities like Anna University and Tamil Nadu Agricultural University .
    May 28 2017 : The Times of India (Chennai)
    PIL seeks probe into fake nursing universities in 
    state
    Chennai:
    TIMES NEWS NETWORK
    
    
    `Class XII Students Targeted'
    Fake and unapproved nursing colleges have come under the judicial scanner, with the Madras high court issuing notice to the Centre as well as the Nursing Council of India, on a PIL seeking an investigation into the racket.A vacation bench comprising Justice M M Sundresh and Justice R Mahadevan issued the notices, when the PIL came up for admission on Friday .
    The PIL said students who have completed SSLC and Class XII are being targeted by such fake institutes which have mushroomed mostly in Thanjavur, Tiruvarur and Nagapattinam districts. Though the institutions have no statutory clearance to operate, they issue advertisements saying they have got approval from Bharathiya Seva Samaj (BSS) and National Council for Vocational Research and Training (NCVRT), the PIL said.
    These two organisations are neither the governing body for nursing institutes, nor are they state machineries, the PIL said, adding that they were private organisations like a private trust. Though they do not come under the purview of Indian Nursing Council Act, 1947, the two organisations are giving `approvals' to fake institutions, the PIL said.
    Some of these nursing colleges are offering catering courses also, the PIL said, adding that both courses were being offered without proper infrastructural facilities. Noting that these institutions had been admitting the students from backward and most backward communities in large numbers, the PIL said they were also able to get subsidy from the state government for the SCST students. It amounts to swindling the exchequer, the PIL said.
    Though several representations were sent to officials highlighting the mushrooming nursing schools in the region, no action had been taken so far, it said.
    The PIL was filed during the vacation of the high court because these institutions were targeting SSLC and Class XII students who have cleared their examinations this month. It urged the court to direct the Indian Nursing Council to conduct proper investigation and take legal steps against fake institutions which were functioning on the basis of an unauthorised approval and permission from BSS and NCVRT.
    The regional director of department of employment and training, other health department authorities of Thanjavur, Tiruvarur and Nagapattinam, besides the nursing council, shall file their replies within eight weeks.
    May 28 2017 : The Times of India (Chennai)
    TN adds 1,000 MBBS seats in six years
    Chennai
    TIMES NEWS NETWORK
    
    
    Four New Govt Colleges Since 2012
    The Tamil Nadu government has added at least 1,000 MBBS seats in the past six years ensuring that meritorious students with thinner wallets are not denied the chance of donning the coveted white coats in a state where private colleges charge more than `1 crore a year for undergraduate courses.Since 2012, the state has managed to open Government Sivagangai Medical College, Government Tiruvannamalai Medical College, Government Medical College in Omandurar, and ESIC Hospital in Coimbatore with 100 seats in each.
    This year, the Medical Council of India has permitted the state to open a medical college in Pudukkottai with 150 seats. “We have meticulously followed up on civil work, infrastructure and human resources to have each of these medical colleges opened in time,“ said state health secretary J Radhakrishnan.
    In addition to new medi cal colleges, the directorate of medical education has got permission to add 450 seats in at least eight existing medical colleges. Tamil Nadu now tops the list of states with maximum number of staterun medical colleges. It has 25 state-run medical colleges offering more than 3200 MBBS seats, compared to Maharashtra with 22 and Karnataka with 18. However, the number of private colleges is higher in Karnataka and Maharashtra. While Tamil Nadu has 24 private colleges offering 3,600 MBBS seats, Karnataka has 38 private colleges with more than 6,000 seats and Maharashtra has 28 institutions offering 4,020 seats.
    “We can now say that meritorious students will not be easily denied a seat in Tamil Nadu. Once a student clears NEET with a high score, he or she has a chance of getting a seat in a government college or at least a government quota seat in a self-financing college,“ said a senior government official.
    The state has also been able to add 305 more PG degree and diploma seats this year, including 272 in clinical subjections, after the MCI gave its approval.
    Additionally , in an effort a boost to non-teaching hospitals, the state plans to start diploma in national board (DNB) courses in 11 district headquarters hospitals and one sub-district hospital.These are equivalent to the MDMS courses offered by the MCI. “We have got permission to start two courses in the Cuddalore hospital and the department is hoping to get all others cleared in the next few months,“ said Dr V Vijaykumar, state nodal officer for DNB courses.
    
    

    May 28 2017 : The Times of India (Chennai)
    Pending criminal case an albatross around MKU 
    vice-chancellor's neck
    
    
    Madurai Kamaraj Uni versity (MKU) has got a new vice-chancellor af ter two years but the appointment of its former director of youth welfare P P Chelladurai as its 16th VC has sparked a row owing to a three-year-old criminal case pending against him.In 2014, following a com plaint from MKU's retired Tamil professor A Srinivasan, police in Madurai had booked former VC of the varsity Kalyani Mathivanan, Chelladurai and others for voluntarily causing hurt and attempting to murder. Srinivasan had floated an organisation -`Save MKU Coalition' -to expose alleged irregularities in the var sity administration and was attacked by two people.
    A resident of Virudhunagar, Chelladurai has a PhD in history and specialises in youth affairs. He has been a resource person for the ministry of parliamentary affairs for conducting model youth par liament too. But after his name was announced, posters surfaced in Madurai slamming the decision. “The chancellor's office and the government are aware of the case. On what basis was his name brought before the panel of three names?“ said Makkal Urimai Padhukappu Maiyam' representative and advocate S Vanchinathan.
    “He is not qualified for the post. He made a backdoor entry and became the director of MKU's youth welfare. I had filed a case but [when] he retired from service due to the case became null and void,“ said former principal of Wakf Board College, I Ismail.
    Dr Mu Ramaswamy , who resigned from the search committee constituted to recommend a panel of three names to the governor, said, “The governor failed to look into the allegations levelled against the committee's convener C Murukadas. I had sent letters but no action was taken.“
    'ஊதினால்' உயிருக்கு உலை இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்
    பதிவு செய்த நாள்30மே2017 22:35





    புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 31ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'புகையிலையை கைவிடுங்கள், வறுமையை ஒழிக்கலாம், வளர்ச்சியை ஏற்படுத்தலாம்' என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.

    புகைப்பது ஒரு கெட்ட பழக்கம், புகைப்பது பணத்தை வீணடிக்கிறது, புகைப்பது உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. 2014 கணக்கின் படி, 124 நாடுகளில் 43 லட்சம் எக்டேர் விவசாய நிலங்களில் 80 லட்சம் டன் அளவிலான புகையிலை விளைவிக்கப்படுகிறது. இதில் 90 சதவீதம் நடுத்தர வருமான மற்றும் ஏழை நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலும் பிரேசில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது. உலகில் அதிகளவில் புகையிலை விளைவிக்கும் நாடாக சீனா உள்ளது.

    70 லட்சம்
    புகையிலை பயன்பாட்டால் உலகளவில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலியாகின்றனர். இதில் 9 லட்சம் பேர் புகைப்பவர்களின் அருகே சுவாசிப்பவர்கள். 80 சதவீதம் பேர் ஏழை மற்றும் நடுத்தர நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
    4000
    புகையிலையில் முக்கியமானது 'சிகரெட்'. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய்
    ஏற்படுத்தக்கூடியவை.
    33
    உலகளவில் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டுமெனில் இதற்கு விதிக்கப்படும் வரியை அதிகப்படுத்த வேண்டும். 33 நாடுகள் தான் புகையிலை சில்லரை விலையில் 75 சதவீதத்தை வரியாக வசூலிக்கிறது.
    10ல் 1
    சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களில் 10ல் ஒன்று, சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
    23
    உலகளவில் புகையிலை பயன்படுத்தும் 23 கோடி இளைஞர்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர்.
    10%
    உலகில் ஏழை நாடுகளில் 10 சதவீத குடும்பங்களில் வருமானத்தை விட 10 சதவீதம் அதிகமாக புகையிலைக்கு செலவழிக்கி்ன்றனர். இதனால் உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு வருமானம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
    1000 கோடி
    உலகில் தினமும் ஆயிரம் கோடி சிகரெட் பயன்படுத்தப்படுகிறது.
    பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயார் பெயர் மத்திய அரசு ஒப்புதல்
    பதிவு செய்த நாள்30மே2017 21:01



    பட்டச்சான்றிதழில் தாய் பெயர்; அரசு ஒப்புதல்

    புதுடில்லி: பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயாரின் பெயரை குறிப்பிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    மாணவ,மாணவியரின் விருப்பம்

    செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இந்த ஆலோசனையை நாங்கள் ஏற்று கொண்டுள்ளோம். ஒரு மாணவன் தன்னுடைய தாயாரின் பெயரையோ அல்லது தந்தையின் பெயரையோ குறிப்பிடுவது என்பது மாணவன் அல்லது மாணவியின் விருப்பம். இந்த கருத்தினை நாங்கள் ஏற்று கொண்டுள்ளோம். இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இதற்கான பணியை பல்கலை கழக மானிய குழு மேற்கொள்ளும் என கூறினார்.

    மேனகா கடிதம்

    ஒரு மாணவன் தனது பட்டப்படிப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிடுவது கட்டாயம் என்ற விதி உள்ளது. இதற்கு கணவனை பிரிந்து தனியாக வசிக்கும் தாயார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த விதியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜாவடேகருக்கு கடந்த மாதம் மேனகா காந்தி கடிதம் எழுதினார்.

    தனது கடிதத்தில், தங்களது கணவர்களிடம் இருந்து பிரிந்து வசிக்கும் பல்வேறு பெண்கள் என்னை அணுகினர். அவர்கள், தங்களது குழந்தைகளின் சான்றிதழ்களை தந்தையின் பெயர் இல்லாமல் பெறுவதில் பல இன்னல்களை சந்தித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    மேலும், திருமண முறிவுகள் மற்றும் கணவன் மற்றும் மனைவி இடையே பிரிவு என்பது தற்பொழுது உண்மை நிலையாகி விட்டது. இதனை பிரதிபலிக்கும் வகையில் விதிகள் இருக்க வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து விளக்கமுடன் எழுதியிருந்தார். அதோடு தனியாக அல்லது பிரிந்து வாழும் தாயாரின் உணர்வை கருத்தில் கொண்டு, விதிகள் அல்லது வழிகாட்டி முறைகளை மாற்றுவதற்கான வழிகளை நாம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    திருத்தம்

    கடந்த வருடம் மேனகா காந்தி முன்வைத்த ஆலோசனையின் பேரில் பாஸ்போர்ட் விண்ணப்ப விதிகளில் மத்திய வெளிவிவகார துறை அமைச்சகம் திருத்தம் கொண்டு வந்தது. தனியாக அல்லது பிரிந்து வாழும் பெற்றோர் தங்களது குந்தைகளின் பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பிக்கும் பொழுது அதில் இருவருக்கு பதிலாக ஒருவரது பெயரை குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டது.
    திருவாரூரில் ஆழித்தேரோட்டத்தின்போது பெண்களிடம் 40 சவரன் நகைகள் திருட்டு
    2017-05-30@ 08:17:23

    திருவாரூர் : திருவாரூரில் ஆழித்தேரோட்டத்தின்போது பெண்களிடம் 40 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது. தேரோட்டத்தை பார்க்க வந்த பல்வேறு நபர்களிடம் நகைகள் திருடப்பட்டுள்ளன.


    விறு விறு...!
    25 ஆண்டுக்கு பின் பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை...
    அத்வானி மீது குற்றச்சாட்டு பதிவு; ஜாமினில் விடுவிப்பு


    லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், 1992ல், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை, மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது. சதித் திட்டம் தீட்டியதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உட்பட, ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. முன்னதாக, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இவர்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த, லக்னோ சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், அனைவருக்கும் ஜாமின் அளித்துள்ளது.





    முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த, பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. மசூதியை இடித்ததாக, முகம் தெரியாத கரசேவகர்கள் மீதான வழக்கு, லக்னோ சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
    மசூதியை இடிக்க சதித் திட்டம் தீட்டியதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது, ரேபரேலி கோர்ட்டில் தனியாக வழக்கு நடந்தது. இந்த வழக்கில் இருந்து, அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

    சதி திட்டம்

    இதை எதிர்த்து, சி.பி.ஐ., தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், 'இந்த வழக்கில், அத்வானி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும்' என, இந்த ஆண்டு ஏப்., 19ல் தீர்ப்பு அளித்தது.
    மேலும், 'ரேபரேலியில் நடக்கும் வழக்கையும், லக்னோவுக்கு மாற்ற வேண்டும்;

    இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்க வேண்டும்' என்றும், சுப்ரீம் கோர்ட், தன் தீர்ப்பில் கூறியிருந்தது. மசூதி இடிக்கப்பட்டபோது, உ.பி., முதல்வராக இருந்த, பா.ஜ., மூத்த தலைவர் கல்யாண் சிங், தற்போது ராஜஸ்தான் கவர்னராக உள்ளதால், அப்பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட பின், அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும், கோர்ட் கூறியுள்ளது. அதன்படி, லக்னோ கோர்ட்டில், இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்து உள்ளது.

    சதித்திட்டம் தீட்டியது, மத ரீதியில் மோதலை ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், ஹிந்துத்துவா தலைவர்களான ராம்விலாஸ் வேதாந்தி, பைகுந்த் லால் சர்மா, சம்பட் ராய் பன்சால், மகந்த் நிருத்ய கோபால் தாஸ், தரம் தாஸ், சதீஷ் பிரதான் ஆகியோர் மீது, சமீபத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

    இவர்கள் அனைவரும் ஜாமினில் விடுவிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், 'சதித் திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும்' என, அத்வானி உள்ளிட்டோருக்கு, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இம்மாதம், 25, 26ம் தேதிகளில் ஆஜராகாததால், அவர்களுக்கு கோர்ட், கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    குற்றச்சாட்டுகள் பதிவு

    அதைத் தொடர்ந்து, அத்வானி உள்ளிட்டோர், லக்னோவில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நேற்று ஆஜராகினர்.தங்கள் மீதான வழக்கை கைவிட வேண்டுமென, அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை, நீதிபதி, எஸ்.கே.யாதவ் தள்ளுபடி செய்தார். 

    சதித் திட்டம் தீட்டியதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, 89; முரளி மனோகர் ஜோஷி, 83; மத்திய அமைச்சர் உமா பாரதி, 58; வினய் கட்டியார், 62; விஸ்வ ஹிந்து பரிஷத்தின் விஷ்ணு ஹரிடால்மியா, 88; சாத்வி ரிதாம்பரா, 53, ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
    ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை ஏற்ற நீதிபதி, தலா, 50 ஆயிரம் ரூபாய் சொந்த ஜாமினில் அனைவரையும் விடுவித்தார். அத்வானி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை, இனி விறுவிறுப்பாக நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று அயோத்தி செல்கிறார் யோகி

    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மீண்டும் பரபரப்பு காட்சிகள் துவங்கியுள்ள நிலையில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று, அயோத்திக்கு செல்கிறார். அங்கு தற்காலிக இடத்தில் அமைந்துள்ள ராமர் கோவிலில் வழிபட உள்ளார். ராமஜென்ம பூமி இயக்கத் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாசின் பிறந்த நாளையொட்டி நடக்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.

    மீண்டு வருவர்

    அத்வானி உள்ளிட்டோர் நிரபராதிகள்; அவர்கள், இந்த வழக்கில் இருந்து குற்றமற்றவர்கள் என, விடுதலை ஆவர் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது. பிரச்னை கோர்ட்டில் உள்ளதால், இதற்கு மேல் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.
    -வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர், பா.ஜ.,

    உ.பி., முதல்வர் சந்திப்பு

    பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் நேற்று உத்தர பிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்தனர். அவர்களை, பா.ஜ., மூத்த நிர்வாகிகள், லக்னோ விமான நிலையத்தில் வரவேற்றனர். பா.ஜ., ஆளும் உ.பி., முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத், வி.ஐ.பி., விருந்தினர் மாளிகையில், அத்வானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    12 வயது குடும்ப தலைவர் 'ஸ்மார்ட் கார்டு' குளறுபடி

    பதிவு செய்த நாள்30மே2017 23:46




    நாகப்பட்டினம்: நாகையில், 12 வயது சிறுவனை, குடும்ப தலைவராக்கி, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில், போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க, அனைத்து கார்டுகளும், 'ஸ்மார்ட் கார்டு'களாக மாற்றப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், தாங்கள் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளில், ஆதார் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    பெரும்பாலான ரேஷன் கடை ஊழியர்களுக்கு முறையான பயிற்சி இல்லாததால், ஆதார் பதிவில் குளறுபடி ஏற்பட்டது. நாகை மாவட்டத்தில், 4 லட்சத்து, 33 ஆயிரத்து, 562 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.மார்ச் மாத நிலவரப்படி, 2.௪௫ லட்சம் கார்டுகளில், ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1.௮௭ லட்சம் கார்டுகளில், பகுதியாக, ஆதார் பதிவாகி உள்ளது. 1,325 கார்டுகளில், ஆதார் பதிவு செய்யப்படவில்லை.

    முழுமையாக பதிவு செய்யப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களில், முதற்கட்டமாக, 1.௦௮ லட்சம் கார்டுகள், ஸ்மார்ட் கார்டுகளாக அச்சிட்டு, வழங்கும் பணி நடந்து வருகிறது. இதில், கருவேலங்கடையைச் சேர்ந்த ஒரு ரேஷன் கார்டில், குடும்ப தலைவியாக, வேல்விழி என்பவர் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தது.

    ஆனால், இவரது பழைய ரேஷன் கார்டுக்கு பதிலாக, வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், குடும்பத் தலைவராக, 2005ல் பிறந்த, 12 வயது மகன் பிரவீன்ராஜ் பெயர் அச்சிடப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது. இதனால், வேல்விழி குடும்பத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.
    கருணாநிதிக்கு வாழ்த்து இணையதளம் துவக்கம்
    பதிவு செய்த நாள்31மே2017 00:20




    சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, தி.மு.க., சார்பில், புதிய இணையதளம் துவக்கப்பட்டு உள்ளது.

    கருணாநிதியின், 94வது பிறந்த நாள், ஜூன், 3ல் வருகிறது. அன்று மாலை, சென்னை, ராயப்பேட்டையில், தேசிய தலைவர்கள் பங்கேற்கும் பாராட்டு விழா நடைபெற உள்ளது. பிறந்த நாளன்று, கருணாநிதியை தொண்டர்கள் நேரில் சந்திப்பதை தவிர்க்கும் வகையில், இணையதளம் வாயிலாக வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. www.wishthalaivar.com என்ற இணையதளத்தை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், நேற்று துவக்கி வைத்தார்.
    மறு கவுன்சிலிங்: கவர்னர் அதிரடி

    பதிவு செய்த நாள்30மே2017 23:58

    புதுச்சேரி, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.டி., - எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ இடங்களை, அந்தந்த மருத்துவக் கல்லுாரிகளே நிரப்பிக்கொள்வது வழக்கம்.
    இந்தாண்டு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவப் படிப்பில், 50 சதவீத இடங்களை, மாநில அரசு நிரப்ப வேண்டும் என, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.

    இதன்படி, புதுச்சேரியில், கல்லுாரி சேர்க்கைக்கான, 'சென்டாக்' அமைப்பு மூலம், எம்.டி., - எம்.எஸ்., மற்றும் பல் மருத்துவப் படிப்பில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அரசு மருத்துவக் கல்லுாரியில், மூன்று; ஏழு தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 159 என, மொத்தம், 162 அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 88 இடங்களே நிரம்பின.

    மீதமிருந்த, 71 இடங்களை, பிற மாநில மாணவர்கள் பங்கேற்கும் வகையில், நிர்வாக ஒதுக்கீடாக மாற்றி, சுகாதாரத் துறை செயலர் உத்தரவிட்டார். இது தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு, மாணவர்கள் மற்றும் பெற்றோர், கவர்னர் கிரண் பேடியை சந்தித்து முறையிட்டனர்.

    நேற்று காலை, இதுபற்றி, கவர்னர் கிரண்பேடி விசாரித்தார். சுகாதாரத் துறை செயலர் உத்தரவுபடியே, மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக மாற்றப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். 'இது முற்றிலும் தவறு. இந்த உத்தரவை ரத்து செய்கிறேன்; 71 இடங்களுக்கு, உடனே மீண்டும் கவுன்சிலிங் நடத்த வேண்டும்' என, உத்தரவிட்டார்.
    'மெரிட் லிஸ்ட் தயாரித்து மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டி உள்ளதால், நாளை, கவுன்சிலிங் நடத்தலாம்' என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை, கவர்னர் கிரண் பேடி ஏற்று, 'கவுன்சிலிங்கில் நானும் கலந்து கொள்வேன்' என்றார்.இதன்படி, 71 மருத்துவ மேற்படிப்பு இடங்களுக்கு இறுதி கவுன்சிலிங் நடக்கிறது.

    - நமது நிருபர் -
    இன்ஜி., கவுன்சிலிங் இன்று முடியுது பதிவு

    பதிவு செய்த நாள்30மே2017 22:46

    சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். 

    அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 1ல் துவங்கி, இன்றுடன் முடிகிறது. இதுவரை, மொத்தம் உள்ள, இரண்டு லட்சம் இடங்களுக்கு, 1.47 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'செயலர், தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலை, சென்னை' என்ற முகவரிக்கு, ஜூன், 3க்குள் கிடைக்கும்படி, அனுப்ப வேண்டும்.
    2 ஆண்டுக்கு பின் பட்டமளிப்பு விழா : சென்னை பல்கலை அறிவிப்பு

    பதிவு செய்த நாள்30மே2017 21:53

    புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னைப் பல்கலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது. சென்னைப் பல்கலை துணைவேந்தராக இருந்த தாண்டவன், 2016 ஜனவரியில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, ஒன்றரை ஆண்டுகளாக, துணைவேந்தர் இன்றி பல்கலை நிர்வாகம் முடங்கியிருந்தது. மேலும், 2015, செப்டம்பருக்குப் பின், பட்டமளிப்பு விழாவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், புதிய துணைவேந்தராக, சென்னைப் பல்கலையின் முன்னாள் பேராசிரியர் துரைசாமி, மே, 27ல் பதவியேற்றார். இதையடுத்து, உயர்கல்வித் துறை உத்தரவுப்படி, ஜூலை முதல் வாரத்திற்குள் பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளது.அதனால், '159வது பட்டமளிப்பு விழாவில், பி.எச்டி., முடித்தோர் சான்றிதழ்கள் பெற, வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, பதிவாளர் சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்கலையின், www.unom.ac.in என்ற இணைய தளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, 'பதிவாளர், சென்னைப் பல்கலை' என்ற முகவரிக்கு, 500 ரூபாய்கான வங்கி வரைவோலையுடன் அனுப்ப வேண்டும். பல்கலையின் விசாரணை பிரிவிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    மானாமதுரை மண்பாண்ட தொழிற்கூடத்தில்பாதிப்பு:5 நாட்களாக மின்தடையால் வருமானம் இழப்பு

    பதிவு செய்த நாள்31மே2017 02:25

    மானாமதுரை;மானாமதுரையில் கடந்த 5 நாட்களாக மின் சப்ளை இல்லாததால் மண்பாண்ட தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.மானாமதுரை குலாளர் தெருவில் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பிரதான தொழில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்வது. மண்கூஜாக்கள்,தொட்டிகள்,கார்த்திகை விளக்குகள், சிலைகள்,தயிர் கிண்ணங்கள்,குடுவைகள்,மற்றும் ஏராளமான பொருட்கள் சீசனிற்கு தகுந்தவாறு உற்பத்தி செய்து உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    கர்நாடக சங்கீத கச்சேரிகளில் பயன்படுத்தும் 'கடம்'இங்கு தான் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்களை தயாரிக்க குலாலர் தெருவில் ஆங்காங்கே ஏராளமான தொழிற்கூடங்கள் உள்ளன.இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தொழிற்கூடத்தின் ஒரு பகுதியில் உள்ள மின்இணைப்பில் 'மீட்டர் பாக்ஸ்' புகைந்து செயல்படாததையடுத்து அங்கிருந்த 6 மண்பாண்ட பொருட்கள் தயார் செய்யும் கூடங்களுக்கு மின்சப்ளை பாதிக்கப்பட்டது.
    இதனால் அவர்கள் மண்பாண்ட பொருட்கள் செய்ய பயன்படுத்தப்படும் இயந்திரங்களை இயக்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். கடந்த வியாழக்கிழமையிலிருந்து நேற்று காலை வரை மின்சப்ளை இல்லாததால் 50 க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் 

    மண்பாண்ட தொழிலாளி ரங்கசாமி32,கூறுகையில்,கடந்த வியாழக்கிழமை மீட்டரில் புகை ஏற்பட்டு மின்சப்ளை பாதிக்கப்பட்டது.நேற்று வரை கரண்ட் வரவில்லை,கரண்ட் கட்டான நாளில் சிப்காட்டில் உள்ள மின்சார அலுவலகத்திற்கு சென்று புதிய மீட்டர் பொருத்த கட்டணங்களையும் கட்டி விட்டோம். இன்னும் வந்து ஊழியர்கள் சரிசெய்யவில்லை எனறு கூறினார்.
    எனது கூடத்தில் 6 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.அதேபோன்று அடுத்தடுத்துள்ள 5 கூடங்களிலும் ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்,அவர்களும் வேலை இழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர் என்றார்.ஆகவே மின்சார வாரியத்தினர் மண்பாண்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    மாநில செய்திகள்
    இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது மத்திய அரசின் உத்தரவுக்கு தடை 4 வாரத்தில் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு




    இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது மத்திய அரசின் உத்தரவுக்கு தடை 4 வாரத்தில் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    மே 31, 2017, 05:45 AM
    மதுரை,

    கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து கடந்த 23-ந்தேதி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டு இருந்த அறிவிக்கையில், இளம் கால்நடைகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரக் கூடாது. கால்நடை சந்தைக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்து வடிவில் ஒப்புதல் அளித்த பிறகே அந்த கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    கட்டுப்பாடுகள்

    மேலும் கால்நடைகளை விற்பனை செய்கிறபோது, தன்னை விவசாயி என்று நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை வைத்திருப்பவர்களிடம் மட்டுமே கால்நடைகளை விற்க முடியும். காளைகள், பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசுமாடு, கன்று, ஒட்டகம் ஆகியவை இந்த தடையில் வருகிறது. அனைத்து கால்நடை சந்தைகளும் 3 மாதங்களுக்குள் மாவட்ட கால்நடை மேற்பார்வை குழுவிடம் விண்ணப்பித்து தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். கால்நடைகளை விலைக்கு வாங்கியவர்கள் அவற்றை இறைச்சிக்காக வெட்டவும் கூடாது. இறைச்சிக்காக விற்பனை செய்யவும் கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசு விதித்தது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

    ஐகோர்ட்டில் வழக்கு

    இந்த நிலையில் கால்நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த சமூகசேவகி செல்வகோமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு 1960-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிராணிகள் வதைத்தடுப்பு சட்டத்துக்கு எதிரானது. மத வழிபாட்டிற்கு பிராணிகளை கொல்ல அனுமதி அளிக்கும் சட்டப்பிரிவு 28-க்கு எதிரானது. மேலும், அரசியலமைப்பின் 25-வது பிரிவு வழங்கி உள்ள மத சுதந்திரத்திற்கும் எதிரானது. இந்தியாவில் பெரும்பாலான சமூகங்கள் உணவுக்காக பிராணிகளை வதை செய்து, சுத்தம் செய்து உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

    அரசியல் அமைப்புக்கு எதிரானது

    இந்தநிலையில், அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள இந்த உரிமையை பிற சட்டங்களால் தடுக்க இயலாது. மேலும், மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும் மற்றும் விற்கும் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இந்த தடையால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள். உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை ஆகும்.

    மக்களின் உணவுப்பழக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த தடை அமைந்துள்ளது. எனவே இந்த தடையை சட்ட விரோதமானது என்றும், அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றும் அறிவித்து உத்தரவிட வேண்டும். அதுவரை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை அமல் படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    மாநில அரசின் அதிகாரம்

    இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை களிமங்கலத்தை சேர்ந்த ஆசிக் இலாகி பாவா என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். இவற்றை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி, “உணவு என்பது கலாசாரங்களின் அடையாளம். ஒருவர் இந்த உணவைத்தான் சாப்பிட வேண்டும் என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்திய குடி மகன்களின் அடிப்படை உரிமைகளில் அரசு தலையிட முடியாது. ஒரு சட்டத்தில் திருத்தம் செய்வதானால் ஏற்கனவே உள்ள பிரதான சட்டத்துக்கு உட்பட்டதாக தான் திருத்தம் இருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டத்திருத்தம் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. சந்தைகளை ஒழுங்கு படுத்துவது உள்ளாட்சி மற்றும் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. எனவே மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதாடினார்.

    அவகாசம் தேவை

    அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு வக்கீல் ஜி.ஆர். சுவாமிநாதன், “இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. எனவே இதுதொடர்பாக பதில் அளிக்க 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கக்கூடாது” என்று வாதாடினார்.

    மேலும் “கால்நடைகளை வதை செய்ய தடை விதிக்கப்படவில்லை. கால்நடைகளை விற்பனை செய்வதை முறைப்படுத்துவதற்காகத் தான் இறைச்சிக்காக கால்நடைகளை சந்தைகளில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

    இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இடைக்கால தடை

    இருதரப்பு விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க தடை விதித்தது தொடர்பாக மாநில அரசை கலந்தாலோசிக்காமல் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிர்வாக நடைமுறை என்பது மாநில அரசுகளின் அதிகாரத்திலேயே உள்ளது. உணவு சம்பந்தமான விஷயங்கள் மத்திய-மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள கருத்துகளில் முகாந்திரம் உள்ளதாக இந்த கோர்ட்டு கருதுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை. எனவே இறைச்சிக்காக சந்தைகளில் கால்நடைகள் விற்க விதிக்கப்பட்டுள்ள தடைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

    இந்த வழக்கு குறித்து மத்திய உள்துறை செயலாளர், மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளர், மாநில உள்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    தலையங்கம்
    மாட்டு சந்தைக்கு போக முடியாதா?




    தந்தை பெரியார் அந்தகாலத்திலேயே ‘உணவு பற்றாக் குறை தீர’ என்ற தலைப்பில் முதல் பரிகாரமாக, நம் மக்களுக்கு அரிசி சோறு தேவையற்றதும், வழக்கமற்றதும் ஆகும்.

    மே 30, 02:00 AM

    தந்தை பெரியார் அந்தகாலத்திலேயே ‘உணவு பற்றாக் குறை தீர’ என்ற தலைப்பில் முதல் பரிகாரமாக, நம் மக்களுக்கு அரிசி சோறு தேவையற்றதும், வழக்கமற்றதும் ஆகும். ஆடு, கோழி, பன்றி முதலிய மாமிசம் சாப்பிடும் மக்களை மாட்டிறைச்சி சாப்பிடும்படி செய்து, அது எளிதாய் குறைந்த விலைக்கு கிடைக்கும்படி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட மாட்டிறைச்சிக்காக கால்நடை சந்தைகளில் மாடுகளை விற்க தடைசெய்யும் ஒரு உத்தரவை மத்திய அரசாங்கம், யாரும் எதிர்பார்க்காத வகையில் பிறப்பித்துள்ளது. மிருகவதை தடுப்பு (கால்நடை சந்தைகள் ஒழுங்குபடுத்துதல்) விதிகள் என்ற பெயரில் ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசாங் கத்தின் 3 ஆண்டு நிறைவில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிக்கை, நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு மாதத்துக்குப் முன்புதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவரான மோகன் பகத், பசு வெட்டுவதை தடைசெய்யும் வகையில் ஒரு அகில இந்திய சட்டம் கொண்டுவரவேண்டும் என்று மத்திய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதன்மூலம் அந்த கோரிக்கை நிறைவேறியிருக்கிறது.

    இந்த உத்தரவின்மூலம், மாட்டு சந்தைகளில் விவ சாயிகள், கால்நடை வியாபாரிகள், பசு, காளை, எருமை, ஒட்டகம் போன்ற மிருகங்களை இறைச்சிக்காக வெட்டு வதற்காக விற்பனை செய்ய தடை செய்யப்படுகிறது. கால் நடை சந்தைகளில் கால்நடைகளை விற்பதற்காக கொண்டு வருபவர்கள் ஒரு உறுதிமொழி பத்திரத்தை எழுதிக்கொண்டு வரவேண்டும். அதில், கால்நடையின் உரிமையாளரோ, அல்லது அவரால் அங்கீகாரம் பெற்றவரோ, இந்த கால்நடை இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டுவரப் படவில்லை என்று உத்தரவாதம் தரவேண்டும். இதுபோல, அதை வாங்குபவரும் போட்டோ ஒட்டிய அடையாள அட்டையுடன் நான் இறைச்சிக்காக வெட்டுவதற்கு வாங்க வில்லை என்று எழுதித்தரவேண்டும். இறைச்சிக்காக இதுபோன்ற கால்நடைகளை வாங்குபவர்கள் கால்நடை பண்ணைகளுக்கு சென்றுதான் வாங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதெல்லாம் ‘இல்லாத ஊருக்கு போகாத வழியாகும்’.

    முதலில் இறைச்சிக்காகவே ஒருவர் கால்நடையை வாங்குகிறார் என்று எடுத்துக்கொண்டால், அவர் எந்த பண்ணையை எங்கே போய்த்தேடுவார்?. அடுத்து கிராமப் புறங்களில் உள்ள படிக்காத பாமரர்களும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும் தங்கள் வயிற்று பிழைப்புக்காக மாடு, காளை, எருமை போன்றவற்றை விற்கவேண்டுமென்றால் சந்தைக்குத்தான் செல்வார்கள். இந்த விதியில் குறிப்பிட்ட நடைமுறைகள் எல்லாம் நிச்சயமாக ஏழை விவசாயிகளுக்கு சாத்தியமல்ல. மதரீதியான பலிகளுக்காக எருமை வாங்குபவர்கள் எருமை பண்ணைக்கு சென்றுதான் வாங்கமுடியும் என்றால் நிச்சயமாக முடியாது. மாடுகளின் கொம்புகளில் வர்ணம்பூசுவது இனிமேல் மத்திய அரசின் உத்தரவுப்படி மிருகவதை என்றால், மாட்டுப்பொங்கலை எப்படி கொண்டாடுவது? மாட்டுப்பொங்கல் அன்று கொம்புகளில் வர்ணம் பூசுவதைத் தான் முக்கிய கடமையாக செய்வார்கள்.

    இதுமட்டுமல்லாமல், அமெரிக்காவுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாதான் முதல் இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவுக்கு மட்டும் 11 லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத் தத்தில், ஆண்டுதோறும் ரூ.26 ஆயிரம் கோடிக்கு வெளி நாடுகளுக்கு எருமை இறைச்சியும், ரூ.78 ஆயிரம் கோடிக்கு தோல்பொருள் விற்பனையும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த உத்தரவின் காரணமாக, இந்த ஏற்றுமதி எல்லாம் பெருமளவில் பாதிக்கப்பட்டுவிடும். ஏழை விவசாயிகள் வறட்சி காலத்திலும், கடன்சுமை ஏற்படும்போதும், வேறு வழியில்லாமல் சந்தைக்கு சென்றுதான் மாடுகளை விற்பார்கள். இவ்வளவு கட்டுப்பாடுகளை அவர்களால் நிச்சயமாக தாங்க முடியாது. மேலும் ஆட்டுக்கறி, கோழிக் கறி வாங்க முடியாத ஏழைகளுக்கு அவர்களது உடல் உழைப்புக்கேற்ற உணவு மாட்டுக்கறிதான். கேரளா, கர்நாடக அரசுகள் இது மாநில பட்டியலில் வருகிறது. நாங்கள் நிறைவேற்றமுடியாது என்று உறுதிபட கூறி விட்டன. தமிழக அரசும் இந்த புதிய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
    தேசிய செய்திகள்
    வயதான இந்தி நடிகை கீதா கபூரின் பரிதாப நிலை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு மகன் ஓட்டம்




    பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு சிகிச்சைக்கு பணம் கொடுக்காமல் ஓடி விட்டார். இந்த சம்பவம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மே 31, 2017, 03:45 AM

    மும்பை,

    பழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர். இவர் வெற்றிகரமாக ஓடிய ‘பகீஷா’ படத்தில் மீனாகுமாரியுடன் நடித்து பிரபலமானார். ‘ரஷ்யா சுல்தான்’ உள்பட 100–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ராஜா என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர். தற்போது வயதாகி விட்ட நிலையில் மும்பையில் உள்ள மகன் வீட்டில் வசித்து வந்தார்.

    கீதா கபூருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. வெளியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக கூறிச்சென்ற அவரது மகன் ராஜா மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வரவே இல்லை. அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டார்.கவலைக்கிடம்

    ஆஸ்பத்திரி ஊழியர்கள் செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் பேசவில்லை. மகள் பூஜாவும் போனை எடுக்கவில்லை. கீதா கபூர் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் டாக்டர்கள் சிகிச்சை அளித்து குணப்படுத்தினார்கள். அவருக்கு மருத்துவ செலவு கட்டணமாக ரூ.1½ லட்சம் வந்து இருப்பதாகவும் அதை கட்டி விட்டு செல்லும்படியும் ரசீது கொடுத்தனர்.

    கீதா கபூர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி அழுதார். மகன் தன்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ஓடி விட்டதாகவும் கூறினார். கீதா கபூரின் பரிதாப நிலை குறித்து தகவல் அறிந்ததும் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் அசோக் பண்டிட் தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி ஆகியோர் மருத்துவ செலவை ஏற்று ரூ.1½ லட்சத்தை ஆஸ்பத்திரியில் செலுத்தினார்கள்.

    இது குறித்து கீதா கபூர் கூறியதாவது:–பட்டினி போட்டனர்

    ‘‘வயதான என்னை மகன் கவனிக்கவில்லை. தினமும் அடித்து உதைத்தான். பல நாட்கள் தனி அறையில் அடைத்து வைத்தான். 4 நாட்களுக்கு ஒரு தடவை சாப்பாடு போட்டனர். பட்டினி போட்டதால் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடும்படி வற்புறுத்தினான். நான் மறுத்து விட்டேன். இதனால் ஆஸ்பத்திரியில் கொண்டு போட்டு விட்டு ஓடிவிட்டான்’’

    இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.

    கீதா கபூர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    மாநில செய்திகள்
    தென்மேற்கு பருவ மழை 3 நாட்களில் தொடங்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்




    பருவ மழை 3 நாட்களில் தொடங்க இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் கூறினார்.

    மே 31, 2017, 05:30 AM
    சென்னை,

    தமிழகத்தில் தற்போது உள்ள வெப்பத்தின் அளவு படிப்படியாக குறையும் என்றும், தென்மேற்கு பருவ மழை 3 நாட்களில் தொடங்க இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் கூறினார்.

    கோடைமழை

    அக்னி நட்சத்திரம் என்ற கத்திரிவெயில் நிறைவடைந்த உடன் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வினோதமான காலநிலை நிலவி வருகிறது. குறிப்பாக பகல் பொழுதில் அளவுக்கு அதிகமான வெப்பமும், மாலை வேளைகளில் திடீரென்று லேசான மழையும் பெய்து வருகிறது. இது தமிழகத்தின் உள்மாவட்டத்தில் மட்டும் இருந்து வந்தது. ஆனால் நேற்று முன்தினம் மாலை சென்னையிலும் லேசான மழை பெய்து பூமியை குளிர்வித்தது.

    தொடர்ந்து இதேபோன்று கோடைமழை பெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் விரும்பினாலும், நேற்று பகல் பொழுதிலும் வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்பட்டது.

    இந்த வெப்பத்தின் அளவு எப்போது குறையும்? கோடைமழை எப்போது பெய்யும்? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவ மழை

    கேரள மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக அனேக இடங்களில் மழை பெய்தது. ஓரிரு இடங்களில் கன மழை பெய்தது. இதன் மூலம் அங்கு தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கி உள்ளது.

    அடுத்த 2 அல்லது 3 நாட்களில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளிலும் தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளது. இதனால் கன்னியாகுமரி, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    அதேபோல் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபிணி உள்ளிட்ட ஆணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அவ்வாறு பெய்வதால் மேட்டூர் அணைக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கோடைமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சிவகங்கை, குளச்சல், குளித்துறை ஆகிய இடங்களில் 6 சென்டி மீட்டர் அளவில் மழை பெய்தது. மயிலாடி, இரணியல், தக்கலையில் 5, திருவாடானை, நாகர்கோவிலில் 4, காரைக்குடி, பேச்சிப்பாறையில் 3 சென்டி மீட்டர் மழை பெய்தது. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் 32 சதவீதம் மழை


    தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் நடத்திய ஆய்வுப்படி நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை 96 சதவீதம் பெய்யும் என்று தெரியவந்துள்ளது.

    தமிழ்நாட்டில் ஜூன் மாதம் 6 சதவீதமும், ஜூலை 7 சதவீதம், ஆகஸ்டு 8 சதவீதம், செப்டம்பர் 11 சதவீதம் ஆக மொத்தம் 32 சதவீதம் மழை பெய்யும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக மாதம் 5 சதவீதம் பெய்வது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் 24 சதவீதம் மழை பெய்தது.

    சென்னையில் திடீர் மழைக்கு காரணம்

    கடல் காற்றின் அளவை பொறுத்து தான் வெப்பத்தின் தன்மை இருக்கும். பொதுவாக தரைக்காற்று வீசுவது குறைந்த உடன் கடல் காற்று படிப்படியாக வீசத்தொடங்கும். ஒவ்வொரு மாதமும் இதில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். மே மாதம் இறுதியிலும் ஜூன் மாதம் தொடக்கத்தில் பகல் 2.30 மணிக்கு பிறகு தான் கடல் காற்று வீசத்தொடங்குவது வழக்கம்.

    ஆனால் நேற்று முன்தினம் தரைக்காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், கடல் காற்று மாலை 4 மணிக்கு தான் வீசத்தொடங்கியது. இதனால தான் நேற்று (நேற்று முன்தினம்) திடீரென்று மழை பெய்தது. சென்னையில் 2.9 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்தது.

    வெப்பம் குறையாதது ஏன்?

    அக்னி நட்சத்திரம் என்ற கத்திரிவெயில் காலம் முடிந்தாலும் படிப்படியாகத்தான் வெப்பத்தின் அளவு குறையும்.

    தற்போது தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தொடங்கியிருப்பதால், ஈரக்காற்று மேற்கு தொடர்ச்சி மலையில் மோதுவதால் கேரள மாநிலத்தில் மழையை பெய்ய வைக்கிறது.

    பின்னர் அதே காற்று மலைக்கு மேலே சென்று மீண்டும் தமிழகத்தில் வீசும் போது ஈரப்பதத்தை இழந்து வெறும் காற்று வீசுவதால் வெப்பம் அதிகரிப்பது என்பது இயற்கை தான். இதுபடிப்படியாக குறையும்.

    மோரா புயல் கரையை கடந்தது

    மே மாதம் உருவாகும் புயல் வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்வது தான் இயற்கை. அந்தவகையில் இந்த மாதம் வங்க கடலில் உருவான மோரா புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் அருகில் நேற்று காலை 6.30 மணி அளவில் கரையை கடந்தது. இதனால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    வரும் நாட்களில் சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம் மற்றும் குறைந்த பட்சம் வெப்பத்தின அளவு 41 மற்றும் 31 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தலையங்கம்
    அரசியல் களத்தில் ரஜினிகாந்த்




    1977-ல் முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவியேற்ற நேரத்தில், ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

    மே 31, 05:00 AM
    அந்தபடத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததால்தான், பதவியேற்பு விழாவே சிலநாட்கள் தள்ளிப்போனது. அதைப்போலத்தான் ரஜினிகாந்தும், “தனது 164-வது படமாகிய ‘காலா’ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு, அரசியலுக்கு வருவார். அந்தப்படத்தின் தாக்கம் நிச்சயமாக எல்லோருடைய அரசியல் உணர்வுகளையும் தட்டியெழுப்பும். அதில் வரும் பல ‘பஞ்ச் டயலாக்குகள்’ மக்களை அவருக்கு ஆதரவாக ஈர்க்கும்’ என்றெல்லாம் இப்போதே பரவலாக பேசப்படுகிறது. இந்த ‘காலா’ கதை ஒரு கற்பனைக்கதை.

    நெல்லையில் இருந்து பிழைப்புதேடி பம்பாய் சென்ற ஒரு ஏழைப்பங்காளனின் கதை என்று கூறப்பட்டது. ஒருபக்கம் ஏழைப்பங்காளன். மறுபக்கம் அநீதிகளை தட்டிக்கேட்கும் ஆபத்பாந்தவன். தமிழ்நாட்டில் இருந்து பிழைப்புதேடி யார் பம்பாய் வந்தாலும், அவர் களுக்கு சாப்பாடுபோட்டு வாழ வழி செய்த உத்தமர். தமிழக மக்களுக்கு எதிராக மராட்டியர்களால் என்ன அநீதி விளைவிக்கப்பட்டாலும், அதையெல்லாம் எதிர்த்து போர் தொடுத்தவர் கதைதான் இது என்று கூறப்படுகிறது.

    படப்பிடிப்பு தொடங்கி ஓரிரு நாட்களுக்குள்ளேயே இது உமரிக்காட்டைச் சேர்ந்த திரவிய நாடார் கதை, ராஜபாண்டி நாடார் கதை, எஸ்.கே.ராமசாமி கதை என்று பலருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டு வந்தாலும், டைரக்டர் ரஞ்சித்தை பொறுத்தவரை, இது கற்பனைக்கதை என்றுதான் கூறு கிறார். ஆக, தமிழர்களுக்கு பாதுகாவலனாக விளங்கிய நல்லவர்கள் அனைவரின் கதையையும் கலந்துதான், இந்த ‘காலா’ கதை உருவாகி இருக்கிறது என்று கூறு கிறார்கள். ‘காலா’ என்றால் கருப்பு. காமராஜரையே காலா காந்தி, அதாவது கருப்பு காந்தி என்று வடநாட்டவர்கள் கூறுவார்கள். அதுபோல இந்த ‘காலா’ படம் ரஜினி காந்துக்கும் ஒரு அரசியல் திருப்புமுனை என்பதுதான் எல்லோருடைய கணிப்பும் ஆகும். ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் முதலாவதாக ரஜினிகாந்த் நடித்தார். அந்த காலங்களில் சிவப்பாக இருப்பவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க முடியும் என்ற ஒரு தார்ப்பரியத்தை தகர்த்தெறிந்து, கருப்பாக இருப்பவரும் கதாநாயகனாக முடியும் என்ற முத்திரையை பதித்தவர் ரஜினிகாந்த்.

    1996-ம் ஆண்டு முதலே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று பரவலாக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஒவ்வொரு படமும் வெளியே வரும்போது,
    ஏதாவது ஒரு டயலாக் கூறுவார். உடனே எல்லோரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று கூறுவார்கள். அந்தப்படமும் ஓடும். அதோடு அந்தப்பேச்சும் அடங்கிவிடும். இந்த மாதம் 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தார். அப்போது அவர் முதன்முதலாக, “நான் ஒரு வேளை அரசியலுக்கு வந்தால் பணம் சேர்க்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன்” என்று பரபரப்பாக பேசினார். “அரசியலுக்கு வந்தால்” என்று கூறியதில் இருந்தே, அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை முதல்நாள் தெரிவித்த ரஜினிகாந்த், “நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக இருங்கள்” என்று இறுதி நாளில் கூறிவிட்டார்.

    இந்த நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்று சில கருத்துகளை தெரிவித்தார். பா.ஜ.க. தலைவர்களை பொறுத்தமட்டில், ரஜினிகாந்த் பா.ஜ.க.வில் சேர்ந்தால் வரவேற்போம் என்று கூறுகிறார்கள். ஆனால், அரசியலுக்கு ரஜினிகாந்த் நுழைவது

    உறுதியாகிவிட்டால், நிச்சயமாக தனிக்கட்சி தான் தொடங்குவார். ஆனால், அந்தக்கட்சி பா.ஜ.க.வுடன் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்துக்கொள்ளும் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் எல்லா யூகங்களுக்கும் முடிவு ‘காலா’ படம் வெளிவந்தவுடன் ரஜினிகாந்த் சொல்லப்போகும் அறிவிப்பில்தான் இருக்கிறது. மொத் தத்தில் சாதி, மதம், இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எல்லோருடைய ஆதரவும் பெற்றுள்ள ஒருவர் அரசியலுக்கு வருவதில் தவறல்ல என்பதுதான் பரவலான கருத்தாக இருக்கிறது.










    சொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல் ஆகின்றன



    வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துவைத்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

    மே 31, 2017, 05:15 AM
    சென்னை,

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் 3 பேர் தங்களது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துவைத்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

    சொத்துகுவிப்பு வழக்கு

    முதல்-அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான்மைக்கேல் குன்கா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து 4 ஆண்டு ஜெயில் தண்டனை, அபராதம் மற்றும் சொத்துகள் பறிமுதல் ஆகியவை உறுதி செய்யப்பட்டன.

    இதற்கிடையே ஜெயலலிதா மரணம் அடைந்ததால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தற்போது கோர்ட்டு உத்தரவுப்படி, ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேரின் சொத்துகளை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

    கலெக்டர்களுக்கு கடிதம்

    இவர்கள் 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக வாங்கியதாக வழக்கில் காட்டப்பட்டுள்ள சொத்துகள் அமைந்துள்ள, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 6 மாவட்ட கலெக்டர்களுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். அதில், அந்த சொத்துகளை கலெக்டர்கள் தங்கள் அதிகாரத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் உத்தரவுப்படி கலெக்டர்களுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் கடிதம் எழுதி, அதோடு மாநில கண்காணிப்பு கமிஷனரின் கடிதத்தை குறிப்பிட்டுள்ளனர்.

    68 சொத்துகள் பறிமுதல்

    இந்த நடவடிக்கைகள் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    6 மாவட்டங்களிலும் இருக்கும் அந்த சொத்துகள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ளவை. அந்த சொத்துகளை அல்லது நிலங்களை அடையாளம் கண்டபிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடங்களில் அறிவிப்பு பலகைகளை வைப்பார்கள். அதில், இந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தம் என்று எழுதப்பட்டு இருக்கும்.

    மேலும், சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஏற்கனவே அரசால் முடக்கிவைக்கப்பட்டுள்ள அந்த சொத்துகள் தொடர்பான எந்த விதமான பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று பதிவுத்துறைக்கு கடிதம் எழுதுவோம். அந்த வழக்கு தொடர்பாக 128 சொத்துகளை முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டு இருந்தாலும், 68 சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்ய பெங்களூரு தனிக்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ஏலம் விடலாம்

    அந்த சொத்துகளில் பெரும்பாலானவை சென்னை, காஞ்சீபுரம் மற்றும் சில மாவட்டங்களில் உள்ளன. இந்த சொத்துகளின் விற்பனை விலை, 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வழிகாட்டி மதிப்பு விலைக்கு இணையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள சந்தை மதிப்பு பலமடங்கு அதிகரித்துவிட்டது.

    இந்த சொத்துகளுக்கு தமிழக அரசு தான் இனி உரிமையாளர். அவற்றை அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் அல்லது பொது ஏலத்துக்கு விடவும் அரசால் முடியும்.

    சொத்தின் வளர்ச்சி

    இந்த வழக்கின் தொடக்க காலகட்டத்தில், அதாவது 1991-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிடம் ரூ.2.01 கோடி மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே இருந்தன. அந்த தேதிக்கு பிறகு, அதாவது ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சொத்துகள் வாங்கியதன் வளர்ச்சி திடீர் வேகமெடுத்தது.

    அரசு பொது ஊழியராக இருந்த ஜெயலலிதாவும், மற்றவர்களும் 1991 முதல் 1996 வரையிலான 5 ஆண்டுகளுக்குள் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்தனர் என்பது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசின் குற்றச்சாட்டு.

    ரூ.100 கோடி அபராதம்

    ஆனால் இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு தனிக்கோர்ட்டு வருமானத்துக்கு அதிகமாக அவர்கள் ரூ.53.60 கோடி மதிப்புள்ள சொத்துகளைச் சேர்த்ததாக கணக்கிட்டு தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற 3 பேருக்கு தலா ரூ.10 கோடியும் தண்டனையாக விதிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    என்னென்ன சொத்துகள்?

    இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரது பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் விவரம்:-

    1. ஜெ. பார்ம் அவுஸ்

    2. ஜெ.எஸ். அவுசிங் டெவலப்மெண்ட்

    3. ஜெ ரியல் எஸ்டேட்

    4. ஜெயா கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ்

    5. ஜெ.எஸ். லீசிங் அண்டு மெயின்டனன்ஸ்

    6. கிரீன் பார்ம் அவுஸ்

    7. மெட்டல் கிங்

    8. சூப்பர் டூப்பர் டி.வி. பிரைவெட் லிமிடட்

    9. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடட்

    10. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடட்


    11. சிக்னோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடட்

    12. லெக்ஸ் பிராப்பர்டிஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடட்.

    13. ரிவர்வே அக்ரோ புரொடக்ட் பிரைவேட் லிமிடட்.

    14. மிடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடட்

    15. இந்தோ தோகா கெமிகல்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ்

    16. ஏ.பி. அட்வடைசிங் சர்வீசஸ்

    17. விக்னேஸ்வரா பில்டர்ஸ்.

    18. லட்சுமி கன்ஸ்ட்ரக்சன்.

    19. கோபால் பிரமோட்டர்ஸ்.

    20. சக்தி கன்ஸ்ட்ரக்சன்.

    21. நமச்சிவாய அவுசிங் டெவலப்மென்ட்.

    22. அய்யப்பா பிராபர்டிஸ் டெவலப்மென்ட்ஸ்

    23. சீ என்கிளேவ்

    24. நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ்

    25. ஓசானிக் கன்ஸ்ட்ரக்சன்.

    26. கிரீன் கார்டன் அபார்ட்மென்ட்ஸ்

    27. மார்பில் மார்வெல்ஸ்

    28. வினோத் வீடியோ விஷன்

    29. பேக்ஸ் யுனிவெர்சல்

    30. பிரஸ் மஷ்ரூம்ஸ்

    31. கோடநாடு டீ எஸ்டேட்

    வாங்கப்பட்ட சொத்துகள்

    இந்த நிறுவனங்கள் பெயரில் வாங்கப்பட்ட நிலங்கள், சொகுசு பஸ், கைக்கடிகாரங்கள், தங்க-வைர நகைகள் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. ஜெயலலிதா பெயரில் 1992-ம் ஆண்டு மயிலாப்பூரில் வாங்கப்பட்ட 1,407 சதுர அடி நிலத்துடன் கூடிய கட்டிடம், சசிகலா பெயரில் மன்னார்குடியில் 25 ஆயிரத்து 35 சதுர அடி நிலத்துடன் கூடிய கட்டிடம், திருவள்ளூர் மாவட்டம், வேலகாபுரம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் நிலம்,

    பையனூர் கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் நிலம், ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேசன் நிறுவனத்தின் பெயரில் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் கட்டிடத்துடன் கூடிய 4,664 சதுர அடி நிலம், ஆலந்தூர், அடையார், சைதாப்பேட்டையில் 55 கிரவுண்ட் நிலம், மயிலாப்பூர் லஸ் சர்ச் ரோட்டில் 10 கிரவுண்ட் நிலம், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்ட் நிலம், ஆலத்தூரில் 0.63 ஏக்கர் நிலம், கிழக்கு அபிராமபுரத்தில் 3,400 சதுர அடி நிலம் ஆகியவை வாங்கப்பட்டு உள்ளன.

    கோடநாடு எஸ்டேட்

    இளவரசிக்கு நீலாங்கரையில் 4,802 சதுர அடி நிலம், சிறுதாவூரில் 22 ஏக்கர் நிலம், மயிலாப்பூர், லஸ் அவின்யூவில் ஒரு கிரவுண்ட் நிலம், இவரது மகன் விவேக்கிற்கு சிறுதாவூரில் 1½ ஏக்கர் நிலம், கருங்குழிபள்ளம் கிராமத்தில் 16 ஏக்கர் நிலம், வி.என்.சுதாகரனுக்கு சிறுதாவூரில் 29 ஏக்கர் நிலம், சோழிங்கநல்லூரில் 16 சென்ட் நிலம் ஆகியவை உள்ளன.

    இதுதவிர சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது பெயரில் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் தேயிலை தொழிற்சாலையுடன் கூடிய 900 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 3 பேரும் பங்குதாரர்களாக உள்ள ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடட், சிக்னோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடட், லெக்ஸ் பிராப்பர்டிஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடட், ரிவர்வே அக்ரோ புரொடக் பிரைவேட் லிமிடட், மிடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடட் உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, நீலகிரி உள்பட 6 மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.

    பறிமுதல்

    அதேபோல, போயஸ் கார்டனில் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கிய பல பெட்டிகள் கொண்ட நகைகள் தற்போது சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் உள்ளது. அதில், ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வழங்கிய 191.47 கிராம் எடைகொண்ட தங்கப்படகு, ஒரு கட்சி தொண்டர் கொடுத்த 191.62 கிராம் எடை கொண்ட தங்கத்தால் ஆன செங்கோல் உள்பட பல ஆயிரம் கிராம்கள் தங்க நகைகள், வைர மோதிரம், வளையல், கம்மல், தங்க வாள், தங்க முலாம் பூசப்பட்ட கைக்கடிகாரங்கள் உள்ளன. இதுபோன்ற சொத்துகள் அரசால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரியவருகிறது.

    Saturday, May 27, 2017

    Return to frontpage

    ரமலான் மாதச் சிறப்புக் கட்டுரை: இறைவனின் மேன்மையை நினைப்போம்

    இக்வான் அமீர்

    மனிதனைப் பிடித்தாட்டும் தீய பழக்கவழக்கங்களை விரட்டியடிக்கப் பயிற்சி பட்டறையாக வரும் மாதமாகையால் ரமலான் மாதம் சிறப்புமிக்கது. அது ஒழுக்கத்தையும், சுயகட்டுப்பாட்டையும் மேம்படுத்தி மனிதனுக்கு அவனது படைப்பியல் இலக்கை உணர்த்தி முன் நகர்த்தும் மாதம்.
    இறையடியார்கள், இறைவனின் கட்டளைக்கு அஞ்சி இந்தக் கட்டுப்பாட்டைத் தனக்குத் தானே விதித்துக்கொண்டு அதை சிரத்தையுடன் கடைப்பிடிக்கும் மாதமாகும். பசித்திருந்தும், விழித்திருந்தும், இறைவனைத் துதித்திருந்துமாய் இறையருளைப் பெறுவதற்கான மாதமாகும்.
    அதனால்தான், நபிகளார் ரமலானின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஅபான் மாதத்தின் இறுதியில் இப்படி உரையாற்றி உற்சாகமூட்டுகிறார்:
    “மக்களே! மகத்துவமும், அருள்வளமும் மிக்க மாதம் ஒன்று நெருங்கிவிட்டது. அந்த மாதத்தின் ஓர் இரவு, ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாகும். இறைவன் இந்த மாதத்தில் நோன்பைக் கடமையாக்கியுள்ளான். இந்த மாதத்தின் இரவுகளில் பிரத்யேக இறை வணக்கமான தராவீஹ் தொழுவதை உபரி வணக்கமாக்கியுள்ளான்.

    யார் இந்த மாதத்தில் தானாக முன்வந்து ஒரு நற்செயலைச் செய்கிறாரோ அவர் ரமலான் அல்லாத பிற மாதங்களில் ஒரு கடமையை நிறைவேற்றியவர் போன்றவராவார். இந்த மாதத்தில் ஒரு கடமையை நிறைவேற்றுபவர் ரமலானல்லாத பிற மாதங்களில் எழுபது கடமைகளை நிறைவேற்றியவரைப் போன்றவராவார். இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் கூலி நற்சுவனமாகும். மேலும், இந்த மாதம் சமுதாயத்திலுள்ள ஏழை, எளியோர் மீது அனுதாபமும், பரிவும் காட்ட வேண்டிய மாதமாகும்.”

    ஒரு மனிதன் இறைவனின் கட்டளைகளை மேற்கொண்டு குறிப்பிட்ட நேரத்திலிருந்து, குறிப்பிட்ட நேரம் வரை உண்ணுவதில்லை. பருகுவதுமில்லை. திருமணமானோர் இல்லற இன்பங்களைத் துய்ப்பதுமில்லை. இதன் விளைவு இறைவனுக்கு அடிபணிய வேண்டும் என்ற உணர்வு அவனுள் புத்துணர்வு பெறுகிறது. இதன் மூலமாக நேரம் வரும்போது, இறைவனின் கட்டளைகளுக்கொப்ப தனது இச்சைகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பயிற்சி மாதம் முழுக்கக் கிடைக்கிறது. எக்காரணம் கொண்டும் பின்வாங்காத பொறுமையோடு, நிலைகுலையாமல் சமூகத் தீமைகளை எதிர்த்துப் போரிடும் மனவலிமை அதிகரிக்கிறது.

    பிறரையும் நேசிக்கும் மனம்
    அதேபோல, சமூகத்தின் நலிந்த பிரிவினரைத் தன்னைப் போலவே கருதி, தனக்கு இறைவன் தரப்பிலிருந்து வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கை வசதிகளை அவர்களுக்கும் வழங்கி அவர்களும் இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றி நோன்பு நோற்கவும், நோன்பு துறக்கவுமான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்.

    திருமணம் போன்ற சுபநாட்களுக்குச் செல்ல அணியும் உடையிலிருந்து, தர நினைக்கும் பரிசுகள் வரை முன்னரே அழகான முறையில் திட்டமிடுவதைப் போலவே நெருங்கிவிட்ட ரமலானின் அத்தனை நன்மைகளையும் பெறுவதற்குத் திட்டமிடுதல் அவசியம்.

    “இறைவா! நான் இந்த மனிதனை பகல் முழுவதும் உண்பதிலிருந்தும், பிற இன்பங்களிலிருந்தும் தடுத்து வைத்திருந்தேன். அவனும் அவற்றையெல்லாம் தடுத்துக் கொண்டான். எனவே, என் இறைவனே..! இந்த மனிதனின் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!” என்று நோன்பு பரிந்துரைக்க திருக்குர்ஆன் கூறும்.“என் இறைவா! நான் இந்த மனிதனை இரவு உறக்கத்திலிருந்து தடுத்தேன். இவனும் தனது இனிய உறக்கத்தைத் துறந்து திருக்குர்ஆனை ஓதிய வண்ணமிருந்தான். எனவே இவனுக்கான எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்” என்று நபிகள் நாயகம் கூறுகிறார்.

    இறைவனின் மேன்மைகளை நினைவுகூர்ந்து சுய ஒழுக்கம் மற்றும் மனிதாபிமானத்தைப் பேணுவதை அன்றாடக் கடமையாக மாற்றும் மாதமாக ரமலான் மாதம் திகழட்டும்.

    NEWS TODAY 22.12.2025