Saturday, August 19, 2017

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள்் : தமிழக அரசு உத்தரவு
பதிவு செய்த நாள்18ஆக  2017   23:47

சென்னை: பிளஸ் 1 பொதுத் தேர்வில், தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

நடப்பாண்டு, பிளஸ் 1 வகுப்பிற்கு, மாநில அளவில், பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று அரசால் வெளியிடப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:l தேர்ச்சி பெற, மொழிப் பாடங்களில், தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டை, கண்டிப்பாக எழுத வேண்டும். இரு தாள்களிலும் சேர்த்து, எழுத்து தேர்வில், சராசரியாக கணக்கிடப்படும், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் பெற்று
இருக்க வேண்டும். தாள்களும் சேர்த்து, எழுத்து தேர்வின், சராசரி மதிப்பெண்ணான 90 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

l செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில், எழுத்து தேர்வில், 70 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 15 மதிப்பெண்கள் பெற வேண்டும். செய்முறை வகுப்புகளில் பங்கேற்று, செய்முறை பொதுத் தேர்வு எழுதி இருக்க வேண்டும்.எழுத்து தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்

l செய்முறைத் தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி எழுத்துத் தேர்வு பாடங்களில், தேர்ச்சி பெற, எழுத்து தேர்வில், 90 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற வேண்டும். அக மதிப்பீடு, எழுத்து தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக, குறைந்த
பட்சம், 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

l தொழிற்கல்வி செய்முறை தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக, குறைந்த  பட்சம், 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எழுத்து தேர்விற்கு, செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில், 70 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி பாடங்களின் எழுத்து தேர்விற்கு, 90 மதிப்பெண்களும், ஒதுக்கீடு செய்யப்  பட்டுள்ளன. மொழிப் பாடங்களில், எழுத்து தேர்விற்கான, இரு தாள்களுக்கும், தலா, 90 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

l செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள், 20; இரு மதிப்பெண் குறு வினாக்கள் ஏழு; மூன்று மதிப்பெண், சிறு வினாக்கள் ஏழு; ஐந்து மதிப்பெண் பெரு வினாக்கள் ஏழு, ஆகியவற்றுக்கு விடை அளிக்க வேண்டும்

l செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள்,15; இரு மதிப்பெண் குறு வினாக்கள் ஆறு; மூன்று மதிப்பெண் சிறு வினாக்கள் ஆறு, ஐந்து மதிப்பெண் பெரு வினாக்கள் ஐந்து ஆகியவற்றுக்கு விடை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களே... உடனே வாங்க!

பதிவு செய்த நாள்18ஆக
2017
23:42

கோவை:அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்கள், ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கருவூலம், சார் கருவூலம் அல்லது வங்கிகளில் நேரில் ஆஜராகி, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான, 'லைப் சர்ட்டிபிகேட்' சமர்ப்பிக்க வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் ஜூலைக்குள், ஓய்வூதியர்கள் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, பங்கேற்காதவர்களின் ஓய்வூதியம் உடனடியாக நிறுத்தப்படும் என அறிவுறுத்தியுள்ளார், மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன்.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:மாநில அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான, 2017-18ம்ஆண்டுக்கான நேர்காணல், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை நடந்தது.இதுவரை நேர்காணலுக்கு ஆஜராகாத, ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், உடனடியாக தாங்கள் சார்ந்துள்ள கருவூலத்துக்கு வந்து, தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும். நேர்காணலுக்கு வராதவர்களின் ஓய்வூதியம், ஆகஸ்டு முதல் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டவருக்கு ரயில்களில் சிறப்பு ஒதுக்கீடு

பதிவு செய்த நாள்18ஆக
2017
23:08


கோவை;வெளிநாட்டினர், 'பாரின் டூரிஸ்ட் கோட்டா' எனும் சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் 'டிக்கெட்' முன்பதிவு செய்து இந்திய ரயில்களில் பயணிக்கலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெளிநாட்டினர் தங்களது அதிகாரப்பூர்வ 'பாஸ்போர்ட்' உடன் சிறப்பு இடஒதுக்கீட்டில், 365 நாட்கள் வரை முன்பதிவு செய்யலாம். 'பெர்த்', 1ஏ, 2ஏ மற்றும் 'எக்சிகியூட்டிவ் சேர்' உள்ளிட்ட வகுப்புகளில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.சர்வதேச மொபைல் எண் கொண்டு கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும்; 'டிக்கெட்' உறுதியானதற்கான எஸ்.எம்.எஸ்., அந்த எண்ணுக்கு வந்துவிடும். கட்டணத்தை சர்வதேச, 'டெபிட்', 'கிரெடிட்' கார்டுகள் மூலமும் செலுத்தலாம். டிக்கெட் ரத்துசெய்யும் பட்சத்தில், 50 சதவீத கட்டணம் மட்டுமே திரும்ப வழங்கப்படும்.இவ்வாறு, அதிகாரி கூறினார்.



மாற்று திறனாளிகளுக்கு புதிய சலுகை

பதிவு செய்த நாள்18ஆக
2017
23:57


புதுடில்லி: மத்திய பணியாளர் நலத்துறை, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு துறைகளில் பணியாற்றும், மாற்று திறனாளி பெண் ஊழியர்கள், தங்கள்   குழந்தைகளை பராமரிக்க, மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த, 1,500 ரூபாய், தற்போது, 3,000 ரூபாயாக, உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை, இந்த நிதியுதவி, வழங்கப்படும்.ஏழாவது, மத்திய சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மாற்று திறனாளி பெண் ஊழியர்களுக்கான, குழந்தை பராமரிப்பு தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய ரூ.50 நோட்டு அறிமுகம்

பதிவு செய்த நாள்18ஆக
2017
23:43

மும்பை : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: 'புளோரோசென்ட்' எனப்படும், ஒளிரக் கூடிய, நீல வண்ணத்துடன் கூடிய, புதிய, 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. புதிய நோட்டின் பின்புறம், கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள கல்தேரின் படம் இடம்பெறும். அசோக சின்னம், நோட்டின் முன்பக்கத்தின் வலது புறத்தில் இருக்கும். மஹாத்மா காந்தி படம், நடுவிலும், நோட்டின் வரிசை எண், ஏறுமுகமாக அதிகரிக்கும் வகையில், மேல் இடது பக்கத்திலும், கீழ் வலது பக்கத்திலும் இடம்பெறும். ஏற்கனவே உள்ள, பழைய, 50 ரூபாய் நோட்டுகளும் செல்லும்.


வீடு வீடாக அளந்து அபராதம் விதிக்கும் திட்டம் 'வேட்டை' ஆரம்பம்! மாநகராட்சிக்கு எதிராக மக்களிடம் கடும் எதிர்ப்பு!
பதிவு செய்த நாள்
ஆக 18,2017 23:49



அனுமதியற்ற கூடுதல் கட்டடங்களுக்கு, அபராதம் விதிக்கும் திட்டத்துக்கு மக்களிடம் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.ஆண்டுக்கு ஆயிரத்து 72 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடும் கோவை மாநகராட்சிக்கு, எந்த புதிய திட்டத்தையும் நிறைவேற்ற நிதி இல்லை. அதனால், தமிழ்நாடு நகர உள்கட்டமைப்பு நிதி சேவை குழுமம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனங்களிடம் கடன் பெறுவதற்கு, மாநகராட்சி முயற்சித்து வருகிறது. அவ்வாறு கடன் பெறுவதற்கு, திருப்பிச்செலுத்துவதற்கான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதை, காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

ஆனால், 2008லிருந்து, சொத்து வரி மாற்றப்படவில்லை. கவுன்சில் அல்லது அரசு அனுமதியின்றி சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண விகிதங்களை மாற்றி அமைக்க முடியாது. அதனால், அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி, மறுஅளவீடு செய்து, வரி விதிப்பை மாற்றியமைக்க, 182 குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. கூடுதல் கட்டுமானம் இருந்தால், அதற்கான வரித்தொகையை, அபராதமாக, 13 அரையாண்டுக்கு செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்டடங்களை அளவீடு செய்ய வருவோர், வசூல் வேட்டை நடத்தவே, இத்தகைய திட்டம் பயனுள்ளதாக இருக்குமென்று அஞ்சுகின்றனர். வீடு கட்ட அனுமதி கோரும்போதும்கட்றாங்க...'கட்டிங்' வெட்றாங்க!
கோவையில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அனுமதியின்றி கட்டிடம் கட்டுவதால், நகர ஊரமைப்புத் துறைக்குச் செலுத்தும் 'கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணம்' செலுத்துவதில்லை.முழுமையாக சொத்து வரியும் விதிக்கப்படுவதில்லை. இவர்களிடம் 'கட்டிங்' வாங்கிக் கொண்டு, பேருக்கு நோட்டீஸ் அனுப்பி, மாநகராட்சி மீது வழக்குப் போடுவதற்கே, அதிகாரிகளே 'ஐடியா' கொடுத்து விடுகின்றனர். இந்த வழக்குகளையும் முறையாக ப்படுவதில்லை.இத்தகைய வழக்கு செலவுக்கே, மாநகராட்சி பல கோடி ரூபாய் செலவழிக்கிறது. ஒரு வழக்கில் கூட, மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டு, வரி வசூலித்ததாக தகவல் இல்லை.இதேபோல், ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 'பல்க்' இணைப்பு என்ற பெயரில் குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளது, மாநகராட்சி. முறையாக கட்டணம் வசூலிப்பதில்லை. இவற்றை சரி செய்தாலே, மக்களிடம் பணம் பறிக்கத்தேவையில்லை.-நமது நிருபர்-
அவசர சட்டம் என்ன ஆகும்:  அமைச்சர் விஜயபாஸ்கர் மழுப்பல்

'நீட் தேர்வு குறித்த பிரச்னையில், இனியும் அவசர சட்டத்திற்கு அவசியம் இருக்குமா' என்ற கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளிக்க மறுத்தார். இதனால், அந்த சட்டத் தை அமல் படுத்துவதில் அரசு பின்வாங்கலாம் என தெரிகிறது.




'நீட்' எனப்படும், மருத்துவ படிப்புக்கான, பொது நுழைவுத்தேர்வில், ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க வழி செய்யும் சட்ட மசோதா வுக்கு, மத்திய அமைச்சகங்களின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இறுதிக்கட்ட சரிபார்ப்புக்கு பின், தமிழக அரசிடம் அளிக்கப்பட்டு, அவசர சட்டமாக பிறப்பிக்கப்பட வேண்டியதுதான் பாக்கி. மற்றபடி, அனைத்து பணிகளும் முடிந்து, தயார் நிலையில், அவரச சட்ட மசோதா, உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் நினைத்தால், ஒரு விநாடியில், அறிவிப்பை வெளியிட்டுவிட முடியும். ஆனாலும், இப்பிரச்னையில், தற்போதுள்ள நிலையே, அடுத்த வாரம், 22ம் தேதி வரை நீடிக்கும் என, உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறி, சமரச பார்முலாவை தரும்படி கேட்டுள்ளது. இதனால், அவசர சட்ட வரைவு


மசோதா, கிடப்பில் இருக்க, சமரச பார்முலாவை உருவாக்கும் பணிகளில், அரசு ஈடுபட்டுள்ளது. இதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

டில்லியில், நேற்று, நிருபர்களிடம், அவர் கூறியதாவது;

உச்ச நீதிமன்ற உத்தரவு, தமிழகத்துக்கு சாதக மானது; வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இப்பிரச்னை யில், தாமதம் ஏற்பட்டுவிட்டதாக நாங்கள் கருத வில்லை.அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் உள்ள, அரசு இடங்களுக்கு மட்டுமே, நீட் தேர்வு விலக்கு.
அகில இந்திய ஒதுக்கீட்டில், 456 இடங்கள், ஏற்கனவே 'நீட்' தேர்வு எழுதியவர்களுக்காக உள்ளன. தனியார் கல்லூரி, நிகர்நிலை பல்கலைக் கழகம் ஆகியவற்றில், அவர்களுக்கு இடங்கள் உள்ளன.

இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ள கருத்துக்கள், எதிர்ப்பானவை அல்ல; அதனுடனும், தமிழக அரசு, தொடர்ந்து பேசி வருகிறது.மாணவர் சேர்க்கைக்கு, நிறைய நாட்கள் தேவை இருக்காது; ஐந்து நாட்கள் போதும். ஒரு வாரத்தில் அனைத்து பணிகளையும் முடித்துவிடலாம்.
உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கேட்டுள்ளபடி, நீட் தேர்வு எழுதியவர்கள் உள்பட எந்த தரப்பு மாணவர்களும், பாதிக்கப்படாத வகையில், ஒரு சமரச தீர்வை, தமிழக அரசு சமர்ப் பிக்கும். சமரச பார்முலாவை வடிவமைப்பது குறித்து, மருத்துவ கவுன்சில் உள்பட அனைத்து தரப்பினரிடமும், தமிழக அரசு உயர் அதிகாரிகள், ஆலோசனை செய்து வருகின்றனர். இவ்வாறு, அமைச்சர் விஜயபாஸ்கர், கூறினார்.

அப்போது, 'சமரச பார்முலாதான் முடிவு எனில், அவசரச் சட்டத்தின் கதி என்ன' என்று கேட்கப் பட்டது. அதற்கு, வெறும் புன்னகையை மட்டும் பதிலாக தந்து, அமைச்சர் நழுவினார். இதன் மூலம், இரண்டு விஷயங்கள் தெளிவாகின் றன. ஒன்று, 22ம் தேதி வரை, அவசர சட்டத் திற்கு வாய்ப்பே இல்லை. இரண்டு, சமரச பார்முலாப்படியே, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை.இதனால், இவ்வளவு நாட்களாக பேசப்பட்டு வந்த, அவரச சட்டம் பிறப்பிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

டில்லி நிருபர்களுக்கு அழைப்பு: டில்லி ஊடகங் களுக்கு தகவல் தர வேண்டாமென்ற வாய் மொழி உத்தரவு, நேற்று, திடீரென மாறியது. டில்லி நிருபர்களும் அழைக்கப்பட்டனர். அமைச் சர் விஜயபாஸ்கர், தன் பேட்டியில், மத்திய அரசை வெகுவாக புகழ்ந்துகொண்டே இருந்தார். பிரதமரில் துவங்கி, ஒவ்வொரு மத்திய அமைச்சரின் பெயரையும் வரிசயைாக குறிப்பிட்டு, நன்றி தெரிவித்தார்.

நமது டில்லி நிருபர்
முதுநிலை மருத்துவம் படித்தும்  பயனில்லை: பரிதவிக்கும் டாக்டர்கள்

ஆகஸ்ட் 18,2017,21:40 IST


இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், பாடத் திற்கான அங்கீகாரம் காலவதியானதால், படிப்பை முடித்த டாக்டர்கள், மருத்துவ கவுன்சி லில் பதிவு செய்து, பணிக்கு செல்ல முடியா மல், பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.





மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ், சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இதில், 2011ல், 14 இடங்களுடன், எம்.டி., - எம்.எஸ்., என்ற, முதுநிலை மருத்துவ படிப்புகள் துவக்கப் பட் டன.இந்த படிப்புகளுக்கு, எம்.சி.ஐ.,என்ற, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி,2015ல்

முடிந் தது.போதிய கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தாதது, போதிய பேராசிரியர்கள் நியமிக்கா ததை காரணம் காட்டி, முதுநிலை மருத்துவ படிப்பு களுக்கு, அங்கீகாரம் தர, எம்.சி.ஐ., மறுத்து விட்டது. இதனால், 2015ல் படிப்புகளில் சேர்ந்து, முதுநிலை மருத்துவம் முடித்த டாக்டர்களால், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முடியவில்லை.

இதனால், எம்.பி.பி.எஸ்., படித்தவர்களாக மட்டுமே கருதப்படுகின்றனர்; அவர்களால், உயர் சிகிச்சை அளிக்க முடியவில்லை; படிப்புக்கேற்ற வேலைக் கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து, முதுநிலை படித்தடாக்டர்கள் கூறியதாவது:

இந்த கல்லுாரியில், முதுநிலை மருத்துவ படிப் பிற்கு உள்ள, 14 இடங்களில், ஐந்து இடங்களுக்கு, எம்.சி.ஐ., அங்கீகாரம் கொடுத்துள்ளது. பல்வேறு காரணங்களால், ஒன்பது இடங்களுக்கு அங்கீகாரம் தர மறுத்து விட்டது. இதனால், அந்த இடங்களில் சேர்ந்து படித்து, சான்றிதழ் பெற்றாலும், முறைப்படிபதிவு செய்ய முடியவில்லை; அதற்கான பலன்களை பெற முடியவில்லை.

எங்களுக்கு, உதவி கோரி, மருத்துவ கல்லுாரி முதல்வரை பல முறை சந்திக்க முயன்றும், அனுமதி மறுக்கப்படுகிறது. மத்திய தொழி லாளர் நல அமைச்சகம், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Friday, August 18, 2017

நீட் அவசரச் சட்டம்... நீதிமன்றத்தில் தப்புமா?

vikatan
நீட் தகுதித் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி, தமிழகச் சட்டமன்றத்தில் இரண்டு சட்ட மசோதாக்கள் கொண்டுவந்தும், அவற்றுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுத் தராமல் மத்திய அரசு இழுத்தடித்தது. பின்னர் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடங்கள் ஒதுக்கீடு செய்து கொண்டுவந்த அரசாணையை நீதிமன்றங்கள் அடுத்தடுத்து ரத்து செய்தன. ‘தமிழக அரசு மட்டும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஒரு சட்ட மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு, கொல்லைப்புறமாக ஏன் இந்த முயற்சி..?’ என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து அரசாணையை ரத்து செய்தபோது, கடைசி வாய்ப்பும் பறிபோனதாகவே தமிழக அரசு நினைத்தது. 

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே வாரம் ஒருமுறை டெல்லி வந்து தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் பிரதமர் முதல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை பலரையும் சந்தித்தனர். ஒவ்வொரு அலுவலகத்துக்கும் சென்று நாள் முழுவதும் காத்துக்கிடந்தனர். தமிழக அதிகாரிகளோ, மத்திய அரசு அதிகாரிகளிடம் பல அவமானங் களை அடைந்தனர். ‘‘சட்டத்தில் இடம் இல்லை என்று சொல்லிவிட்டோமே... பிறகு ஏன் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கிறீர்கள்..?” என்று பல புறக்கணிப்புகள், அவமானங்கள்.
கடைசியாகக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பதவி ஏற்புக்கு முதல்வர் எடப்பாடி வந்து, பிரதமரைச் சந்தித்து நீட் விலக்கு கோரி மனு கொடுத்தபோதும் எந்த அனுகூலமான பதிலும் கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘ஓராண்டு விலக்கு கோரினால் பரிசீலிப்போம்’’ என்று சொல்ல... புதிய வெளிச்சம் உதயமானது. நீட் விலக்கு கோரி படையெடுத்த தமிழக அரசிடம் நேரடியாக இதைத் தெரிவிக்காமல், நிர்மலா சீதாராமன் மூலம் மீடியா வழியாக அறிவித்தது மத்திய அரசு. அதன்பிறகு அடித்துப் பிடித்து ‘இரண்டு ஆண்டு விலக்கு கோரி’ மத்திய அரசிடம் கடந்த வாரம் கொடுத்த அவசரச் சட்ட வரைவினை ‘ஓராண்டு விலக்கு’ என்று மாற்றி, அந்த ஆவணங்களுடன் டெல்லி விரைந்தார் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். 

திங்கட்கிழமை காலை 10.15 மணிக்கே மத்திய உள்துறை அலுவலகம் வந்த அவர், நண்பகல் வரை இணைச் செயலாளர் டாக்டர் ஆர்.கே.மித்ரா மற்றும் அதிகாரிகளிடம் போராடினார். பல்வேறு ஆவணங்களைக் கேட்டு அவரை ஓடவிட்டனர். நொந்துபோய் மதியம் வெளியில் வந்தார் ராதாகிருஷ்ணன். மதிய உணவு இடைவேளைக்குப் பின் அனைத்து ஆவணங்கள், கூடுதல் நகல்கள் என்று கேட்ட அனைத்தையும் அள்ளிக்கொண்டுவந்து தாக்கல் செய்தார். அவற்றை உள்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டபிறகே அனைவரும் பெருமூச்சு விட்டனர். மாலை ஐந்து மணி வரை அங்கேயே இருந்து, ‘சந்தேகம் எதுவும் இல்லை’ என்று சொன்னபிறகே தமிழ்நாடு இல்லம் திரும்பினர்.

‘தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் ஒருமித்த குரலில் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கிறார்கள். பழைய சேர்க்கை முறைப்படி ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான தமிழக மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். அவர்கள் எல்லாம் இந்த ஆண்டு பாதிக்கப்படுவார்கள். எனவே, ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் இயற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்’ என்று கோரி பல்வேறு புள்ளி விவரங்களையும் கொடுத்துள்ளனர்.
எப்படியும் இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசின் ஒப்புதலோடு நிறைவேற்றி விடலாம் என்று நம்புகிறது தமிழக அரசு. ஆனால், இயற்றப்போகும் அந்த அவசரச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் கழுகுப் பார்வையிலிருந்து தப்புமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

நீட் தேர்வை எழுதி வெற்றிபெற்று கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் மருத்துவ சீட் நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள். அவர்கள் சார்பில் நளினி சிதம்பரம்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, தமிழக அரசின் 85% இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வைத்தார். இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வரும் என்ற யூகத்தில், அவர்கள் இப்போதே நளினி சிதம்பரத்தை அணுகி வருகிறார்கள். அவரும், ‘‘ஆவணங்களுடன் தயாராக இருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுவேன்’’ எனச் சொல்லி இருக்கிறார். எனவே, இந்த அவசரச் சட்டம் தாக்குப்பிடிக்குமா என அதிகாரிகள் அச்சத்தோடுதான் இருக்கிறார்கள். 

ஒருவேளை அப்படி நீதிமன்றம் தடை போட்டால், ‘நாங்கள் வழங்கினோம்... நீதிமன்றம்தான் தடுத்து விட்டது’ என்று பி.ஜே.பி-யினர் தப்பித்துக்கொள்வார்கள்.  அ.தி.மு.க அரசின் நிலைதான் திண்டாட்டம். கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த  தீர்ப்பின்படி ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மருத்துவ கவுன்சலிங்கைத் தமிழக அரசு முடிக்க வேண்டும்.

- டெல்லி பாலா
ஏழைகள் என்றால் அலட்சியம்?!

ஒயிட்

vikatan

வெறும் 68 லட்ச ரூபாய்தான், 60-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைப் பறித்திருக்கிறது. இப்போது ஒவ்வொரு குழந்தையின் உயிருக்கும் 20 லட்சம் இழப்பீட்டை அறிவித்திருக்கிறது உத்தரப்பிரதேச அரசு. அத்தனை மலிவானதா நம் குழந்தைகளின் உயிர்? உத்திரபிரதேச மாநிலம், கோரக்பூரில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மரணமடைந்திருக்கும் குழந்தைகள் பற்றி செய்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி இருக்கிறது.

இந்த மரணங்களுக்குக் காரணமான ஒவ்வொருவரும் எட்டுத் திசைகளில் கைகாட்டிக்கொண்டிருக்கிறார்கள். யாருமே பொறுப்பேற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. “இதெல்லாம் வருஷா வருஷம் நடப்பதுதான்’’ என்று பொறுப்பில்லாமல் மாநில முதல்வரே கையை விரிக்கிறார். அக்கறையில்லாத அரசு நிர்வாகத்தைக் கேள்விகேட்க முடியாமல், `மீடியா பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்’ என்று மைக்கை நீட்டியவரைக் குற்றவாளியாக்குகிறார். `இது விபத்து’ என்கிறார் அமித்ஷா. மருத்துவமனை நிர்வாகமோ, ஆக்ஸிஜன் பற்றாகுறையெல்லாம் இல்லவே இல்லை என்று பொய்க்கணக்குக் காட்டுகிறது. ‘`இதை அரசியல் ஆக்காதீர்கள்’’ என்று அறிக்கை விடுகிறார் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர்.



இதை அரசியல் ஆக்காமல் வேறு எதைத்தான் அரசியல் ஆக்குவதாம்? செத்துப்போன குழந்தைகள் ஒவ்வொருவரும் ஏழ்மையான தலித் மற்றும் இஸ்லாமியக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அதிகமும் செலவழித்து மருத்துவம் செய்ய முடியாதவர்கள். குணப்படுத்த முடியாத கொள்ளைநோயால் மரணங்கள் நிகழ்வது தடுக்க முடியாதது. ஆனால், முறையான மருத்துவம் கிடைக்காமல் அரசின் அலட்சியத்தால் உண்டாகும் மரணங்களுக்கு யார் பொறுப்பு?

``கோரக்பூரில் குழந்தைகளுக்கு வருகிற இந்த மூளைவீக்கம் எவ்வளவு முக்கியமான பிரச்னை தெரியுமா? அதை உடனடியாகக் கொள்ளைநோய் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கான உரிய சிகிச்சைகள் கிடைப்பதற்கும் இந்த அரசு, முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று பாராளுமன்றத்தையே ஒருமுறை அலறச்செய்த குரல் யாருடையது தெரியுமா... இன்றைய உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடையது. அந்தச் சமயத்தில் உத்தரப்பிரதேசத்தை சமாஜ்வாதி கட்சிதான் ஆண்டுகொண்டிருந்தது.

கோரக்பூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக, 1998 முதல் 2014 வரை ஐந்துமுறை இருந்தவர்தான் இன்றைய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத். அவருக்குக் கோரக்பூர் குழந்தைகளை ஒவ்வொரு மழைக்காலத்திலும் தாக்குகிற இந்த encephalitis என்கிற மூளைவீக்கம் குறித்து மிக நன்றாகவே தெரியும். அது ஆண்டுதோறும் எத்தனை எத்தனை குழந்தைகளைப் பலி வாங்குகிறது என்பதையும் புள்ளிவிபரங்களோடு அறிவார். அப்படியொரு அசாதாரண சூழல் இருக்கிற இடத்தில் எத்தனை உச்சக்கட்ட மருத்துவ வசதிகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆட்சியில் இல்லாதபோதுதான் இயவில்லை, போகட்டும். இப்போதுதான் அதிகாரம் இருக்கிறதே! ஆண்டுதோறும் மழைக்காலங்களில் எத்தனை நவீன பாதுகாப்பு வசதிகளோடு தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏன் அதெல்லாம் இல்லை? ஏழைகள்தானே என்கிற அலட்சியம்.



சென்ற வாரம்தான் கோரக்பூரின் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பத்து ஐ.சி.யூ. பெட்களைத் திறந்து வைப்பதற்காகச் சென்று இருக்கிறார் யோகி ஆதித்யநாத். அப்போது இதே மூளைவீக்கத்திறகு சிகிச்சை அளிக்கும் வார்டுக்கும்கூட விசிட் வந்திருக்கிறார். அப்போதே ``இப்படி ஒரு பிரச்னை இங்கே இருக்கிறது? உடனே தீர்த்துவையுங்கள்’’ என மருத்துவமனையில் இருக்கிற யாராவது ஒருவர் கோரிக்கை வைத்திருந்தாலும், இன்று இத்தனை பெரிய துயரம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஏன் அப்போதே யாரும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்குப் பணம் செலுத்தவில்லை என்பதைப்பற்றி முதல்வரிடம் சொல்லவில்லை?

ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு பணபாக்கி இருக்கிறது என்று இந்த மாதம் மூன்றாம் தேதி அரசுக்கு பெட்டிஷன் போடப்பட்டிருக்கிறது. மீண்டும் பத்தாம்தேதியும் நினைவூட்டல் செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் ஏன் பணத்தைச் செலுத்தாமல் தள்ளிப்போட்டது அரசு? பத்து லட்சம் வரைக்கும்தான் ஒரு நிறுவனம் நிதி பாக்கியை நிலுவையில் வைக்க முடியும் என்கிற விதி இருந்தும், 68 லட்சம் வரை சப்ளை செய்திருக்கிறது அந்த ஆக்ஸிஜன் நிறுவனம். ஒருகட்டத்தில் இனியும் எங்களால் முடியாது எனக் கை விரித்திருக்கிறது. அதைக் கடிதமாக எழுதி மாவட்ட நிர்வாகம், சுகாதார அமைச்சகம் முதலானவைகளுக்கும்கூட அனுப்பியும் ஏன் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை?

குழந்தைகள் தொடர்ச்சியாக மரணிக்கத் தொடங்கியதும், பிரச்னைக்கு ஆளாகிவிடுவோமோ என்று பயந்து மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை வெளியேற்றத் தொடங்கியதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டி இருக்கிறார். அப்படி நிஜமாகவே நடந்திருந்தால் எத்தனை பெரிய துயரம். இதுதான் நாம் கனவுகாணும் புதிய இந்தியாவா?

உத்தரப்பிரதேசம் எங்கேயோ இருக்கிறது. செத்துப்போன குழந்தைகள் எங்கேயோ இருக்கிற குழந்தைகள். எனவே, நாம் பதற்றப்பட வேண்டியதில்லை என நினைக்க வேண்டாம். உத்தரப்பிரதேசத்தில் அடிக்கப்பட்டிருப்பது நமக்கான எச்சரிக்கை மணி. நமது அரசு மருத்துவமனைகள் எப்படி இருக்கின்றன? திடீர் திடீரென்று விதவிதமான தொற்று நோய்கள் நம் குழந்தைகளைத் தாக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், நம் குழந்தைகள் மருத்துவமனைகள் அவற்றைச் சந்திக்கத் தயார்நிலையில் இருக்கின்றனவா? நவீன வசதிகள் அங்கே கிடைக்கின்றனவா? இல்லையென்றால் ஏன் இல்லை என்பதையெல்லாம் உடனடியாக ஆய்வு செய்து அவற்றைச் சரிசெய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது.

இங்கே எத்தனை பேர் முழுமையான நம்பிக்கையோடு அரசு மருத்துவமனைகளுக்குச் செல்கிறோம். பணமில்லை, வேறு வழியில்லை என்னும்போதுதான் அங்கே செல்ல நேர்கிறது. தனியார் மருத்துவமனைகள் தருகிற நம்பிக்கையை அரசு மருத்துவமனைகள் ஏன் உருவாக்கவில்லை? இங்கேயும் இப்படி ஒரு பெருந்துயரம் நடந்தால்தான் நாம் விழித்துக்கொள்வோமா? அல்லது அப்படி நடந்தாலும் யோகியின் அரசைப்போலவே பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு இழப்பீட்டை எறிந்துவிட்டுக் கடந்து செல்வோமா?

NEET.....COURT STAYS TILL AUGUST 22

‘NEET exemption reason for imbroglio’

The Centre’s decision to exempt Tamil Nadu students from NEET for a year is the reason for the current imbroglio, Puthiya Tamizhagam leader K. Krishnasamy said here on Thursday.
Addressing reporters here, he said that the pressure by the opposition parties was the reason for the AIADMK government’s efforts to get exemption from NEET for MBBS admission. The State Government should come out with a White Paper on the possible beneficiaries of NEET exemption. Mr. Krishnasamy also condemned the State government for including Ariyalur student Anitha in the case against NEET and projecting her as Dalit student; this has resulted in the community being degraded, he said.

Comedian passes away

Comedy actor ‘Alwa’ Vasu, who has acted in over 900 films, died in Madurai on Thursday, aged 56. Vasu gained popularity in the film ‘Amaithipadai,’ starring actor Sathyaraj and Manivannan. He also paired up with comedian Vadivelu in several films.
Vasu had been ailing for quite some time and was undergoing treatment. “We tried to give the best treatment possible to him, but he didn’t survive,” Bala Sundar, a relative, said. Vasu is survived by his wife and a daughter.

More rain likely till Saturday

Rainy weekend ahead:The State has recorded its highest volume of rainfall in the past six years between June and so far in August.R. Ragu  

Low pressure area may develop over Bay of Bengal

More rain is on the way to the city, which has been witnessing thundershowers in the evening for the past few days.
Heavy showers lashed several parts of the city on Thursday evening too. However, the weather observatory in the city recorded only 1 cm of rainfall till 8.30 p.m. Officials of the Meteorological Department said an upper air cyclonic circulation may develop into a low pressure area over north Bay of Bengal. While this may not directly cause rainfall, it would be one of the factors influencing thunderstorms in the State for two more days.
Rainfall would occur over many parts of northern Tamil Nadu and a few places in southern Tamil Nadu. S. Balachandran, director, Area Cyclone Warning Centre, said the State has recorded its highest volume of rainfall in the past six years between June and so far in August. It has received 21 cm of rainfall, which is excess by 33% for the period.
Officials of the Meteorological Department said it is typical to have rain in the evenings during southwest monsoon due to convective activity. Chennai too would receive rain spells during evening or night till Saturday.

Commuters demand more buses from south side of flyover

No constraints:The Velachery MRTS station has ample space in the front to accommodate buses.G. Krishnaswamy  
In the wake of the proposal to shift the Vijayanagar bus terminus to Velachery railway station, commuters of southern suburbs want the Metropolitan Transport Corporation (MTC) to start operating bus services from the south side of the railway station. The commuters want MTC officials to divert some bus services that are now being operated till Vijayanagar bus terminus through the service road on the southern side of the Velachery flyover.
The Mass Rapid Transit System (MRTS) has become a big hit for a large number of commuters from suburbs including Madipakkam, Pallikaranai, Medavakkam and Keelkattalai. However to reach the Velachery railway station using the MTC buses, they have to take a long walk through the station road. Moreover, the vehicles starting from the Vijayanagar bus terminus are caught in traffic jams at the Vijayanagar traffic signal resulting in waste of time and fuel.
Southern Railway has improved passenger facilities on the south side of the Velachery railway station. Commuters say the operation of a few buses below the flyover on the south side would reduce traffic congestion at Vijayanagar. R. Santosh, a regular MRTS commuter from Pallikaranai, said at present share autos are operating from the south side of the station and if MTC terminates buses below the flyover it would be a big boon to hundreds of commuters. A senior official of the MTC, when asked about the option of operating buses from the south side of the railway station, said that the suggestion would be considered positively.

Students collect funds for girl’s treatment

Mehak G.  
In a noble gesture, students of Mahatma Gandhi Memorial College collected Rs. 1.12 lakh to aid medical treatment of 11-year-old Mehak G. from Shivamogga who is suffering from blood cancer. Mehak, who belongs to an economically disadvantaged family, is receiving treatment at the Kasturba Hospital in Manipal.
The amount was handed over by the students to Mehak’s mother Shahina here on Thursday. The sole breadwinner for her family, Shahina used to sell eggs from a rented van in Shivamogga.
After her child was diagnosed with cancer, Shahina, a widow, moved with her family, including her elder daughter, Seher G. (15), and son Salman (9), to get Mehak treated here about nine months ago for the child’s treatment. Her elder daughter, Seher, who always got marks above 90 % till Class IX and son Salman had to discontinue their studies.
The students of the college kept a box to collect money for Mehak last month. “After we learnt about the plight of Mehak, we decided to help her as her mother was trying so much,” said Vignesh Bhat, college student.
“This is a kind gesture on part of our students. I hope they will carry on with the same spirit of helping society in their lives. I had made it clear to them that the collection of money should be strictly voluntary,” said Kusuma Kamath, college principal.
Shahina said that she had already spent about Rs. 6.5 lakh for Mehak’s treatment and was trying to raise another Rs. 3.5 lakh for the same purpose. “People cutting across religions and castes have helped me in Udupi and surrounding places, besides the kind students of this college,” she said.
She got Rs. 1.5 lakh from the Prime Minister’s Relief Fund through Oscar Fernandes, MP. The authorities of Mother of Sorrows Church, Udupi, St. Lawrence Basilica, Attur, Stella Maris Church, Kalmady, too gave donation. She had also got financial help from mosques in Udupi and Malpe and the Jamaat-e-Islami Hind, she said.
The Rainbow organisation, comprising auditing students, also handed over a cheque of Rs. 15,000 to Shahina on the occasion. Meanwhile, a group of students and some lecturers who have come together here under the banner of “Fragrance of Humanity” are collecting donation for the purpose.

No churidhars for school teachers’


10-year-old rape victim delivers girl child

CHANDIGARH,

AUGUST 18, 2017 00:00 IST

A 10-year-old girl who was allegedly raped repeatedly by her uncle delivered a girl child at a local government hospital here on Thursday morning, a senior doctor said. Both the victim and the newborn are stable. However, the baby is under observation in the neonatal intensive care unit as it is slightly underweight.


Tamil Nadu CM forced to wind up MGR centenary celebration meet following ruckus

Julie Mariappan| TNN | Aug 17, 2017, 04:06 PM IST


CHENNAI: Members of the village administrative staffs association on Thursday disrupted the MGR centenary celebrations held in Chennai, forcing chief minister Edappadi K Palaniswami, who was presiding over it, and his cabinet to abruptly call it off.

The function began at 11am, an hour behind schedule. It was the first event by staff of a government department, including village administrative officers, village assistants and land survey staff, celebrating the former CM's centenary. With most of his cabinet colleagues present, Palaniswami began his speech at around noon.

As many as 2,000 staff members were keenly listening to the speech at Kalaivanar Arangam, inside and outside the imposing structure. The moment the CM ended his ten-minute-long speech, detailing the effective functioning of revenue department and its staff for the welfare of people, TN village assistants association secretary Shanmuga Sundaram shouted from one of the front rows, stunning the dignitaries on stage. "What have you done to us?" he asked, lifting up his hands. Seven senior bureaucrats on stage, including the CM secretaries were perplexed.

Tension was palpable among the gathering. Ministers were seen reaching out to revenue minister RB Udayakumar and bring some order.

Sundaram alleged that their demand to resolve salary disparity was not responded to by the CM. "We are not getting salary on a par with even 'D' grade staffs, despite putting in so many years and working for public welfare and neither do we get full salary nor dearness allowance," Sundaram said.

When many participants took the exit route in protest, Palaniswami abruptly ended left the venue along with his cabinet colleagues, without giving away mementos to the office-bearers of the associations. Later, Udayakumar announced that government would begin preliminary talks with the association members at the same venue. "The demands are being considered," the minister told TOI later.


Case filed against Medical Officer of Ambur GH for insulting national flag

TNN | Updated: Aug 17, 2017, 11:56 PM IST


Vellore: A case has been registered against the Medical Officer (MO) of the government hospital in Ambur, Dr A Kennedy, for reportedly insulting the national flag during the Independence Day programme in the hospital on Tuesday.

The Ambur Town police have registered a case under Section 2 of the Prevention of Insults to National Honour Act, 1971, against Dr Kennedy following a complaint from former councillor of Ambur municipality, Suresh Babu.

Babu, in his complaint, stated that Dr Kennedy was speaking over the phone while the national flag was hoisted and the national anthem was sung on Independence Day on the premises of the hospital. The flag was hoisted by Ambur legislator R Balasubramani.

Following the video of the doctor speaking over the phone being circulated in social media, Babu lodged the complaint on Wednesday. Acting on the complaint, special sub inspector K Annadurai registered the case.

Superintendent of police of Vellore, P Pakalavan said they have launched an inquiry into the case. They would look into the video being circulated in social media and also conduct an inquiry with the people who were present at the spot on that time. "We will also inquiry Dr Kennedy and take suitable action as per the provision in the Act," he said.

NEET delay: Future of students hangs in balance

TNN | Updated: Aug 17, 2017, 11:47 PM IST


Chennai: Tamil Nadu is yet to the get the sanction for the ordinance exempting it from the National Eligibility cum Entrance Test (NEET), but the Supreme Court has already stayed counselling for MBBS/BDS admission until August 22. Now, the state will be left with less than 10 days to admit students to MBBS courses in 23 government-run colleges and 10 self-financing colleges before the August 31 deadline. It has another 10 days to complete the BDS admissions.

As a cascading effect, there will be a delay in admission for paramedical courses such as nursing, optometry and physiotherapy. At least two universities - Tamil Nadu Veterinary and Animal Sciences University and the Tamil Nadu Agricultural University - have put their second round of counselling on hold to avoid seats being left vacant. The Anna University, which has wrapped up counselling, has said vacated seats will not be filled. Arts and sciences colleges too will not be able to admit students after August 18.

"Whichever way you look at it, the government has made students a victim," said Saravanan M, parent of an aspiring medical student, whose daughter took a year's break after passing her boards. While his daughter will be affected if TN manages to exempt itself from NEET, another group of state board students say a year's break may soon become a norm if NEET stays on. "For at least three years from now, all medical aspirants will take a break after completing school to study for NEET. Even if the education department changes the syllabus, it will take time for students and teachers to adapt to the new syllabus and method of learning. This will lead to tutorials becoming more important," said Prem Kumar, a Class XII state board passout.

Parents are also worried they may not have adequate time to make arrangements for paying fees, particularly if they are left with a seat under management quota in self-financing colleges or in deemed universities. "We can make arrangements if we know the chances. One of the problems for most parents is that they don't know where their children stand on the rank list. Neither the CBSE, which conducted the examination, nor the state's directorate of medical education has published rank lists," said a parent M Senthil Mohan.

Health minister C Vijaya Baskar is meeting senior politicians and officials campaigning for the ordinance. On Thursday, he met vice-president Venkaiah Naidu. "Through the ordinance we are now seeking exemption only for one year and that too only for government colleges. Rural students will be most affected if NEET is implemented," said health minister C Vijaya Baskar.

If NEET scores are taken as criteria for admissions, more than 42% of the seats will go to students from CBSE and other boards, officials from the directorate of medical education said. This would mean that less than 5% of state board students who cleared the test will be able to get into one of the 23 government medical colleges. "The state proposed reserving 85% government seats for the 23 government colleges, but it was struck down. We are now working on other options as suggested by the Supreme Court," said a senior official.


Railway staff board ac coaches illegally, smoke


Siddharth Prabhakar| TNN | Aug 17, 2017, 11:57 PM IST

CHENNAI: Railway officials will now take action against staff who are travelling in 3-tier AC coaches without valid tickets, especially on the Vellore-Arakkonam-Chennai route. The issue was raised by members of the Divisional Rail Users Consultative Committee (DRUCC) at a meeting held in the divisional railway manager's (DRM) office here on Thursday.

The issue was raised by DRUCC members V Dhasarathan and M Kishore Kumar. "Railway staff show their allegiance to the union and bully passengers. TTEs don't take action against the staff because of this," the members told the meeting, without naming the union. DRM Naveen Gulati, additional DRM SP Sorte, senior divisional commercial manager B Ravichander and senior divisional security commissioner were present at the meeting and assured that they would act on the complaint.

"Smoke filled the entire coach of the Trivandrum Mail. I've given the specific details to the DRM. This nuisance happens regularly," Dhasarathan told TOI.

Gulati assured the DRUCC that action would be taken as it was raised in the meeting for the first time.

"We are aware of this and will devise a strategy as it is a sensitive issue," a senior official said.

Kishore Kumar raised the issue of unions and associations defacing railway stations with posters and banners. "They are given specific areas where they can paste these posters, but its all over the place," he told TOI.

In the meeting, Kishore said the roof of Chennai Central station leaks even if there is a brief spell of rain. A video on messaging platforms which went viral showed how the biggest station in Southern Railway had become like a waterfall. "Parcels are strewn across the platform at Chennai Egmore station which causes problems for passengers, especially senior citizens and the differently abled," he said in the meeting.

Kishore raised the issue of many NGOs willing to beautify stations through CSR activities and urged the officials to simplify the process.

Another member suggested that suburban trains should have an automatic doors to prevent footboard deaths. However, officials informed that it would not be possible currently due to lack of funds and technology.

Twenty-five DRUCC members representing various organisations such as chamber of commerce, trade associations and industries, consumer council of India, recognised passenger associations, associations of the differently abled, GM's nominee, special interest and nominees of MPs were present at the meeting.
போலி பாஸ்போர்ட்டில் மஸ்கட் சென்றுவிட்டு சென்னை திரும்பிய கேரள வாலிபர் கைது
2017-08-18@ 01:49:27




சென்னை : மஸ்கட்டில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, கேரள மாநிலம் கோழிக்கேட்டை சேர்ந்த ராமகிருஷ்ணன் (39) என்ற பெயரில், பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு ஒருவர், மஸ்கட்டில் இருந்து திரும்பினார். அவரது பாஸ்போர்ட் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அதனை கம்ப்யூட்டர் மூலம் சோதனை செய்தபோது, மற்றொருவரின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, இவரது புகைப்படத்தை வைத்து போலி பாஸ்போர்ட் தயாரித்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த லெனின்குமார் (37) என்பது தெரிந்தது. மேலும் கடந்த 6 மாதத்துக்கு முன் இதே பாஸ்போர்ட்டில் மஸ்கட் சென்று வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள், மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்
வேலூர் மத்திய சிறையில் இன்று ஜீவசமாதி அடைவதில் முருகன் உறுதி

2017-08-18@ 00:41:58




வேலூர் : வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி முருகன் இன்று ஜீவசமாதி அடைவதில் உறுதியாக உள்ளதாகவும், அவரை தீவிர கண்காணிப்பின்கீழ் வைத்திருப்பதாகவும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். முருகனின் மனைவி நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர்களில் முருகன், ஆகஸ்ட் 18ம் தேதியன்று சிறையிலேயே ஜீவசமாதி அடைய தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்திற்கு மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து, பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்டு வந்தார். அவரிடம் சிறைத்துறை போலீசார் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முருகன், ஜீவ சமாதி அடைவது உறுதி என்று போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறைத்துறை போலீசார் முருகன் அடைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு பிரிவில், அவருடன் தங்கி உள்ள கைதிகள் மூலமும், சிறைத்துறை போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஜீவசமாதி அடைவதை தடுக்கும் விதமாக போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் அருகே போலி டாக்டர் கைது
பதிவு செய்த நாள்18ஆக
2017
01:46

திருப்பூர் : பல்லடம் அருகே போலி டாக்டரை, சுகாதாரத்துறையினர் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.பல்லடம் - உடுமலை ரோட்டில், மந்திரிபாளையம் உள்ளது. இங்கு, அப்துல் ரசாத் முகமது, 58, என்பவர், இரண்டரை ஆண்டுகளாக, அப்பகுதியில் சித்தா சிகிச்சை மையம் நடத்தி, பொதுமக்களுக்கு சிகிச்சையளித்துள்ளார்.இவர், சித்த மருத்துவத்துக்கு பதிலாக, ஆங்கில மருத்துவ சிகிச்சையை, நோயாளிகளுக்கு அளித்து வந்தார். இதுகுறித்த புகார் கிடைத்ததால், திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் சவுந்தரராஜன் தலைமையிலான குழுவினர், நேற்று மந்திரிபாளையத்தில் உள்ள அவரது கிளீனிக்கில் திடீரென, சோதனை நடத்தினர்.அப்போது, அப்துல் ரசாத் முகமது, போலி டாக்டர் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். காமநாயக்கன்பாளையம் போலீசார், போலி டாக்டரை கைது செய்தனர்.
5ம் வகுப்பு போலி டாக்டர் ஆத்தூரில் கைது

பதிவு செய்த நாள்18ஆக
2017
01:07

ஆத்துார்: கோல்கட்டாவைச் சேர்ந்த போலி டாக்டரை, ஆத்துாரில், போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமையிலான அதிகாரிகள், ஆத்துார் பகுதியில், நேற்று, ஆய்வு மேற்கொண்டனர். 

உடையார்பாளையத்தில், வாடகை வீட்டில், கிளினிக் நடத்தி வந்த கிஷோர் ராய், 36, போலி டாக்டர் என, தெரியவந்தது. அங்கிருந்த, மயக்க மருந்து, ஊசி, மருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவன் கிஷோர் ராய் என்பதும், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவன், மூன்று ஆண்டுகளாக, உடையார்பாளையத்தில் வைத்தியம் செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

பதிவு செய்த நாள்

18ஆக
2017
00:12


வேடசந்துார், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சார்பில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்யக்கோரி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளனர்.

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சார்பில், தற்போது நடைமுறையில் உள்ள புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், 8-வது ஊதியக்குழுவை விரைந்து அமுல்படுத்த வேண்டும், அதுவரை, 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் 70 க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஜாக்டோ ஜியோ என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஆக.5 ல் சென்னையில் ஒன்னறை லட்சம் பேர் பங்கேற்ற ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அரசு தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லாததால், போராட்டக்காரர்கள் அடுத்த கட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து ஆக.22-ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கும் மாநில அரசு செவி சாய்க்காவிட்டால், அடுத்த கட்டமாக ஆக.26, 27 தேதிகளில் ஆயத்த மாநாடு, செப்.,7 முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் தயாராகி வருகின்றனர்.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் மோசஸ் கூறுகையில், “மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை, அனைத்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.
வெளிநாட்டுக்கு அழைத்து சென்று மோசடி
பதிவு செய்த நாள்17ஆக
2017
22:21


காரைக்குடி, அரியக்குடி கண்ணப்பனார் தெருவை சேர்ந்தவர் விஜயாள்,45. இவரது மகன் விஜய் என்பவரை கடந்த 2016 அக்டோபரில் துபாய்க்கு ஆறாவயல் பாப்பான் வயலை சேர்ந்த கருப்பையா மகன்கள் ரகுலிங்கம், பிரபு இருவரும் ரூ.80 ஆயிரம் பெற்று அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சொன்ன வேலையை வாங்கி கொடுக்காமல் கட்டட வேலைக்கு அனுப்பியுள்ளனர். அதுமட்டுமன்றி வேலை பார்த்ததற்கான சம்பளம், பாஸ்போர்ட்டை வழங்கவில்லை. இதை தொடர்ந்து அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகளிடம் விஜய் புகார் செய்தார். 

அவர்கள் புகாரை காரைக்குடிக்கு அனுப்பினர்.விஜயாள் புகாரின் பேரில், தெற்கு எஸ்.ஐ.அரவிந்தராஜன் வழக்கு பதிந்தார்.

புகாரில் கூறியிருப்பதாவது: எவ்வித உரிமமும் இன்றி போலியாக தன் மகனை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று ஏமாற்றி விட்டனர், எனவே கருப்பையா, அவரது மகன்கள் ரகுலிங்கம், பிரபு ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுத்து, தனது மகனை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கலைந்தது மருத்துவ கனவு : அரியலூர் மாணவி வழக்கு

பதிவு செய்த நாள்18ஆக
2017
00:18


பெரம்பலுார்: 'நீட்' வழக்கில், பிளஸ் 2 தேர்வில், 1,176 மதிப்பெண் பெற்ற, அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த மாணவி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துஉள்ளார்.

அரியலுார் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர், அனிதா, 17. இவர், மூட்டைத் துாக்கும் தொழிலாளி, சண்முகம் என்பவரின் மகள். பிளஸ் 2 தேர்வில், 1,176 மதிப்பெண்கள் பெற்ற மாணவி அனிதாவின் மருத்துவ, 'கட் - ஆப்' 196.75. எஸ்.சி., பிரிவைச் சேர்ந்த அனிதா, நீட் தேர்வில், 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடந்தால், அனிதாவிற்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால், 'நீட்' தேர்வு அடிப்படையில் நடந்தால், அவருக்கு வாய்ப்பில்லை.நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை எதிர்த்து, நளினி சிதம்பரம் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கில், எதிர்மனுதாரராக தன்னை சேர்க்க, மாணவி அனிதா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்காக, அவர் டில்லி சென்றுள்ளதாக, அவரது தந்தை சண்முகம் தெரிவித்தார்.
மருத்துவ சேர்க்கையில் கூடுதலாக 57 'சீட்'

பதிவு செய்த நாள்18ஆக
2017
00:14

சென்னை: அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் நிரம்பாத, 57 இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.அதில், தமிழகத்தில் இருந்து, 435 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டன. இதற்கான கவுன்சிலிங், சமீபத்தில் நடந்தது.

தமிழக மருத்துவக் கல்வி தேர்வு குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத, 57 மருத்துவப் படிப்பு இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு திருப்பி கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த இடங்கள், மாநில சேர்க்கையில் இடம்பெறும்,'' என்றார்.
அண்ணாமலை செட்டியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பதிவு செய்த நாள்18ஆக
2017
00:08


சென்னை: ராமசாமி செட்டியார் அறக்கட்டளை சார்பில், ஆண்டு தோறும் வழங்கப்படும், டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பிறந்தநாள் நினைவுப் பரிசுக்கு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அறக்கட்டளை, ஆண்டு தோறும், 50 வயதுக்கு மேற்பட்ட, கல்லுாரி பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்களுக்கு பரிசு மற்றும் விருதுகளை வழங்கி வருகிறது. 

இவ்விருதுக்கு, படைத்த நுால்கள், ஆய்வாளர்களை உருவாக்கிய விபரங்களையும் தெரிவிக்க வேண்டும். அதே போல், ஆதரவற்றோர், முதியோர் காப்பகங்களை சிறப்பாக நடத்தும் தன்னார்வலர்களுக்கும், பரிசு மற்றும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்விருதுக்கு விண்ணப்பிப்போர், காப்பகத்தை நடத்துவோர், காப்பகம் செயல்படும் விதம் குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, 'டாக்டர் மு.அ.மு.ராமசாமி செட்டியார் அறக்கட்டளை, 82, சாந்தோம் நெடுஞ்சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28' என்ற முகவரிக்கு, வரும், 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அடுத்த மாதம், 30ம் தேதி நடக்கும் அண்ணாமலை செட்டியாரின், குடும்ப விழாவில், பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாளய அமாவாசை : காசிக்கு சிறப்பு ரயில்

பதிவு செய்த நாள்18ஆக
2017
00:03

சென்னை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், மஹாளய அமாவாசையை ஒட்டி, காசி யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், செப்., 15ல், மதுரையில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக காசிக்கு செல்லும். காசியில், புனித நீராடி, காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம்; மஹாளய அமாவாசையன்று, கயாவில், முன்னோருக்கு மரியாதை செலுத்தலாம்; அலகாபாத்தில், திரிவேணி சங்கமத்தில் நீராடலாம்.
ஹரித்துவாரில் மானச தேவியை தரிசிக்கலாம்; டில்லியில், குதுப்மினார், இந்தியா கேட், ராஜ்காட், தீன்மூர்த்தி பவன், இந்திரா காந்தி நினைவிடம் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். மதுராவில், கிருஷ்ண ஜன்ம பூமியை தரிசிக்கலாம்.

இந்த சுற்றுலா, 11 நாட்கள் கொண்டது; ஒருவருக்கு, 10 ஆயிரத்து, 395 ரூபாய் கட்டணம். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சலுகை உண்டு. மேலும் விபரங்களுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம்

பதிவு செய்த நாள்18ஆக
2017
04:52




சென்னை: 'வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், இரு நாட்களுக்கு, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்' என, வானிலை மையம் கூறியுள்ளது.

கனமழை:

இது குறித்து, வானிலை மையம் கூறியுள்ளதாவது: தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, தென் மாநிலங்களில், ஒரு வாரத்துக்கும் மேலாக, பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில், வங்கக் கடலில், சென்னை - நெல்லுார் இடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக, இன்று மாறும் என, கணிக்கப்பட்டு உள்ளது. அதனால், இன்று தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மட்டும், சில இடங்களில் மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது.

இரு நாட்களுக்கு..

அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை  மையம் கூறியுள்ளது.

6 ஆண்டுகளில் அதிக மழை:

கடந்த ஜூன் 1 முதல் ஆக., 17 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையானது 210 மி.மீ., என பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவை விட 33 சதவீதம் அதிகம். மேலும், கடந்த 6 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை அளவு இதுவாகும்.
ஜெ.,மரணம்,குறித்து,விசாரணை,முதல்வர்,பழனிசாமி,அதிரடி

ஜெயலலிதா மறைந்து, எட்டு மாதங்களுக்கு பின், அவரது மரணம் குறித்து விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக் கப்பட உள்ளது. அவர் வசித்த, சென்னை, போயஸ் தோட்ட வீடும் அரசுடமையாக்கப் படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.





அரசையும், அமைச்சர்களையும் மிரட்டும் தினகரன் கும்பலுக்கு பீதி ஏற்படுத்தும் விதமாக, இந்த அதிரடி அறிவிப்புகளை, நேற்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், . சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; டிச., 5ல், இறந்தார். சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி யுள்ள, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர், 'ஜெ., மரணத்தில் மர்மம் உள்ளது அது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், ஆட்சி அதிகாரத்தை மறைமுகமாக கையில் வைத்திருந்த சசிகலா தரப்பினர், அதை கண்டுகொள்ளவில்லை. ஆட்சியாளர்களும், அதற்கு துணை போயினர். தற்போது, ஆளும் கட்சியிலும், ஆட்சியிலும் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. சசிகலா குடும்ப ஆதரவால், ஆட்சிப் பொறுப்பேற்றமுதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அந்த குடும்பத்தின் பிடி யில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துள்ளனர்.

அதற்கான நடவடிக்கைகளின் துவக்கமாக, 'துணை பொதுச்செயலராக, தினகரன் நியமிக்கப் பட்டது செல்லாது' என, அமைச்சர்கள், எம்.எல். ஏ.,க்களை கூட்டி, முதல்வர் பழனிசாமி, அதிரடி

தீர்மானம் நிறைவேற்றினார். அதனால், ஆத்திர மடைந்த தினகரன்,தனக்கென ஆதரவு அணியை உருவாக்கி, கட்சியை கைப்பற்ற, காய் நகர்த்தி வருகிறார்.

அவர் பக்கம் உள்ள, 20 எம்.எல்.ஏ.,க்களை காட்டி, முதல்வர் பழனிசாமியையும், அமைச் சர்களை யும் பகிரங்கமாக மிரட்டத் துவங்கி உள்ளார். 'எனக்கு எதிரான தீர்மானத்தை ரத்து செய்து, அமைச்சர்கள் அனைவரும், என் பக்கம் வராவிட்டால், கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றும் எச்சரித்து உள்ளார்.

இந்நிலையில், பகிரங்கமாக மிரட்டும் தினகரன் கும்பலுக்கு பீதியை ஏற்படுத்தும் விதமாக, இந்த இரண்டு அதிரடி அறிவிப்புகளை, முதல்வர் பழனிசாமி, நேற்று வெளியிட்டு உள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

ஜெ., இறப்பு குறித்து, விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதி தலைமையில், ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்படும். நீதிபதி பெயர், பின்னர் அறிவிக்கப்படும். குறுகிய காலத்தில், அறிக்கை சமர்ப் பிக்க உத்தர விடப்படும். சென்னை,போயஸ் தோட்டத்தில்,ஜெ., வாழ்ந்த, 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவிட மாக்கி, பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக் கும் படி, பல்வேறு தரப்பினரிடம் இருந்து, கோரிக்கைகள் வந்துள்ளன.

ஜெ.,யின் சிறப்புகளையும், நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும் அறியும் வகையில், அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு, அரசு நினைவிடமாக மாற்றப் பட்டு, பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக் கப்படும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.

-நமது நிருபர்-
22 வரை மருத்துவ அட்மிஷன் நிறுத்தி வைப்பு  'நீட்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை, வரும், 22ம் தேதி வரை நிறுத்தி வைக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





'நீட்' எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு ரேங்க் பட்டியல், மாநிலக் கல்வி வாரிய, 'மெரிட்' பட்டியல், மாநில கல்வி வாரியத்தில் படித்த எத்தனை பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றனர் உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்யவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'நீட்' எனப்படும் மருத்துவக் கல்வியில் சேருவ தற்கான நுழைவுத் தேர்வு, சமீபத்தில் நடத்தப் பட்டது. 'மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் படித் தவர்கள் இந்த நுழைவுத் தேர்வுக்கு தயாராக வில்லை என்பதால், நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழக அரசு கோரி வருகிறது.

இதற்காக, அவசர சட்டம் பிறப்பிக்கும் முயற்சி யில், மத்திய அரசு உதவியுடன், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், நீட் முறையி லேயே மாணவர் சேர்க்கையை நடத்த உத்தர விடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ''நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில், அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான நடவடிக்கை கள் நடந்து வருகின்றன. ''வரும், 22ம் தேதிக்குள் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்,'' என, மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டார்

ஜெனரல், துஷார் மேத்தா தெரிவித்தார். தமிழகத் துக்கு விலக்கு அளிப்பதற்கு, இந்திய மருத்துவ கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்தது.இந்த வழக்கு களைத் தொடர்ந்துள்ள மாணவர்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், நளினி சிதம்பரம், ''தமிழகத்தில், 10 ஆண்டுகளில், கிராமப் பகுதியைச் சேர்ந்த, 250 பேர் மட்டுமே மருத்துவக் கல்லுாரி களில் சேர்ந்துள் ளனர். ''அதனால், நீட் தேர்வு கிராமப்புற மாணவர் களுக்கு எதிரானது என்ற வாதத்தை ஏற்க முடியாது,'' என்றார்.

தமிழக அரசு பாடதிட்டத்தில் படித்து, நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.யு. சிங், தன் வாதத்தின்போது, ''நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 33ஆயிரம் பேரில், 30 ஆயிரம் பேர் மாநில பாடதிட்டத்தில் படித்தவர்கள். ''அதனால், பிளஸ் 2 தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தினால், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவர்,'' என்றார்.

இந்த வாதங்களைக் கேட்ட, உச்ச நீதிமன்ற அமர்வு அளித்துள்ள உத்தரவு:

மருத்துவ மாணவர் சேர்க்கையில், கடைசி நேரம் வரை தமிழக அரசு ஏன் இழுத்தடிப்பை செய்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் எவரும் பாதிக்கக் கூடாது என விரும்புகிறோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில், அவசர சட்டம் பிறப்பிக்க உள்ளதாக இங்கு கூறினர்.

தகுதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்தப் பட்ட நீட் தேர்வு முறையை, மத்திய அரசே உடைத் தெறியக் கூடாது. ஒரு புறம் மாநில பாடதிட்டத்தில் படித்து, நீட் தேர்வுக்கு தயாராக முடியாத மாணவர் கள்; மறுபுறம், நீட் தேர்வு எழுதி, மருத்துவக் கல்வி யில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் உள்ளனர்; இருவரையும் சமநிலையில் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் முடிவெடுக்கும் வகையில், வரும், 22ம் தேதி, தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை நடத்த, இடைக்கால தடை விதிக்கப் படுகிறது. நீட் தேர்வு எழுதி, தகுதி பெற்றுள்ள மாண வர்களின், ரேங்க் பட்டியல், மாநில கல்வி வாரிய மெரிட் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். மாநில கல்வி வாரியத்தில்படித்த எத்தனை பேர், நீட்

தேர்வை எழுதினர், எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் போன்ற தகவல்களை அளிக்க வேண்டும்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.

அவசர சட்டத்துக்கு அவசியம் ஏற்படாதோ?:

உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய உத்தரவு காரண மாக, எல்லா பணிகளும் முடிந்து, தயார் நிலையில் உள்ள அவசர சட்டத்தை பிறப்பிக்க, மத்திய, மாநில அரசுகள் முன்வராது என்றே தெரிகிறது. இதுவரை, எந்த பிடியும் இல்லாமல் காத்துக் கிடக்கும், நீட் ஆதரவு தரப்பு, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், அடுத்த நிமிடமே கோர்ட் படியேற தயாராகும்.

இதனால், அவசர சட்டம் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு ஏற்படும். இப்போதுள்ள குழப்பத்தில், அவசர சட்ட விவகாரமும் சேர்ந்து, கூடுதல் குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற பயம், மத்திய, மாநில அரசுகளிடம் காணப்படுகிறது.

எனவே, அவசர சட்டத்தை அவசரப்பட்டு பிறப் பித்து, கோர்ட்டுக்கு தர்ம சங்கடத்தை அளிப்ப தற்கு பதிலாக, கோர்ட் உட்பட அனைத்து தரப்பும் ஏற்கும், சமரச பார்முலா வை, மத்திய, மாநில அரசுகள் தயார் செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த சமரச பார்முலாவே, தற்போதுள்ள பிரச்னைக்கு தீர்வாக அமைந்து விட்டால், இவ்வளவு நாட்களும் போராடி கிடைக்கப் பெற்ற அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டிய அவசியமே ஏற்படாமல் போகலாம். கோர்ட் உத்தரவின்படி, அந்த சமரச பார்முலா வின் கீழ், இந்த ஆண்டு மருத்துவ இடங்கள், தமிழகத்தில் நிரப்பப்படக் கூடும்.

மாணவர் சேர்க்கையை தாமதப் படுத்துவதற் காக, இந்திய மருத்துவ கவுன்சில், தமிழக அரசின் மீது கோபத்தில் உள்ளது. நேற்றைய வாதத்தின்போது கூட, 'மாணவர் சேர்க்கையை திட்டமிட்டபடி நடத்தி முடிக்காவிட்டால், தமிழ கத்துக்கான மருத்துவ இடங்களை நாங்களே எடுத்துக் கொள்வோம்' என, கடுமை காட்டியது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, சமரச பார்முலா வுக்கு பின்னும் கூட, சிக்கல் கள் எழுமோ என்ற குழப்பங்களும், சந்தேகங் களும் நீடிக்கவே செய்கின்றன.

- நமது டில்லி நிருபர் -

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...