Friday, August 18, 2017

5ம் வகுப்பு போலி டாக்டர் ஆத்தூரில் கைது

பதிவு செய்த நாள்18ஆக
2017
01:07

ஆத்துார்: கோல்கட்டாவைச் சேர்ந்த போலி டாக்டரை, ஆத்துாரில், போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமையிலான அதிகாரிகள், ஆத்துார் பகுதியில், நேற்று, ஆய்வு மேற்கொண்டனர். 

உடையார்பாளையத்தில், வாடகை வீட்டில், கிளினிக் நடத்தி வந்த கிஷோர் ராய், 36, போலி டாக்டர் என, தெரியவந்தது. அங்கிருந்த, மயக்க மருந்து, ஊசி, மருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவன் கிஷோர் ராய் என்பதும், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவன், மூன்று ஆண்டுகளாக, உடையார்பாளையத்தில் வைத்தியம் செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...