Friday, August 18, 2017

பல்லடம் அருகே போலி டாக்டர் கைது
பதிவு செய்த நாள்18ஆக
2017
01:46

திருப்பூர் : பல்லடம் அருகே போலி டாக்டரை, சுகாதாரத்துறையினர் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.பல்லடம் - உடுமலை ரோட்டில், மந்திரிபாளையம் உள்ளது. இங்கு, அப்துல் ரசாத் முகமது, 58, என்பவர், இரண்டரை ஆண்டுகளாக, அப்பகுதியில் சித்தா சிகிச்சை மையம் நடத்தி, பொதுமக்களுக்கு சிகிச்சையளித்துள்ளார்.இவர், சித்த மருத்துவத்துக்கு பதிலாக, ஆங்கில மருத்துவ சிகிச்சையை, நோயாளிகளுக்கு அளித்து வந்தார். இதுகுறித்த புகார் கிடைத்ததால், திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் சவுந்தரராஜன் தலைமையிலான குழுவினர், நேற்று மந்திரிபாளையத்தில் உள்ள அவரது கிளீனிக்கில் திடீரென, சோதனை நடத்தினர்.அப்போது, அப்துல் ரசாத் முகமது, போலி டாக்டர் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். காமநாயக்கன்பாளையம் போலீசார், போலி டாக்டரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...