Wednesday, August 30, 2017

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை புரட்டியெடுத்தது ஹார்வி புயல் தாக்கி 9 பேர் பரிதாப சாவு: 1.30 கோடி பேர் பாதிப்பு; 30,000 பேர் மீட்பு

2017-08-30@ 01:25:38




ஹூஸ்டன் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹார்வி புயல் தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 1.30 கோடி பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை ஆகஸ்ட் 26ல் ஹார்வி என்ற பயங்கர புயல் தாக்கியது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த இந்த புயலால் மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அத்துடன் தொடர்ந்து கனமழையும் கொட்டுவதால் கோடிக்கணக்கான மக்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி உள்ளனர். வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மீது மரங்கள் வேருடன் சாய்ந்து பெருத்த சேதத்தை உருவாக்கின. மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ஏராளமான பகுதிகள் இருளில் மூழ்கின. சுமார் 50 அங்குல அளவுக்கு பெய்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்த புயல் மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 9 பேர் பலியாகினர். இதில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வேனில் புறப்பட்டுச்சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதில் 4 பேர் குழந்தைகள். அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய நகரமான ஹூஸ்டன் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 26ம் தேதி தொடங்கி நேற்று வரை அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தேசிய நெஞ்சாலைகள், வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. அங்கு வசித்த ெபாதுமக்கள் உயரமான அடுக்குமாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஹூஸ்டன் தவிர விக்டோரியா, கார்பஸ் கிறிஸ்டி ஆகிய நகரங்களில் பாதிப்பு அடைந்தன. பலத்த மழை காரணமாக ஆற்று தண்ணீர் நகரத்துக்குள் புகுந்ததால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளில் 12 ஆயிரம் தேசிய பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 30 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பணிகளை மாகாண அதிகாரிகளுடன் இணைந்து அமெரிக்க அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. மழை காரணமாக பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

200 இந்திய மாணவர்களுக்கு உதவி

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்த 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமெரிக்கா வாழ் இந்தியர்கள் 200 மாணவர்களுக்கும் உணவு மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். ஷூஸ்டன் இந்திய பிரதிநிதி அனுபம்ராய் மாணவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார். அதே போல் ஏரி வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழத்தில் படித்த இந்திய மாணவர்கள் ஷாலினி, நிகில்பாட்டியா ஆகியோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதில் ஷாலினியின் உடல்நிலை நேற்று சிறிது முன்னேற்றம் கண்டது. ஆனால் நிகில் பாட்டியா அதே நிலையில்தான் உள்ளார்.

டிரம்ப் நேரில் ஆய்வு

ஹார்வி புயல் பாதித்த பகுதிகளை அதிபர் டிரம்ப் நேற்று பார்வையிட்டார். புயல் மற்றும் வெள்ள பாதிப்பை பேரழிவு என பிரகடனம் செய்திருந்த டிரம்ப், அங்கு நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளை வெகுவாக பாராட்டி னார்.

விமான நிலையங்கள் மூடல்

அமெரிக்காவை தாக்கிய ஹார்வி புயலால் ஹூஸ்டனில் உள்ள விமான நிலையங்கள் மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் கூறுகையில், புயலால் ஹூஸ்டன் நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இங்குள்ள ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையம் மற்றும் வில்லியம் ஹாபி விமான நிலையம் ஆகியவற்றின் விமான ஓடுபாதைகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. வெள்ள நிலைமை சீராகும் வரை இந்த விமான நிலையங்கள் மூடப்படும். அதன் பின்னரே விமான நிலையம் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

* ஹூஸ்டன் நகரில் மட்டும் 5,500 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மேயர் சில்வெஸ்டர் டர்னர் தெரிவித்தார்.
* வெள்ளத்தில் சிக்கி மக்களை மீட்க 16 விமானங்கள் இரவு, பகலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபாட் தெரிவித்தார்.
* மழை நேற்றும் இடைவிடாது கொட்டியது. இந்த வார இறுதியில்தான் மழை நிற்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சலிங் செப்டம்பர் 7ம் தேதி வரை நீட்டிப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

2017-08-30@ 01:26:03




புதுடெல்லி : நீட் தேர்வு அடிப்படையில் நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடந்து வருகிறது. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இறுதிக்கட்ட கவுன்சலிங்கை நாளையுடன் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 5,500 இடங்கள் காலியாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சுகாதார சேவைகள் இயக்குனரகம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘இறுதிக்கட்ட கவுன்சலிங் நடத்துவதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இது நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற கல்லூரிகளுக்கு பொருந்தாது. இதே போன்ற காலக்கெடுவை இதர மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் கேட்டால் அது பரிசீலிக்கப்படாது’’ என்றனர்.
ஓணம் பண்டிகைக்காக தித்திக்கும் மலையாள வெல்லம்: திருவில்லிபுத்தூரில் தயாரிப்பு

2017-08-29@ 21:28:56




திருவில்லிபுத்தூர்: ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் ‘மலையாள வெல்லம்’ தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவில்லிபுத்தூரை பொறுத்தவரை விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயிகள் கடன் வாங்கியாவது விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவில்லிபுத்தூர் விவசாயிகள் தங்களது நிலங்களில் அதிகளவு கரும்பு பயிரிட்டு வருகின்றனர். அறுவடை செய்த கரும்பு, ஆலைகளில் அரைக்கப்பட்டு வெல்லமாக தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

அந்த வகையில் திருவில்லிபுத்தூரில் கூம்பு வடிவிலான வெல்லம், உருண்டை வடிவிலான வெல்லம் என இரண்டு வகையான வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கூம்பு வடிவிலான வெல்லம் நாட்டு வெல்லம் என்றும், உருண்டை வெல்லம் உருட்டு வெல்லம் என்றும் அழைக்கப்படுகிறது. உருட்டுவெல்லத்தை மலையாள மக்கள் விரும்பி பயன்படுத்துவதால் இதனை ‘மலையாள வெல்லம்’ எனவும் அழைப்பதுண்டு. திருவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் மலையாள வெல்லம் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஓணம் பண்டிகையை கேரள மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவர்.

ஓணத்தின் போது வீடுகளில் பல்வேறு வகையான இனிப்பு வகைகளை செய்து அசத்துவர். இனிப்பு பலகாரத்தில் திருவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் வெல்லம் முக்கிய இடம்பிடிக்கும். ஓணம் பண்டிக்கை நெருங்குவதால் திருவில்லிபுத்தூரில் மலையாள வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தயாரிக்கும் வெல்லத்தை நேரடியாகவும், வியாபாரிகள் மூலம் கேரளாவிற்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, ஈரோடு போன்ற பகுதிகளிலிருந்து வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்கள் அதிகமாக வரவழைக்கப்பட்டு மலையாள வெல்லம் தயாரிக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. இதுகுறித்து மலையாள வெல்லம் ஆலை உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் சுவையானவை. ஓணம் பண்டிகை நெருங்குவதால் வெல்லத்தின் தேவை அதிகமாக இருக்கும். எனவே வெளியூர்களில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து தயாரிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளோம்’ என்றார்.
திருமணத்திற்கு முன்தினம் இரவு மண்டபத்தில் இருந்து காதலனை தேடி ஓடிய மணப்பெண் ஏமாற்றத்துடன் திரும்பிய அவலம்
2017-08-30@ 01:09:17

DINAKARAN




திண்டிவனம் : திருமணத்திற்கு முன்தினம் இரவு காதலனை தேடி மண்டபத்தில் இருந்து ஓடிய மணப்பெண், குறிப்பிட்ட இடத்தில் அவனை காணாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். அதற்குள் மணமகனும் வெளியேறியதால் திருமணம் நின்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகள் சிலம்பரசி(24). திண்டிவனம் வண்ணாரபேட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் முருகன்(24). இருவரும் பள்ளியில் படிக்கும் போதே காதலித்து வந்தனர். பள்ளி படிப்பு முடிந்த பிறகும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததும் கண்டித்த சிலம்பரசியின் பெற்றோர், மகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி சிலம்பரசிக்கும், அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை அச்சிறுப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

அதற்கு முன்தினம் மாலை மண்டபத்திற்கு பெண் வீட்டார் வந்து தங்கினர். அன்றிரவு சிலம்பரசிக்கு போன் செய்த அவரது காதலன் முருகன், அச்சிறுப்பாக்கம் மலையடிவாரத்தில் நிற்பதாகவும், நீ உடனே வந்தால் இருவரும் ஊரை விட்டு போய் திருமணம் செய்து கொள்வோம் என்று அழைத்து இருக்கிறார். இதை நம்பி சிலம்பரசியும் நள்ளிரவில் மண்டபத்தை விட்டு வெளியேறி காதலனை தேடி சென்றார். மறுநாள் காலை மணப்பெண்ணை அலங்காரம் செய்ய தேடியபோது சிலம்பரசியை காணவில்லை. இதனால் பெற்றோரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். திருமண மண்டபமே பரபரப்புக்குள்ளானது. தகவலறிந்து மணமகன் வீட்டார் ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறினர். திருமணம் நின்றதால் உறவினர்களும் கலையத் தொடங்கினர்.

இதனிடையே மதியம் வரை காதலனுக்காக காத்திருந்த சிலம்பரசி, அவர் வராததால் ஏமாற்றம் அடைந்து, மீண்டும் திருமண மண்டபத்துக்கு வந்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறியழுதார். இதையடுத்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிலம்பரசி தன்னை ஏமாற்றிய காதலன் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மளிகை கடை உரிமையாளர் கைது

2017-08-29@ 19:18:27

சென்னை: சென்னை கேளம்பாக்கம் அடுத்த படூரில் 2 குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக முகமது அபுபக்கர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் டேவிட் பால் அளித்த புகாரின் பேரில் மளிகை கடை உரிமையாளர் முகமது அபுபக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அசல் ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் 3 மாதம் சிறை : காவல் துறை எச்சரிக்கை
2017-08-29@ 21:19:39

சென்னை: செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அசல் ஓட்டுநர் உரிம்ம இல்லை என்றால் ரூ.500 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
'நீட்'விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்த விவகாரம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு செய்த நாள்30ஆக
2017
00:50


மதுரை: 'நீட்' தேர்வு விண்ணப்பத்தில் அறியாமையால் செய்த தவறை சரிசெய்து, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் அனுமதிக்க தாக்கலான வழக்கில், மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு இயக்குனர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வள்ளுவர் காலனி சுபிக் ஷா தாக்கல் செய்த மனு:பிளஸ் 2 தேர்ச்சியடைந்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு எழுதினேன். நான் இதர பிற்பட்டோர் பிரிவை (ஓ.பி.சி.,) சேர்ந்தவள். தேர்வு விண்ணப்பத்தில், அறியாமையால் ஓ.பி.சி.,க்கு பதிலாக யு.ஆர்.,எனப்படும் இட ஒதுக்கீடு அல்லாதவர்களுக்குரிய பிரிவை தேர்வு செய்துவிட்டேன்.விண்ணப்பத்துடன் ஓ.பி.சி.,சான்று இணைத்திருந்தேன். உரிய 'கட்-ஆப்' மதிப்பெண் பெற்று, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கு தகுதியடைந்தேன். ஆனால், தகுதிப் பட்டியலில் ஓ.பி.சி.,பிரிவில் எனது பெயர் இல்லை. ஓ.பி.சி.,பிரிவு கவுன்சிலிங் தகுதிப் பட்டியலில் எனது பெயரை சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுபிக்ஷா மனு செய்திருந்தார்.நீதிபதி கே.கல்யாணசுந்தரம், “மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு இயக்குனர், மனுதாரரின் மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,” என்றார்.

மருந்து வாங்க பணமின்றி எஸ்.ஐ., தவிப்பு

பதிவு செய்த நாள்29ஆக
2017
23:01




சேலம்: உடல் நிலை பாதிப்பால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும், எஸ்.எஸ்.ஐ., மருந்து வாங்க கூட பணமின்றி, தவிக்கிறார். சேலம், தளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி, 57. ஓமலுார் சப் டிவிஷனில், சிறப்பு ரோந்து வாகனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி பூங்கொடி, 43. இவர்களுக்கு, 23 - 27 வயதில் மூன்று மகள்கள். ஒரு மகன். மூத்த பெண் திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பெற்றோருடன் வசிக்கிறார். இரண்டாவது பெண், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். இவருக்கு, செப்., 12ல் திருமணம் நடக்க உள்ளது.

மகளின் திருமண செலவு : ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 2012ல் பணி காரணமாக மதுரை சென்றார். அங்கு பணியின்போது, மயங்கி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.

முதலுதவி சிகிச்சைக்கு பின், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். கடந்த ஜூலை, 30ல், ரத்த அழுத்தம் அதிகரித்து மயங்கி விழுந்தார்.சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஆப்பரேஷன் முடித்தும், நினைவு திரும்ப வில்லை.

இரண்டாவது மகள் திருமணத்துக்கு வைத்திருந்த, பணத்தை மருத்துவமனையில் செலவு செய்துள்ளனர். தற்போது, மருந்து வாங்க கூட, உறவினரின் உதவியை நாட வேண்டிய நிலை உள்ளது.

இன்சூரன்ஸ் பலனில்லை : இதுகுறித்து, நேற்று முன்தினம் இரவு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை, ஓமலுார் போலீசார் நல்லதம்பியை சந்தித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். ஆனால், அரசு, மாவட்ட போலீஸ் சார்பில் உதவுவது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. இதனால், அவருக்கு உதவ நினைப்பவர்கள், 94981 68093 என்ற எண்ணில் அழைக்கலாம்.

இதுகுறித்து, கண்ணீர் மல்க அவரது மனைவி பூங்கொடி கூறியதாவது: போலீசில், 35 ஆண்டுகளுக்கு மேலாக, கணவர் நேர்மையாக பணிபுரிகிறார். ஆறு ஆண்டுகளாக, எங்கள் சம்பளத்தில் பெரும் தொகை, மருத்துவ செலவுக்கே போய்விட்டது. போலீசில், கணவருக்கு வழங்கிய ஸ்டார் நியூ ெஹல்த் இன்சூரன்ஸ் கார்டு, எந்த விதத்திலும் பயன்தரவில்லை. முதல்வரும், போலீஸ் உயர் அதிகாரிகளும், என் கணவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் பழனிசாமியின் மாவட்டமான சேலத்தில், அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையில் பணிபுரிந்தவரின் குடும்பம், சிக்கலான நிலையில் உள்ளதால், முதல்வர் உதவ வேண்டும் என, மாவட்ட போலீசார் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
போலி சான்றிதழ்: போலீஸ் விசாரணை தீவிரம் : எம்.பி.பி.எஸ்., 'சீட்'டுக்கு கொடுத்த விவகாரம்

பதிவு செய்த நாள்29ஆக
2017
22:59


சென்னை: வெளி மாநில மாணவர்கள், போலி இருப்பிட சான்றிதழ்கள் சமர்ப்பித்து, எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றனரா என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தர வரிசை பட்டியல் படி,மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைதீவிரப்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
இதில், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில மாணவர்கள் சிலர், போலி இருப்பிட சான்றிதழ்களை சமர்ப்பித்து, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, திண்டி வனத்தைச் சேர்ந்த, அரசு வழக்கறிஞர், அம்ஜத் அலி மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த, தீனதயாளன், சென்னை மாநகர போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:

கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தமிழக மருத்துவ கல்லுாரிகளில் சேர, போலி இருப்பிட சான்றிதழ்களை சமர்ப்பித்து, சட்ட விரோதமாக, மாநில ஒதுக்கீட்டில்,எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றது தெரிய வந்து உள்ளது.

அது குறித்து, கேரளாவை பூர்வீகமாக உடைய மாணவி உட்பட, ஒன்பது பேரிடம் விசாரணை நடக்கிறது.

இவர்களை போல, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், போலி இருப்பிடம் மற்றும் ஜாதி சான்றிதழ்கள் சமர்ப்பித்து, இடம் பெற்று இருப்பதாக, தீனதயாளன் என்பவர் புகார் அளித்துள்ளார்.அதுபற்றி, சி.பி.எஸ்.இ., தர வரிசை பட்டியல் அடிப்படையில், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிரம்பின இடங்கள்

அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில்,அரசு இடங்களில், பழங்குடியினர் இடம் தவிர்த்து, அனைத்து, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களும் நிரம்பின.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 24ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. ஐந்து நாட்களில், அரசு மற்றும் சுயநிதி அரசு மருத்துவகல்லுாரிகளில் உள்ள, 3,284 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 468 பி.டி.எஸ்., இடங்கள் நிரம்பின.

இந்நிலையில், நேற்றைய கவுன்சிலிங்கில், ஆதிதிராவிடர் ஒ
துக்கீட்டில் இருந்த, எம்.பி.பி.எஸ்.,இடங்கள் நிரம்பின. இந்த பிரிவில், ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியில், இரண்டு எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.

பழங்குடியினர் பிரிவில் சில இடங்கள் காலியாக உள்ளன. பி.டி.எஸ்., படிப்பில், ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இடங்களை தவிர, அனைத்து இடங்களும் நிரம்பின.

இன்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவு இடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. கவுன்சிலிங், செப்., 1ல், நிறைவடைகிறது.
சொந்த ஊருக்கு உடல்கள் வர 10 நாட்களாகும் : லண்டனில் சாலை விபத்தில் மூவர் இறந்த விவகாரம்


பதிவு செய்த நாள்29ஆக
2017
22:43


காஞ்சிபுரம்: லண்டனில் விபத்துக்குள்ளாகி இறந்த, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூவரின் உடல்களை கொண்டு வர, பத்து நாட்களாகும் என, தெரிய வந்துள்ளது. விரைந்து அவர்களின் உடல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள மண்டப தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 63. இவரது மகன் மனோரஞ்சன், 35, தன் மனைவி சங்கீதாவுடன், 30, சென்னையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில், 'விப்ரோ' எனும் இந்திய நிறுவனத்தில் ஓர் ஆண்டு ஒப்பந்த பணிக்காக, மனைவி சங்கீதாவுடன் கடந்த ஜனவரி மாதம் மனோரஞ்சன் லண்டன் சென்றுள்ளார்.
லண்டனை சுற்றிப்பார்க்க தன் தந்தை பன்னீர்செல்வம், தாய் வள்ளி, அத்தை தமிழ்மணி, மாமா அறச்செல்வம் ஆகியோரை மனோரஞ்சன் அழைத்துள்ளார்.
அதன் படி, 18ம் தேதி நான்கு பேரும் லண்டன் சென்றுள்ளனர்.
மனோரஞ்சனின் அத்தை தமிழ்மணி, மாமா அறச்செல்வம் ஆகியோர் டில்லியில் வசித்துள்ளனர். லண்டன் சென்ற நான்கு பேரும், அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து வந்தனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை, 3:00 மணிக்கு, வெம்பிளே என்ற இடத்திற்கு மினி பஸ் ஒன்றில் பயணம் செய்த போது, இரண்டு கன்டெய்னர் லாரிகள் இவர்கள் சென்ற மினி பஸ் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில், மினி பஸ்சில் இருந்த பன்னீர்செல்வம், அவரது தங்கை தமிழ்மணி, 50, தங்கையின் கணவர் அறச்செல்வம், 58, ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

அதே மினிபஸ்சில் இருந்த, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேரும், மினி பஸ்சை ஓட்டிய, கேரளாவைச் சேர்ந்த, பென்னி என்பவரும் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில், மனோரஞ்சன், அவரது மனைவி சங்கீதா, பன்னீர்செல்வத்தின் மனைவி வள்ளி ஆகியோர் படுகாயமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களின் உடல்களை காஞ்சிபுரத்திற்கு கொண்டு வர, பன்னீர்செல்வத்தின் சகோதரர், சண்முகசுந்தரம், நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அதை தொடர்ந்து, உடல்களை கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அருகே திருமழிசையில் வசித்து வரும் பன்னீர்செல்வத்தின் மருமகன் சங்கரன், லண்டன் செல்ல, 'விசா' கிடைத்திருக்கிறது. உறவினர்களின் உடலையும், காயமடைந்த அனைவரையும் அழைத்து வர இன்று அவர் லண்டன் புறப்படுகிறார்.
அதுபோல, டில்லியில் வசிக்கும் தமிழ்மணியின் மகன் அருண் என்பவர், 'விசா' கேட்டு விண்ணப்பித்துள்ளார். 

லண்டனில் பணியாற்றி வரும் மனோரஞ்சனின் மனைவி சங்கீதாவின் சொந்த ஊர் குடியாத்தம். இந்த ஊரிலிலிருந்து, சங்கீதாவின் சகோதரர்களான வெங்கடசுப்ரமணியம் மற்றும் வெங்கட நாராயணமூர்த்தி ஆகியோரும் லண்டன் செல்ல, 'விசா' கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
விசா கேட்டுள்ள உறவினர்கள், லண்டன் சென்று, இறந்தவர்களின் உடலையும், காயமடைந்த உறவினர்களையும் பாதுகாப்பாக அழைத்துவர இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் சென்று உறவினர்களை மீட்டு, உடல்களை கொண்டு வர, ௧௦ நாட்கள் ஆகும் என்கின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளிப்பதால், ஒரு வாரத்திற்குள் உடல்களை கொண்டு வரலாம் என, எதிர்பார்க்கிறோம். யாரும் எதிர்பாராத நிலையில் நடைபெற்ற இந்த விபத்து வேதனையளிக்கிறது.

சண்முகசுந்தரம், பன்னீர்செல்வத்தின் சகோதரர், காஞ்சிபுரம்
கனமழையால் மிதக்குது மும்பை : முடங்கியது இயல்பு வாழ்க்கை
பதிவு செய்த நாள்29ஆக
2017
20:49



மும்பை: நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை, இரண்டு நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும், மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது, மும்பை நகர மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும், சமீபகாலமாக மழை பெய்து வருகிறது.

தலைநகர் மும்பையில், கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் துவங்கிய மழை, நேற்று காலை வரை, விடிய விடிய பெய்தது. இதனால், மும்பையின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த, 34 மணி நேரத்தில், சத்திரபதி சிவாஜி ரயில் நிலைய பகுதிகளில், 268 மி.மீ. மழையும், கலாபாவில், 218 மி.மீ., மழையும் பதிவானது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல சாலைகளில், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மும்பையின் முக்கிய போக்குவரத்தான மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது; பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
கடந்த, 2005ல் மும்பையில் பெய்த கனமழைக்கு இணையான அளவு, தற்போது மழை பெய்து வருவதாக, மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகளுக்காக, தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், மேலும், மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என, வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்தும், மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியிருப்பதாலும், அவசியமிருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும்படி, மாநில அரசும், மும்பை மாநகராட்சி யும் எச்சரித்துள்ளது. நிலைமைக்கு ஏற்ப விடுமுறை விடும்படி, நிறுவனங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மறக்க முடியாத 2005 : கடந்த, 2005, ஜூலை, 27ல், மும்பையில், 944 மி.மீ., மழை பெய்தது; இதுவே நாட்டில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை. அதற்கு முன், 1910, ஜூலை, 12ல், மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில், 838 மி.மீ., மழை பதிவானதே சாதனையாக இருந்தது.

மும்பையில், தொடர்ந்து பெய்த மழையில், 108 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர், காரில் இருந்தபோது, வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். மும்பைக்கு மிகப் பெரிய பாதிப்பை, 2005ல் பெய்த கனமழை ஏற்படுத்தியது.
பழனி, பன்னீருக்கு நடிகர் செந்தில் சவால்

பதிவு செய்த நாள்29ஆக
2017
22:20

சென்னை: ''வேட்டி கட்டிய ஆண் மகனாக இருந்தால், பதவியை ராஜினாமா செய்து, தேர்தலில் நின்று, வெற்றி பெற்று காட்டுங்கள,'' என, முதல்வர் பழனிசாமிக்கு, நடிகர் செந்தில் சவால் விடுத்துள்ளார்.

தினகரன் ஆதரவாளரான நடிகர் செந்தில், நேற்று அளித்த பேட்டி:அ.தி.மு.க., என்ற கோட்டையை, ஜெ., கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அவர் மறைவுக்கு பின்னும், நன்றாகவே இருந்தது. 

ஆனால், சகுனிகள் சிலர், அணி அணியாக பிரிந்து, கட்சியை கோமா நிலைக்கு தள்ளி விட்டனர். இதற்கு, சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர், தினகரன் தான்.ஜெயலலிதாவுக்கு ஆரம்ப கட்டத்தில், பல்வேறு அபாயங்கள் ஏற்பட்டன. அதை உடன் இருந்து பாதுகாத்தவர், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தான். தர்மயுத்தம் எனக் கூறி பணம், பதவிக்காக நடித்து, ஜெயலலிதா பெயரையே கெடுக்கின்றனர். பழனிசாமியையும், பன்னீர் செல்வத்தையும் தேர்ந்தெடுத்தது சசிகலா தான். வேட்டி கட்டிய ஆண் மகனாக இருந்தால், பழனி சாமியும், பன்னீர்செல்வமும் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
குழப்பம்!  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ளதமிழக அமைச்சர்கள் இரட்டை இலையைமீட்க யோசனை கேட்பதில் தடுமாற்றம்

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே அளித்த பிரமாண வாக்குமூலங்களை திரும்பப் பெறு வதா, வேண்டாமாஎன்பது குறித்து, டில்லியில் யாரிடம் யோசனை கேட்பது என்ற குழப்பத் தில், தமிழக அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்.





கட்சிக்குள் ஏற்பட்டுள்ளஉச்சகட்ட குழப்பத்தை அடுத்து, இரட்டை இலைச் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்பதில், அ.தி.மு.க.,வின் இரு அணியினரும், தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்ட துவங்கியுள்ளனர். தமிழகத் தில், அ.தி.மு.க., வில், தினமும் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தேர்தல் ஆணை யத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., என்பது, இன்னும் இரண்டு அணிகளாகவே பார்க்கப்படுகிறது.

சசிகலா தலைமையிலான அம்மா அணி, மற்றொன்று, பன்னீர்செல்வம் தலைமையி லான புரட்சித்தலைவி அம்மா அணி. ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின்போது, இப்படித்தான், இரு தரப்பையும்அங்கீகரித்திருந்தது, தேர்தல் ஆணையம்.

இருவருமே எதிர்ப்பு

இருதரப்புமே, தாங்கள்தான் உண்மையான, அ.தி.மு.க., என்பதை நிரூபிக்க, லட்சக்கணக் கில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. அவை அனைத்துமே, தேர்தல்ஆணையத்தின், 'அண்டர்கிரவுண்ட்' வளாகத்தில் காகித மூட்டை களாக குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் தான், பழனி சாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. இதன்பின், ஓரளவுக்கு நிலைமை சரியாகும் என நினைத்ததற்கு பதிலாக, குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

துவக்கத்தில், பழனிசாமி, சசிகலாவை ஆதரித் தார்; பன்னீர்செல்வம் எதிர்த்தார். இப்போது நிலைமை மாறி, இருவருமே சசிகலாவை எதிர்க்கின்றனர்.'இரு தரப்பும் இணைந்ததை அங்கீகரிப்பதா வேண்டமா; இவர்கள் கூட்டும் பொதுக்குழு சட்ட ரீதியிலானதா' என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தபின் தான், நிஜமான, அ.தி.மு.க., யார் என்ற

கேள்வியே எழும்.மேலும், தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை,இந்த மூன்று தரப்பை தவிர, நான்காவது தரப்பும் உள்ளது; அது தான் தீபா தலைமையிலான அணி.

பிரச்னை துவங்கியதில் இருந்தே, தீபாவும், தன்னை ஒரு தரப்பாக, தேர்தல் ஆணையத்தில் சேர்த்துள் ளார். எனவே, சட்ட ரீதியில், இவ்வளவு பிரச்னை களுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் எடுக்கப் போகும் முடிவை, யாரும் அவ்வளவு எளிதாக கணித்துவிட இயலாது.

இந்த சூழ்நிலையில்தான், நேற்று தமிழக அமைச்சர் கள்,ஜெயகுமார், சண்முகம், தங்கமணி மற்றும் மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் டில்லி வந்தனர்.தேர்தல் ஆணையத்திற்கு செல்லப் போகின்றனர் என்ற செய்தி பரவிய நிலையில், திடீர் திருப்பம் நடந்தது. இவர்கள் அனைவரும், மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமனைச் சந்தித்தனர். அந்த ஆலோ சனைக்கு பின், நேராக, பார்லிமென்ட் விரைந்தனர்.

அங்கு, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உட்பட அனைவரும் ஆலோசித்தனர். கீரியும், பாம்பு மாக, பேட்டிகள் தந்து கொண்டிருந்த நிலையில், நீண்டநாட்களுக்கு பின், தம்பிதுரை, ஜெயகுமார் ஆகியோரோடு, மைத்ரேயனையும் பார்த்து, பலரும் ஆச்சரியப்பட்டனர்.

முடிவெடுக்க கூடாது

இருப்பினும், 'பிரமாணபத்திரங்களை தற்போதைய சூழ்நிலையில் வாபஸ் வாங்கினால், அது சசிகலா தரப்புக்கு ஆதரவாக திரும்பலாம்' என, சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.எனவே, இதுகுறித்து அரசியல் ரீதியான ஆலோசனைகளைப் பெறவே, மத்திய அமைச்சர்களை, அ.தி.மு.க.,வினர் சந்தித்த தாக தெரிகிறது.இந்த விஷயம் தொடர்பாக, யாரிடம் ஆலோசிப்பது என்ற தடுமாற்றம், தமிழக அமைச்சர் களிடம் உள்ளது.

இதற்கிடையே, தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தியும், முன்னாள் எம்.பி., அன்பழகனும், தேர்தல் ஆணையம் வந்தனர். இவர்கள், 'எங்களைக் கேட்காமல், இரட்டை இலைச் சின்னம் உட்பட, தற்போதுள்ள பிரச்னை குறித்து முடிவெடுக்க கூடாது' என,தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து விட்டுச் சென்றனர்.

தீவிரம் ஏன்?


தமிழக அமைச்சர்கள், டில்லியில் முகாமிட்டுள்ளது குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் கிடைத்து விட்டால், தினகரன் அணியில் உள்ளவர்கள், தங்கள் பக்கம் வந்து விடுவர் என, முதல்வர் பழனிசாமியும்,

துணை முதல்வர் பன்னீர்செல்வமும் நினைக்கின்றனர்.

பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாதென, தேர்தல் கமிஷன் அறிவித்தால், தினகரன் நியமனமும் செல்லாததாகி விடும்; கட்சிக்கும், சசிகலா குடும்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலை உருவாகி விடும் என்பது, இவர்களது நம்பிக்கை.இதனால், தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி, இரட்டை இலை சின்னத்தை மீட்பதில், தமிழக அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இவ்வாறு அரசியல்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெட்லியுடன் சந்திப்பு

நேற்று மாலை, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லியை, அ.தி.மு.க.,வினர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின், நிருபர்களிடம் பேசிய, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ''தமிழகத்திற்கு கூடுதல் நிதி கேட்டு நிதியமைச்சரை சந்தித்தோம்,'' என்றார்.'

'கையில் ஒரு பேப்பரைக் கூட எடுத்து செல்லா மல், கூடுதல் நிதி கேட்டு, நிதி அமைச்சரை சந்தித்ததாக கூறுகிறீர்களே' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். டென்ஷனான, தம்பிதுரை, ''கோரிக்கை மனுக்களை எல்லாம், முன்பே கொடுத்தாகி விட்டது,'' என்றார்.

'மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்' என, நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த தம்பிதுரை,''அவர், வர்த்தக துறை அமைச்சர்; அதனால், அவரை சந்தித்தோம்,'' என்றார்.இதற்கிடையே, செய்தி யாளர்களிடம் பேசிய, அமைச்சர் ஜெயகுமார், ''எங்களை பார்க்க, தேர்தல் ஆணையர், நேரம் ஒதுக்கவில்லை என, ஊடகங்களில் தகவல், தவறானது; அப்படி எதுவும் இல்லை,'' என்றார்.

- நமது டில்லி நிருபர் -
புளுவேல்' விளையாட்டில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள் !

பதிவு செய்த நாள்29ஆக
2017
22:34

சென்னை:''உயிர் பலி வாங்கி வரும், 'புளூவேல்' ஆன் - லைன் விளையாட்டில், குழந்தைகள் சிக்கி விடாமல் இருக்க, பெற்றோர், ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர், செந்தில்குமார் கூறியதாவது:ரஷ்யாவில், 2013ல், அறிமுகப்படுத்தப்பட்ட, 'புளூ வேல்' எனப்படும், ஆன் - லைன் விளையாட்டு, உலகம் முழுவதும் பரவி உள்ளது. தற்போது, இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளுக்கு, அதிகாலை, 4:20 மணிக்கு எழுந்து நடக்க வேண்டும்; உயரமான மொட்டை மாடியில் நிற்க வேண்டும்.கத்தி மற்றும் பிளேடால், திமிலங்கம் போன்று கை, கால்களில் வரைய வேண்டும் என, 50 விதமான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இறுதியாக, தற்கொலை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்த விளையாட்டில் சிக்கி, குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள், பலியாகி வருகின்றனர். சென்னையில், இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனினும், புளூவேல் ஆன் - லைன் விளையாட்டில், குழந்தைகள் சிக்கி கொள்ளாமல் இருக்க, பெற்றோர் மற்றும் பள்ளிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.குழந்தைகளை உளவியல் ரீதியாக அணுகி, அவர்களுடன் மனம் விட்டு பேசினால், இந்த விபரீத விளையாட்டில் இருந்து மீட்டு விடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
இலவச, 'லேப் - டாப்' திட்டம்.  தமிழகத்தில் மீண்டும் துவக்கம்
தமிழகத்தில், நிறுத்தப்பட்டிருந்த இலவச, 'லேப் - டாப்' வழங்கும் திட்டம், மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் , பயிலும், மாணவ மாணவியருக்கு, இலவசமாக 'லேப் -- டாப்' வழங்கப்படுகிறது. 2016 வரை, 40 லட்சம், 'லேப் - டாப்'கள் வழங்கப்பட்டன. கடந்த, 2016ல், இந்த வினியோகம்,திடீரென நிறுத்தப்பட்ட தால், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட, மாணவ மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, இந்த பணி மீண்டும் துவக்கப்பட்டுஉள்ளது.

இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: டெண்டரில் பங்கேற்ற நிறுவனம் ஒன்று, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் ததால், 2016ல், மாணவ மாணவியருக்கு, 'லேப் - டாப்' வழங்க முடியாமல் போனது. தற்போது, அந்த வழக்கு முடிந்துவிட்டது. அதனால், 'லேப் - டாப்' வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு  வழங்குவதற்கான, 'லேப் - டாப்' விரைவில் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். -- நமது நிருபர் -
நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் மழையால் இன்று ரத்து

பதிவு செய்த நாள்29ஆக
2017
21:23

சென்னை: பலத்த மழையால், சென்னை சென்ட்ரல் - நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பலத்த மழையால், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் ரயில் பாதைகளில், வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து, மேற்கு வங்க மாநிலம், நியூ ஜல்பைகுரிக்கு, இன்று காலை, 11:00 மணிக்கு இயக்கப்பட வேண்டிய, எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
'குரூப் - 4' பதவி: செப்., 4ல் கவுன்சிலிங்

பதிவு செய்த நாள்29ஆக
2017
21:23

சென்னை: 'குரூப் - 4 தேர்வில், தட்டச்சர் பதவிக்கு, செப்., 4 முதல், கவுன்சிலிங் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசு துறைகளில், குரூப் - ௪-ல் அடங்கிய, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, 2016 நவ., 6ல், எழுத்துத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, பிப்., 21ல் வெளியானது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, செப்., 4 - 6 வரை, கவுன்சிலிங் நடத்தப்படும்.

செப்., 4ல், ஓணம் பண்டிகைக்காக, சென்னை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், திட்டமிட்டப்படி அன்று கவுன்சிலிங் நடக்கும். கவுன்சிலிங்குக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டு உள்ளது. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'ஆதார் - பான்' இணைக்க நாளை கடைசி நாள்

பதிவு செய்த நாள்29ஆக
2017
21:15

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோர், 'ஆதார்' எண்ணை, 'பான் கார்டு' எண்ணுடன் இணைப்பதற்கான, அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. நடப்பு ஆண்டில், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், 'பான்' எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. வருமான வரி இணையதளத்தில், அதற்கான வசதிகள் செய்யப்பட்டன. ஒரே நேரத்தில், ஏராளமானோர் இணைக்க முயன்றபோது, இணையதளம் முடங்கியது. அதனால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான, ஜூலை, 31க்குள், பலர் அதை செய்ய முடியவில்லை. 

அதைத் தொடர்ந்து, இரு எண்களையும் இணைப்பதற்கான அவகாசம், ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டது. அது, நாளையுடன் நிறைவடைகிறது. அதன்பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.

என்ன செய்யலாம்? : இதுவரை இணைக்காதோர், 'income taxindiaefiling.gov.in' என்ற இணையதளத்தில், 'linkaadhaar' என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், 'கிளிக்' செய்து, அதில் கூறப்பட்டுள்ள வகையில், இரு எண்களை இணைக்க முடியும்.
இதுபோல், மொபைல் போனில், UIDPAN என முதலில், 'டைப்' செய்து, சிறிது இடைவெளி விட்டு, ஆதார் எண், மீண்டும் இடை வெளிவிட்டு, பான் எண் ஆகியவற்றை, 'டைப்' செய்து, 567678 அல்லது, 56161 ஆகிய எண்களுக்கு அனுப்பினால், இணைக்க முடியும்.

- நமது நிருபர் -
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : 50 லட்சம் பேருக்கு தாமதம்

பதிவு செய்த நாள்29ஆக
2017
21:12




ரேஷன் ஊழியர்கள் அலட்சியத்தால், 50 லட்சம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்குவது தாமதமாகி வருகிறது. தமிழகத்தில், 1.92 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. மத்திய அரசின், 'ஆதார்' எண் விபர அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்க, அரசு முடிவு செய்தது. 

அதன்படி, ஏப்ரல் முதல், காகித ரேஷன் கார்டுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை, 1.42 கோடி குடும்பங்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் வாங்கிய ஆதார் விபரங்களில், புகைப்படம் தெளிவாக இல்லாததுடன், பிழைகளும் இருந்தன. அந்த கார்டுகளின் விபரம், ரேஷன் கடைகளில் உள்ளது. 

கடை ஊழியர்கள், அந்த கார்டுதாரர்களை அழைத்து, சரியான விபரங்களை பெறுமாறு, உணவு துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், பல ஊழியர்கள், அந்த பணியை செய்யவில்லை. 

இதனால், 50 லட்சம் பேருக்கு, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து விபரங்களையும் சரியாக வழங்கி விட்டதால், கார்டு வந்து விடும் என, யாரும் காத்திருக்க வேண்டாம். ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்கள், தாங்கள் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்; அங்கு, பிழை திருத்த பட்டியலில், தங்களின் பெயர் இருக்கிறதா என்பதை பார்த்து, சரியான விபரங்களை வழங்க வேண்டும். அங்கு பெயர் இல்லை என்றால், கடை ஊழியரிடம் முகவரி கேட்டு, உணவு வழங்கல் உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு, தன் கார்டின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். சரியான பதில் கிடைக்கவில்லை எனில், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
எம்.பி.பி.எஸ்., சேர்க்கை தாமதம் : கூடுதல் வகுப்புகள் தேவையா?

பதிவு செய்த நாள்29ஆக
2017
20:39

கோவை: ''எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கூடுதல் வகுப்புகளை நடத்த தேவை இருக்காது,'' என, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ தெரிவித்தார்.

'நீட்' தேர்வு குழப்பத்தால், தமிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கான, கலந்தாய்வு நடவடிக்கைகள் இந்தாண்டு தாமதமாகின. வழக்கமாக, மருத்துவ மாணவர்களுக்கு, ஆக., முதல் வாரத்தில், முதலாமாண்டு வகுப்புகள் துவங்கும். ஆனால், தற்போது வரை மாணவர் சேர்க்கை முடியவில்லை. இதனால், நடப்பாண்டில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதில் சிரமம் ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது: கலந்தாய்வு நடந்து, உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும். உச்ச நீதிமன்றம், 31க்குள் கவுன்சிலிங்கை முடித்து, செப்., 1 முதல் வகுப்புகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டில் முதலாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு உடற்கூறியல், தலை மற்றும் கழுத்து, நரம்பு மண்டலம் ஆகிய பாடங்களுக்கு செய்முறை மற்றும், 'தியரி' வகுப்புகளுக்கு, 650 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோர்ட் உத்தரவால், வகுப்புகள், 4ம் தேதி முதல் துவங்கும். இதை ஒப்பிட்டு பார்க்கும்போது, கூடுதல் வகுப்புகளுக்கு தேவையிருக்காது. மாணவர்களுக்கான வகுப்புகளுக்கு போதுமான அளவு கால அவகாசம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ கவுன்சிலிங் செப்., 7 வரை நீட்டிப்பு

பதிவு செய்த நாள்29ஆக
2017
23:02

புதுடில்லி: தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வின் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தும் அவகாசத்தை செப்., 7 வரை நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்காக, நீட் நுழைவுத் தேர்வுநடத்தப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதில், தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், ஆக., 31 வரை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தன்னாட்சி அந்தஸ்து பல்கலைகளில், 5,500 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, இதுவரை எந்த கல்லுாரி அல்லது பல்கலையில் சேருவதற்கும் வாய்ப்பு கிடைக்காதவர்களை, தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கான கவுன்சிலிங் நடத்துவதற்கான காலக்கெடு, செப்., 7 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கால நீட்டிப்பு, தன்னாட்சி பல்கலைகளுக்கு மட்டுமே; மற்றவர்களுக்கு கால நீட்டிப்பு கிடையாது.

தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை, கவுன்சிலிங்கை நடத்தும் மருத்துவ சேவைகளுக்கான டைரக்டர் ஜெனரல் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அந்தத் தகவல்களை, தன்னாட்சி பல்கலைகளுக்கு, இ - மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

இதன் மூலம், இதுவரை கல்லுாரிகளில் சேருவதற்கு வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு, மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
'டிஜிட்டல்' பண பரிவர்த்தனைக்கு மாறுங்க! : கல்லூரி, பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவு
பதிவு செய்த நாள்30ஆக
2017
02:13




'அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், கல்வி கட்டணம் உட்பட, அனைத்து பணப் பரிவர்த்தனைகளிலும், 'டிஜிட்டல்' முறையை பின்பற்ற வேண்டும்' என, மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய மனிதவள அமைச்சக கட்டுப்பாட்டில் செயல்படும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சார்பில், அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

அதன் விபரம்:

அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும், பணப் பரிவர்த்தனையை, டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை, கட்டாயம் பின்பற்ற வேண்டும்

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் வசூல், வணிக நிறுவனங்களுக்கான செலவுகள், ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளம் மற்றும் செலவுகள் என, அனைத்து வகையான நிதி பரிவர்த்தனையும் ரொக்கமாக மேற்கொள்ளக் கூடாது

அனைத்து மாணவர்களும், விடுதி கட்டணம், உணவு கட்டணத்தை, டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும். இதற்கு, 'ஆன் - லைன்' வங்கி முறை, வங்கி பரிவர்த்தனை அட்டையான, 'டெபிட், கிரெடிட்' கார்டு மற்றும் 'பிம் மொபைல் ஆப்' போன்ற முறைகளை பயன்படுத்தலாம்

இதற்காக, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், பொறுப்பு அதிகாரியை நியமித்து, டிஜிட்டல் முறை குறித்து, நிறுவன விதிகள் வகுக்க வேண்டும். இது குறித்து, ugc.ndpm@gmail.com என்ற, இ - மெயிலில் அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஒரிஜினல் லைசென்ஸ்:ஐகோர்ட் கண்டிப்பு!
சென்னை:'வாகனங்களை ஓட்டும்போது, 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருப்பதில், என்ன பிரச்னை உள்ளது?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 'அனைவரும் அசல் உரிமம் அவசியம் வைத்திருக்க வேண்டும்' எனவும், நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.



தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், 'வாகனங்கள் ஓட்டுபவர்கள், செப்., ௧ முதல், அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும்' என கூறிஇருந்தார்.

பட்டியலிடப்படவில்லை

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி மனு தாக்கல் செய்தார். மனு, விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை . மனுவை அவசரமாக விசாரிக்கும்படி,தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், ராமசாமி கோரினார். அதற்கு நீதிபதிகள், 'விசாரணைக்கென பட்டியலிடும்போது, வழக்கை விசாரிக்கிறோம். 'அசல் உரிமத்தை வைத்துக் கொள்வதில், என்ன பிரச்னை உள்ளது? அசல் உரிமம், அவசியம் வைத் திருக்க வேண்டும். இந்த விஷயத்தில், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை' என்றனர்.

இதற்கிடையில், 'அசல் உரிமம்வைத்திருக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது' என, அரசுக்கு உத்தர விடக் கோரி, அஸ்வின் என்பவர் தாக்கல் செய்த மனு:அசல் உரிமத்தை வைத்திருப்பதில், அசவுகரி யங்கள் உள்ளன. அசல் உரிமம் இல்லை என்றால் அபராதம் விதிப்பதாக, அமைச்சர் கூறியுள்ளார்.

மோட்டார் வாகன சட்டத்தில், உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று தான் உள்ளது. அசல் உரிமம் பற்றி எதுவும் கூறப்படவில்லை. அசல் உரிமத்தை வைத் திருப்பதற்கும், சாலை விபத்துகள் குறைவ தற்கும், எந்த சம்பந்தமும் இல்லை.விபத்து ஏற்பட்டாலோ, போக்குவரத்து விதிகள் மீறப்பட் டாலோ, வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்யலாம்.

வாகனத்தின் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், முகவரி போன்ற அனைத்து விபரங்களையும், போக்குவரத்து போலீசார்சேகரிக்க முடியும். சம்பந் தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகவும்,குற்றத்தை ஒப்புக் கொண்டால், அபராதம் விதிக்கவும் முடியும்.

15 நாட்கள்:

எனவே, பயணத்தின்போது, அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை. உரிமத்தை தொலைத்து விட்டால், அதை திரும்ப பெறுவதற்குள், ஏகப்பட்ட கஷ்டங்கள்

அனுபவிக்க வேண்டி வரும். 'டூப்ளிகேட்' உரிமம் பெறுவதற்கு, 15 நாட்கள் ஆகி விடும். அமைச்சரின் அறிவிப்பு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வழி வகுக்கிறது. மாநில அரசுக்கு விதிமுறைகளை வகுக்க, மத்திய மோட்டார் வாகன சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

அதே நேரத்தில், மத்திய சட்டத்திற்கு முரணாக, விதிகளை கொண்டு வர முடியாது. அமைச்ச ரின் அறிவிப்பை அமல்படுத்தக் கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.அசல் ஓட்டுனர் உரிமம் தொடர்பான வழக்கு,

இந்த வார இறுதியில் விசாரணைக்கு வரும் என்றும், இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், உயர் நீதிமன்றம், எழுத்துபூர்வமான உத்தரவை பிறப்பிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில்
வெளி மாநில மாணவர்கள் சேரவில்லை'

சென்னை: ''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கையில் ஒருவர் கூட, வெளி மாநிலத்தை சேர்ந்தவர் இல்லை,'' என, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறினார்.





தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், கேரளாவைச் சேர்ந்த ஒன்பது பேர், இரண்டு இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்து, மோசடி செய்துள்ளதாக, அரசு வழக்கறிஞர்,
அஜ்மத் அலி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறி னார். அதேபோல், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 1,000மாணவர்கள் போலி சான்றிதழ் வழங்கி உள்ள தாக, விக்னயா என்பவரும் புகார் அளித்துள் ளார். மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில், மோசடி நடந்துள்ளதாக, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களிலும், தகவல்கள் பரவி வருகின்றன.

இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறியதாவது:

வெளி மாநிலங்களை பூர்வீகமாக கொண்டு, தமிழ கத்தில் வாழ்ந்து, ரேஷன் கார்டு, வாக்காளர் அடை யாள அட்டை போன்றவற்றை,இங்கு பெற்றுள் ளோர், தமிழகமருத்துவ கல்லுாரிகளில் சேர விண் ணப்பிக்கலாம்.

அதன்படி, 1,500 பேர் விண்ணப்பித் துள்ளனர். இவர்கள், பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில் மட்டுமே பங்கேற்க முடியும். அவர்களில், 28 பேர், மருத்துவ
கல்லுாரிகளில் இடங்களை பெற் றுள்ளனர். இடம் பெற்ற அனைவரும், தமிழகத்தில் படித்த வர்கள்; வெளி மாநிலத்தவர்கள் இல்லை. போலி இருப்பிட சான்றிதழ் பெற்று யாருக்கும், 'சீட்' கொடுக்கவில்லை. மாணவர்கள் அளிக்கும் சான்றிதழ்களுக்கு, உறுதிமொழி கடிதம் பெறுகி றோம். சான்றிதழ் போலி என கண்டறியப்பட் டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, August 29, 2017


Blue Whale game claims life of 13 year old in Hamirpur district of Uttar Pradesh

The fatal online Blue Whale game has claimed its first victim in Uttar Pradesh's Hamirpur district, police said on Monday.

By: IANS | Lucknow | Published: August 28, 2017 10:23 AM



According to the family, Parth had been playing Blue Whale game from the past few days. (ANI)

The fatal online Blue Whale game has claimed its first victim in Uttar Pradesh’s Hamirpur district, police said on Monday. Parth Singh, 13, was found hanging in his bedroom in Maudaha village on Sunday night. The police said the class sixth student had his father’s phone on his hand in which the game, that directs the player to commit suicide after 50 challenges, was on when the body was taken down.

According to the family, Parth had been playing Blue Whale game from the past few days. When he was asked not to play, he started using his father’s mobile phone when he was not around or sleeping. On Sunday evening, Parth was supposed to attend a friend’s birthday party but instead locked himself in the room. An only child, when he did not open the door, his father Vikram Singh, broke open the door and found him hanging. Maudaha circle officer (CO) Abhishek Yadav told IANS the suicide seems to have been triggered by the blue whale game and a probe is underway. “We are sending IT experts to go through the mobile records and history,” he added. The Director General of Police Sulkhan Singh, in a letter to all district police chiefs had asked for complete compliance to the order of the Union Government banning the dangerous game.

200 INDIAN STUDENTS CAUGHT IN HOUSTON FLOODING BEING EVACUATED

Monday, 28 August 2017 | PTI | Houston/New Delhi



At least 200 Indian students stranded at the University of Houston due to "catastrophic" flooding after Hurricane Harvey hit Texas were being evacuated to safer places, authorities said today.

The students were being provided food and other supplies by the Indian-American community in the area.

India's Consul-General in Houston Anupam Ray has been in touch with the students and monitoring the evacuation process.

In New Delhi, External Affairs Minister Sushma Swaraj said two Indian students, Shalini and Nikhil Bhatia, have been admitted to the Intensive Care Unit (ICU).

"@CGHoust has informed me that 200 Indian students at University of Houston are marooned. They are surrounded by neck deep water," she tweeted.

The Indian side made efforts to deliver food but the US Coast Guard did not allow them as boats were required for rescue operations, Swaraj said in a series of tweets.

She said the MEA was ensuring that the relatives of the hospitalised students reach the health facility at the earliest.

"Mr Anupam Ray our CG (Consul General) Houston is organising the rescue operations," she tweeted.

Harvey, the most powerful hurricane to hit the US in 13 years, has left a trail of destruction as it swept through Texas after making landfall on Saturday, pummelling the region with heavy rains and claiming at least five lives.

The National Weather Service of the US has called the flooding in Texas "unprecedented". "Catastrophic flooding is now underway and expected to continue for days," the service said in a statement.

Sewa International Houston - along with several other Indian-American community organisations - have teamed up to provide food and shelter to the affected people.

Major Indian organisations such as the India Cultural Centre, the India House, the Indo-American Charity Foundation and the Indo-American Political Action Committee have decided to coordinate their relief efforts through Sewa International.

Indian businesses and places of worship were providing shelter to displaced families. Indian restaurants were giving food packets to the people hit by the catastrophic flooding.

Gitesh Desai, Sewa International's president, said Houston residents were "staying strong through the crisis".
UGC approves plan for graded autonomy to edu institutions


Universities will be exempt from UGC’s regular inspections

alt KRITIKA SHARMA | Updated: Aug 25, 2017, 08:15 AM IST, DNA


Universities either accredited by NAAC with a score of at least 3.5 or ranked in the top 50 institutions of National Institutions Ranking Framework for two consecutive years will be under the ‘Category I’

The University Grants Commission (UGC) on Thursday approved the plan to grant graded autonomy to institutions on the basis of their performance. This means that the institutions performing extremely well will be completely free of government control and the poor performers will get least autonomy.

The plan was approved by members of UGC in a meeting held on Thursday, where secretary higher education and other members of the council were present. "Discussion on graded autonomy was one of the main points on the meeting agenda. The council members decided to go ahead with the plan and include suggestions that are received on this from public on framing of the guidelines," a council member present in the meeting told DNA.

The Ministry of Human Resource Development has received a number of suggestions on the UGC portal and on the basis of that, guidelines will be framed in the coming days.

According to the plan, UGC-recognised public, private and deemed universities will be divided into three categories, and according to those categories, each institute will be awarded different degrees of autonomy.

Universities either accredited by NAAC with a score of at least 3.5 or ranked in the top 50 institutions of National Institutions Ranking Framework (NIRF) for two consecutive years will be under the 'Category I'. Universities under this category will be free to start a new course.
ELIGIBILITY RULES

Universities either accredited by NAAC with a score of at least 3.5 or ranked in the top 50 institutions of National Institutions Ranking Framework (NIRF) for two consecutive years will be under the ‘Category I’.


Bengal CID saves engineering student from jaws of Blue Whale


A CID officer concealed his identity and befriended the student on social media and started chatting with him, eventually weaning him away from the lethal attraction.KOLKATA Updated: Aug 28, 2017 14:42 IST

Sumanta Ray Chaudhuri 

Hindustan Times

The student was saved by deft handling of the situation by the college authorities and the CID officers.(HT Photo)
A student of an engineering college in West Bengal was saved from the grip of Blue Whale by Criminal Investigation Department (CID) officers, who counselled him, eventually weaning him away from the lethal online game.

According to CID sources, the registrar of B B Institute of Technology contacted a senior CID officer a few days ago and informed that the behaviour of a student of the institute has become suspicious.

Read: The 50 tasks of fatality: Is Blue Whale Challenge really killing youngsters in India?

“I was heading towards a blunder. Fortunately, I was stopped on my tracks. I thank the police officer who saved me posing as a cyber friend,” the student told the media.

On August 13, a 15- year old student committed suicide at Anandapur town in West Midnapore district. It was suspected he was prompted by the lethal online game to take his life. (HT Photo)

This is the latest in a string of cases reported from across India of deaths or suicide attempts linked to the online game, first developed in Russia.

On August 13, a 15- year old student, Ankan Dey, committed suicide at Anandapur town in West Midnapore district. It was suspected he was prompted by the lethal online game to take his life.

Read: Parents can track whether their children are fishing for Blue Whale: Here’s how

The registrar of the engineering institute told the CID sleuth that he suspected the change in behaviour might be the effect of the online menace. The sleuths also learnt from the authorities that a tattoo of Blue Whale was imprinted on the hand of the student.

The cyber cell of CID responded immediately. An inspector of the cell befriended the student through a social networking site and starting talking to him without revealing his identity.

In course of conversation, the student confessed to the sleuth that he was already in level eight of the game and he had to slash his arm once. “The student also confessed that he was preparing to inflict more such wounds on his hands in the subsequent level,” a CID officer said.

Despite this confession, the CID team did not lose patience, or inform his parents. The inspector kept on chatting with the student and counselling him about the eventual fate of the game.

“Finally, our officers were able to convince him that this game is nothing but a death trap. After the student was convinced about its pernicious effect, his parents were informed. Now everyone is happy. They have thanked us for our effort,” the CID official said.
Parents upset about MBBS, BDS mop-up round

DH News Service, Bengaluru, Aug 29 2017, 2:38 IST



Students who had already been allotted medical seats in the second round were not allowed to take part in this round. DH

Many parents have cried foul at the mop-up round that concluded on Monday to fill vacant MBBS and BDS seats.

Students who had already been allotted medical seats in the second round were not allowed to take part in this round. But those who were allotted dental seats were allowed to try for medical seats. Parents of medical aspirants were upset that seats in better colleges were being given to students with lower ranks.

“My daughter got an all-India rank of around 78,000 but she could not get a seat in MS Ramaiah Medical College. She got admission in a different college in the city but we would have preferred MS Ramaiah. Now they are giving away these seats to students having ranks beyond one lakh. How fair is it to meritorious students?” the parent asked.

A total of 757 medical and 683 dental seats were available for allotment in the mop-up round.

“If there were only a handful of seats left for the mop-up round, it would have been okay. But here, over 1,000 seats were left. They should have conducted a third round,” another parent said.

The parents also demanded why the round was being conducted offline. “They could have made a facility to conduct it online, as they did the other rounds. There is so much chaos here. It’s difficult to even enter the gate,” a third parent said.

The Department of Medical Education clarified that it was just following the rules. “It’s a policy decision of the Central government that whoever has already been allotted seats cannot take part in the mop-up round. We are just following that. Further, there is a Supreme Court ruling that says there can only be two rounds after which only a mop-up round can be conducted,” Dr S Sachidananda, director, medical education, explained.

Some parents are now considering legal remedies and may approach the high court.
இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக வாசகர் எஸ்.அன்பழகன் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து பல்வேறு பணியின் காரணமாக, முன்பை விட தற்போது அதிக அளவிலான மக்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். ஆனால், விமான நிலையத்தை இணைக்கும் வகையில் விரைவு ரயில் வசதி இல்லை. விரைவு ரயில்கள் மூலம் வருவோர் தாம்பரம் அல்லது எழும்பூர் ரயில் நிலையங்களுக்குச் சென்று பிறகு மின்சார ரயில் மூலம் விமான நிலையத்துக்கு வரவேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதனால், பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சென்னை விமான நிலையம் அருகே திரிசூலம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் என்று அறிவித்தது. இதற்கான கட்டமைப்பு பணிகளும் நடந்து கொண்டிருந்தன. ஆனால், அத்திட்டம் திடீரென நிறுத்தப்பட்டது. இது, விரைவு ரயில்களில் வந்து, விமான நிலையத்துக்கு வருவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, அனைத்து விரைவு ரயில்களையும் இங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘விரைவு ரயில்களின் புதிய நிறுத்தம் குறித்து நாங்கள் முடிவு எடுக்க முடியாது. இது தொடர்பாக ரயில்வே வாரியத்துக்கு ஏற்கெனவே கோரிக்கை அனுப்பியுள்ளோம்’ என்றார்.

மருத்துவ போலி இரட்டை இருப்பிடச் சான்றிதழ் குறித்து சிபிஐ விசாரணை தேவை: ஆளுநருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

Published : 28 Aug 2017 19:26 IST

சென்னை


இரட்டை இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றுள்ள விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், '' 'இரட்டை இருப்பிடச் சான்றிதழ்கள்' மூலம் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசு திணித்த நீட் தேர்வு மூலம் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக மாணவர்களுக்கு, மாநிலத்தில் உள்ள அதிமுக அரசின் சார்பில், அமைச்சர் விஜயபாஸ்கரின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள மெரிட் லிஸ்ட் முறைகேடுகளால், மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களின் மருத்துவக் கனவு இதன்மூலம் அடியோடு தகர்க்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்குவது பற்றி தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளன. இருப்பிடச் சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரி கொடுத்து, அதை சம்பந்தப்பட்ட மாணவர் வசிக்கும் தாலுகாவின் தாசில்தார்தான் இறுதியாக கையெழுத்திட்டு வழங்க வேண்டும். அப்படி வழங்கும்போது, அந்த மாணவரின் பெற்றோர் இருப்பிடம் தொடர்ந்து 5 வருடங்கள் தமிழகத்தில் இருந்துள்ளதா என்பதை பாஸ்போர்ட், ரேஷன் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் மூலம் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக, தமிழ் மொழி பேசாத மாணவர்களுக்கு 'இருப்பிடச் சான்றிதழ்' வழங்கும்போது, அதிகாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அட்மிஷன் வழிகாட்டுதல்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்படியிருந்தும், எப்படி இரட்டை இருப்பிடச் சான்றிதழ்கள் பெறப்பட்டன? தாசில்தார்களை மிரட்டி, இதுபோன்ற சான்றிதழ்களைக் கொடுக்க வைத்தது யார்? என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்தச் சான்றிதழின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான மெரிட் லிஸ்டை வெளியிட்ட போது, அந்தத் தகுதிப் பட்டியலைத் தயாரிக்கும் தேர்வு கமிட்டியின் உறுப்பினர்களும், செயலாளரும் ஏன் போதிய கவனம் செலுத்தவில்லை? 'இரட்டை இருப்பிடச் சான்றிதழ்' அளித்த வெளிமாநில மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப் பட்டியலைத் தேர்வு கமிட்டி ஏன் கண்ணை மூடிக்கொண்டு தயாரித்தது? தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு நிர்வாக ஒதுக்கீட்டில் மட்டும் 900த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 'இரட்டை இருப்பிட சான்றிதழுடன்' எப்படித் தேர்வு செய்யப்பட்டார்கள்? இதுபோன்றச் சான்றிதழ்களை வைத்து தேர்வுசெய்ய தேர்வு கமிட்டிக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு என்ற அடிப்படையில் உள்ள 3382 இடங்களில், சிறப்புப் பிரிவுகளான விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு அளிக்கப்பட்டுள்ள இடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை என்றும், அந்த இடங்கள் எல்லாம் பொதுப்பிரிவில் இருப்போருக்கு சென்றுவிட்டன என்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது.
திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இஸ்லாமிய சமுதாயத்திற்கான உள் இட ஒதுக்கீட்டின்படி தன் மகளுக்கு சீட் கிடைக்கவில்லை என்றுகூறி, 'இரட்டை இருப்பிட சான்றிதழ்' அளித்து, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்களை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக இருக்கும் அம்ஜத் அலி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். போலி 'இரட்டை இருப்பிடச் சான்றிதழ்' அளித்தோர் பற்றி விசாரிக்க சுகாதாரத்துறை மூலமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. ஆனால், அரசு சுகாதாரத்துறையின் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் வெறும் கண் துடைப்பாக மாறி விடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
கிராமப்புற மாணவர்கள், விளையாட்டுப் பிரிவில் சாதனைகள் படைத்த மாணவர்கள், 4 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் எதிர்காலத்தை பாழடித்து, போலி 'இரட்டை இருப்பிடச் சான்றிதழ்' மற்றும் முறைகேடான தேர்வு மூலம் வேறு மாநிலத்தவரை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களில் சேருவதற்கு அதிமுக அரசு துணை போயிருப்பது கண்டனத்திற்குரியது.
போலி 'இரட்டை இருப்பிடச் சான்றிதழ்' வழங்கினால், அந்த மாணவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ இடம் ரத்து செய்யப்பட்டு, மாணவர் மீதும் அவரது பெற்றோர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி சேர்க்கை (PROSPECTUS) விதி 3(h)-ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியில் சேருவதற்கு ஒரு கோடி ரூபாய் வரை விலை போகிறது என்ற நிலையில், அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரும் மாணவருக்கு வருடாந்திர கட்டணம் ரூ13,600 என்றும், பி.டி.எஸ் மாணவருக்கு கட்டணம் ரூ11600 என்றும் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுவதற்கு வசதியாக இப்படி போலி 'இரட்டை இருப்பிடச் சான்றிதழ்' கொடுத்தவர்கள் தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்களோ என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.
ஒரு மெடிக்கல் சீட் வெளியில் ஒரு கோடி ரூபாய் என்று எடுத்துக் கொண்டால், இப்படி இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் 'தகுதி பட்டியலில்' இடம்பெற்றுள்ளவர்கள் மூலம் நடைபெற்றுள்ள ஊழல், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழலை விட மோசமானதாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
இந்த இமாலய முறைகேடால், இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதிக் கொள்கைகள் எல்லாம் அதிமுக அரசால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்பார்த்தே துவக்கத்தில் இருந்து தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்றும், மருத்துவக் கல்வியில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கும் முறையே தொடர வேண்டும் எனவும் திமுக தொடர்ந்துப் போராடி வருகிறது.
ஆகவே, 'இரட்டை இருப்பிடச் சான்றிதழ்' மூலம் மருத்துவக் கல்லூரிகளுக்கான 'தகுதி பட்டியலில்' இடம்பெற்றுள்ளவர்கள் பற்றி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏதோ ஒன்று, இரண்டு பேர் இப்படிக் கொடுத்து விட்டார்கள் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுப்பதால் இந்த முறைகேடுகளின் மொத்த உருவமும் வெளிச்சத்திற்கு வராது.
ஆகவே 'இரட்டை இருப்பிட சான்றிதழ்' வழங்கக் காரணமாக இருந்தோர், தகுதிப் பட்டியலை வெளியிட்ட தேர்வுக் கமிட்டியில் இடம்பெற்றோர், தேர்வுக் கமிட்டிக்கு நிர்பந்தம் கொடுத்தோர் உள்ளிட்ட அனைவர் மீதும் தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியதிருப்பதாலும், ’இரட்டை இருப்பிடச் சான்றிதழ்’ என்பது இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரமாக இருப்பதாலும், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இட ஒதுக்கீடுகளில் சேருவதற்கு 22.8.2017 அன்று வெளியான 'தகுதிப் பட்டியல்' குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொறுப்பில் இருக்கும் பொறுப்பு ஆளுநரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'விவேகம்' விமர்சன சர்ச்சை: பாடகர் ஸ்ரீனிவாஸின் ஃபேஸ்புக் பதிவால் மீண்டும் சர்ச்சை

Updated : 28 Aug 2017 20:46 IST

ஸ்கிரீனன்

‘விவேகம்’ படத்தில் அஜித் மற்றும் ஸ்ரீனிவாஸ் | கோப்புப் படம்
'விவேகம்' விமர்சன சர்ச்சை குறித்த பாடகர் ஸ்ரீனிவாஸின் ஃபேஸ்புக் பதிவால் மீண்டும் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இதில் மாறன் என்பவரது விமர்சனம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.
மாறனின் விமர்சனத்துக்கு திரையுலகினர் பலரும் சமூக வலைதளத்தில் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்த சர்ச்சைக் குறித்து பாடகர் ஸ்ரீனிவாஸ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் புதிய விளக்கமொன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தைப் பற்றிய ஒருவரது விமர்சனத்தின் மீது திரைத்துறைக்குள்ளேயே ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன, எந்த ஒரு திரைப்படத்தையும் யாரும் விமர்சனம் செய்வதற்கு அடிப்படை உரிமை உள்ளது. இன்றைய உலகில் இத்தகைய போக்குகளை நிறுத்த முடியாது.
பொதுமக்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி நீங்கள் கொடுக்கும் குப்பைகளை பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. பொதுமக்களையும் விமர்சிப்போரையும் மதிக்க வேண்டும். இன்று எவர் வேண்டுமானாலும் ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யலாம். இந்த உண்மைக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும்.
எனவே தான் அவருடைய திரைவிமர்சனங்கள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது, அந்த விமர்சனங்களில் அவர் எவ்வளவு பாரபட்சமின்றி செயல்படுகிறார் என்பது என்னை உண்மையிலேயே கவர்ந்தது. அவர் சில படங்களை குப்பை என்று தள்ளிவிடுகிறார்.
எனக்கு அவரது பார்வைகள் மீது முழு ஒப்புதல் உண்டு. அதே போல் சில படங்களுக்கு அவர் காத்திரமாகப் பாராட்டவும் செய்துள்ளார். விக்ரம் வேதா படத்தை அவர் பாராட்டியதன் இணைப்பை நான் பகிர்கிறேன்
இவ்வாறு ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீனிவாஸின் ஃபேஸ்புக் பதிவு அஜித் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மேலும், சில ரசிகர்கள் அவர் கூறுவது சரியே என்று அதனை ஷேர் செய்தும் வருகிறார்கள்.

அதிமுகவில் உச்சகட்ட மோதல்: குழப்பத்தில் தொண்டர்கள்

Published : 28 Aug 2017 19:00 IST

மு.அப்துல் முத்தலீஃப்

ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைப்புக்குப் பிறகு அதிமுகவில் மோதல் இன்னும் உச்சத்துக்கு சென்றுள்ளதால் கட்சியும் ஆட்சியும் தப்புமா? தங்களுக்கு யார் நிர்வாகி என தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். சாதாரண நிர்வாகிகளும் குழப்பத்தில் உள்ளனர்.
அதிமுக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது. 1972-ல் எம்ஜிஆர் அதை உருவாக்கிய போது அபிமானம் மிக்க தொண்டர்களாலும் , நிர்வாகிகளாலும் வழி நடத்தப்பட்டது. எம்ஜிஆர் என்ற சக்தி அனைவரையும் கட்டிப் போட்டிருந்தது.
கட்சிக்குள் ஒரு வித சுதந்திரமும் நெகிழ்வுத்தன்மையும் இருந்தது. ஆனாலும் தலைமைக்கு நிகராக கருத்துக்களை கூறும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் இருந்தனர். அதன் பின்னர் எம்ஜிஆர் நோய் வாய்ப்பட்ட போது அதிமுக இரண்டு கோஷ்டிகளாக பிரிந்திருந்தது.
1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் இது பகிரங்கமாக வெளிப்பட்டு மூன்றே ஆண்டுகளில் ஆட்சிக் கவிழ்ப்பில் போய் முடிந்தது. ஜானகி, ஜெயலலிதா என இரண்டு அணிகள் பிரிய 1989 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.
ஜெயலலிதா தலைமையின் கீழ் கட்சி மீண்டும் ஒன்றிணைய கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் ஜெயலலிதா கட்சியை தனக்குக் கீழ் கொண்டு வந்தார். அதன் பின்னர் அதிமுகவில் ஒரே குரல் ஜெயலலிதாவின் குரல் என்றாகிப் போனது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா ஆளுமையின் கீழ் கட்சி வந்தது. மீண்டும் ஒற்றைத்தலைமையின் கீழ் கட்சி செல்கிறது என்கிற நிலையில் ஓபிஎஸ் நீக்கப்பட அவர் தனி அணியானார். அதிமுக 1988-க்குப் பிறகு மீண்டும் ஓபிஎஸ், எடப்பாடி அணி என இரண்டாக ஆனது.
இந்த முறை சசிகலா என்கிற ஒரே தலைமையின் வழிகாட்டுதல் படி எடப்பாடி முதல்வர் ஆனதால் ஆட்சி கவிழவில்லை. ஆனாலும் சசிகலா சிறைக்கு செல்ல பிரிந்திருந்த ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைய முயற்சிக்க தினகரன் விலக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத தினகரன் பின்னர் வேகம் காட்டத் துவங்கினார். திடீரென ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்தன. ஓபிஎஸ் மீண்டும் கட்சிப் பதவி,  துணை முதல்வர் என பதவிக்கு வர, சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு நீக்குவோம் என்ற திடீர் அறிவிப்பால் அதிமுகவில் ஆரம்பமானது பூகம்பம்.
துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் ஏற்கெனவே பலரை நியமித்திருந்தார் தினகரன். தற்போது எழுந்துள்ள சூழ்நிலையில் அடுத்தடுத்த அதிரடியாக இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி, நடவடிக்கைகளில் இறங்க தற்போது மிகப்பெரும் குழப்பத்தில் அதிமுக தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அடுத்தடுத்த நடவடிக்கைகளால் முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடியை தினகரன் நீக்குவார், இனி தினகரன் கைகாட்டுபவர்தான் முதல்வர் என்று தினகரன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் ஆணையத்தால் சசிகலா அங்கீகரிக்கப்படவில்லை அதனால் அவர் நியமித்த தினகரன் நியமனமும் செல்லாது என்கின்றனர் அதிமுக அணியினர்.
தினகரன் தரப்பில் கிட்டத்தட்ட 75 சதவிகித கட்சி நிர்வாகிகள் மாவட்டச்செயலாளர்கள் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தினகரனே துணை பொதுச்செயலாளர் இல்லை எனும்போது நீக்கமும் நியமனமும் எப்படி செல்லும் என்று தீர்மானம் நிறைவேற்றி பழைய நிர்வாகிகளே நீடிப்பார்கள் என்று அறிவித்துள்ளனர் அதிமுக அணியினர்.
இதனால் மிகவும் குழம்பிப்போய் நிற்பது தொண்டர்களே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஆளுங்கட்சி என்பதால் பல்வேறு கோரிக்கைகளுடன் வரும் கட்சித்தொண்டர்களும், அடிமட்ட நிர்வாகிகளும் யாரைக் கேட்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
ஆட்சி நிலைக்குமா? கலைக்கப்படுமா? என்பது பற்றி குழப்பத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதை அவர்கள் தினம் தினம் ஒவ்வொரு அணியாக மாறுவதை வைத்து புரிந்துக்கொள்ள முடிகிறது என்கிறார் அரசியல் ஆர்வலர் ஒருவர்.
முதல் நாள் காலை தினகரன் தரப்புக்கு ஆதரவாக பேசும் ஏ.கே.போஸ் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாலையில் மரியாதைக்காக சந்தித்தேன் என்று பேட்டி அளிக்கின்றார். இவையெல்லாம் அவர்கள் மத்தியில் உள்ள குழப்பத்தையே காட்டுகிறது என்றார்.
இது போன்ற குழப்பத்திற்கு என்னதான் காரணம் என்று அரசியல் விமர்சகர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது, சசிகலா இருக்கும் வரை அவரை பொதுச் செயலாளராக அங்கீகரித்தது இந்த அணியினர் தான்.
இப்போது தினகரன் பத்தாண்டுக்கு முன்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுபவர்கள் அன்று தினகரன் தலைமையை மனமுவந்து ஏற்றுக்கொண்டவர்களே.
இப்படி தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வதால் தான் இப்படிப்பட்ட உச்சகட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது என்று தெரிவித்தார். மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஆளுக்கொரு விதமாக பேட்டி அளிப்பது தொண்டர்களை மேலும் குழப்பத்தில் தான் ஆழ்த்தும் ஆகவே மோதல் முடிவுக்கு வரும் வரை இது தொடரத்தான் செய்யும் என்று கூறினார்.
மறுபுறம் ஒருவரை நீக்கும் போது நீக்கம் செல்லாது என்பவர்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவதேன், கொடும்பாவி கொளுத்துவதேன். நாடாளுமன்ற உறுப்பினர் குமார் தன்னை நீக்கியவுடன் முதல்வரை நீக்க முடியுமா என்று கேட்க முதல்வரின் மாவட்டச்செயலாளர் பதவியையும் தினகரன் பிடுங்கினார்.
அப்படியானால் இவர்கள் தினகரனை இன்னும் துணை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. இப்படி தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிகொள்வதால் தான் இப்படிப்பட்ட உச்சகட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது என்று தெரிவித்தார்.
மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஆளுக்கொரு விதமாக பேட்டி அளிப்பது தொண்டர்களை மேலும் குழப்பத்தில் தான் ஆழ்த்தும் ஆகவே மோதல் முடிவுக்கு வரும் வரை இது தொடரத்தான் செய்யும் என்று கூறினார்.
இது போன்ற குழப்பங்கள் குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் ஆவடி குமாரிடம் கேள்வி எழுப்பினோம்.
சசிகலா நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது , அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் நியமனத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் போடுகிறீர்கள் , அதே நேரம் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை தினகரன் நீக்கினால் போராட்டம், ஆர்ப்பாட்டம், தினகரன் கொடும்பாவியை எரிக்கிறீர்களே ஏன்?
அதை நிர்வாகிகள் செய்வதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆங்காங்கே உள்ள தொண்டர்கள், அவருடைய செயலை கண்டிப்பதற்கு உரிமை இருக்கிறது, போராட்டம் நடத்துகிறார்கள். அதற்கு கட்சி வழிகாட்டுதல் காரணம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. எனக்கு ஒரு பாதிப்பு என்றால் என்னைச் சேர்ந்தவர்கள் கோபத்தினால் எதிர்ப்பை வெளிக்காட்டலாம் அல்லவா?
அப்படியானால் தொண்டர்கள் தினகரனை தங்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளராகத்தான் இன்றும் பார்க்கிறார்கள் என்று கருதலாமா?
நீங்கள் கேட்பது அதிசயமாக உள்ளது. அவர் மன நோயாளி போல் எதையாவது செய்தால் யாராவது தடுத்தாலோ குறை சொன்னாலோ யார் பொறுப்பாக முடியும். அதற்கு தொண்டர்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். இன்று கட்சி உள்ள நிலையில் இன்று அவர் தேவையில்லாத குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறார் என்பதற்காக தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
அப்படியானால் தினகரன் குழப்பத்தை ஏற்படுத்துவதால் தான் தொண்டர்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்துகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
ஆமாம். அதற்குத்தான் எதிர்ப்பு. அவருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று தெளிவாக முடிவு எடுத்துள்ளோம். ஆனால் அவர் அதற்கு பிறகும் அதிமுகவுக்கும் தனக்கும் தொடர்பு இருக்கிறது என்று நடந்து கொள்கிறார்.
அவர் எந்த அமைப்புக்கும் கட்டுப்படுவதில்லை, அவராகவே எதாவது பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் அதை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களில் வரும் செய்தியை பார்த்து அதனால் பாதிக்கப்படுவதாக நினைக்கும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றார் ஆவடி குமார்.

NOTE BAN AND NEET KILL DEMAND FOR NRI QUOTA MEDICAL SEATS

clip

NEET ISSUE

clip
எல்லாம் ஒரு விளம்பரமே...! எம்.எல்.ஏ.க்கள் அடிக்கும் கூத்து!!!


புதுச்சேரி: புதுச்சேரியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 'கம்பு சுத்துவது, டீக்கடையில் டீ குடிப்பது,
பைக் ஓட்டுவது' போன்ற நடவடிக்கைகள், 'எல்லாம் ஒரு விளம்பரம் தான்' என்பது போன்று உள்ளது.

கொஞ்சம் ‛ஓவர்':

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 20 பேர், புதுச்சேரி அடுத்த, சின்ன வீராம்பட்டினம் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலர், தினமும் நடைபயிற்சி செல்வதை, வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் ஏழுமலை, கதிர்காமு, தங்கதுரை உள்ளிட்ட சிலரது நடவடிக்கைகள் கொஞ்சம், 'ஓவராக' உள்ளது.

போட்டி போட்டு 'போஸ்':

புதுச்சேரி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ஏழுமலை, தெருவோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார். 'நட்சத்திர ஓட்டலில் கிடைக்காத டீயா, வெளியில் கிடைத்து விடப்போகிறது' என, சிலர், 'கமென்ட்' அடித்தனர். இருந்தும், அவரது செயல் பத்திரிகை மற்றும் 'டிவி'க்களில் வந்ததால், மறுநாள் மேலும் சில, எம்.எல்.ஏ.,க்கள் சாலைக்கு வந்து விட்டனர். 'நாய்க்கு பிஸ்கட் போடுவது, டீ குடிப்பது, பேப்பர் படிப்பது' போன்ற நடவடிக்கையில் இறங்கி, பத்திரிகைகளுக்கு போட்டி போட்டு, 'போஸ்' கொடுத்தனர்.

'பந்தா':

சின்ன வீராம்பட்டினம் விடுதிக்கு நேற்று முன்தினம் திரும்பிய அவர்கள், மீண்டும், நடைபயிற்சி, யோகா, நீச்சல், கம்பு சுற்றுவது, பத்திரிகையாளர்களிடம் பைக் வாங்கி ஓட்டுவது என, பத்திரிகைகளுக்கு பல்வேறு கோணங்களில் போஸ் கொடுத்து அசத்தினர். துவக்கத்தில் ஓரிருவர் மட்டுமே, இந்த நடவடிக்கையில் இறங்க, தற்போது, 'பந்தா' காட்டும், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

IT EMPLOYEES UNION SEES RED IN PINK SLIPS

BLUE WHALE GAME CLAIMS 1 IN UP

15 DOGS POISONED BURNT AT CHITLAPAKKAM

BLUE WHALE WHALE CHALLENGE COPS ADVISORY

மாநில செய்திகள்

நீல திமிங்கல விளையாட்டு: போலீசார் எச்சரிக்கை



சென்னை நகர போலீசார் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

ஆகஸ்ட் 29, 2017, 03:45 AM

சென்னை,

நீல திமிங்கலம் என்ற பெயரில் இணையதள விளையாட்டு ஒன்று தற்போது இளைஞர்கள் மத்தியில் மோகத்தை உண்டாக்கி வருகிறது. அந்த விளையாட்டு இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் விதமாக அமைந்துள்ளது. அதிகாலையில் இளைஞர்களை தூக்கத்தில் இருந்து எழ வைக்கிறது.

இளைஞர்களின் உயிருக்கு சவால்விடும் வகையில் அமைந்துள்ள இந்த விளையாட்டில் ஈடுபட விடாமல், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும்.

இணையதளத்தில் விளையாடும் இந்த விளையாட்டை விளையாட விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியில் வேறு விதமான விளையாட்டில் இளைஞர்களை ஈடுபடுத்துவதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹார்வி புயல் பாதிப்பு 200 இந்திய மாணவர்கள் ஹூஸ்டனில் தத்தளிப்பு: 2 பேர் கவலைக்கிடம்

2017-08-29@ 01:51:52



புதுடெல்லி : அமெரிக்காவை தாக்கிய ஹார்வி புயல் பாதிப்பில் சிக்கி 200 இந்திய மாணவர்கள் தவித்து வருகின்றனர். அமெரிக்காவின் பல இடங்களில் சேதத்தை விளைவித்துள்ள ஹார்வி புயலால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையால் கடுமையான மழைப்பொழிவும் காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன. அமெரிக்காவின் அலபாமா, ஜார்ஜியா, கென்டக்கி உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கிய பயங்கரமான புயலாக கருதப்படும் ஹார்வி புயலால், நேற்று முன்தினம் டெக்சாஸ் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி டெக்சாசில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும், ‘ஹார்வி புயலால் ஹூஸ்டனில் தொடர்மழை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹூஸ்டன் பல்கலைக் கழகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில், 200 இந்திய மாணவர்கள் கழுத்தளவு வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், ஷாலினி என்ற மாணவியும், நிகில் பாட்டியா என்ற மாணவரு்ம் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக தூதரக அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.
குறைந்தது 'ஏசி' பயன்பாடு : மின் உற்பத்தி திடீர் சரிவு

பதிவு செய்த நாள்28ஆக
2017
22:14

மழை காரணமாக, வீடுகளில், 'ஏசி' குளிர்சாதனங்களின் பயன்பாடு குறைந்ததால், மின் வாரியம், மின் உற்பத்தி அளவை குறைத்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, அனல், நீர், எரிவாயு மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், தினசரி மின் தேவையை பூர்த்தி செய்வதில், அனல் மின் நிலையங்களின் பங்கு அதிகம். கோடை காலத்தில், தினசரி மின் தேவை, 15 ஆயிரம் மெகாவாட் என்றளவில் இருந்தது. அப்போது மொத்தம், 4,320 மெகாவாட் திறன் உள்ள, அனல் மின் நிலையங்களில், 4,000 மெகாவாட் வரை, மின் உற்பத்தி செய்யப்பட்டது. பின், தென்மேற்கு பருவ மழையால், மின் தேவை குறைந்தது. அனல் மின் உற்பத்தி, 3,000 மெகாவாட் என்றளவில் இருந்தது. கடந்த வாரம் முதல், சென்னை உட்பட, பல மாவட்டங்களில், இரவில் மழை பெய்து வருவதால், வீடுகளில், 'ஏசி' பயன்பாடு குறைந்துள்ளது. இதையடுத்து, மின் தேவை, 12 ஆயிரம் மெகாவாட் கீழ் உள்ளதால், அனல் மின் நிலையங்களில், 1,800 மெகாவாட் அளவுக்கு மட்டுமே, மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

- நமது நிருபர் -




Advertisement
ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறே : தனியார் ஆம்புலன்ஸ்கள் அடாவடி தாங்கலை

பதிவு செய்த நாள்28ஆக
2017
20:46




'ஆளே இல்லாத கடையில், யாருக்கு டீ ஆத்துறே' என்ற சினிமா காமெடி போல், நோயாளிகளே இல்லாமல், அசுர வேகத்தில் பறக்கும், தனியார் ஆம்புலன்ஸ்களின் அடாவடி செயல்கள் அதிகரித்து வருவதாக போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் குவிகின்றன.

தமிழக அரசின் போக்குவரத்து துறையின் கணக்கின் படி தமிழகத்தில், 9,603 ஆம்புலன்ஸ்கள் இயக்கத்தில் உள்ளன. இதில், 108 அவசரகால ஆம்புலன்ஸ்கள், 782, அரசு மருத்துவமனை, தீ அணைப்புத்துறை, போலீஸ் உள்ளிட்ட பிற அரசு துறைகளின் கட்டுப்பாட்டில், 1,210 ஆம்புலன்ஸ்கள் உள்ளன.

சலுகைகள் : உயிர்காக்கும் பணிகளில் ஈடுபடும் ஆம்புலன்ஸ்களுக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சாலைகளில் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் செல்லலாம், ஒரு வழிப்பாதையில் செல்ல அனுமதி, வாகனங்களை முந்திச் செல்ல தாராள அனுமதி, பிற வாகனங்கள் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட வேண்டும் என்பன, உட்பட சாலை விதிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள், தனியாரின் பராமரிப்பில் உள்ள ஆம்புலன்ஸ்கள், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு இடையே சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது, சிவப்பு விளக்கை எரிய விடுகின்றனர்.
மேலும், சைரன் சப்தம் கேட்கும் போது, வாகன ஓட்டிகள் யாராக இருந்தாலும், அவற்றுக்கு வழி விட்டுச் செல்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், நோயாளிகள் இல்லாத நிலையில், ஊழியர்களை ஏற்றிச் செல்லும் போதும், மருந்து, மாத்திரைகள், மருத்துவமனைக்கு தேவையான பொருட்களை ஆம்புலன்ஸ்களில் ஏற்றி வரும் போதும், தேவை இல்லாமல், சைரனை ஒலிக்க விட்டு, செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

புகார் : இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, போலீசாரின் உழைப்பும் வீணடிக்கப்படுகிறது. இது குறித்து, போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 'நோயாளிகள் இல்லாத நேரங்களில், ஆம்புலன்ஸ்களில் சைரன் எழுப்புவதற்கு தடை விதிக்க, மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்' என, போக்குவரத்து பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கூறியதாவது: மாநகருக்குள், ஆம்புலன்ஸ் ஒன்று, ஒலி எழுப்பிய படி வரும் போது, போலீஸ் மைக்கில், நாங்களே தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கிறோம். இதில், சில நேரங்களில், சில சிக்னல்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. ஆம்புலன்சில் உள்ள நோயாளிகளின் உயிருக்கு மதிப்பளித்து, மனிதாபிமான அடிப்படையில், இந்த பணிகளை செய்கிறோம். இதை தனியார் ஆம்புலன்ஸ்கள் தவறாக பயன்படுத்துகின்றன. நோயாளிகள் இல்லாத வாகனங்களை, சோதனை செய்யவும், அவர்கள் நோயாளிகள் இல்லாமல் சைரன் ஒலி எழுப்பி சென்றால், அவற்றை பறிமுதல் செய்யவும், மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...