Tuesday, August 13, 2019

Crowds swell at Tirumala due to long weekend

13/08/2019,TIRUMALA

Lakhs of devotees poured in at the Lord Venkateswara shrine over the long weekend, with queues stretching for over 3 km outside the Vaikuntam Complex. Officials said that with Monday being a holiday on account of Bakrid, an unprecedented rush was witnessed at the shrine beginning on Thursday and peaking on Sunday and Monday. The turnout was so heavy that the waiting time for darshan stretched beyond 20 hours.
Relatives of three women workers stuck in Kuwait move SC
Two of them are held captive by their employers, the third is lying in a vegetative state in hospital

13/08/2019, KRISHNADAS RAJAGOPAL,NEW DELHI
Last year three women from Tamil Nadu left their homes for Kuwait in search of a better life for their families, but their dreams ended in a nightmare.

Lingamuthu from Ramanathapuram was caught by the Kuwait police while trying to escape months of torture working as a domestic maid.

Her brother, Murugalingam, told the Supreme Court that she was released from police custody by her agent, but he has kept her captive.

Appeals to the Tamil Nadu government and the Indian Embassy in Kuwait have not worked.

It has been over a month since the family has heard from her.

The agent, he said, blackmailed the family to cough up ₹1 lakh for her release. Mr. Murugalingam said he had already paid ₹70,000.

Bonded labour

Erode resident Sadiq Batsha, said his wife, Ayisha Babu, left for Kuwait in May. She is working as a bonded labourer in a house.

Her passport is with her employer and she is fed only once a day but made to work 17-18 hour shifts.

Sumathi from Mannargudi in Tiruvarur district lies in a vegetative state in a Kuwait hospital, her mother told the court. She fell from the third floor of a building while trying to escape from the clutches of her abusive employer. She has damaged her backbone and has multiple fractures.

A Bench of Justices N.V. Ramana and Ajay Rastogi has asked the government to respond to pleas made by the three families to urgently intervene and rescue the women.

Notice to govt., police

The court recently issued notice to the Centre, the Tamil Nadu government and the State police chief on the petition represented by senior advocate Nagamuthu and advocates Prabu Ramasubramanian and Raghunatha Sethupathy.

The government has been asked to respond in six weeks.

The petition also sought the apex court to formulate guidelines and a “workable on-site support system to assist and aid the distressed Indian workers abroad”.

Like other countries, which see a huge flow of migrant workers, India should not differentiate between the ones who have migrated legally and illegally.

“The only thing that concerns the countries of the world in helping the distressed worker is the fact whether they are their citizens and they do not go into the fact of their mode of emigration,” the petition said.

The petition has proposed measures like live monitoring of labourers working in the Gulf countries by the Indian embassies, counselling, daily updates of complaints filed by them in embassies, effective use of ICWF funds to help distressed migrants and monitoring of agents.

The petition submitted that the government policy on international human trafficking was “comparatively weak”.
Collector clarifies on outburst

13/08/2019

Kancheepuram District Collector P. Ponniah has clarified that his outburst against a police inspector was not intentional, but only in the interest of proper conduct of the ongoing Athi Varadar festival at the Sri Devarajaswamy temple. He also said that his outburst was not aimed at any individual or department and that the police and the district administration were working in tandem to ensure safety and well-being of the devotees visiting the temple.
5 lakh expected to visit Kanchi temple every day

13/08/2019,CHENNAI

With just four days left, over 5 lakh devotees are expected to visit Kancheepuram   every day to have a darshan of Athi Varadhar in the Devarajaswamy temple.

The police and the district administration have made elaborate arrangements.

Jio Fiber

Monday, August 12, 2019

முடக்கம்!  பெரும்பாக்கம் இணைப்பு சாலை திட்டம்...12 கி.மீ., சுற்றி செல்லும் 6 லட்சம் மக்கள்... முதல்வர் தலையிட பொதுமக்கள் கோரிக்கை

Added : ஆக 12, 2019 04:59



-நமது நிருபர் --பெரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதியை, மற்ற பகுதிகளுடன் இணைக்கும், முக்கிய இணைப்பு சாலை திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால், தினமும், ஆறு லட்சம் பேர், 12 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.

குடிசை மாற்று வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்க, பெரும்பாக்கத்தில், 200 ஏக்கர் இடம் அரசு ஒதுக்கியது. அதில், 1,200 கோடி ரூபாயில், 2009ல், எட்டு மாடி கொண்ட, 20 ஆயிரத்து, 376 வீடுகள் கட்டும் பணிகள் துவங்கின; தற்போது, 17 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. அபார வளர்ச்சிஇதில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 14 ஆயிரம் பேர், மறு குடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர். மருத்துவமனை, பேருந்து நிலையம், பள்ளி, அரசு கல்லுாரி என, பெரும்பாக்கம் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த குடியிருப்பை சுற்றி, பொலினினி, ஆர்மி, டி.எல்.எப்., உள்ளிட்ட பிரமாண்டமான தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சிறிய அளவில், 40க்கும் மேற்பட்ட, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் என, பெரும்பாக்கத்தைச் சுற்றி, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர்கள், மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு, ஓ.எம்.ஆர்., வழியாக, 12 கி.மீ., சுற்றி செல்ல வேண்டி உள்ளது.ஓ.எம்.ஆரில், குமரன் நகர், ஆவின் மற்றும் சோழிங்கநல்லுார் சிக்னல்களில், நெரிசல் அதிகமாக இருப்பதால், சோழிங்கநல்லுார் வழியாக தாம்பரம் செல்ல, இரண்டு மணி நேரம் வரை ஆகிறது. துரித பயணத்திற்கு, பெரும்பாக்கத்தில் இருந்து, மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் சாலையுடன் இணைக்கும் வகையில், 3.5 கி.மீ., துாரத்தில், இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்கு முன், குடிசை மாற்று வாரியம் சார்பில், 6 கோடி ரூபாயில், 1.5 கி.மீ., நீளத்தில், 100 அடி அகலத்தில், இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.நெரிசல் குறையும்மீதமுள்ள, 2 கி.மீ., துாரத்தில், சதுப்பு நிலமாக உள்ளது. அதில், நீரோட்டம் பாதிக்காத வகையில், பாலம் அமைத்து, சாலையை இணைக்க வேண்டும். இத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், 12 கி.மீ., சுற்றி செல்வது தடுக்கப்பட்டு, 5 கி.மீ., துார பயணத்தில், மேடவாக்கத்தை அடைய முடியும். இதன் மூலம், ஓ.எம்.ஆரில் நெரிசல் கணிசமாக குறையும்.குடிசை மாற்று வாரியம் போட்ட, 100 அடி சாலை, பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மீதமுள்ள, 2 கி.மீ., துாரத்தை இணைக்க, ஊராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டவில்லை. வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அனுமதியுடன் தான், சாலையை இணைக்க முடியும்.இந்த சாலையை, நெடுஞ்சாலைத் துறை தான், முறையாக பராமரிக்கும். பாதியில் நிற்கும் சாலையை இணைக்க, முனைப்பு காட்ட வேண்டியது, நெடுஞ்சாலைத் துறை தான்.ஆனால், 100 அடி அகல சாலை, ஊராட்சி நிர்வாகத்தில் இருப்பதால், நெடுஞ்சாலைத் துறை, தானாக முன்வந்து, எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழலில் உள்ளது. 

இங்குள்ள பிரச்னையே, சாலையை இணைக்க, முதலில் எந்த துறை முயற்சி எடுக்க வேண்டும் என்பது தான். துறைகள் ஒருங்கிணைப்பு இல்லாத இந்த இழுபறி, இரண்டு ஆண்டுகளாக நீடிக்கிறது. பெரும்பாக்கம் அபார வளர்ச்சி அடைந்து வருவதால், போக்குவரத்து நெரிசல், மக்கள் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, முதல்வர் தலையிட்டு, துறைகளை ஒருங்கிணைய செய்து, சாலையை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெரும்பாக்கம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இணைப்பு சாலை இல்லாததால், அவசர தேவைக்கு, பொலினினி குடியிருப்புக்குள் புகுந்து செல்கிறோம். நுாறடி சாலையை, சோழிங்கநல்லுார் -- மேடவாக்கம் பிரதான சாலையுடன் இணைத்தால், ஓ.எம்.ஆர்., சுற்றி செல்லும் அலைச்சல் தவிர்க்கப்படும். எங்களை, அவசரமாக மறுகுடியமர்வு செய்த அரசு, அடிப்படை கட்டமைப்புகளை செய்து தருவதில், முனைப்பு காட்டுவதில்லை. முதல்வர் தலையிட்டு, சாலையை இணைக்க வேண்டும்.குடிசை மாற்று வாரிய மக்கள்பெரும்பாக்கம்எங்கள் எல்லைக்கு உட்பட்ட இடத்தில், 100 அடி அகலத்தில் சாலை அமைத்துள்ளோம். வேறு துறை இடத்தில், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அனுமதி இல்லாமல், சாலையை இணைக்கவும் முடியாது. உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்
-நமது நிருபர் --
மனிதனை புனிதனாக்கும் பயணம்

Added : ஆக 12, 2019 02:17

இஸ்லாமிய மார்க்கத்தில், ஐந்து கடமைகள் முக்கியமானவை.கலிமா எனும் இறை நம்பிக்கை. தினமும் ஐந்து வேளை தொழுகைகள், வருடத்தில் ஒரு மாதம் ரம்ஸான் மாதத்தில், நோன்பு வைப்பது. அந்த ரம்ஸான் மாதத்தில், வசதி படைத்தவர்கள், இல்லாதவர்களுக்கு தரும், ஜகாத் உதவி. ஐந்தாவது கடமை, ஹஜ் எனும் மெக்காவிற்கு செல்லும், புனித பயணம்.இந்த புனித பயணத்தை, வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும், தன் வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும்.'ஜில்ஹஜ்' மாதத்தில் மெக்காவிற்கு செல்வதே, 'ஹஜ்' எனும் புனிதப் பயணம்.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், முதல் இறை இல்லத்தை இப்ராஹிம் நபி கட்டினார்.இஸ்லாமிய மார்க்கத்தின் கடைசி இறைத்துாதரான முஹம்மத் நபி (ஸல்) இந்த இறை இல்லத்தை சீரமைத்தார். மக்களுக்கு, தொழுகைக்கு இங்கு இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.'ஜில்ஹஜ்' மாதத்தில் மெக்காவிற்கு புனிதப் பயணம் சென்றால், ஹஜ் என்று அழைக்கப்படும்.மற்ற மாதங்களில் சென்றால், அதை 'உம்ரா' என்று சொல்வர்.தன்னுடைய சுக போகங்களை துறந்து, உற்றார் உறவினரை பிரிந்து, வியாபாரம், வேலை போன்றவற்றை விட்டுச் செல்வதால் ஏற்படும் நஷ்டங்களையும், கஷ்டங்களையும் ஏற்று, மனமுவந்து பொருள் செலவு செய்து, இறைவனுடைய நாட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன், மேற்கொள்ளப்படும் தியாகப் பயணமே 'ஹஜ்' எனும் பனிதப் பயணம் ஆகும்.

இந்த ஹஜ் பயணத்தை நிறைவேற்றும் மனிதன் புனிதம் அடைகிறான். கோபம், எரிச்சல், பேராசை, ஏமாற்றுதல், புறம் பேசுதல், வஞ்சகம் போன்ற தீய குணங்களை கடைப்பிடிக்காமல், அமைதி, அன்பு, நட்பு, உதவும் மனப்பான்மை போன்ற நல்ல விஷயங்களில் ஈடுபடுகிறான்.பாவங்கள் நீங்கப்பெற்று, அன்று பிறந்த பச்சை பிள்ளையைப்போல மாறுகிறான். 'ஹஜ்' பயணம் முடிந்து திரும்புகையில், புனிதனாகவும், துாயவனாகவும் திரும்புகிறான்.மக்கா நகரத்திற்குள் நுழையம் முன், 'இஹ்ராம்' எனும் வெண்ணிற ஆடையை அணிந்து கொள்கின்றனர். எல்லாருக்கும் ஒரேவிதமான ஆடை தான். எவ்வளவ பெரிய பணக்காரர்கள் என்றாலும், இந்த ஆடையை தான் அணிய வேண்டும். இது, அவர்களை பணிவுள்ளவர்களாக மாற்றுகிறது.ஜாதி, மொழி, தேசம், நிறம் பாகுபாடின்றி, எல்லாரும் கூடும் ஒரு மாநாடாக 'ஹஜ்' பயணம் திகழ்கிறது.நபிகள் நாயகம் இறுதி சொற்பொழிவு நிகழ்த்திய அரபா மைதானத்தில், தங்கி தொழுகையை நிறைவேற்றுவர்.

ஹாஜிரா அம்மையார் தன் குழந்தை இஸ்மாயிலின் தாகத்தை தீர்க்க, ஸபா, மருவா எனும் இரு குன்றுகளுக்கிடையே ஓடியதை நினைவுகூரும் வகையில் ஓடுவது, பிராணிகளை குர்பானி கொடுப்பது, நம்மை திசை திருப்பி, தீய வழியில் செலுத்தும் ஷைத்தானை, மினா எனுமிடத்தில் கல் எறிவது, ஹஜ் பயணியர் செய்கிற நற்காரியங்களாகும்.'இதோ வந்துவிட்டோம் இறைவா! உன் அழைப்பை ஏற்று, உன் இடத்திற்கு... இதோ வந்துவிட்டோம் இறைவா... உன் அருட் கொடைகளுக்கு நன்றி கூற...' என்று கூறிக்கொண்டே, ஹாஜிகள் மெக்காவை வலம் வருவர்.இந்த குறுகிய உலக வாழ்வில், நாம் இந்த கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு காரணம் உள்ளது. ஏனென்றால், நாம் இறந்த பிறகு, மறுமை எனும், நீண்ட முடிவே அற்ற வாழ்க்கை உள்ளது. அங்கே நமக்கு இறைவன் சொர்க்கத்தை அளிக்க வேண்டும் என்ற தவிப்பு தான்.இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம்...ஒரு நாட்டில் வினோதமான வழக்கம் இருந்தது. அந்த நாட்டு அரசனை, மக்களே தேர்வு செய்வர். அவனுக்கு வயது ஆகி, ஆளத் தகுதியில்லாத நிலை வரும்.அந்த சமயத்தில் அந்த அரசனை காட்டில் விட்டுவிடுவர். அந்த காடு, புதர்களும், விஷச் செடிகளும், பாம்புகளும், புலி, சிங்கங்களும் வாழும் இடம்.சாப்பிட எதுவும் இல்லை. குடிக்க எதுவுமில்லை.அப்படித்தான் அந்த அரசனையும், மக்கள் காட்டில் விடுகின்றனர். மக்களின் கண்ணுக்கு, ஒரு பிச்சைக்காரன் தென்படுகிறான். அவனையே புதிய அரசனாக முடிவு செய்து, அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.அந்தப் பிச்சைக்காரனுக்கு அதிர்ச்சி. 'நானா இந்த நாட்டின் அரசன்?' பழைய அரசனுக்கு ஏற்பட்ட கதி அவனுக்கு தெரியும். அவனுடைய முதல் உத்தரவு, அந்த காட்டை சுத்தப்படுத்துவதாக இருந்தது.காய், கனி தரும் மரங்களை நடுவது, நீரோடைகளை அமைப்பது, விஷச் செடிகளை அகற்றுவது, ஆபத்தான மிருகங்களை வேட்டையாடுவது என்று, புதிய அரசாணைகளை பிச்சைக்காரன் செயல்படுத்தினான்.நாம் இறுதியில் செல்லப்போகும் இடம் எங்கே? அதை எப்படி வைத்துக்கொள்வது என்று, சரியாக புரிந்து கொண்டான், அந்த புதிய அரசன். இதில் அறிந்து கொள்ள நமக்கும் ஏராளமான பாடங்கள் உள்ளன.இறைவன் நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தருவானாக...ஆமின்!
- மொட்பில்லைசுஹைல் அஹ்மத்பக்ரீத்
அரசு மருத்துவமனைகளில் 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு: உயர்நீதிமன்றம் அவகாசம்

Added : ஆக 12, 2019 04:27

மதுரை:அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவை அமல்படுத்துவது தொடர்பானஅவமதிப்பு வழக்கில், அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை6 மாதங்கள் அவகாசம் அளித்தது.ம

துரை ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனு:அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 'பயோ மெட்ரிக்' (கைரேகை) வருகைப் பதிவு முறையை அமல்படுத்த தமிழக அரசு 2012 செப்.,20 உத்தரவிட்டது. அதை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. டாக்டர்கள், ஊழியர்கள் தாமதமாக வருவது தொடர்கிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளில் 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு முறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.2017 ஜன.,25 நீதிபதிகள், 'அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை 4 மாதங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்,' என்றனர். 

இதை நிறைவேற்றாததால் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக இருந்தராதாகிருஷ்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஆனந்தராஜ் மனு செய்தார். நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்திஅமர்வு விசாரித்தது.அரசுத்தரப்பில், 'படிப்படியாக பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையைஅமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.100 சதவீதம் நடைமுறைப்படுத்த 6 மாதங்கள் அவகாசம் தேவை,' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், '2020 ஜன.,21வரை அவகாசம் அளிக்கப்படுகிறது,' என்றனர்.
AICTE to modernise facilities in rural engineering colleges, technical institutions

The technical education regulator under the HRD Ministry will be providing grants under the Modernisation and Removal of Obsolescence (MODROBS) scheme.

Published: 11th August 2019 03:00 PM |



Image of engineering students used for representational purpose 

(File Photo | Shriram BN, EPS)
By PTI

NEW DELHI: Laboratories in engineering colleges and other technical institutions operational in rural areas are all set to get a makeover, with the All India Council of Technical Education (AICTE) deciding to provide grants to institutions for procuring modern equipment.

The technical education regulator under the HRD Ministry will be providing grants under the Modernisation and Removal of Obsolescence (MODROBS) scheme.

"A special drive is being undertaken by AICTE under MODROB scheme for modernising laboratories in technical institutions operating in rural areas and approved by AICTE by providing grants for procuring modern equipments. The institutions can apply under the scheme till August 28," a senior AICTE official said.

The MODROB scheme aims to modernise and remove obsolescence in laboratories, workshops, computing facilities excluding libraries, so as to enhance the functional efficiency of technical institutions for teaching, training and research purpose.


"It also supports new innovations in classroom and laboratory, teaching technology, development of lab instructional material and appropriate technology to ensure that practical work and project work to be carried out by students is contemporary and suited to the needs of the industry.

"The equipment financed under the scheme could be ideally used for up-gradation of equipment in existing laboratories, enhancement of performance parameter specification of existing equipment, incorporation of latest development in the field and replacement of old depreciated equipment by modern equipment," the official said.

The equipment installed through MODROBS can also be used for indirect benefit to faculty or students through continuing education programmes, training programmes for local industry and consultancy work.

Only institutions that have been in existence for at least 10 years can apply for the scheme and get funding up to Rs 20 lakh.

Duration of the project will be two years from the date of receipt of funds in the institute's account.

"100 per cent grant of sanctioned amount will be released to government and government aided institutes. To private institutions, grants will be sanctioned in the form of per cent of the sanctioned amount as advance followed by 20 per cent as reimbursement on submission of the utilisation certificate and other supporting documents as specified in terms and conditions of MODROB," the official said.
Central University of Tamil Nadu students issued memos for discussing Article 370 abrogation

The Central University of Tamil Nadu (CUTN), Tiruvarur administration has issued memos to at least 30 students allegedly for discussing about the abrogation of Article 370.

Published: 12th August 2019 05:05 AM 


Image of college students used for representational purpose (File 
Photo | Naveen Kumar)

By Express News Service

TIRUVARUR: The Central University of Tamil Nadu (CUTN), Tiruvarur administration has issued memos to at least 30 students allegedly for discussing the abrogation of Article 370.

According to sources, the students discuss various topics every Wednesday. On August 7, around 7 pm, they gathered near the MP hall of the University and allegedly discussed abrogation of Article 370 of the Constitution.

On August 9, the registrar of the University S Bhuvaneswari signed memos to be issued to the students who participated in the discussion. A part of the memo read “the student name).... was assembled along with other students at 7 pm on August 7, 2019 outside the MP Hall of Central University of Tamil Nadu as part of Wednesday’s discussion (Article 370) of the Constitution of India despite issue of several oral and written instructions through circulars. This act has constituted a breach of Conduct Rules and established procedures”. The students were asked to give explanation, through the concerned head of departments, within three days of the issue of the memo. The memo goes on stating that ‘students were already instructed to desist from assembling/congregating in the name of student’s freedom of speech inside the University campus since it is against the spirit of Ordinance No.42’. It says despite the warnings the students gathered to discuss Article 370.

Francis Philip Barclay, Assistant Professor and the coordinator of Public Relations Committee, told the Express to send an e-mail for any comments. When the e-mail was sent, he simply replied that ‘we will bring the official response to this query at the earliest’. No response was received till the time of going to the press.
    Sangli boat tragedy toll touches 17; over 4.40 lakh evacuated
    Relief operations continue as flood waters in western Maharashtra recede

    12/08/2019, SHOUMOJIT BANERJEE,PUNE


    Long way back: Relief operations are on in Sangli and Kolhapur as water levels of the Krishna and Panchganga rivers still remain high.Jignesh Mistry

    As floodwaters began noticeably receding nearly six days after torrential rain hit Sangli and Kolhapur districts in western Maharashtra, five more bodies were retrieved in the Sangli boat accident, taking the death toll in the tragedy to 17.

    The total death toll in the past fortnight arising from flood or rain-related accidents across western Maharashtra is now up to 40, said authorities.

    “Of these, 19 persons died in Sangli; 17 were killed in the boat accident while one person is still missing. Six persons died in Kolhapur with one missing in that district as well, while there have been seven rain-related deaths in Satara and Pune districts and one casualty in Solapur,” said Pune Divisional Commissioner Dr. Deepak Mhaisekar.

    The boat accident occurred earlier this week when at least 30 persons commandeered a boat belonging to the Gram Panchayat of Brahmanal village, cut off by rising floodwaters, and attempted to remove themselves to safety on their own.

    While nine bodies were recovered soon after the tragedy, three more were found on Friday and five more on Saturday.

    Meanwhile, Dr. Mhaisekar said a total of 4.41 lakh persons across the five flood-hit districts, including Sangli, Kolhapur, Satara, Pune and Solapur had been shifted to shelters.

    Of these, 2.45 lakh from more than 50,000 families had been evacuated from Kolhapur, while 1.58 lakh from more than 29,000 families had been rescued from rising water levels in Sangli.

    “Of the 2.45 lakh evacuated in these two districts, 1.19 lakh belong to the 42 worst-hit villages in Kolhapur and Sangli that were completely cut off by the floods. They are now housed in 305 temporary shelters,” he said.

    Relief operations are still on in Sangli and Kolhapur as water levels of the Krishna and Panchganga rivers still remain high.

    With evacuation and rescue operations nearly complete, NDRF teams and other relief agencies are now wading through the waters. They will be providing essential items to those who have chosen to remain in their residences.

    Sunday, August 11, 2019

    மலேசிய முருகனைவிட பிரமாண்டமாக தமிழகத்தில் தயாராகும் முருகன்..!

    சுரேஷ் அ


    முருகனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மிக உயரமான சிலை என்கிற பெருமையை விரைவில் மலேசிய முருகன் கோயில் இழக்க இருக்கிறது. வெகுவிரைவில், அந்தப் புகழ் தமிழகத்துக்குச் சொந்தமாக இருக்கிறது.

    முருகன் சிலை

    தமிழ் நிலத்துக்கே உரிய வழிபாடு, முருகன் வழிபாடு. முருகனைப் பற்றி குறிப்பிடும்போதும் 'தமிழ்க் கடவுள்' என்றே சொல்கின்றனர். தமிழர்கள் உலகமெங்கும் பரவி வாழ்கிறார்கள். அவ்வாறு அவர்கள் குடியேறியிருக்கும் இடங்களிலெல்லாம் முருகனுக்கு கோயில்கள் கட்டி வழிபடுகின்றனர். பல்வேறு நாடுகளிலும் முருகக் கடவுளுக்கு கோயில்கள் இருந்தாலும் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்திருக்கும் பத்துமலைக் குகைக் கோயில் மிகவும் பிரபலமானது.


    146 அடி முருகன் சிலை

    இயற்கையாக உருவான சுண்ணாம்புக் குகைக்குள் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் 140 அடி உயர பிரமாண்ட முருகன் சிலைதான், இதன் புகழுக்குக் காரணம். இந்த பிரமாண்ட முருகனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் மலேசியாவிற்குச் செல்கின்றனர்.

    ஆனால், முருகனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மிக உயரமான சிலை என்கிற பெருமையை மலேசிய முருகன் கோயிலிடமிருந்து தமிழகம் பற்றிக்கொள்ள இருக்கிறது.


    கல்வி வரம் அருளும் எண்கண் முருகன்


    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, முருகக் கடவுளுக்கு 146 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது, புத்திரகவுண்டம்பாளையம் கிராமம். இங்குதான், தனிநபர் ஒருவரின் முயற்சியால் 146 அடி உயர பிரமாண்ட முருகப் பெருமான் திருமேனி தயாராகிவருகிறது.

    தீவிர முருக பக்தரான முத்துநடராஜன், திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையிலேயே தான் உருவாக்க விரும்பிய முருகனைத் தரிசிக்கும் முன்னரே இயற்கை எய்திவிட்டார்.

    இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கோலாலம்பூரில் 140 அடி உயர சிலை அமைத்த அதே திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி தான், இந்த புத்திரகவுண்டம்பாளையம் முருகன் சிலையையும் செய்துவருகிறார். முருகனின் சிலை மட்டும் 126 அடி. பீடத்துடன் சேர்த்து 146 அடி உயரம் இருக்கும் என்கிறார் ஸ்தபதி.

    சிலை வடிவமைப்பு பற்றி திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதியிடம் பேசினோம்...

    “மலேசியா நாட்டில் கோலாலம்பூர், பத்துமலை குகைக்கோயில் நுழைவுவாயிலில் வைக்க, தம்புசாமி என்பவருக்குக் கடந்த 2006-ம் ஆண்டு 140 அடி உயரத்தில் முருகன் சிலை அமைத்துக்கொடுத்தேன். இதுவே முருகனுக்கு அமைக்கப்பட்ட உலகின் உயர்ந்த சிலையாக இதுவரை இருந்துவருகிறது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துநடராஜன் என்பவர், முருகன் சிலையை அமைக்கவேண்டி என்னைத் தொடர்புகொண்டார். அவர் விருப்பப்படி மலேசியா, பத்துமலை முருகன் சிலையை விடவும் 6 அடி உயரம்கூட்டி, 146 அடி உயரத்தில் சிலை அமைத்து வருகிறோம்.


    முருகன்

    இந்தப் பணியில் 22 சிற்பிகள், 10 உதவியாளர்கள், எனக்குத் துணையாக இருந்துவருகிறார்கள். மலேசியாவில் வடிக்கப்பட்ட சிலையில், முருகன் வலதுகையால் வேல் பிடித்ததுபோல காட்சி தருகிறார். இங்கு, புத்திரகவுண்டம்பாளையத்தில் வடித்துவரும் சிலையில், முருகப்பெருமான் வலது கையால் ஆசீர்வாதம் செய்வதுபோன்றும், இடது கையால் வேலைத் தாங்கியபடி சிரித்த முகத்துடன் மணிமகுடம் சூடி காட்சிதருவதைப்போன்று அமைத்துவருகிறோம்.

    தற்போது, முருகனுக்கு ஆடை மற்றும் அணிகலன்களை அமைக்கும் நுண்ணிய வேலைப்பாடுகளைச் செய்துவருகிறோம். இந்தச் சிலை அமைக்கும் பணி முடிவடையும்போது, உலக அளவில் முருகனுக்கு அமைக்கப்பட்ட மிகப்பெரிய சிலையாக இது இருக்கும்” என்றார் ஸ்தபதி.



    முருகன்

    புத்திரகவுண்டம்பாளையத்தில் முருகன் சிலையை அமைக்க முயற்சி எடுத்தவர், முத்து நடராஜர். தீவிர முருக பக்தரான இவர், திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், தான் உருவாக்க விரும்பிய முருகனைத் தரிசிக்கும் முன்னரே இயற்கை எய்திவிட்டார். அவரது குடும்பத்தினர்தான் தற்போது கோயில் அமைக்கும் பணியைச் செய்துவருகிறார்கள்.

    முத்து நடராஜனின் மகனும், கோயில் திருப்பணிக் குழுவின் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீதரிடம் பேசினோம்.

    “என் அப்பா தீவிர முருக பக்தர். அவருக்கு 78 வயதிருக்கும்போது, 2015-ம் ஆண்டு புத்திரகவுண்டம்பாளையம் அருகே நிலம் வாங்கி 2 ஏக்கர் பரப்பளவில் முருகன் சிலை அமைக்க முடிவுசெய்தார். முருகப் பெருமானின் பரம பக்தரான தந்தை, 'முருகப் பெருமானுக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும்' என்று விரும்பினார்.

    முருகனின் புன்னகை

    அவரது விருப்பப்படிதான் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் பத்துமலை முருகன் சிலையைவிடவும் உயரமாக இந்தச் சிலையை எழுப்பத் திட்டமிட்டோம். அதன்படி திருவாரூர் ஸ்தபதி தியாகராஜனைத் தொடர்புகொண்டு, சிலை அமைக்கும் பணியைத் தொடங்கினோம். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி பூமி பூஜை போடப்பட்டது. தந்தைதான் சிலை அமைக்கும் பணியைக் கவனித்துவந்தார்.

    இந்த நிலையில், அவர் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவாலும் வயோதிகத்தாலும் இறந்துவிட்டார். தான் அமைக்கும் முருகன் சிலையைக் காண்பதற்கு முன்பே முருகன் அவர்மீது விருப்பம் கொண்டு அழைத்துக்கொண்டார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, நான் இப்போது இந்தப் பணிகளைக் கவனித்துவருகிறேன்.



    முருகன் சிலை

    தந்தையின் விருப்பப்படி, 2020-ம் ஆண்டு பங்குனி உத்திரத்துக்கு முன்பு, குடமுழுக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தச் சிலை அமைக்கும் பணி முடிந்த பிறகு, அறுபடை முருகன் சிலைகளையும் இங்கு மக்கள் தரிசிக்கும் வகையில் கோயில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அப்போதுதான் தந்தையின் ஆன்மா சாந்தியடையும்” என்றார்.

    ‘Students leaving university midway not entitled to any refund’; Madras High Court

    ‘Students leaving university midway not entitled to any refund’; Madras High Court: The grievance raised by students does not make a prima facie case to subject the university to the ordeal of trial,' the Madurai bench judge said of the Madras High Court while disposing of a matter...

    Children aged below 15 cannot claim Compassionate appointment after attaining majority: Madras HC [Read Judgment]

    Children aged below 15 cannot claim Compassionate appointment after attaining majority: Madras HC [Read Judgment]: Under the scheme, the department is not obligated to keep any post vacant, till the applicant attains majority or to consider his candidature on attaining majority, the Bench said.The Madras High...

    'State Health Scheme Not Charity', Govt. Cannot Reject Reimbursement Claims Of Employees & Pensioners On Technical Grounds: Madras HC

    'State Health Scheme Not Charity', Govt. Cannot Reject Reimbursement Claims Of Employees & Pensioners On Technical Grounds: Madras HC: Madras High Court ruled in Marimuthu v. Government of Tamil Nadu that medical reimbursement claimed by the employees and pensioners or their family members is not the bonus or bounty. It noted...

    Sex Workers Should Not Be Arrested, Rather They Must Be Treated As Victims Of Crime: Calcutta HC [Read Order]

    Sex Workers Should Not Be Arrested, Rather They Must Be Treated As Victims Of Crime: Calcutta HC [Read Order]: Dismissing an anticipatory bail moved by a brothel owner, the Calcutta High Court has reiterated that sex workers exploited for commercial sex are victims and they should not be arrested in course of...
    மறக்க முடியாத திரையிசை: தொலைத்தவளின் மன வரிகள்




    பி.ஜி.எஸ்.மணியன்

    ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தியப் பண்பாடு. இருந்தாலும், கட்டிய மனைவியைக் கண்கலங்க வைத்துவிட்டு இன்னொருத்தியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காலப்போக்கில் மனம் மாறி மனைவியுடன் முன்னைவிட இறுக்கமாக இணைந்து வாழ்வதும் உண்டு.

    ஆனால்.. இடையில் அவனை நம்பி வாழ்க்கையையே தொலைத்த அப்பாவிப் பெண்ணின் நிலை? கள்ளமே இல்லாமல் ஆணின் ஆசைக்குப் பலியானது ஒன்றுதானே அவள் செய்த தவறு?

    களங்கத்தையும் பழிச்சொல்லையும் மட்டுமே சுமந்து வாழும் அந்தப் பெண்ணின் எண்ண ஓட்டங்களை இதுவரை யாருமே சிந்தித்ததில்லை; கவியரசர் கண்ணதாசனைத் தவிர.

    1967-ம் ஆண்டு புதுமை இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய ‘நெஞ்சிருக்கும் வரை' படத்துக்காக கவியரசரின் கைவண்ணத்தில் பிறந்த இந்தப் பாடலுக்கு ஒரு தனித்தன்மை உண்டு.

    கதைப்படி மது, மாது என்று கட்டிய மனைவியை ஒதுக்கிவைத்துவிட்டு வாழும் கணவன் வீட்டுக்கே இன்னொரு பெண்ணைக் கூட்டி வந்து நடனமாடச் சொல்கிறான்.

    இந்த இடத்தில்தான் கவியரசர் அந்தப் பெண்ணை ஒரு போகப்பொருளாகப் பார்க்காமல், வாழ்வை அதன் போக்கில் எதிர்கொள்ளும் புதுமைப் பெண்ணாகப் பார்க்கிறார். பாடலின் ஒவ்வொரு சரணத்திலும் முத்தாய்ப்பாக வரும் கடைசி வரிகள் அதிர வைக்கின்றன. அனுதாபப்பட வைக்கின்றன. பிரமிக்க வைக்கின்றன. 

    அந்தப் பாடல்தான் இசைக்குயில் எஸ். ஜானகி அவர்கள் பாடிய 'நினைத்தால் போதும் பாடுவேன்' என்று தொடங்கும் பாடல். இந்தப் பாடலை ஹம்சானந்தி ராகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் செதுக்கி எடுத்திருக்கிறார் என்றால் அது மிகை அல்ல. இப்படிக்கூட மெல்லிசையில் ராகத்தின் ஜீவன் முழுவதையும் வெளிக்காட்ட முடியுமா என்று வியக்க வைக்கும் ஹம்சானந்தி!

    ஜானகி அம்மா பாடலைப் பாடியிருக்கும் விதம், வெளிப்படுத்தி இருக்கும் பாவங்கள், குரலில் பிறக்கும் கமகங்கள், செய்திருக்கும் ராக சஞ்சாரங்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருக்கலாம். ஒரு துளிக்கூடப் பிசிறே இல்லாத.. இனிமையைத் தவிர எதுவுமே செவிகளில் பாயாத வகையில்.. பாட வைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர்.
    ‘நினைத்தால் போதும் பாடுவேன்.
    அணைத்தால் கையில் ஆடுவேன்.
    சலங்கை துள்ளும் ஓசையில்
    கலங்கும் கண்ணை மாற்றுவேன்’

    முதல் சரணத்தில், தன்னால் என்னென்ன செய்ய முடியும் என்று சொல்பவள், “இப்படி எல்லாம் நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடுவதால் என்னைக் கேவலமாக நினைத்துவிடாதே. பொதுவாகப் பெண்களின் மென்மையைக் குறிப்பிடும்போது இதமாக வருடிச் செல்லும் தென்றல் காற்றுடன் ஒப்பிட்டுச் சொல்வதுண்டு.

    பாலின் நிறமும் பனியின் மென்மையும் கொண்ட நான், அந்தத் தென்றல் காற்றைவிட மேலானவள். எப்படித் தெரியுமா? தென்றல் காற்று, இடம், பொருள், ஏவல் பார்க்காமல் எல்லா இடத்திலும் பறந்து செல்லும். நானோ ஏக்கம், தவிப்பு எதுவானாலும் சரி உன்னைத் தவிர எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு அலைய மாட்டேன்.” என்கிறாள்.
    'பாலின் நிறம்போல உருவான பெண்மை
    பனியில் விளையாடும் கனிவான மென்மை
    எங்கும் பறந்தோடும் இளம்தென்றல் அல்ல
    ஏக்கம் வரும்போது எல்லோர்க்கும் சொல்ல..'

    இந்த இடத்தில் தன்னையும் அறியாமல் கவியரசர் கையாண்டிருக்கும் ’வேற்றுமை அணி நயம்’ வியக்கவைக்கிறது. உவமை சொல்லும் பொருளைவிட - உவமைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பொருளை உயர்வாகச் சித்தரிப்பதுதான் வேற்றுமை அணி. தென்றலுக்கு உவமை சொல்லப்படும் பெண்ணை அந்தத் தென்றலைவிட உயர்வாகக் காட்டி இருக்கிறார் கவியரசர்.

    சரணங்களுக்கு இடையில் வரும் இணைப்பிசையில் மெல்லிசை மன்னர் கூட்டி இருக்கும் வயலின்களின் விறுவிறுப்பு, இணைப்பிசை முடியும் இடத்தில் தபேலாவின் தாளக்கட்டு, ஒரு ராகத்தை மெல்லிசையில் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு பாடம்.

    தொடரும் சரண வரிகள் லேசான அதிர்வை மனசுக்குள் ஏற்படுத்துகின்றன. ‘காலம் எப்போதும் சீரான ஒழுங்குக்குள் இருப்பதில்லை. நான் உன்மீது கொண்ட காதலும் தவறான ஒன்றல்ல. நாளையே நீ மாறி உன் மனைவியுடன் இணைந்து வாழ நேரிடலாம். ஆனால், நானோ இருவரும் இணைந்திருந்த இன்ப நினைவுகளை மட்டுமே சுமந்து வாழ்ந்தாக வேண்டும்' என்று வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்த பெண்ணின் குரலாகக் கவியரசர் ஒலிக்க வைத்திருக்கிறார்.
    ‘காலம் எந்நாளும் முறையானதல்ல
    காதல் எந்நாளும் தவறானதல்ல
    நாளை இந்நேரம் நீ மாறக்கூடும்
    நடந்த நினைவோடு நான் வாழ நேரும்'

    கடைசி சரணத்திலோ சாட்டையடி கொடுப்பது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள். “கேள்வி என்று ஒன்று வந்தால் பதில் என்று ஒன்று வந்துதான் தீர வேண்டும். அந்தப் பதில் மனதுக்கு இசைவானதாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மனத்தைக் காயப்படுத்தவும் செய்யும். ஆகவே, எதையும் கேட்க நினைக்காமல், வாழ்வைச் சுகமாக நீ வாழும்போது உன் மனைவிக்கும் மனம் என்று ஒன்று இருக்கும் என்பதை நினைவில்கொண்டு, அதை முடிந்தால் காயப்படுத்தாமல் வாழப் பார்." என்று நறுக்கென்று அறிவுரை கூறி முடிக்கிறாள் அவள்.

    'கேள்வி வரும்போது பதில் ஒன்று வேண்டும்
    கேட்க நினைக்காத மனம் ஒன்று வேண்டும்
    வாழ்வை சுகமாக நீ வாழ வேண்டும்.
    மனதை மனதாக நீ காண வேண்டும்’.

    வாழ்க்கையைத் தொலைத்த பெண்ணின் மனக்குமுறல் பாடல் முடிந்த பிறகும் பலத்த அதிர்வைக் கூட்டுகிறதே. அதுவே பாடலின் வெற்றிக்கு ஒரு சாட்சி.

    தொடர்புக்கு: pgs.melody@gmail.com
    படம் உதவி ஞானம்
    கோவை அரசு மருத்துவமனையில் அள்ளிக் கொடுக்கப்படும் மாத்திரைகள்: எந்த மாத்திரையை எப்போது உட்கொள்வது? புரியாமல் திணறும் நோயாளிகள் 



    த.சத்தியசீலன்

    கோவை 10.08.2019

    கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் அள்ளிக் கொடுக்கப் படுகின்றன. எந்த மாத்திரையை எப்போது உட்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் திணறுகின்றனர், நோயாளிகள்.

    கோவை-திருச்சி சாலையில் செயல்பட்டு வருகிறது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. நாள்தோறும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை வெளி நோயாளிகளாகவும், 1,500 முதல் 1,700 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நோய் பாதிப்புக்கு ஏற்ப வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை, மொத்தமாக அள்ளிக் கொடுப்பதால், எந்த மாத்திரையை எப்போது சாப்பிடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர், நோயாளிகள்.

    “சிகிச்சை பெறுவதற்கு, நோயாளிகள் விவரம், நோயின் தன்மை குறித்து தெரிவித்து அனுமதிச் சீட்டு பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும். அதன்பின்னர் பரிசோதனை செய்து, நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் மருந்துச்சீட்டு எழுதிக் கொடுக்கின்றனர்.

    மருந்து கொடுக்கும் இடத்தில் மருத்துவர் எழுதி கொடுக்கும் மாத்திரைகளை இந்தந்த மாத்திரைகளை, இந்தந்த வேளைகளில் உட்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கூறி, அள்ளி கொடுத்து விடுகின்றனர். வீட்டுக்குச் சென்றவுடன் எந்த மாத்திரையை எப்போது உட்கொள்ள வேண்டும் என்பது மறந்து விடுகிறது. படிப்பறிவற்றவர்கள், முதியவர்கள், இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். மருத்துவர்கள் எழுதிய மருந்துச்சீட்டை படிக்கத் தெரிந்தவர்கள் மாத்திரைகளைக் கண்டுபிடித்து உட்கொள்கின்றனர். ஆனால் படிக்காதவர்களுக்கு முடியாது.

    எந்தெந்த மாத்திரைகளை, எப்போது உட்கொள்ள வேண்டும் என்று பேப்பர் கவரில் எழுதி, அதில் மருந்து மாத்திரைகளைப் போட்டு கொடுத்தால் காலை, மதியம், இரவு குறிப்பிட்டுள்ளதைப் பார்த்து மருந்துகளை உட்கொள்ள நோயாளிகளுக்கு எளிதாக இருக்கும்” என்றனர், நோயாளிகள்.

    இது குறித்து கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேஷ் கூறும்போது, ‘நோயாளிகளுக்கு மாத்திரைகளை பேப்பர் கவரில் தெளிவாக எழுதி கொடுக்க வேண்டியது அவசியம். மருந்து, மாத்திரைகள் நோயாளிகளின் உயிருடன் சம்பந்தமுடையது. கோடிக்கணக்கில் முதலீடு செய்து சிகிச்சைக்காக கருவிகள், உபகரணங்கள் வாங்கப் படுகின்றன. மாத்திரைகளைப் போட்டு கொடுக்க பேப்பர் கவர்கள் வாங்கி வைக்கலாம். கோவை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இம்முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் அமைப்புகளுக்கு அனுமதி அளித்தால், பேப்பர் கவர்களை மருத்துவமனைகளுக்கு வழங்குவர். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.
    காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் போலீஸாருக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை


    கத்தரிப்பூ நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர்.

    காஞ்சிபுரம்

    பொதுமக்கள் எழுப்பிய புகாரின் அடிப்படையில் அத்திவரதர் தரிசனத்தின் மிக முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று முன்தினம் இரவு திடீர் ஆய்வு செய்தார்.

    அத்திவரதர் வைபவம் ஆரம் பித்த நாள் முதலே காவல்துறை யினர் அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயிலில் போலீஸார் பலரை அழைத்துச் சென்றதாகவும், இத னால் உரிய அனுமதிச் சீட்டு வைத்துள்ளவர்கள் பாதிக்கப்பட்ட தாகவும் பலர் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெற்றது.

    ஆய்வின்போது ஆட்சியர், ‘‘பொதுமக்கள் பலரும் மணிக் கணக்கில் காத்திருக்கிறார்கள். நீங்கள் உங்களுக்கு வேண்டிய வர்களை மட்டும் முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதி சீட்டு இல்லாமல் விஐபி தரிசனத்தில் அனுப்புகிறீர்கள். நீங்கள் உங்கள் இஷ்டப்படி செயல்பட்டால் பொது மக்கள் கூறும் புகார்களுக்கு யார் பதில் சொல்வது? உங்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் திருந்துவீர்கள்.

    இதுபோன்று பொறுப்பில்லாமல் செயல்பட்டால் இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக’’ கூறிச் சென் றார்.

    முறைகேடுகள் தடுக்கப்படும்

    ஆனால் ஆட்சியர் காரணம் இல்லாமல் காவல் துறையினரை ஒருமையில் திட்டியதாக சிலர், சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வருகின்றனர்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மிக முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படாவிட்டாலும், கூட்டம் கூட்டமாக பொதுமக்களை காவல் துறையினர் அழைத்து வருவது குறைந்துள்ளது.

    காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் ஜூலை 1 முதல் நடை பெற்று வருகிறது. 41-ம் நாள் உற்சவமான நேற்று அத்திவரதர் கத்தரிப்பூ நிறப் பட்டாடை அணிந்து காட்சி அளித்தார். அத்திவரதரை தரிசிப்பதற்கான கடைசி சனிக் கிழமை இதுதான் என்பதால், சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் நீண்ட வரிசை யில் காத்து நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

    அத்திவரதர் வைபவம் ஜூலை 17-ம் தேதியும், தரிசனம் ஜூலை 16-ம் தேதியும் முடிவடைய இருப்பதால் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிக ரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதைத் தொடர்ந்து தற் போதுள்ள வரிசையை தாண்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால் அவர்களை வரிசைப்படுத்த காஞ்சி புரம் - செங்கல்பட்டு சாலையில் டி.கே.நம்பி தெருவில் இருந்து செட்டித் தெரு வரை தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் நடந்து செல்வதற் கும், சில பகுதிகளில் மட்டும் மோட்டார் சைக்கிள்கள் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது. பொது தரிசனத்துக்கு வரும் பொதுமக்கள் டி.கே.நம்பி தெருவில் நின்று அண்ணா நினைவு இல்லம் வழி யாகச் சென்று அதற்கு எதிர்புறத்தில் உள்ள அண்ணா அவென்யூ பகுதியில் இருக்கும் தங்கும் இடம் வழியாக அனுப்பப்பட்டனர். பின்னர் அங்கிருந்து கோயில் மதில் சுவர் ஓரம் செல்லும் வரிசை கிழக்கு கோபுரத்தில் நுழைந்து அங்கு ஒரு தங்குமிடம் வழியாகச் சென்று அதைக் கடந்து 750 மீட்டர் வரிசையில் சென்றால் அத்திவரதர் இருக்கும் வசந்த மண்டபத்தை அடைய முடியும்.

    இதேபோல் தெற்குமாட வீதி வழியாக வரும் வரிசை கிழக்கு கோபுரத்தில் நுழையும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் வரிசையில் செல்லும் வழியில் தங்குமிடங்களில் கழிப்பிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆங்காங்கே குடிநீர் வழங்கப்படு கிறது. சில நேரங்களில் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. வரிசை யில் வரும் பக்தர்கள் கழிப்பிடங் களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

    உணவுத் துறை அமைச்சர் காமராஜ், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், பாஜக தேசிய செயலரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான முரளிதர ராவ், எழுத்தாளரும் இந்திய ஆட்சிப்பணித் துறை அதிகாரியுமான வெ.இறையன்பு, பிரபல டிரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணி, பாப்புவா நியூ கினியா நாட்டின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு அமைச்சகத்தின் அமைச்சரான சசீந்திரன் முத்துவேல் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நேற்று அத்திவரதரை தரிசனம் செய் தனர்.

    ஆட்சியர் மீது போலீஸார் அதிருப்தி

    போலீஸாரின் அத்துமீறல்கள் குறித்து பக்தர்கள் குற்றச்சாட்டுகளை கிளப்பியதை தொடர்ந்து, விவிஐபி, விஐபி தரிசன வரிசையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், போலீஸாரை கடுமையாக எச்சரித்தார். இதுதொடர்பான வீடியோ நேற்று சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.

    இதனால் கோபமடைந்த போலீஸார், பதிலுக்கு தங்களது குமுறல்களையும் பதிவு செய்து வருகின்றனர். அதில், ‘இரவு பகலாக குடும்பத்தை மறந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஒட்டுமொத்த போலீஸாரையும் அவமதிக்கும் விதமாக ஒருமையில் ஆட்சியர் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரபல ரவுடி ஒருவருக்கு விவிஐபி அந்தஸ்து கொடுத்து தரிசனத்துக்கு அனுமதித்தது யார்?’ என்று போலீஸார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    மருத்துவர்கள் போராட்டத்தால் சலசலப்பு

    அத்திவரதர் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு உதவ மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்காக ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், விவிஐபி வரிசைஅருகே உள்ள முகாமில் பணியாற்றும் மருத்துவர்கள் நேற்று பணிக்கு வந்தபோது, போலீஸார் அவர்களை அனுமதிக்க மறுத்து ஒருமையில் பேசியதாகவும், சில மருத்துவர்களின் அடையாள அட்டைகளை போலீஸார் கிழித்து எறிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மருத்துவர்கள் நேற்று தங்களின் பணிகளை புறக்கணித்து விவிஐபி வரிசை அருகே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி கண்ணன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மருத்துவர்களிடம் தவறாக நடந்துகொண்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
    ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள்கோவில் 6 வழி சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக படுத்திருக்கும் மாடுகள்




    ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள்கோவில் 6 வழி சாலையில் மாடுகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக படுத்திருக்கிறது.

    பதிவு: ஆகஸ்ட் 11, 2019 03:25 AM

    படப்பை,

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 6 வழி சாலைகளில் முக்கிய சாலையாக சிங்கபெருமாள்கோவில்- ஸ்ரீபெரும்புதூர் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நாள் தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள் வரை செல்கிறது. இந்தநிலையில் ஒரகடம், வல்லக்கோட்டை போன்ற பகுதிகளில் மாடுகள் அதிகமாக சுற்றி திரிகின்றன மேலும் ஒரகடம் வல்லக்கோட்டை பகுதிகளில் 6 வழி சாலையை ஆக்கிரமித்து சாலையின் நடுவில் அதிகமாக மாடுகள் படுத்துக் கொள்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனும் செல்கின்றனர்.

    அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் ஒரகடம் பகுதி உள்ளது. ஆகவே இந்த மாடுகளை பிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அத்தி வரதர் எழுந்தருளும் நீராழி மண்டபம் புதுப்பிக்க முடிவு

    Added : ஆக 11, 2019 02:50




    காஞ்சிபுரம்:காஞ்சி அத்தி வரதர் எழுந்தருளும் நீராழி மண்டபத்தை, பழைமை மாறாமல், புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் வளாக அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில், அத்தி வரதர் எழுந்தருளியிருந்தார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எடுத்து, சிறப்பு வழிபாடு நடைபெறும் வைபவம், ஜூலை 1ம் தேதியில் இருந்து, வரதராஜ பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.கடந்த, 31 நாட்கள், சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்தி வரதர், ஆக. 1 முதல், நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.தினசரி பெருமாளை தரிசிக்க லட்கக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில், அத்தி வரதர் வீற்றியிருக்கும் மண்டபத்தை, நேற்று முன்தினம், சென்னை உயர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
    இதில், ஹிந்து அறநிலையத் துறை திருப்பணி கூடுதல் ஆணையர் வான்மதி தலைமையில், தொல்லியல் துறை வல்லுனர்கள், அறநிலையத் துறை ஸ்தபதி, பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.சில தினங்களில், அந்த நீராழி மண்டபத்தை பழைமை மாறாமல், புதுப்பிக்கும் பணி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, இணை ஆணையர் செந்தில்வேலவன், செயல் அலுவலர்கள், தியாகராஜன், குமரன், வெள்ளைச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
    கலெக்டர், 'டோஸ்'

    வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட, 'பாஸ்' இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுவர்.அந்த வழியில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர், பாஸ் இல்லாமல் நேற்று முன்தினம் இரவு, பலரை உள்ளே செல்ல அனுப்பியுள்ளார்.அந்த நேரத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, அங்கு சென்று பார்த்து, கண்டு பிடித்தார். எவ்வளவு பேர் காத்திருக்கின்றனர் என, சத்தம் போட்டார்.பின், ஐ.ஜி.,யிடம் சொல்லி, அந்த ஆய்வாளரை, தாற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என, கூறினார். அதன் பின், பாஸ் இல்லாமல் செல்வது குறைந்தது.ஆனால், கலெக்டர் சென்ற சில மணி நேரத்தில், வழக்கம் போல் பழைய நிலையே ஏற்பட்டது.இதையெல்லாம், போலீசார் நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது

    .வி.வி.ஐ.பி., பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருப்பு

    காஞ்சி அத்தி வரதர் தரிசனத்தில், வி.வி.ஐ.பி., வழியில். நான்கு மணி நேரமும். பொது தரிசனத்தில், 10 மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதுவரை அத்தி வரதரை, 80 லட்சத்திற்கும் அதிகமானோர், தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து விடுமுறை வருவதால், இன்னும் கூட்டம் அதிகமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தை சமாளிக்க, அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.'பாஸ்' பெறுவதற்காக, கலெக்டர் அலுவலகத்தில், தினசரி ஏராளமானோர் காத்திருப்பதால், 'பாஸ்' வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கலெக்டர் வீட்டுக்கு சென்று, வெளியில் நிறைய பேர் காத்திருப்பதால், அங்கு, கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    108 அத்தி வரதரை தரிசிக்க 108 வேண்டுமே! அலைமோதும் பக்தர்களுக்கு அருள்புரிவாரா?

    Added : ஆக 11, 2019 02:19

    பட்டாச்சாரியார்களை சமாதானப்படுத்தி, அத்திவரதர் தரிசன வைபவத்தை, 108 நாட்கள் நீட்டிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களின் கருத்தாக உள்ளது.

    காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள, அனந்த சரஸ் குளத்தில் இருந்து, அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கடைசியாக, 1979ல், அத்தி வரதர் அனந்த சரஸ் குளத்திலிருந்து எழுந்தருளினார்.அடுத்து, 40 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு அனந்த சரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளி, ஜூலை, 1 முதல், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.தினமும், மூன்று லட்சம் பக்தர்கள் வரை, தரிசனத்திற்கு வருகின்றனர். நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் குவிவதால், அவர்களை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது.'அத்தி வரதர், அடுத்த முறை எழுந்தருளும் போது, நாம் இருப்போமா என்பது தெரியாது; எனவே, இம்முறை எப்படியும் பார்த்துவிட வேண்டும்' என்ற வேண்டுதலில், வயதை மறந்து, அனைவரும் குவிகின்றனர். தரிசனம், 48 நாட்கள் மட்டுமே என்பதால், கூட்டம் அதிகம் குவிவதற்கு காரணமாக உள்ளது.தற்போது, மாவட்ட நிர்வாகம், 'ஆக., 16 வரை மட்டுமே, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்' என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக, 'அனைத்து சாலைகளும், காஞ்சியை நோக்கி' என்ற வகையில், காஞ்சிபுரத்தில் வாகனங்கள் குவிகின்றன; வாகனங்களை நிறுத்தக்கூட இடம் கிடைக்கவில்லை.எப்படியும் அத்தி வரதரை தரிசித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில், பக்தர்கள் பல மணி நேரம், வரிசையில் காத்திருக்கின்றனர்.

    தொடர்ந்து பக்தர்கள் குவிவதால், உள்ளூர்வாசிகளும் பெரும் சிரமப்படுகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து வந்து, அத்தி வரதரை தரிசிக்க முடியாமல், திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது.எனவே, 48 நாட்கள் தரிசனம் என்பதற்கு பதிலாக, அத்தி வரதர் தரிசனத்தை, 108 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது, பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், கோவில் பட்டாச்சாரியார்கள், 'ஆகம விதிப்படி, 48 நாட்கள் தான் அனுமதிக்க முடியும்' என, கூறி உள்ளனர். ஆனால், ஏற்கனவே, 40 நாட்கள், 48 நாட்கள் என, அத்தி வரதர் தரிசன வைபவம் நடந்ததற்கு, ஆவணங்கள் உள்ளதாக, அதிகாரிகள் கூறுகின்றனர்.கோவில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு, ஆகம விதிமுறைகளின்படி, பூஜை நடப்பது வழக்கம். ஆனால், அத்திவரதருக்கு, ஆகம விதிகளின்படி பூஜை நடப்பதில்லை. முன்பு, மக்கள் தொகை குறைவு என்பதால், 48 நாட்கள் போதுமானதாக இருந்தது.இம்முறை, எப்போதும் இல்லாத அளவிற்கு, பக்தர்கள் குவிகின்றனர். அத்தி வரதரின் அருளால், ஹிந்துக்கள் மத்தியில் எழுச்சியும், விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. எனவே, 48 நாட்களை, 108 நாட்களுக்கு நீட்டிப்பது, ஆகம விதிகளுக்கு முரணாகாது என்பது, பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது.

    எனவே, பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று, பட்டாச்சாரியார்களை சமாதானப்படுத்தி, அத்திவரதர் தரிசன வைபவத்தை, 108 நாட்கள் நீட்டிக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.கூட்டம் அதிகமாக இருப்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள், இன்னும் கோவிலுக்கு வராமல் உள்ளனர். அனைவரும் அத்தி வரதரை தரிசிக்க விரும்புகின்றனர். அதனால், கால நீட்டிப்பு செய்வதே நல்லது. கோவில் நிர்வாகமும், பட்டாச்சாரியார்களும், இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்..- வி.சுகுமார், ராணிப்பேட்டை.

    ஒரு மண்டலத்துக்கு அத்தி வரதர் தரிசனம் என்றார்கள். பக்தர்கள் கூட்டத்தை பார்க்கும்போது, ஒரு மண்டலம் போதாது என, தோன்றுகிறது. 108 திவ்ய தேசங்களை குறிக்கும் வகையில், 108 நாட்கள் நீட்டிப்பு செய்ய வேண்டும்.- எஸ்.வள்ளி, சென்னை

    நகருக்குள் எந்த பகுதிக்கு சென்றாலும், பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர். பல லட்சம் பக்தர்கள் வருவதால், அத்தி வரதரை அவ்வளவு எளிதாக பார்க்க முடியவில்லை. அத்தி வரதர் வைபவத்தை நீட்டித்தால், மிகவும் நன்றாக இருக்கும்.- என்.சுனிதா, கன்னியாகுமரி
    பல மணி நேரம் பயணித்து வந்த நாங்கள், அத்தி வரதரை தரிசிக்க, எட்டு மணி நேரமாக காத்துக் கிடந்ததால், நடக்கக் கூட முடியாமல் சோர்வடைந்தோம். நெரிசலில் சிக்கி, சிலர் இறந்ததாகவும் கூறுகின்றனர். சிக்கலுக்கு தீர்வு காண, தரிசனத்தை மேலும் பல நாட்கள் நீட்டிக்கலாம்.எம்.ராமராஜ், மதுரைதரிசனத்திற்கு சில நாட்களே உள்ளதால், பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிகின்றனர். வரும் நாட்களில், பக்தர்கள் குவிவர் என்பதால், பெரும் நெருக்கடி ஏற்படும். கால நீட்டிப்பு செய்தால், ஓரளவு நிலைமையை சமாளிக்கலாம்.- கோ.அ.அருணேஸ்வரன், கோவை

    அத்தி வரதரை, 40 ஆண்டுகளுக்கு பின் தான் பார்க்க முடியும் என்பதால், பக்தர்கள் சிரமமின்றி பார்க்க, 108 நாட்களாவது, தரிசன நாட்களை நீட்டிக்கலாம்.- கே.சேது, மேலுார்.

    'அத்தி வரதரை தரிசிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. கூட்டத்தில், அவ்வளவு சிரமப்பட்டோம். லட்சம் பக்தர்கள், இன்னமும் தரிசிக்காமல் உள்ளனர். அவர்களும் தரிசிக்க ஏதுவாக, அத்தி வரதர் வைபவத்தை, கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.- கே.ஜெயந்தி, புதுச்சேரி
    அத்தி வரதரை நாங்கள் தரிசித்தது, மகிழ்ச்சி அளிக்கிறது; மிகுந்த சிரமப்பட்டு தரிசனம் செய்தோம். அடுத்து வரும் நாட்களில், பக்தர்கள் மிகுந்த சிரமப்படுவர். நிலைமையை சமாளிக்க, கால நீட்டிப்பு செய்வது தான் தீர்வாக அமையும்.- பி.சுதாராணி, ராமநாதபுரம்.
    இங்கு இருக்கிற சூழலை பார்க்கும்போது, தரிசன நாட்களை, 108 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்தால் தவறில்லை என, தோன்றுகிறது.-ஏ.முத்து, மதுரை.

    முதல்வரிடம் குவியட்டும்பக்தர்களின் கோரிக்கைகள்!
    இதுவரை, 80 லட்சத்திற்கும் அதிகமானோர், அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். மேலும், பல லட்சம் பேர் வந்த வண்ணம் உள்ளதால், அத்திவரதர் தரிசனத்தை 108 நாட்களுக்கு நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, பக்தர்கள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு, 'முதல்வர் தனிப்பிரிவு, தலைமை செயலகம், சென்னை -- 600009' என்ற முகவரிக்கு, கடிதம் அனுப்பலாம்; தொலைபேசியிலும் பேசலாம்.அலுவலக தொலைப்பேசி எண்: 044- - 25671764; பேக்ஸ்: 044 -- 25676929; இமெயில்: cmcell@tn.gov.in. முதல்வர் அலுவலக தொலைபேசி எண்: 044 - 25671525; பேக்ஸ் எண்: 044 - 25671441 மற்றும் இ - மெயில் முகவரி: tncmoffice@gmail.com
    - நமது நிருபர் -
    அனாதை உடல்கள் அடக்கம் தனி மனிதனின் தன்னலமற்ற சேவை

    Added : ஆக 10, 2019 22:48





    நாகப்பட்டினம் : ''நான் செய்யும் உதவி, சம்பந்தப்பட்டவருக்கு தெரியப் போவதில்லை; அவர்களும், நமக்கு உதவப் போவதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, இந்த சேவையில், ஆத்ம திருப்தி கிடைக்கிறது,'' என்கிறார், தன்னலமற்ற சேவையின் மறுஉருவமாய் இருக்கும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, ராஜேந்திரன். நாகை, பெருமாள் வடக்கு வீதியைச் சேர்ந்தவர், ராஜேந்திரன், 67; கட்டட ஒப்பந்தக்காரர்.

    விருது வேண்டாம்

    இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட, அனாதை உடல்களை, தன் சொந்த செலவில் எடுத்துச் சென்று, ஈம காரியங்கள் செய்து, இடுகாட்டில் புதைத்து வருகிறார். இந்த சேவைக்காக, இதுவரை, யாரிடமும், 1 ரூபாய் பெற்றதில்லை என்பது, இவரின் தன்னலமற்ற சேவைக்கான எடுத்துக்காட்டு. கடந்த, 2012ல், தன் நண்பரின் உறவினர் இறந்ததால், உடலை அடக்கம் செய்ய, நாகை இடுகாட்டிற்கு சென்றார். அங்கு மனித சடலம் ஒன்றை, நாய்கள் குதறிக் கொண்டு இருந்தன. அதிர்ச்சிஅடைந்த ராஜேந்திரன், அங்கிருந்த ஊழியர்களிடம், இது குறித்து கேட்டபோது, அவர்கள், 'அது, அனாதை பிணம். நகராட்சி ஊழியர்கள், இடுகாட்டின் ஒதுக்குப்புறமாக வீசிட்டு போயிடுறாங்க...' என, வேதனையுடன் தெரிவித்தனர்.

    அன்றிலிருந்து, அனாதை உடல்களுக்கு, இறுதி சடங்கு செய்வதை, அவர் தொடர்ந்து செய்து வருகிறார். ஜாதி, மதம் பாராமல், குழந்தை, முதியவர் என, இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட உடல்களை புதைத்திருக்கிறார். எய்ட்ஸ் உட்பட, கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டோர், மரணத்தை தழுவியோரை, உறவினர்கள் கூட, நெருங்கி வர தயங்குவர். அப்போதும் ராஜேந்திரன், தனி மனிதனாக, உடலை, பிணவறைக்கு சுமந்து எடுத்துச் சென்று, பாதுகாத்து, பின் அடக்கம் செய்து வருகிறார். அனாதை உடல்களை புதைப்பதற்காகவே, தனி அலுவலகம் திறந்து வைத்திருக்கிறார்.

    அங்கு, இறுதி சடங்கு செய்தவற்கு தேவையான, சந்தனம், விபூதி, நவதானி யங்கள், சாம்பிராணி, ஊதுபத்தி, அரிசி, பன்னீர் பாட்டில்கள், துணிகள், சில்லரை நாணயங்களை சேமித்து வைத்துள்ளார். சுற்றுலா பகுதிகளான வேளாங்கண்ணி, நாகூருக்கு வந்து, தற்கொலை செய்தோர், கடலில் மூழ்கி, அடையாளம் தெரியாத உடல்கள், வீதியில், மருத்துவமனையில் ஆதர வற்ற நிலையில் இறந்து கிடப்போரின் உடல்களை, போலீசார் அனுமதியோடு, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்.

    அங்கு, பிணவறையில், மூன்று நாட்கள் பாதுகாத்து வைக்கிறார். உறவுகள் யாரும் தேடி வராத நிலையில், போலீசாரிடம் அனுமதி பெற்று, இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று, ஹிந்து முறைப்படி, அனைத்து சடங்குகளையும் செய்கிறார். ஒரு சடலத்தை அடக்கம் செய்வதற்கு, குறைந்தது, 3,000 ரூபாய் செலவாகும் நிலையில், மற்றவர்களிடம் இருந்து, 1 ரூபாயோ அல்லது பொருட்களோ பெற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். மாதத்தில், 10க்கும் மேற்பட்ட உடல்கள் வரை அடக்கம் செய்பவர், தேவையான பணத்திற்காக, தன் நிலத்தை விற்பனை செய்து, அதிலிருந்து செலவு செய்து வருகிறார்.

    இறந்தவரின் நெற்றியில் வைக்கப்படும், 1 ரூபாய், வாய்க்கரிசியில் போடும் நாணயங்களைக் கூட மற்ற வர்கள் தருவதற்கு, இவர் அனுமதிப்பதில்லை. சில அமைப்புகள், இவருக்கு விருது தர முன்வந்த போது, 'யாருக்கு உதவி செய்யுறேன்னு, எனக்கும் தெரியாது; யாரு உதவி செய்யுறதுன்னு, அவங்களுக்கும் தெரியாது. அப்புறம் எதுக்குங்க விருது?' என, அதையும் வேண்டாம் என, உதறியுள்ளார்.

    இது குறித்து, ராஜேந்திரன் கூறியதாவது: இறந்தவர், எந்த உதவியும் கேட்பது இல்லை. நாம் செய்யும் உதவியும், அவருக்கு தெரியப் போவதில்லை; அவர்களும், நமக்கு உதவப் போவதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, இந்த சேவையில், ஆத்ம திருப்தி கிடைக்கிறது. யாருக்கும் தெரியாது பலர், 'பண உதவி செய்கிறேன்' என, சொல்கின்றனர். 'அது வேண்டாம்' என, மறுத்து விடுவேன். அதேநேரம், உடல்ரீதியான உதவிகள் செய்ய, எவரும் முன்வருவதில்லை. எந்த உடலையும் எரிப்பதில்லை. சில நேரங்களில், உடல் அடக்கம் செய்து, பல நாட்களுக்கு பின், உறவினர்கள் தேடி வருகின்றனர்.

    வாழும்போது, எப்படி இருக்கிறோம் என்பது, அவரவர் கையில் இருக்கிறது; இறந்த பின், என்ன நடக்கும் என்பது, யாருக்கும் தெரியாது. அதனால் தான், இந்த சேவை செய்து வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார். இவரை பாராட்ட, 9443526585 என்ற, மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


    பதிவாளர் தேர்வு இழுபறி நேர்காணல் நடப்பது எப்போது

    Added : ஆக 11, 2019 04:52

    மதுரை:மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் தேர்வு பணியில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
    இப்பல்கலை ரெகுலர் பதிவாளர் பதவிக்கு 24 பேர் விண்ணப்பித்தனர். 

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளர் சந்தோஷ்பாபு, அழகப்பா பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் ஜெயகாந்தன், பாரதியார் பல்கலை ஓய்வு பேராசிரியர் ஜெயக்குமார் தேர்வு குழு விண்ணப்பங்களை பரிசீலித்தது.குற்ற பின்னணியுள்ள இருவர் உட்பட 20 பேரை ஏற்றும், நால்வரின் விண்ணப்பத்தை நிராகரித்தும் ஜூலை 29ல் தேர்வு குழு அறிவித்தது. ஆனால் அதையடுத்து நேர்காணலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. 

    துணைவேந்தர் தலைமையில் அதற்கான குழுவை கூட இன்னும் முடிவு செய்யாமல் இழுபறி நீடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: பதிவாளர் தேர்வில் ஆரம்பத்தில் இருந்தே இழுபறி நீடிக்கிறது. இதன் மர்மம் விளங்கவில்லை. விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின் நேர்காணல் நடத்த இரண்டு வாரம் அவகாசம் அளிக்க வழிவகை உண்டு. இதன்படி பார்த்தாலும் ஆக., மூன்றாவது வாரம் நேர்காணல் நடத்த வேண்டும். ஆனால் நேர்காணல் தேர்வு குழு கூட இன்னும் முடிவு செய்யப்படவில்லை

    .இதற்கிடையே நேர்காணல் பட்டியலில் இடம்பெற்ற குற்றப் பின்னணியுள்ள இருவர், தங்கள் மீதான வழக்குகளை சரிக்கட்டி நேர்காணலில் பங்கேற்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே யூகங்களுக்கு முடிவு கட்டும் வகையில் விரைவில் புதிய பதிவாளரை அறிவிக்க துணைவேந்தர் கிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    HC upholds life sentence awarded to woman who killed her twin sons by poisoning them

    DECCAN CHRONICLE. | J STALIN

    PublishedAug 11, 2019, 2:39 am IST

    The accused had developed illegal intimacy with one Suresh and on knowing the same, her husband condemned the same.



    Madras high court

    CHENNAI: The Madras high court has upheld the life sentence awarded to a woman, who killed her 5-year-old twin sons by administering poison to them and allegedly attempted to commit suicide, following a quarrel between her and her paramour on March 28, 2003 in Dindigul district.

    A division bench comprising M.Sathyanarayanan and B.Pugalendhi partly allowed an appeal filed by the accused Nagarathenim, challenging the conviction and sentence of life imprisonment awarded to her by the Additional District and Sessions Court, Dindigul district, dated January 10, 2015. The bench however set aside the one year sentence awarded to her by the trial court for an offence under section 309 IPC (attempt to commit suicide).

    The prosecution case was that the accused was married to one Raju and they were having twin sons namely Ramar and Lakshmanan, aged about 5 years. The accused had developed illegal intimacy with one Suresh and on knowing the same, her husband condemned the same. On seeing the accused talking to one flower merchant, her paramour Suresh also got infuriated, came to the accused house on March 28, 2003 around 8 a.m. and scolded her for having contact with the flower merchant, quarreled with her and also beaten her. The appellant, who already lost the love and affection of her husband on account of her relationship with Suresh, got disappointed over the quarrel picked up by her paramour Suresh, decided to commit suicide long with her children and she gave pesticide to her children. Lakshmanan after consuming it, ran to the house of her sister and informed her daughter that his mother was giving some medicine to his brother. Her sister Unnamalaiammal and her daughter rushed to their house and prevented Nagarathenim from consuming pesticide and took the children to the hospital, where the doctor informed them that the children were dead. Thereafter, the appellant went to the office of the Village Administrative Officer and gave her extra judicial confession statement about the occurrence and based on the same the police registered a case and arrested her on the next day.

    R.Alagumani, counsel for the appellant submitted that the entire case rests upon the circumstantial evidence and all the witnesses except the official witnesses, have turned hostile and the motive was not established and the extra judicial confession statement said to have been recorded by the VAO was a very weak piece of evidence, with which the appellant was convicted, she added.

    The bench said from the available evidence, the circumstances were found as against the accused. They were the evidence of Lalitha, Child Welfare Officer, that the accused had taken children from Anganwadi centre on March 28, 2003 on the pretext, she was taking them to an outstation. evidence of the sister of the accused that her sister’s son Lakshmanan came to their house weeping and informed her that his mother was administering some medicine to his brother, the doctor who conducted the postmortem gave his opinion that the children died due to endosulphan poisoning, the investigating officer recovered a 250 ml Sicosulfan-35, a fertilizer content of Endosulphan from the cattle shed opposite to the accused house and also 3 stainless steel tumblers, the chemical analysis report disclosed the presence of poison Endosulphan and the evidence of Inspector of Police, Finger Print Division, that the finger print of the accused tallied with the finger print of the photo taken from the tumbler, the bench added.

    Confirming the conviction and sentence of life imprisonment, the bench said it was open to the government to consider the case of the appellant in the light of G.O dated February 1, 2018 (for premature release) and also taking into account, the period of her incarceration (more than 16 years).
    BIZARRE: Man gets married before father's corpse in Villupuram

    In such an incident that one could not have witnessed even in films, a couple got married before the corpse of groom’s dead father.

    Published: 11th August 2019 05:18 AM 



    The couple – Alexander and Jagadeswari – and relatives pose for family photo with corpse of Deivamani

    By Express News Service

    VILLUPURAM: In such an incident that one could not have witnessed even in films, a couple got married before the corpse of groom’s dead father. The incident took place in Tindivanam on Friday.

    D Alexander (30) from Singanur village in Tindivanam had his wedding with B Jagadeswari (24) scheduled on September 2. The couple are working as teachers at a private school.

    While their wedding invitations were being sent to friends and relatives, the man’s ailing father Deivamani (50) died on Friday.

    With a broken heart, Alexander decided to get married before his father’s dead body. Close relatives and family members were present when he had the mangalasutra handed from his father and tied the knot amidst the grief, said a relative of Jagadeswari. A wedding reception is likely to be held next month, said sources.
    Foreign medical graduates share expertise at conference

    11/08/2019, STAFF REPORTER,MADURAI

    Doctors from across the globe came together to discuss specific topics on multiple specialities at the third edition of Foreign Medical Graduates Medical Conference here on Saturday.

    Out of over 300 delegates, some came from countries like Russia, Sri Lanka, Germany also.

    Chief Operating Officer, Apollo Speciality Hospitals, Rohini Shridhar, Chairman of Velammal Educational Trust M.V. Muthuramalingam, and Chairman of Preethi Hospital R. Sivakumar inaugurated the conference.

    Dr. Shridhar said that the rising number of medical graduates was a boon to the Apollo group since they came with a sufficient expertise and administrative experience making it a win-win situation for the hospital.

    Mr. Muthuramalingam said that the Velammal Medical Hospital had several students from foreign universities. Many of them chose to intern at the hospital and were role models to other students.

    Dr. Sivakumar said that he expected a higher percentage of graduates to learn specialities suitable for the Indian context.

    Organising chairman of the conference N. Chandran said, “Foreign graduates need not be looked as inferior doctors. They get a whiff of what life is all about by studying in foreign countries. If a doctor is passionate and is willing to travel to seek opportunities and make the country proud, then he or she is what we need.”

    Oncologist and plastic surgeon and founder of Eurasian Federation of Oncology Somasundaram Subramanian spoke on early detection being the best method to cure cancer.

    “The community must be educated about how early detection is done. I am a cancer survivor and it becomes the job of all communities including NGOs and journalists to create awareness,” he said.
    MKU sexual harassment case: top official petitioned

    11/08/2019, PON VASANTH B.A.,CHENNAI

    A research scholar at Madurai Kamaraj University who filed a sexual harassment complaint against her research guide and Head of the Centre for Film and Electronic Media Studies, K. Karnamaharajan, has petitioned the Higher Education Secretary, alleging inaction by the university.

    The petitioner said that despite the Internal Complaints Committee finding the professor guilty and the Syndicate passing a resolution to terminate his service, he continued to work there.

    “The university has gone to the extent of issuing clearance to allow him to apply for the post of Registrar of MKU and Central University of Tamil Nadu,” she told The Hindu.
    ‘NMC, autonomous boards to come up within six months’

    11.08.2019
    The National Medical Commission will be constituted within six months, kick-starting the process of reforms to eliminate corruption from medical education, health minister Harsh Vardhan, who nurtures a dream of “disease-free India”, tells Sushmi Dey

    • What is your vision for enforcement of the legislation touted as a reform in the medical education sector?

    We will be constituting the National Medical Commission, the Medical Advisory Council and the four autonomous boards in a very early time frame but in no case later than six months from now.

    • What are the features of the bill that you think will support medical reforms and eliminate corruption?

    MCI was a body comprising of about 130 members and did not keep pace with modern times. The NMC would comprise of 33 members including members from the premier institutions of the country. This will bring accountability, transparency and quality in the governance of medical education. The division of functions between the four boards would lead to greater efficiency. NEXT (National Exit Test) would enable NMC to move away from a system of repeated inspection of infrastructure. The reduction in licence raj would manifest in ease of business and elimination of corrupt practices. NEET and common counselling would extend to all medical institutions in the country and would eliminate any kind of capitation fee in admission to medical colleges.

    • The medical fraternity is upset about the legislation. How will you assure them?

    I would like to assure through you the medical fraternity that the new system will improve access to quality and affordable education and ensure availability of adequate and qualified medical professionals in all parts of the country. It would enforce high ethical standards, provide an effective grievance redressal mechanism and institute processes that are flexible to adapt to changing needs with time. NEXT is designed to ensure uniform standards of medical education in India and reduce the number of exams. Medical institutions would be forced to improve the standards since performance in NEXT would determine the rating of the institution to a large extent. In case of failing in NEXT, a student would be able to reappear for registration purpose and for improving rank for PG admission.

    • The move to allow community health providers to prescribe allopathy medicines in a limited way has given rise to many concerns.

    The commission, after consultation with the stakeholders, would decide the qualifying criteria for grant of limited license to CHPs. A misconception is being spread that the provision for community health providers is meant to legalize quacks working in India. On the contrary, the NMC bill proposes enhanced punishment for quacks with imprisonment up to one year and fine up to ₹5 lakhs.

    • There are concerns that the cap on fees has actually been reduced from 85% to 50% of the seats through this legislation.

    There was no provision in the Indian Medical Council Act, 1956 for regulation of fee. At present the fee is being regulated by the Committees constituted by the respective state governments. Nearly 50% of the total MBBS seats in India are in government colleges, which have nominal fees. Of the remaining seats, 50% would be regulated by NMC at the central level. This means that almost 75% of total seats in the country would be available at reasonable fees. For the remaining seats, states may regulate the fee.

    • Several states have raised concerns that not all medical colleges are at par to appear for a uniform exam.

    The Medical Assessment and Rating Board would grant permission to medical colleges based on their compliance with the minimum standards as prescribed by the UG Board and maintain oversight at all times.



    OPTIMISTIC: Union health minister Harsh Vardhan

    Saturday, August 10, 2019

    டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானம் தரை இறங்கும்போது சக்கரங்கள் இயங்காததால் பரபரப்பு-143 பேர் உயிர் தப்பினர்

    டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானம் தரை இறங்கும்போது சக்கரங்கள் இயங்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு பத்திரமாக தரை இறக்கப்பட்டதால் 143 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பதிவு: ஆகஸ்ட் 09, 2019 04:15 AM

    ஆலந்தூர்,

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்நாட்டு முனையத்துக்கு டெல்லியில் இருந்து 138 பயணிகள், 5 விமான ஊழியர்களுடன் விமானம் ஒன்று வந்தது. விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சித்தார்.

    அப்போது விமானத்தின் சக்கரங்கள் இயங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, விமானத்தை தரை இறக்காமல் வானத்தில் சிறிதுநேரம் வட்டமடித்தார். பின்னர் இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், வீரர்களுடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன. மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டதுடன், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பயணிகளை மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    பின்னர் விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் விமானம் தரை இறக்கப்பட்டது. அப்போது இயங்காமல் இருந்த சக்கரங்கள் திடீரென இயங்கத் தொடங்கியது.

    எனவே விமானம் பத்திரமாக தரை இறங்கியது. அதில் இருந்த 143 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    அதன்பின்னரே விமானத்தில் இருந்தவர்களும், விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக நின்றிருந்த அதிகாரிகள் உள்பட அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Woman doc gets Madras high court relief for her PG course study

    DECCAN CHRONICLE.

    PublishedAug 10, 2019, 2:31 am IST

    She sent representations to the authorities to pay full pay and allowances for the period of PG course study.

    Madras high court

    Chennai: The Madras high court has directed authorities to grant benefits to a woman doctor by counting the period of her study of PG course between 2011 and 2014 as service for all purposes and grant full pay and allowances for the said period.

    Allowing the petition by Dr Elamathi Bose, Justice V. Parthiban said it is open to the government to impose reasonable conditions like assurance from the petitioner to serve in the government till she attained superannuation.

    According to petitioner, while she was working under the directoror of public health and preventive medicine, since she could not get a seat either in government institutions or in any surrendered seats in self-financing colleges, she joined PG course for three years in MD (anatomy) in a private deemed university, namely Sree Meenakshi medical college and sent a letter to the DMS to grant special leave under extraordinary circumstances to pursue PG course. In response, the government also granted permission to her. After completing her PG, the government on the basis of her intention, posted her as tutor/assistant professor of anatomy at Madras Medical College.

    She sent representations to the authorities to pay full pay and allowances for the period of PG course study. As there was no response, she filed the present petition. Resisting her claim, additional advocate general Narmada Sampath submitted that since the petitioner could not secure the seat either in the government institution or in the surrendered seats of the self financing colleges under the single window system because of her lower merit, she cannot seek parity in treatment for grant of full pay and allowances.

    The judge said although stiff resistance has been put up on behalf of the government that the candidates who secured their PG degrees through private deemed universities, were not entitled to be granted full pay and allowances, yet, such resistance becomes irrelevant on the basis of the fact that ultimately, the candidate, namely, the petitioner acquired specialized knowledge in anatomy by successfully completing her MD (anatomy) and was re-employed in government service.

    In this case, the petitioner has been serving the government even after her PG, and was willing to abide by any reasonable conditions to be imposed by the government. “Since the petitioner is willing to put use of her specialized knowledge acquired through the PG degree, in discharge of her public duty, her claim in the opinion of this court cannot be treated differently on the specious plea that she has undertaken the course in a private deemed university and not selected through single window system,” the judge added.
    வேலூரில் சுவாரஸ்யம்: ஏசி சண்முகம் தோல்விக்கு நாங்களும் காரணம்: 2530 வாக்குகள் பெற்ற மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க நிர்வாகி பேட்டி



    வேலூர் மக்களவைத் தேர்தலில் கடுமையான போட்டியில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் 2530 வாக்குகள் பெற்றுள்ளது. தாங்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தும் கேட்கவில்லை அதிமுகவின் தோல்விக்கு தாங்களும் ஒரு காரணம் என்று அதன் நிர்வாகி பேட்டி அளித்தார்.

    மக்களவைத் தேர்தலில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட தொகுதியான வேலூர் தொகுதியின் இடைத்தேர்தல் ஆக.5 அன்று நடந்தது. திமுக, அதிமுகவில் மீண்டும் அதே வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 7 ரவுண்டு வரை முன்னணியில் இருந்த அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பின்னர் பின் தங்கினார்.

    பின்னர் இழுபறி நீடித்து வந்த நிலையில் நீண்ட போரட்டத்திற்குப்பின் 8141 என்கிற சொற்ப வாக்கு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வென்றார். நாம் தமிழர் கட்சி 26995 வாக்குகள் பெற்றது, நோட்டாவுக்கு 9417 வாக்குகள் கிடைத்தது. இதில் சுவாரஸ்யமான விஷயமாக மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் 2530 வாக்குகள் பெற்றுள்ளது.



    இதுகுறித்து மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செல்லப்பாண்டியனிடம் பேசியபோது அவர் கூறியது:

    இந்தத்தேர்தலில் நீங்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிட்டீர்கள்?


    பாட்டில் சின்னத்தில்தான்

    அவர்களே ஒதுக்கினார்களா?


    இல்லை, கேட்டு வாங்கினோம்.

    என்ன கோரிக்கை வைத்து போட்டியிட்டீர்கள்?

    இது மக்களவைத்தேர்தல், அதனால் மதுபான ஆலைகள் விவசாய நிலங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடாது, கடல் நீரிலிருந்துத்தான் மதுபானம் தயாரிக்கணும். இந்த கோரிக்கைக்காக யாரும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.

    பார்களில் போலி மது பானம் அதிகமாக இருக்கிறது, பாட்டிலுக்குமேல் எம்.ஆர்.பி விலையைவிட அதிகம் விற்கிறார்கள். இதையெல்லாம் தடுக்கவேண்டும் என்றால் தமிழ்நாடு அரசால் எதுவும் செய்ய முடியாது.


    இதை உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006-ன் கீழ் மதுபான வகைகளை கொண்டுவந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு பிரச்சினையை கொண்டுபோக முடியும்.

    இந்தச் சட்டத்தில் இந்தியாவில் உள்ள மக்கள் என்ன உணவு சாப்பிட்டாலும் அதில்பாதிப்பு ஏற்பட்டால் புகார் அளிக்கலாம் சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் சொல்லணும்.

    தற்போது அந்தச் சட்டத்தில் மது இல்லையா?

    இல்லை, அதைச் சேர்க்க அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் முயற்சித்தபோது மதுபான அதிபர்கள் வழக்குப்போட்டு தடுத்துவிட்டனர். ஆகவே அதை உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டத்திற்குள் மதுபானங்களை கொண்டுவரவேண்டும்.

    அதனால் என்ன லாபம்?

    போலி மதுபானங்களுக்கு எதிராக வழக்கு போடலாம், ஆல்கஹால் அளவு மாற்றினால் சிக்கிக் கொள்வார்கள், அதிக விலைக்கு விற்க முடியாது இப்படி பல விஷயங்கள் உண்டு.

    அடுத்த கோரிக்கை என்ன?

    மது பான ஆலைகளுக்கு அனுமதி அளிப்பது மத்திய அரசு. ஆகவே மதுபோதை மறுவாழ்வு மையங்களை மாநில அரசுடன் இணைந்து ஆரம்பிக்கவேண்டும்.


    வேறு முக்கிய கோரிக்கை தேர்தலில் வைத்தீர்களா?

    ஆமாம், மதுவிலக்கு அமலில் இல்லாத மாநிலங்களில் சிவப்பு விளக்கு பகுதிகளை அரசு அமைக்கவேண்டுமென்று கோரிக்கை வைத்து பிரச்சாரம் செய்தேன்.

    இது எதிர்மறை கோரிக்கையாக உள்ளதே?

    ஆமாம், மதுகுடிப்பதால் ஏற்படும் சமூக பிரச்சினைகளில், குற்றச்செயல்களில் முக்கியமானது பாலியல் பலாத்காரம், சின்னஞ்சிறு குழந்தைகளும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கும் குற்றச்செயல்கள் அதிகம் நடக்கிறது. இதற்கு மதுபோதை முக்கிய காரணம். ஆகவேதான் இந்தப்பிரச்சினைக்கு மாற்றாக சிவப்பு விளக்கு பகுதியை அமைக்க கோரிக்கை வைக்கிறோம்.

    மேற்குவங்கம், டெல்லி, மும்பையில் இதுபோன்று உள்ளது. மதுவிற்பனை செய்யும் மாநிலங்களில் இந்த கோரிக்கையை பரிசீலிக்க கோரிக்கை வைத்தேன், மதுவால்தான் பாலியல் வன்கொடுமைகளும், விபத்துகளும் அதிகம் நடக்கிறது. மதுவிலக்கு அணைக்கப்படும்வரை சிகப்பு விளக்கை கொண்டுவர நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைப்பேன் என்று பிரச்சாரம் செய்தேன்.

    மதுவால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஆதரவாக கோரிக்கை இல்லையா?

    மதுபானம் அருந்துகிறவர் வாழ்நாள் முழுதும் வீட்டுக்கும், சுற்றத்தாருக்கும் தொல்லை கொடுக்கிறார், வருமானத்தை அழிக்கிறார். வயோதிகத்தில் குடும்பத்துக்கு பாரமாகிவிடுகிறார். தமிழ்நாட்டில் 61.4 சதவீதத்தினர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். அதில் 8 சதவீதத்தினர் பெண்கள்.

    ஆகவே இதுபோன்று மதுவால் வரும் வருமானத்தில் அரசு, அதே மதுவால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உதவி நிதி வழங்கவேண்டும், மதுவால் விதவையான பெண்களின் மறுவாழ்வுக்கு வாழ்வுரிமைத்தொகை மாதம் 5000 வாங்கித்தருவேன் என்று பிரச்சாரத்தில் கோரிக்கை வைத்திருந்தேன்.



    பிரச்சாரத்தில் அதற்கு மக்களிடம் வரவேற்பு இருந்ததா?

    நல்ல வரவேற்பு இருந்தது. வேலூர் தொகுதியில் எனக்கு வாக்கு கிடையாது. என்னை யாருக்கும் தெரியாது, ஆனாலும் வரவேற்பு அளித்துள்ளார்கள். அதற்கு 2530 வாக்குகள் கிடைத்ததே சாட்சி. இதற்குமுன் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டேன் அங்கு கிடைத்தது, 88 வாக்குகள் மட்டுமே.

    பிரச்சாரம் எப்படி செய்தீர்கள்?

    தனி மனிதனாக பிரச்சாரம் செய்தேன், நல்ல வரவேற்பு இருந்தது. அதைத்தான் வாக்குகளாக பார்த்தீர்கள். ஏ.சி.சண்முகம் தோல்விக்கு நாங்களும் ஒரு காரணமாக இருந்தோம் காரணம் 8 ஆயிரம் வாக்குகள்தானே வித்தியாசம். நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று சொன்னபோது அவர்கள் அலட்சியம் செய்தார்கள்.

    பிரச்சாரத்தில் எங்காவது உங்களுக்கு பிரச்சினை வந்ததா?

    நாங்கள்தான் தமிழ்நாடு முழுதும் குடிமகன்கள் இருக்கிறோமே எப்படி பிரச்சினை வரும், நாங்களே ஏழரை எங்ககிட்ட எப்படி இன்னொரு ஏழரை வரும்?

    உள்ளாட்சித்தேர்தலிலும் உங்கள் சங்க ஆட்கள் போட்டியிடுவீர்களா?


    அதற்குமுன் நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றிப்பயணம் தொடரும்.

    முடிவாக என்ன சொல்கிறீர்கள்?

    கட்சிக்கொடி இல்லாத கிராமம் இருக்கும், கட்டிங் போடாத கிராமங்கள் எங்கும் இல்லை.

    நாங்கள் கோப்பையில் கை வைத்தால்தான் யாரும் கோட்டையில் கொடியேற்ற முடியும்.


    இனி குவார்ட்டர், பிரியாணிக்கு ஏமாறமாட்டோம், கோட்டையில் கொடியேற்றாமல் விடமாட்டோம். இதுவே எங்கள் தாரக மந்திரம்.

    இவ்வாறு செல்லப்பண்டியன் தெரிவித்தார்.

    ஏசி சண்முகம்மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்வேலூர் மக்களவைத் தேர்தல்Vellore bi electionதிமுகஅதிமுக
    ஆன்லைன் முன்பதிவு ரயில் டிக்கெட்களுக்கு மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க ஐஆர்சிடிசி முடிவு: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    சென்னை

    ஆன்லைன் முன்பதிவு ரயில் டிக்கெட்களுக்கு மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. கட்டண விபரம் தொடர்பான அறிவிப்பு ஒரு வாரத் தில் வெளியாகும் என ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


    ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும்போது, ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 (சிலீப்பர் வகுப்பு), ரூ.40 (ஏசி வகுப்பு) என சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு, பொதுமக்களை மின்னணு பரிமாற்றத்துக்கு ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. குறிப் பாக, ஆன்லைனில் பதிவு செய்யப் படும் ரயில் டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் கிடையாது என அறிவித்தது. இந்த அறிவிப் புக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆன் லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் 75 சதவீதமாக அதிகரித்தது.

     சேவை கட்டணம் ரத்து மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டு தோறும் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே, சேவை கட்டண தொகையை மத் திய அரசு அளிக்க வேண்டுமென ரயில்வே துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலை யில், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் மீண்டும் சேவை கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘மத்திய அரசு 2016, நவம்பரில் கொண்டு வந்த பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, ரயில் டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான சேவை கட்டணத்தை ரத்து செய்தது. இதனால் ஆண்டுதோறும் சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த தொகையை மத்திய அரசு வழங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகி றோம். ஆனால், மத்திய நிதி அமைச்சகம் இதுவரை எந்த பதி லும் அளிக்கவில்லை. மத்திய பட்ஜெட்டிலும் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை.

    இதற்கிடையே, ஐஆர்சிடிசி பணிகளை மேம்படுத்த மீண்டும் சேவை கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பழைய கட்டணமே நீடிக்குமா? அல்லது இதில் மாற்றம் இருக்குமா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.
    தங்க கம்மலை விழுங்கிய கோழி; அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற முயன்றபோது உயிரிழப்பு: சென்னையில் நடந்த பாசப் போராட்டம் 


    தங்க கம்மலை விழுங்கிய கோழி.

    சென்னை

    தங்க கம்மலை விழுங்கிய கோழியை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்தது.

    சென்னை புரசைவாக்கம் நெல் வயல் லேன் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். திருமணமான இவ ருக்கு குழந்தை இல்லை. அதனால், கடந்த ஆண்டு ஒரு நாட்டுக்கோழியை வாங்கி, அதற்கு பூஞ்சி என்று பெயரிட்டு பாசமாக வளர்த்து வந்தார். இவரது அக்காள் மகளும், ஐஏஎஸ் படிப்பவருமான தீபாவும் கோழி மீது அதிகம் பாசம் காட்டி வந்துள்ளார். கோழியும் தீபாவையே சுற்றிக் கொண்டு இருந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 4-ம் தேதி தான் அணிந்திருந்த தங்க கம் மலை கழட்டி வைத்துவிட்டு தீபா தலைவாரிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை சுற்றி வந்த கோழி கம்மலை இரை என நினைத்து கொத்தி விழுங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா, வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதை யடுத்து, அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள கால்நடை டாக்டரிடம் கோழியை தூக்கிச் சென்றனர்.

    எனக்கு கம்மல் முக்கியமில்லை. கோழியின் உயிர்தான் முக்கிய மென டாக்டரிடம் தீபா அழுதுள் ளார். அவரை சமாதானம் செய்த டாக்டர் கோழியை எக்ஸ்ரே எடுத் துப் பார்த்ததில், கோழியின் இரைப் பையில் கம்மல் இருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை செய்து கம்மலை வெளியே எடுத்துவிடலாம் என டாக்டர் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, கடந்த 8-ம் தேதி அறுவை சிகிச்சைக்காக கோழியு டன் சிவக்குமார் சென்றார். கோழிக்கு மயக்க மருந்து கொடுத் தும், செயற்கை சுவாசம் அளித்தும் டாக்டர் அறுவை சிகிச்சையைத் தொடங்கினார். அரை மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையில் கோழியின் இரைப்பையில் குத்திக் கொண்டு இருந்த கம்மலை டாக்டர் எடுத்தார். ஆனால், கோழி பரிதாபமாக உயிரிழந்தது.

    இரைப்பையில் கம்மல் குத்தி காயம் ஏற்பட்டதால் கோழி உயிரி ழந்துவிட்டதாக டாக்டர் தெரிவித் தார். இதைக் கேட்ட சிவக்குமார் கதறி அழுதபடி, கோழியை வீட் டுக்கு தூக்கிச் சென்றார். வீட்டில் இருந்த தீபாவும் கோழியை பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர், உயிரிழந்த கோழியை அடக்கம் செய்தனர்.

    தங்க கம்மலை விழுங்கிய கோழிஅறுவை சிகிச்சைகோழி உயிரிழப்பு
    டாக்டர்கள் போராட்டத்தால் முதல்வர் காப்பீடு திட்ட பணிகள் நிறுத்தம்: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதி


    மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் ஆகிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: க.ஸ்ரீபரத்

    சென்னை

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி போராட்டத் தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், அரசு மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகளை நிறுத்தினர்.

    பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அரசு மருத்துவமனைகளில் நோயா ளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் எண்ணிக்கையை அதி கரிப்பது, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் அரசு டாக்டர்களுக்கு ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு டாக்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இக்கோரிக்கை களை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பல்வேறு அரசு டாக்டர்கள் சங்கங்களை உள்ளடக்கிய தமிழ் நாடு அரசு டாக்டர்கள் கூட்ட மைப்பு தொடங்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு எடுத்த முடிவின்படி, தமிழகம் முழுவதும் அரசு டாக்டர் கள் கடந்த ஜூலை 29-ம் தேதி முதல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனால், பயிற்சி முகாம்கள் நடத்துவது, பிறப்பு - இறப்பு சான்றிதழ் பணி உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், போராட்டத்தின் அடுத்தகட்டமாக, அரசு மருத்துவ மனைகளில் முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகளை டாக்டர்கள் நேற்று முதல் நிறுத்தி யுள்ளனர். இதனால், ஏழை நோயா ளிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

    இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:

    அரசு மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தைத் தான் நிறுத்தி உள்ளோம். அந்த திட்டம் மூலம் நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சையை இலவசமாக அளிக்கிறோம். இதனால், காப்பீட்டு பணம் வராமல் அரசு மருத்துவமனைகளில் வரு வாய் இழப்பு ஏற்படும். இதேநிலை தொடர்ந்தால் காப்பீட்டு பணம் மூலம் மருத்துவமனைக்கு வாங்கப் படும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவது தடைபடும்.

    தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள், அவர்களது குடும்பத் தினர் பங்கேற்கும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும். சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட் டம் சென்னையில் 23-ம் தேதி தொடங்கப்படும். இறுதிகட்டமாக தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் 27-ம் தேதி தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.அரசு டாக்டர்கள், குடும்பத்தினர் பங்கேற்கும் மனித சங்கிலிப் போராட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும். சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் 23-ம் தேதி தொடங்கப்படும்.

    NEWS TODAY 18.12.2025