Wednesday, October 29, 2014

கவிஞர் : வைரமுத்து அந்தந்த வயதுகளில்....

Image result for vairamuthu images

அந்தந்த வயதுகளில்.

இருபதுகளில்...

எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு...
ஜன்னல்களை திறந்து வை...
படி.. எதையும் படி...
வாத்சாயனம் கூடக் காமம் அல்ல - கல்வி தான் படி...
உன் சட்டைப் பொத்தான் கடிகாரம் 
காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம் 
விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்...
சப்தங்கள் படி
சூழ்ச்சிகள் அறி
பூமியில் நின்று வானத்தைப் பார்... 
வானத்தில் நின்று பூமியைப் பார்...
உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி
காதலை சுகி காதலில் அழு...
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

முப்பதுகளில்....

சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு...
உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்
உட்கார முடியாத ஒருவன் 
உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்... கைப்பற்று...
ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே...
எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி...
வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு...
கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு...
நிலைகொள்.

நாற்பதுகளில்...

இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்
செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி
எதிரிகளை ஒழி..
ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு
பொருள் சேர்
இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு
பகல் தூக்கம் போடு
கவனம்... இன்னொருக் காதல் வரும்.. 
புன்னகை வரைப் போ... புடவை தொடாதே...
இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு...
இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு...

ஐம்பதுகளில்...

வாழ்க்கை - வழுக்கை இரண்டையும் ரசி
கொழுப்பை குறை... முட்டையின் வெண்கரு 
காய்கறி கீரைகொள்
கணக்குப்பார்
நீ மனிதனா என்று வாழ்கையைக் கேள்..

அறுபதுகளில்....

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது... 
இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்...
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு...
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு... இப்போதாவது உண்மை எழுது...

எழுபதுகளில்...

இந்தியாவில் இது உபரி...
சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ
ஜன கண மன..!!!

  • கவிஞர் : வைரமுத்து

இரங்கல் கவிதை!

இரங்கல் கவிதை!

கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !

நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !

சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !

உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !

திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !

படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !

கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !

அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !

பதினெட்டுச்
சித்தர்களுக்கும்
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !

கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும்
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !

இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..

எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.

அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

(கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை)

  • கவிஞர் : கவிஞர் வாலி

Govt nominee out, MKC Nair health varsity vice-chancellor



THIRUVANANTHAPURAM: Governor P Sathasivam has appointed Dr M K C Nair as the new vice-chancellor of Kerala University of Health Sciences by rejecting the government nominee, Dr P C Kesavankutty Nair.

The government had submitted a four-member list to the governor and recommended the name of Kesavankutty Nair, who had served as acting president of Medical Council of India in 2009, for the post.

The other nominees were Dr Rani Nair, wife of Dr Kesavankutty Nair and MCI member; Dr D Dalus, head of general medicine department at the Thiruvananthapuram medical college hospital; and Dr M K C Nair, director, child development centre, SAT Hospital in Thiruvananthapuram.

However, the list ran into a controversy with the governor receiving allegations against three nominees. Following this, he summoned health secretary K Ellangovan and the final decision was kept pending.

Dr Kesavankutty Nair and Dr Rani Nair were alleged to have close links with former MCI president Dr Ketan Desai, who is facing a probe on various corruption charges. Similarly, students of Thiruvananthapuram medical college had levelled allegations against Dr Dalus.

Dr M K C Nair, a paediatrician of repute, will be the second vice-chancellor of the university and he will succeed Dr K Mohandas.

Tuesday, October 28, 2014

Black Money Case: Name All Foreign Bank Account Holders Tomorrow, Says Supreme Court

The Supreme Court, which is monitoring the attempts to recover untaxed or black money stashed abroad, has ordered the government to share by tomorrow the names of all Indians with foreign bank accounts.

"Why are you providing a protective umbrella to foreign bank account holders?" asked the judges. "We can't leave the issue of bringing back black money to government. It will never happen during our time," they added, stating that they will rely more now on a special committee of retired judges and regulators appointed by the Supreme Court to map the recovery of black money.

Both the previous government headed by Dr Manmohan Singh and the new government have argued in court that tax treaties with other countries prohibit the disclosure of names till charges are framed.

Finance Minister Arun Jaitley said the government will respect the court order and it will be upto the judges to determine whether to publicly disclose the list that will be furnished tomorrow. "There are 600 odd names in the list - we will give the list in a sealed cover and I'm sure the court will take appropriate steps to maintain their confidentiality," said Attorney General Mukul Rohatgi.

Yesterday, the government named eight people in the top court who are being prosecuted for allegedly hiding undeclared cash in Swiss and other banks. Critics have accused the government of using tax treaties as a cop-out to shield rich and powerful citizens.

The government today said once it has completed investigations against Indians who hold bank accounts in countries like Germany and Switzerland, it will provide all information to the Supreme Court. "You do not do anything. Just pass on the information of account holders to us and we will pass orders for a further probe," said the frustrated court.

The Supreme Court has been monitoring the investigations into black money since 2009, based on a petition filed by noted lawyer Ram Jethmalani.

கேட்ஜெட் ரிவியூ: லெனோவாவின் ராக்ஸ்டார் 319


கடந்த வாரம் லெனோவா தன்னுடைய புதிய ஸ்மார்ட் ஃபோனான ராக்ஸ்டார் 319-ஐ அறிமுகப்படுத்தியது.இந்த ஸ்மார்ட் போனில் டிஜிட்டல் Dolby வசதி நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் தெளிய துல்லியமான இசையை கேட்க முடியும்.இதில் நிறுவப்பட்டுள்ள Guevara என்னும் அப்ளிகேஷன் மூலம் 10 மில்லியன் பாடல்களை கேட்க முடியும்.
 
இதன் தொடுதிரை 4 அங்குல அகலத்தில் WVGA  டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசரில் இயங்குகிறது. இது  கூகுள் ஆண்ட்ராய்ட் 4.4
கிட்கேடின் இயங்குதளத்தில் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த ஆட்டோ ஃபோகஸ் கொண்ட 5 மெகாபிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறம் உள்ளது. முன்புறமாக,
2 மெகாபிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. 3ஜி வசதியை கொண்டுள்ளது. 1500mAh பேட்டரி திறனுடையது. லெனோவாவின் Doit ,SHAREit, SYNCit மற்றும் SecureIT பயன்பாடுகளை கொண்டுள்ளது.
 
512 எம்.பி ரேம் மெமரியும், 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரியும் கொண்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்டின் மூலம் 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் ஃபோனின் தடிமன் 10.2 மிமீ மற்றும் எடை 130 கிராம்.
 
3.5 மி.மீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. இதர ஃபோன்களில் உள்ளது போலவே வை பை, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். பிளாக், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் வெளி வருகிறது. இசை பிரியர்களுக்கு ஏற்ற புதிய மாடல் லெனோவாவின் ராக்ஸ்டார் 319 என்று கூறப்படுகிறது.
 
ஆனால் இணையதள ரசிகர்கள் இந்த போனை விலைகுறைந்த போன் தான் என்றாலும், இதன் சிறப்பம்சங்கள் சாதாரண ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளையே கொண்டுள்லது. புதுமைகள் அவ்வளவாக இல்லை என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள். ஆனால் லெனோவா கணினி மற்றும் செல்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனம் என்பதால் தரத்தில் நம்பிக்கை வைத்து வாங்கலாம். மற்ற சீன, கொரிய போன்களை போன்றது அல்ல என்கின்றனர் சிலர்.
 
இப்படி பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களை ஒரு சேர பெற்றுள்ள இந்த ஸ்ம்,ஆர்ட்போனின் விலை 6499 ரூபாயாக விற்பனைக்கு வருகிறது.

-கோ.க.தினேஷ்(மாணவ பத்திரிக்கையாளர்)

பிளஸ்2 பயிலாமல் பட்டயப் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க உத்தரவு

நீங்கள் 'வொர்க்கஹாலிக்' நபரா?



யாராவது ஒரு நபர் அதிகமாக ஷாப்பிங் செய்தால் அவரை ''ஷாப்போஹாலிக்'' என்கின்றனர். அதேபோல்தான் அதிக நேரம் பணிபுரிபவரை ''வொர்க்கஹாலிக்'' என்று கூறுகின்றனர். இவர்கள் யார்? எப்படி பட்டவர்கள்? இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? இவர்களை எப்படி அடையாளம் காணுவது என்று பார்ப்போம்.
 
யார் 'வொர்க்கஹாலிக்' ?
 
அதிக நேரம் பணிபுரிபவர் என்ற அடிப்படையில் இவர்களை கருதும் போது தன் வேலையை முடிக்க இயலாமல் அதிக நேரம் வேலைபார்ப்பவர்களை வொர்க்கஹாலிக் என்று கூற முடியாது. வேலை முடிந்த பிறகும் அதிக நேரம் வேறு வேலைகளையோ அல்லது மற்றவர் வேலைகளையோ தானாக முன்வந்து வாங்கி செய்பவர்கள் தான் வொர்க்கஹாலிக் மனிதர்கள்.
 
இவர்கள் எப்படி பட்டவர்கள்?
 
1.காலையில் முதல் ஆளாக வேலைக்கு வந்துவிட்டு கடைசி ஆளாக வேலையை விட்டு செல்லும் பழக்கம்கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த நேரத்திலும் அலுவலகத்தில் இவர்களை பார்க்க முடியும். 
 
2. இவர்களுக்கு வேலை இல்லாத நாட்களில் மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். என்ன வேலை செய்யலாம் என்று யோசித்து கொண்டே இருப்பார்கள்.
 
3. இவர்களுக்கு வார விடுமுறை அல்லது மற்ற விடுமுறை தினங்கள் என்பது பெயருக்கு தான். எங்கு இருந்தாலும் அவர்களது வேலை நிர்வாகத்தில் பிரதிபலிக்கும் வேலைகளில் ஈடுபட்டு கொண்டு தான் இருப்பார்கள்
 
4.இவர்களை குறுகிய இலக்குகளை அடைய செய்து திருப்தி படுத்த முடியாது. எப்போதும் இலக்குகளை மட்டுமே யோசிப்பார்கள். 
5.இவர்களின் வேலைக்கான முன்னுரிமைகளில் பர்சனல் வேலைகள் இடம் பிடிக்காது.
 
6. நிர்வாகத்தில் பாஸ் சொல்லும் எந்த வேலைக்கும் இவர்களிடம் இருந்து முடியாது என்ற பதில் வராது. 
 
7.உடல்நலக்குறைவாக இருந்தாலும் வேலைக்கு வருவதில் இருந்து தவறமாட்டார்கள். இவர்களது பொழுதுபொக்குகள் கூட வேலை சார்ந்ததாகவே இருக்கும். 
 
8.இவர்களிடமிருந்து வாங்க கூடிய வேலைகள் என்பது சராசரி விகிதத்தை விட அதிகமாக இருக்கும்.
 
9.குறுகிய காலத்தில் முடிக்கப்பட வேண்டிய வேலைகள் இவர்கள் பெயரில் இடம்பெறுவது வழக்கமான விஷயமாக இருக்கும்.
 
10.இவர்கள் எளிமையாக பழக கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் உங்களிடமிருந்து ஏதாவது ஒரு விஷயத்தை கற்று கொள்ளும் நபராக இருப்பது தான் அந்த தன்மைக்கு காரணம்.
 
ஏன் இப்படி செய்கிறார்கள்? 
 
இவர்கள் பார்க்கும் வேலையை இவர்கள் வேலையாக பார்க்காததே முதல் காரணம்.இவர்களை பொறுத்த வரையில் வேலை என்பது இவர்களுக்கு விரும்பி செய்யும் பழக்கவழக்கமாக இருப்பது தான் காரணம். பிடித்த துறையில் வேலை கிடைத்திருப்பவர்கள் மட்டுமே வொர்க்கஹாலிக்காக இருக்க முடியும்.அப்படி வேலை கிடைத்தால் வொர்க்கஹாலிக் நபர்களின் வேலை சராசரியை காட்டிலும் அதிகமாக இருக்கும்.
 
இது சரியா?
 
சில சமயங்களில் ஒரு மனிதனின் சுய முன்னேற்றத்திற்கு வொர்க்கஹாலிக் தேவையான விஷயமாக இருக்கிறது. ஒருவர் தன் தகுதிகளை வளர்த்து கொள்ளவும், போட்டி உலகில் தன்னை போட்டிகளில் இருந்து விலக்கி தனி இடத்தை அமைத்து கொள்ளவும் உதவும் விதமாக இருக்கும். அதேசமயம் இது அதிகமாகும் போது குடும்ப சூழலில் சிக்கல் வர வாய்ப்புள்ளது. திருமணமாகாத இளைஞர்கள் வொர்க்கஹாலிக் பழக்கத்தை மேற்கொண்டால் அவர்களது அனாவசிய நேரங்களை வீணடிக்காமல் இருக்க பயன்படும் கருவியாக இது இருக்கும். அதேசமயம் குடும்ப சூழலில் இருப்பவர்கள் இதனை ஓரளவுக்கு பேலன்ஸ்டாக கவனித்து வந்தால் நல்லது.
 
அது சரி இதனை படித்த பின்பு உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர் இது போன்றோ இருந்தால் நிச்சயம் அந்த நபர் வொர்க்கஹாலிக் நபர் என்பதை உறுதி செய்யுங்கள். 
 
ச.ஸ்ரீராம்

NEWS TODAY 31.01.2026