Friday, November 7, 2014

PRINCESS JULIANA AIRPORT

These are some photos of St Marteen Airport. The planes impress most people on the beach, flying over just seconds before touching down at Princess Juliana airport. Paradise for the beach lovers, having a lovely tropical beach, and for the aviation fanatics that spend hours on end observing the very low flying skills of giant commercial plane pilots.







Twinkle Dwivedi’s Blood Tears

Twinkle Dwivedi-Haemolacria-Blood tears - Unsolved Indian Mysteries
Haemolacria is an unusual medical condition that causes the person suffering from it to produce tears of blood. The tears can vary from being slightly red tinged to completely composed of blood. Twinkle Dwivedi from Lucknow suffers from this very rare condition that causes her to bleed from eyes and other parts of her body spontaneously without any apparent visible signs of wounds. She has been the subject of a number of medical research studies and also part of a television show on National Geographic. No possible explanation as to her condition was concluded by the researchers. Rashida Khatoon another girl from Patna came forward with similar condition. In both these cases, no pain is reported by them on shedding tears of blood.

இனி, அதிகாரிகள் கையில்தான் இருக்கிறது

நரேந்திர மோடி பிரதமராக இந்த ஆண்டு மே மாதத்தில் பொறுப்பேற்றார். அவர் பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்பும், அதன்பிறகும், அதிகாரிகளோடு நேரடி தொடர்பு ஏற்படுத்தி, அவர்களோடு கூட்டங்கள் நடத்தி, ஆய்வுகளையும் மேற்கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். குஜராத்தில் அவர் முதல்–மந்திரியாக இருந்த நேரத்திலும் இதையே தனது பணிமுறையாகக்கொண்டு செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், அதில் வெற்றியும் கண்டார். திறமையான அதிகாரிகளை அடையாளம் கண்டுகொள்வதில் அவருக்கு நிகர் அவரே. அவர் பதவிகாலத்தில் தற்போது குஜராத் மாநில தலைமை செயலாளராக பணிபுரியும் ஜெகதீசபாண்டியன், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திருப்புகழ், நடராஜன், ஜெயந்தி ரவி, தாரா, தென்னரசன் மற்றும் பல மாவட்ட கலெக்டர்களாக, முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளை சரியாக மதிப்பிட்டு, அவர்கள் எந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களோ, அந்த துறை தலைமைப்பொறுப்பில் நியமித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களது ஆலோசனைகளையும் அவ்வப்போது பெற்று, உரிய அரசு ஆணைகளை பிறப்பித்து வந்தார். பொதுவாக ஜனநாயகம் என்பது மக்களுடைய, மக்களால், மக்களுக்கான அரசு என்று ஆபிரகாம் லிங்கன் கூறினார். அந்த வகையில், மக்கள் அரசு என்பது சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், பத்திரிகை ஆகிய 4 தூண்களால் தாங்கிப்பிடிக்கப்படும் கட்டிலாகும். எப்படி ஒரு கட்டிலின் 4 கால்களும் தனியாக நின்றால்தான் விழாமல் இருக்குமோ அதுபோல, இந்த 4 தூண்களும் அவர்களுக்குரிய இடங்களில் தனித்துவத்தோடு பணியாற்றினால்தான், ஜனநாயகம் செழிக்கும்.

அந்த வகையில்தான், அதிகாரவர்க்கமும் பணியாற்றவேண்டும் என்ற உணர்வில் பதவி ஏற்கும் முன்பு, அனைத்து துறை செயலாளர்களிடமும் மன்மோகன்சிங் அரசாங்கத்தில் அந்த அதிகாரியின் துறை என்ன சாதித்தது?, எது தோல்வி அடைந்தது?, அதற்கான காரணம் என்ன? முழு சுதந்திரமும் இந்த ஆட்சியில் கொடுத்தால், அந்த அதிகாரியால் நிறைவேற்றிவிட முடியுமா? என்று தனக்கு பட்டியலிட்டுத்தர அமைச்சரவை செயலாளர் மூலமாக கேட்டு பெற்றுக்கொண்டார். பதவி ஏற்றவுடன் 72 துறைகளின் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். ஒவ்வொரு அதிகாரியிடமும் சென்று அவர்களை அறிமுகப்படுத்தச் சொல்லி, அவர்களோடு கை கொடுத்தது அதிகாரிகளுக்கு புதிய உற்சாகத்தைக்கொடுத்தது. ‘நேர்மையான முடிவுகளை தைரியமாக எடுங்கள், பயமில்லாமல் பணியாற்றுங்கள், உங்களைப் பாதுகாக்க நான் இருக்கிறேன். ஆனால், மக்களுக்காக பணியாற்றுங்கள், பிரதமருக்காக அல்ல’ என்று அவர்கள் செல்லவேண்டிய பாதையை வகுத்துக்கொடுத்தார். இதுமட்டுமல்லாமல், அரசு செயலாளர்கள் எப்போதும் தன்னுடன் சமூகவலைத்தலங்கள் மூலமாக தொடர்புகொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். மூத்த அதிகாரிகளை அந்தந்த துறை தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது கலந்து ஆலோசிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதால், எல்லா முடிவுகளுமே ஆழ்ந்த விவாதத்துக்குப்பிறகே எடுக்கப்படுகிறது.

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பட்ஜெட் ஜூலை மாதம் 10–ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இப்போது அடுத்த பட்ஜெட் மார்ச் மாதத்துக்குள் தாக்கல் செய்யப்படவேண்டும். ஆனால், நரேந்திர மோடி இப்போதே அதற்கான ஆயத்த பணிகளைத் தொடங்கிவிட்டார். 80–க்கும் மேற்பட்ட செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை தன் வீட்டுக்கு தேநீர் விருந்துக்காக அழைத்து, வரப்போகிற பட்ஜெட் புதிய எண்ணங்களையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும், உங்கள் பணிகளில் அரசியல் தலையீடு என்பது கிஞ்சித்தும் இருக்காது, நாமெல்லாம் ஒரே அணியாக செயல்படுவோம், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, நெருக்கத்தைக் கொண்டுவர ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவோம், சிறந்த நிர்வாகத்துக்கு தயவுசெய்து உங்கள் எண்ணங்களை என்னுடன் தயக்கமில்லாமல் செல்போனில் பேசி பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று கேட்டு இருக்கிறார். ஒரு பிரதமர் இதற்குமேல் அதிகாரிகளுக்கு உற்சாகம் அளிக்கமுடியாது. எனவே, இனி செய்யவேண்டியதெல்லாம் அதிகாரிகளின் கையில்தான் இருக்கிறது. அதிகாரிகள், பிரதமரின் கனவான பொருளாதாரத்தை சீரமைத்தல், விலைவாசியை குறைத்தல், உள்கட்டமைப்பு வசதிகள், உற்பத்தியை பெருக்குதல், வேலைவாய்ப்பை பெருக்குதல், மானியங்களை சீரமைத்தல் போன்ற பல திட்டங்களை நிறைவேற்றும் வகையிலான முயற்சிகள் பட்ஜெட்டில் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும்.

உங்கள் நேரத்தை திருடுவது யார்!





நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்று கணக்கு வைத்துள்ளோம், நமது அன்றாட தேவைகளுக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்று கணக்கு வைத்துள்ளோம்.

ஆனால். நாம் கணக்கு இல்லாமல் செலவழிக்கும் ஒரு விஷயம் நேரம் மட்டும் தான். ஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம்.

நமக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் கையில் இருக்கிறது. இதில் நாம் என்ன செய்கிறோம்? நமக்கு மீதமிருக்கும் நேரம் என்ன? தேவையில்லாமல் நாம் எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறோம்? அதனை எப்படி சரியாக செலவழிப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் இதோ...

24 மணி நேரம் கணக்கு என்ன?

இந்த 24 மணி நேரத்தில் 7 மணி நேரத்தை கழித்து விடுங்கள் ஒரு நாளைக்கு கட்டாயம் ஒரு சராசரி மனிதன் என்பவன் 7 மணி நேரம் தூங்க வேண்டும் இல்லை என்றால் அவனால் சரியாக வேலை செய்ய முடியாது என்கிறது ஆய்வு, ஒரு நாளைக்கு பணிபுரிபவரோ அல்லது கல்லூரிக்கு செல்பவர்களோ எட்டு மணி நேரத்தை வேலைக்கோ அல்லது படிக்கவோ செலவழிக்கிறார்கள்.

இதில் உங்கள் மதிய உணவு இடைவேளை சேர்ந்து விடுகிறது. காலை மற்றும் இரவு உணவுக்காக 1 மணி நேரத்தை ஒதுக்கினால் 16 மணி நேரம் முடிந்துவிடும். மீதமிருக்கும் எட்டு மணிநேரத்தில் உங்கள் பயணம் உங்கள் நாளில் இரண்டு மணி நேரத்தை செலவழிக்கிறீர்கள்.



அதனால் உங்களிடம் மீதம் ஆறு மணி நேரம் தான் இதில் உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் நேரத்தை செலவழிப்பது, ஷாப்பிங் ஆகியவற்றுக்கு 2 மணி நேரம் என்று வைத்து கொண்டால் உங்களது ஒரு நாளில் 4 மணி நேரம் மீதமிருக்கிறது. இதனை நீங்கள் என்ன செய்கிறீர்கள். 4 மணி நேரம் உங்களது ஒரு நாளில் எவ்வளவு முக்கியமானது அதை யார் எடுத்து கொள்கிறார்கள்? இல்லை எனில் நீங்களே அவசியமில்லாத காரியங்களில் நேரத்தை செலவிடுகிறீர்கள். ஆனாலும் ஏன் நீங்கள் ஒரு நாலைக்கு 24 மணி நேரம் போதவில்லை என குற்றம் சாட்டுகிறீர்கள் என்று பாருங்கள்.

என்ன ஆனது 4 மணி நேரம்?



சமூக வலை தளங்களில் லாக் இன் செய்து பார்த்துவிட்டு அனைத்து விடுகிறேன் என்று ஆரம்பித்து நண்பரின் தேவையற்ற கலந்துரையாடலில் 1 மணி நேரம் செலவழிந்திருக்கலாம்.

ஒரு 10 நிமிடத்தில் வாங்கக்கூடிய பொருளை வாங்க பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதில் பல பொருட்களை பார்வையிட்டு அதில் ஒரு ஒரு மணி நேரம் செலவாகி இருக்கலாம்.

செல்போன், வாட்ஸ் அப்,எஸ்.எம்.எஸ் போன்ற செயல்களில் உங்களது அரை மணி நேரம் செலவழிந்திருக்கலாம்.

இது தான் மிகவும் முக்கியமானது, இந்த ஒன்றரை மணி நேரம் உங்கள் அலுவலக வேலைகளில் இடையே நீங்கள் எடுத்த ஓய்வு அதனால் மாலை 5 மணிக்கு கிளம்ப வேண்டிய நீங்கள் மாலை 6:30 மணிக்கு கிளம்பி இருப்பீர்கள். உங்களது ஒன்றரை மணி நேரத்தை இடையிடையே உள்ள செயல்களுக்கு வீணடித்து மொத்தமாக 4 மணி நேரம் வீணாகி இருக்கும்.

இதற்கு யாரையும் காரணம் கூற முடியாது. இதற்கு ஒரே காரணம் நீங்கள் மட்டும் தான்.

எப்படி சமாளிப்பது:

1.உங்கள் வேலை நேரமான 8 மணி நேரத்தில் தேவையில்லாமல் நீங்கள் செலவு செய்யும் நேரத்தில் அடுத்த நாளுக்கு ஆயத்தமாகுங்கள்.அது அடுத்த நாள் வேலையில் புத்துணர்ச்சியை தரும்.

2.உங்கள் சமூக வலைதளம் உங்களை ஆக்கிரமிக்கும் 1 மணி நேரத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்.அருகில் இருபவருடன் ஆன்லைனில் சாட் செய்யாமல் நேரில் சந்தியுங்கள். அப்போது உங்கள் மனநிலையும் அமைதியாகும். அதிக நேரம் கணினி திரையில் கண் விழித்து உட்கார வேண்டிய அவசியம் இருக்காது. லைக்குகள், கமெண்ட்டுகள் எத்தனை என்று எண்ணாமல் உங்கள் வேலையை துவங்க பாருங்கள்.

3.உங்களுக்கு நேரம் மிச்சமிருக்கிறது என்ன செய்யலாம் என்றால் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள தயாராகுங்கள். ஒரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் அல்லது ஒரு கட்டுரையை எழுதுங்கள். ஒருவேளை உங்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் நாட்டம் இல்லை என்றால் உங்களது எதிர்காலத்தையோ அல்லது குறைந்தபட்சம் அடுத்த 24 மணி நேரத்தையாவது திட்டமிடுங்கள்.

4. ரிலாக்ஸ் நேரம் என நீங்கள் செலவு செய்வது உங்களை சோர்வடைய செய்யும் விஷயமாக இருக்க கூடாது. பீச்சுக்கு சென்றேன் ஒரே டயர்டாக உள்ளது. ஷாப்பிங் சென்றதால் கால் வலிக்கிறது என்று கூறாமல் உங்களை புத்துணர்ச்சி அளிக்கும் ரிலாக்ஸ் விஷயங்களை தேடுங்கள்.

5.வார இறுதியில் வெள்ளிக்கிழமை சினிமாக்களும், மால்களும் போனஸ் டைம் எடுத்து நேரத்தை வீணாக்குகின்றன. அப்படியென்றால் நம்மால் இதனை சமாளிக்க முடியாதா? என்றால் முடியும் ஆனால் அதனை யாரும் சொல்லி செய்துவிட முடியாது அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு சென்று கற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்குள் உள்ள சுய கட்டுப்பாட்டால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

உங்கள் நேரம் அதிக மதிப்புமிக்கது அதனை சரியாக பயன்படுத்துங்கள் 24 மணி நேரம் உங்களுக்கு போதவில்லை என்று நீங்கள் கூற தயாரானால் உங்களது ஒரு மணி நேரத்தை கூட உங்களால் சிறப்பாக செயல்படுத்த முடியாது. 24 மணி நேரம் பெரியது, அதனைச் சரியாக பயன்படுத்தி பயன்பெறுங்கள்

ச.ஸ்ரீராம்


இலவசத்துக்கு இரையாகும் தகவல்கள்!



அனலிடிக்ஸ் என்ற புதிய வியாபார உத்தி தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட டேட்டா என்பது நிறுவனங்களுக்குத் தொடர்ந்து கிடைத்துக்கொண்டேயிருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பிருக்கின்றதா என்ற கேள்விக்கான பதிலைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பேயில்லை என்பதுதான் சரியான பதில் என்ற போதிலும் அப்படி உறுதியாகச் சொல்வதற்கு என்னென்ன ஆதாரங்கள் இருக்கின்றது என்பதை அலசுவோம். உதாரணங்கள் மூலம் இதை நீங்கள் சுலபமாக புரிந்துகொள்ள முடியும்.

லாயல்டி கார்டின் சூட்சமம்

ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தொடர்ந்து சாமான்கள் வாங்குகின்றீர்கள். டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர் ஒரு லாயல்டி கார்டை தருகின்றது. சாமான் வாங்கும்போது இந்த கார்டை காண்

பித்தால் பில் தொகையில் இரண்டு சதவிகிதம் டிஸ்கவுண்ட் என்று சொல்கின்றனர். லாயல்டி கார்டைப் பெற ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்றனர். உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, வயது, குழந்தைகள் என எல்லா விவரத்தையும் நைசாய் வாங்கி வைத்துக்கொள்கின்றனர். இதே போல் பல வருடங்களுக்கு அந்த டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரில் வாடிக்கையாளர்களின் டேட்டா சேகரிக்கப்படுகின்றது. லாயல்டி கார்டு என்பதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதே கடையில் சாமான்கள் வாங்குவார்கள். அதே சமயம் டிஸ்கவுண்ட்டைப் பெற கார்டை காண்பிக்கவும் செய்வார்கள். அல்லது கார்டின் எண்ணைச் சொல்வார்கள். இங்கேதான் இருக்கின்றது டேட்டா சேகரிப்பின் முக்கிய அங்கம். பில்லில் லாயல்டி கார்டின் எண்ணை சேர்த்துக்கொள்வதால் இன்னார் இந்த சாமான் வாங்கினார் என்ற சூப்பர் டேட்டா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்குக் கிடைக்கின்றது.

டேட்டா அளிக்கும் தகவல்

எந்தெந்த வாடிக்கையாளர் என்னென்ன பொருட்களை எப்போது (தேதி மற்றும் நேரம் வாரியாக) வாங்கினார் என்ற டேட்டா கைக்கு அடக்கமாக ஸ்டோருக்குக் கிடைத்துவிடும். கையில் இருக்கும் டேட்டாவைப் பீராய்ந்தால் குழந்தைகளுக்கான டூத் பேஸ்ட் வாடிக்கையாளர் எப்போது வாங்கினார் என்ற விவரத்தைப் பார்க்கலாம். சாதாரணமாக குழந்தைகளுக்கு துலக்கக்கூடிய அளவிற்கு பற்கள் கிட்டத்தட்ட ஒரு வயதில் வரும். அந்த டூத் பேஸ்ட்டை ஒரு வாடிக்கையாளர் வாங்கிய கால கட்டத்தில் இருந்து ஒரு வருடத்திற்கு முன் பத்து மாத காலத்திற்கு என்னேன்ன பொருட்களை வாங்கினார் என்று பார்த்தால் கர்ப்பகாலத்தில் என்னென்ன பொருட்களை வாங்கினார் என ஸ்டோர் நிர்வாகம் தெரிந்துகொள்ளலாம். இதே போல் எல்லா வாடிக்கையாளர்களின் டேட்டாவையும் சேர்த்து வைத்து அலசினால் திகைப்படையச் செய்யும் பல உண்மைகள் கிடைக்கும்.

தள்ளுபடியெல்லாம் தகவலுக்காகத்தான்

ஏற்கெனவே சொன்னதைப் போல் கருவுற்றிருந்தபோது என்னென்ன பிராண்ட் சாமான்களை வாங்கினார்கள் என்பது ஒரு தகவல். வயது குறித்த தகவல் இருப்பதால் கருவுறும் வயதில் எத்தனை வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எந்த விதமான பொருட்களை கடையில் ஸ்டாக் வைக்க வேண்டும் என்பது அடுத்த தகவல்.

இத்தனைபேர் கருவுற்றிருக்கும் போது பெரும்பாலோனோர் வாங்கும் பொருட்களை வாங்குகின்றார்கள். கூடிய விரைவில் புதுவரவு (குழந்தை) வரும். அந்தப் புதுவரவுக்கு தேவைப்படும் பொருட்களை இந்த கால கட்டத்தில் ஸ்டாக் செய்யவேண்டும் என்பது மற்றுமொரு தகவல். அது மட்டுமா புது வரவிற்கு தேவைப்படும் பொருட்களுக்கான டிஸ்கவுண்ட் கூப்பன்களை அந்த வாடிக்கையாளருக்கு கொடுத்து அந்த சூப்பர் மார்க்கெட்டிலேயே அந்த சாமான்களை வாங்கவைக்கலாம்.

வயது டேட்டாவும் சூப்பர் மார்க்கெட் வசம் இருப்பதால் அந்த சூப்பர் மார்க்கெட் இருக்கும் ஏரியாவில் கருவுறும் வயதில் வாடிக்கையாளர்கள் பெருமளவில் இல்லை என்றால் அந்தப் பருவத்திற்குத் தேவையான பொருட்களின் ஸ்டாக் அளவை குறைத்துக்கொள்ளலாம். ஒரு பெண் கருவுற்றிருப்பதை அவள் சொல்லாமலேயே கண்டறியும் திறன் கொண்டது அனலிடிக்ஸ் என்பதை கேட்டால் கொஞ்சம் கலக்கமாய் இருக்கின்றது இல்லையா?.

நன்கொடை கோரிக்கை

கொஞ்சம் இளகிய மனதுடையவர் நீங்கள். அடிக்கடி தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை கொடுக்கின்றீர்கள் என்றால் உங்கள் வங்கிக்கணக்கை அனல்டிக்ஸில் ஆராய்ந்து வங்கி செய்யும் நல்ல காரியத்திற்கு நிதியுதவி கூட உங்களிடம் கேட்க வாய்ப்புள்ளது. இதே ஆன்லைனில் டொனேஷன் கொடுத்தால் அனலிடிக்ஸின் புண்ணியத்தால் உங்கள் ஈமெயிலுக்கு எக்கச்சக்க கோரிக்கைகள் கூட வரும் வாய்ப்புள்ளது. அட, இவ்வளவு தூரமா அனலிடிக்ஸ் உண்மைகளை கண்டறியும். என் வீட்டில் கொஞ்சமாய் பத்துலட்சம் ரூபாய் கருப்புப்பணம் இருக்கின்றதே! இதுவும் அனலிடிக்ஸின் மூலம் வெளிவந்துவிடுமா என்று கவலைப்படுகின்றீர்களா?

இலவசத்துக்காக தரும் தகவல்கள்

நம்மைப் பற்றிய விவரங்களைப் பதிய இவர்கள் யார்? யாரைக்கேட்டு செய்கின்றார்கள்? கர்ப்பம் போன்ற நமக்கு மட்டுமே தெரிந்த ரகசிய விஷயங்களை பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தது யார்? வேறு யார்? நாமே தான். இரண்டு சதவிகித டிஸ்கவுண்டிற்கு ஆசைப்பட்டு மொத்த டேட்டாவையும் கொடுத்தோம். டிஸ்கவுண்ட்டோ, இலவசமோ நீங்களும் நானும் முதல் ஆளாய் டேட்டாவை கொடுக்க தயாராகின்றோமே? டிஸ்கவுண்டோ, இலவசமோ என்றில்லை கடன் தர ஒரு வங்கி தயாரென்றால் நாற்பது பக்க அக்ரிமெண்டை படித்தே பார்க்காமல் பெருக்கல் குறியிட்ட எல்லா இடத்திலும் கையெழுத்திடுகின்றோமே! அதே போல் காசு கேட்டால் காத தூரம் ஓடு. இலவசம் என்றால் துரத்திக்கொண்டு ஓடு என்ற மனநிலை நம் அனைவரிடமுமே தென்படும் ஒரு விஷயம்தானே!

வலைதளங்களின் மாய வலை

இந்தவிதமான மனப்பான்மை தான் நம்மை வலைதளங்கள் விரிக்கும் வலையில் மற்றும் ஸ்மார்ட் போன் ஆப்ஸ்களில் சுலபமாக விழ வைத்துவிடுகின்றது. என்ன அக்சஸ் பெர்மிஷன்கள் கேட்கின்றது என்பதை சற்றும் படிக்காமலேயே ஸ்மார்ட்போன் இலவச ஆப்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு யெஸ் யெஸ் என தட்டுகின்றோம். இலவச ஆப்ஸ்கள் கேட்கும் பெர்மிஷன்கள் உங்கள் கான்டாக்ட் லிஸ்ட், மெசேஜ், கால் லிஸ்ட் என அனைத்தையும் அக்செஸ் செய்யும் பெர்மிஷன்களாகும்.

நீங்கள் ஓரு வங்கி அதிகாரி என்றால் உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட அனைவரின் நம்பரும் உங்கள் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் – ஒரு சில உறவினர் மற்றும் நண்பர்கள் தவிர. வங்கியில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே ஒரு ஆபர் தர வேண்டுமென்றால் சுலபத்தில் உங்கள் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருப்பவர்களை தொடர்பு கொண்டால் வேலை சுலபமாய் முடியுமல்லவா? இந்தவிதமான மார்க்கெட்டிங்கில் சக்சஸ் ரேட் சூப்பராய் இருக்கும் இல்லையா? ஓ! இதனால்தான் ஆப்ஸ்கள் இலவசமாய் கிடைக்கின்றதா?

தப்பு தப்பு. இனிமேல் இலவசமே வேண்டாம் என்று எல்லோரும் திருந்தினால் என்னவாகும். ஆப்ஸ்களின் விலை ஐயாயிரம், பத்தாயிரம் என எகிறும். பணம் கட்டி நாம் டவுன்லோட் செய்துவிடுவோமா என்ன? ஆப்ஸ் இன்டர்நெட் என்பதையேல்லாம் விடுங்கள். நாம் படிக்கும் செய்தித்தாள் மற்றும் வாராந்திர புத்தகங்களில் விளம்பரம் எதுவும் அச்சிடப்படாமல், டீவியில் விளம்பரம் இல்லாமல் ப்ரோகிராம் வேண்டுமென்றால் என்னவாகும்.

நியூஸ் பேப்பரின் விலை இருபத்தி ஐந்து ரூபாயும் டீவி சப்ஸ்கிரிப்ஷன் மாதத்திற்கு பத்தாயிரமுமாய் மாறிப்போகும். ஜிமெயில், பேஸ்புக், வாட்ஸ் அப் எல்லாம் உச்சபட்ச விலைக்கு போய்விடும். பல்லாயிரம் கோடி கொடுத்து வாட்ஸ் அப் சேவையை வாங்கி இலவசமாய் நமக்கு கொடுக்க மார்க் ஜூகர்பெர்குக்கு பைத்தியமா என்ன? சின்ன மீனைப் போட்டு பெரிய மீன்கள் பலவற்றை அள்ளிக்கொண்டுபோய் அனலைஸ் செய்து சாப்பிடத்தான். பெர்மிஷன்களுக்கு எஸ் என கிளிக் செய்யும் போது தனிமனித ரகசியங்களும் அலசப்படுகின்றதற்கான வாய்ப்பை கொடுத்துவிடுகின்றோம். என்ன சார் சுண்டைக்காய் சரக்கு. நான் என்ன டாட்டாவா, பிர்லாவா, அம்பானியா? எங்க கான்டாக்ட் லிஸ்ட்டை வைத்துக்கொண்டு சாதிப்பதற்கு என நீங்கள் கேட்கலாம். தனி மனிதனாக நீங்கள் நினைப்பதைப் போல் உங்களுடைய டேட்டா பெரிய அளவில் மதிப்பில்லாததாக தெரிந்தாலும் கூட்டமாகச் சேர்த்து டேட்டா பெறப்படும் போது அதில் மதிப்புக்கூட்டல் இருக்கவே செய்கின்றது.

டேட்டா எதையும் தாரை வார்க்காமல் இணையத்தில் செளகரியமான பல சேவைகளை அனுபவிக்க எக்கச்சக்க செலவாகும். நமக்கெல்லாம் அது கட்டுப்படியாகாது. டேட்டாவை தாரை வார்த்தால் எல்லாமே இலவசம்தான். அதனாலேயே நாம் சுலபத்தில் டேட்டாவை தாரைவார்க்கத் துணிகின்றோம். அனலிடிக்ஸிற்கு டேட்டா பஞ்சம் வரவே வராது என்பது இப்போது புரிகின்றதா?

cravi@seyyone.com

MARRIED DAUGHTER ELIGIBLE FOR COMPASSIONATE JOB..HC

Thursday, November 6, 2014

இந்த நாள் என்னுடைய நாள்...கண் கலங்கவைத்த கண்ணதாசன்!

ல்யாணம் ஆகி பத்துவருஷத்துல மனைவி உடம்பு சரியில்லாம தவறிட்டாள், ஒரு பெண் பிள்ளை, இரண்டு ஆண் குழந்தை. சொந்தக்காரங்க வற்புறுத்தலால பிள்ளைகளை பராமரிக்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.  அவளுக்கும் ஒரு பெண் குழந்தை... அஞ்சாங் கிளாஸ் வரை நாமதான் படிக்காம இப்படி வயல்லகிடந்து கஷ்டப்படுறோம்.  பிள்ளைகளையாவது நல்லா படிக்க வைக்கணும்னு  கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களையெல்லாம் வித்து காலேஜ் சேர்த்தேன்.....ஆனா...?"-  ராஜாவின் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீர்த்துளிகள் துயரத்தோடு சரிந்துவிழுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு அருகில் இருக்கும் ஜம்புக்குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயியான ராஜா தன்னுடைய மூத்த மகன் கண்ணதாசனை அவனது விருப்பபடியே டாக்டராக்கிவிட வேண்டுமென்று நினைத்த அற்புதமான அப்பா. அதிர்ஷ்டவசமாக அர்மோனியா நாட்டில் உள்ள எரேவன் மருத்துவக்கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.'மகன் டாக்டராகி ஸ்டெதஸ்கோப்போடு வருவான்!' என்று கனவுகளை நிரப்பி வைத்திருந்த ராஜா, மகன் சவப்பெட்டியில் வீடு வந்து சேர்ந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகவில்லை.

என்ன நடந்தது....? தொண்டையை செருமிக்கொண்டு பேசுகிறார் ராஜா. ‘‘பிள்ளைங்க எதிர்காலம் நம்மைப்போல இருக்கக்கூடாதுன்னு 4  பிள்ளைகளையும் தனியார் பள்ளியில சேர்த்தேன். அந்த செலவுகளை என்னால சமாளிக்க முடியாம கொஞ்ச கொஞ்சமா என் பெயரில் இருந்த நிலங்களை வித்துதான் படிக்கவச்சேன். மூத்த மகன் கண்ணதாசனுக்கு படிப்புனா உசுரு. தன்னோட அம்மா சின்ன வயசிலேயே உடம்பு சரியில்லாம இறந்ததால தான் டாக்டராகி ஏழைமக்களுக்கு இலவசமா சிகிச்சையளிக்கணும்னு அடிக்கடி சொல்வான்.
அதுக்காக கஷ்டப்பட்டு படிச்சான். ஆனாலும்  மார்க் குறைஞ்சதால தமிழ்நாட்ல மெடிக்கல் சீட் கிடைக்கல, அப்பதான் அர்மோனியா நாட்டில் படிக்க வாய்ப்பு கிடைச்சது. முடிந்தவரை செலவு செய்வோம். பத்தாததுக்கு கல்விக்கடன் வாங்கி சமாளிச்சிடலாம்னு  முடிவு செய்து அவனுடைய முதல் வருடம் கல்லூரி கட்டணம் மற்றும் விசா, தங்குவதற்கான செலவுகள்னு கிட்டத்தட்ட 7 லட்சரூபாயை  கடைசியாக இருந்த நிலங்களையும் விற்று செலவு செய்தேன்.
பையனை கல்லூரிக்கு அனுப்பி வைத்துவிட்டு போச்சம்பள்ளியில இருக்கிற இந்தியன் வங்கியில லோன் கேட்க போனா, அப்ளிகேஷன் கூட அவங்க தரலை. ரொம்ப இழுத்தடிச்சாங்க.  இதை அறிந்த நண்பர்கள் சிலர் “நீ இப்படியே அலைஞ்சுகிட்டு இருந்தா இவுங்கள்ட்ட லோன் வாங்க முடியாது நீதிமன்றத்துல ஒரு கேஸை போடு அப்பதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க.  சென்னை உயர் நீதி மன்றத்துல வழக்கு போட்டு 20 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கலாம்னு ஒரு தீர்ப்பும் வாங்கினேன். ஆனால் நான் கேஸ்போட்டதால வங்கி அதிகாரிகள் என் மேல கோபம் ஆகிட்டாங்க.

தீர்ப்புப்படி அப்ளிகேஷன் தரக்கூட ரொம்ப தாமதிச்சாங்க. அப்புறம் லோன் கிடைக்க இதெல்லாம் கொண்டுவாங்கனு ஒரு பட்டியல் கொடுத்தார் மேனேஜர். அதில் ரத்தசொந்தங்களில் சிலரிடமிருந்த  ஷ்யூரிட்டி தவிர மற்ற எல்லாவற்றையும் தயார் செய்தேன். பரவாயில்லைன்னு முதல்ல அப்ளிகேஷனை வாங்கின மேனேஜர், ஒருமாதம் கழித்து அதையே காரணம் காட்டி  திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

இதற்கிடையில் என் மகன் முதல்வருடத்தை முடிச்சிட்டான்.  இரண்டாவது ஆண்டிற்கான கட்டணம் கட்ட வேண்டிய சூழல், என்னால் முடியவில்லை.  அவனது சூழலை புரிந்துகொண்டு அவனது சக நண்பர்கள் சேர்ந்து கட்டணம் முழுவதையும் கட்டிவிட்டார்கள். மற்ற செலவுக்காக மாதம் பத்தாயிரம் ரூபாய் என் சம்பாத்யத்திலிருந்து அனுப்பினேன். இதற்கிடையில் ரத்த சொந்தத்தில் ஷ்யூரிட்டி கொடுக்க ஆள் இல்லை என்பதால் என் நண்பர் ஒருவர் தருவதை மேனேஜரிடம் சொன்ன போது முதலில் சம்மதித்தார்.  எனது வீடு, என் நண்பரது சொத்து என  ஷ்யூரிட்டி கொடுத்தோம்.  இதோ.. அதோ.. என இழுத்தடித்தார்களே தவிர லோன் கிடைக்கவில்லை. அதற்குள் பழைய மேனேஜர் அனந்தராமன் என்பவர் மாற்றலாகி,  புதியதாக சீனிவாசன் என்பவர் பொறுப்பேற்றார். மீண்டும் பழைய பல்லவி.

இதற்கிடையில் மூன்றாவது ஆண்டு தொடங்கியும் பணம் கட்ட முடியவில்லை, வங்கியிலிருந்து கடன் பெற முடியாது என்பதை உணர ஆரம்பித்தேன்.  இடையில் இதையெல்லாம் சிந்தித்து கண்ணதாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. கடைசியில் பணம் கிடைக்கவில்லையென்ற தகவலை அவனிடம் சொன்னபோது நான் இந்தியா திரும்பி வந்துடுறேம்ப்பானு சொன்னான், நானும் என்னென்னவோ முயற்சி பண்ணியும் முடியலை, கூடிய சீக்கிரம் லோன் வந்துடும்னு அவுங்க சொல்றதுக்கே மூன்று வருஷம் ஆகிடுச்சி.

எப்படியும் பணம் புரட்டிடலாம்னு நம்பிக்கையா இருந்த ஒரு நாள் ராத்திரி  “உங்க பையன் தற்கொலை பண்ணிக்கிட்டான்” னு போன்ல தகவல் வந்துடுச்சி. என கண்ணீரை துடைத்தபடி பேசினார். வங்கிக்கடன் தருவதா சொல்லி, தேவையில்லாம அதை இழுத்தடிச்சி ,அநியாயமா என மகன் உயிரை பறிச்சிடுச்சி அந்த வங்கி.  எப்படியோ என் பையன் தியாகியா இருந்துட்டு போறான். ஆனா இது மாதிரி இன்னொரு மாணவன் பாதிக்கப்படக்கூடாது" என்று அழுத்தமாக சொல்கிறார் ராஜா.
சொந்த ஊருக்கு வந்த கண்ணதாசனின் உடலுக்கு ஊர் மக்கள் அனைவரும் கூடி அஞ்சலி செலுத்தினார்கள். அந்த வங்கிக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார்கள். தனது மகனின் படிப்புக்காக இருந்த சொத்துக்களையெல்லாம் விற்றுவிட்டார் ராஜா.  வங்கிக்கடன் கிடைக்காததால் உயிரையும் விட்டுவிட்டார் கண்ணதாசன். வங்கி தரப்பில் அவர் நாங்கள் கேட்டத்தொகைக்கு ஷ்யூரிட்டி தரவில்லையென்று காரணம் சொல்லப்படுகிறது. எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் என கோஷமிடும் இந்தியாவில் அதன் கீழ் இயங்கும் ஒரு வங்கி ஒரு இளைஞனுக்கு தன் கோர முகத்தை காட்டி கொன்றிருக்கிறது.

“படிப்பதற்கு உனக்கு உரிமை இல்லை’ என்று ஒருநாள் தனது டைரியில் எழுதிய கண்ணதாசன், இன்னொரு நாள் ஏதோ ஒரு நம்பிக்கையில் “இந்த நாள் என்னுடைய நாள். இந்த யுனிவர்சிட்டியிலிருந்து செல்லும்போது டாக்டர் பட்டத்துடன்தான் செல்வேன்“ என்று எழுதியிருக்கிறார். கடைசி வரை வங்கியின் மீது நம்பிக்கை வைத்து கடைசியில் அந்த நம்பிக்கைக்கு தன் வாழ்க்கையையே தொலைத்திருக்கிறார் கண்ணதாசன்.

லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் நம்பி இருக்கும் கல்விக்கடனை விதிமுறைகளை சொல்லி மறுப்பது இனியாவது தவிர்க்கப்பட வேண்டும். சொத்தை அளவிட்டு கல்விக் கடன் வழங்காமல் மாணவனின் திறனை அளவிட்டு கல்விக்கடன் தரப்பட வேண்டும் என்பதை அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறான் கண்ணதாசன். அதற்கு அவன் கொடுத்த விலை அவனது உயிர்.

எம்.புண்ணியமூர்த்தி
படங்கள் : வி.சதீஸ்குமார்

NEWS TODAY 31.01.2026