Sunday, January 4, 2015

IRCTC makes international travel plans


Rail ticketing portal is now organising international tours.

Indian Railway Catering and Tourism Corporation Ltd. (IRCTC) has gone beyond its primary business as a rail ticketing portal and has ventured into international tours.

The IRCTC, a government of India enterprise, which had been concentrating on inbound tours to various States, has started focusing on promoting trips to popular tourist spots abroad. The IRCTC offices of Kerala, Tamil Nadu and Karnataka — in Ernakulam, Chennai, and Bangalore — have come up with tailor-made international tour packages.

The IRCTC has announced a four-day three-night package from Kochi to Dubai from January 23 following the success of its maiden tour to Malaysia from the State. The package is limited to 24 persons to give personal attention to those flying to Dubai, says Rajeev Sadanandan, Regional Manager, IRCTC.

The package, ‘Magical Dubai Shopping Festival 2015,’ starting from Rs.44,155, includes to and fro ticket in Air India Express from Kochi, overseas travel insurance, three-star accommodation, all meals on full board basis, transportation by luxury coach, airport transfers, tour guide and English-speaking tour escort.

Visits to Burj Khalifa, the world’s tallest building, a Portuguese fort, the old village of Hatta, Global Village, camel race track, Dubai Racing Club and Golf Club, dhow cruise with dinner, and desert safari are part of the package.

An official said that the success of a four-day, three-night tour to Malaysia prompted the IRCTC to come up with a package to Dubai. “The IRCTC is working out international affordable tour packages with airlines and tour operators to cater to the demand for foreign tours from the State. Packages for Singapore are being planned. More domestic tours from Kerala could be introduced this year,” he added.

கப்பலை கவிழ்க்க சிறு ஓட்டைபோதும் - இதுதாங்க வாழ்க்கையிலும்..

பழக்க வழக்கங்களின் அடிமைகள் நாம். காலையில் பல் துலக்குவது முதல், இரவில் பேஸ்புக்கில் 'குட்நைட்' போஸ்ட் போடுவது வரை எல்லாமே பழக்கங்கள்தாம். வேறுசில வேண்டாத பழக்கங்கள் நமது அன்றாட பழக்கத்துடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதுபோல் சில தவறான பழக்கங்களும் நம்மிடையே இருக்கின்றன. அந்த
பழக்கங்கள்தான் நமக்கு தெரியாமலே நம்மோடு இருந்து நமது குடும்ப வாழ்க்கை என்ற குட்டையை குழப்பிக்கொண்டிருக்கும். அதை கண்டுபிடித்து களைந்தால் வாழ்க்கை இனிக்கும்!

அலட்சியம்: கப்பலை கவிழ்க்க சிறிய ஓட்டை போதும். அதுபோலத்தான் வாழ்வும். சின்னச்சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருந்தால் அது வாழ்வையே புரட்டிப்போட்டுவிடும். நமக்காக ஒவ்வொரு விஷயங்களிலும் கவனம் செலுத்தும் மனைவியின் மீது, கொஞ்சமும் அக்கறை காட்டாமல், கவனிக்காமல், பாராட்டாமல் இருப்பதுதான் ஏராளமான கணவன்மாரின் அலட்சிய போக்கு. 'நல்லா இருக்கு', 'இந்த சூப்பர் ஐடியா உனக்கு எப்படி தோணிச்சு' என சின்னச்சின்ன பாராட்டு வார்த்தைகளை கூறிப்பாருங்கள். 2015 முழுக்க மகிழ்ச்சி நீடிக்கும்.

மதிப்பெண் வழங்குதல்: கணவன்- மனைவிக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் மிகப்பெரிய பழக்கம் மதிப்பெண் வழங்கும் மனப்பான்மை. சின்னச் சின்ன விஷயங்களையும் கண்காணித்து குற்றம் சாட்டும் கணவன்மார்கள் நிறைய உண்டு. தனது குடும்பத்துக்கு சாதகமான செயல்களுக்கு மனைவியை பாராட்டும் இவர்கள் மற்ற நேரங்களில் அவளை கண்டுகொள்வதே கிடையாது. சிறு தவறு நேர்ந்தாலும் நீ செய்வது எல்லாமே தவறு என்பதுபோல மதிப்பீடு செய்து பழைய பிழைகளையெல்லாம் சொல்லிக் காட்டுவார்கள். இந்த பழக்கத்தை விட்டொழியுங்களேன்!

வார்த்தைகளை பூர்த்தி செய்வது: மனைவி ஒரு கருத்தை சொல்ல ஆரம்பிக்கும் முன்பே, 'நீ இதைத்தானே சொல்ல வந்தாய்', என கணவனே ஏதாவது வார்த்தைகளைப் போட்டு கற்பனையாக கருத்துச் சொல்வது நிறைய தம்பதி களிடையே பிரச்சினையை கிளப்பி இருக்கிறது. இதேபோல தவறான புரிதலுடன் செயல்படும் மனைவிமார்களும் உண்டு. உதாரணமாக 'என் சம்பாத்தியம் போதவில்லை' என்று கணவன் சொன்னால், 'நான் தெண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்னு சொல்ல வர்றீங்க அப்படித்தானே' என்று மனைவி பொறுமிக் கொள்வது போன்றவற்றை சொல்லலாம்.

பரிசோதனை: கணவன்-மனைவி உறவை சிதைக்கும் முக்கியமான பழக்கம், ஒருவரையருவர் பரிசோதித்துப் பார்க்கும் செயல் களாகும். காதலிக்கும் நேரத்தில் ஒருவரது அன்பை மற்றவர் புரிந்து கொள்வதற்காக சோதனை செய்வது வேறு? திருமண உறவுக்குப் பிறகு கோபம் வருகிறதா? என்று சீண்டுவதும், திறமையை சோதிக்கும் வகையில் சந்தேக நோயை வளர்ப்பது, கேள்விக் கணைகளை தொடுப்பது போன்றவை கூடாத பண்புகளாகும். சின்னச்சின்ன இன்பங்களையும் சிதறடிக்கும் இது, வாழ்வையே சிறைச்சாலையாக மாற்றிவிடும்.

குற்றம் சாட்டுதல் : கணவன்-மனைவிக்கு இடையே குற்றம் சாட்டும் மனோபாவம் அறவே இருக்கக்கூடாது. ஏனெனில் மனைவிக்கு இருக்கும் ஒரே ஆதரவு கணவன்தான். அப்படி இருக்கும்போது நீங்களே அவரை நோக்கி குற்றச்சாட்டை நீட்டினால் அவள் நிராதரவாக நிற்பது போல உணர்வாள். பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டதுபோல மனம் உடைந்துபோவாள்.

எதிர்காலம் பற்றிய அச்சத்தில் கணவன்களை குற்றம் சுமத்தும் பழக்கம் பெண்களிடமும் உண்டு. சின்னச்சின்ன பிரச்சினைகளிலும் மனைவியின் மீது குற்றத்தை திருப்பி சுமத்தும் பழக்கம் ஆண்களிடமும் இருக்கிறது. இவை நிச்சயம் மாற்றப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் வருந்துதலும், திருந்து தலும் உறவை பலப்படுத்தும்.

மவுனப் போர்: சின்னச் சின்ன சச்சரவுகளில் கூட சிலர் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு திரிவார்கள். எதற்காகவும் பேசிக்கொள்ளாமல் மவுனமாகவே செல்வார்கள். அப்படி ஒருவர் பேச்சுக்கு மற்றவர் பதிலளிக்காமல் மவுனம் காத்தால் (இங்கே மவுனம் சம்மதம் ஆகாது) அதுவே அவரை அவமதித்தது போலாகிவிடும். பிரச்சினையை மேலும் பெரிதாக்கி பிளவை உருவாக்கிவிடும். சுமுகமான பேச்சு செய்யும் வேலையை மவுனங்கள் சிலநேரம் செய்வதில்லை என்பதே உண்மை. இன்னும் சிலர் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஒரே வார்த்தையில் பதிலளிப்பார்கள். 'ஆமாம்', 'இல்லை', '...ம்ம்', 'ம்ஹ¨ம்' என்று ஒற்றை வார்த்தையில் பேசிக் கொண்டிருப்பது நம்மிடம் பேசுபவரை நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும். இதுவும் தவறான பழக்கம். புரியும்படியாக பேசித் தீர்த்துக் கொண்டால் சுபம் கூடும்.

எக்கச்சக்க எதிர்பார்ப்புகள்: ஒருவருக்கொருவர் அளவற்ற எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது உறவுக்குள் சிக்கலை ஏற்படுத்தும். 'நமது சகோதரன் இந்த பிரச்சினையில் நமக்கு உதவுவான் என்று நினைத்தோமே?, இந்த சின்ன உதவியைக் கூட கணவன் செய்ய யோசிக்கிறாரே? என்பதுபோன்ற புலம்பல்கள் எல்லாம், அளவு கடந்த எதிர்பார்ப்புகளால் ஏற்படுபவையே.

நீங்கள் கேட்கும் உதவி அல்லது உங்களது எதிர்பார்ப்பு அவர்களால் நிறைவேற்றக் கூடியதாகவே இருக்கலாம். ஆனால் அவர் அதை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதாதபோது உங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகிப் போகிறது. அதுவே 'இவர்களுக்காக நாம் என்னவெல்லாம் செய்தோம்?' என புலம்ப வைத்து, மனக்கசப்பை உருவாக்கி உறவில் விரிசல் விழச் செய்கிறது.

அடக்கமின்றி இருத்தல் : சுதந்திரமாக இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு அடக்கமில்லாமல் நடந்து கொள்வது உறவை கெடுக்கும். உதாரணமாக டி.வி. பார்த்துக் கொண்டே ஹாயாக சாப்பிடுவது, புகை ஒத்துக்கொள்ளாதவர்கள் மத்தியில் புகைபிடித்துக் கொண்டு பேசுவது போன்றவற்றைச் சொல்லலாம். 'யாரும் இதில் தலையிடக்கூடாது' என்று கருதும் விஷயம் உங்கள் தனிமைக்கு மட்டுமே பொருந்தும். மற்றவருடன் சேரும் சூழல் வரும்போது அது பொதுவானதாகிவிடுகிறது. அதில் அவர்களுக்கும் உரிமை இருக்கிறது. எனவே சூழலுக்கேற்ப அடக்கமாக, கண்ணியமாக நடக்காவிட்டால் உறவுகள் பாதிக்கும்.

Saturday, January 3, 2015

ஸ்மார்ட் நகராக சென்னைக்கு தகுதி இருக்கிறதா?



இந்தியாவின் எல்லா மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் உள்ள பெரு நகரங்களுக்கு 'ஸ்மார்ட் சிட்டி' அந்தஸ்தை பெறுவதற்காக விண்ணப்பிக்க கெடு நெருங்கிவிட்டது. பட்டியலை அனுப்ப இதுவே கடைசி வாரம்.

இந்நிலையில், மற்ற நகரங்களின் வளர்ச்சியுடன் சென்னை நகரின் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கவலையே எழுகிறது.

ஏனெனில் சென்னை மாநகரின் ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்கள் ஒரு நூற்றாண்டு பின் தங்கியே இருக்கின்றனர் என சொல்ல வேண்டும். ரயில் நிலையங்களில் சீஸன் டிக்கெட்டுகளை புதுப்பிக்கவும், மின்வாரிய மையங்களில் மின் கட்டணம் செலுத்த இன்னமும் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருக்கும் கூட்டத்தை பார்க்கும்போதும் இது உண்மையோ என்றே தோன்றுகிறது.

இத்தனைக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை நகரில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. சென்னை நகரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 60 லட்சம். இதில் பாதிக்கும் மேலானோர் ஆன்லைனை உபயோகிக்கின்றனர்.

இருப்பினும், பல்வேறு அரசு இணையதள சேவைகள் எளிமையாக இல்லாததாலும், சில முக்கிய அரசுத் துறைகள் ஆன்லைன் சேவையை இதுவரை துவக்காததாலும், கட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளுக்கு மக்கள் இன்னமும் வரிசையிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது.

மற்ற மாநிலங்களின் முக்கிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக உருமாறிக் கொண்டிருக்கும் நிலையில் சென்னையின் நிலை அப்படியேதான் இருக்கிறது. சென்னை மாநகரில் இயக்கப்படும் பேருந்துகளில் ஜி.பி.எஸ் பொருத்தப்படவில்லை; அடுத்த வருடம் இயங்கப் போகிற மெட்ரோவில் மொபைல் செயலி பொருத்தப்படவில்லை. 'காகிதங்கள் இல்லா அரசு செயல்பாட்டு முறை'-க்கு இன்னமும் நாம் ஆயத்தமாகவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு வரைக்கும், ஒவ்வொரு முறையும் நேரில் வந்து படிவத்தைப் பூர்த்தி செய்து, அடையாள அட்டையைக் கொடுத்த பின்னர்தான் மாதாந்திர ரயில்வே பாஸ் பெற முடிந்தது என்கிறார் ராஜ் செருபால் என்னும் சென்னைவாசி. உலக தகவல் தொழிநுட்பத்திற்கான தலைநகராய் இருக்க வேண்டிய இந்தியா இந்த விஷயங்கள் எதையும் கண்டுகொள்வதில்லை எனவும் ஆதங்கப்படுகிறார்.

சென்னை நகரம் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பெரிதும் பின்னடைந்துள்ளது. கிராமங்களைப் நவீனப்படுத்துதலுக்கான முந்தைய வருட பட்ஜெட்டைக் கொண்டு, குறைந்த பட்சம் 1000 அரசுப் பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்தி இருக்க முடியும். 2012-ம் ஆண்டில் 600 பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்த முடிவு செய்யப்பட்டு பணமும் செலவிடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டதால் கிடப்பில் போடப்பட்டது என்கிறார் சென்னை மாநகரப் போக்குவரத்து அதிகாரி ஒருவர். 50-க்கும் குறைவான பேருந்துகளே இப்போது ஜி.பி.எஸ். கருவியுடன் இயக்கப்படுகின்றன.

சென்னையின் நிலை இப்படி இருக்க மற்ற மாநகரங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் வீச்சோடு செயல்பட்டு வருகின்றன. டெல்லி காவல்துறை, நகரத்தைக் கண்காணிக்கும் வகையில் மொபைல் செயலித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இவ்வாண்டின் மத்தியில் பெங்களூருவின் 6,500 பேருந்துகளும் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. அகமதாபாத்தில் பொது இடங்களில் இலவச வைஃபை சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்போது, ஸ்மார்ட் நகராக சென்னைக்கு தகுதி இருக்கிறதா என்ற ஐயம் எழுகிறது.

தமிழில்: க.சே. ரமணி பிரபா தேவி

50.85 lakh LPG consumers eligible for subsidy in TN

Pahal scheme beneficiaries have to pay Rs. 705 per cylinder and draw the subsidy from their accounts.
Rs. 568 as advance to be credited to bank accounts

Around 4.9 lakh LPG consumers in the city are likely to receive Rs. 568 as advance in their bank accounts to buy cooking gas at market price. These are customers who have booked cylinders and are waiting for refills.

A cylinder of subsidised domestic gas costs Rs. 404.50 in Chennai. Consumers, who have enrolled in the Pahal scheme where the government deposits the subsidy amount directly into their bank accounts, will have to pay Rs. 705 per cylinder on delivery, and draw the subsidy paid into their accounts.

In the neighbouring Tiruvallur and Kancheepuram districts, a total of 4.9 lakh and 2.89 lakh customers respectively are eligible to get the subsidy. In the State, out of 1.53 crore LPG customers, 50.85 lakh are eligible to receive cash, said oil industry sources.

Meanwhile, enrolment in the scheme is progressing well with oil companies and distributors burning the midnight oil. Employees even worked on the New Year day so that more consumers can join the scheme.

“We have met bankers and have asked them to speed up processing of applications. We have about 10,000 applications collected on behalf of the banks,” explained an oil industry source. Consumers have been complaining that banks are going slow on processing their applications for linking Aadhar cards or 17-digit LPG IDs with their accounts.

“It has been 25 days since I submitted my application in a nationalised bank, but it is yet to be processed,” said Krishnan, a resident of Velachery.

Oil company sources said that though the scheme had been rolled out from January 1, 2015 consumers will continue to get cylinders at a subsidised rate till March end.

Online link

Many customers who had Aadhar cards were able to link their details on www.mylpg.in. “Though I followed the correct procedure, I am yet to get confirmation for my online registration. It has been over 20 days since I registered. I could not also get any confirmation from *99*99# that we have to dial for status. When I asked my agency, they asked me to wait,” said N. Ananthan, a resident of Vadapalani. Many consumers such as Ananthan say that they are unable to get confirmation online. However, oil company sources said that initial hitches had been set right and that residents should check online once again for the status update.

MEDICAL COUNCIL OF INDIA PUBLIC NOTICE dated 31.12.2014



பிடித்தது கிடைத்தால் போய்விடுமா பேய்?


மனநலம் பாதிக்கப்பட்ட பலருக்கும் மனநல சிகிச்சை அளிக்காமல் பேய் பிடித்துவிட்டது, ஆவி புகுந்துகொண்டது என்று கூறி குறிப்பிட்ட சில கோயில்களுக்கு அழைத்துப் போய் கட்டிப் போட்டுவிடுவது தமிழகத்தில் வழக்கமாக இருக்கிறது. ‘சந்திரமுகி'யில் ஜோதிகாவுக்கு வரும் மனநோயும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
ஆவி புகுந்துகொள்ளுமா?
ஆவி புகுந்த கதாநாயகியின் கதையைக் கருவாகக் கொண்ட திரைப்படம் ‘சந்திரமுகி’. சந்திரமுகி என்ற நடன மங்கை வேட்டையன் ராஜாவின் அரண்மைனையில் வசித்துவருகிறாள். அரண்மனைக்கு அருகில் வசிக்கும் நடனக் கலைஞர் ஒருவர் மீது காதல் கொள்கிறாள். இதை விரும்பாத வேட்டையன் ராஜா, இருவரையும் கொன்றுவிடுகிறார்.
இந்தச் சம்பவம் நடந்து பல்லாண்டுகளுக்குப் பிறகு அந்த அரண்மைனைக்குக் குடிவரும் கதாநாயகி, சந்திரமுகியைப் பற்றித் தெரிந்துகொள்கிறாள். அவர் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளின் மீதும் ஈடுபாடு கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக சந்திரமுகியாகவே மாறத் தொடங்குகிறாள்.
சந்திரமுகியைப் போலவே எதிர்வீட்டில் இருக்கும் ஒரு இளைஞனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். ஒரு கட்டத்தில் முழுமையாக சந்திரமுகியாக உருமாறித் தன் கணவனை வேட்டையன் ராஜாவாக நினைத்துக் கொன்றுவிடத் துடிக்கிறாள். இறுதியில் அவளைச் சமாதானப்படுத்த வேண்டி, வேட்டையன் ராஜாவாக ரஜினி கதாபாத்திரம் மாறித் தன்னைப் பலிகொடுப்பதாகப் பாவனை செய்கிறார்.
பேய்ப் பிடிப்பது போன்ற நம்பிக்கைகளை மனநல மருத்துவம் நம்புவதில்லை. இது மட்டுமல்ல பிசாசு, பில்லி, சூனியம் போன்ற அறிவியலுக்குப் புறம்பான எதையும் நம்புவதில்லை. ஆனால், மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கைகள் பல்லாண்டுக் காலமாகப் பரவலாக உள்ளன.
உண்மையில் பேய்ப் பிடிப்பது எனச் சொல்லப்படுவதும் ஒருவகையில் மனநோய்தான். இளகிய மனம் கொண்டவர்கள், கிராமியப் பின்னணி கொண்டவர்கள்தான் இந்த வகை நோய்க்கு அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நகரத்தில் பேய்ப் பிடிப்பது குறித்த நம்பிக்கைகள் குறைவு.
மூடநம்பிக்கைகளின் நோய்
உதாரணமாக கிராமத்தில் துர்மரணச் சம்பவத்தால் இறந்து போனவர்கள் ஆவியாக அலைவதாக நம்பிக்கை உண்டு. கண்மாயில், கிணற்றில் விழுந்து மாண்டவர்கள் அங்கேயே ஆவியாக அலைவதாக நம்பிக்கை உண்டு. அந்தப் பக்கம் செல்லும் திருமணமாகாத கன்னிப் பெண்கள் மீது ஆவி புகுந்துவிடும் எனவும் சொல்வார்கள். இதனால் இளகிய மனம் படைத்த இளம் பெண்களின் மனநிலை பாதிப்புக்குள்ளாகி, அவர்களே தங்களுக்குள் ஆவி புகுந்துவிட்டதாக நம்பி மனநோய்க்கு ஆளாவார்கள். பெரும்பாலும் இளம் பெண்கள்தான் இந்தப் பாதிப்புக்கு உள்ளாவதாகச் சொல்லப்படுகிறது.
மனநோய் பாதிப்பு இருக்கும்போது அவர்கள் உச்சபட்ச வன்முறையை வெளிப்படுத்துவார்கள். ‘சந்திரமுகி' திரைப்படத்தில் சந்திரமுகியாக மாறிய ஜோதிகா, நான்கு ஆண்கள் சேர்ந்து தூக்கும் கட்டிலை ஒற்றைக் கையில் தூக்கிவிடுவார். இது அதிகபட்சமான சித்திரிப்புதான். ஆனாலும், சரியான ஒன்றே.
இம்மாதிரியான நம்பிக்கை அடிப்படையிலான மனநலப் பாதிப்பு Possession Trance Disorder என அழைக்கப்படுகிறது. மனதின் சுய கட்டுப்பாட்டை இழந்து வேறு சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு எண்ணம், பேச்சு, செயல் எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும். அதாவது நமது வழக்கமான நடவடிக்கைகளில் மாறுபட்டு வேறு யாரோ ஒருவர்போலச் செயல்படும். இதைத்தான் பேய்ப் பிடிப்பது என்கிறோம்.
கலாச்சார ரீதியாகப் பார்த்தால் ஆப்பிரிக்க, தெற்கு ஆசிய நாடுகளில்தான் இந்த வகை மனநலப் பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன. இதர நாடுகளில் இந்த நிலை மிகக் குறைவு. ஏனென்றால் தெற்காசிய நாடுகளில்தான் இம்மாதிரியான மூடநம்பிக்கைகள் அதிகம்.
பேயின் விருப்பம்
பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் மனநோயாளிகளைப் பொதுவாக மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல மாட்டார்கள். அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப மத வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். தமிழ்நாட்டில் இம்மாதிரி பாதிப்புக்கு உள்ளானவர்களை மத பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு குணசீலம், ஏர்வாடி, ராஜாவூர் போன்ற ஊர்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் உள்ளது.
இது போன்ற மனநோய் வழிபாட்டுத் தலங்களிலேயே குணமாகிவிடுவதும் உண்டு. அதாவது இம்மாதிரி மனநோய் உள்ளவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் போது, அந்த மனநலப் பாதிப்பில் இருந்து அவர்கள் குணமடைய வாய்ப்புள்ளது. ‘சந்திரமுகி' திரைப்படத்தில் இதைச் சரியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். சந்திரமுகியாக மாறும் கதாநாயகியின் விருப்பம், வேட்டையன் ராஜாவைக் கொல்ல வேண்டும் என்பது. அதை நாடகமாக அவர்கள் நிகழ்த்திக் காட்டும்போது திருப்தியடைந்து, அவரது மனநோய் குணமாகிறது.
இதைத்தான் குடிகொண்டுள்ள ஆவியின் விருப்பத்தை நிறைவேற்றும்போது, அந்த ஆவி உடலைவிட்டு வெளியேறி விடுவதாக நம்பப்படுகிறது. இந்த வகை மனநோய்க்கு இது சரி. ஆனால், இந்த நோய்தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை எல்லோரும் கண்டறிந்துவிட முடியாது.
மனநல மருத்துவர்களே கண்டறிய முடியும். மக்கள் எல்லாவிதமான மனநோயாளிகளையும் வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிடுகிறார்கள். இப்படிச் செய்வதால் நோய் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதலாக மனச்சிதைவுக்கு உள்ளாவார்களே தவிர குணமடையமாட்டார்கள்.
கிணற்றில் இருந்த பேய்
சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற மனநலப் பாதிப்புடன் ஒரு பெண் சிகிச்சைக்காக என்னிடம் அழைத்து வரப்பட்டார். அவருக்குப் பேய் பிடித்திருப்பதாகச் சொன்னார்கள். அவர்களுடைய ஊரில் உள்ள ஒரு கிணற்றில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அந்தப் பெண் பேயாக அலைவதாக, அந்த ஊர் மக்கள் நம்பினார்கள். அந்தக் கிணற்றுப் பக்கம் போனால் அந்தப் பெண்ணின் ஆவி பிடித்துக்கொண்டுவிடும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இந்த நம்பிக்கையுடன் வளர்ந்த இந்தப் பெண், அந்தக் கிணற்றுப் பக்கம் சென்றுள்ளார். அதனால் இயல்பாகவே இளகிய மனம் கொண்ட அவர், இந்த மனநலப் பாதிப்புக்கு ஆளாகிவிட்டார். நடக்கவே முடியாதபடி ஆகிவிட்டார். கிணற்றில் விழுந்து இறந்த பெண்ணுக்கும் இந்தப் பிரச்சினை இருந்திருக்கிறது. பிறகு மனநல ஆலோசனை மூலம் அந்தப் பெண் குணமடைந்தார்.
சிகிச்சை முறை
இந்த மனநலப் பாதிப்பு உள்ளானவர்கள், மற்ற நேரங்களில் சரியாகத்தான் இருப்பார்கள். குறிப்பிட்ட நேரங்களில்தான் புத்தி பேதலித்த மாதிரி நடந்துகொள்வார்கள். மனச்சிதைவு நோயாளிகள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். ஆகவே, முதலில் மனநலப் பாதிப்பைப் பிரித்தறிவது அவசியம். இது Possession Trance Disorder தான் என உறுதிசெய்த பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு விஞ்ஞான அறிவை அளிக்க வேண்டும். பேய் பிடிப்பது மூடநம்பிக்கை என்பதைப் புரியவைக்க வேண்டும். ஹிப்னாடிஸ முறையில் இந்த நோய்க்கு சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்.

- கட்டுரையாளர்,
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி பேராசிரியர்,
மனநல மருத்துவர் 
தொடர்புக்கு: arulmanas@gmail.com

ஸர்ஃப் கொடுத்த பதிலடி!



யூனிலீவர், இங்கிலாந்தைத் தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம். 1888 – இல் ஸன்லைட் சோப் இறக்குமதியோடு இந்தியாவில் தொடங்கிய லீவர் வரலாறு, இன்று நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. பெப்சோடென்ட், குளோஸப் டூத்பேஸ்ட்கள், டவ், லைபாய், லிரில், லக்ஸ், ரெக்ஸோனா, ஹமாம், பியர்ஸ் சோப்கள், கிளினிக், ஸன்ஸில்க் ஷாம்பூக்கள், பான்ட்ஸ், லக்மே அழகுப் பொருட்கள், ரின், வீல், ஸன்லைட், ஸர்ஃப் சோப் பவுடர்கள், அன்னபூர்ணா கோதுமை மாவு, மாடர்ன் பிரெட், கிஸான் ஜாம், பியூர் தண்ணீர், ப்ரூக் பாண்ட் காபி, டீ, லிப்டன் டீ – ஆமாம், நாம் கண் விழிப்பது முதல், தூங்குவது வரை, ஏராளமான லீவர் தயாரிப்புப் பொருட்களோடு வாழ்கிறோம்.

சரியான கணிப்பு

லீவர் கம்பெனி 1959- ல், ஸர்ஃப் சோப் பவுடரை இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள். கவர்ச்சிகரமான அட்டைப் பெட்டிகளில் ஸர்ஃப் விற்பனையானது. கிலோ விலை 13 ரூபாய். இந்த விலை உயர்மட்டக் குடும்பங்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும் விலை. தெரிந்தேதான், லீவர் அதிக விலையை நிர்ணயித்தார்கள். வசதி படைத்தவர்கள் சோப் பவுடர் உபயோகிப்பார்கள், மற்றவர்கள் ஸன்லைட் சோப் உபயோகிப்பார்கள் என்பது லீவர் கம்பெனியின் கணிப்பு. இந்த மார்க்கெட்டிங் வியூகத்தால், ஸர்ஃப் சோப் பவுடர், ஸன்லைட் சோப் ஆகிய தங்களுடைய இரண்டு தயாரிப்புப் பொருட்களின் விற்பனையையும் அதிகமாக்க முடியும் என்பது அவர்கள் கணிப்பு. அவர்கள் கணக்கு சரியாக இருந்தது. ஸர்ஃப் இந்தியாவின் நம்பர் 1 சோப் பவுடர் ஆனது.

நிர்மா வரவு, ஸர்ஃபுக்கு சரிவு

லீவரின் கனவுகளைக் கலைக்க வந்தார், குஜராத் மாநிலத்தின் கஸன்பாய் பட்டேல். ஸர்ஃப் கிலோ 13 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருந்தது. 1969 – ம் ஆண்டு. கிலோ 3 ரூபாய் என அடிமாட்டு விலையில் கஸன்பாய் தன் நிர்மா சோப் பவுடரை அறிமுகம் செய்தார். ரேடியோ, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் ஏகப்பட்ட விளம்பரம் செய்தார். ஸர்ஃப் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள் என்னும் அபிப்பிராயத்தை மக்கள் மனங்களில் உருவாக்கிவிட்டார். ஸர்ஃப் விற்பனை குறையத் தொடங்கியது. நிர்மா அந்த இடத்தைப் பிடித்தது. இந்தியாவில் அதிக விற்பனையாகும் சோப் பவுடரானது.

லீவர் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு அதிகமான பணபலம் உண்டு. அதே சமயம், அவர்களுக்குச் சில பலவீனங்களும் உண்டு. பணபலத்தால், கிடைக்கும் வெற்றிகளால், அவர்களுக்கு ஒரு மெத்தனம் வந்துவிடும். சிறிய போட்டியாளர்களை மதிக்கமாட்டார்கள். ”நாம் ஒரு ஆலமரம், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த இந்தக் காளான்கள் நம்மை என்ன செய்துவிடுவார்கள்” என்று உதாசீனம் செய்வார்கள். அதற்குள், சிறிய போட்டியாளர் விஸ்வரூபமெடுத்து வளர்ந்துவிடுவார்.

பெரிய கம்பெனிகளில் இன்னொரு சிக்கலும் உண்டு. சிறிய கம்பெனிகளில், முக்கிய முடிவுகளை எடுக்கும் உரிமையும், அதிகாரமும், முதலாளிகளிடம் இருக்கும். இதனால், பிரச்சினைகள் வரும் போது, அவற்றை முளையிலேயே கிள்ளி எறியமுடியும். பெரிய நிறுவ னங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் பரவலாக இருக்கும். இதனால், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் காலதாமதமாகும்.

வியூகம் வகுக்க 11 ஆண்டு

லீவர் கம்பெனி திறமைசாலிகளின் கூடாரம். ஆனால், மேற்சொன்ன காரணங்களால், நிர்மாவைச் சமா ளிக்கும் வியூகம் வகுக்கக் காலதாமதமானது. ஒருசில வருடங்களல்ல, நிர்மா மார்க்கெட்டுக்கு வந்ததிலிருந்து 11 வருடங்கள்!

ஸர்ஃப், நிர்மா ஆகிய இரண்டு சோப் பவுடர்களையும் லீவர் மார்க்கெட்டிங் அதிகாரிகள் அலசி ஆராய்ந்தார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு மாபெரும் உண்மை புரிந்த்து. நிர்மா வரும்வரை, சோப் பவுடர் என்றால், அது மிக உயர்ந்த தரமாக, எரிச்சலே ஏற்படுத்தாததாக இருக்கவேண்டும், இப்படிப்பட்ட தயாரிப்புக்கு அதிக விலை தரவேண்டும் என்னும் அபிப்பிராயம் மக்கள் மனங்களில் இருந்தது. இது ஸர்ஃப் உண்டாக்கிய பிம்பம், பொசிஷனிங்.

இரு வகை வாடிக்கையாளர்கள்

நிர்மாவின் வருகைக்குப் பின், வாடிக்கையாளர்கள் இரண்டு வகையினர் ஆகிவிட்டார்கள். ஒரு பிரிவினர் உயர்ந்த தரத்துக்காக அதிக விலை தரத் தயாராக இருப்பவர்கள்: இன்னொரு பிரிவினர் மலிவு விலையில் சுமார் தரத்தை ஏற்றுக்கொள்பவர்கள்.

இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல், உயர் தரம் – அதிக விலை என்னும் ஒரே பொசிஷனிங்கைப் பின்பற்றியதுதான் தங்கள் சறுக்கலுக்குக் காரணம் என்று லீவர் கம்பெனி புரிந்துகொண்டார்கள். இரண்டு பிரிவினரிடமும், இரண்டு மாறுபட்ட பொசிஷனிங்கை உண்டாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

இதன்படி, நிர்மா மீதான தாக்குதலை, ஸர்ஃப் இரண்டு வியூகங்களில் தொடங்கினார்கள். முதல் வியூகத்தில், லீவர் பயன்படுத்திய முக்கிய ஆயுதம் – லலிதாஜி. 1980 காலகட்டத்தில், கவிதா சவுத்ரி என்னும் சுமார் 40 வயது நடிகை டி.வி. சீரியல்களில் பிரபலமாக இருந்தார். கண்டிப்பான போலீஸ் அதிகாரி, கண்ணியமான குடும்பத் தலைவி போன்ற வேடங்களில் நடித்தார். நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணாக, தங்களுக்கு நல்ல அறிவுரை தரும் மூத்த சகோதரியாக இவருக்கு மக்களிடம் இமேஜூம், நல்ல மதிப்பும் இருந்தது. லீவர் கம்பெனி, ”ஸர்ஃப் வாங்குவது புத்திசாலித்தனம்” என்னும் கருத்தை மையமாக வைத்து, சின்னச் சின்ன அனுபவங்களாக விளம்பரங்கள் தயாரித்தார்கள். இவற்றின் கதாநாயகி பெயர் லலிதாஜி.

விளம்பர உத்தி

விளம்பரங்களில் லலிதாஜி வருவார். கடைக்குப் போவார். காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவார். பேரம் பேசுவார். அவர் வாங்கிய சாமான்களுக்கு இடையில் ஒரு ஸர்ஃப் பாக்கெட் இருக்கும். ஒரு குரல் கேட்கும், “லலிதாஜி, எல்லாப் பொருட்களையும் வாங்கும்போது ஆலோசிக்கிறீர்கள், கணக்குப் போடுகிறீர்கள். நீங்கள் விலை அதிகமான ஸர்ஃப் வாங்குவது ஏன்?”

லலிதாஜி பதில் சொல்லுவார், “குறைந்த விலைக்கு வாங்குவதற்கும், கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள பொருளை வாங்குவதற்குமிடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது.” .

இப்போது லலிதாஜி கையைச் சுட்டிக் காட்டுவார். அங்கே, ஒரு ஜாடியில் பெயரிடப்படாத ஒரு கிலோ மஞ்சள் நிற சோப் பவுடர் இருக்கும்: இன்னொரு ஜாடியில் அரைக் கிலோ நீல நிற ஸர்ஃப் பவுடர். (நிர்மா மஞ்சள் நிறம்.) ”ஒரு கிலோ மலிவு விலை பவுடரால் எவ்வளவு துணிகளைத் தோய்க்கலாமோ, அதே அளவு துணிகளை அரைக் கிலோ ஸர்ஃபால் துவைக்கமுடியும். எனவே, ஸர்ஃப் வாங்குவதுதான் புத்திசாலித்தனம்” என்று ஆணித்தரமாகச் சொல்லுவார். ஸர்ஃப் உபயோகித்தால் துணிகளும் கெட்டுப் போகாமல் நீண்ட நாள் உழைக்கும் என்று தன் ”பளிச்” வெள்ளைப் புடவையைக் காட்டுவார்.

கை எரிச்சலைக் கருத்தில் கொள்ளாமல், விலையை மட்டுமே பார்த்து நிர்மா வாங்கிய கஸ்டமர்களை லலிதாஜி விளம்பரம் விலையைத் தாண்டி, உடல்நலம், துணிகளின் பாதுகாப்பு எனப் பல கோணங்களில் சிந்திக்கவைத்தது. ஏராளமானோர் நிர்மாவிலிருந்து ஸர்ஃபுக்குத் திரும்பினார்கள்,

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் வெளியான விளம்பரங்களில் டாப் 10 தேர்ந்தெடுக்கச் சொன்னால், எல்லோர் பட்டியலிலும் தவறாமல் இடம் பிடிப்பவர் லலிதாஜி. இந்தியாவின் விளம்பர மேதைகளில் ஒருவரான அலெக் பதம்ஸீ (காந்தி சினிமாவில் ஜின்னாவாக நடித்தவர்.) உருவாக்கிய விளம்பரம் இது.

You Tube – Lalitaji Surf ads என்று கிளிக்குங்கள். இந்த விளம்பரப் படங்களை (பாடங்களை)ப் பார்க்கலாம்.

குறைந்த விலையில் `வீல்’!

லலிதாஜி ஜெயித்தவுடன், இரண்டாம் வியூகமாக, 1988 – இல், லீவர் வீல் (Wheel) என்னும் சோப் பவுடரைக் குறைந்த விலையில் அறிமுகம் செய்தார்கள். ஏகப்பட்ட விளம்பரங்கள். ஒன்றிரண்டு வருடங்களில், கணிசமான கஸ்டமர்கள் நிர்மாவிடமிருந்து வீல் பவுடருக்கு மாறினார்கள்.

இன்று, ஸர்ஃப், நிர்மா, வீல் ஆகிய மூன்று சோப் பவுடர்களுமே வெற்றிகரமான பிரான்ட்கள். ஆனால், அவர்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்திய பொசிஷனிங் முறைகள் வித்தியாசமானவை. ஆமாம், பொசிஷனிங் என்பது ஒருவழிப் பாதையல்ல, கற்பனையைக் காட்டி, நாம் எல்லோருமே, கஸ்டமர்கள் மனங்களில் தனித்துவப் பொசிஷனிங்கை உருவாக் கலாம், விற்பனையில் சிகரங்கள் தொடலாம்.

slvmoorthy@gmail.com

எஸ்.எல்.வி. மூர்த்தி

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...