Tuesday, January 6, 2015

என் பாதையில்: ரயில் மீதேறி வந்த தேவதை

Return to frontpage




சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. உச்சி வெயிலில் ஒரு பெண் கூடை நிறைய பூக்களும் கை நிறைய பைகளுமாக ரயிலில் ஏறினாள். மேடிட்ட வயிறு அவள் சூலுற்றிருந்ததைச் சொன்னது. அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன். ரயிலில் 15 வருடங்களாக வியாபாரம் செய்துவருவதாகச் சொன்னாள். திருமணமாகி எட்டு மாதங்கள்தான் ஆகிறது என்று அவள் வெட்கத்துடன் சொன்ன பாங்கிலேயே அது காதல் மணம் என்று புரிந்தது. தன் சிறு வயதிலிருந்தே ரயிலில் பூ, பழங்கள், காய்கறிகள் விற்றுவரும் அந்தப் பெண், ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு பொருளை விற்பதாகவும் சொன்னாள். விலை குறைவான பொருட்களை வாங்கி, குறைவான விலையில் விற்றால்தான் லாபம் கிடைக்கும் என்று சொன்ன அவளின் பேச்சில் தேர்ந்த பொருளாதார நிபுணத்துவம் வெளிப்பட்டது.

“மாதக் கடைசியில் லாபத்தை எதிர்பார்க்க முடியாது, மக்களுக்கு சம்பளம் இல்லாததால் மிச்சம் பிடிக்கத்தான் பார்ப்பார்கள். அந்த சமயத்தில் குறைவான பொருட்களையே வாங்கி விற்பேன்” என்று சொல்லி என் ஆச்சரியத்தை அதிகப்படுத்தினாள். இப்படி ரயில், ரயிலாக ஓடி ஏறி, போலீஸ்காரர்களுக்குப் பயந்து விற்பனை செய்வது கஷ்டமாக இல்லையா என்ற என் கேள்வியை அவள் புன்னகையுடன் எதிர்கொண்டாள்.

“எல்லாமே கஷ்டம்தான். என்ன செய்யறது, குடும்ப நிலமை அப்படி. என் வீட்டுக்காரரும் வேலைக்குப் போறார். ஆனா விக்கற விலைவாசிக்கு ஒருத்தர் சம்பளம் எம்மாத்திரம்? இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தை பிறக்கப்போவுது. அதுக்கும் சேர்த்து வைக்கணுமே. அப்போதானே எங்க குழந்தையும் உங்களை மாதிரி பெரிய ஆளா வரமுடியும்?” என்று தன் வயிற்றின் மீது விரலால் வருடியபடியே சொன்னாள். அந்த வார்த்தைகளில் இருந்த தன்னம்பிக்கையும் மலர்ச்சியும் என்னைத் திக்குமுக்காட வைத்தன. சின்னச் சின்ன சங்கடங்களுக்கே சோர்ந்துபோகிற எனக்கு, அந்தப் பெண் ரயில் மீதேறி வந்த தன்னம்பிக்கை தேவதையாகவே தெரிந்தாள்.

- சிவரஞ்சனி, சென்னை.

விலை, எடை... நிறுவனங்களின் உத்தி!

கோப்புப் படம்

கிட்டத்தட்ட நமது கண்ணை மறைக்கும் சாதனையை செய்து வருகின்றன நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள். நுகர் வோராக நீங்கள் இந்த வித்தியா சத்தை உணர்ந்திருக்கக்கூடும். அதை உணராதவர்கள் இதை படித்த பிறகு இன்னும் எச்சரிக்கையாக இருக்கலாமே?

நாம் வழக்கமாகப் பயன்படுத்தும், சோப், பற்பசை, ஷாம்பு மற்றும் தினசரி பயன்படுத்தும் இதர பொருட்களின் விலையை ஏற்றிவிட்டால் என்ன செய்வோம். அந்தப் பொருளை பயன் படுத்துவதை விட்டுவிடுவோம். அல்லது அந்த பொருளுக்கு நிகரான தரத்தோடு குறைந்த விலையில் வேறு நிறுவனப் பொருளை பயன்படுத்த தொடங்குவோம். பிராண்டை மாற்ற முடியாத அளவுக்கு பழகிவிட்டோம் என்றால் மட்டுமே அந்த பொருளைத் தொடர்ந்து வாங்குவோம்.

பொருளுக்கான விலையை ஏற்றும் உத்தி என்பது நிறுவனங்கள் கடைபிடிக்கும் உத்திகளில் ஒன்று. இது அவர்களின் உரிமை. பொருளுக்கான தயாரிப்பு செலவுக்கு ஏற்ப விலையைத் தீர்மானிக்க சட்டம் அவர்களுக்கு இந்த உரிமையை கொடுத்துள்ளது. ஆனால் இந்த உத்தியால் வாடிக்கையாளர்களை இழக்கும் அபாயமும் நிறுவனங்களுக்கு இருக்கிறது. இந்த அபாயத்தைச் சந்திக்க தயாராக இல்லாத நிறுவனங்கள் குறுக்கு வழியில் கண்டுபிடித்த உத்திதான் விலையை ஏற்றாமல், அளவு அல்லது எடையைக் குறைக்கும் உத்தி.

இந்த எடைக்குறைப்பை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. பளிச்சென்று எந்த வித்தியாசமும் தெரியாது. நீங்கள் உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே இதைக் கண்டு பிடிக்க முடியும். எந்த அறிவிப்பும் இல்லாமல் இப்படிச் செய்வது வாடிக்கை யாளர்களை ஏமாற்றும் உத்தி ஆகிவிடாதா? இது குறித்து ஒரு நிறுவனத்தின் விற்பனை மேலதிகாரியிடம் கேட்டோம்.

``எடை குறைப்பு செய்வதால் வாடிக்கையாளரை நாங்கள் ஏமாற்று வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த பொருளின் எடை, அளவு அதற் கான விலை போன்ற விவரங்களை வழக்கம் போல பொருளின் பேக்கிங்கில் தெளிவாக அச்சடித்துதான் தருகிறோம். வாடிக்கையாளர்கள் அதைப் பார்த்து விட்டுத்தான் வாங்குகின்றனர்.

பொருளும் தேவை, விலையும் வாங்குவதுபோல இருக்க வேண்டும் இதுதான் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விஷயம். எடை கொஞ்சம் குறைந்தாலும் பராவாயில்லை என்பதுதான் மக்கள் எண்ணம். அவர்களை ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு அறவே இல்லை’’ என்றார். நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் இந்த விஷயம் குறித்து என்ன நினைக்கின்றன என்பதற்காக அவர்களையும் தொடர்பு கொண்டோம்.

கலப்படப் பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்களால் ஏமாறும் மக்களை முன்னணி நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு இதுபோன்று எடை குறைப்பு செய்து ஏமாற்றுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. இது போன்ற எடை குறைப்பு சமாசாரங்களை மக்கள் கண்டுகொள்வதில்லை என்று நிறுவனங்கள் நம்புகின்றன. மூலப் பொருட்களின் விலை ஏறுவதும், போக்குவரத்து மற்றும் விநியோக செலவுகள் அதிகரிப்பதும் நிறுவனங்களுக்கு விலை ஏற்ற வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது என்றால் அதை மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை நிறுவனங்களுக்கு இருக்கிறது.

தவிர முன் அறிவிப்பு இல்லாமல் எடை குறைப்பதற்கு சட்டமும் அனுமதிக்கிறது. முன்பு 25 கிராம் 50 கிராம் என்று ரவுண்டாகத்தான் எடை இருக்க வேண்டும் என்று இருந்த சட்ட விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. 7 கிராம், 14கிராம், 48 கிராம் என பேக்கிங் செய்து கொள்வதற்கு ஏற்ப சட்டமும் சாதகமாக உள்ளது. இதை பேக்கிங்கில் அச்சடித்தால் போதும் என்பதுதான் நிலைமை. எனவே நுகர்வோர் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டியிருக்கிறது என்கின்றனர்.

சில பிராண்டு பொருட்களில் எடை குறைத்தது மட்டுமல்ல, விலையையும் அதிகரித்து விட்டனர். உதாரணமாக ஒரு முன்னணி பிராண்ட் சோப் முன்பு 100 கிராம் இருந்தது என்றால் இப்போது 90 கிராம்தான் உள்ளது. விலையையும் உயர்த்தி உள்ளனர். வழக்கமாக வாங்கும் பொருள், பழக்கப்பட்ட பிராண்ட் என்கிற நம்பிக்கையில்தான் அந்த பொருட்கள் நுகர்வோரை ஈர்க்கிறது.

சோப்பு, ஷாம்பு, எண்ணெய் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்களில் குறிப்பிட்ட பிராண்டுக்கு பழகிவிட்டால் மாறுவதற்கு மனசு இருப்பதில்லை. விலை ஏறினாலும் அதே பொருட்களைத்தான் விரும்புகின்றனர் நுகர்வோர்கள்.

அவர்களின் கேள்வி இதுதான். சலுகை என்றால் டமாரம் அடிப்பதும், எடை குறைப்பை வெளியில் சொல்லாமல் கமுக்கமாக செய்வதும் ஏன்? நுகர்வோர்கள் விழிப்போடு இருப்பது ஒன்றுதான் இதற்கு ஒரே வழி.

எப்படி கண்டுபிடிப்பது?

வழக்கமாக 100 கிராம் சோப் என்று நினைத்து வாங்குவோம். 90 கிராம்தான் இருக்கும். 50 கிராம் பேஸ்ட் என்று நம்பி வாங்கினால் 40 கிராம்தான் பேக் செய்யப்பட்டிருக்கும். அதற்குத்தான் விலை குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு முன்பு 100 கிராமும், 50 கிராமும் என்ன விலையில் விற்பனை ஆனதோ அதே விலையில் தற்போது 40 கிராமும், 90 கிராமும் விற்பனை செய்யப்படுகிறது.

சோப்பு, பேஸ்ட், டீ தூள், பிஸ்கட் முதல் மசாலா பொருட்கள் வரை அனைத்திலும் இந்த வகையிலான எடை குறைப்பு வித்தை சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இதில் நிறுவன பேதமே கிடையாது. பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களுமே இந்த உத்தியைக் கடைபிடிக்கின்றன.

ஏமாற்றும் உத்தியா?

விலை ஏற்றினால் வாடிக்கையாளரை இழக்கலாம் என நினைக்கும் நிறுவனங்கள் இந்த உத்தியை நேரடியாக நுகர்வோரிடத்தில் சொல்லலாமே என்கிற கேள்வி எழுகிறது. 50 காசு விலை குறைத்தால் பல லட்சம் செலவு செய்து விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் இந்த விஷயத்தை மட்டும் ஏன் இருட்டடிப்பு செய்கின்றன.

இருக்கும்... ஆனா இருக்காது...

விலையும் ஏற்றக்கூடாது, லாபமும் குறையக்கூடாது, தரத்திலும் சறுக்கக் கூடாது, வாடிக்கையாளர்களையும் இழக்கக்கூடாது என்கிற பலமுனை யோசனைகளிலிருந்து நிறுவனங்கள் இந்த உத்தியை கடைப் பிடிக்கின்றன. பிஸ்கட்டின் வழக்கமான அளவை விட சற்று சிறிய சைஸ் ஆக இருக்கிறது என்று தோன்றுகிறதா... இதுதான் அந்த இருக்கும்... ஆனா இருக்காது...

நிறுவனங்கள் குறுக்கு வழியில் கண்டுபிடித்த உத்திதான் விலையை ஏற்றாமல், அளவு அல்லது எடையைக் குறைக்கும் உத்தி.

maheswaran.p@thehindutamil.co.in

சிருஷ்டியின் அடிப்படைக்கூறு

Return to frontpage


யானையின் கன்று யானை மாதிரியே பிறக்கிறது. பூனையின் குட்டி பூனை மாதிரியே பிறக்கிறது. ஆனாலும், கருத்தரித்த சில வாரங்களுக்குள் கருப்பையில் உருவாகியிருக்கிற கருவைப் பார்த்தால், மனிதன் முதல் மீன் வரை எல்லா உயிரினங்களிலும் அதன் வடிவம் ஒரே மாதிரியாக இருக்கிறது. நாளாக நாளாகத்தான் கரு, அதன் பெற்றோரின் வடிவத்தைப் படிப்படியாக அடைகிறது. இவ்வாறு பெற்றோரின் வடிவமைப்பு பிள்ளைகளுக்கும் அமைவதற்குப் பாரம்பரியம் என்ற பண்பு காரணமாகிறது.

பொதுவான அம்சங்களில் பெற்றோருக்கும் பிள்ளை

களுக்கும் இடையில் வடிவ ஒற்றுமை காணப்படுகிற போதிலும், சின்னச் சின்ன விஷயங்களில் வித்தியாசங் களும் இருக்கும். அதன் காரணமாகவே ஒரே ஈற்றில் ஒட்டிப் பிறக்கிற பிள்ளைகளைக்கூட நம்மால் அடை யாளம் காண முடிகிறது. இதற்குத் தனித்துவம் என்று பெயர்.

மரபணுக்களின் மாய உலகம்

பாரம்பரியத்துக்கும் தனித்துவத்துக்கும் காரணமாவது மரபணு (ஜீன்) எனப்படுகிற அடிப்படைக்கூறு. இயற்பி யலிலும் வேதியியலிலும் அணு என்பது அடிப்படைக் கூறாக இருப்பதைப் போல உயிரியலில் மரபணு ஓர் அடிப்படைக் கூறாக விளங்குகிறது. தலைமயிர் கருப்பா, சிவப்பா, பொன்னிறமா, சுருட்டையா, நீளமா, மூக்கு சப்பையா, கிளி மூக்கா என்பன போன்ற அம்சங்களை நிர்ணயிப்பது மரபணுதான்.

தலை வழுக்கை, பார்வைக் கோளாறுகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மனநோய் போன்ற பல வேண்டாத விஷயங்களும் பெற்றோரிடமிருந்து பிதுரார்ஜிதமாகப் பிள்ளைகளுக்கு மரபணுக்கள் மூலமாகவே வந்து சேருகின்றன.

மேற்சொன்ன ஒவ்வொரு குணாம்சத்துக்கும் ஒரு மரபணு பொறுப்பு வகிக்கிறது. இவ்வாறான 25 ஆயிரம் குணாம்சங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அதாவது, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரபணு வகைகள் உள்ளதாகப் பொருளாகிறது.

மரபணுக்கள் சரம்போல வரிசையாக அமைந்து ‘டியாக்சிரிபோ நியூக்ளிக் அமிலம்’ (டி.என்.ஏ.) என்ற அமைப்பாக அணிவகுத்திருக்கும். அந்த அமைப்பு ‘குரோமோசோம்’ எனப்படும் புரத உறைக்குள் பொதிந் திருக்கும். ஏராளமான குரோமோசோம்கள் செல் கரு என்ற உருண்டையாகத் திரண்டிருக்கும். அது செல் எனப்படும் நுண்ணறையில் குடியிருக்கும்.

செல்களில் எத்தனை ரகங்கள்

செல் என்பது ஓர் அதிசய, அற்புதப் படைப்பு. வைரஸ் எனப்படும் நுண்ணுயிரியைத் தவிர, மற்றெல்லா ஜீவராசிகளுக்கும் செல்தான் கட்டுமான அலகு. செல் அமைப்பு இல்லாத ஒரே உயிரி வைரஸ்தான்.

உயிர் உள்ளது என நிர்ணயிப்பதற்கு செல்களின் இனப்பெருக்கம்தான் சாட்சி. ஜெராக்ஸ் நகலெடுப்பதைப் போல ஒரு செல் இரண்டாகி, இரண்டு நாலாகி கணத்துக்குக் கணம் இரட்டித்துக்கொண்டே போகிற நிகழ்வுதான் உயிர். அது நின்றுபோவது மரணம்.

செல் மிக நுண்ணியது. அதன் உறையாக பிளாஸ்மா சவ்வு அமைந்துள்ளது. செல்களில் உடல் செல்கள், பாலின செல்கள் என இரு வகையுண்டு. பாலின செல்கள் ஆண்களின் விந்தகத்திலும் பெண்களின் முட்டையகத்திலும் மட்டுமே காணப்படும். உடல் செல்களில் 46 குரோமோசோம்களும் பாலின செல்களில் 23 குரோமோசோம்களும் இருக்கும்.

ஆண் பாலின செல், விந்து மூலம் பெண்ணின் கருப்பையில் நுழைந்து பெண் பாலின முட்டையைச் சந்திக்கிறபோது விந்து செல்லின் கரு முட்டைக்குள் நுழைந்து, அங்குள்ள கருவில் ஒட்டிக்கொள்ளும். தன் கருவுக்குள் 46 குரோமோசோம்கள் வந்துவிட்டன என்பதை உணர்ந்ததும் பெண் முட்டை வியப்பூட்டும் மாற்றங்களை அடைகிறது. அதனுள் பல பொருட்கள் உருவாகின்றன. அதன் பருமன் அதிகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது இரண்டிரண்டாகப் பிரிந்து, எல்லா வகையிலும் ஒத்த நகல் செல்களாகப் பெருகுகிறது.

சினையுற்ற கரு சிசுவாகப் பரிணமிக்கிறபோது உருவாகிற உடல், மயிர், எலும்புகள் போன்ற எல்லா உறுப்புகளுமே அந்த ஆதியாரம்ப முட்டையின் சந்ததி களால்தான் கட்டமைக்கப்படுகின்றன. ஆனாலும், ஒவ்வொரு செல்லும் தான் இருக்கும் இடத்துக்குத் தக்கபடி குறிப்பிட்ட பணியை மட்டுமே செய்கிறது. இதயத் திசுவிலுள்ள செல்கள் சுருங்கியும் விரிந்தும் இதயத்தைத் துடிக்கச் செய்கின்றன. எலும்பில் உள்ள செல்கள் அசைவின்றிப் பொருந்தியிருக்கின்றன. தசைகளில் உள்ள செல்கள் மூளையின் ஆணைகளுக்கு இணங்கி அசைவுகளை உண்டாக்குகின்றன. மூளையில் உள்ள செல்கள் மிகப்பெரும் சிக்கலமைப்பு கொண்ட மின் வேதியியல் சுற்றுக்களடங்கிய கணினியாகச் செயலாற்றுகின்றன.

கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்பு

களிலுள்ள செல்கள் திறன் மிக்க வேதித் தொழிலகங் களாகச் செயல்பட்டு, விசேஷ வகை நொதிகளையும் இன்சுலின் போன்ற வேதிகளையும் உற்பத்தி செய்கின்றன.

குரோமோசோம்கள் பல தலைமுறைகளை இணைக் கிற பாலங்கள். அவற்றிலுள்ள டி.என்.ஏ-க்கள் பல நூற்றாண்டுகள் வரை மாறாமல் இருக்கின்றன. உதாரணமாக, மனித குலத்தில் இதுவரை சுமார் 2,500 தலைமுறைகள் கழிந்திருக்கும். எனினும், சில மேலோட்டமான மாற்றங்களைத் தவிர, மனித உடலின் அமைப்பில் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை. குறிப்பாக, மனித மூளையின் பரிமாணம் கூடவோ குறையவோ இல்லை.

டி.என்.ஏ. சங்கிலி

டி.என்.ஏ. என்பது ஒரு சங்கிலி. நியூக்ளியோடைடு என்னும் மூலக்கூறு அதன் கண்ணிகள். அது பாஸ்பேட், ரிபோஸ் சர்க்கரை, நைட்ரஜன் காரம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. டி.என்.ஏ. ஒரு ஏணியை முறுக்கியது போன்ற வடிவத்தில் இருக்கும் என்று கண்டுபிடித்து வாட்சன், கிரிக் என்ற இரண்டு விஞ்ஞானிகள் நோபல் பரிசைப் பெற்றுவிட்டார்கள். அந்த ஏணியின் கால்களாக பாஸ்பேட் சர்க்கரை இழைகளும் படிகளாக நைட்ரஜன் காரங்களும் அமைந் துள்ளன.

பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா எல்லோரும் வெள்ளை நிறமுள்ளவர்களாக இருக்கிறபோது, குழந்தை கருப்பாகப் பிறந்திருக்குமானால், அதற்கு டி.என்.ஏ-வில் ஏற்பட்ட திடீர் மாற்றம் ஏதாவது காரணமாயிருக்கலாம். மயில், புலி போன்றவற்றில் வெள்ளை உடல் கொண்டவை தோன்றவும் இதுவே காரணம். மரபணு மாற்றத்தால் ஏற்படுவதுதான் புற்றுநோய். செல்லில் உள்ள குரோமோசோம்களின் அமைப்பு அல்லது எண்ணிக்கை செல் இரட்டிப்பின்போது மாறிவிடுவது, மரபணு மூலக்கூறில் வேறுபாடுகள் ஏற்படுவது போன்றவை மரபணு மாற்றங்களுக்கு உதாரணங்கள். டி.என்.ஏ-வில் ஒரே ஒரு நியூக்ளியோடைடு இடம் மாறி அமர்ந்தாலும் வெளிப்படையான மாற்றங்கள் தென்படும். அணுக்கதிர் வீச்சு, வெப்பம், வேதிகள் போன்ற காரணிகள் டி.என்.ஏ-வின் கட்டமைப்பை மாற்றி மரபணு மாற்றங்களை ஏற்படுத்தும்.

மரபணுக் கலப்பு

மரபணுவில் மாற்றங்களைச் செயற்கையாகவும் உண்டாக்கி கலப்பின உயிரினங்களை உருவாக்க முடியும். மாடுகள் முதல் நெல், கோதுமை வரை யான உயிரினங்களில் மரபணுக் கலப்புசெய்து சிறப்பான பண்புகளைக் கொண்ட கலப்பினங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கத்தரி, பருத்தி போன்ற செடிகளில் கிருமிகளின் மரபணுக்களைப் புகுத்தி அதிக விளைச்சல் தரும் ரகங்களை உருவாக்கியுள்ளனர். மரபணுத் திருத்தங்களின் மூலம் சில குறிப்பிட்ட நோய்களைக் குணப்படுத்த முடிந்திருக்கிறது.

மனிதர்களின் 46 குரோமோசோம்களையும் சோதித்து ஒவ்வொரு குரோமோசோமிலுள்ள குறைகளால் இன்னன்ன உடல் நலக்கோளாறுகள் வர முடியுமென்று பட்டியலிடப்பட்டுள்ளது. புதிதாகப் பிறந்த சிசுவின் குரோமோசோம்களைப் பரிசோதித்து எதிர்காலத்தில் அதற்கு எந்தவிதமான உடல்நலப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை ஊகித்துக்கொள்வதன் மூலம், ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து எதிர்காலப் பாதிப்புகளைத் தடுக்க இயலும்.

மரபணுக்களை இஷ்டப்படி மாற்றியமைத்து மன்மதனைப் போன்ற அழகுள்ள ஆண்களையும் ரதியைப் போன்ற பெண்களையும் கொண்ட ஒரு மனித சமூகத்தை உருவாக்கிவிடலாம் என்று அறிவியல் புனைகதை ஆசிரியர்கள் கற்பனைக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால், மரபணுக்களைத் திருத்தியமைப்பதன் மூலமாகச் சமூகத்தில் பெரிதாக எதையும் மாற்றிவிட முடியாது. இதுவரை மனித உடல் செல்களில் மட்டுமே மரபணுத் திருத்தம் செய்ய முடிந்திருக்கிறது. அதன் மூலம் தனிநபர்களின் சில குறைகளை நிவர்த்தி செய்தாலும் பாலின செல்களிலுள்ள மரபணுக்களைச் சரிப்படுத்தாதவரை அவர்களுடைய சந்ததிகளுக்கு மரபுப்பிழை மூலமான கோளாறுகள் வந்துகொண்டேதான் இருக்கும். பாலின செல்களில் உள்ள கோளாறுகளைச் சரிப்படுத்தாமல், உடல் செல்களை மட்டும் சரி செய்தால் ஓர் ஆபத்து வர வாய்ப்பு உண்டு. உதாரணமாக, ஒருவரது வலிப்பு நோயை மரபணுத் திருத்தம் செய்து குணப்படுத்தி விட்டால், அவர் ஊக்கமும் வலுவும் பெற்றுத் திருமணம் செய்துகொண்டு அதே மரபணுக் கோளாறுள்ள பிள்ளைகளைப் பெற்றுத்தள்ளி விடலாம். அவர்களில் பலருக்கு வலிப்பு நோய் வரும்.

ஆணும் பெண்ணும் மணம் செய்துகொள்ளும் முன் தமது மரபணுக்களைப் பரிசோதிப்பதன் மூலம் மரபுக் கோளாறுள்ள சந்ததிகளைப் பெறுவதைத் தவிர்க்க முடியும்.

- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).

Monday, January 5, 2015

Make all arrangements on assets filing by January: PM to secretaries

New Delhi: In order to ensure timely compliance of April-end deadline for filing of assets details by babus, Prime Minister Narendra Modi has asked the authorities concerned to take preparatory steps in this regard by January. The Department of Personnel and Training (DoPT) has written to all chief secretaries of states and secretaries of central government ministries and departments informing them about the Prime Minister’s directive. As per the Public Servants (Furnishing of Information and Annual Return of Assets and Liabilities and the Limits for Exemption of Assets in Filing Returns) Second Amendment Rules, 2014, a public servant shall file the returns of his assets and liabilities, including that of his spouse and dependent family members. As per the rules, all Group A, B and C employees need to declare such details as on 31 March every year on or before 31 July of that year. For the current year, the last date for filing these returns was 15 September, which was later extended to December-end and now till April next year, for the current fiscal by 30 April 2015. “The Prime Minister has further directed that all preparatory steps be put in place for this purpose by 31 January 2015,” reads the DoPT letter sent to the state governments on Monday. In a communique to all central government secretaries, it has sought compliance of the rules by all officers and staff in ministries, and in departments or PSUs under their administrative control. The DoPT has notified a new form for the employees to declare details of their assets and liabilities, along with that of their spouse and dependent children, which is mandatory under the Lokpal Act. The declarations under the Lokpal Act are in addition to similar ones filed by the employees under various services rules. There are about 26,29,913 employees in Group A ,B and C, as per the government’s latest data.

DoPT to Put Up Retiring Officials' Achievements Online


The usual garlanding and samosa- chai parties aside, retiring central government employees can now mark their going out of service with a dossier of their achievements and initiatives which would be showcased online to inspire their peers.

In a unique initiative, the Department of Personnel and Training (DoPT) has mooted a proposal for creating a "platform to showcase the significant achievements" of civil servants which they can look back on at the time of retirement with "satisfaction and a sense of fulfilment".

Under the voluntary scheme, employees who are retiring in the next six months will be provided with an online facility to submit a list of their outstanding achievements.

The said employees will be asked to give details as to commendable work done by them, their achievements and new ideas given by them which contributed to the efficiency, economy and effectiveness of government functioning.

The commendable work defined by DoPT includes innovation leading to improved work culture and creation of manuals and publications related to work.

The write-ups thus submitted will be displayed on the DoPT website to serve as a "motivator for serving employees".

The government has, however, clarified that comments which are religious or political in nature or against national interest will not be permitted.

"The exercise would be completed at least one month before retirement and the result uploaded on the departmental website. While an online system will be designed for this purpose, it would be possible for employees to submit hard copies instead of going online," states the circular in this regard.

The retiring employees have also been asked to remember to to mention where relevant the contribution of the entire team along with the names of their team members.

விருதும் விவாதமும்!

Dinamani
'பாரத ரத்னா' விருது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளிலேயே முதன்மையானது. தேசத்திற்கு அளப்பரிய தொண்டாற்றியவர்களுக்கும், உலக அரங்கில் இந்திய தேசத்திற்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தித் தந்த சாதனையாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட வேண்டிய விருது அது. அந்த விருதின் கெளரவம் குலைக்கப்படுவது என்பதும், "பாரத ரத்னா' விருது பெறுபவர்கள் குறித்து விவாதம் எழுவது என்பதும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இழிவு.

2014-ஆம் ஆண்டுக்கான "பாரத ரத்னா' விருதுக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியும், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக நிறுவனரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்துமகா சபை தோற்றுவிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவருமான பண்டித மதன்மோகன் மாளவியாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அடல் பிஹாரி வாஜ்பாயி பற்றிய தேர்வில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை. அவரது அரசியல் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் மரியாதைக்குரிய மக்கள் தொண்டராகவும், நாடாளுமன்றவாதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் அவர். ஆனால், பண்டித மதன்மோகன் மாளவியாவின் தேர்வு அப்படியல்ல.

பண்டித மதன்மோகன் மாளவியாவின் தேசபக்தியும், அவர் ஆற்றியிருக்கும் கல்விப் பணியும் பாராட்டுக்குரியவை என்பதில் சந்தேகமே கிடையாது. இந்தியாவின் தலைசிறந்த விருதுக்குத் தகுதியற்றவர் பண்டித மதன்மோகன் மாளவியா என்று கூறிவிட முடியாது. ஆனால், 153 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த அந்த தேசபக்தர் மறைந்து 68 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இப்போது அவருக்கு "பாரத ரத்னா' விருது வழங்கி கெளரவிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பதுதான் சர்ச்சைக்கு காரணம்.

எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும்போது, தங்களது கொள்கையை நிலைநாட்டுவதும், தாங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டவர்களின் நினைவைப் போற்றுவதும் இயல்பு. தமிழகத்தில் காணப்படும் பெரியார், அண்ணா சிலைகளும், உத்தரப் பிரதேசத்தில் காணப்படும் டாக்டர் அம்பேத்கர், கன்ஷிராம் சிலைகளும் இதற்கு உதாரணங்கள். இடதுசாரிக் கட்சியினர் மட்டும்தான் இந்த விஷயத்தில் மாறுபட்டு நிற்பவர்கள்.

1980-இல், யுகோஸ்லேவியராக இருந்தாலும் இந்தியக் குடியுரிமை பெற்று இங்கே சமூக சேவை புரிந்த அன்னை தெரஸாவுக்கும், 1987-இல், பிரிவினைக்குப் பிறகு பலுசிஸ்தானியர் என்பதால் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவராக இருந்தாலும், சுதந்திரப் போராட்ட வீரரும், "எல்லைக் காந்தி' என்று பரவலாக அறியப்பட்டவருமான கான் அப்துல் கஃபார் கானுக்கும் "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டபோது அதை அனைவரும் வரவேற்றனரே தவிர எதிர்க்கவில்லை.

"பாரத ரத்னா' விருது விமர்சனங்களுக்கு உள்ளானது 1990-இல் தான். வி.பி. சிங். தலைமையிலான அன்றைய தேசிய முன்னணி அரசு, பாபாசாகேப் அம்பேத்கர் இறந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு "பாரத ரத்னா' விருதை அறிவித்தபோது, அதற்குப் பின்னால் அரசியல் இருந்தது என்பதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பாபாசாகேப், "பாரத ரத்னா' விருதைவிட உயர்ந்தவர் என்று ஒரு தரப்பும், மறைந்த தலைவர்களுக்கு "பாரத ரத்னா' விருது வழங்குவது என்று தொடங்கினால் பட்டியல் நீண்டு கொண்டே போய்விடும் என்று இன்னொரு தரப்பும் தெரிவித்தன. இந்தியாவுடன் தொடர்பே இல்லாத நெல்சன் மண்டேலாவுக்கு "பாரத ரத்னா' வழங்கப்பட்டதும் விமர்சிக்கப்பட்டது.

அடுத்தாற்போல வந்த சந்திரசேகர் தலைமையிலான குறுகியகால அரசு, ராஜீவ் காந்திக்கு "பாரத ரத்னா' வழங்கும் சாக்கில் மொரார்ஜி தேசாய்க்கும், மறைந்து 41 ஆண்டுகளான சர்தார் வல்லபபாய் படேலுக்கும் அந்த உயர்ந்த விருதை வழங்க முற்பட்டது.

வி.பி. சிங் அம்பேத்கருக்கும், சந்திரசேகர் சர்தார் வல்லபபாய் படேலுக்கும் "பாரத ரத்னா' விருது கொடுத்தனர் என்றால், 1992-இல் பி.வி. நரசிம்மராவ், காலமாகி 34 ஆண்டுகளுக்குப் பிறகு அபுல்கலாம் ஆசாதுக்கு "பாரத ரத்னா' வழங்க முற்பட்டார். அதேபோல, 1999-இல் அன்றைய வாய்பாயி அரசு, அஸ்ஸாமின் முதலாவது முதல்வரான கோபிநாத் பர்டோலாய்க்கு இறந்து 49 ஆண்டுகளுக்குப் பிறகு "பாரத ரத்னா' விருது வழங்கியது.

காலம் கடந்து தலைவர்களுக்கெல்லாம் விருது வழங்குவது என்று சொன்னால், லோகமான்ய திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, பகத் சிங், லாலா லஜபதிராய், ஏன், நமது "கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி. ஆகியோரும்தான் "பாரத ரத்னா' விருதுக்குத் தகுதியானவர்கள். ரவீந்திரநாத் தாகூருக்கும், மகாகவி பாரதிக்கும் "பாரத ரத்னா' தரப்பட வேண்டாமா?

முதலில் "பாரத ரத்னா' விருது யாருக்கெல்லாம் வழங்கப்பட வேண்டும், மறைந்துவிட்ட தலைவர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு வரைமுறை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டும் போதாது. குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள் ஆகியோர் கொண்ட குழுவால் "பாரத ரத்னா' விருதுக்குத் தகுதி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை செயல்படுத்தப்பட்டால்தான் தேசத்தின் உயரிய விருதின் கெளரவம் காப்பாற்றப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி தனது வாராணசி தொகுதி மக்களை மகிழ்ச்சிப்படுத்த "பாரத ரத்னா' விருதைப் பயன்படுத்தி இருக்க வேண்டாம்!

Sunday, January 4, 2015

வானொலிகளின் வசந்தகாலம்



தொலைக்காட்சிகளின் யுகம் இது. நெடுந்தொடர்கள், நல்ல நாட்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள், நாள் முழுவதும் செய்திகள் என்று கண்களுக்கு ஓய்வே இருப்பதில்லை. தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நிகழ்ச்சி களை இணையத்தில் பார்த்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் காதுகள்தான் கண்கள்! செவி வழி நுழையும் செய்திகள், பாடல்கள், வானொலி நாடகங்கள் கற்பனைகளை உருவாக்கிய அற்புதக் காலம் அது.

என் சித்தப்பாவிடம் பழைய காலத்து மாடல் வானொலி இருந்தது. டிரங்குப் பெட்டி மாதிரி இருந்த அந்த வானொலியைச் சிறுவயதில் பார்த்துப் பிரமித்திருக் கிறேன். காலை 6 மணிக்கு நிகழ்ச்சி கேட்க வேண்டுமானால், ஐந்தரைக்கே அதை தயார் செய்துவிடுவார் சித்தப்பா. வலது பக்கத்தில் இருக்கும் குட்டி பல்பு எரிந்து ‘சொய்ங்’ என்று சத்தம் எழுப்பிய படிப் பாட ஆரம்பிக்கும்போது அநேகமாக எங்களுக்குத் தூக்கம் கலைந்திருக்கும். வானொலியில் துணி காயப்போடும் கம்பி மாதிரி நீண்ட ஏரியல் அதில் இருக்கும்.

அறியாமையின் அழகு!

‘இந்தப் பொட்டியிலிருந்து எப்படி சித்தப்பா பாட்டுக் கேக்குது?’ என்று கேட்ட போது சித்தப்பா சொன்ன விளக்கத்தை மறக்கவே முடியாது. மிகப் பெரிய ரகசியத்தை எங்களிடம் மட்டும் சொல்வது போன்ற பாவனையுடன் மெதுவாகச் சொல்வார், “பாட்டுப் பாடுறவங்க மொத நாளே இந்தப் பொட்டிக்குள்ள போய் உக்காந்துக்குவாங்க… பாடி முடிச்சவுடனே காத்துல ஏறிக் காணாமப் போய்டுவாங்க.” சிறுவர்கள் எங்களுக்கு என்ன தெரியும், நம்பித்தொலைத்தோம். ஆனால், அந்த அறியாமை பல கற்பனை களைத் தூண்டிவிட்டது தனிக் கதை.

வானொலியைப் பொக்கிஷம் போல் பாதுகாத்தார் சித்தப்பா. வானொலிப் பெட்டியைச் சுற்றி மரத்தாலான காப்புப் பெட்டியைப் பொருத்தி வைத்திருந்தார். மேலிருந்து கீழே இறக்கி மூடும் கண்ணாடிக் கதவு உண்டு அதற்கு. சிறுவர்கள் எங்கள் கைபடாத உயரத்துக்கு வானொலியை வைத்திருப்பார் சித்தப்பா. அவருக்குத் தெரியாமல் யாரேனும் தொட்டால் தொலைத்துவிடுவார். “நூறு ரூபா குடுத்து வீராவரத்தில் வாங்கினதுடா” என்பார்.

டெல்லி அஞ்சலில் ஒலிபரப்பாகும் இந்துஸ்தானி இசையை அதில் கரகரப் பாய் கேட்கும்போது வித்தியாசமாய் இருக்கும். அப்பாவும் வானொலி விசிறிதான். அவரால் வந்தே மாதரம் கேட்காமல் அன்றும் இன்றும் என்றும் அவரால் நாளைத் தொடங்க முடியாது. சூரியன் உதித்தும் உதிக்காமலும் இருக்கும் அந்தக் கருக்கலோடு இயைந்த அந்தக் காலைவேளை வானொலியின் மங்கல இசை கேட்கும்போது, உலகமே கொஞ்சம் கொஞ்சமாய் பிரகாசமாவதாய்த் தோன்றும்.

நெல்லை வானொலியின் சான்றோர் சிந்தனை அப்பாவுக்குப் பிடித்தமானது. நாகூர் ஹனிபாவின் பாடல்கள், பி.சுசீலா வின் ‘தாமரைப்பூவில் அமர்ந்தவளே..’ பாடல், ‘ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?’ பாடல் என்று காலையில் ஒலிக்கும் பாடல்கள் மனசை லேசாக்கிவிடும். தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலும் மறக்க முடியாதது.

இலங்கை எனும் பூங்காற்று

இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம், விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு, பிபிசியின் தமிழோசை, ஆல் இந்தியா ரேடியோ என்று பல வானொலி நிலையங்கள் எங்கள் காதுகளுக்குச் சாமரம் வீசின. இலங்கை வானொலியின் மயில்வாகனம், கே.எஸ்.ராஜா, ராஜேஷ்வரி சண்முகம், பி.எச்.அப்துல் ஹமீது, விமல் சொக்கநாதன், சில்வெஸ்டர் பாலசுப்ரமணியம், கமலினி செல்வ ராஜன், எழில்வேந்தன் ஆகியோரின் குரல்களுக்குக் கடல் கடந்தும் ரசிகர்கள் இருந்தார்கள்.

‘பிறந்தநாள்… இன்று பிறந்தநாள்’ என்ற பாடலுடன் தொடங்கும் வாழ்த்து நிகழ்ச்சியை என்றுமே மறக்க முடியாது. வாழ்த்துபவர்களின் பட்டியலில் ‘அப்பப்பா, அம்மம்மா’ என்று சொல்லும்போது உறவுமுறைப் பெயர்கள்குறித்து ஆச்சரியம் ஏற்படும். நமக்கே பிறந்தநாள் வந்ததைப் போல் அறிவிப்பாளர்களின் குரல்கள் ஆனந்தப் படுத்தும். 30 ஆண்டுகளுக்கு முன் வந்த பாடலின் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் பற்றிய தகவல்களை எந்தக் குறிப்பும் இல்லாமல் நினைவில் இருந்தே எடுத்துச் சொல்வார்கள். அந்த அளவுக்கு ரசனை மிகுந்த அறிவிப்பாளர்கள் அவர்கள்.

செய்திகள் வாசிப்பது…

அகில இந்திய வானொலியும் சளைத்ததல்ல. ‘செய்திகள் வாசிப்பது சரோஜ்நாராயண் சுவாமி’ என்ற அந்தக் கரகரப்பான காந்தக் குரலை மிகவும் நேசித்தோம். இடையிடையே நிறுத்தி மூச்சு வாங்க எடுத்துக்கொள்ளும் அவர் பாணி வித்தியாசமானது. சில நாட்களில் அவர் செய்தி வாசிக்கும்போது தாள்களை நகர்த்தும் சத்தம்கூடத் தெளிவாய்க் கேட்கும். கோபால் பல்பொடி, பொன்னான புதிய ரக்சோனா, பாண்ட்ஸ் என்று பல்வேறு பொருட்களின் விளம்பரங்களைக் கேட்பதே ஆனந்தமாக இருக்கும். நாம் பயன்படுத்தும் பொருளைப் பற்றி வானொலியில் சொல்கிறார்களே என்று ஒரு சின்ன குதூகலம் இருக்கும்.

இன்றும் வானொலிக்கான தனி ரசிகர்கள் உண்டு. ஆனால், காதுகளுக்காக மட்டும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பான காலம் முடிந்துவிட்டது. பண்பலையில் பாட்டும் பேச்சும் என்று பல விஷயங்கள் ஒலிபரப்பாகின்றன. என்னவோ அவற்றில் மனம் லயிப்பதில்லை. இளமைக் காலத்தில் வானொலியில் கேட்ட பாடல் களைக் கேட்கும்போது, அந்தக் கால நினைவுகளின் இனிமையை இன்றும் உணர முடிகிறது.

- முனைவர் சௌந்தர மகாதேவன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர்,தொடர்புக்கு: mahabarathi1974@gmail.com​

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...