Tuesday, February 17, 2015

ஐஃபோனை விட கிரிக்கெட் பேல்ஸ் விலை அதிகம்!



உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் ஒரு பேல்சின் விலை, ஐ போனை விட அதிக விலை ஆகும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின்போது பயன்படுத்தப்படும் ஒரு செட் எல்இடி ஸ்டம்புகளின் விலை 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.24 லட்சம். அதுபோல் ஸ்டம்புகளின் மேல் இருக்கும் இரண்டு பேல்ஸ்களின் விலை தலா ரூ.50 ஆயிரம் ஆகும். இது ஒரு ஐஃபோனை விட அதிகம்.

இந்த ஸ்டம்புகளின் ஸ்பெஷல் என்னவென்றால், பந்து ஸ்டம்பில் பட்ட அடுத்த வினாடியில் விளக்கு எரிந்து விடும். இதனால் நடுவர்கள் எளிதாக அவுட்டா இல்லையா என்பதை தீர்மானித்து விடலாம்.எல்இடி ஸ்டம்புகள் முதல்முறையாக ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் போட்டியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்கு பின் கடந்த 2013ஆம் ஆண்டு பங்ளாதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் எல்இடி ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டன. அந்த தொடரில் எல்இடி ஸ்டம்புகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்தையடுத்து, இந்த உலகக் கோப்பை போட்டியிலும் எல்இடி ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற்ற அணி வீரர்கள், ஓடி போய் ஸ்டம்புகளை கையில் எடுத்து வெற்றியை கொண்டாடுவது வழக்கமானது.இப்போது விலைஉயர்ந்த இந்த எல்இடி ஸ்டம்புகளை தேவையில்லாமல் கையில் எடுக்க கூடாது என்று வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் தோனி வழக்கமாக வெற்றி பெற்றவுடனேயே ஸ்டம்பைதான் ஓடி போய் கையில் எடுப்பார். இந்த தடை காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற போது, தோனி ஸ்டம்புகளை கையில் எடுத்து வெற்றியை கொண்டாடவில்லை. அந்த வகையில் தோனி ஸ்டம்பிங் செய்யப்பட்டு விட்டார்.

AI pilots grounded after tail strike

MUMBAI: An Air India aircraft with 194 people on board had a narrow escape after suffering a tail strike while landing at Mumbai airport on Sunday afternoon. The Airbus A-321 (VT-PPD) was operating as AI 680 from Mangalore to Mumbai. During touchdown, the plane's long tail portion scraped the runway at very high speed for some seconds before the nose wheel was lowered down and the aircraft brought to its correct position.

Luckily for the 187 passengers and seven crew members on board, the aircraft came to a halt safely. But a crew member reportedly suffered bruises due to the impact of what was possibly a hard landing that may have led to the tail strike.

"Both the pilots have been grounded. The Directorate General of Civil Aviation (DGCA) is probing this incident. We are cooperating with them," said an AI spokesperson. Given the seriousness of the case, the head of DGCA's safety wing, joint DG Lalit Gupta, is handling the case from Delhi as both the AI pilots are based in the capital. The safety regulator's Mumbai unit is also doing a probe since the incident happened there.

Senior Airbus commanders say that the longer A-321 is more prone to tail strikes on takeoff or landing if improper flying technique is followed. AI has three members of the A-320 family of aircraft—the short A-319; medium length A-320 and the long A-321. Same pilots fly these three planes as the Airbus conducts "cross qualification" training for the family of planes.

According to Airbus technical papers, almost 65% of tail strikes happen on landing.

"The structural integrity of an aircraft is jeopardized by a tail strike happening at the high speeds planes are at takeoff or touchdown. Old planes could even split (VT-PPD is a relatively new plane as it was assembled in 2007). Pressurization of a tail strike-hit aircraft cabin is in serious question," said a senior commander who flies Airbus.

He said a tailstrike may happen if an aircraft is coming in to land too steeply and then arrests the rate of descent abruptly. It may also occur if the crew tries to make an excessively smooth landing and delays touching down of front wheel to soften the jerk.

The tail strike comes at a very bad time for AI as it is facing a shortage of aircraft. Now this A-321 is unlikely to be back in the sky in a hurry.

Chennai gets one more Apollo hospital

CHENNAI: Apollo Hospitals launched its tenth hospital in Chennai on Monday. TCS managing director N Chandrasekaran and chairman of the Apollo Hospitals Group Prathap C Reddy inaugurated the new hospital at Perungudi on the Old Mahabalipuram Road (OMR).

Apollo Speciality Hospitals is a 150-bed hospital that would offer tertiary care across medical disciplines like neuro and cardiac sciences, orthopaedics and trauma.

This hospital will lay special emphasis on preventive screening and diagnosis for NCDs (non-communicable disorders).

"The hospital will be characterized by customized work flows that leverage cutting edge technology and harness the immense power of health IT," Suneeta Reddy, managing director of Apollo Hospitals, said.

செல்போன் வெடித்து வாலிபரின் முகம் சிதைந்த கொடுமை!


பெங்களூரு: சார்ஜர் போட்டுக் கொண்டு பேசியதால் செல்போன் வெடித்து வாலிபரின் முகம் சிறைந்து போன சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சீதாராம் (18). இவர் மைசூரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது, சார்ஜர் போட்டப்படியே செல்போனை ஆன் செய்துள்ளார் சீதாராம். அப்போது பயங்கர சத்தத்துடன் செல்போன் வெடித்து சிதறியது. இதில் சீதாராமின் முகம் சிதைந்தது.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த நண்பர்கள் பணியாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றர். அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சீதாராமின் தொடை பகுதி தோலை எடுத்து முகத்தில் ஒட்டி தையல் போட்ட மருத்துவர்கள், கீழ் தாடை பகுதியின் முக்கிய எலும்பு சேதம் அடைந்து நொறுங்கி விட்டதால் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்து விட்டார். ஆனால், முன்னர் இருந்த அந்த அழகிய முக அமைப்பை அந்த வாலிபர் மீண்டும் பெற பல லட்சம் ரூபாய் செலவும், பல ஆண்டு கால காத்திருப்பும் அவசியம்.

பரிதாபப்பட்ட குடும்பத்துக்கு நேர்ந்த பரிதாபம்!



சென்னை: சாலையில் அடிபட்டு கிடந்த ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட குட்டிநாயை எடுத்து வந்த இளம்பெண்ணின் தந்தை மற்றும் நண்பரையே அந்த நாய் கடித்ததோடு, இறந்தும் விட்டது. இதனால் அந்த பெண்ணின் குடும்பமே தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

நன்றியுள்ள விலங்கு நாய் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஆனால் இந்த சம்பவம் கொஞ்சம் வித்தியாசமானது. படித்து தான் பாருங்களேன்.

தாம்பரத்தை சேர்ந்தவர் வினோதா. என்ஜினீயரிங் மாணவியான இவர், கால்நடைகள் மீது அதிக பிரியம் உடையவர். ப்ளூ கிராஸ் அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இவரது தந்தை வேணுகோபால். ஓய்வு பெற்ற மாநகராட்சி அதிகாரி. இவரும் கால்நடைகள் மீது பிரியமானவர்.

இவர், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற போது அவர் கண்ட காட்சி அவரை கண்கலங்கச் செய்தது. சாலையோரத்தில் ஒரு குட்டி நாயின் கால் உடைந்த நிலையில் பரிதாபமாக சுருண்டு படுத்துக் கிடந்தது. அதைப்பார்த்த வேணுகோபால், ஓடோடி சென்று அதற்கு முதலுதவிகளை செய்தார். அதோடு விடாமல் அந்த தெரு நாய் குட்டியை தனது வீட்டுக்கு கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை அளித்தார்.

அந்த நாய்க்கு ரியா என்றும் பெயரிட்டு பாசத்துடன் வினோதா குடும்பத்தினர் வளர்த்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வினோதா வீட்டில் இல்லாத போது அந்த குட்டி நாயை வேணுகோபால் கவனித்துக் கொண்டு இருந்தார். திடீரென அந்த நாய்க்குட்டி வேணுகோபாலை கடித்து விட்டது. இதனால் அவருக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நாய்க்கடிக்கான தடுப்பு ஊசி போடப்பட்டது. இதன்பிறகு ரியாவுக்கு சிகிச்சை அளிக்கவும், ரேபீஸ் தடுப்பு ஊசி போடவும் வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வினோதா மற்றும் அவரது நண்பர் வினோத்தும் ஏற்பாடு செய்தனர். அப்போது யாருமே எதிர்பாராத சம்பவம் அரங்கேறியது.

குட்டி நாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒரு பாக்ஸில் வினோத், நாய்க்குட்டியை வைத்தப் போது அவரைக் அது கடித்தது. இதனால் அவருக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டது. சிறிது நேரத்தில் நாய் ரியா இறந்து போனது.

இதன்பிறகு ரியாவை பிரேத பரிசோதனை செய்தனர் டாக்டர்கள். அப்போது ரியாவுக்கு 'ரேபீஸ்' நோய் இருப்பது தெரிந்தது. இதனால் வினோதாவின் ஒட்டுமொத்தக் குடும்பமும் பதற்றத்துக்குள்ளானது. ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய் கடித்து, அது இறந்து விட்டதால் கடிப்பட்டவர்களுக்கு உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் வினோதாவுக்கு தெரிவித்தன. இந்த ஆபத்திலிருந்து கடிப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் ரேபீஸ் நோய்க்கான தடுப்பு ஊசி போட வேண்டும் என்று வினோதாவுக்கு கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தடுப்பு ஊசி குறித்து விசாரித்த போது அதன் விலை 40 ஆயிரம் ரூபாய் என்று தெரிந்தது. அவ்வளவு பணம் கொடுத்து தடுப்பு ஊசி போடும் அளவுக்கு வினோதாவின் குடும்பம் இல்லை. இதனால் அரசின் இலவச மருத்துவம் சார்ந்த தகவலுக்கான எண் 104ஐ வினோதா தொடர்பு கொண்டார். அங்குள்ள மருத்துவ ஊழியர்கள், வினோதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதலும், அறிவுரைகளும் கொடுத்தனர். வினோதாவின் வீட்டின் அருகே உள்ள மூவரசன்பேட்டை என்ற இடத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபீஸ் நோய்க்கான தடுப்பு ஊசி இலவசமாக போடப்படுவதாக மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர். அதன்படி வினோதாயின் தந்தை மற்றும் நண்பருக்கு இலவசமாக ரேபீஸ் தடுப்பு ஊசி போடப்பட்டது.

இதுகுறித்து அரசின் 108, 104 என்ற சேவையின் விழிப்புணர்வு துறை மேலாளர் பிரபுதாஸ் கூறுகையில், "பொது மக்களுக்காக பல்வேறு மருத்துவ உதவிகளை அரசு செய்து வருகிறது. ஆபத்தான நேரங்களில் பொது மக்கள் பதற்றமடையாமல் 108, 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உங்களுக்கு வழிகாட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். மருத்துவ தேவைகளுக்கு மட்டுமல்லாதது அரசு மருத்துவமனைகளில் குறைகள் இருந்தாலும் 104ல் புகார் கொடுக்கலாம். புகார் அடிப்படையில் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்" என்றார்.

வினோதா கூறுகையில், "எங்கள் வீட்டில் 5 நாய்கள் உள்ளன. அதோடு சேர்த்து ரியா என்ற பெண் நாய் குட்டியையும் வளர்த்தோம். எங்களது கவனக்குறைவால் அது அப்பாவையும், நண்பரையும் கடித்து விட்டது. தினமும் 10 முதல் 15 தெரு நாய்களுக்கு உதவி செய்கிறோம். இந்த சேவை தொடரும். ரியாவை மிஸ் பண்ணிது கஷ்டமாக இருக்கிறது" என்றார் வருத்தத்துடன்.

உதவ சென்ற இடத்தில் உபத்திரமானாலும், கால்நடைகளுக்கு தொடர்ந்து உதவுவது என்று நினைப்பது வினோதாவின் குடும்பத்தினரின் மனித நேயத்தை இது காட்டுகிறது.

'பேஸ் புக்'கில் வாரிசுதாரர் நியமன வசதி

வாஷிங்டன் :சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில், வாரிசுதாரர் நியமன வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பல கோடி மக்களை உறுப்பினராக கொண்ட, மிகப்பெரிய சமூக வலைதளங்களில், பேஸ்புக் முதலிடத்தில் உள்ளது. இந்த வலைதள நிறுவனம், பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளோர் இறந்த பிறகும், அக்கணக்கை அவர்களின் வாரிசுகள், நியமனதாரர்கள் ஆகியோர் தொடர்ந்து கையாளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி கணக்கில், வாரிசுதாரரை குறிப்பிடுவது போல், பேஸ்புக்கில் இணைந்துள்ள ஒருவர், தமக்கு பின், தன் கணக்கை தொடரும் உரிமையை வாரிசுக்கோ, நண்பருக்கோ வழங்கலாம்.இதன் மூலம் ஒருவர் இறப்புக்குப் பின், அவரது பேஸ்புக் கணக்கு பயன்படுத்தப்படாமல் முடங்குவது தவிர்க்கப்படும். புதிய வசதி முலம் ஒருவரின் இறப்பை, அவரது பேஸ்புக் நண்பர்களுக்கு தெரிவிக்கவும், இரங்கல் செய்திகளை பகிரவும், இறுதிச் சடங்கு படங்களை வெளியிடவும், வாரிசுதாரருக்கு வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், நட்பு வட்டாரத்தையும் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.இறந்தோரின் பேஸ்புக் கணக்கை சுலபமாக அடையாளம் காண்பதற்காக, அவரது பெயர் முன், 'நினைவாக' என்ற சொல்லும் இடம் பெறும் என, பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தொட்டில் குழந்தைகள் திட்டம்தான் தீர்வு

இந்தியா காலம்காலமாக பெண்மையைப் போற்றி வணங்கி வந்தாலும், சமுதாயத்தில் தனக்கு பெண்குழந்தை என்றால் சலிப்புடன் வேண்டா வெறுப்பாக கருதும் நிலை இருப்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் 1941–ம் ஆண்டில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 1,010 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் பிறப்பில் இருந்து, 6 வயது வரையிலான குழந்தைகள் விகிதம் இருந்தது. ஆனால், காலப்போக்கில் இந்த விகிதம் குறையத்தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடுமுழுவதும் மக்கள் கணக்கெடுப்பு நடக்கிறது. இந்த கணக்கெடுப்பு முடிவுகள் வரும்போதுதான் இந்த விகிதம் அறியப்படுகிறது. 2001–ம் ஆண்டு கணக்கெடுப்பில் இதே வயது வரம்பில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தைகள் என்று இருந்த நிலைமாறி, 2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 919 ஆக குறைந்துவிட்டது. இந்த விகிதத்தில் அரியானா மாநிலம்தான் மிக மோசமாக இருக்கிறது. இங்கு பெண் குழந்தைகளின் விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 834 பெண் குழந்தைகள்தான். புதுச்சேரியில் 967 ஆகவும், தமிழ்நாட்டில் 943 ஆகவும், கர்நாடகத்தில் 948 ஆகவும், கேரளாவில் 964 ஆகவும், நாட்டின் தலைநகரமாம் டெல்லியில் பரிதாபகரமாக 871 ஆகவும் இருக்கிறது.

ஆக, நாட்டில் நிலவும் இந்த மோசமான நிலையை போக்கும் முயற்சியாக, பிரதமர் நரேந்திர மோடி, அரியானா மாநிலத்தில் ‘‘மகளை காப்போம், மகளுக்கு கல்வி புகட்டுவோம்’’ என்ற திட்டத்தை ரூ.100 கோடி செலவில் தொடங்கியுள்ளார். இது, அனைத்து மாநிலங்களிலும் பெண் குழந்தைகள் குறைவாக உள்ள 100 மாவட்டங்களில் விழிப்புணர்வு நடத்தும் திட்டமாகும். வெறும் பிரசாரத்தால் எந்த பயனும் எதிர்பார்த்த அளவு வரப்போவதில்லை. கருவில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று ஸ்கேன் மூலம் பார்ப்பதை தடைசெய்யும் சட்டத்தை கடுமையாக நிறைவேற்றவேண்டும். அதுபோல, பெண் சிசுக்கொலையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பெண் கல்வி, வேலைவாய்ப்புகள், வரதட்சணை கொடுமை ஒழிப்பில் இன்னும் கவனம் செலுத்தவேண்டும். எனக்கு பெண் குழந்தை வேண்டாம் என்று பிறந்த குழந்தையை கொல்லும் கொடிய வழக்கம் இன்னும் நாடு முழுவதும் இருக்கிறது. அப்படி வேண்டாம் என்று ஒதுக்கும் குழந்தைகளை கொல்லவேண்டாம், அரசே செல்லக்குழந்தைகளாக வளர்க்கும் என்ற ஒரு கருணைத்திட்டத்தை, 1992–ம் ஆண்டில் ‘தினத்தந்தி’யில், வயிற்றில் இருக்கும் கரு, பெண் குழந்தை என்று ஸ்கேன் மூலம் தெரிந்தவுடன், அந்த கருவை அழிக்க மாமியாரின் வற்புறுத்தலை தாங்கமுடியாத சேலம் மாவட்டம், தொப்பூர் காமராஜர்புரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 19 வயது பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட செய்தியைப் படித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மனம் உருகி கொண்டுவந்த திட்டம்தான் ‘தொட்டில் குழந்தைகள்’ திட்டம். அன்னை தெரசாவே சென்னையில் ஜெயலலிதாவை மனம் நெகிழ்ந்து பாராட்டிய திட்டம் இது. இந்த திட்டத்தின் மூலமாக இன்றுவரை 4,500–க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் பிழைத்து, சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். எனவே, வெறும் பிரசாரத்தோடு நின்றுவிடாமல், இந்த தொட்டில் குழந்தைகள் திட்டத்தை நாடுமுழுவதும் நிறைவேற்றினால்தான், இந்த கொடுமை தீரும் என்பதை தமிழக அரசும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகள் குறிப்பாக பா.ஜ.க.வினர், மத்திய அரசாங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

NEWS TODAY 28.01.2026