Thursday, March 12, 2015

ACCEPTANCE OF BANK PASSBOOK AS PROOF OF ADDRESS FOR PASSPORTS



வெளியூர் வாசிகள் தற்போது வசிக்கும் இடத்திலேயே ஆதாருக்கு விண்ணப்பிக்கலாம்


'தினமலர்' நாளிதழில், கடந்த, 10ம் தேதி, ஆதார்...எங்கே...எப்படி? என்ற தலைப்பில், ஆதார் முகாம்கள் நடக்கும் முகவரிகள், ஆதார் விண்ணப்பத்தை நிரப்புவது குறித்த விளக்கம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. இதுதொடர்பாக, ஏராளமான கடிதங்கள், மின்னஞ்சல்கள், 'தினமலர்' நாளிதழ் அலுவலகத்தில் குவிந்தன. அவற்றில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

அவற்றின் சாராம்சமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஆதார் திட்ட இணை இயக்குனர் கிருஷ்ணா ராவ், அளித்துள்ள பதில்கள்:

தற்போது நடக்கும் ஆதார் முகாம் யாருக்காக?

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், ஆதார் எண் உருவாக்கப்படுகிறது. ஆனால், அந்த கணக்கெடுப்பில் விடுபட்டோருக்கு, ஆதார் எண் உருவாக்கப்படுமா என்ற சந்தேகம் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றது. மக்கள் தொகை கணக்கெடுப்பில், விடுபட்டோருக்கு ஆதார் எண்ணை உருவாக்கவே, தற்போதைய முகாம் நடக்கிறது. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டோர், 14 பாகங்களை கொண்ட, ஆதார் விண்ணப்பத்தை நிரப்பி, அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு உட்பட்ட, ஆதார் மையங்களில் அளிக்கலாம்.

வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்தோர் என்ன செய்வது?

சென்னை போன்ற பெருநகரங்களில், வெளியூரை சேர்ந்தோர் அதிகம் உள்ளனர். அவர்களின் சொந்த ஊரில் நடந்த, மக்கள் தொகை கணக்கெடுப்பில், அவர்கள் சேர்க்கப்பட்டு இருக்கலாம். அதனால், அவர்களின் சொந்த ஊருக்கு சென்றுதான், ஆதார் எண்ணுக்கு, விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ரசீது இருந்தால், அதை கொண்டு, தற்போது அவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள, ஆதார் மையத்தில் விண்ணப்பிக்கலாம். அந்த ரசீது மூலம், அவர்களின் சொந்த ஊரில் எடுக்கப்பட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை பெற்று, ஆதார் எண் உருவாக்கப்படும்.

ஆதார் எண் அட்டை, அவரின் சொந்த முகவரிக்கு அனுப்பப்படும். இல்லையேல், அவருடைய தற்போதைய முகவரியை, நிரந்தர முகவரியாக மாற்றி கொண்டால், புதிய முகவரிக்கு, ஆதார் எண் அட்டை அனுப்பப்படும்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன், ஆதார் முகாமில், புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பின்னும், அட்டை கிடைக்கவில்லை; இணையதளத்தில் தேடினாலும் விவரம்

கிடைக்கவில்லை என்றால், என்ன செய்வது?

புகைப்படம், ரேகைகள் எடுத்து பல மாதங்கள் ஆனோர், இணையதளத்தில், ஆதார் எண் பதிவு குறித்து தேடும்போது, 'அண்டர் பிராசசிங்' என, வந்தால் அவர்களுக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு, அட்டை விரைவில் வந்து சேரும். ஆனால், 'எரர்' என வந்தால், அவர்களின் ரேகை மற்றும் புகைப்படங்கள் சரியாக பதிவாகவில்லை என, அர்த்தம். அவர்கள், மீண்டும் புகைப்படம் மற்றும் ரேகையை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு, உரிய காலத்தில், குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்படும்; தொடர்ந்து அட்டையும் வழங்கப்படும்.

ஆதார் விண்ணப்பங்களை, அந்தந்த முகாம்களில் கொடுக்கும் போது, ரசீது வழங்குவதில்லை. ரசீது கொடுப்பீர்களா?

ஆதார் விண்ணப்பம் செய்தோருக்கு, விண்ணப்பங்களை பெற்று கொண்டதற்கான, ரசீது வழங்கப்படுகிறது. அவற்றை, ஒவ்வொரு மையத்திலும் அளிக்கிறோம்.ஏற்கனவே விண்ணப்பத்திருந்தால், அதற்கு, ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டிருக்காது. அதனால், விண்ணப்பம் என்ன ஆகுமோ என, அஞ்சத் தேவையில்லை.

ஒவ்வொரு ஆதார் மையத்திலும், ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. தகவல் சொல்ல ஆட்கள் நியமிக்கப்படுவரா?

ஒவ்வொரு மையத்திலும், இரண்டு 'டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள்' நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், விண்ணப்பதாரரின் விவரங்களை பதிவேற்றம் செய்வதோடு, அவர்களை புகைப்படம் எடுத்தல், ரேகையை பதிவு செய்தல் ஆகிய பணிகளை செய்வர். அவர்கள் தவிர, மையம் எந்த பகுதியில் உள்ளது என்பதை பொறுத்து, வருவாய் துறை அல்லது சென்னை மாநகராட்சி நிர்வாகங்கள், தகவல் சொல்ல ஒரு நபரை நியமித்துள்ளன. அவர்கள், விண்ணப்பதாரரின் சந்தேகங்கள் மற்றும் பிற தகவல்களை சொல்வதோடு, அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவர்களின் விவரங்களை, இணையத்தில் தேடி அளிக்கும் பணியையும் செய்கின்றனர்.

ஆதார் பற்றிய பிற சந்தேகங்கள் ஏற்பட்டால், சென்னை மாநகராட்சி எனில், மண்டல அலுவலகங்களையும், சென்னை நீங்கலாக பிற பகுதிகளை சேர்ந்தோர், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களையும் அணுகலாம்.

தண்டையார்பேட்டை, ராயபுரம் பழைய வார்டுக்கு பதில் புதிய வார்டு

சென்னையில் ஆதார் பதிவுகள், பழைய வார்டு அடிப்படையிலேயே நடக்கின்றன. ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் பழைய வார்டுகளுக்கு பதிலாக, தற்போது தரப்பட்டுள்ள புதிய வார்டு எண்கள் கீழே தரப்பட்டுள்ளன. தண்டையார்பேட்டை மண்டலத்தின் பழைய வார்டு 1 முதல் 2 வரையில் உள்ளவர்களுக்கு, எருக்கஞ்சேரி, கிருஷ்ணமூர்த்தி சாலை, மாநகராட்சி அலுவலகத்திலும், பழைய வார்டு 3 முதல் 13 வரையில் உள்ளவர்களுக்கு தண்டையார்பேட்டை, டி.எச்.,சாலையிலும் ஆதார் பதிவு நடக்கின்றன.

தண்டையார்பேட்டை

பழைய புதிய

வார்டு வார்டு

1 34

2 35,36

3 38

4,6 39

5,7 40

8 42

9 44,48

10 41,43

11 47

12 44,48

13 53

ராயபுரம் மண்டலத்தின் பழைய வார்டுகள் 14 முதல் 31 வரையில் உள்ள வார்டுகளில் 14 முதல் 17 வரையில், கிழக்கு கல்மண்டபத்திலும், 18 முதல் 21 வரையில் பழைய வண்ணாரப்பேட்டை பேரம்பாலு தெருவிலும், 22 முதல் 31 வரையில் ஏழுகிணறு, சண்முகம் தெருவிலும் ஆதார் பதிவுகள் நடக்கின்றன.


ராயபுரம்

பழைய புதிய

வார்டு வார்டு


14 43

15,16 49

17,18 50

19 52

20,21 51

22 50,52

23 54

24 55

25,26 56

27 60

28 55,60

29 55

30 57

31 53

ஆதார் அதிகாரிகள் கவனத்திற்கு...

* புகைப்படம் எடுப்பதற்கான நேரம் குறித்து, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

* பெரும்பாலோர், காலை 10:00 மணிக்கு மேல், வேலைக்கு செல்வதால், காலை 6:00 மணியில் இருந்து, 10:00 மணி வரை புகைப்படம் எடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்

* மக்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு, உரிய நபர்களை நியமிக்க வேண்டும்

* ஆதார் அட்டை விண்ணப்பங்களை, அந்தந்த வார்டு அலுவலகங்களிலும் வழங்க வேண்டும். அதனால், பகுதிவாசிகள், மண்டல அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய சூழல் ஏற்படாது.

* இருக்கை, குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து தரவேண்டும்

* பெருங்குடி மண்டலத்தில் மூன்று இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப, மடிப்பாக்கம் பகுதிக்கு, தனி மையம் அமைக்க வேண்டும்.

'தினமலரில்' ஆதார் அட்டை பதிவு பிரச்னைகள் தெளிவாகத்தான் எழுதப்பட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில்தான் இன்னும் தடுமாற்றம் இருக்கிறது. எங்கள் பகுதியில் எளிதாக பதிவு செய்ய முடிகிறது.

ரவிசந்திரன், 52, லட்சுமிபுரம், மாதவரம்

ஆவடி நகராட்சியில் உள்ள 48 வார்டுகள், பகுதி 65 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளன. அனைத்து வார்டுகளுக்கும் நகராட்சி அலுவலத்தின் முதல் தளத்தில் வைத்து ஆதார் பதிவு செய்யப்படுகிறது. இது, பகுதிவாசிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு. இது பற்றி 'தினமலரில்' தொடர்ந்து செய்தி வெளியாகிறது. ஆனால், மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், ஆதார் பதிவு நிர்வாகத்தினிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை.

சடகோபன், 49. பட்டாபிராம்

'தினமலர்' செய்தி, ஆதார் அட்டைக்காக அலைக்கழிக்கப்படும் பலருக்கு ஆதரவாக ஆறுதலாக இருந்தது. ஏற்கனவே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பதிவு

செய்திருந்தால், அதில் இருவருக்கு மட்டுமே ஆதார் அட்டை கிடைத்துள்ளது. இது ஏன் என்று, அங்கு விசாரித்தால், யாரும் சரியான தகவல் தருவதில்லை; தொடர்புக்கான அலைபேசி எண்களும் இல்லை.

கோபால கிருஷ்ணன், தண்டுரை, ஆவடி

விண்ணப்ப படிவத்தை பார்த்தாலே இடியாப்ப சிக்கல் போல் இருந்தது. முழுவிவரம் தெரியாததால் படிவத்தை வீட்டிலேயே வைத்திருந்தேன். 'தினமலர்' நாளிதழில் வெளியான வழிகாட்டுதலை பார்த்து, படிவம் நிரப்பி கொடுத்தேன்

சுப்பிரமணி, ஐ.டி., ஊழியர், நங்கநல்லுார்

தவறாக நிரப்பினால் பிரச்சினை வரும் என நினைத்து, ஆலந்துார், தாலுகா அலுவலகத்தில் மனு எழுதி கொடுப்போரிடம், 25 ரூபாய் கொடுத்து நிரப்பினேன்.

'தினமலர்' நாளிதழை பார்த்தபின் தான் தெரிந்தது, நாமே நிரப்பி இருக்கலாமே என்று. பாமர மக்களுக்கும் புரியும்படி

வழிகாட்டுதல் கொடுத்த 'தினமலர்'

நாளிதழுக்கு நன்றி

மகாலட்சுமி, ஆதம்பாக்கம்

-நமது சிறப்பு நிருபர்-

காமராஜ் பல்கலை துணைவேந்தர் நியமனம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்



புதுடில்லி: 'மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லாது' என, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. 

'யு.ஜி.சி., வழிகாட்டுதலின் படி, துணைவேந்தர் பதவிக்கு கல்யாணி மதிவாணன் தகுதி இல்லை என்பதால் அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, பல்கலை முன்னாள் பேராசிரியர் ஜெயராஜ் உட்பட இருவர், மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், துணைவேந்தர் பதவியில் கல்யாணி மதிவாணனை நியமித்தது செல்லாது என உத்தரவிட்டது. இதை எதிர்த்து துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்தியா, என்.வி.ரமணா ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பு விவரம்: கடந்த, 2010ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளின்படி, துணைவேந்தருக்கான தகுதி இல்லை என்று கூறி, கல்யாணி மதிவாணன் நியமனத்தை, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை செல்லாது என, தீர்ப்பளித்துள்ளது. இந்த விதிமுறைகளை தமிழக அரசு ஏற்க விரும்பும் பட்சத்தில் மட்டுமே, அது தொடர்பாக சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றலாம். ஆனால், தமிழக அரசு அவ்வாறு செய்யாததால், இவ்வழக்கில், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால், அந்த விதிமுறைகளுக்கேற்ப, தகுதியை கொண்டவர் தான், துணைவேந்தர் பதவி வகிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அதனால், துணைவேந்தர் நியமனம் செல்லும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளை ஏற்க தமிழக அரசு நிபந்தனை

சென்னை: தமிழகத்தில் உள்ள, இரண்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளை, சில நிபந்தனைகளுடன், தமிழக அரசு ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்து, பிரதமருக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:இ.எஸ்.ஐ., நிறுவனம், மருத்துவக் கல்லூரியை கைவிட, முடிவு செய்துள்ளது. சென்னை, கே.கே., நகரில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரியில், 2013 - 14ல், 100 இளநிலை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். நடப்பாண்டில் இருந்து, 38 முதுகலை மாணவர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர். கோவையில், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி கட்டு மானப் பணி முடிந்து, இந்திய மருத்துவக் கழகம் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இக்கல்லூரிகளை, சில நிபந்தனைகளுடன் ஏற்று நடத்த, தமிழக அரசு தயாராக உள்ளது. சென்னையில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை, 494.62 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு உள்ளது. கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை, 580.57 கோடி ரூபாயில் கட்டப்படுகிறது. திட்ட மதிப்பீட்டு தொகை, மிகவும் அதிகம். இந்த இரு திட்டங்களும் நிறைவு பெற, 571.23 கோடி ரூபாய் தேவை. அதை, இ.எஸ்.ஐ., நிறுவனம் வழங்க வேண்டும். கல்லூரியை நடத்துவதற்கு ஏற்படும் தொடர் செலவுகளை, மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். மருத்துவமனையை நடத்துவதற்கான தொடர் செலவுகளில், 87.5 சதவீதத்தை, மத்திய அரசு வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு, மாநில விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். கல்லூரியை, தற்போதைய விதிமுறைப்படி, மாணவர் சேர்க்கைக்கு, மாநில அரசுக்கு, 85 சதவீதம், மத்திய அரசுக்கு 15 சதவீதம் என, இடஒதுக்கீடு பகிர்ந்தளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், நீங்கள் தலையிட்டு, தமிழக அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினால், மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

Wednesday, March 11, 2015

Suspense Over Admissions to ESIC Medical Colleges

KALABURAGI: There is a question mark over starting admissions to the first year MBBS course at ESIC medical colleges in Kalaburagi and Bengaluru in the coming academic year. For it is not yet clear whether the state government will take over these medical colleges after ESIC announced that it would exit the field of medical education from 2015-16 and would not undertake further admissions.

Sources in the State Medical Education Department told Express that the department had prepared a proposal on taking over the colleges and that it was with the Finance Department. The government could take a decision only after getting consent from the Finance Department.

Not just the students and faculty, even ESIC is concerned over the issue. A K Agarwal, Director General of ESIC, wrote to Reena Nayyar, secretary in-charge of Medical Council of India, on February 20 stating that the students and faculty of ESIC medical colleges have expressed concern over whether the course would be recognised if admissions were not undertaken.

The letter confirmed that ESIC was exiting the field of medical education and wanted to hand over medical colleges and other medical education institutions having separate infrastructure to state governments willing for such a transfer.

It stated that ESIC would not undertake further admissions and all ongoing medical education programmes would continue till the admitted students pass out or are adjusted as per the provisions of the Essentiality Certificate by the state government, whichever is earlier.

The letter stated that ESIC was running medical colleges in Bengaluru, Kalaburagi, KK Nagar (Chennai) and Joka (Kolkata).

Medical Council of India conducts year-wise inspections for renewal of MBBS batches after grant of letter of permission (LoP) and for the recognition of the college. This permission after grant of LoP is given each year after the applicant colleges fulfil the norms of faculty, infrastructure and equipment during the inspection.

Agarwal’s letter stated, “It is our understanding that after the approval of the scheme of renewal of MBBS batches, the college is at liberty to undertake or not undertake admissions...the recognition of MBBS course would not be jeopardised, irrespective of whether the actual yearly admissions have been undertaken or not.” However, ESIC has sought clarification from MCI on this issue. As per these norms, an MCI team inspected the ESIC medical colleges at Kalaburagi and Bengaluru last week. Dr Chandrashekhar, principal, ESIC Medical College, Kalaburagi, confirmed the MCI visit to the college on March 4. He said the team had pointed out that there was a shortage of teaching faculty by 31 per cent. He said ESIC would hold interviews to fill up the vacancies in faculty in Kalaburagi and Bengaluru Medical Colleges in Bengaluru, between March 16 and 18.

Asked if ESIC had reversed its stand on handing over medical colleges to the state government, Dr Chandrashekhar said he has not received any communication from ESIC other than asking him not to start the admission process for MBBS first year course for the year 2015-16.

INDIAN NURSING COUNCIL CIRCULAR


Dated: 5 March, 2015
 
To,
       Principal
       All Nursing Institutions
 

Sub: - Renewal for 2015-2016 -reg.
Sir/madam,
 
Institution renewal for 2015-2016 will not be considered if the institution has not submitted:
  1. Penalty for not having the own building.
  2. Teaching faculty are not uploaded.
  3. Renewal form not forwarded by State Nursing Council.
If the above 1 and 2 Sr. No. has not been compiled. The institutions are requested to submit immediately within four (4) weeks.
 
Yours faithfully,
Sd/-
Secretary

பஹல் திட்டமா... பகல் கொள்ளையா...!



'உங்கள் பணம், உங்கள் கையில்' என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மானியத் தொகையை அரசு நேரடியாக மக்கள் கையில் கொடுக்க முடிவு செய்தது. அதன்படி மார்ச் 31ம் தேதிக்குள் இந்த நேரடி மானியத் திட்டமான பஹலில் சேர மக்களுக்கு மத்திய அரசு அறைகூவல் விடுத்துள்ளது. திட்டத்தில் சேருவதற்கான கடைசி நாள் நெருங்கி கொண்டு இருக்க வாடிக்கையாளர்கள் கேஸ் விநியோகஸ்தர் அலுவலகங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

ஆதார் கார்டு அல்லது வேறு ஏதாவது அடையாள ஆவணங்களை கேஸ் விநியோகஸ்தரிடம் வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு மானியத் தொகையை வங்கியில் செலுத்த வசதியாக வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களையும் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. இதனால் மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வங்கி கிளைகளில் முட்டி மோதி பெரும்பாலானவர்கள் வங்கி கணக்கைத் தொடங்கி விட்டனர்.

இதன்பிறகு கேஸ் விநியோகஸ்தர்களிடம் சென்றால் அங்கு வேறு ஒரு பிரச்னை. வாடிக்கையாளர்களில் பலரது இணைப்பு அவர்களது பெற்றோர் பெயரில் இருந்து வருகிறது. இதில் என்ன கொடுமை என்றால் இறந்து போன பெற்றோரின் பெயரில் இணைப்பு இருப்பதால் அதை மானியத் திட்டத்தில் சேர மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோரின் பெயரிலிருந்து தன்னுடைய பெயருக்கு மாற்ற வாடிக்கையாளர்கள் பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டியதுள்ளது

பாதிக்கப்பட்டவரில் ஒருவரான புரசைவாக்கத்தை சேர்ந்த சரவணன் என்பவர், “ சென்னை மந்தைவெளியில் குடியிருந்தபோது எனது தந்தை ஜெகநாதன் பெயரில் இந்த கேஸ் இணைப்பு பெறப்பட்டது. பிறகு வேலை நிமித்தமாக சென்னை புரசைவாக்கத்திற்கு குடியேறினேன். இதனால் அங்கிருந்த கேஸ் இணைப்பை புரசைவாக்கத்திற்கு மாற்றினேன். இந்த சூழ்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு எனது தந்தை ஜெகநாதன் இறந்து விட்டார்.

இதனால் அவரது பெயரில் உள்ள கேஸ் இணைப்பை என்னுடைய பெயருக்கு மாற்ற கேஸ் விநியோகஸ்தர் அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது நான் கொடுத்த ரேஷன் கார்டில் எனது தந்தை பெயரை தவறுதலாக ஜெகன்ராஜ் என்று அச்சிடப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டிய விநியோஷஸ்தர் அலுவலக ஊழியர்கள், 2500 ரூபாய் கொடுத்தால் உன்னுடைய பெயருக்கு இணைப்பை மாற்றித் தருகிறேன் என்கிறார்கள். பெயர் மாற்ற பணம் செலுத்த தேவையில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக நான் கூறினேன்.

சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றால் ரேஷன் கார்டில் உள்ள தந்தையின் சரியான பெயரை மாற்றிவிட்டு வரும்படி தெரிவித்தனர். இதனால் பெயரை மாற்ற வள்ளுவர் கோட்டத்தில் உள்ள குடிமைப் பொருள் அலுவலகத்துக்கு சென்றேன். அங்கு இப்போது பெயரை மாற்ற முடியாது என்று கூறினர். இதனால் சேப்பாக்கம் எழிலகத்தில் செயல்படும் குடிமை பொருள் தலைமை அலுவலகத்துக்கு சென்றேன். அங்கு பெயரை மாற்ற அதற்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுங்கள். அதற்கு அவர்கள் லஞ்சம் கேட்டால் எழுத்துப்பூர்வமாக எழுதித்தரச் சொல்லுங்கள் என்றார்கள்.

இதனால் மீண்டும் வள்ளுவர் கோட்ட அலுவலகத்துக்கு சென்றேன். அவர்கள் இன்று, நாளை என்று இழுத்தடிக்கிறார்கள். வேறுவழியின்றி கேஸ் விநியோகஸ்தர் அலுவலகத்துக்கு சென்றால் பணம் கொடுத்தால் மட்டுமே பெயரை மாற்ற முடியும் என்கிறார்கள். ரேஷன் கார்டில் தவறுதலாக எனது தந்தை பெயரை எழுதிய அந்த அரசு அதிகாரியால் நான் மானிய திட்டத்தில் சேர வீட்டுக்கும் அரசு அலுவலகத்துக்கும் அலைந்து கொண்டு இருக்கிறேன்" என்றார் வருத்தத்துடன்.

இந்தப் பிரச்னையை கையில் எடுத்துள்ள தேவை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறுகையில், " பெயர் மாற்ற பணம் தேவையில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் கேஸ் விநியோகஸ்தர்கள் பணம் தந்தால் மட்டுமே மாற்ற முடியும் என்கிறார்கள். கேஸ் விநியோகஸ்தர்கள் பணம் கேட்பது குறித்து சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் டோல் ப்ரி நம்பரை தொடர்பு கொண்டால் அது சேவையில் இல்லை என்று பதில் வருகிறது. எண்ணெய் நிறுவனத்தின் நம்பர் பல நாட்கள் செயல்படாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில் எப்படி வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியும்.

இந்த பிரச்னையை யாரிடமும் சொல்ல முடியாமல் கேட்கிற பணத்தை கொடுத்து விட்டு அரசு கொடுக்கும் சொற்ப மானியத் திட்டத்தில் சேருகின்றனர். கேஸ் விநியோகஸ்தர்களின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகத்தில் மக்களை அலைக்கழிப்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "பெயர் மாற்றுவதற்கு என்று தனிக் கட்டணம் கிடையாது. முன்பு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை குறைவு. ஆனால் இப்போது அதிகம். அதற்காக பணம் கேட்டு இருப்பார்கள். கூடுதலாக பணம் கேட்டால் எங்களிடம் சம்பந்தப்பட்ட கேஸ் விநியோகஸ்தர் மீது புகார் அளிக்கலாம்" என்றார்.

பஹல் திட்டம் பாமர மக்களை பாடாய்படுத்துகிறது!

- எஸ்.மகேஷ்

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...