Wednesday, March 18, 2015

வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்ப முடிவு

வங்கிகளுக்கு தொடர்ந்து 7 நாட்கள் விடுமுறை என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள் கலக்கம் அடைந்தனர். மார்ச் 28–ந்தேதி சனிக்கிழமை ராம நவமி விடுமுறை, 29–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை 30–ந்தேதி திங்கட்கிழமை செயல்படும். 31–ந்தேதி செவ்வாய்க்கிழமை நடப்பு நிதியாண்டிற்கான இறுதி நாள் என்பதால் விடுமுறை எனவும், ஏப்ரல் 1–ந்தேதி அடுத்த நிதியாண்டிற்கான முதல் நாள் என்பதால் கணக்குகளை தொடங்கும் பணிகளை மேற்கொள்வதால் அன்று விடுமுறை எனவும் தகவல் பரவியது.

ஏப்ரல் 2–ந்தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி வங்கி விடுமுறை. 3–ந்தேதி புனித வெள்ளி விடுமுறை. 4–ந்தேதி வங்கி அரை நாள் மட்டும் செயல்படும். 5–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை என 7 நாட்கள் வங்கி பணிகள் முடங்கும் என்று தகவல் பரவியதையடுத்து பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி கூட்டமைப்பு தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது:–

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்திற்கும் 3 நாட்கள் மட்டும் தொடர் விடுமுறையாகும். ஏப்ரல், 1, 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் வங்கி சேவை நடைபெறாது. ஏ.டி.எம்., இன்டர்நெட் மூலம் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஏப்ரல் 1–ந்தேதி வருடாந்திர கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெறும். நடப்பு நிதியாண்டின் கணக்குகள் முடிக்கப்பட்டு வரும் நிதியாண்டின் கணக்குகள் தொடங்குவது தொடர்பான பணிகளில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபடுவதால் அன்று விடுமுறையாகும்.

2–ந்தேதி மகாவீர் ஜெயந்தி என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. 3–ந்தேதி புனித வெள்ளி என்பதால் விடுமுறை. தொடர்ந்து 3 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படாது. மார்ச் 31–ந்தேதி நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் வங்கிகள் செயல்படும். மார்ச் 28–ந்தேதி ராம நவமி பண்டிகைக்கு தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை இருப்பதால் ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களிலும் பணம் முழுமையாக நிரப்பி தேவையை சமாளிக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பணம் என்றால் என்ன...? - கற்றுக்கொடுங்கள் குழந்தைகளுக்கு!


ப்பாக்கள் பணி ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத் தைவிட இருமடங்கு, ஆரம்ப சம்பளமாகப் பெறும் தலை முறை இது. ஆனாலும், பெற்றோர்கள் அளவுக்கு அவர்க ளால் குடும்பப் பொருளாதாரத்தை சாமர்த்தியமாக, சமர்த் தாக நிர்வகிக்க முடிவதில்லை.

மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், பல இளம் தம்பதிகளுக்கு 30ம் தேதி அக்கவுண்ட் பேலன்ஸ் ‘நில்’(nil) என்பதே இன்றைய நிலைமை. காரணம் சிக்கனம், சேமிப்பு பழக்கங்களில் இருந்து அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டதே!

உங்கள் வீட்டு குழந்தைகளும், நாளை மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலை வரலாம். அப்போதும் அவர்களின் அக்கவுண்ட் பேலன்ஸ் 30ம் தேதி ‘நில்’ என்றில்லாமல் இருக்க, இப்போதிலிருந்தே அவர்களுக்குப் பணம் பற்றிய பாடங்களை புரிய வைப்பது அவசியம். 

அதை முன்னெடுப்பதற்கான முக்கிய ஐந்து ஆலோசனைகள் இங்கே...

பொறுமை... பணம்! 


குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் வசதி உங்களுக்கு இருக்கலாம். ஆனாலும், அவர்கள் ஒரு பொருளை வேண்டும் எனக் கேட்கும்போது, ‘நிச்சயம் அடுத்த வாரம் வாங்கலாம்’, ‘எக்ஸாம் லீவ்ல அதை உனக்கு வாங்கித் தர்றேன்’ என்று அந்தப் பொருளுக்காக அவர்களை காத்திருக்க வைத்து, பின் வாங்கிக் கொடுங்கள். 

அப்போதுதான் அந்தப் பொருளின் மதிப்பும், பணத்தின் மதிப்பும் அவர்களுக்குப் புரியும். இன்றிரவு கேட்கும் ஸ்கேட்டிங் ஸ்கூட்டி, இரண்டு நாட்களில் அவர்களுக்கு கிடைக்கும் என்றால், மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த விளையாட்டுப் பொருள் அவர்களுக்கு மலிவாகவே தோன்றும். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பும் வராது.
அத்தியாவசியமா, ஆடம்பரமா..? 

அத்தியாவசியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குப் புரிய வையுங்கள். வேக்ஸ் கிரையான்ஸ் வாங்கித் தரச்சொல்லி உங்களை கடைக்குச் கூட்டிச் சென்று, ‘அப்படியே வாட்டர் கலரும், கார் பொம்மையும் வாங்கிக்கறேன்’ என்று கேட்டால், தலையாட்டாதீர்கள். ஒரே சமயத்தில் பல பொருட்களின் மேல் ஆசை கொள்வது குழந்தைகளின் இயல்பு. இருந்தாலும், அந்தப் பொருட்களில் முதன்மைத் தேவை எது என்பதை அவர்களைப் பரிசீலிக்கச் சொல்லி, ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்.
பின்நாளிலும், பார்ப்பதை எல்லாம் வாங்கும் மனோபாவத்திற்கு இந்தப் பழக்கம் அணை போடும். பல பொருட்களுக்கு மத்தியில் சிறந்தது மற்றும் தேவையானதைத் தேர்ந்தெடுத்து வாங்கும் திறனையும் அவர்களுக்கு வளர்க்கும். 

பட்ஜெட் கற்றுக் கொடுங்கள்!
வீட்டுக்கான மாத பட்ஜெட் போடும்போதும், அது தொடர்பான விஷயங்களைப் பேசும்போதும் குழந்தை களையும் அங்கு இருக்கச் செய்யுங்கள்.  செலவைக் குறைக்க அவர்களை ஐடியா சொல்லச் சொல்லுங்கள். அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளின் ‘பிரைஸ் டாக்’ஐயும் அவர்களுக்குக்  காட்டுங் கள். 

அவர்களுக்கு வாங்கிய புது ஸ்போர்ட்ஸ் ஷூவின் விலையானது, ஒரு மூடை அரிசி/இரண்டு பெட் ஸ்ப்ரெட்கள்/ஐந்து லன்ச் பாக்ஸ்கள்/ஆயிரம் சாக்லெட்டுகள் வாங்கும் விலைக்குச் சமமானது என, ஒரு பொருளின் விலையோடு, மற்றொரு பொருளின் விலையை ஒப்பிடக் கற்றுக்கொடுங்கள். இது, பொருட்களின்விலை பற்றிய தெளிவான புரிதலை உண்டு பண்ணும். 

குடும்பத்தின் பொருளாதார நிலைமையை குழந்தைகள் அறிய வேண்டும்! தன் நண்பன், தோழி வைத்திருக்கும் விலை உயர்ந்த ஒரு பொருளைக் குறிப்பிட்டு, அது தனக் கும் வேண்டும் என்று உங்கள் குழந்தைகள் கேட்கலாம். ‘என் புள்ளை கேட்டதை எப்பாடுபட்டாவது வாங்கிக் கொ டுப்பேன்’ என்று எமோஷனலாக இருக்கத் தேவையில் லை. அது உங்கள் பட்ஜெட்டிற்கு அடக்கமானது இல்லை எனில், அதை வெளிப்படையாக அவர்களிடம் கூறிவிடுங் கள். அப்போதுதான், குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உட்பட்டு நடக்கும் பொறுப்பு அவர்களுக்குக் கிடைக்கும். 

நாளடைவில், ‘அம்மா என் ஃப்ரெண்ட் வீட்டுல ஹோம் தியேட்டர் இருக்காம். நம்ம வீட்டுல அதெல்லாம் முடி யாதுனு எனக்குத் தெரியும். இந்தப் பழைய டிவியை மாத்தும் போது எல்சிடி டிவியா வாங்கிக்கலாமா ப்ளீஸ்..?’ என்று பிராக்டிக்கலாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் பாசிட்டிவ் ஆட்டிட்யூட் அவர்களுக்கு வளரும். 

பாக்கெட் மணி கொடுங்கள்! 


குழந்தைகளுக்குப் பாக்கெட் மணி கொடுப்பது தவறு என்று சிலர் நினைக்கக்கூடும். உண்மையில் அது மிகச் சிறந்த சிக்கனப் பாடம். ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அந்த மாதம் முழுவதற்குமான பாக்கெட் மணியை அவர்களிடம் மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள். 30ம் தேதி வரை அது தவிர்த்து ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள். வரவுக்குள் செலவழிக்கப் பழக்க, அது சிறந்த வாய்ப்பாக அமையும்; ‘மாதக் கடைசி வரை இந்தக் காசுதான் நமக்கு’ என்ற கடிவாளம், அவர்களை அனாவசியமாகச் செலவழிக்க விடாது. 

சேமிக்கக் கற்றுக் கொடுங்கள்!


குழந்தைகளுக்கு சேமிப்புப் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். உண்டியல் முதல், போஸ்ட் ஆஃபீஸ் ஆர்.டி அக்கவுண்ட், வங்கிகளில் ஜூனியர் அக்கவுண்ட் என அவர்கள் சேமிப்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களின் சேமிப்புத் தொகையில், அவர்களுக்குத் தேவைப்படும் ஒரு முக்கியமான பொருளை வாங்கிக் கொடுங்கள்.
மீண்டும் சேமிப்பைத் தொடர வைத்து, அந்த சேமிப்புப் பணத்தில், அடுத்து அவர்களுக்காக அவர்களே வாங்கிக்கொள்ளப் போகும் பொருள் பற்றி அவ்வப்போது பேசி ஆர்வத்தை அதிகப்படுத்துங்கள். சேமிப்பின் ருசியை அவர்களை அறியவைத்துவிட்டால், அது ஆயுளுக்கும் தொடரும்.

சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலையால் அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ஆட்டம் கண்டபோதும் இந்தியா தலை தப்பிக்கக் காரணம், நம் மக்களின் சேமிப்புப் பழக்கமே! அதைப் பரிசளிப்போம் அடுத்த தலைமுறைக்கும்! 

- ஜெ.எம். ஜனனி

 

போலீஸ் போட்ட பொய் வழக்கு ! ( ஒன் மேன் ஆர்மி டிராஃபிக் ராமசாமி - 2 )



பாரிஸின் முகப்பில் குறளகம் உள்ளது. இந்த நகரத்திலேயே வாழ்பவர்கள், நகரத்துக்குப் புதிதாக வருபவர்கள், பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்லும் மாணவர்கள், உயர் நீதிமன்றம் செல்லும் வழக்கறிஞர்கள், பஸ் ஏறச் செல்லும் பெண்கள்... இப்படி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் குறளகத்தின் வாசலைத்தான் கடந்து செல்ல வேண்டும்.

இப்படி நகரத்தின் தலைவாசலான ஓர் இடத்தில் விபசாரம் கன ஜோராக நடந்து கொண்டு இருந்தது அப்போது. குறளகத்தின் உள்ளே நான்கு ஐந்து பெண்கள் இருப்பார்கள். வெளியே இரண்டு ஆண்கள் நின்றுகொண்டு இருப்பார்கள்.

அந்த ஆண்கள்தான் விலைமகன்களை விலைபேசி அழைத்து வருவார்கள். பகல் பொழுதுகளிலேயே பாலியல் தொழில் எந்தப் பயமும் இன்றி இந்த நகரத்துக்கு இணையான பரபரப்புடன் நடந்துகொண்டிருக்கும்.

குறளகத்தில் விபசாரம் நடக்கிறது என்பது இதைக் கடந்துசெல்லும் வக்கீல்கள், நீதிபதிகள், பொதுமக்கள், போலீஸ் என எல்லோருக்கும் தெரியும். யாருமே வாய் திறக்கவில்லை. போலீஸின் துணையோடுதான் இந்த அசிங்கம் அரங்கேறிக் கொண்டிருந்தது. நாம் ஏதாவது சொன்னால் பொய் கேஸில் போலீஸ் உள்ளே போட்டுவிடுவார்கள் என்று எல்லோருக்கும் பயம்.

ஒரு சமூகத்தில் அசிங்கமென அங்கீகரிக்கப்பட்டச் செயல், அந்த மக்களுடைய தலைநகரின் மையத்திலே நடப்பது அந்தச் சமூகத்தையே அசிங்கப்படுத்துவதாகவே எனக்குத் தோன்றியது.ஓர் அசிங்கத்தைச் செய் பவனும் அதைப் பார்த்துக்கொண்டு செல்பவனும் ஒரே மாதிரியான ஆட்கள்தான். அவர்களுக்குள் எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த அசிங்கத்தை வேரோடு சாய்க்க நினைத்தேன்.

குறளகத்தில் நடக்கும் கூத்துகளைப் பத்திரிகைகளின் பார்வைக்குக் கொண்டு சென்றேன். என்னுடைய போராட்டத்தால் ‘குறளகத்தில் காமத்துப்பால்’ என்ற தலைப்பில் ஒரு புலனாய்வுப் பத்திரிகையில் செய்தி வந்தது. இதன் பின்னணியில் நான்தான் இருக்கிறேன் என்று போலீஸுக்குத் தெரியும். சாம்பலுக்குள் பதுங்கி இருந்த நெருப்புபோல ஒட்டுமொத்த போலீஸும் என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தது.

பூக்கடை இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் என்னைக் கொலை வெறியோடு தேட ஆரம்பித்தார். ‘420’ கேஸில் என்னைக் கைது செய்தார்கள். அரசாங்கத்தில் வேலை வாங்கித் தருவதாக 2,000 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு ஒருவரை ஏமாற்றிவிட்டதாகப் பொய்வழக்குப் போட்டார்கள். பசியோடு இருந்த சிங்கத்தின் வாயில் சிக்கிய ஆட்டுக்குட்டிபோல் மாட்டிக் கொண்டேன்.

அப்போது புறநகர் பேருந்து நிலையம் பாரீஸில்தான் இருந்தது. பஸ் ஸ்டாண்டைச் சுற்றி என்னை அடித்து இழுத்துக்கொண்டு போனார் வடக்கு கடற்கரை காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம். என் கைகள் இரண்டையும் கட்டி, விலங்குமாட்டி ஜட்டியுடன் விட்டு அடித்தார். பஸ் ஸ்டாண்டில் நின்ற எல்லோரும் என்னையே வேடிக்கை பார்த்தார்கள். ‘‘இன்னும் உன்னை என்ன செய்கிறேன் பார்றா...’’ என்றார் தர்மலிங்கம். ‘உன்னால இதான்டா செய்ய முடியும். வெளியே வந்து உன்னை நான் என்ன செய்றேன் பார்...’ என்றேன் கோபத்தோடு.

ஆத்திரம் அடங்காமல் லத்தியால் ஓங்கிப் பின்புறத்தில் அடித்தார். ‘இந்த அடியோடு இவன் இறந்துவிட மாட்டானா?’ என்கிற அளவுக்கான ஆவேசம். போட்டிருந்த என் பனியனை இழுத்துக் கிழித்தார்... பனியன் கிழிந்து தொங்கியது. எல்லோருடையப் பார்வையிலும் நான் திருடனாகத் தெரிந்தேன்...

ஆனால், என் பார்வையில் எல்லோரும் தவறுகளை தட்டிக் கேட் கத் துணிவில்லாதவர்களாக,கேடுகளைப் பார்த்து கேள்விக் கேட் காதவர்களாக, அவலங்களைப் பார்த்து ஆவேசம் கொள்ளாதவர் களாக, தனக்கு வீரம் இல்லையே என நினைத்து வெட்கப்படா தவர்களாகத் தெரிந்தார்கள். அதனால், தலை நிமிர்ந்தபடியே, ‘ஏய்! மீனாட்சி சுந்தரம் உன்னை ஒரு நாள் தலைகுனிந்தபடி நடக்கச் செய்தே தீருவேன்’ என்று உரக்கச் சொன்னபடி நடந்தேன்.

துகில் உரிப்புக்கு நிகரானத் துன்பச் செயல் ஏதும் நம் சமூகத்தில் இருக்கிறதா? துகில் உரிப்பில் துவங்கியதுதானே பாரதப் போர். பாஞ்சாலிக்கு அன்று கண்ணன் இருந்து காப்பாற்றினான். ஆனால், எனக்கு யாரும் இல்லை. ஆடை இழந்து அவமானம் அடைந்து நினைக்கையில் பாஞ்சாலி போல் மனம் பதறுகிறது. ஆடையை அவிழ்த்த கணத்தில் பாஞ்சாலி எப்படிக் கதறியிருப்பாள்; பதறியிருப்பாள்; துடித்து இருப்பாள்; கூனிக் குறுகிக் கொந்தளித்திருப்பாள்... பாஞ்சாலியின் பதட்டத்தை ஓர் ஆண் மகனாக நான் அறிந்தழுத தருணம் அது.

ஆடை அவிழ்ப்புதானே அநாகரிகத்தின் ஆரம்பம். உள்ளாடையோடு ஊர் சுற்றி அசிங்கப்பட்டதை, நாம் ஆண்தானே என்று எண்ணி, புறந்தள்ள முடியவில்லை. புறமுதுகுக் காயம்போல் அந்த நிகழ்வு என்னுள் புகைந்துகொண்டு இருந்தது. என் மனைவி, என் மகள், என் உறவினர் கள் என? என்னைச் சுற்றியிருந்த அனைவருக்கும் இந்தச் சம்பவம் அசிங்கமாகவும், அவமானமாகவும் இருந்தது. என் மனைவி கோபத்தில் திட்டினாள்.

என் மகள், ‘இதெல்லாம் நமக்குத் தேவையாப்பா... ஏம்ப்பா... நீங்களும் கஷ்டப்பட்டு எங்களையும் கஷ்டப் படுத்துறீங்க... விட்டுருங்கப்பா’ என மனம் உருகி மன்றாடினாள். என் உறவினர்கள் துஷ்டனைக் காண்பது போல் தூர ஒதுங்கினார்கள். ஆனால், என் மனசாட்சிக்கு முன் நான் குற்றம் அற்றவனாகத் தலைநிமிர்ந்து நிற்கிறேன்.

என் மனசாட்சி என்னை எதுவும் கேள்வி கேட்கவில்லை. தூர நின்று எச்சிலைக் காறி என்மீது துப்பவில்லை. என்னைப் பார்த்து கைகொட்டி சிரிக்கவில்லை. என்னைக் கயவன் என்று கைகாட்டவில்லை. பிறகு, எதற்காக நான் பின்வாங்க வேண்டும்? இனி கயவர்களின் பிடரியைப் பிடித்து உலுக்க வேண்டியதுதானே என் வேலை என்பதில் உறுதியாக இருந்தேன்.

இப்படி, எத்தனை எத்தனைப் பேரை அடித்துத் துவைத்து இருப்பார்கள். ஆடை களைந்து அசிங்கப்படுத்தி இருப்பார்கள். தங்களின் சுய லாபத்துக்காக எத்தனைப் பேரை சூறையாடி இருப்பார்கள். குற்றம் செய்த வனைக் கூண்டில்தானே ஏற்றச் சொல்கிறது சட்டம். உதை கொடுத்து ஊர்வலம் வர எந்தச் சட்டமும் சொல்லவில்லையே... ஆயிரம் குற்றவாளிகளை மன்னிக்கச் சொல்லும் சட்டம், ஒரு நிரபராதியைக்கூட தண்டிக்கக் கூடாது என்கிறது. ஆனால், நமது போலீஸ் 1,000 குற்றவாளிகளை உருவாக்குபவர்களாகவும், ஒரு நிரபராதியைக் கொடூரமாகத் தண்டிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, காவல் நிலையத்தில் அவர்கள் செய்யும் காட்டு மிராண்டித்தனத் தையும், அறைகளுக்குள் அவர்கள் நிகழ்த்தும் அராஜகங் களையும் வெளிச்சம் போட்டுக் காட்டவும், சட்டத்தால் சாட்டை அடி கொடுக்கவும் முடிவு செய்து மீனாட்சி சுந்தரம் உட்பட 24 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்தேன்.

ஆயிரம் பிச்சைக்காரர்களையாவது திருடன்களாக மாற்றி இருக்கிறது போலீஸ். ஆனால், ஒரு திருடனைக் கூட யோக்கியவானாக மாற்றியதில்லை. ஏதாவது அப்பாவித் திருடன் சிக்கினால் அவனை அடித்து உதைத்து அவன்மேல் கேஸ்மேல் கேஸ் போடுகிறது. அடி உதைக்குப் பயந்து அவனும் ஒப்புக்கொண்டால், இருக்கிற கேஸை எல்லாம் அவன்மீது திணிக்கிறது.

இப்படி கோர்ட், ஜெயில் என்று அலைந்து தெரிந்துகொண்டு, சூழ்நிலைக்குத் திருடிய சின்ன திருடன், கொஞ் சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிய ரவுடியாக வந்து நிற்பான். அந்த ரவுடிகளிடம் கைகட்டி, வாய்பொத்தி போலீஸ் சேவகம் செய்யும். ரவுடிகளை உருவாக்குவதே போலீஸ்தான். போலீஸின் அடிதடிக்குப் பயப்ப டாமல் எதிர்த்து நின்றதால்தான் 8 கேஸோடு விட்டுவிட்டார்கள். இல்லையென்றால் என் மீது 50 கேஸா வது போட்டு ஆயுள்தண்டனைக் கைதியாக்கி இருப்பார்கள்.

உடல் எலும்புகளில் ஒன்றிரண்டை ஒடித்து நிரந்தர ஊனமாக்கிப் பிச்சை எடுக்க வைத்திருப்பார்கள். நிஜத் திருடனாக மாற்றி, வயிற்று வலி பொறுக்க முடியாமல் தூக்கில் தொங்கியவர்களின் லிஸ்டில் என்னையும் சேர்த்திருப்பார்கள். போலீஸிடம் எலும்பை உடைக்கும் லத்தி இருந்தது. அவர்களின் மண்டையில் குட்டும் நீதி தேவதையின் சுத்தி என்னிடம் இருந்தது. என்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு துன்புறுத்தும் தைரியம் அவர்களிடத்தில் இருந்தது. நீதியின் முன்னால் அவர்களை மண்டியிடச் செய்யும் மன உறுதி என்னிடத்தில் இருந்தது. என்னைத் தெருவில் உள்ளாடையோடு அடித்து இழுத்து அசிங்கப்படுத்தும் ஆணவம் அவர்களிடத்தில் இருந்தது. அவர்களை ஆடையோடு இருக்கும்போது அதற்கு நிகரான அசிங்கத்தை ஏற்படுத்தும் ஆண்மை என்னிடத்தில் இருந்தது.

போலீஸைக் கண்டு பயந்து ஓடாமல், ஒதுங்கி மறையாமல், எதிர்த்து நேருக்கு நேர் நின்று உரக்கக் கத்தியதால்தான் என்னை அடித்து துன்புறுத்திய அதே போலீஸை எனக்குப் பாதுகாப்புக்காக பிஸ்டலுடன் என் பின்னால் வரவைக்க முடிந்தது. ‘காலம் திரும்புகிறது’ என்பார்களே... அதுபோல் ‘காவல் திரும்பிய கதை’ இது.

உடலை விற்றுச் சம்பாதிப்பவளிடம் பங்கு கேட்பவர்கள் எவ்வளவு பெரிய பயங்கரவாதிகளாக இருப்பார்கள். கூறு கட்டிய காய்கறிகளைக் ‘கூறு அஞ்சு ரூபாய்’ எனக் கூவிக் கூவி விற்பவளிடம் 50 ரூபாயைப் பறித்துக்கொண்டு போகிறவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருப்பான். அயோக்கியர்களையும் பயங்கர வாதிகளையும் வளரவிடுவதும் பாவம்தானே! 1987 லிருந்து 1992 வரை சட்டப் போராட்டம் நடத்தினேன்.

மாவட்ட கலெக்டரும், ஹோம் செகரட்டரியும் நேரடியாக என்னை விசாரணை செய்தார்கள். வக்கீல் சந்திரசேகரன் எனக்காக வாதாடினார். இவர் தற்போது 7 வது சிவில் கோர்ட்டில் ஜட்ஜாக இருக்கிறார். இந்த இடைப்பட்ட காலங்களில் எனக்கு எதிராக சாட்சி சொன்ன எம்.கே.பி.சுல்தான் இறந்துவிட்டார். எனக்கு ஆதரவாக என் நண்பர் ஷேக் முகமது சாட்சி சொன்னார். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் பதவி உயர்வு பெற்று ஏ.சி யாக நன்னிலத்துக்குப் போய்விட்டார்.

நான் எப்போதும் நீதிமன்றங்களுக்கு இணையாகத் தெய்வங்களையும் வணங்குபவன். ‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ என்று நம் முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை. அனுபவித்து உணர்ந்துதான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் தெய்வங்கள்போல நீதிமன்றமும் கொஞ்சம் லேட்டாகத்தான் கண் திறக்கும். 1992-ல் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்குக்கானத் தீர்ப்பை அறிவித்தார்கள்.

வழக்கைத் தொடுத்தவர் என்ற முறையில் விசாரணை அதிகாரியாக தர்மலிங்கம் நீதிமன்றத்துக்கு காலை யிலேயே வந்திருந்தார். மாலை 4 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசித்தார். போலீஸின் அராஜகத்தை நீதிபதி கடுமையாகக் கண்டித்ததோடு, எனக்கு எதிரான பொய் வழக்கையும் தள்ளுபடி செய்தார். தீர்ப்பைக் கேட்டு விட்டு கோர்ட் படிகளில் இறங்கிய தர்மலிங்கம், அந்த இடத்திலேயே விழுந்து இறந்துவிட்டார். கோர்ட்டே கூடிவிட்டது. எனக்கு பேரதிர்ச்சி.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் வீட்டில் மேலும் இரண்டு பேர் வெவ்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொண்டு இறந்து போய்விட்டனர். அவருக்குப் பின் அந்தக் குடும்பமே நலிந்து போனது. அவரின் இறப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனிமனித இறப்பையும் இழப்பையும் தடுப்பதற்காகத்தானே எனது போராட்டமும் பயணமும்!

Govt officials cannot blame court: Madras High Court

Madurai: Madras High Court Bench on Wednesday observed that government officials should not blame the court, which fixes a time frame for officials, for skipping statutory procedures before initiating action against subordinates.

Justice K Ravichandra  Baabu, allowing a petition by a retired Additional Deputy Commercial Taxes Officer to quash a May 7 order of Commissioner of Commercial Taxes to cut Rs 1000 a month from his pension for three years, said the CCT should not have imposed the punishment without consulting the state Public Service Commission as per Tamil Nadu Pension Rules 1978, as the Court directed him to pass orders in 30 days.

After the petitioner retired on May 31 2006,the department issued a charge memo, accusing him of having assisted a trader to evade Rs 60,000 sales tax in 2003. An enquiry officer appointed to probe the issue, filed a report on January 27, 2012, absolving him of all charges.

But the Commissioner disagreed with the report and issued a show-cause notice to the petitioner, asking him why his pension should not be cut.

Following this he moved the High Court, which directed the Commissioner last year to pass final orders in 30 days.

The officer expedited proceedings and imposed the punishment without consulting the TNPSC, necessitating the present petition.

The judge said the charge levelled against the petitioner could not be sustained as he had only been accused of issuing transit pass to the trader, who reportedly sold the goods in the state without transporting them to Puducherry.

PTI 

52 universities offering Homoeopathy courses, says Govt

Homoeopathic Courses in Universities and Colleges
Presently 52 Universities (including Deemed Universities) in the Country are offering Courses in Homoeopathy. Number of Homoeopathic doctors available in the country is 2,79,518 as on 01.01.2014.
In Gujarat, seventeen (17) Homoeopathic Medical Colleges are offering courses in Homoeopathy under affiliation to six (06) Universities. In West Bengal, twelve (12) Homoeopathic Medical Colleges are offering courses in Homoeopathy under affiliation to one (01) University.

The Central Government has constituted Central Council of Homoeopathy under the provisions of Homeopathy Central Council Act, 1973 to regulate education and practice of Homoeopathy. The Central Government has also established Homeopathy Pharmacopoeia Laboratory for standardization of Homoeopathic Drugs, Central Council for Research in Homoeopathy to carry out research activities in different aspects in Homoeopathy, and National Institute of Homoeopathy at Kolkata which conducts Degree and Post Graduate Degree Courses.
The Central Government has constituted Homoeopathic Pharmacopoeia committee which is responsible for making of Homoeopathic Pharmacopoeia of India.
The Central Government is in the process of establishment of a North Eastern Institute of Ayurveda and Homoeopathy at Shillong.
The Central Government has provided treatment facilities in Homeopathy under its CGHS Scheme in seventeen (17) different towns and cities.


The cities where CGHS Facilities for Homoeopathic treatment is provided.

Sl. No.
Name of The City
Sl. No.
Name of The City
1.
Ahmedabad
10.
Kolkata
2.
Allahabad
11.
Lucknow
3.
Bangalore
12.
Meerut
4.
Chennai
13.
Mumbai
5.
Delhi
14.
Nagpur
6.
Guwahati
15.
Patna
7.
Hyderabad
16.
Pune
8.
Jaipur
17.
Trivandrum
9.
Kanpur



Government of India has approved and notified National AYUSH Mission (NAM) as a centrally Sponsored Scheme on 29.09.2014. Under National AYUSH Mission (NAM), there is a provision of financial assistance to the States/ UTs for AYUSH systems including Homoeopathy for infrastructure, equipment, furniture, medicines etc. at co-located AYUSH facilities at Primary Health Centers (PHCs), Community Health Centers (CHCs) and District Hospitals (DHs) as well as standalone AYUSH hospitals and dispensaries.
This information was given by the Minister of State, AYUSH(IC), Shri  Shripad Yesso Naik in a written reply to a question in Rajya Sabha  today.

ஏழு ரயில் நிலையங்களில் வைஃபை

சென்னை, பெங்களூரு, புதுடெல்லி, அகமதாபாத், ஆக்ரா கண்டோன் மென்ட், வாரணாசி, செகந்திராபாத் ஆகிய ஏழு ரயில்வே நிலையங்களில் வைஃபை வசதிகள் தற்போது வழங்கப்படுகிறது.

முதல் 30 நிமிடங்களுக்கு இணையதள வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. அதன் பிறகு, அடுத்த 30 நிமிடங்களுக்கு ரூ.25 ம், ஒரு மணி நேரத்துக்கு ரூ.35-ம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சேவையை 24 மணி நேரமும் பெறலாம்.

அனைத்து `ஏ1’ மற்றும் `ஏ’ பிரிவு ரயில்வே நிலையங்களிலும் (407) இந்த வசதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா மக்களவையில் நேற்று தெரிவித்தார்.

கல்விக்கடன் வேண்டுமா?

தங்களின் படிப்புக்காக வங்கிகளில் கல்விக்கடன் வாங்கப்போக வேண்டும் என நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? நீங்கள் கவனிக்கவேண்டியவை.

கல்விக்கடன் என்பதில் அடங்கக்கூடிய செலவுகள்

கல்விக்கட்டணம்,விடுதி வாடகை, மற்றும் சாப்பாட்டுச் செலவு,தேர்வுக்கட்டணம்,நூலக கட்டணம்,ஆய்வுக்கூட கட்டணம், சீருடை, புத்தகங்கள், கல்விக்கான கருவிகள் மற்றும் உபகரணங்கள், காஷன் டெபாஸிட்,திருப்பித் தரக்கூடிய டெபாஸிட் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ரசீது தரக்கூடிய கட்டணங்கள், பயணச் செலவு, வெளிநாட்டில் படிக்கப் பயணச் செலவு, கணினி,மடிகணினி வாங்க, கல்விச்சுற்றுலா, மாணவர்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் ஆகியவற்றுக்குக் கல்விக்கடன் கிடைக்கும்.

தேவையான ஆவணங்களின் விபரங்கள்

1. முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் மாணவர் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு போட்டோகள் ஐந்து.

2. ரேஷன்கார்டு ஜெராக்ஸ் 2

3. மாணவர் மற்றும் பெற்றோரின் அடையாள அட்டையின் நகல்

4. வருமானச் சான்றிதழ் (அசல்)

5. இருப்பிடச்சான்றிதழ்

6. கடைசியாகச் செலுத்திய வீட்டுவரி ரசீது அல்லது வாடகை வீட்டுக்கான ஒப்பந்தம்

7. எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2, பட்டப்படிப்பு ஆகியவற்றின் மதிப்பெண் பட்டியல் நகல்

8. கல்லூரியிலிருந்து பெற்ற நன்னடத்தை சான்றிதழ் ( அசல்)

9. கல்லூரியிலிருந்து பெறப்பட்ட வருடவாரியான கட்டண விபரங்கள் (அசல்)

10. பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட கவுன்சிலிங் கடிதம் (அசல்) ( நகல் எடுத்தபின் கொடுக்கவும்)

11. பெற்றோரின் பிறந்த தேதிக்கான சான்று

12. சாதிச் சான்றிதழ்

13. கடைசியாகப் பெற்ற மாற்றுச் சான்றிதழ்

14. கல்லூரியில் கட்டணம் செலுத்திய ரசீது (அசல்) ( நகல் எடுத்து வைத்துக்கொண்டு பிறகு தரவும்)

15. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ( பொருத்தமானால் மட்டும்)

மேலே குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களின் நகல்கள் எல்லாவற்றிலும் ஒரு கெஜடட் அரசு அதிகாரியின் சான்றொப்பமும் முத்திரையும் வைக்கப்பட வேண்டும். சான்றிதழ்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டால் கடைசிநேர அவசரத்தை தவிர்க்கலாம்.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...