Friday, March 20, 2015

High Court ruling on playing cards

A few friends or acquaintances playing a game of cards for money during the festive season in one of their houses could not be booked under Sections 8 and 9 of the Tamil Nadu Gaming Act, 1930, the Madras High Court Bench here has said.

Justice C.T. Selvam made the observation while quashing a case registered by Tirupuvanam police in Sivaganga district against nine individuals, including the petitioner, D. Kannan, who alone had approached the court with a plea to set aside the First Information Report.

The judge pointed out that the police had arrested all the nine persons on January 16 after finding them gambling during a game of cards in one of their houses and seized Rs. 1,090.

The raid had taken place during the Pongal season and the accused were booked under the Gaming Act.

Pointing out that Sections 8 and 9 of the Act could be invoked only if people were found to be gambling in a ‘common gaming house’ run for the profit or gain of the property owner, the judge said in the instant case there was no such specific accusation against any of the nine accused.

Mr. Justice Selvam also recalled that in a similar case relating to playing of cards during Deepavali season, a single judge of the Punjab and Haryana High Court had observed: “There is no dispute to the fact that the incident is in immediate proximity in time to Diwali festival. Any and every case of playing cards, particularly during festive season, in a private property not for the gain and profit of the occupier or owner of property cannot be termed gambling in a common gaming house, under the Act, to constitute an offence.”

Railways hire langurs to curb monkey menace

Agra: In monkey-infested Agra, it pays to be a langur, it seems. Ask Raju, Mangal, Pawan, Manu and their friends -- all langurs -- who have been hired at a whopping package of almost Rs 1.5 lakh per annum by the Railways to get rid of monkeys from four major railway stations of Agra division. With a tidy two-year-contract under their tail, six of these traditional monkey-scarers are set to earn a cumulative Rs 9 lakh per annum for their efforts.

Speaking to TOI, Bhupinder Dhillon, media-in-charge of Divisional Railway Manager (DRM), Agra office, said, "Monkeys were creating a big menace by climbing overhead railway cables. Often, they would get electrocuted and their bodies would get stuck on the cable, bringing railway operations to a halt. Due to the increase in the number of such incidents, the engineering department decided that it was best to hire six langurs."

According to sources, large colonies of monkeys have sprung up near the four railway stations in the area -- Agra cantonment, Agar Fort, Raja Ki Mandi, and Mathura. The langurs, under the supervision of their handlers, would guard these stations as well as the DRM office. They will work in shifts of 12 hours starting from seven in the morning. Their duties would involve constant patrolling of the stations to ensure that monkeys are kept at bay and passengers are not harassed by the simians.

An official has also been deputed to monitor the performance of the langurs, who would be required to record their attendance on a daily basis. If they are found absent, said an official, around Rs 400 will be deducted from their salary.

Thursday, March 19, 2015

இந்த நாட்டை திருத்தவே முடியாது.. வேண்டாம் வந்துடுங்கப்பா!- டிராபிக் ராமசாமியின் மகள் கண்ணீர்



டிராபிக் ராமசாமி.. சமூக அவலங் களுக்கு எதிராக போராட முடியாமல் தவிக்கும் பெரும்பான்மை இந்தியச் சமூகத்தின் கதாநாயகன். அரசு மற்றும் தனிநபர் அதிகாரங்களுக்கு எதிராக இவர் நடத்திய போராட் டங்கள் சமூகத்தை உலுக்கியிருக்கின் றன. சென்னையில் ஒழுங்குமுறை இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க வைத்தது, தறிகெட்டு ஓடிய மீன்பாடி வண்டிகளுக்கு தடையாணை பெற்றது என இவர் சாதித்தவை ஏராளம். அதற்காக இவர் கொடுத்த விலையும் மிக மிக அதிகம். பலமுறை தாக்குதலுக் குள்ளானார். காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தனது குடும்பத்தையே பிரிந்தார். 40 ஆண்டுகளாக குடும்பத்துக்கும் அவருக்கும் பெரியதாக பிணைப்பு இல்லை. எப்போதாவது வீட்டில் தலைகாட்டினால் உண்டு. ஒரே மகள் விஜயா. திருமணமாகி கணவர், 2 குழந்தைகளுடன் வசிக்கிறார். டிராபிக் ராமசாமியின் மனைவியும் அவர்களுடனே தங்கியுள்ளார்.

‘தி இந்து’வுக்காக விஜயாவை சந்தித்தோம். அப்பா டிராபிக் ராமசாமி பற்றி கேட்டதும் கலங்கிய கண்களுடன் பேசத் தொடங்கினார்..

‘‘அப்பான்னு ஒருத்தர் இருக்கற தையே டிவி, நியூஸ் பேப்பர்ல பார்த்துதான் தெரிஞ்சிக்க வேண்டியி ருக்கு. அதுவும் நல்லபடியாக தகவல் வருதா? டிராபிக் ராமசாமி மீது ரவுடிகள் தாக்குதல், காவல் துறையினர் கைது நடவடிக்கை - இப்படித்தான் தகவல் வருது. எந்த நேரமும் பதைபதைப்பா இருக்குங்க. நிம்மதியா தூங்க முடியலை. சரியாக சாப்பிட முடியலை.

நான் குழந்தையா இருந்தப்பவே அப்பா வீட்டுல தங்க மாட்டார். பொதுப் பிரச்சினைன்னு சுத்திட்டே இருப்பார். அதனால தனிமை யிலதான் வளர்ந்தேன். அம்மாவுக் கும் பெருசா விபரம் தெரியாது. இடையிடையே பிரச்சினை வேற. கும்பலா வந்து வீட்டை அடிச்சி, நொறுக்கிட்டுப் போவாங்க. காது கூசுற அளவுக்கு திட்டிட்டுப் போவாங்க. கண்டதை எல்லாம் வீட்டுக்குள்ள எறிவாங்க. நாங்க ஆச்சாரமான குடும்பம். எல்லாத்தை யும் தாங்கிண்டோம்.

அப்ப நான் வயசுப்பொண்ணு. வெளியே தலைகாட்ட முடியலை. உசுரை கையில பிடிச்சிட்டு இருந் தோம். வேற வழியில்லாமதான், நம்மால நம்ம குடும்பத்துக்கு பிரச்சினை வேண்டாம்னு அப்பா வீட்டை விட்டு வெளியேறிட்டார். 40 வருஷம் ஆச்சு... சிறுநீரகக் கோளா றுன்னு மூணு வருஷத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து தங்கி னார். வந்துட்டாரேன்னு சந்தோஷப் பட்டோம். ஆனா, 6 மாசம்கூட அவரை இருக்க விடலை. கோயில் ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்டார்ன்னு 300 பேர் கும்பலா வந்து வீட்டை தாக்கிட்டுப் போனாங்க. திரும்பவும் கிளம்பிட்டார்.

அவர் எங்கே தங்குறார், எங்கே தூங்குறார், எங்கே சாப்பிடுறார்ன்னு எதுவுமே தெரியலை. நானும் அம்மாவும் ஜெயலலிதா ரசிகைகள். ஜெயலலிதான்னா அம்மாவுக்கு ரொம்ப இஷ்டம். அவங்க ஆட்சியில தான் அதிகாலை நாலு மணிக்கு வெறும் லுங்கியோட எங்க அப் பாவை கைது செஞ்ச கொடுமை நடந்திருக்கு.

மாடியில இருந்து இறக்கி கூட்டிப்போக பொறுமை இல்லாம மூணாவது மாடியிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருக்காங்க. ஆஸ்பத்திரி யில யூரின் டியூபை கழட்டி எறிஞ் சிருக்காங்க. அவருக்கு செக்யூ ரிட்டி போட்டிருக்காங்கங்கிறது எல்லாம் சும்மாங்க. அந்த செக்யூரிட் டிக்கே இன்னைக்கு பாதுகாப்பு இல்லை.

கடைசியாக உங்க மூலமா அப்பாகிட்ட ஒரு கோரிக்கை வைக் கிறேன். ‘அப்பா, ஒரு பொம்பளைப் புள்ளைக்கு அப்பான்னா எவ்வளவு ஆசை இருக்கும். அதுவும் ஒத்தப் பிள்ளை நான். அதைக்கூட ஆராதிக்க உங்களுக்கு நேரம் இருந்ததில்லை. எனக்கு நினைவு தெரிஞ்சு, நீங்க என்னை தூக்கிக் கொஞ்சினது இல்லை. ஒரு முத்தம் கொடுத்திருக்கீங்களா? வேண்டாம்ப்பா.. இந்த நாட்டை திருத்தவே முடியாது. இங்கே யாருக்கும் குறைந்தபட்ச மனசாட்சி கூட கிடையாது. டிவிட்டரில், வாட்ஸ் அப்பில் பாராட்டுவாங்க. ஆனா, பிரச்சினைன்னா விட்டுட்டு ஓடிடுவாங்க. பணம், காசு எதுவும் எங்களுக்கு வேண்டாம். நீங்க உசுரோட வந்தா அதுபோதும். என்னைதான் தூக்கி வெச்சி கொஞ்சலை. உங்க பேரப் பிள் ளைங்க ரொம்ப எதிர்பார்க்குது. வந்துடுங்கப்பா...’’ என உருக்கமாக பேசினார் விஜயா.

டிராபிக் ராமசாமியிடம் பேசி னோம். “அவங்களுக்கு பிரச் சினை வேண்டாம்னுதான் குடும்பத் தைவிட்டு ஒதுங்கிட்டேன். எனக்கு மட்டும் பாசம் இல்லையா? ஆனா, அவங்க மட்டுமா என் குடும்பம்? இந்த சமூகமே என் குடும்பம் இல்லையா... நான் பெத்த குழந்தைகளை படைச் சவன் பார்த்துப்பான்...” என்றார் யதார்த்தமாக.

ஓடும் ரயிலில் அமைச்சரிடம் கொள்ளை; வெற்று துப்பாக்கியை வைத்திருந்த ரயில்வே போலீஸ்!

புதுடெல்லி: ஓடும் ரயிலில் அமைச்சரிடம் ஆயுதம் தாங்கிய கும்பல் கொள்ளையடித்த நிலையில், பாதுகாப்புக்கு நின்றிருந்த ரயில்வே போலீஸார் தோட்டா இல்லாத வெற்று துப்பாக்கியை வைத்திருந்ததால் கொள்ளையை தடுக்காமல் ஓட்டம் பிடித்த சம்பவம்  பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஜபல்பூர் - நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநில நிதியமைச்சர் ஜெயந்த் மாலையா, அவரது மனைவி மற்றும் ஏராளமான பயணிகள் அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மதுராவை கடந்தபோது, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய 5 பேர் கும்பல் ஒன்று, அமைச்சர் அமர்ந்திருந்த கூபே கதவை படபடவென்று தட்டி உள்ளது. ஏதோ அவசரம் என்று கருதிய அமைச்சர் ஜெயந்த உடனடியாக கதவை திறந்துள்ளார். உடனே 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் உள்ளே புகுந்துகொள்ள, இன்னொரு 5 பேர் கொண்ட ஆயுத கும்பல் வெளியே காவலுக்கு நின்றுள்ளனர். 

இதனையடுத்து உள்ளே புகுந்த கும்பல், துப்பாக்கி முனையில் அமைச்சர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரிடம் இருந்த நகைகள், பணம் உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தது. பின்னர் மேலும் பல பயணிகளிடமும் இதேப்போன்று கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. 

இத்தகவலை அமைச்சரின் மனைவி சுதா மாலையா  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ரயிலில் இருந்த ரயில்வே போலீஸார் யாரும் கொள்ளையை தடுக்கவோ, கொள்ளையர்களை பிடிக்கவோ முயற்சிக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

இதுகுறித்து பின்னர் அவர்களிடம் கேட்டபோது, தங்களிடம் வெற்று துப்பாக்கிதான் இருந்ததாகவும், தோட்டாக்கள் இல்லை என்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் தெரிவித்ததாக அமைச்சர் மாலையா தெரிவித்தார். 

இந்நிலையில் ரயில் டெல்லி வந்ததும், நேராக நாடாளுமன்றத்திற்கு சென்ற அமைச்சர் மாலையா, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை நேரில் சந்தித்து இதுகுறித்து புகார் செய்தார். மேலும் நாடாளுமன்ற கூட்டம் அப்போது நடந்துகொண்டிருந்ததால் மக்களவையில் இதுகுறித்து உறுப்பினர் ஒருவர் பிரச்னை எழுப்பினார். 

இதனையடுத்து கொள்ளை நடந்த ரயிலில் பணியில் இருந்த ரயில்வே போலீஸார் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ரயில்வே அமைச்சகம், உத்தரபிரதேச காவல்துறையிடமும் அறிக்கை கேட்டுள்ளது.

MCI report puts CMCH’s MBBS course in jeopardy

A damning assessment report by the Medical Council of India (MCI) has put at risk the MBBS course offered by Coimbatore Medical College Hospital (CMCH), which treated nearly 10,000 patients on any given day from not only the Western districts of Tamil Nadu but even the border districts of Kerala.

The MCI assessors had inspected the college on January 9 and 10 to consider a proposal to increase the MBBS seats from the existing 150 to 250 for 2015-16.

Sources said that the assessors found a number of deficiencies, including shortage of faculty by 17.98 per cent, and lack of a statistician to perform computerised indexing of International Classification of Diseases (ICD) and in infrastructure.

In view of these problems, the Executive Committee of the MCI recommended to the Centre not to issue a letter of permission to the CMCH to increase its seats to 250.

Further, the committee invoked the Indian Medical Council Act, 1956 to recommend the cancellation of recognition to the CMCH to offer MBBS course.

Following this report, CMCH Dean A. Edwin Joe met the Union Health Ministry officials in New Delhi on March 13 and explained the facilities available at the CMCH.

He briefed the officials about the development works under way at the CMCH.

Following this, sources said that the Ministry recommended to the MCI to consider permitting the CMCH to continue offering the MBBS course without an increase in seats.

Senior officials in the Directorate of Medical Education were confident that the CMCH would be allowed to offer MBBS course.
The executive committee recommends cancellation of recognition

மெலிந்த உடல்வாகு ஏற்படுவது ஏன்?

குழந்தையானாலும் சரி, இளம்பருவத்தில் இருந்தாலும் சரி வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி இருந்தால்தான், நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

பலர் இயற்கையாகவே ஒல்லியாக இருப்பதைக் காணலாம். `குண்டாக இருப்பவர்கள் உடல் இளைக்க விரும்புவதைப்போலவே ஒல்லியாக இருப்பவர்கள் சதைப்பிடிப்போடு இருக்க மாட்டோமா?’ என ஏங்குகிறார்கள்.

ஒல்லியாக இருக்க என்ன காரணம்?

பொதுவாக உடல்வாகு என்பது அவரவர் பரம்பரையைப் பொறுத்தது. அப்பா, அம்மா ஒல்லியாக இருந்தால் அவர்களின் வாரிசுகளும் ஒல்லியாக இருக்க அதிக வாய்ப்புண்டு. இப்படிப் பரம்பரை காரணமாக ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆகவே, இவர்கள் 'உடல் ஒல்லியாக உள்ளதே' என்று கவலைப்பட அவசியமே இல்லை.

சத்துக் குறைவு காரணமாக உடல் ஒல்லியாக இருப்பவர்கள்தான் நம்மிடம் அதிகம். வறுமையோடு போராடும் ஏழைகளுக்குத் தினமும் பால், பழம், முட்டை, மீன், இறைச்சி போன்ற சத்துள்ள உணவு வகைகள் கிடைப்பது அரிது. இதனால், சத்துக் குறைவு நோய்கள் இவர்களை எளிதில் ஆக்கிரமித்துக் கொள்ளும். அதனால், இவர்கள் ஒல்லியாக இருப்பார்கள்.

தவறான உணவுப் பழக்கம்

சிலர் எந்த நேரமும் சாக்லெட், மிட்டாய், பிஸ்கட், சூயிங்கம், அரிசி என்று எதையாவது ஒன்றை வாயில் மென்று கொண்டே இருப்பார்கள். பசிக்கிற நேரத்தில் இதுபோன்று தின்பண்டங்களைத் தின்று வயிற்றை நிரப்பிக்கொள்வதால், அவர்களுக்குத் தேவைப்படுகிற சத்துள்ள காய்கறி, கீரை, பழம் போன்ற உணவு வகைகளைச் சாப்பிடுவது குறைந்துவிடும். இந்த மாதிரியான உணவுப் பழக்கம் நாளடைவில் உடல் மெலிவுக்குக் காரணமாகிவிடும்.

நோய்களும் காரணமாகலாம்

நன்றாக உடல் வளர்ச்சியோடு இருக்கும் ஒருவர் திடீரென்று மெலிய ஆரம்பித்தால், அதற்கு உடலில் தோன்றியுள்ள நோய்தான் காரணமாக இருக்கமுடியும். குறிப்பாகக் காச நோய், நீரிழிவு நோய், கல்லீரல் நோய், சவலை நோய், சிறுநீரக நோய், மன நோய், குடல் புழுக்கள், அஜீரணம் என்று பெரிய பட்டியலே போடலாம். ஒல்லியாக உள்ளவர்கள் முதலில் அதற்கான சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சராசரி உடல் வாகை பெறமுடியும்.

கலோரியைக் கணக்கிடுங்கள்

உடல் வளர்ச்சி சரியாக இருக்க வேண்டுமானால், சரியான கலோரி அளவுள்ள உணவைச் சாப்பிட வேண்டியது முக்கியம். இதற்கு ஓர் உணவியல் நிபுணரிடம் ஆலோசித்து உங்களுக்குத் தேவையான கலோரியைக் கணக்கிடுங்கள். பொதுவாக, நாள் ஒன்றுக்கு ஆணுக்கு 2,200 கலோரியும், பெண்ணுக்கு 1,800 கலோரியும் தேவை. ஒல்லியாக இருப்பவர்கள் 1000 கலோரியைத் தருகிற அளவுக்கு உணவை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

உடலை வளர்க்கும் புரதம்

உடலின் சீரான வளர்ச்சிக்குப் புரதச் சத்துதான் மிகவும் உதவுகிறது. உடலில் செல்கள் உருவாவதற்கும், அவை வளர்ச்சி அடைவதற்கும் புரதச் சத்து அத்தியாவசியம். தசைகள் வலுவடைவதற்கும், பொலிவு பெறுவதற்கும் புரத உணவு மிக அவசியம். உடலில் ஏற்படும் காயங்களும் புண்களும் விரைவில் குணமாவதற்குப் புரதம் இருந்தால்தான் முடியும். உடலில் ஹார்மோன்கள், என்சைம்கள், செரிமான நீர்கள் போன்றவை சீராகச் சுரப்பதற்கும் புரதம் தேவை.

வயது, வேலையின் தன்மை, உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றைப் பொறுத்து ஒருவருக்கு நாளொன்றுக்கு 50-லிருந்து 75 கிராம்வரை புரதம் தேவைப்படும்.

புரதம் நிறைந்த உணவுகள்

பால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடை கட்டி போன்றவற்றில் புரதம் மிகுந்துள்ளது. இவற்றை அதிகமாகச் சாப்பிடலாம். முட்டை, மீன், இறைச்சி, நிலக்கடலை, சோயா, பருப்பு, முந்திரிப் பருப்பு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், அவரை, துவரை, உளுந்து, மொச்சை, சுண்டல், முளைகட்டிய பயறுகள் போன்றவை புரதம் நிறைந்த உணவு வகைகள். அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களிலும் ஓரளவு புரதம் உள்ளது.

அமினோ அமிலங்கள் தெரியுமா?

புரதம் என்பது அமினோ அமிலங்களால் உருவாக்கப்படுகிறது. மொத்தம் 20 அமினோ அமிலங்கள் உள்ளன. இவற்றில் பன்னிரெண்டு அமினோ அமிலங்களை மாவுச்சத்து மற்றும் தாதுச் சத்துகளிருந்து நம் உடலே தயாரித்துக் கொள்கிறது.

ஆனால், எட்டு அமினோ அமிலங்களை மட்டும் நம் உடலால் தயாரிக்க முடியாது. அவற்றை நாம் சாப்பிடும் உணவிலிருந்துதான் பெற்றாக வேண்டும். இவற்றை ‘அத்தியாவசியமான அமினோ அமிலங்கள்' ( Essential amino acids) என்கிறோம்.

கலவை உணவைச் சாப்பிடுவோம்

நமக்குத் தேவையான அமினோ அமிலங்களைப் பெறுவதற்குப் பல வகைப் புரத உணவுகளைக் கலந்து சாப்பிட வேண்டும். உதாரணமாக இட்லி, தோசையைப் பருப்பு சாம்பார் மற்றும் பொட்டுக்கடலைச் சட்னி அல்லது தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிடும்போது, இவற்றில் உள்ள உளுந்து, பாசிப் பருப்பு, துவரம்பருப்பு, பொட்டுக்கடலை, தேங்காய் போன்றவற்றிலிருந்து அனைத்து அமினோ அமிலங்களும் கிடைத்துவிடும். இட்லியைச் சர்க்கரையைத் தொட்டுக்கொண்டோ, இட்லிப் பொடியை மட்டும் தொட்டுக்கொண்டோ சாப்பிட்டால் இந்த அமினோ அமிலங்கள் தேவையான அளவுக்குக் கிடைக்காது.

உடலை வளர்க்கும் உளுந்து

சைவ உணவு வகைகளில் உளுத்தம் பருப்பில் புரதம் மிக அதிகம். ஆகவே, உளுந்தால் தயாரிக்கப்படும் உளுந்தங்களி, உளுந்த வடை, ஜிலேபி, இட்லி பொடி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், சராசரியான உடல் வாகு கிடைக்கும்.

தினமும் ஏதேனும் ஒருவகை பருப்புக் குழம்பு அல்லது பருப்பு சாம்பார், சிறுகீரை பருப்புக் கூட்டு அவசியம். மாலைச் சிற்றுண்டியில் பொரித்த முந்திரிப் பருப்பு, அவித்த வேர்க்கடலை, கடலை மிட்டாய், எள்ளுருண்டை, சுண்டல், பயறு வகைகள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வது உடலை வளர்க்க உதவும். வாரம் இரு முறை இறைச்சி அல்லது மீன் சாப்பிட வேண்டும். தினமும் அரை லிட்டர் பால் குடிக்க வேண்டும்.

கொழுப்பும் தேவை

உடல் தசைகள் பொலிவு பெறுவதற்குச் சிறிதளவு கொழுப்பும் தேவை. இதை நெய், வெண்ணெய், எண்ணெய், தயிர், ஆட்டிறைச்சி, முட்டை போன்ற உணவு வகைகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது, மதிய உணவின்போது பருப்பில் சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்வது, தயிர் அல்லது லஸ்ஸி, மாலையில் இரண்டு வடை அல்லது நான்கு பாதாம் பருப்பு சாப்பிடுவது போன்ற உணவுப் பழக்கத்தால் தேவையான அளவுக்குக் கொழுப்புச் சத்து கிடைத்துவிடும். இவற்றின் மூலம் உடல் மினுமினுப்படையும்.

இடையிடையே சாப்பிடுங்கள்

காலை, மதியம், இரவு என மூன்று வேளை சாப்பிடுவது எல்லோருக்குமான நடைமுறை. ஒல்லியாக இருப்பவர்கள் இந்த மூன்று வேளை உணவுடன் இடையிடையேயும் சாப்பிடலாம். சுருக்கமாகச் சொன்னால், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை அளவாகச் சாப்பிடுங்கள். மாவுச்சத்து நிறைந்த சிப்ஸ் போன்ற கிழங்கு வகைகளை இந்த இடைவேளையில் சாப்பிடலாம்.

ஆரோக்கிய பானங்கள் அவசியம்

செயற்கைப் பழச்சாறுகளையும், பாக்கெட்டில் அடைத்த பானங்களையும், காற்றடைத்த குளிர்பானங்களையும் தவிருங்கள். பதிலாக, அப்போதே பிழியப்படும் இயற்கைப் பழச்சாறுகளையும், பால், மில்க் ஷேக் மற்றும் லஸ்ஸி போன்ற பானங்களை அருந்துங்கள். புரோட்டீன் பானங்களை அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.

உடற்பயிற்சி முக்கியம்

ஒல்லியாக இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி தேவையா எனக் கேள்வி எழும். இதில் சந்தேகமே வேண்டாம். நன்றாகப் பசி எடுக்க உடற்பயிற்சி உதவும். அதிக அளவில் சத்துள்ள உணவு வகைகளை உடல் ஏற்றுக்கொள்ள வழி செய்யும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும். தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி, மெலிதான ஓட்டம் போன்ற மிதமான பயிற்சிகளைச் செய்தால் போதும். தசைகளுக்கு வலுவூட்டும் ‘ஜிம்’ பயிற்சிகளையும் செய்யலாம்.

நொறுங்கத் தின்றால்

உணவு சாப்பிடுவதும் ஒரு கலை. ஏற்கெனவே, உண்ட உணவு செரித்த பின்பு அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். சுத்தமான உணவு, எளிதில் செரிமானமாகும் உணவு, சுவையான உணவு, சத்துள்ள உணவு, சமச்சீரான உணவைச் சாப்பிட்டால் நல்லது. சத்துகள் நிரம்பிய உணவை மிதமான வேகத்தில், சரியான அளவில் நன்றாக மென்று சாப்பிட வேண்டியது முக்கியம்.

`நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்று சொல்வார்கள். அதனால் உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள். அப்போதுதான் உணவில் உள்ள சத்துகள் முழுவதுமாக உடலில் சேரும். உடல் புஷ்டி அடையும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

CU VC faints during SFI- DYFI blockade

KOZHIKODE: In a day marked by high drama and violence, Calicut University vice-chancellor M Abdul Salam fainted in his office after a group of SFI and DYFI activists blockaded him for over three hours and tried to break open the office door alleging corruption in ongoing appointments to the university assistant posts on Wednesday.

Around 30 activists stormed the administrative block and ransacked offices after a news channel aired visuals of IUML leader and Tenhipalam panchayat president Firoz Kalliyil allegedly demanding a bribe of Rs 15 lakh for appointment to the assistant post. The channel footage showed Firoz trying to strike a deal sitting in the varsity guest house with the media team who approached him disguised as relatives of an applicant.

Following the news, activists led by DYFI Malappuram secretary P K Abdul Navas forced their way into the AD block around 10.30 am. Though security personnel had blocked the way to the corridor leading to the VC's office, the activists - armed with metal rods - made their way to the area by breaking open the door to the registrar's office and the syndicate room. They also destroyed the computers and furniture in the office of the VC's personal staff.

Salam, who was in his chamber along with a security guard, fainted as tension mounted and activists punctured a hole on his office's door. They also manhandled four office staff who have been admitted to Tirurangadi taluk hospital.

Salam was immediately rushed to a private hospital in Kozhikode in a police vehicle. Baby Memorial Hospital authorities said that the VC had experienced a syncopal attack due to sudden fall in blood pressure and his condition was now stable.

The interview to the post of assistants has been suspended temporarily following the incident. It will resume only after the next syndicate meeting on March 21. The varsity is in the process of appointing 250 assistants and interviews were being held by a five-member committee comprising VC and two syndicate members each affiliated to the Congress and the IUML.

Tenhipalam police have arrested five persons including Malappuram district secretary of DYFI and SFI district secretary V P Sanu in connection with the violence. Meanwhile, the Association of Calicut University Teachers (ACT) has demanded the removal of Salam and the PVC following allegations of irregularities in the assistant appointments.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...