Saturday, March 21, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகா பயிற்சி ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

யோகா

மனதையும், உடலையும் ஒருங்கிணைத்து ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிநடத்தும் பயிற்சி, யோகா. இந்தியாவில் உருவான இந்த யோகா பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இதுகுறித்த விழிப்புணர்வை உலகமெங்கும் ஏற்படுத்தும் வகையில் சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்க ஐ.நா. ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பல்வேறு நாடுகளும் அவருக்கு இதில் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இது மோடியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என கருதப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகா

இப்போது மோடி, அடுத்த கட்டமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்க முடிவு எடுத்துள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 1-ந் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து அனைத்து நாட்களிலும் வழங்கப்படும். டெல்லியில் சமாஜ்சதன் கிரி கல்யாண் கேந்திராவில், மொரார்ஜி தேசாய் தேசிய யோகா இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பதிவு செய்ய வேண்டும் என்பதோ, கட்டணம் செலுத்த வேண்டும் என்பதோ கிடையாது.

நாடு முழுவதும் உள்ள 31 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த யோகா பயிற்சி கிடைக்க உள்ளது.

அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி

இதே போன்று மூத்த அதிகாரிகள், மன அழுத்த மேலாண்மை உத்திகளை கற்றுக்கொள்ளும் வகையில் 2 நாள் பட்டறையையும் மத்திய அரசு நடத்துகிறது. இந்த பட்டறை, வரும் 28-ந் தேதியும், 29-ந் தேதியும் டெல்லியில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறையும், மத்திய மந்திரிசபை செயலகமும்

'4 நாட்கள் ஓடினால் வெற்றிப்படம் என்கிறார்கள்'; கவிஞர் வைரமுத்து பேச்சு



‘‘ஒரு படம் மூன்று காட்சிகள் ஓடினால், ஆஹா என்கிறார்கள். மூன்று நாட்கள் ஓடினால், அபாரம் என்கிறார்கள். 4 நாட்கள் ஓடினால், வெற்றிப்படம் என்கிறார்கள். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை’’ என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.

படவிழா

சிவாஜிகணேசன் நடித்து, பி.ஆர்.பந்துலு டைரக்டு செய்து 1959-ம் வருடம் வெளிவந்த வரலாற்று சிறப்பு மிகுந்த படம், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்.’ 56 வருடங்களுக்குப்பின் இந்த படம், ‘சினிமாஸ்கோப்’பில் புதிய தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

இந்த விழாவில், கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசியதாவது:-

‘‘வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வரலாற்று கலைப்படத்தின் பெருமையை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நிகழ்கால திரையுலகம் குறித்த தகவல் அறிவு வாய்த்திருக்க வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் ஒரு திரைப்படம் மூன்றாம் காட்சியில் நிலைத்திருந்தால், ஆஹா என்கிறார்கள். சனி, ஞாயிறு நீடித்தால், அபாரம் என்கிறார்கள். திங்கட்கிழமையும் மாற்றப்படாமல் இருந்தால், வெற்றிப்படம் என்கிறார்கள்.

தமிழ் குரல்

இப்படிப்பட்ட ஒரு திரைச்சூழலில் ஒரு படம், 56 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தொழில்நுட்பத்தோடு தமிழர் வீட்டு கதவுகளை மீண்டும் தட்டுகிறதென்றால், வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழையும், சிவாஜிகணேசனின் பெருமையையும் உணர்ந்து கொள்ளலாம்.

தமிழ் திரை வரலாற்றின் நெடுங்கணக்கில் எத்தனையோ கதாநாயகர்கள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால், ஆண்மையை ஆர்ப்பரிக்கும் தமிழ் குரல் சிவாஜிகணேசனைப்போல் வேறு எவருக்கும் வாய்த்ததில்லை. அவரை, ‘சிம்மக்குரலோன்’ என்று அழைத்தார்கள். சிங்கத்தின் கர்ஜனைக்கு கூட ஒரே தொனிதான் உண்டு. ஆனால், நூறு குரலில் பேசிய சிம்மம், சிவாஜிகணேசன்.

சாகா வரம்

மறைந்த பிறகும் ஒளியாக, ஒலியாக, உருவமாக, அசைவாக வாழ்ந்து கொண்டே இருப்பதால், நடிகர்கள் சாகா வரம் பெற்றவர்கள். பொதுவாக நடிகர்கள் ஒப்பனையை அணிந்து கொண்டு நடிப்பார்கள். ஆனால், சிவாஜியோ ஒப்பனையை அணிந்து கொண்ட பிறகு பாத்திரத்துக்குள் புகுந்து கொண்டு நடித்தவர்.

இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் இளைய நடிகர்களுக்கும், இந்தியாவுக்கும் ஒரு சேதி இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்ப்பதற்கு இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும்? என்ற கேள்வியை வீரபாண்டிய கட்டபொம்மன் எழுப்புகிறது.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள் எந்த நாளும் இந்தியாவுக்கு ஆபத்து என்பதைத்தான் கட்டபொம்மன் வரலாறு நமக்கு போதிக்கிறது. இன்னொரு சுதந்திர போருக்கு இந்தியா தள்ளப்பட்டு விடக்கூடாது. இதைத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் நிகழ்காலத்தின் கன்னத்தில் அறைந்து சொல்கிறான்.’’

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

விழாவில் நடிகர்கள் சிவகுமார், ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பட அதிபர் சித்ராலட்சுமணன், ராஜ் டி.வி. ராஜேந்திரன், டாக்டர் கமலா செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு

பொதுவாக நாட்டின் வளர்ச்சி என்பது வேலை வாய்ப்புகளோடு கூடிய வளர்ச்சி என்றால்தான் பயனுள்ளதாக இருக்கும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வுப்படி, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 9 சதவீதமாக இருந்தாலும்கூட, நாட்டில் வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகும். எனவே, வேலைவாய்ப்பை அனைத்து பிரிவிலும் உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் இன்றைய இளைஞர் சமுதாயம் பெறுவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதே மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமையாகும்.

அதிலும் தங்கள் ஊரில் உள்ள அதிகம் படிக்காத இளைஞர்கள் எல்லாம் துபாய் போகிறோம், அரபு நாடுகளுக்கு செல்கிறோம் என்று ‘டாட்டா’ காட்டிவிட்டு, அங்கு தங்கள் உடல் உழைப்பை மூலதனமாக வைத்து சம்பாதித்து, குடும்பத்தை வளப்படுத்துவதை பார்த்த பிறகு, படித்த இளைஞர்களுக்கும் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற ஆசை வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக, நர்சு வேலைக்கு படித்த பெண்கள், உள்நாட்டில் அபரிமிதமான வேலைவாய்ப்பு இருந்தாலும், வெளிநாட்டில் போய் வேலை பார்த்தால் அதிக சம்பளம் கிடைக்குமே என்ற ஆசையில், அதுதான் தங்கள் முழு லட்சியமாகக் கொண்டு முயற்சி செய்கிறார்கள். பொதுவாக அரபு நாடுகளில் மட்டுமல்லாமல், மேலை நாடுகளில் உள்ள மருத்துவமனைகளிலும் தமிழ்நாடு, கேரளா நர்சுகள் என்றால் அவர்களின் பணித்திறமைக்காகவும், அன்போடு நோயாளிகளை கவனிக்கும் கருணை உணர்வுக்காகவும் நல்ல கிராக்கி இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் போலி ஏஜென்சிகளை நம்பி ஏராளமான பணத்தையும் கொடுத்து, வெளிநாடுகளுக்கு செல்லும்நேரத்தில், அவர்கள் சொன்னது போல நல்ல சம்பளத்திற்கு வேலையும் கிடைக்காமல், ஏமாந்து நிற்கும் அவலநிலை நாள்தோறும் அரங்கேறுகிறது. வெளிநாட்டுக்கு போய் நிறைய சம்பாதிக்கப் போகிறோமே என்ற எதிர்பார்ப்பில் வீட்டில் உள்ளவைகளை விற்று, கடன் வாங்கி போலி நிறுவனங்களில் கொடுத்து அவர்களை நம்பி வெளிநாடு போகிறார்கள். அங்கு போனபிறகு படும் அவதியோ சொல்லிமாளாது. மோசடி நிறுவனம் என்று தெரியாமல் ஏமாந்துவிட்டோமே என்று கையைப் பிசைந்து கொண்டு நிற்கும் நர்சுகளுக்கு நல்ல செய்தியாக மத்திய அரசாங்கம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளிநாடுகளில், குறிப்பாக அரபு நாடுகளில் வேலை வாங்கித் தருகிறோம் என்று நர்சுகளை வெளிநாட்டுக்கு அனுப்ப அரசு அங்கீகாரம் இல்லாத ஏஜென்சிகளுக்கு மத்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 5 அரசு நர்சிங் கல்லூரிகளும், 167 தனியார் நர்சிங் கல்லூரிகளும் இருக்கின்றன. ஆண்டுதோறும் இங்கு படித்து முடித்து 8 ஆயிரம் நர்சுகள் வேலை வாய்ப்பை தேடி வெளியே வருகிறார்கள். இதில் பலர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை தேடும் நிலையில் மத்திய அரசாங்கத்தின் இந்த புதிய உத்தரவு நிச்சயமாக வரவேற்கத்தக்கது. இதுமட்டுமல்லாமல், தமிழக அரசு எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது, 30–11–1978–ல் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் என்று ஒன்றை தொடங்கி, ஆண்டுதோறும் ஆயிரம் பேர்களுக்கு மேல் வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப மத்திய அரசின் அனுமதியையும் பெற்றது. 35 ஆண்டுகள் ஆகியும் இந்த நிறுவனத்தின் சார்பில் 9 ஆயிரம் பேர்தான் பல பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எனவே தனியார் ஏஜென்சிகளைத்தான் பெரிதும் நம்ப வேண்டிய நிலையில் அங்கும் ஏமாற்றப்படமாட்டோம் என்ற புதிய நம்பிக்கையை இந்த உத்தரவு உருவாக்கியுள்ளது.

Friday, March 20, 2015

வரவேற்பு இல்லாத ‘எம்-டிக்கெட்’ திட்டம்: 2 மாதங்களில் 646 பேர் மட்டுமே முன்பதிவு



சென்னையில் புறநகர் ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செல்போன் செயலி (App) மூலம் 646 பேர் மட்டுமே டிக்கெட் எடுத்துள்ளனர்.

நாட்டிலேயே முதல்முறையாக சென்னை, மும்பையில் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் செல்போன்கள் மூலம் புறநகர் மின்ரயில் டிக்கெட் முன்பதிவு (எம்-டிக்கெட்டிங்) செய்யும் வசதி கடந்த ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிளேஸ்டோரில் ‘யூடிஎஸ்’ (UTS on mobile) என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து, பெயரை பதிவு செய்துகொள்ளலாம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு (ஏடிஎம் கார்டு) மூலம் இருப்புத் தொகையை அதிகரிக்கலாம்.

சென்னையில் 18 ரயில் நிலையங்களில் ‘ஏடிவிஎம்’ எனப்படும் தானியங்கி டிக்கெட் விநியோக இயந்திரங்கள் உள்ளன. அதன்மூலம் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டம் குறித்து தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் கூறியதாவது:

எம்-டிக்கெட் வசதிக்கான செயலியை இதுவரை 6,227 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இவர்களில் 284 பேர் மட்டுமே ரீசார்ஜ் செய்துள்ளனர். அந்த 284 பேர் 523 டிக்கெட்களை முன்பதிவு செய்ததன்மூலம் 646 பேர் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். இதன்மூலம் ரூ.35,300 வருவாய் கிடைத்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை புறநகர் ரயில்களில் ஒரு நாளுக்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. அதன்மூலம் சராசரியாக ரூ.14 லட்சம் வருவாய் கிடைக்கிறது. ஆனால், ‘எம்-டிக்கெட்டிங்’ மூலம் இரண்டரை மாதங்களில் 523 டிக்கெட்கள் மட்டுமே விற்கப்பட்டிருப்பது இத்திட்டம் இன்னும் பயணிகளை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதையே காட்டுகிறது.

வாட்ஸ் அப்பில் வலம் வரும் ரகசியங்கள்


மொபைல் போன் வரவுக்கு முன்னர் பேருந்தில் பாடல்களை ஒலிபரப்புவார்கள். அனைவரும் கேட்பார்கள். அல்லது வீடியோ கோச் என அழைக்கப்படும் பேருந்தில் ஒரு படத்தை ஒளிபரப்புவார்கள். எல்லோரும் ஆர்வத்துடன் அதைப் பார்ப்பார்கள். ஆனால் ஸ்மார்ட் போன் வந்த பின்னர் ரயிலிலோ, பேருந்திலோ செல்லும் பெரும்பாலானவர்கள் தனித் தனியே ஏதாவது படம் பார்க்கிறார்கள் அல்லது வீடியோ கேம் ஆடுகிறார்கள். திரைப்படத்தைப் பார்த்து அது மொக்கை என ட்விட்டரிலோ ஃபேஸ்புக்கிலோ எழுதும் ஆவேசக்காரர்கள் அதே மொக்கை படத்தை மொபைலில் பார்த்துப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.

ஒரு காலத்தில் அஞ்சல் அட்டையில் ஒரு தகவல் வரும். இதைப் படித்துவிட்டு இதே போல் பத்துப் பேருக்கு அனுப்பினால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும், இதை அலட்சியப்படுத்தினால் அழிவுதான் எனப் பயமுறுத்தும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். இதைப் போன்றவை ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவை வந்த பிறகு அவற்றிலும் தொடர்ந்து வரத் தான் செய்கின்றன. மொபைல் வரத் தொடங்கியபோது மெஸேஜ் இலவசமாக இருந்தது. அப்போது நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து மெஸேஜ் ஆக அனுப்பித் தள்ளுவார்கள்.

என்ன ஏதென்று பார்ப்பதே இல்லை. வந்த மெஸேஜை எல்லாம் படிக்காமல் பரப்புவார்கள். பின்னர் இதற்கு நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கத் தொடங்கின. அதன் பின்னர் நண்பர்கள் மெஸேஜ் அனுப்புவதைக் குறைத்துக் கொண்டார்கள்.

சில சலுகைகளை நிறுவனங்கள் அறிவித்தன. ரேட் கட்டர் போட்டு மெஸேஜ் அனுப்பினார்கள். பண்டிகை தினம் அன்று மெஸேஜ் அனுப்ப சலுகை இல்லை என்ற போதும் நம் நண்பர்கள் முந்தைய நாளே வாழ்த்துச் சொல்லி தங்கள் அன்பை நிரூபித்தார்கள்.

நேரில் பார்த்தால் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லும் நண்பர்கள் மொபைல் வழியே அன்பைப் பொழிகிறார்கள். இப்போது இவர்கள் கையில் வாட்ஸ் அப் வந்து வசதியாகச் சிக்கிவிட்டது. காலையில் தொடங்கும் இவர்களது அன்பு இரவுவரை தொடர்ந்து ஓயாமல் டொய் டொய்ங்கென முழங்கியபடியே இருக்கிறது. புதுசு புதுசாக எவ்வளவோ விஷயங்களை என்ன ஏதென்று தெரியாமலே உலகம் முழுக்க அனுப்பி மகிழ்கிறார்கள்.

சமீபத்தில் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் சில்மிஷப் பேச்சை கேட்காதவர்கள் யாருமே இல்லை எனச் சொல்லும் அளவுக்கு அந்த உரையாடல் மொபைல் வழியே ஒரு சுற்று சுற்றியது. செய்தி எப்படிப்பட்டது, அது உண்மையா, பொய்யா என்று யோசிக்காமலேயே வந்ததா, பார்க்கிறோமோ இல்லையோ பரப்பிவிடுவோம் என்ற பரந்த மனப்பான்மையில் செயல்படுகிறார்கள்.

அரசியல் தலைவர்களை நக்கலடித்து வரும் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. தேர்தல் வருவதை ஒட்டி இதைப் போன்ற வீடியோக்கள் இனி அதிகம் வரலாம். நீங்கள் விரும்பும் விரும்பாத செய்திகளும், படங்களும், வீடியோகளும் உங்கள் மொபைல் போனின் பேட்டரியைத் தின்று தீர்க்கும். வாட்ஸ் அப் ஃப்ரீதானேன்னு நண்பர் ஒருத்தர் சொன்னார். ஆனால் மாதந்தோறும் நெட் கார்டு போட்டால்தான் வாட்ஸ் அப் உள்ளிட்ட வசதிகளையும் அனுபவிக்க முடியும். எதுவுமே ஃப்ரீயாகக் கிடைப்பதில்லை.

64 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு: முதியவரின் விடா முயற்சி


அலகாபாத்: உ.பி.யில் 64 வயது முதியவர் பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வு எழுதிய சம்பவம் நடந்துள்ளது. 
உ.பி.மாநிலம் பதேபூர் மாவட்டம் கஹா என்ற கிராமத்தை ச்சேர்ந்தவர் அக்தர் அன்சாரி (64), முன்னர் கூலி தொழிலாளியாக இருந்தார்.
நேற்று மாநில அரசு கல்வி வாரியத்தின் 10-ம் வகுப்பு மெட்ரி தேர்வு துவங்கியது. கவுஷாம்பி கிராமத்தில் உள்ள நாரா பள்ளி தேர்வு மையத்தில், தேர்வு அறைக்கு வந்த அக்தர் அன்சாரியை பார்த்ததும் தேர்வு எழுத வந்த மற்றவர்கள் தேர்வு நடத்தும் அதிகாரி என நினைத்து வணக்கம் சார் என்றனர்.அதனை பொருட்படுத்தாத அக்தர் அன்சாரி தனது இருக்கையில் அமர்ந்தார், தேர்வு அதிகாரியிடம் வினா தாளை வாங்கி கடகடவென தேர்வு எழுத துவங்கினார். பின்னர் தான் தெரிந்தது அக்தர்அன்சாரி மெட்ரிக் தேர்வு எழுத வந்தவர் என்பது.

அக்தர் அன்சாரி கூறுகையில், எனது குடும்பத்தில் அனைவரும் படித்த பட்டதாரிகளாக உள்ளனர். நான் எட்டாம் வகுப்புவரை படித்துவிட்டு குடும்ப பாரபரத்தை சுமக்க வேண்டியிருந்ததால் மேல்படிப்பு படிக்க முடியாமல்போனது.எனினும் எப்படியாவது 10-ம் வகுப்பு தேர்வு எழுதிடவேண்டும் என்ற நம்பிக்கையில் ஆன்லைன் வாயிலாக பதிவுசெய்து விண்ணப்பித்து தேர்வு எழுதினேன். ஐம்பது ஆண்டுகளுக்கு பின் தேர்வு எழுதியது எனக்கு கடினமக இருந்தது. இதற்காக தினசரி நாளிதழ்கள் படிப்பது, நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசிக்க சில மணி நேரம் செலவிடுவது என பல வழிகளில் முயற்சித்தேன்.. பேரன் , பேத்திகளை போன்ற மாணவர்களுடன் அமர்ந்து தேர்வு எழுதியதால் எனக்கு சிறிதும் கவலையோ ,சங்கடமோ இல்லை என்றார்.

பீகார் மாநில எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விநோதம் மாணவர்கள் காப்பி அடிக்க ஜன்னல் மீது ஏறி ‘பிட்’ காகிதம் கொடுத்த பெற்றோர்

நாளந்தா பல்கலைக்கழகத்தை பெற்ற பெருமைமிக்க மாநிலம் பீகார். ஒரு காலத்தில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வந்து இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கல்வி கற்றார்கள்.
அப்படி கல்வியில் சிறந்து விளங்கிய பீகார் மாநிலத்தில் கல்வியின் தரம் எப்படி இருக்கிறது என்பதற்கு, அங்கு தற்போது நடந்து வரும் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு சிறந்த உதாரணம் ஆகும்.
பீகாரில் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 17–ந் தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 1,217 தேர்வு மையங்களில் 14 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள்.
பரீட்சையில் ‘காப்பி‘
பொதுவாக, தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பது என்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக அபூர்வமாக நடைபெறும்.
ஆனால் பீகார் மாநிலத்தில் தேர்வில் காப்பி அடிப்பது என்று, ‘காப்பி குடிப்பது‘ போன்ற சர்வ சாதாரணமான நிகழ்வு என்பது தற்போது நடைபெற்று வரும் தேர்வின் மூலம் அம்பலமாகி இருக்கிறது.
வைஷாலி மாவட்டத்தில் உள்ள பல மாடிகளை கொண்ட ஒரு தேர்வு மையத்தில் நேற்று முன்தினம் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அதை சுற்றிலும் ஏராளமான பேர் நின்று கொண்டிருந்தனர். மேலும் பல பேர் அந்த கட்டிடத்தின் மேல் ஏறி ஜன்னல் பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.
ஜன்னல் வழியாக ‘பிட்‘ தானம்
கட்டிடத்தில் ஏதோ பூச்சு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் பார்த்தால், அதுதான் இல்லை.
அவர்களெல்லாம் உள்ளே அறையில் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் மாணவ–மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்கள்.
உள்ளே பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, ‘காப்பி‘ அடிப்பதற்காக ஜன்னல் வழியாக ‘பிட்‘டுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கிழித்து கொடுத்தனர்.
ஜன்னல் ஓரம் இருந்த மாணவர்கள் அவற்றை வாங்கிக்கொண்டு கருமமே கண்ணாக காப்பி அடிக்கும் வேலையை தொடங்கினார்கள்.
மேலே ஜன்னல்களில் ஏற முடியாதவர்கள், கீழே நின்றபடி ‘பிட்‘ காகிதங்களை சுருட்டி உள்ளே வீசினார்கள். இன்னும் சிலர் நீண்ட கம்பின் நுனியில் வைத்து ஜன்னல் வழியாக உள்ளே கொடுத்தார்கள்.
அதிர்ச்சி
மொத்தத்தில் தேர்வு அறைகளில் இருந்த கிட்டத்தட்ட எல்லா மாணவர்களுமே ‘பிட்‘ தட்டுப்பாடு இன்றி பரீட்சையை பயம் இன்றி வெற்றிகரமாக எழுதினார்கள்.
இந்த அரிய காட்சியை, ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்கள், ‘பரீட்சையில் இதெல்லாம் சாதாரணமப்பா‘ என்பது போல் கண்டும் காணாமல் சென்றனர். ஆனால் அந்த வழியாக சென்ற பத்திரிகை புகைப்படக்காரர்கள் இந்த அபூர்வ காட்சியை படம் பிடித்து, பீகாரில் பள்ளிக்கூட தேர்வு எப்படி நடக்கிறது? என்பதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தினார்கள். அதைப்பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கல்வி மந்திரியின் சமாளிப்பு
இதுபற்றி பீகார் மாநில கல்வி மந்திரி பி.கே.சாகியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பீகாரில் நேர்மையாக தேர்வை நடத்துவது என்பது முடியாத காரியம் என்றும், இது அரசுக்கு மிகவும் சவாலான பிரச்சினை என்றும் சாதாரணமாக கூறினார்.
ஒரு மாணவர் காப்பி அடிப்பதற்கு குறைந்தபட்சம் 4 அல்லது 5 பேர் உதவி செய்வதாக கூறிய அவர், இதை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்த முடியாது என்றும், இந்த விஷயத்தில் சமுதாயத்துக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும் கூறினார்.
அத்துடன், பரீட்சையில் காப்பி அடிப்பது என்பது பீகார் மாநிலத்தில் மட்டும் நடக்கவில்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார்.
பிடிபட்ட மாணவர்கள்
பீகார் பள்ளி தேர்வு வாரிய தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் கூறுகையில், நியாயமற்ற முறையில் பரீட்சை எழுதிய மாணவர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட 3 பாட தேர்வுகளில் காப்பி அடித்ததாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிடிபட்டதாகவும் தெரிவித்தார்.

நாளந்தா பல்கலைக்கழகத்தை பெற்ற பெருமைமிக்க மாநிலம் பீகார். ஒரு காலத்தில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வந்து இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கல்வி கற்றார்கள்.
அப்படி கல்வியில் சிறந்து விளங்கிய பீகார் மாநிலத்தில் கல்வியின் தரம் எப்படி இருக்கிறது என்பதற்கு, அங்கு தற்போது நடந்து வரும் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு சிறந்த உதாரணம் ஆகும்.
பீகாரில் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 17–ந் தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 1,217 தேர்வு மையங்களில் 14 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள்.
பரீட்சையில் ‘காப்பி‘
பொதுவாக, தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பது என்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக அபூர்வமாக நடைபெறும்.
ஆனால் பீகார் மாநிலத்தில் தேர்வில் காப்பி அடிப்பது என்று, ‘காப்பி குடிப்பது‘ போன்ற சர்வ சாதாரணமான நிகழ்வு என்பது தற்போது நடைபெற்று வரும் தேர்வின் மூலம் அம்பலமாகி இருக்கிறது.
வைஷாலி மாவட்டத்தில் உள்ள பல மாடிகளை கொண்ட ஒரு தேர்வு மையத்தில் நேற்று முன்தினம் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அதை சுற்றிலும் ஏராளமான பேர் நின்று கொண்டிருந்தனர். மேலும் பல பேர் அந்த கட்டிடத்தின் மேல் ஏறி ஜன்னல் பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.
ஜன்னல் வழியாக ‘பிட்‘ தானம்
கட்டிடத்தில் ஏதோ பூச்சு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் பார்த்தால், அதுதான் இல்லை.
அவர்களெல்லாம் உள்ளே அறையில் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் மாணவ–மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்கள்.
உள்ளே பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, ‘காப்பி‘ அடிப்பதற்காக ஜன்னல் வழியாக ‘பிட்‘டுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கிழித்து கொடுத்தனர்.
ஜன்னல் ஓரம் இருந்த மாணவர்கள் அவற்றை வாங்கிக்கொண்டு கருமமே கண்ணாக காப்பி அடிக்கும் வேலையை தொடங்கினார்கள்.
மேலே ஜன்னல்களில் ஏற முடியாதவர்கள், கீழே நின்றபடி ‘பிட்‘ காகிதங்களை சுருட்டி உள்ளே வீசினார்கள். இன்னும் சிலர் நீண்ட கம்பின் நுனியில் வைத்து ஜன்னல் வழியாக உள்ளே கொடுத்தார்கள்.
அதிர்ச்சி
மொத்தத்தில் தேர்வு அறைகளில் இருந்த கிட்டத்தட்ட எல்லா மாணவர்களுமே ‘பிட்‘ தட்டுப்பாடு இன்றி பரீட்சையை பயம் இன்றி வெற்றிகரமாக எழுதினார்கள்.
இந்த அரிய காட்சியை, ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்கள், ‘பரீட்சையில் இதெல்லாம் சாதாரணமப்பா‘ என்பது போல் கண்டும் காணாமல் சென்றனர். ஆனால் அந்த வழியாக சென்ற பத்திரிகை புகைப்படக்காரர்கள் இந்த அபூர்வ காட்சியை படம் பிடித்து, பீகாரில் பள்ளிக்கூட தேர்வு எப்படி நடக்கிறது? என்பதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தினார்கள். அதைப்பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கல்வி மந்திரியின் சமாளிப்பு
இதுபற்றி பீகார் மாநில கல்வி மந்திரி பி.கே.சாகியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பீகாரில் நேர்மையாக தேர்வை நடத்துவது என்பது முடியாத காரியம் என்றும், இது அரசுக்கு மிகவும் சவாலான பிரச்சினை என்றும் சாதாரணமாக கூறினார்.
ஒரு மாணவர் காப்பி அடிப்பதற்கு குறைந்தபட்சம் 4 அல்லது 5 பேர் உதவி செய்வதாக கூறிய அவர், இதை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்த முடியாது என்றும், இந்த விஷயத்தில் சமுதாயத்துக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும் கூறினார்.
அத்துடன், பரீட்சையில் காப்பி அடிப்பது என்பது பீகார் மாநிலத்தில் மட்டும் நடக்கவில்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார்.
பிடிபட்ட மாணவர்கள்
பீகார் பள்ளி தேர்வு வாரிய தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் கூறுகையில், நியாயமற்ற முறையில் பரீட்சை எழுதிய மாணவர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட 3 பாட தேர்வுகளில் காப்பி அடித்ததாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிடிபட்டதாகவும் தெரிவித்தார்.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...