Wednesday, March 25, 2015

இணையதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் சட்டம் ரத்து

கடந்த 2012-ம் ஆண்டு சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணத்தை தொடர்ந்து மும்பை நகரில் கடையடைப்பு நடத்தப்பட்டது.

அதை விமர்சித்து ‘பேஸ்புக்’ பக்கங்களில் எழுதியதாக மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஷகீன் தாதா மற்றும் ரீனு சீனிவாசன் ஆகிய இரு பெண்கள் மராட்டிய போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இதனை எதிர்த்து சட்டக் கல்லூரி மாணவி ஷ்ரேயா சிங்கால் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அவர் தன்னுடைய மனுவில், ‘கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவில் திருத்தங்கள் செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

அவர் சார்பில் முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி ஆஜராகி வாதாடினார். ‘66-ஏ பிரிவு, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, நடைமுறைக்கு பொருந்தாதது. அரசியல் சட்டம் வரையறுத்த கருத்து மற்றும் பேச்சுரிமையை பறிக்கிறது’ என்று அவர் வாதாடினார்.

இப்பிரச்சினையில், இந்த மனு உள்பட 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 2013-ம் ஆண்டு மே 16-ந்தேதி, சமூக வலைத்தளங்களில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைப் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஐ.ஜி. அல்லது போலீஸ் துணை கமிஷனரின் உத்தரவு இல்லாமல் போலீசார் கைது செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியது.

ஒத்திவைப்பு

கடந்த பிப்ரவரி 26-ந்தேதி, இந்த வழக்கின் மீது தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த 18-ந்தேதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம்கானை விமர்சித்து 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாக உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டான்.

இவ்விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த அறிவுரையை உத்தரபிரதேச போலீசார் கடைப்பிடிக்க வில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே, கைதுக்கான சூழ்நிலை குறித்து உத்தரபிரதேச போலீசாரிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டது.

தீர்ப்பு

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவுக்கு எதிரான மனுக்களின் மீது நீதிபதிகள் ஜெ.செல்லமேஸ்வர், ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நேற்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. அந்த சட்டப்பிரிவு செல்லாது என்று கூறி, அதை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

ஒரு சமூகத்தில் மனிதர்களின் கருத்து மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் முதன்மையானதாகும். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு மக்களின் அறிந்து கொள்ளும் உரிமையை பாதிக்கிறது. அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் போன்ற இருபெரும் தூண்களை இந்தப் பிரிவு தகர்க்கிறது.

உரிமைகள் பாதிப்பு

அது மட்டுமல்லாது அரசியல் சாசன சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சு மற்றும் வெளிப்பாட்டு உரிமைகளை இந்தப் பிரிவு நேரடியாகப் பாதிக்கிறது. இந்த சட்டப்பிரிவில் குறிப்பிடப்படும் ‘‘எரிச்சல்படுத்தும்’’, ‘‘அசவுகரியமான’’ மற்றும் ‘‘மொத்தத்தில் தவறான’’ என்ற வார்த்தைகள் மிகவும் மேலோட்டமாகவும், தெளிவில்லாமலும் இருக்கின்றன.

சட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கும், குற்றத்தை இழைப்பவர்களுக்கும் இந்த சட்டப்பிரிவில் உள்ள இதுபோன்ற வார்த்தைகள் அவற்றின் சரியான உட்கருத்தை சரியாக புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமானதாக அமைந்திருக்கின்றன.

அவதூறு

நீதிபதியாக இருப்பவர்களே, இவற்றில் உள்ள ஒரே வார்த்தைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கும்போது, சட்டத்தை அமல்படுத்துபவர்களும், மற்றவர்களும் என்ன முடிவு செய்வார்கள்?

ஒருவருக்கு அவதூறாகப்படுவது மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். ஒருவருக்கு அவதூறாக இருப்பது மற்றவருக்கு அவதூறாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

மத்திய அரசின் வாதம் நிராகரிப்பு

இந்த சட்டப்பிரிவு துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க சில விதிமுறைகளை வகுக்கிறோம் என்று வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு உறுதி அளித்தது. அதை ஏற்க முடியாது.

அரசாங்கங்கள் வரும் போகும். ஆனால் 66-ஏ போன்ற பிரிவுகள் எப்போதும் இருக்கும். தற்போது உள்ள ஆட்சியினர் தங்களுக்கு அடுத்து வரும் ஆட்சியாளர்கள், துஷ்பிரயோகம் செய்ய மாட்டார்கள் என்ற உறுதியை அளிக்க முடியாது. எனவே, கருத்து சுதந்திரத்துக்கும், அரசியல் சட்டத்துக்கும் எதிரான சட்டப்பிரிவு 66-ஏ ரத்து செய்யப்படுகிறது.

நீடிக்கும்

அதே சமயத்தில், சமூக வலைத்தளங்களில், குறிப்பிட்ட தகவல்களை யாரும் பார்க்க முடியாதவாறு முடக்கு வதற்கு உத்தரவு பிறப்பிக்கலாம். இதுதொடர்பான 69-ஏ மற்றும் 79 பிரிவுகளை சில கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அமல்படுத்தலாம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.புதுடெல்லி,

சகிப்பின்மைக்குக் கிடைத்த சவுக்கடி



தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ‘ஏ’ பிரிவு, அரசியல் சட்டம் அளிக்கும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் விதத்தில் இருப்பதால் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலோ, சமூகத்தில் ஒழுங்கைக் கெடுக்கும் விதத்திலோ, பிற நாடுகளுடன் இந்தியாவுக்குள்ள உறவைக் குலைக்கும் வகையிலோ கருத்துகள் பதிவிடப்பட்டால் அந்த இணையதளத்தை அரசு முடக்கிவைக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் கூறியுள்ளது. நீதிபதிகள் ஜே. சலமேஸ்வர், ரோஹின்டன் ஃபாலி நாரிமன் அடங்கிய அமர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது.

“தகவல்களை அறிந்துகொள்வதற்கு மக்களுக்குள்ள உரிமையைத் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) சட்டத்தின் 66 (ஏ) பிரிவு பாதிக்கிறது. அத்துடன், பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றுக்கும் குந்தகம் விளைவிக்கிறது. இந்தச் சட்டத்தில் விவரிக்கப்படும் ‘குற்றம்’, எந்த விதத்தில் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகக் குறிப்பிடப் படவில்லை. இந்தச் சட்ட வாசகத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பொருள் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன” என்று அமர்வு சுட்டிக்காட்டியிருக்கிறது.

மேலும், “விவாதம், ஒரு கருத்துக்கு ஆதரவு தேடுதல், தூண்டி விடுதல் என்ற மூன்றுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு பொருள் பற்றி விவாதிப்பதோ, ஒரு கருத்துக்கு ஆதரவு திரட்டுவதோ சிலருக்கு எரிச்சலை ஊட்டினாலும் அதை அனுமதித்தாக வேண்டும்” என்றும் அமர்வு கூறியுள்ளது.

“ஒரு சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதால், அந்தச் சட்டத்தையே அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று கூறிவிட முடியாது” என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. “பேச்சுரிமையையோ கருத்துரிமையையோ கட்டுப்படுத்த அரசு விரும்பவில்லை. அதே வேளையில், இணையதளம் போன்ற ‘சைபர்’ மேடைகளை எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமலும் அனுமதித்துவிட முடியாது” என்றும் அரசுத் தரப்பு கூறியிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் மாநில அமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான் பற்றி முகநூலில் 18 வயது பள்ளி மாணவர் ஒருவர் தெரிவித்த கருத்து ஆட்சேபகரமானது என்பதால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 (ஏ) பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் கைது தொடர்பாக மாநில அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த நிலையில், இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

சிவசேனைத் தலைவர் இறந்தபோது ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்ததற்காக 2 இளம் பெண்களும், தற்போது ஒரு பள்ளிக்கூட மாணவரும் கைது செய்யப்பட்ட இதுபோன்ற சம்பவங்களிலிருந்து இந்தச் சட்டம் எப்படி சரியான ஆலோசனைகள் இன்றி, குழப்பம் தரும் விதத்தில் இயற்றப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. நல்ல சட்டங்களையே தவறாகப் பயன்படுத்தும் ஆட்சியாளர்கள், மோசமாக உருவாக்கப்பட்ட சட்டங்களை வைத்துக்கொண்டு அப்பாவிகளை எப்படி அலைக்கழிப்பார்கள் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. ஆகவே, சகிப்பின்மைக்குக் கிடைத்த சவுக்கடி என்றே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத வேண்டும்.

பட்டதாரிகளுக்கு எதிர்காலம் குறித்த கனவு வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவுறுத்தல்


சென்னை: ''படித்த அறிவாளிகளை உருவாக்கிய நாம், நல்ல, ஒழுக்கமான மனிதர்களை உருவாக்கவில்லை; படித்தவர்களை விட, படிக்காதவர்களிடம் நல்ல குணங்கள் இருக்கின்றன,'' என, எஸ்.ஆர்.எம்., பல்கலை பட்டமளிப்பு விழாவில், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசினார்.

எஸ்.ஆர்.எம்., பல்கலையின், 10வது பட்டமளிப்பு விழா, காட்டாங்கொளத்தூர் பல்கலை வளாகத்தில், நேற்று நடந்தது. 'இஸ்ரோ' தலைவர் கிரண்குமார், கலிபோர்னியா பல்கலை வேந்தர் பிரதீப் கே கோஸ்லா, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் அசுதோஷ் சர்மா ஆகியோருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் மாணவர்களுக்கான பட்டங்களை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ஹர்ஷவர்தன் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

பெங்களூரு அறிவியல் நகரமாக இருப்பதைப் போல், சென்னை, அறிவுசார் நகரமாக திகழ்கிறது. படித்த அறிவாளிகளை உருவாக்கிய நாம், சிறந்த, நல்ல, ஒழுக்கமான மனிதர்களை உருவாக்கவில்லை; படித்தவர்களை விட, படிக்காதவர்களிடம் நல்ல குணங்கள் இருக்கின்றன. மாணவர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்; எதிர்காலம் குறித்த கனவு, பட்டதாரிகளுக்கு இருக்க வேண்டும்; கனவு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். நான், 1993ல் டில்லியில் சுகாதாரத் துறை அமைச்சரான போது, போலியோ ஒழிப்பு குறித்த கனவு இருந்தது; இன்று, நான் அமைச்சராக இருக்கும் நிலையில், போலியோ ஒழிக்கப்பட்டது குறித்த திருப்தி எனக்கு உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். விழாவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பச்சமுத்து, தலைவர் ரவி பச்சமுத்து, சத்திய நாராயணன், இணை துணைவேந்தர்கள் கணேசன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில், 90 முனைவர், 3,899 முதுநிலை, 9,628 இளநிலை பட்டதாரிகள் என, 13,617 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இவர்களில், 91 பேர், பதக்கங்கள் பெற்றனர்.

Lawyers, activists welcome SC order on Section 66A

TRICHY: The Supreme Court verdict striking down Section 66A of Information Technology Act received overwhelming support from the public here. The provision allowed police to arrest anyone for posting offensive comments on social media.

Legal experts welcomed the verdict, commenting that there were enough laws under the Indian Penal Code (IPC) to deal with any violation on social media.

"If there is a violation in anyone's comments, police can prosecute them by invoking other laws available under IPC after closely analysing the comment. Otherwise, Section 66A would restrict the freedom of expression. The Supreme Court's move is welcome," said S Martin, president of Tiruchirappalli Bar Association.

"Anyone has the right to criticise anything, without which no change will happen. Section 66A of IT Act was misused by powerful people against anyone for posting comments against them. The order of the apex court to scrap the section is commendable. Freedom of expression is our right, but it should not interfere into others' feelings," said Paul Guna Loganath, social activist.

Academicians too, welcomed the verdict. "The actions of public personalities can be subject to comments from anyone. Instead of replying to such comments, whether positive or negative, they should not use the law to take action against them. However, there must be discipline in the way we comment," said D Rajkumar, principal of Sudarshana Vidya Vikas, Pudukkottai.

"The abolition of Section 66A can be considered a landmark in law. Arresting anyone based on what they have posted online cannot be accepted. The country gives us the fundamental right of speech," said Aravindh Neelakantan, a final year student at NIT-T.

"Now, people can freely express their views on the social media. Ultimately, let truth prevail. Goodbye to Section 66A of the Information Technology Act. A welcome judgment, for sure," said Balaji Muthukumar, founder of NammaTrichy.com.

No petrol without helmet in MP


BHOPAL: State government issued directives to petrol pump owners across Madhya Pradesh to provide petrol and diesel only to those two-wheeler riders who wear helmet.

A government release said that all district collectors have been asked to ensure implementation of the orders issued by food, civil supplies and consumer protection department. Order asked fuel pump owners to create awareness among two-wheeler riders by displaying banners in this regard in the premises of petrol pump.

In case of non- compliance of the order, action may be initiated against them under Essential Commodities Act, government release said.

Bank gives away Rs 1 crore loan against fake gold

ALLAHABAD: Everything that glitters is not gold. The adage could be aptly applied to the guards and officials of the main branch of SBI Bhadohi who were guarding 'gold' worth over Rs 1 crore kept in their vault for the past several years oblivion of the fact that it was artificial.

The gold, kept in form of jewellery, coins and gold bars, was pledged to the bank against various loans amounting to over Rs 1 crore. The loans were given in 2012 under the agri-gold loan scheme. After the borrowers failed to deposit the monthly installments, the bank issued notices. But when an amount of Rs 88.32 lakh constantly remained outstanding, authorities grew suspicious and tested the gold which was found to be artificial.

The bank manager has lodged an FIR against 27 people in Kotwali, including the field officer and firm which tested the gold in this connection.

The 'scam' came to light after borrowers failed to deposit monthly installments and the outstanding shot up to Rs 88.32 lakh, said bank manager Shiv Shankar Upadhyaya. "We have lodged an FIR. An internal probe too is underway," he added.

Bhadohi Kotwali in-charge Ramesh Chaubey said, "Persons against whom a complaint has been lodged include bank's field officer Arvind Kumar, owner of Sri Krishna Gold Bar Testing Lab, Varanasi, and 25 others who took loans under sections 419, 420, 406, 409, 467, 468 and 471 of the IPC (Indian Penal Code)." He added a probe was underway and the case would be transferred to crime branch.

In 2012, SBI's main branch distributed loan of over Rs 1 crore to around 25 people under Agri-gold loan scheme. The borrowers, all hailing from Bhadohi, pledged around 4kg gold in form of jewellery, coins, etc., to the bank along with Varanasi goldsmith's certificate regarding the purity of the gold.

In due course of time, many of these borrowers stopped depositing monthly installment. By 2013, the then bank manager was transferred. The bank started issuing notices to defaulters after a new manager took over. Lack of response to notices or reminders aroused new manager's suspicion and he decided to ascertain the quality of gold pledged for loan in 2012. He was shocked to find that the gold was fake.

Emirates fined Rs 50,000 for forcing passenger to fly sans seat belt


CHENNAI: Thavasu Vella Thambi of Chennai had boarded an Emirate Airlines flight in 2012, but to his horror he found that he had to fly without seat belts as the seat he was allotted was damaged and the flight crew even denied him an alternative arrangement. Three years after the incident, the resident of G N Chetty Road will be compensated as the District Consumer Disputes Redressal Forum, Chennai (North), has slapped a fine of Rs 53,000 on the airlines for deficiency in services.

Thavasu said in April, 2012, after he boarded his scheduled Emirate Airlines flight he found workers repairing his allotted seat 22G. However, they failed to fix the seat and the flight crew told him to adjust in the damaged seat, promising him to find an alternative seat later. But even after take-off he was not given another seat and, according to his statement, he 'faced a nightmare' during take-off and landing.

A month later, he claimed damages of Rs 2 lakh from the customer affairs manager of the airlines at its office in Nungambakkam. The airlines sent a reply assuring to look into his complaint on May 15, 2012. Thambi then sought a settlement, but although the airlines apologized for the incident they refused to pay him any compensation. When his legal reply also went unanswered, Thambi moved the district forum seeking a compensation of Rs 2 lakh.

In its counter, Emirates Airlines said the allegations were false.

An alternative seat could not be provided as the flight was full. The airlines said they had offered 1,000 skyward miles if he became a part of their frequent flier programme. This was a programme where the miles could be exchanged for tickets or uprgrades on subsequent travels. But Thambi refused the offer.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...