Monday, March 30, 2015

மருத்துவச் சேவையில் குறைபாடா?

ஒரு மனிதன் வாழ்நாளில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வது தனது உடல் நலத்தைப் பேணுவதில்தான். இதற்காக நடைப் பயிற்சி, யோகா, தியானம் போன்ற பயிற்சிகளையும் மேற்கொள்கிறான்.

காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற சிறிய அளவிலான நோய்களைத் தவிர, பிறவற்றை அறியாத நிலையில் மக்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்தனர். மேலும், அவற்றைக் குணப்படுத்துவதற்கு அவர்கள் அலோபதி மருத்துவரை நாடிச் செல்லவில்லை. மூலிகைகளை மருந்தாகப் பயன்படுத்தி குணம் அடைந்தனர்.

ஆனால், இன்றைய நிலை? தலைவலி என்று மருத்துவமனைக்குச் சென்றால், பல்வேறு பரிசோதனைகளைச் செய்து, பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாக வசூலித்துவிட்டு, "உங்களுக்கு மூளையில் கட்டி உள்ளது. இதை உடனடியாக அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து' என மருத்துவர் நமக்கு பீதியை ஏற்படுத்துகிறார்.

வசதி படைத்தவர்களால் சில லட்சங்களைச் செலவிட முடியும். ஆனால், ஏழைகளுக்கு இது சாத்தியமா? மேலும், மூளையில் கட்டி ஏழை, பணக்காரன் என்று பார்த்து வருவது இல்லை.

ஏழைகளுக்கு ஆபத்பாந்தவனாக விளங்குபவை அரசு மருத்துவமனைகள். அங்குதான் உயர் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகையான சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

மத்திய, மாநில அரசுகள் ஒவ்வோர் ஆண்டும் தங்கள் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கென சில ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்குகின்றன.

தமிழக அரசு 2015-16-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சுகாதாரத் துறைக்கென ரூ.8,245 கோடி ஒதுக்கப்பட்டது. இது மொத்த நிதி ஒதுக்கீட்டில் 4.52 சதவீதமாகும்.

2010-11-ஆம் நிதியாண்டில் இத் துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதி ரூ.4,395.31 கோடி. அதாவது, ஆண்டுக்கு ஆண்டு இத் துறைக்கென ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகரித்து வருகிறது.

இதுதவிர, தேசிய சுகாதார இயக்கம், உலக வங்கி இவற்றின் உதவியுடன் பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதற்கென கணிசமான நிதி ஒதுக்கப்படுகிறது.

மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு மக்களிடையே தற்போது அதிகரித்துள்ளது. மக்களின் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில், புதிய மருத்துவமனைகளையும், புதிய மருத்துவக் கல்லூரிகளையும் துவக்குவதிலும் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.735.42 கோடியும், உபகரணங்கள் வாங்க ரூ.360.51 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் "எய்ம்ஸ்' மருத்துவமனையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.

கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பெரு நகரங்களில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் வரை பல்வேறு நிலைகளில் மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு வசதிகள் செய்யப்பட்டிருந்தும், முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

ஒரு கர்ப்பிணிப் பெண் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றால், அங்கு அவரது பிரசவத்துக்கு உரிய வசதிகள் இல்லை என்று அருகில் உள்ள வட்ட அளவிலான மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். இடைப்பட்ட நேரத்தில் அந்தக் கர்ப்பிணி படும் துயரம் சொல்லி மாளாது. இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும்?

பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளி உயிரிழந்த உதாரணங்கள் ஏராளம். இதனால், மருத்துவமனைகளைச் சேதப்படுத்துவதும், மருத்துவமனை ஊழியர்களைத் தாக்குவதும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றன.

இறக்குமதி செய்யப்படும் பல்வேறு நவீன இயந்திரங்களை இயக்குவதற்கு போதிய தொழில்நுட்பப் பணியாளர்கள் இல்லாததால், அவை பல மருத்துவமனைகளில் காட்சிப் பொருளாக உள்ளன. இதில் வீணாவது மக்களின் பணம் என்பது ஏன் நிர்வாகத்துக்குத் தெரிவதில்லை?

மேலும், அரசு மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நோய்க்கு சிகிச்சைக்கு வரும் நோயாளி, அங்குள்ள சிறப்பு மருத்துவர் நடத்தும் தனியார் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படுகிறார்.

அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை என்று கூறினாலும், ஒவ்வொரு சோதனைக்கும் சில நூறு ரூபாய் நோட்டுகளை நீட்டாவிட்டால், எதுவும் நடக்காது.

அண்மையில் தென் மாவட்டம் ஒன்றின் தலைநகரில் உள்ள தலைமை மருத்துவமனையில் நிகழ்ந்த காட்சி நமது வேதனையை அதிகரிக்கிறது. இரண்டு வயதுக் குழந்தைக்கு காய்ச்சல். நேரம் இரவு 10 மணி. அரசு மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கிச் செல்கிறார் தந்தை. பணி நேரத்தில் மருத்துவர் அங்கு இல்லை. இரண்டு செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

காத்திருங்கள், மருத்துவர் வருவார் என ஒருவர் கூறுகிறார். குழந்தையுடன் அரை மணி நேரம் காத்திருக்கிறார் அந்தத் தந்தை. அருகிலிருந்த ஓர் அறையில் இருந்து தூங்கி எழுந்த நிலையில், அரைத் தூக்கத்துடன் வெளியே வருகிறார் மருத்துவர். குழந்தையுடன் மருத்துவர் முன் அமர்கிறார் தந்தை.

குழந்தைக்கு என்ன பிரச்னை என்று தந்தையிடம் கேட்ட அந்த மருத்துவர், குழந்தையைப் பரிசோதிக்காமல் மருந்து, மாத்திரைகளை மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு, மீண்டும் தமது தூக்கத்தைத் தொடர அறையை நோக்கிச் செல்கிறார்.

அரசுப் பணத்தில் படித்து, அரசுப் பணியைப் பெற்று, கைநிறைய ஊதியம் பெற்றுக் கொண்டு இப்படி விரும்பத்தகாத வகையில் நடந்துகொள்வது எந்த வகையில் நியாயம்?

இதற்காக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைவரும் முறையாக பணிபுரியவில்லை என்று கூறவில்லை. சிலர் செய்யும் தவறுகள், ஒட்டுமொத்த மருத்துவர் இனத்தையும் பழிக்கு ஆளாக்குகிறது என்பது கசப்பான உண்மை.

வேண்டாமே மானியம்!

சமையல் எரிவாயு உருளை பெறுகின்ற வசதி படைத்த நுகர்வோர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று தாங்களாகவே அறிவிக்க முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுதில்லியில் மார்ச் 27-ஆம் தேதி நடைபெற்ற எரிசக்தி சங்கம் நிகழ்வில் பேசியபோது இதனைக் குறிப்பிட்ட பிரதமர், இதுவரை 2.80 லட்சம் நுகர்வோர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று விட்டுக்கொடுத்திருப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி சேமிப்பு கிடைக்கும். இதனை ஏழை, எளியோர் நலனுக்காகப் பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வசதி படைத்தோருக்கு சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்படுவது குறித்து அரசு யோசித்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியபோது பெரும் எதிர்ப்பு எழுந்தது. அதன்பிறகு, அது குறித்து அமைச்சர் பேசவில்லை. இருப்பினும், வசதி படைத்தவர்கள் தாமாகவே முன்வந்து மானியம் தேவையில்லை என்று அறிவிக்கலாம் என்று கூறிய ஜேட்லி, மானியம் இல்லா எரிவாயு உருளையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, சில பா.ஜ.க. அமைச்சர்களும் தங்கள் சுட்டுரையில், தாங்களும் மானியம் பெறாத எரிவாயு நுகர்வோராக மாறிவிட்டதாக அறிவித்தனர்.

தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று விரும்பும் நுகர்வோர் இதற்கான படிவத்தை எரிவாயு உருளை முகவரிடம் கொடுக்கலாம் அல்லது இதற்கான இணையதளத்தில் தாங்களே பதிவு செய்யலாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டன. இப்போது பிரதமர் அறிவிப்பின்படி நாட்டில் மொத்தம் 2.80 லட்சம் பேர் இவ்வாறாக மானியம் பெறா எரிவாயு நுகர்வோராக மாறியிருக்கின்றனர்.

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் ஒரு நாளைக்கு 30 லட்சம் எரிவாயு உருளைகள் (அதாவது ஆண்டுக்கு 90 கோடி உருளைகள்) விநியோகம் செய்யப்படுகின்றன. 15 கோடிப் பேர் வீட்டுச் சமையல் எரிவாயு உருளைக்கான இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள். இவர்களில், அதிகபட்சமாக 5 கோடிப் பேர் மானியம் பெறா நுகர்வோராக மாறும் அளவுக்கு வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். இருப்பினும், வெறும் 2.8 லட்சம் நுகர்வோர் மட்டுமே இவ்வாறு மானியம் பெறா நுகர்வோராக மாறியுள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

இதுதொடர்பான நீடித்த பிரசாரம்தான் இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும். குறைந்தபட்சம் சொந்த வீடு, சொந்த அடுக்ககத்தில் வசிக்கும் ஒரு நுகர்வோர் இந்த எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுப்பதால் அவருக்கு பெரும் இழப்பு ஏதுமில்லை. ஒரு கார் வைத்திருக்கும் வசதி படைத்தவர் தன்னைத் தானே மானியம் பெறா எரிவாயு நுகர்வோராக மாற்றிக் கொள்வதால் அவருக்கு நட்டமில்லை. நான் எரிவாயு மானியம் பெறா நுகர்வோர் என்று சொல்லிக் கொள்வது பெருமை என்கிற மனமாற்றத்தை ஏற்படுத்தத் தொடர்ச்சியான பிரசாரம் தேவை. எந்தவிதப் பலவந்தமான திணிப்பும் இல்லாமல் அவரவர்களே தங்களது வசதியை நிர்ணயித்துக் கொள்ளட்டும்.

பெட்ரோலியப் பொருள்களுக்காக மட்டும் ரூ.46,458 கோடி மானியம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை வேறு பயன்பாட்டுக்கு திருப்பும் வகையில் மானியத்தை விட்டுக் கொடுத்து, அரசுக்குத் தோள் கொடுக்க வேண்டும். இவ்வாறு அரசின் மானியம் வேண்டாம் என்று சொன்ன நபர்களுக்கு வேறு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்பது ஒன்று விட்டு ஒன்று பற்றியதாக முடியும். வசதி படைத்தோர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மானியத்தை துறந்துவிடுவதுதான் சரி.

மத்திய அரசின் திட்டத்தில் மட்டுமல்ல, மாநில அரசின் திட்டங்களிலும்கூடப் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து, தங்களால் இயன்ற இனங்களில் மானியத்தைத் தவிர்க்க முன்வர வேண்டும். இதன்மூலம், அரசின் நிதிச் சுமையைக் குறைப்பதுடன், முறைகேடுகளுக்கு மறைமுகமாக துணை போகாதவராக அந்த நுகர்வோர் மாறலாம்.

பொது விநியோக மையத்தில் 20 கிலோ விலையில்லா அரிசி எனக்கு வேண்டாம் என்று பொதுமக்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தால், தமிழ்நாட்டில் ஏழைகள் மட்டுமே 20 கிலோ விலையில்லா அரிசியைப் பெற்று பயன்பெறுவர். இதனால் வாங்கப்படாமல், அனைத்து குடும்ப அட்டைகளிலும் அரிசி வாங்கியதாகப் பதியப்பட்டு, அந்த அரிசி மெருகூட்டப்பட்டு, மீண்டும் சந்தைக்கு நம்மிடமே கிலோ ரூ.45-க்கு வரும் அவலநிலை ஏற்படாது.

இதே நிலைப்பாட்டை மக்கள் தாங்களாகவே முன்வந்து, விலையில்லாப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை எனக்குத் தேவையில்லை என்று எழுத்துமூலமாகப் பதிவு செய்வார்கள் என்றால், இவற்றைப் பெறுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இந்த விலையில்லாப் பொருள்களை கள்ளச்சந்தையில் தள்ளிவிடும் வழக்கமும் இருக்காது.

இதற்கான வழிமுறையை எண்ணெய் நிறுவனங்களைப் போல தமிழக அரசும் உருவாக்க வேண்டும்.

ஒரு கோயில் வாசலில் யாரோ ஒருவர் வழங்கும் அன்னதானத்தை வாங்க கெüரவம் பார்க்கிற மனித மனம், அரசு வழங்கும் விலையில்லாப் பொருள்கள், மானியப் பொருள்களை மட்டும் வேண்டாம் என்று சொல்லத் தயங்குகிறது. காரணம், இது நமது அரசு, நமக்கு கொடுக்கும் பொருள் என்ற உரிமைக்குரல் ஒவ்வொருவருக்குள்ளும் ஒலிக்கிறது. நமக்கு வசதி இருப்பதால் நாம் அதை வேண்டாம் என்று சொல்வதன் மூலம் அரசின் நிதிச் சுமை குறையும், முறைகேடு குறையும் என்பதைப் புரிந்து கொண்டால், தயக்கம் இருக்காது.

Sunday, March 29, 2015

REMARKS BY PRIME MINISTER TO THE MEDIA AT SINGAPORE

Friends, I am visiting Singapore at a sad moment. 

The passing away of H.E. Mr. Lee Kuan Yew marks the end of an era.

He was among the tallest leaders of our times.

Singapore's transformation in one generation is a tribute to his leadership.

In the 50th anniversary year of Singapore's independence, I am sure that he left satisfied with Singapore's achievements and confident about its future.

He inspired not just Southeast Asia, but all of Asia, to believe in its own destiny.

He was a global thinker, who saw things ahead of others. He was an advocate of economic progress, but also made tireless efforts to advance peace and stability in our region.

In India, we deeply valued his friendship and his support for India's economic progress and global role.

He believed in India's potential more than many of us did.

India's economy is growing rapidly.

India's relations with Singapore is one of our strongest relationships in the world.

India's integration with Southeast Asia and beyond is growing. Singapore is a key pillar of India's Act East Policy.

So, his vision is coming true. The seeds he sowed are bearing fruits today.

Personally, he was a source of inspiration for me. His achievements and thoughts give me confidence in the possibility of India's own transformation.

The people of India share this nation's grief over the loss of its founding father and leader.

We are observing a day of public mourning in India today in honour of the departed leader and the deep bonds of friendship that we share with Singapore.

I bring here today the condolences and prayers of the people of India.

5 Dead, Several Injured as A Portion of an Under Construction Building Collapses in Tamil Nadu

NDTV

TIRUVARUR, TAMIL NADU: At least Five persons were killed and 16 injured when a portion of an under construction guest house of the Central University collapsed in Tiruvarur district, Tamil Nadu, early today morning.

Superintendent of Police Jayachandran said, "the portico portion of the under construction structure crashed. We are investigating." The toll could increase as several of the injured were in a serious condition, the police said.

The injured, who are mostly migrant labourers, have been rushed to Thanjavur government hospital.

Police and fire service personnel were searching whether more persons were trapped in the debris. A team of doctors had been rushed to the spot to give treatment and first aid, police said.

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை... இஎம்ஐ செலுத்துபவர்கள் தவிப்பு!

சென்னை/மும்பை: வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால் கடன் தவணையை செலுத்துபவர்கள் தவிப்பில் உள்ளனர். ம்ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதிகளில் ஆண்டு கணக்கு முடிப்புக்காக வங்கிகள் செயல்படாது.

ஏப்ரல் 2ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினமும் வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்து ஏப்ரல் 3ஆம் தேதி புனித வெள்ளியன்று வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்து வரும் சனிக்கிழமை அரைநாள் மட்டுமே வங்கிகள் செயல்படும். அடுத்து ஞாயிறு விடுமுறையாகும்.

இதனால் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படும் என தெரிகிறது. வங்கிகளில் வீட்டுக்கடன் மற்றும் பெர்சனல் லோன் வாங்கியவர்கள், அந்த கடனை திருப்பி செலுத்தும் தவணை தேதிகளாக பெரும்பாலான வங்கிகளில் 1, 4, 7 ஆகிய தேதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு மாதத்தின் கடைசி நாளில் சம்பளம் வங்கிகளில் செலுத்தப்படுகிறது. தனியார் நிறுவனங்களிலும் 1 முதல் 5 வரை அந்தந்த நிறுவனங்களுக்கு தகுந்தவாறு ஊதியம் கிரெடிட் செய்யப்படுகிறது.  பெரும்பாலோனார் இந்த சம்பளத்தை கொண்டே தங்களது கடன் தவணைக்கான பணத்தை இஎம்ஐ எடுக்கப்படும் வங்கி கணக்கில் செலுத்துகின்றனர் அல்லது சம்பளம் கிரெடிட் ஆகும் வங்கி கணக்கில் இஎம்ஐ தொகை எடுக்கப்படுகிறது. இந்நிலையில்  தொடர் விடுமுறை காரணமாக சம்பளம் வழக்கமான தேதியில் கிடைப்பது தாமதம் ஆகும் என்பதால், உரிய தேதியில், குறிப்பாக 4 ஆம் தேதி இஎம்ஐ உள்ளவர்கள் தவிக்கின்றனர். ஏனெனில் அன்றைய தினம் வங்கி செயல்படும் ( சனிக்கிழமை) என்பதால் இஎம்ஐ வந்துவிடும்.  இதனால் வங்கிகளின் தொடர் விடுமுறை குறித்த தகவலை முன்கூட்டியே அறிந்திராதவர்கள் கடைசி நேரத்தில் கையை பிசைந்துகொண்டிருக்கின்றனர்.  

மேலும், தொடர்விடுமுறை காரணமாக ஏடிஎம்-கள் செயல்படாத நிலை ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிகளை சந்திக்க நேரிடும். அவசரத்துக்கு பணம் தேவை உள்ளவர்கள் முன்னதாகவே ஏடிஎம் சென்று தேவையான பணத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

இதற்கு மாற்று ஏற்பாடு செய்யுமாறு ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசை தொழில் கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது. தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாவார்கள் என்றும் அது சுட்டிக் காட்டியுள்ளது.

இத்தகைய தொடர் விடுமுறை பங்குச் சந்தையில் பண பரிவர்த்தனையை பாதிக்கும் என்றும், ஏற்றுமதி, இறக்குமதி, சம்பள பட்டுவாடா உள்ளிட்டவை பாதிப்புக்குள்ளாகும் என்றும் அசோசேம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி தலையிட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளதாக அசோசேம் கூறியுள்ளது.

வங்கிகளில் பெரும்பாலானவை பொதுத்துறை வங்கிகள் என்பதால் இதில் நிதித்துறை தலையிட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு தீர்வு காணலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இதற்குத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று அசோசேம் செயலர் டி.எஸ்.ரவாத் வலியுறுத்தியுள்ளார்.
 
பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்

இதனிடையே வரும் திங்கட்கிழமை முதல் 6 நாட்கள் வங்கிகள் செயல்படுவது குறித்து வெளியான தகவல்களுக்கு நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 30ம் தேதி திங்கட்கிழமையும், 31ம் தேதி செவ்வாய்க்கிழமையும் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
ஏப்ரல் 1ஆம் தேதி ஆண்டு கணக்கு முடிவு, 2 மற்றும் 3ம் தேதி மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய நாட்களில் வங்கிகள் செயல்படாது என்றும், 4ம் தேதி சனிக்கிழமை வங்கிகளில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சனிக்கிழமை அரசு கருவூலத்துக்கு விடுமுறை என்ற நிலையில், அரசு ஊழியர் ஊதியம் 6ஆம் தேதிக்கு தள்ளிப் போக நேர்ந்தால், அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது என்றும் பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உயருகிறது செல்போன் கட்டணம்: நிமிடத்துக்கு 10 பைசா வரை அதிகரிக்கும்!

புதுடெல்லி: செல்போன் அழைப்புக் கட்டணம் நிமிடத்திற்கு 10 பைசா வரை உயர வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தொலை தொடர்புத்துறைக்கான அலைக்கற்றை ஏலம் அண்மையில் விடப்பட்டது. இந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1.09 கோடி லட்சம் வருவாய்க் கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் உரிமம் ஏலம் இதுவரை இந்த அளவுக்கு நடந்தது இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே இந்த ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது.இதனால் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 68 சதவீத பிரிமியத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் தனியார் நிறுவனங்களால் எடுக்கப்பட்டுள்ளது.

19 நாட்களாக 115 சுற்றுக்களில் நடந்த இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனல், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடோ போன், டாடா டெலிசர்வீஸ், யுனினார், ஐடியா செல்லுலார், ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த நிறுவனங்களிடையே நிலவிய போட்டியால் அவற்றின் ஒட்டு மொத்த கடன் இரண்டரை லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் 2ஜி, 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த நிறுவனங்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் பணத்தைக் கட்டும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 28 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாகச் செலுத்த வேண்டியுள்ளது.

அடுத்தக்கட்டமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். எனவே கடன் சுமையைக் குறைக்க செல்போன் அழைப்புக்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையில் தனியார் நிறுவனங்கள் உள்ளன.

செல்போனில் பேசுபவர்களிடம் நிமிடத்துக்கு 5 பைசா முதல் 10 பைசா வரை கூடுதலாக வசூலித்ததால் தான் ஏலம் எடுத்த தொகையை சமாளித்து லாபம் பெற முடியும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே செல்போன் கட்டணங்கள் ஓரளவு உயரும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே செல்போன் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தக்கூடாது என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். செல்போன் கட்டணத்தை நிமிடத்துக்கு 1.3 பைசாவுக்கும் கூடதலாக உயர்த்தக்கூடாது என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ என்ற புதிய நிறுவனம் வாடிக்கையாளர்களை இழுக்க புதிய சலுகை அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிகிறது. அதைப் பொருத்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வை நிர்ணயிக்கும் என்று தெரிகிறது.

மிகுந்த வரவேற்பை பெற்று வரும் அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டம்: தமிழகத்தில் 2.50 லட்சம் கணக்குகள் தொடக்கம்

 பெண் குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை புதுச்சேரி தலைமை தபால் அலுவலகத்தில் சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் தொடங்கி வைக்கிறார்

இந்திய அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செல்வ மகள் சேமிப்பு கணக்குத் திட்டம் (சுகன்யா சம்ருத்தி யோஜனா) மக்களின் பெரும் வரவேற்பை பெற்று மிகக் குறுகிய காலத்திலேயே தமிழகத்தில் ஏறத்தாழ 2.50 லட்சம் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன.

பெண் குழந்தைகளின் எண் ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் மத்திய அரசு இந்திய அஞ்சல் துறை சார்பில் சுகன்யா சம்ருத்தி யோஜனா என்ற சேமிப்புத் திட் டம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய அஞ்சல் துறையின் 4 மண்டலங்களிலும் பிப்ரவரி மாதத்தில் இந்த திட் டம் தொடங்கப்பட்டது. இதில் நேற்று (மார்ச் 25) வரை ஏறத் தாழ 2.50 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் சிறப்பு அம்சம்

அனைத்து அஞ்சல் கிளை அலு வலகங்களிலும் இந்த கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்க பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், அடையாளச் சான்று ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

10 வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ இந்த கணக்கை தொடங்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும்.

கணக்கு தொடங்கியதிலிருந்து 14 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். 21-வது ஆண்டில் கணக்கு முதிர்வடை யும். அப்போது கணக்கில் சேர்ந் துள்ள பணத்தை அந்த பெண் குழந்தையே எடுத்துக் கொள்ள லாம். கணக்கு வைத்துள்ள பெண் ணுக்கு 18 வயது நிரம்பினால், அவரது கல்வி மற்றும் திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற் றுக்கொள்ளும் வாய்ப்புள்ளது.

முதலில் ரூ.1,000 செலுத்தி கணக்கு தொடங்க வேண்டும். தொடர்ந்து ரூ.100 மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். இந்த திட்டம் குறித்து திருச்சி மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜெ.டி.வெங்கடேஸ்வரலு கூறியதாவது:

இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக நிகழ் நிதியாண்டில் 9.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தற்போதுள்ள சிறுசேமிப்புத் திட்டங்களிலேயே அதிக வட்டி வழங்கப்படும் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம்.

தற்போது இந்த திட்டத்தின்கீழ் கணக்கு தொடங்குவதற்கு முக்கிய அஞ்சல் அலுவலகங்களில் தனி கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

மூன்றரை மடங்கு முதிர்வுத்தொகை

உதாரணமாக, மாதந்தோறும் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 செலுத்தினால் 14 ஆண்டுகள் நிறைவில் நாம் செலுத்திய ரூ.1.68 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.3.30 லட்சமாக இருக்கும். இந்த கணக்கு 21-வது ஆண்டில் நிறைவடையும்போது முதிர்வுத் தொகையாக ரூ.6.07 லட்சம் பெறலாம். இது உத்தேசமான கணக்கு தான். வட்டி விகிதம், செலுத்தும் தொகை அதிகமாகும்போது முதிர்வுத் தொகையும் அதிகரிக்கும்.

NEWS TODAY 06.12.2025