Sunday, March 29, 2015

உயருகிறது செல்போன் கட்டணம்: நிமிடத்துக்கு 10 பைசா வரை அதிகரிக்கும்!

புதுடெல்லி: செல்போன் அழைப்புக் கட்டணம் நிமிடத்திற்கு 10 பைசா வரை உயர வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தொலை தொடர்புத்துறைக்கான அலைக்கற்றை ஏலம் அண்மையில் விடப்பட்டது. இந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1.09 கோடி லட்சம் வருவாய்க் கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் உரிமம் ஏலம் இதுவரை இந்த அளவுக்கு நடந்தது இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே இந்த ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது.இதனால் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 68 சதவீத பிரிமியத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் தனியார் நிறுவனங்களால் எடுக்கப்பட்டுள்ளது.

19 நாட்களாக 115 சுற்றுக்களில் நடந்த இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனல், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடோ போன், டாடா டெலிசர்வீஸ், யுனினார், ஐடியா செல்லுலார், ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த நிறுவனங்களிடையே நிலவிய போட்டியால் அவற்றின் ஒட்டு மொத்த கடன் இரண்டரை லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் 2ஜி, 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த நிறுவனங்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் பணத்தைக் கட்டும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 28 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாகச் செலுத்த வேண்டியுள்ளது.

அடுத்தக்கட்டமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். எனவே கடன் சுமையைக் குறைக்க செல்போன் அழைப்புக்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையில் தனியார் நிறுவனங்கள் உள்ளன.

செல்போனில் பேசுபவர்களிடம் நிமிடத்துக்கு 5 பைசா முதல் 10 பைசா வரை கூடுதலாக வசூலித்ததால் தான் ஏலம் எடுத்த தொகையை சமாளித்து லாபம் பெற முடியும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே செல்போன் கட்டணங்கள் ஓரளவு உயரும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே செல்போன் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தக்கூடாது என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். செல்போன் கட்டணத்தை நிமிடத்துக்கு 1.3 பைசாவுக்கும் கூடதலாக உயர்த்தக்கூடாது என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ என்ற புதிய நிறுவனம் வாடிக்கையாளர்களை இழுக்க புதிய சலுகை அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிகிறது. அதைப் பொருத்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வை நிர்ணயிக்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...